பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, January 15, 2026

அஷ்ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு சுருக்கம் 💞


ஹதீஸ் கலை அறிஞர் அஷ்ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு சுருக்கம் 💞

• 1914-ஆம்‌ ஆண்டு அல்பேனியாவின் தலைநகரமான அஷ்கொடராவில் மார்க்கப்பற்றுள்ள, ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார்கள். இவரது தந்‌தை நூஹ்‌ நஜாத்தி (ரஹ்) அவர்கள்‌ துருக்கியின்‌ இஸ்தான்புல்‌ நகரில்‌ இஸ்லாமியக்‌ கல்வி நிலையங்களில்‌ பயின்றவர்‌. பின்னர்‌ அல்பேனியா வந்த அவர்‌ அங்கு ஹனஃபி மத்ஹப்‌ சட்டங்களைப்‌ போதித்து வந்தார்‌. 

• அன்றைய அல்பேனியாவின்‌ அதிபர்‌ அஹ்மது ஸோகோ அந்நாட்டில்‌ மதச்சார்பற்ற ஆட்சியைப்‌ பிரகடனம்‌ செய்ததாலும்‌, ஐரோப்பிய கலாச்சாரத்தை மக்கள்‌ மீது தினித்ததாலும்‌ பலர்‌ அந்நாட்டை விட்டு வெளியேறினர்‌. ஷெய்க்‌ அல்பானி அவர்களின்‌ தந்தையும்‌ சிரியாவின்‌ தலைநகரான டமாஸ்கஸ்‌ நகருக்குக்‌ குடிபெயர்ந்தார்‌. 

• சிறுபராயம் முதல் கல்வியில் ஆர்வமும் தேட்டமும் கொண்ட அல்லாமா அல்பானி அவர்கள் டமஸ்கஸிலுள்ள பெரும் மார்க்க அறிஞர்களிடம் தமது ஆரம்பக் கல்வியைப் பூர்த்திசெய்தார்கள். பின்பு அல்குர்ஆனியக் கலைகள் , அரபு இலக்கணம், அரபு இலக்கியம் போன்றவற்றையும் ஹனபி சட்ட மரபினையும் பல்வேறுபட்ட அறிஞர்களிடமிருந்தும் தனது தந்தையிடமும் அறிஞர்களான தனது தந்தையின் நண்பர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டார்கள்.

• ஆரம்பத்தில தச்சுத் தொழிலில் ஈடுபட்ட அவர்கள் பின் தனது தந்தையிடமிருந்து. கடிகாரம்‌ சரிபார்க்கும்‌ தொழிலைச்‌ கற்று அதை செய்து வந்த அவர்‌, அல்லாஹ்வின்‌ அருளால்‌ நான்‌ இந்த வேலையைக்‌ கற்றுக்கொண்டேன்‌. தினமும்‌ 3 மணி நேரம்‌ மட்டும்‌ எனது குடும்பத்தை நடத்துவதற்காக உழைத்தேதன்‌. மீதி நேரங்களை நபிமொழிகளைப்‌ படிப்பதற்கும்‌, ளாஹிரியயா நூலகத்திலும்‌ சுமார்‌ 6 முதல்‌ 8 மணி நேரங்கள்‌ செலவிட்டேன்‌ என்று கூறியுள்ளார்‌.

• அல்லாமா அல்பானி அவர்கள் தனது இருபதாவது வயதிலே ஹதீஸ் துறை, அது சார்ந்த ஏனைய கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். அவரது வருமானத்தில்‌ புத்தகங்களை வாங்குவதற்குச்‌ செலவழிக்க இயலாத நிலையில்‌ புதிய புத்தகங்களை புத்தக விற்பனை நிலையங்களிலிருந்து இலவசமாகப்‌ பெற்றுப்‌ படித்துவிட்டு திருப்பிக்‌ கொடுத்தார்‌. புத்தகக்‌ கடையினரும்‌ பெருந்தன்மையுடன்‌ அல்பானி (ரஹ்) அவர்களுக்குப்‌ புத்தகங்களைக்‌ கொடுத்து உதவினர்‌. 

• அச்சமயத்தில்‌ சிரியா, ஜோர்டான்‌ போன்ற நாடுகளிலிருந்து பல மாணவர்கள்‌ அவரிடம்‌ கல்வி கற்றனர்‌. தனது வாழ்நாள்‌ முழுவதும்‌ இறுதித்‌ தூதர்‌ முஹம்மது (صلى الله عليه وسلم) அவர்களின்‌ ஹதீஸ்களையும்‌. இமாம்களின்‌ வழிமுறைகளையும்‌ பின்பற்றி வந்த அவர்‌ எந்த மத்ஹபையும்‌ சார்ந்து இருக்கவில்லை. 

• அவரது உரைகள்‌ நடக்கும்‌ இடங்களில்‌ மார்க்கத்தில்‌ பித்‌அத்தை நுழைப்பவர்கள்‌, சூஃபிகள்‌ ஆகியோர்‌ பிரச்சினைகளை ஏற்படுத்தினர்‌. அவரைப்‌ பற்றித்‌ தவறாகவும்‌ பிரச்சாரம்‌ செய்ய ஆரம்பித்தனர்‌. ஆயினும்‌ அல்பானீ, அவர்கள்‌ பக்கம்‌ கவனம்‌ செலுத்தாமல்‌ தம்‌ பணியைத்‌ தொடர்ந்து செய்துவந்தார்‌.

• இவரைப்‌ பற்றிக்‌ கேள்வியுற்ற மதீனா இஸ்லாமியப்‌பல்கலைக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ ஷெய்க்‌ முஹம்மது பின்‌ இப்ராஹிம்‌ ஆலி அஷ்ஷெய்க்‌ (ரஹ்) அவர்கள்‌ அல்பானீயை மதீனா பல்கலைக்கழகத்தில்‌ ஹதீஸ்‌ கலையைப்‌ போதிக்கும்‌ பேராசிரியராக நியமித்தார்‌. அங்கு 3 வருடங்கள்‌ பணியாற்றிய அல்பானீ (ரஹ்), அப்பல்கலைக்கழகத்தில்‌ இஸ்னாத்‌ – ஹதீஸ்‌ அறிவிப்பாளர்களைப்‌ பற்றிய புதிய கலையைத்‌ துவக்கினார்‌. 

• புகழ்பெற்ற மிகப்‌ பழமையான அல்‌அஸ்ஹர்‌ பல்கலைக்‌ கழகத்தில் கூட இத்துறை போதிக்கப்படவில்லை. இஸ்லாமியப்‌ பல்கலைக்கழகங்களின்‌ வரலாற்றில்‌ முதன்முறையாக அல்பானி அவர்களால்‌ இக்கலை துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்‌தக்கது.

• இது மட்டும் அல்லாமல் இமாம் அவர்கள் நிறையபதிவிகளில் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் உள்ளார்கள். பெரும்பாலான முஸ்லிம்‌ நாடுகளுக்கும்‌ ஐரோப்பிய நாடுகளுக்கும்‌ இஸ்லாமிய அழைப்புப்‌ பணிகள்‌ செய்வதற்காக பயணங்கள்‌ மேற்கொண்டார்‌கள்.

• ஷெய்க்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ பாஸ்‌ (ரஹ்) அவர்களுக்கும்‌, அல்பானீ அவர்களுக்குமிடையில்‌ நல்லவலுவான தொடர்பிருந்தது. ஷெய்க்‌ பின்‌ பாஸ்‌ அவர்கள்‌ அல்பானீ அவர்கள்‌ குறித்து ‘இந்த நவீன உலகில்‌, வானத்திற்கு கீழே, ஷெய்க்‌ நாஸிரித்தீன்‌ அல்பானியை விட ஹதீஸ்‌ கலையில்‌ அதிக ஞானமுடைய ஒருவரை நான்‌ பார்க்கவில்லை” என்று புகழாரம்‌ சூட்டியுள்ளார்கள்‌.

• ஷெய்க்‌ அல்பானீ அவர்கள்‌ இந்தியாவின்‌ இஸ்லாமிய அறிஞர்களான ஷெய்க்‌ ஹபிபுர்‌ ரஹ்மான்‌ அல்‌அத்ஹமி (ரஹ்), முஸ்தஃபா அல்‌ அத்ஹமி (ரஹ்), அப்துஸ்ஸமது ஷர்‌ஃபுத்தீன்‌ (ரஹ்) போன்றவர்களுடன்‌ தொடர்புகளை வைத்திருந்தார்கள்‌.

• 60 ஆண்டுகளாக ஹதீஸ்‌ துறையில்‌ தமது காலத்தைச்‌ செலவிட்ட ஷெய்க்‌ அவர்கள்‌ இத்துறையில்‌ தனது உழைப்பு பற்றி திருப்தியடையாதவராகவே இருந்தார்கள்‌. இவருடைய இறுதிக்‌ காலங்களில்‌, மற்ற நாடுகளுக்குப்‌ பயணம்‌ மேற்கொள்ளாமல்‌ தமது முழு வாழ்வையும்‌ ஹதீஸ்‌ துறைக்காக அர்ப்பணிக்க இயலவில்லையே என்று வருந்தினார்‌. 

• தினமும்‌ 10 முதல்‌ 12 மணி நேரம்‌ தொழுகை நேரம்‌ தவிர, நூலகத்திலேயே அறிவைத்‌ தேடுவதில்‌ செலவிட்டார்‌. அல்பானீ அவர்கள்‌ ஹதீஸ்‌ துறையில்‌ மட்டும்‌ 100-க்கும்‌ மேற்பட்ட நூல்களை இவ்வுலகத்திற்குத்‌ தந்துள்ளார்கள்‌. அவற்றில்‌ மிகவும்‌ போற்றத்தக்கது ”ஸிஃபத்‌ ஸலாத்‌ அந்நபி” என்னும்‌ நூலாகும்‌. இந்நூலைப்‌ பற்றி ஓர்‌ அறிஞர்‌ கூறும்போது “இந்த ஒரு நூல்‌ போதும்‌ ஷெய்க்‌ அவர்களின்‌ திறமைக்கு சான்று கூற!” என்று குறிப்பிட்டார்‌.

• இமாமவர்கள் ஹதீஸ் துறையில் சில முக்கியமான நூற்களைத் தொகுத்தளித்துள்ளார். அத்தோடு சில இமாம்களின் நூற்களுக்கு விளக்கவுரைகளையும் எழுதியுள்ளார். அவர் எழுதியவற்றுள் இர்வாஉல் கலீல், முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம், ஸில்ஸலா அல்அஹாதீஸ் அல்ழஈபா, ஸில்ஸிலா அல்அஹாதீஸ் அஸ் ஸஹீஹா, மிஷ்காதுல் மஸாபீஹ் என்பன பிரபல்யமான சில நூல்களாகும்.

• சஊதி அரேபியாவின் மலிக் பைசல் சர்வதேச உயர் விருதையும் 1999 ம் ஆண்டு இமாமவர்கள் பெற்றுக் கொண்டார்கள். 

• 1999ஆம் ஆண்டு (ஹிஜ்ரி-1420) ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சனிக்கிழமை அஸருடைய நேரத்தில் தனது 87ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அதே நாள் இஷாவுடைய வேளையில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

எங்களுடைய அன்புக்குரிய இமாமவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவியையும் அன்னாருக்கு வழங்குவானாக.

@அல்லாஹ் போதுமானவன் 💞

No comments:

Post a Comment