பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, January 3, 2021

மறுமை வெற்றிக்காக - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

       *🌺 மறுமை வெற்றிக்காக*
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 *✍🏻....தொடர் : [ 02 ]*

*🌺நம்பிக்கையின்*
                      *பிரதிபலிப்பு🌺*

*🏮🍂உலக வாழ்வின் நோக்கத்தை ஒருபோதும் நாம் மறந்துவிடக் கூடாது. இதை பசுமரத்தாணி போல் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு நற்காரியங்கள் செய்வதிலும் தீமைகளை விட்டு விலகுவதிலும் மிகவும் அக்கறையோடு செயல்பட வேண்டும்.*

_اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ‏_

_*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.*_

    *📖(திருக்குர்ஆன் 84:25)📖*

_وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏_

_*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்பவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.*_

     *📖(திருக்குர்ஆன் 2:82)📖*

*🏮🍂நம்பிக்கை கொள்வதைப் பற்றியும், நம்பிக்கை கொண்ட மக்களைப் பற்றியும் திருக்குர்ஆனில் கூறும் இடங்களில் பெரும்பாலும் நல்ல அமல்கள் செய்வதையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.* இதன் மூலம், மறுமையில் பரிபூரணமான வெற்றி பெறுவதற்கு வெறும் *நம்பிக்கை மட்டும் போதாது நற்காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மறுமை வெற்றிக்காக - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

       *🌺 மறுமை வெற்றிக்காக*
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 *✍🏻....தொடர் : [ 03 ]*

*☄️மறுமைக்காக எதைச்*
             *செய்துள்ளோம்❓*

*🏮🍂உலகில் நன்றாக இருப்பதற்காக எத்தனையோ வகையான ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறோம்; அயராது பாடுபடுகிறோம்; அதற்காக அல்லும் பகலும் உழைக்கிறோம்; சிரமப்படுகிறோம். இப்படியிருக்க மறுமை வாழ்வில் மகத்தான ஈடேற்றம் பெறுவதற்கு தினமும் என்ன செய்கிறோம்❓* இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்ற சிந்தனை ஓட்டம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

_يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏_

_*🍃நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! மறுமைக்காக தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.*_

    *📖(திருக்குர்ஆன் 59:18)📖*

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، *عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّاعَةِ، فَقَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَاذَا أَعْدَدْتَ لَهَا». قَالَ: لاَ شَيْءَ، إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ». قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا بِشَيْءٍ، فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: «فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ، وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ»*

_*🍃ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்❓’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று (திரும்பக்) கேட்டார்கள்.*_ _அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர’ என்று பதிலளித்தார்._

_*அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்’ என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!*_

*🎙️அறிவிப்பவர்:*
                 *அனஸ்(ரலி)*

       *📚நூல்: புகாரி (3688)📚*

*🏮🍂மேற்கண்ட சம்பவத்தில், நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியை கொஞ்சம் கவனியுங்கள்.  ‘(மறுமை நாள்) அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்❓’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி அந்த நபித்தோழருக்கு மட்டுமல்ல! மறுமையில் வெற்றி பெறத் துடிக்கிற அனைத்து மக்களுக்கும் பொருந்தும்; நமக்கும் பொருந்தும். இந்தக் கேள்விக்கு நம்மிடம் தகுந்த பதில் இருக்கிறதா❓ நற்காரியங்களை ஆர்வத்தோடு செய்கிறோமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மறுமை வெற்றிக்காக - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

       *🌺 மறுமை வெற்றிக்காக*
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 *✍🏻....தொடர் : [ 04 ]*

*☄️அல்லாஹ்வின்*
           *தூதருடைய*
                *அழகிய அறிவுரை☄️*

*🏮🍂மறுமை நாளுக்குரிய தயாரிப்பு நம்மிடம் என்ன இருக்கிறது❓ இந்தக் கேள்வி நமது நினைவில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மறுமை வெற்றிக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள முடியும்.* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியை நபித்தோழர்களிடம் நினைவூட்டியதுமே அதன் பொருளையும் அவசியத்தையும் புரிந்து கொண்டு அவர்கள் எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள் தெரியுமா❓ இதோ நீங்களே பாருங்கள்.

*كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، قَالَ : فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ، فَدَخَلَ ثُمَّ خَرَجَ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ، فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ: {يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ} [النساء: 1] إِلَى آخِرِ الْآيَةِ، {إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} [النساء: 1] وَالْآيَةَ الَّتِي فِي الْحَشْرِ: {اتَّقُوا اللهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللهَ} [الحشر: 18] «تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ – حَتَّى قَالَ – وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ» قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، قَالَ: ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ، كَأَنَّهُ مُذْهَبَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا، وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ»*

_*🍃நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை” அல்லது “நீளங்கி” அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது.*_

_உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும்,_

_*அல்ஹஷ்ர்” அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதை அனுப்பியுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்“ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.*_

_உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉபேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன்._

_அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்._

*🎙️அறிவிப்பவர்:*
           *ஜரீர் பின்*
                  *அப்தில்லாஹ் (ரலி)*

    *📚நூல்: முஸ்லிம் (1848)📚*

*🏮🍂வறுமையில் வாடித் தவிக்கும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுமாறு, தான தர்மங்களைச் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். அப்போது அல்லாஹ்வின் வசனங்களை நினைவூட்டுகிறார்கள். அதில், மறுமைக்கான என்ன தயார் செய்து வைத்திருக்கிறீர்கள் என்ற குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டுகிறார்கள்.* அதற்குப் பிறகு நபித்தோழர்கள் அளப்பரிய உதவியை செய்தார்கள்; அள்ளிக் கொடுத்தார்கள்.

*🏮🍂தர்மம் செய்வது மட்டுமல்ல வணக்க வழிபாடுகள், கடமைகள், பொறுப்புகள், பிறர் நலம் நாடும் செயல்கள் என்று எதுவாயினும் அதைத் திறம்பட செய்வதற்கு மறுமை சிந்தனை அவசியம். மறுமைக்காக என்ன செய்துள்ளோம் என்ற உணர்வு நம்மை மார்க்க விசயத்தில் என்றும் உயிர்ப்போடும் விழிப்போடும் வைத்திருக்கும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மறுமை வெற்றிக்காக - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

       *🌺 மறுமை வெற்றிக்காக*
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 *✍🏻....தொடர் : [ 05 ]*

*🍃சொர்க்கத்தில்*
                   *கிடைக்கும்*
                            *வரவேற்பு!🍃*

*🏮🍂சொர்க்கத்தில் பல படித்தரங்கள் இருக்கின்றன. சொர்க்கம் செல்ல வேண்டுமெனில், அதில் நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் உலகில் வாழும் போது நல்லமல்களைச் செய்ய வேண்டும்.* அந்த அமல்களின் அளவுக்கு ஏற்ப சொர்க்கத்தில் சிறந்த வாழ்வு கிடைக்கும்.

*يَوْمَٮِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ‏ فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْ‌ۚ‏ اِنِّىْ ظَنَنْتُ اَنِّىْ مُلٰقٍ حِسَابِيَهْ‌ۚ‏  فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍۙ‏ فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏ قُطُوْفُهَا دَانِيَةٌ‏ كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓـــٴًــا ۢ بِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏*

_*🍃அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப் படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் “வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்’’ எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)*_

*📖(திருக்குர்ஆன் 69:18-24)📖*

*🏮🍂பூமியில் வாழும் போது நற்செயல்கள் செய்ததன் காரணமாக சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள் என்று அங்குள்ள மலக்குகள் சொர்க்கவாசிகளுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்;* வாழ்த்து தெரிவிப்பார்கள். இதன் மூலம் நல்ல அமல்கள் செய்வதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🔥நரகவாசிகளின்*
                 *புலம்பல்கள் 🔥*

*🏮🍂இங்கு வாழும் போது மறுமையை மறுத்தோ, மறந்தோ தமக்குக் கிடைக்கும் நேரத்தை எல்லாம் உலக இன்பத்திற்காக மட்டுமே செலவழித்த நபர்கள் மறுமையில் வசமாக மாட்டிக் கொள்வார்கள்.* நற்காரியங்களைச் செய்யாமல் இருந்து விட்டோமே என்று *அந்நாளில் அவர்கள் நரகில் புலம்பித் தவிப்பார்கள். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.*

*كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏ يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏*

_*🍃அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்❓ “எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா❓’’ என்று கூறுவான்.*_

*📖(திருக்குர்ஆன் 89:21-24)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻