இஸ்லாத்தில் இஃதிகாப் பற்றி அறிந்து கொள்ளுவோம் 
• அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக அமல்கள் செய்வதை ‘ இஃதிகாஃப் ’ என்கிறோம்!
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்துவந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய துணைவியர் "இஃதிகாஃப்" இருந்தனர்!
(நூல் : முஸ்லிம் : 2182)
• நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் இஃதிகாஃப் பள்ளியில் இருந்து வந்தார்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் மற்றும் ஸஹாபாக்களும் இஃதிகாஃப் இருந்து வந்து உள்ளார்கள்! இது வலியுறுத்தப்பட்ட சுன்னாவாகும்!
நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!
(சூரத்துல் : அல் பகரா : 187)
• ஆனால் இன்று அல்லாஹ் பாதுகாக்கணும் இஃதிகாஃப் பல இடங்களில் வயதானவர்கள் தான் உள்ளார்கள் வாலிப சமூகம் இதனுடைய மதிப்பு விளங்காமல் ஒதுங்கி கொள்ளுகிறார்கள்!
1) 1000 மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எந்த உலக சிந்தனையும் ஏற்பட்டு வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 813)
2) உலக விசியங்களை விட்டு ஒதுங்கி தனித்திருந்து அல்லாஹ்வை நெருக்க முயற்சி செய்ய முடியும்!
3) உலக காரியங்களை விட்டு ஒதுக்கி பள்ளியில் இருப்பதால் உள்ளத்தை சீர் செய்ய முடியும்!
4) முழுவதும் அல்லாஹ்வை மட்டும் சார்ந்து அமல்களில் மட்டும் ஈடுப்பட முடியும்!
5) மன இச்சைகளின் தூண்டும் காரியங்களை விட்டு தூரமாகி இருக்க முடியும்!
• எல்லா செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன!
(நூல் : ஸஹீஹ் புஹாரி :1)
• இஃதிகாப் இருப்பதாக உள்ளத்தில் நிய்யத் இஃதிகாஃப் இருக்கின்றேன் என்று நிய்யத் வைத்து கொண்டாள் போதுமானது! இதற்க்கு துஆ என்று எதுவும் கிடையாது!
• இஃதிகாப் கட்டாயம் பள்ளியில் தான் இருக்க வேண்டும்! அல்லாஹ் இஃதிகாஃப் பற்றி அல் குர்ஆனில் கூறும் பொழுது பொதுவாக பள்ளி என்றே குறிப்பிட்டு கூறியுள்ளான்!
நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!
(சூரத்துல் : அல் பகரா : 187)
• அதனால் நாம் எந்த பள்ளியில் வேண்டும் என்றாலும் இஃதிகாப் இருக்கலாம்! ஆனால் கட்டாயம் பள்ளி வாசலில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும்!
• பள்ளிவாசல் அல்லாத இடங்களில் இஃதிகாஃப் இருக்க கூடாது! ஏன் என்றால் இதற்கு எந்த வித ஆதாரமும் இஸ்லாத்தில் கிடையாது!
• நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாப் இருக்கலாம்! நோன்பு காலத்தில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறந்தது ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புஹாரி : 2042)
• இஃதிகாஃப் இருக்க நோன்பு வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை நோன்பு வைக்க வில்லை என்றாலும் இஃதிகாஃப் இருக்கலாம் நோன்பு வைத்து கொண்டு இஃதிகாஃப் இருப்பது சிறந்தது!
• ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தி கூறி உள்ளார்கள்! நாம் நோன்பு வைத்த நிலையில் இஃதிகாஃப் இருப்பது சிறந்தது ஆகும்!
• இஃதிகாப் இருக்க குறிப்பிட்ட நாள் என்று எதுவும் கிடையாது எப்போது வேண்டும் என்றாலும் இஃதிகாப் இருக்கலாம்! ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!
• ஆனால் இஃதிகாப்பை நேர்ச்சை மூலம் தனக்கு கடமையாக்கிக் கொண்டவர் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் இஃதிகாப் இருப்பது கட்டாயமாகும்!
• இஃதிகாஃப் ஆரம்பம் நேரம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உள்ளன!
ஷேக் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
ரமலான் பிறை 20 அன்று மாலையில் இருந்து ரமலானின் ஒற்றைப்படை நாட்கள் ஆரம்பித்து விடும்!
நாம் மாலையிலயே இஃதிகாப் இருக்க ஆரம்பித்து விட்டால் நமக்கு அந்த ஒற்றைப்படை நாட்களில் இஃதிகாப் இருந்து லைலத்துல் கத்ர் இரவை அடையும் பாக்கியம் கிடைக்கும்!
(ஃபதாவா அல்-சியாம் : 501)
• இஸ்லாத்தில் நாளின் ஆரம்பம் மஹ்ரிப் ஆகும்! நாம் இஃதிகாஃப் இருப்பதாக இருந்தால் மஹ்ரிப்க்கு பள்ளிக்கு சென்று விட வேண்டும்!
• ஒருவர் ஒரு நாள் இஃதிகாப் இருக்க கூடியவர்! மஃரிப் நேரத்துடன் பள்ளியினுள் சென்று இஃதிகாப் ஆரம்பித்து மறுநாள் மஃரிப் நேரம் வரை பள்ளியில் இருக்க வேண்டும்!
• ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருக்க கூடியவர்கள்! பிறை பார்த்து விட்டால் மஹ்ரிப் முடிந்த பின்பு வீட்டுக்கு செல்லலாம்!
• ஒரு நாள் இஃதிகாஃப் இருக்க கூடியவர் இஃதிகாஃப் ஆரம்பம் ஆன மஹ்ரிப்யில் இருந்து மறுநாள் மஹ்ரிப் வரை பள்ளியில் இருக்க வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2018)
• இஃதிகாப் பொதுவாக இரண்டு வகைகள் உள்ளன!
1) வாஜிபானா இஃதிகாஃப்
2) சுன்னத்தான இஃதிகாஃப்
• நேர்ச்சையானா இஃதிகாஃப் : யாரேனும் எனக்கு இந்த நேர்ச்சை நிறைவேறி விட்டால் நான் இத்தனை நாட்கள் இஃதிகாஃப் இருக்கின்றேன் என்று நேர்ச்சை செய்வது!
• அந்த நேர்ச்சை நிறைவேறி விட்டால் அவர் மீது இஃதிகாப் வாஜிப் ஆகி விடும் அவர் கட்டாயம் இஃதிகாப் இருக்க வேண்டும் விட்டால் குற்றம் ஆகும்!
• அந்த நேர்ச்சை நிறைவேற வில்லை என்றால் அவர் இஃதிகாப் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது! ஆனால் விருப்பம் பட்டால் இருக்கலாம்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 3406)
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :
நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்! அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2026)
• நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை பள்ளியில் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்! இது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!
• இது சுன்னாஹ் தானே என்று அலட்சியமாக விட்டு விடாமல் நபி (ஸல்) அவர்கள் செய்த மற்றும் பிறருக்கு செய்ய சொல்லி கூறிய வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும் என்பதை மறந்து விட கூடாது!
• இஃதிகாஃப் கடைசி 10 நாட்கள் இருப்பது சுன்னாஹ் ஆகும்! நாம் 10 நாட்களும் இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!
• நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள்! நபி (ஸல்) அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2044)
• வேலை அல்லது வேறு ஏதேனும் காரணம் 10 நாட்கள் இஃதிகாஃப் இருக்க முடியவில்லை என்றால் நாம் சில நாட்களாவது இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்! அல்லது குறைந்தது ஒரு நாளாவது இஃதிகாஃப் இருக்க முயற்சி செய்ய வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2043)
• இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியே!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 2182)
• இன்றும் பெரும்பாலான இடங்களில் பெண்கள் இஃதிகாஃப் வீட்டில் உள்ளார்கள் ஆனால் இது தவறு ஆகும்!
• இஃதிகாஃப் பொறுத்த வரை ஆணும் சரி பெண்ணும் சரி பள்ளியில் மட்டுமே இருக்க முடியும்! அல்லாஹ் அல்குர்ஆனில் இஃதிகாஃப் பற்றி கூறும் பொழுது பள்ளி வாசலை குறிப்பிட்டு கூறி உள்ளான்!
நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்!
(சூரத்துல் : அல் பகரா : 187)
• பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்கு ஒரு ஸஹீஹான ஆதாரம் அல்குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ கிடையாது!
பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் (நூதன பழக்கம்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்!
(நூல் : பைஹகீ : 8573)
• பள்ளி வாசல் தவிர்த்து பெண்கள் வேறு எந்த இடத்திலும் வீட்டிலோ அல்லது மதரஸாவிலோ இஃதிகாஃப் இருந்தால் அது செல்லுபடி ஆகாது!
• நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் கூட பள்ளி வாசலில் தான் இஃதிகாஃப் இருந்து உள்ளார்கள்! நபி (ஸல்) அவர்கள் இதற்கு அனுமதி கொடுத்து உள்ளார்கள்!
• நபி (ஸல்) அவர்கள் தன்னுடன் இஃதிகாஃப் இருக்க ஒரு மனைவிக்கு அனுமதி கொடுத்தார்கள் இதை அறிந்த மற்ற மனைவிகளும் பள்ளியில் கூடாரம் அமைத்து பள்ளியில் இஃதிகாஃப் இருக்க வந்து விட்டார்கள்!
• இதை நபி (ஸல்) கண்டித்து அந்த ரமலான் மாதத்தில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வாலில் இஃதிகாஃப் இருந்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2033)
• இங்கு நாம் கவனிக்க வேண்டியது நபி (ஸல்) அவர்கள் மனைவிமார்களை கண்டித்தார்களை தவிர! வீட்டில் இஃதிகாஃப் இருந்து கொள்ளுங்கள் பெண்களுக்கு இது சிறந்தது என்று எதுவும் கூறவில்லை!
• இவ்வளவு தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் பொழுது பெண்கள் எப்படி வீட்டில் இஃதிகாஃப் இருக்க முடியும்???
• குறிப்பிட்ட அமல் எதுவும் கிடையாது நாம் பொதுவாக அமல் செய்து கொள்ளலாம் இஃதிகாஃப் இருக்கும் பொழுது!
• 5 நேர தொழுகை பேணுதல்! 5 நேர தொழுகையின் முன் சுன்னத் பேணுதல்! சுன்னத் - நபில் தொழுதல்! இரவு தொழுகை (தராவிஹ் - தஹஜ்ஜத்) தொழுதல்!
• அல்குர்ஆன் ஓதுதல் அல்குர்ஆன் மனனம் செய்தல்! துஆ அதிகம் கேட்பது துஆக்கள் மனனம் செய்வது!
• திக்ர் செய்வது! ஹதீஸ்கள் படிப்பது ஹதீஸ்கள் மனனம் செய்வது! இவ்வாறு நாம் நம்மால் இயன்ற அமல்களை செய்ய வேண்டும்!
• இஃதிகாஃப் இருந்தால் இவ்வளவு நன்மை இன்ன இன்ன சிறப்பு உள்ளது என்று வர கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலகீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் தான் உள்ளது!
(இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) : மஸாயில் அபுதாவூத் : 96)
1) நூல் : தபரானி - ஹாகிம் - பைஹகி போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்ட செய்தி யார் ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பாரோ அவரை அல்லாஹ் கிழக்கு மற்றும் மேற்கு இடைப்பட்ட இடைவெளியை விட மூன்று மடங்கு தூரம் ஆக்குவான் என்று உள்ளது ஆனால் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் ஆகும்!
(நூல் : இமாம் அல்பானி (ரஹ்) : அல்-சில்சிலா : 5345)
2) ரமலான் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்தால் இரண்டு ஹஜ் மற்றும் இரண்டு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்! நூல் : பைஹகி இது இட்டுக்கட்டபட்ட ஹதீஸ் ஆகும்!
(நூல் : இமாம் அல்பானி (ரஹ்) : அல்-சில்சிலா : 518)
3) இப்னுமாஜாவில் : 1781 : பதிவு செய்யப்பட்ட ஹதீஸ் இஃதிகாஃப் இருந்தால் அவர் எல்லா பாவங்களையும் விட்டு பாதுகாப்பு பெற்றவர் மற்றும் எல்லா வித நற்செயல்கள் செய்தவர் போன்றவர் ஆவர் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் என்று இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறி உள்ளார்கள்!
1) உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் பள்ளிக்கு வந்தால் அவர்களிடம் தேவையான பேச்சு பேசி விட்டு நாம் அவர்களை பள்ளியின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைக்கலாம்!
(நூல் : புஹாரி : 2035)
2) இஃதிகாஃப் இருக்கும் நிலையில் முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாறுதல்! இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடலாம்!
3) மலம் ஜலம் போன்ற அவசியத் தேவைக்காக மட்டும் பள்ளியை விட்டும் வெளியேறலாம்!
4) சாப்பிடுதல் , பருகுதல், தூங்குதல் போன்ற செயல்களில் இடுப்படலாம்!
5) மிகுந்த அவசிய தேவை என்றால் பள்ளியை விட்டு வெளியே வரலாம்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2029)
1) வீணான காரியங்களில் ஈடுப்படுதல்!
2) அரட்டை அடித்தல், புறம் பேசுதல்!
3) இஃதிகாஃப் முழுவதும் துக்கத்திலேயே கழித்தல்!
4) இச்சைகளை தூண்டும் காரியங்களில் ஈடுப்படுதல்!
5) நோயாளிகளை சந்திக்க செல்ல கூடாது!
6) ஜனாஸாவை பார்க்க செல்ல கூடாது!
(நூல் : அபூதாவுத் : 2473)
1) எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே பள்ளியில் இருந்து வெளியேறுதல்!
2) ஹைலு (மாதவிடாய்) , நிபாஸ் ஏற்படுதல்!
(பஃத்வா : இமாம் மாலிக் (ரஹ்) : அல்-முவத்தா : 1 / 316)
• இஸ்திஹாலா (தொடர் உதிரி போக்கு) ஏற்பட்டால் இஃதிகாப் முறியாது அவர்கள் தொடர்ந்து இஃதிகாப் இருக்கலாம்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 309)
3) உடலுறவு கொள்ளுதல்!
(அல் குர்ஆன் : 2 : 187)
@அல்லாஹ் போதுமானவன்

No comments:
Post a Comment