பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

குர்பானி (உழ்ஹிய்யா) கொடுப்பது பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞


💞 குர்பானி (உழ்ஹிய்யா) கொடுப்பது பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• அரபி மொழியில் உழ்ஹிய்யாவின் பொருள் முற்பகலில் பலிப் பிராணியை அறுப்பது என்பதாகும்! அல்லாஹ்விற்காக ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றை ஒரு குறிப்பிட்ட நாளில் அறுப்பதையே குர்பானி என்கிறோம். இது வசதி வாய்ப்பு உள்ள ஒவ்வொரு முஸ்லீம் மீதும் குர்பானி கொடுப்பது கடமையாகும்!

கால்நடை பிராணிகளிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் கடமையாக ஆக்கியிருக்கிறோம்!

(அல் குர்ஆன் : 22 : 34)

• நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வழிமுறைகளில் ஒன்று தான் குர்பானி கொடுப்பது ஆகும்!

(நூல் : இப்னு மாஜா : 3127)

• குர்பானி கொடுப்பது ஒரு வணக்க வழிபாடு ஆகும் இதை நாம் அல்லாஹ்விற்கு தவிர்த்து வேறு யாருக்கும் செய்ய கூடாது அவ்வாறு செய்தால் அது ஷிர்க்கில் சேர்ந்து விடும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 4001)

மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்!

(அல் குர்ஆன் : 6 : 162)
 
கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்!
 
(அல்குர்ஆன் : 22 : 34)

• மாதம் 12 ஆகும் இதில் சிறப்பு மிக்க மாதம் 4 ஆகும் இதில் ஒன்று தான் புனிதமிகு துல் ஹஜ் மாதம் ஆகும்! இந்த மாதத்தில் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்று குர்பானி கொடுப்பது ஆகும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 4662)

💟 குர்பானி ஏன் நமக்கு கடமையானது :

• குர்பானி நமது மீது கடமையானதன் நோக்கம் நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பம் அல்லாஹ்விற்காக செய்த தியாகத்தின் காரணமாக தான் அல்லாஹ் நமது மீது குர்பானி கொடுப்பதை கடமையாக்கி உள்ளான்!

• நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நீண்ட காலம் பின்பு பிறந்த தமது மகனை  பலியிடுவதாகக் கனவு கண்டார்! அல்லாஹ்விற்காக அதை நிறை வேற்ற முயலும் போது, அல்லாஹ் அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான் இதனால் தான் குர்பானி என்பது நமக்கு அல்லாஹ் கடமை ஆக்கினான்!

(அல் குர்ஆன் : 37 : 102 & 108)

💟 குர்பானி கொடுப்பதின் நோக்கம் :

• நாம் ஒட்டகம் மாடு ஆடு குர்பானி கொடுப்பதால் அல்லாஹ்விற்கு எந்த வித பயனும் கிடையாது! நாம் இதை தக்வா உடன் செய்ய வேண்டும் இதில் ஒரு போதும் பெருமை - முகஸ்துதி ஏற்பட்டு விட கூடாது!

குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை! ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்! 

(அல் குர்ஆன் : 22 : 37)

• நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது பெற்ற மகனையே அல்லாஹ்விற்கு குர்பானி கொடுக்க முன் வந்தார்கள் அல்லாஹ்வின் பொறுத்தம் பெற மட்டும்! இதான் குர்பானி கொடுப்பதன் உண்மையான நோக்கம் உள்ளம் அளவில் தியாகம் செய்வது ஆகும்!

💟 நிய்யத் எவ்வாறு வைப்பது :

• நாம் குர்பானி கொடுக்கும் பொழுது உள்ளத்தில் இது எனக்கும், என்னுடைய வீட்டில் உள்ள எல்லோருக்கும் சேர்த்தே குர்பானி கொடுக்கிறேன் என்ற எண்ணம் இருந்தால் போதும்.

• நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணியை அறுக்கும் முன் இவ்வாறு கூறுவார்கள் :

அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3977)

(Fatwa : ஷேக் முஹம்மது இப்னு உஸைமின் (ரஹ்))

💟 குர்பானி கொடுப்பது கடமையா?

• குர்பானி கொடுப்பது சுன்னா முஅக்கதா (மிகவும் வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்) ஆகும்!

உமது இறைவனுக்காக தொழுவீராக! அறுத்து பலியிடுவீராக!

(அல்குர்ஆன் 108 : 2)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்! மதினாவில் இருந்த ஒவ்வொரு ஆண்டும் குர்பானி கொடுத்து வந்துள்ளார்கள்!

(நூல் : சுனன் திர்மிதி : 1589)

💟 எந்த பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டும் :

1) ஒட்டகம் 

2) மாடு

3) ஆடு

(அல் குர்ஆன் : 22 : 34)

• ஆகிய பிராணிகளை மட்டும் தான் நாம் குர்பானி கொடுக்க வேண்டும்! இதை தவிர்த்து மற்ற பிராணிகளை நாம் குர்பானி கொடுக்க கூடாது! ஏன் என்றால் :

1) அல்லாஹ் குர்பானி பற்றி கூறும் பொழுது ஒட்டகம் - மாடு -  ஆடு இந்த பிராணிகளை மட்டும் குறிப்பிட்டு கூறி உள்ளான்!

(அல் குர்ஆன் : 22 : 34)

2) நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலோ அல்லது ஸஹாபாக்கள் அல்லது தாபியீன்கள் அல்லது தபா தாபியீன்கள் வாழ்ந்த காலத்திலோ மேலே உள்ள மூன்று பிராணிகளை தவிர்த்து மற்ற பிராணிகளை குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் கிடையாது!

❤️ பெண் பிராணிகளை குர்பானி கொடுக்கலாமா?

• நம்மில் பலர் பெண் பிராணிகளை குர்பானி கொடுக்க கூடாது என்று நினைக்கிறார்கள் ஆனால் அல்லாஹ் குர்பானி பிராணிகளை பற்றி கூறும் பொழுது பெண் பிராணிகளையும் சேர்த்தே கூறுகிறான்!

(அல்குர்ஆன் : 6 : 143 | புகாரி : 5556)

• மிக முக்கியம் குட்டி ஈன்று பால் கொடுக்கும் பெண் பிராணியை அறுக்க கூடாது!

(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 4143)

💟 குர்பானி கொடுக்க கூடியவர்கள் பேன வேண்டியவை :

• நாம் குர்பானி கொடுக்க போகிறோம் என்றால் துல்ஹஜ் உடைய பிறையை கண்ட நாள் முதல் குர்பானி கொடுக்கும் நாள் வரை நம்முடைய நகம் முடியை வெட்ட கூடாது!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 3655)

• இந்த பேணுதல் குர்பானி கொடுக்க  கூடிய நபர் மட்டுமே பின் பற்ற வேண்டும்!  குடும்பத்தினர் அனைவரும் பேன வேண்டியது கிடையாது!

💟 குர்பானி பிராணிகளின் வயது :

• குர்பானி கொடுப்பதற்கு ஒட்டகம் - மாடு அல்லது ஆடு வாங்குவதற்கு முன் அதனது வயதை குர்பானி கொடுக்க கூடிய அளவிற்கு பூர்த்தி ஆகி விட்டதா! என்று பார்த்து வாங்க வேண்டும்!

1) ஆடு - ஓரு வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்!

2) மாடு - இரண்டு வருடம் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்!

3) ஒட்டகம் 5 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 5560)

• இவ்வாறு வயது பூர்த்தி ஆனா பிராணிகளை மட்டும் தான் நாம் குர்பானி கொடுக்க வேண்டும்! 

💟 குர்பானி பிராணியை வளர்க்க வேண்டும் :

• நம்மில் பலர் குர்பானி பிராணியை கடைசி நேரத்தில் தான் வாங்கி குர்பானி கொடுக்கின்றோம் இதனால் பலர் குர்பானி கொடுக்கும் போன்று எந்த வித உணர்வும் உள்ளத்தில் ஏற்படுவது கிடையாது!

மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்கவைப்பார்கள்! 

(நூல் : பத்ஹுல் பாரி)

💟 குர்பானி கொடுக்க தகுதி இல்லாத பிராணிகள் :

• குர்பானி பிராணி வாங்க கூடியவர்கள் குறை இல்லாமல் நல்ல நிலையில் உள்ள பிராணியை வாங்க வேண்டும்!

• கீழே குறிப்பிட்டு உள்ள குறை உள்ள பிராணிகளை நாம் தவிர்த்து விட்டு குறை இல்லாத பிராணிகளை நாம் குர்பானி கொடுக்க வேண்டும்!

1) காது வெட்டப்பட்ட ஆடு (சிறிய அளவோ அல்லது பெரிய அளவோ)

2) காதில் துளையிடப்பட்ட பிராணி 

3) தெளிவாக தெரியும் நொண்டி பிராணி 

4) தெளிவாக தெரியும் பார்வை குறை உள்ள பிராணி 

5) நோய் உள்ள பிராணி 

6) பால் கொடுக்கும் பிராணி

7) சதையில்லாத மெலிந்த பிராணி

8) கொம்பு உடைந்த பிராணி (சிறியதோ பெரியதோ)

(நூல் : திர்மிதீ : 1532 & 1417 | நஸயீ : 4293)

💟 எத்தனை பிராணிகளை குர்பானி கொடுக்க வேண்டும் :

• ஒரு குடும்பத்திற்கு ஓரு ஆடு போதுமானது ஆகும் ! வீட்டில் ஒவ்வொரு நபருக்கும் குர்பானி கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது!

• ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாக கொடுத்துள்ளார்கள்!

அதா இப்னு யஸார் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்! அவர்களும் உண்பார்கள் பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்!

(நூல் : திர்மிதீ : 1587 | இப்னு மாஜா : 3147)

• பெருமை நோக்கம் இல்லாமல் பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் விருப்பம் பட்டால் அதிகமான பிராணிகளை குர்பானி கொடுக்கலாம்!

(நூல் : புகாரி : 5565)

💟 குர்பானி எப்போது கொடுக்க வேண்டும் :

• பெருநாள் தொழுகை முடிந்த பிறகு தான் நாம் குர்பானி கொடுக்க வேண்டும்! அதற்கு முன்பு குர்பானி பிராணியை அறுத்து விட்டால் அது குர்பானியில் சேராது!

• பெருநாள் தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுத்து விட்டால் அவர் மீண்டும் தொழுகைக்கு பிறகு குர்பானி கொடுக்க வேண்டும்!

(நூல் : புகாரி : 5560)

💟 குர்பானி கொடுப்பதின் சிறப்பு :

• குர்பானி கொடுப்பதின் சிறப்பு பற்றி வர கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலகீனமானவையே! இதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் கிடையாது! 

💟 குர்பானி பிராணியை அறுப்பதின் ஒழுக்கங்கள் :

❤️ எந்த இடத்தில் பிராணியை அறுக்க வேண்டும் :

• நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணியை திடலிலும் அறுத்து உள்ளார்கள்! வீட்டிலும் அறுத்து உள்ளார்கள் ! நாம் திடல் அல்லது வீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் குர்பானி பிராணியை அறுத்து கொள்ளலாம்!

(நூல் : புகாரி : 5552 & 5545)

❤️ குர்பானி பிராணிகளை யார் அறுக்க வேண்டும் :

• குர்பானி பிராணியை வீட்டில் உள்ள யார் வேண்டன்றாலும் அறுக்கலாம்! நபி (ஸல்) அவர்கள் தங்களின் கைகளால் குர்பானி பிராணியை அறுத்து உள்ளார்கள்! அறுக்க முடியாதவர்கள் பலகீனமானவர்கள்! பிறரை வைத்து அறுத்து கொள்ளலாம்!

(நூல் : புகாரி : 5554 | அஹ்மத் : 22086)

• வீட்டில் உள்ள பெண்கள் விருப்பம் பட்டால் குர்பானி பிராணியை அருக்கலாம் இதற்கு மார்க்க ரீதியாக எந்த தடையும் கிடையாது!

(நூல் : புகாரி : 5504)

❤️ விரைவாக அறுக்க வேண்டும் :

•  பிராணியை அறுக்கும் முன் கத்தியை நன்கு தீட்டி கொண்டு விரைவாக அறுக்க வேண்டும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! விரைவாக அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்!

(நூல் : அஹ்மது : 16490)

💜 குர்பானி பிராணியை அறுக்கும் போது ஓதும் துஆ :

‘ பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் ’

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன்! அல்லாஹ் மிகப்பெரியவன்!

(நூல் : முஸ்லிம் : 3976)

❤️ கத்தியை கூர்மையாக்கி கொள்ள வேண்டும் :

• பிராணியை அறுப்பதற்கு முன்பு கத்தியை நன்றாக கூர்மைபடுத்தி கொள்ள வேண்டும்! பிராணியை படுக்க வைத்துக் கொண்டு அதன் கண்ணெதிரே கத்தியைத் தீட்டு கூடாது இதனால் பிராணி பயந்து மிரள ஆரம்பிக்கும்!

• மேலும் இவ்வாறு நாம் பிராணி முன்பு கத்தியை கூர்மை படுத்துவது பிராணியைத் துன்புறுத்துவது போன்று ஆகும் இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இதை தடை செய்து உள்ளார்கள்!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள் :

ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார்! நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்கவைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தி இருக்கக் கூடாதா? என்று கூறினார்கள்!

(நூல் : ஹாகிம் : 4 / 257)

❤️ பிராணியை படுக்க வைக்க வேண்டும் :

• நாம் ஆடு அல்லது மாடு குர்பானி கொடுக்கும் பொழுது அந்த பிராணியை முறையாக ஒரு பக்கமாகப் படுக்க வைக்க வேண்டும்! எந்த திசையின் பக்கம் வேண்டும் என்றாலும் படுக்க வைக்கலாம் கிப்லா திசை பக்கம் தான் இருக்க வேண்டும் என்று நிபந்தனை கிடையாது!

• பிராணியை படுக்க வைத்த பின்பு எழாமல் இருப்பதற்காக அவற்றின் கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும்! ஏனென்றால் பிராணியை அறுக்கும் போது அது துள்ளி அறுப்பதைத் தடுத்து விடும்! 

(நூல் : புகாரி : 5558)

• ஒட்டகம் அறுப்பதாக இருந்தால் ஆடு அல்லது மாடு போன்று இல்லாமல் ஒட்டகத்தை நிற்க வைத்து அதன் கால்களை கட்டி விட்டு பின்பு அறுக்க வேண்டும்!

(நூல் : புகாரி : 1712 & 1713)

❤️ இரத்தம் முழுமையாக வெளியியேறும் வரை காத்து இருக்க வேண்டும் :

• நாம் குர்பானி பிராணிகளை அறுக்கும் போது நரம்புகள் நன்கு துண்டிக்கப்பட்டு அவற்றின் இரத்தம் முழுமையாக வெளியேறும் வரை காத்து இருக்க வேண்டும்! அதே போன்று முழுமையாக இறந்த பின்பு தான் அதை உரிக்க வேண்டும்! 

• இஸ்லாத்தில் இரத்தம் உண்பது ஹராம் ஆகும் பொதுவாக எந்த பிராணியின் இரத்தத்தையும் நாம் உண்ண கூடாது! நம்மில் பலர் இந்த சட்டம் அறியாமல் இரத்ததை பிடித்து வைத்து அதை சமைத்து உண்ணுகிறார்கள்! ஆனால் இதை நேரடியாகவே தடை செய்து உள்ளான்!

(அல்குர்ஆன் : 2 : 173)

💜 குடும்பத்தினர் வர வேண்டுமா?

• குர்பானி கொடுக்கும் பொழுது வீட்டார் அனைவரும் வந்து நிற்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது!

• வீட்டார் பார்க்க விருப்பம் பட்டால் நிற்கலாம்! வீட்டார் வந்து நிற்க வேண்டும் என்று பைஹகீ நூலில் ஒரு ஹதீஸ் உண்டு ஆனால் இது பலகீனமான ஹதீஸ் ஆகும் இந்த ஹதீஸ் பதிவு செய்த இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களே ஹதீஸ் கீழே இது பலகீனமான ஹதீஸ் என்று கூறி உள்ளார்கள்!

💜 கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா?

• குர்பானி பிராணியை கிப்லாவை முன்னோக்கித் வைத்து தான் அறுக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஸஹீஹான எந்த ஹதீஸும் கிடையாது! எனவே நாம் எந்த திசையின் பக்கமாக வேண்டும் என்றாலும் வைத்து அறுத்து கொள்ளலாம்!

• இன்றும் சில ஊர்களில் காஃபிர்களின் வழிமுறையில் பிராணியை அறுப்பதற்கு முன்பு குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது போன்ற செயல்களைச் செய்கின்றனர் ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இது முழுவதும் மாற்று மதத்தினர் வழிமுறை ஆகும்!

💟 கூட்டு குர்பானி :

• ஒட்டகம் - மாடு இவைகளை ஏழு நபர்கள் சேர்ந்து கூட்டு குர்பானி கொடுக்கலாம்!

• அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக கூட்டு குர்பானி கொடுக்கலாம்!

(நூல் : முஸ்லிம் : 2325 | அபூதாவூத் : 2425)

• ஒட்டகம் மாடு இவைகளில் மட்டும் தான் கூட்டு குர்பானி கொடுக்க முடியும்! ஆடு கூட்டு குர்பானி கொடுக்க முடியாது!

💟 குர்பானி தோல் :

• குர்பானி பிராணியின் தோலை தர்மம் செய்ய வேண்டும் இது சுன்னாஹ்! அறுக்க கூடிய நபருக்கு கூலியாக தோலையோ அல்லது குர்பானி பிராணியின் மாமிசத்தை கொடுக்க கூடாது!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2320)

💟 குர்பானியின் மாமிசத்தை சேமித்து வைக்கலாமா :

• ஆரம்ப காலத்தில் அதவாது வறுமை நிலவிய போது நபி (ஸல்) அவர்கள் குர்பானி மாமிசத்தை சேர்த்து வைக்க கூடாது என்று தடை விதித்தி இருந்தார்கள் ஆனால் அதற்கு பின்பு இந்த சட்டம் மாற்றப்பட்டது!

• நமக்கு தேவையான அளவுக்கு குர்பானி மாமிசத்தை நாம் சேமித்து வைக்கலாம்! எவ்வளவு நாட்கள் வேண்டும் என்றாலும்! 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

குர்பானி இறைச்சியிலிருந்து உண்ணுங்கள், சேமித்துக் கொள்ளுங்கள், தர்மம் செய்யுங்கள்!

(நூல் : முஸ்லிம் : 3986)

💟 கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா :

• கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குர்பானி கொடுப்பது வசதி உள்ளவர்கள் மீது மட்டுமே கடமையாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள் 

(நூல் : புகாரி : 7288)

💟 குர்பானி மாமிசத்தை யார் யார் உண்ணலாம் :

அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்!

(அல் குர்ஆன் : 22 : 36)

• குர்பானி மாமிசத்தை நாமும் உண்ணலாம்! ஏழைகள்! உறவினர்களுக்கும் உண்ண கொடுக்கலாம்!

💟 எவ்வளவு நாட்கள் குர்பானி கொடுக்கலாம் :

• துல் ஹஜ் உடைய நாள் 10 - 11 - 12 - 13 ஆகிய நாட்கள் அதாவது தஷ்ரிகுடைய நாட்கள் வரை நாம் குர்பானி கொடுக்கலாம்!

(நூல்  : தாரகுத்னி : 284)

@அல்லாஹ் போதுமானவன்💞

No comments:

Post a Comment