இஸ்லாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை பற்றி அறிந்து கொள்ளுவோம் 
• மதினாவில் ஆரம்ப காலத்தில் மக்கள் அறியாமை காலத்தில் இருந்த பண்டிகைகளை கொண்டாடி கொண்டு இருந்தார்கள்! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் இதை விட சிறந்த இரண்டு நாட்களை கொடுத்து உள்ளான் என்று தியாக பெருநாள் மற்றும் நோன்பு பெருநாள் பற்றி கூறினார்கள்!
(நூல் : சுனன் அபூதாவுத் : 1039)
• நோன்பு பெருநாள் தொழுகை பொறுத்த வரை முஸ்லீம் ஆன ஆண் பெண் அனைவரின் மீதும் கடமை ஆகும்!
• ஷவ்வால் முதல் நாள் ஈத் உடைய தினத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 951)
1) பெருநாள் தொழுகையின் நேரம் :
• சூரியன் உதயம் ஆகி 10 அல்லது 15 நிமிடம் பின்பு இருந்து நாம் பெருநாள் தொழுகை தொழ ஆரம்பம் செய்யலாம்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1512)
2) முஸல்லா எனும் திடலில் தொழுவது :
அபூ ஸயீத் குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) 'முஸல்லா' என்ற (ஈத்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 956)
• பள்ளிகளில் பெருநாள் தொழுவது நபி (ஸல்) அவர்கள் வழிமுறைக்கு மாற்றமானது ஆகும்! பொதுவான ஒரு திடலில் அனைத்து முஸ்லீம்களும் சேர்த்தே தொழ வேண்டும்!
3) பெருநாள் தொழுகையில் இவைகள் கிடையாது :
¡) பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத், பின் சுன்னத் கிடையாது!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 964)
¡¡) பெருநாள் தொழுகைக்கு பாங்கு - இகாமத் கிடையாது!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 960)
4) எத்தனை ரக்ஆத்கள் தொழ வேண்டும் :
நோன்புப் பெருநாள் தொழுகையும் இரண்டு ரகஅத்துகளாகும்.
(நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா : 1425)
• பெருநாள் தொழுகை நாம் வழமையாக தொழும் பஜ்ர் மற்றும் ஜூம்ஆ தொழுகை போன்று தான் தொழ வேண்டும் ஆனால் அதிகப்படியான தக்பீர்கள் சொல்வதன் மூலம் சற்று மாறுபடும்!
• பெருநாள் தொழுகை முறை ஆண் பெண் அனைவருக்கும் ஒரே தொழுகை முறை தான் இதில் வேறுபாடு எதுவும் கிடையாது!
• பெருநாள் தொழுகிறேன் என்று உள்ளத்தில் நிய்யத் வைத்தால் போதும் இதற்கு என்று எந்த துஆவும் குறிப்பிட்ட வார்த்தையும் கூறவேண்டியது கிடையாது!
1) நாம் உள்ளத்தில் நிய்யத் வைத்து அல்லாஹ் அக்பர் என்று முதலில் தக்பீர் கூறி காது அல்லது தோல் புஜம் வரை கைகளை உயர்த்தி தக்பீர் கட்ட வேண்டும்!
2) தக்பீர் கட்டிய பின்பு ஆரம்ப துஆ ஓத வேண்டும்! பின்பு அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம், பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் என்பதை ஓதி கொள்ள வேண்டும்!
3) அதற்கு பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி ஏழு தடவை தக்பீர் கூற வேண்டும்!
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் சொல்லப் பட வேண்டும். இந்த இரண்டு ரக்அத்துகளிலும் தக்பீர்களுக்குப் பின்புதான் குர்ஆன் கிராஅத் ஓதப்படும்.
(நூல் : இர்வாஉல் கலீல் : 639)
• ஒவ்வொரு முறையும் தக்பீர் கூறும் பொழுது கைகளை உயர்த்தலாமா? கூடாத என்பதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் கிடையாது! பெரும்பாலன மார்க்க அறிஞர்கள் உயர்த்தாமல் இருப்பது நல்லது என்று கூறி உள்ளார்கள்!
4) இமாம் 7 முறை தக்பீர் கூறினாலும் நாம் மெதுவாக 7 முறை தக்பீர் கூற வேண்டும்!
5) அதற்கு பின்பு சூராத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூரா ஓத வேண்டும்!
6) அதற்கு பின்பு நாம் வழமையாக தொழுவது போன்று ஒரு ருகூவு மற்றும் இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்!
7) பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டாம் ரக்அத்திற்கு எழ வேண்டும்!
9) மீண்டும் 5 தடவை அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கூற வேண்டும்!
10) தக்பீர் கூறிய பின்பு மீண்டும் பிஸ்மில்லாஹ் கூறி சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூரா ஓத வேண்டும்!
11) பின்பு நாம் வழமையாக தொழுவது போன்று ருக்உ! இரண்டு ஸஜ்தாக்கள் செய்து கடைசி அமர்வு அமர்ந்து இரண்டு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்!
(நூல் : இப்னுமாஜா : 1268 | திர்மிதி : 492 | முஅத்தா : 09)
• இது தான் நபி (ஸல்) அவர்கள் தொழ முறையாகும்! ஆனால் இன்று பெரும்பாலான இடங்களில் இந்த சுன்னாஹ்வை விட்டு விட்டு ஷாபிஈ முறை ஹனபி முறை பெருநாள் தொழுகையை வெவ்வேறு முறையில் தொழுகிறார்கள்!
• ஆனால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் அவர்கள் மரணம் அடைந்த நாள் வரை இவ்வாறு வெவ்வேறு தொழுகை முறை யாருக்கும் கற்று தரவில்லை! முஸ்லீம் அனைவருக்கும் பொதுவாக ஒரே தொழுகை முறை தான் நபி (ஸல்) அவர்கள் கற்று கொடுத்து உள்ளார்கள்!
• பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் மார்க்க உரையாற்ற வேண்டும்! பெருநாள் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்துவது நபிவழிக்கு முரணானது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகை நடத்துபவர்களாக அவர்கள் இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 979)
• பெருநாள் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்துவது நபிவழிக்கு முரணானது.
• இந்த சூராக்களை பெருநாள் தொழுகையில் ஓதுவது சுன்னாஹ்வாகும்! கட்டாயம் கிடையாது! இவை நமக்கு மனனம் இல்லை என்றால் நமக்கு மனனம் உள்ள சூராக்களை ஓதி தொழுகலாம்!
1) நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்ஆத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்), இரண்டாம் ரக்ஆத்தில் ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுவார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 1592)
2) நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்ஆத்தில் சூரத்துல் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்ஆத்தில் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி (ஸல்) ஓதி தொழுது உள்ளார்கள்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 1617)
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 971)
• பெருநாள் தொழுகை தனியாக தொழ கூடாது ஜமாத் உடன் தான் தொழ வேண்டும்!
• ஆனால் நிர்பந்த சூழ்நிலை உடல் நிலை முடியவில்லை! என்றால் அவர் வீட்டில் தொழுகலாம்! வீட்டில் தொழும் போது குத்பா அவசியமில்லை! மற்றப்படி மேலே உள்ள முறையில் இரண்டு ரக்ஆத் தொழுது கொள்ள வேண்டும்!
(பஃத்வா : அல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) : அல் ஷர் அல் மும்தி : 5/156)
• நிர்பந்த சூழ்நிலை ஒருவருக்கு பெருநாள் தொழுகை தவறி விட்டது! அல்லது வரும் வழியிக் ஏதேனும் தடங்களால் தொழுகை தவறி விட்டது என்றால் அவருக்கு இரண்டு வழிமுறை உள்ளது!
1) குத்பா இல்லாமல் தனியாக இரண்டு ரக்ஆத் தொழுது கொள்ள வேண்டும் மேலே கூறிய முறையில்! அல்லது,
2) நம்மை போன்று பெருநாள் தொழுகை தவறி நபர்கள் இருந்தால், அவர்களை அழைத்து ஜமாத் ஆக இரண்டு ரக்ஆத் தொழுது கொள்ள வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : பாடம் : 25)
• பெருநாள் தொழுகையும், உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும் சரி மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து துஆ செய்ய வேண்டும்!
• பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் உள்ளது அதனால் நாம் இந்த நேரத்தில் உடனே எழுந்து சென்று விடாமல் அமர்ந்து துஆ செய்ய வேண்டும்! (குறிப்பிட்ட துஆ எதுவும் கிடையாது பொதுவாக நாம் துஆ செய்து கொள்ளலாம்)
(நூல் : ஸஹீஹ் புகாரி : 971)
@அல்லாஹ் போதுமானவன் 

No comments:
Post a Comment