முந்தியவர்களில் ஒருவர்
அம்மார் பின் யாசர்(ரலி)
• இவரின் தாயார் பெயர் சுமைய்யா (ரலி) தந்தை பெயர் யாசிர் (ரலி). மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரலி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாசீர் (ரலி) அவர்களுக்கு மணமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார் (ரலி).
• இணைவைப்பாளர்களுக்கு இடையில் இஸ்லாமிய பிரச்சாரம் வெளிப்படையாக துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாசிர் (ரலி) சுமைய்யா (ரலி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யா (ரலி) ஆவார்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3660)
• குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர்.
• அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை. சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையா (ரலி) அவர்களை அபூஜஹ்ல் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாசிர் (ரலி) அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.
• வீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார் (ரலி) ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார் (ரலி) ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும் படி கூறுகிறான்.
• அம்மார் (ரலி) அவர்களை தண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களையும், அவரின் கொள்கையையும் இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார் (ரலி) அதன் பின்பு அவரை விட்டு விடுகின்றனர்.
• தான் செய்த தவறை எண்ணி அழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார் (ரலி) அவர்கள் வேதனை தாங்க முடியாமல் நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது கீழே உள்ள வசனத்தை அல்லாஹ் அருளினான்.
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 16:106)
• சிறந்த போர் வீரரான அம்மார் (ரலி) அபூபக்கர் (ரலி) ஆட்சியில் நிகழ்ந்த யமாமா, பாரசீகப் போரில் கலந்து கொண்டார்கள். யமாமா போரில் அம்மார் (ரலி), முஸ்லீம்களே ஏன் சுவனத்தை விட்டும் வெருண்டோடுகிறீர்கள் என போர் வீரர்களுக்கு உற்சாக மூட்டினார். அப்போரில் அம்மார் (ரலி)அவர்களின் ஒரு காது துண்டிக்கப்பட்டது. அப்படியும் அயராது போரிட்டார்.
• ஹுதைபத்துல் யமான் (ரலி) அவர்களிடம் அவருடைய மரணவேளையில் யாரைப் பின்பற்றுவது என மக்கள் கேட்டதற்கு அம்மார் (ரலி) அவர்களை பின்பற்றுங்கள். எங்கு உண்மை உள்ளதோ அங்கு அம்மார் (ரலி) இருப்பார் எனக் கூறினார்கள்.
• ஹிஜ்ரத்க்கு பின் மதீனாவில் பள்ளி கட்டும் பணியில் அம்மார் (ரலி) இருமடங்கு சுமை சுமந்து வருவார்கள். புழுதி படிந்த அவர்களது மேனியையும் முகத்தையும் நபி(ஸல்)அவர்கள் தம் திருக்கரங்களால் துடைத்திருக்கிறார்கள்.
• அம்மார் (ரலி) அவர்கள் அக்கிரமக்காரர்களால் கொல்லப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் முன்பே கூறியுள்ளார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2812)
• இது மட்டும் அல்லாமல் ஷைத்தானிடம் இருந்து காப்பாற்றப்பட்ட நபர் அம்மார் (ரழி) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3742)
• ஹிஜ்ரி 37 ல் அலி (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும்மிடையே நிகழ்ந்த ஸிப்பீன் போரில் அலி (ரலி) அவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார் (ரலி) அவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள்.
• இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள். அம்மாரை காண சுவனம் ஆசைப்படுகிறது- என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை கூறியுள்ளார்கள்!
(நூல் : திர்மிதி : 3797)
அல்லாஹ் போதுமானவன்
No comments:
Post a Comment