பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, January 27, 2026

ஷஃபான மாத பித்அத்கள்பாவியாக்கும் பரா அத் இரவு!


ஷஃபான மாத பித்அத்கள்
பாவியாக்கும் பரா அத் இரவு!

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்
இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்
மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் 
ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும். அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10 மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?

அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100 ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

(قوله: فائدة: أما الصلاة المعروفة ليلة الرغائب إلخ) قال المؤلف في إرشاد العباد: ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الامر منع فاعلها: صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب.
وصلاة ليلة نصف شعبان مائة ركعة، وصلاة آخر جمعة من رمضان سبعة عشر ركعة، بنية قضاء الصلوات الخمس التي لم يقضها.

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது)

(فائدة) أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة، وأحاديثها موضوعة.
மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.)

مَسَاجِدِ الْقَاهِرَةِ وَلَوْ شَرَطَ الْوَاقِفُ لِأَنَّ شَرْطَهُ لَا يُعْتَبَرُ فِي الْمَعْصِيَةِ وَفِي الْقُنْيَةِ وَإِسْرَاجُ السُّرُجِ الْكَثِيرَةِ فِي السِّكَكِ وَالْأَسْوَاقِ لَيْلَةَ الْبَرَاءَةِ بِدْعَةٌ وَكَذَا فِي الْمَسَاجِدِ وَيَضْمَنُ الْقَيِّمُ وَكَذَا يَضْمَنُ إذَا أَسْرَفَ فِي السُّرُجِ فِي رَمَضَانَ وَلَيْلَةِ الْقَدْرِ وَيَجُوزُ الْإِسْرَاجُ عَلَى بَابِ الْمَسْجِدِ فِي السِّكَّةِ أَوْ السُّوقِ وَلَوْ اشْتَرَى مِنْ مَالِ الْمَسْجِدِ شَمْعًا فِي رَمَضَانَ يَضْمَنُ قُلْتُ : وَهَذَا إذَا لَمْ يَنُصَّ الْوَاقِفُ عَلَيْهِ وَلَوْ أَوْصَى بِثُلُثِ مَالِهِ أَنْ يُنْفَقَ عَلَى بَيْتِ الْمَقْدِسِ جَازَ وَيُنْفَقُ فِي سِرَاجِهِ وَنَحْوِهِ قَالَ هِشَامٌ فَدَلَّ هَذَا عَلَى أَنَّهُ يَجُوزُ أَنْ يُنْفَقَ مِنْ مَالِ الْمَسْجِدِ عَلَى قَنَادِيلِهِ وَسُرُجِهِ وَالنَّفْطِ وَالزَّيْتِ ا هـ .
பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக! பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?

(قوله: وكذا بعد نصف شعبان) أي وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله (ص): إذا انتصف شعبان فلا تصوموا.
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

ஏன் இந்த சிறப்பு?

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.

இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.

மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.

முதல் ஆதாரம்

وَالْكِتٰبِ الْمُبِيْنِ ‌ ۛ‌ۙ‏

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.

فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ‏

அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

அல்குர்ஆன் 44:2-4

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ‏

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.

(அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.

 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

(அல்குர்ஆன் 2:185)

இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இரண்டாம் ஆதாரம்

1388 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “
إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا، فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ “
ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னு மாஜா-1388 (1378)

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மூன்றாம் ஆதாரம்

744 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ
فَقَدْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ « أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ». قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ.
فَقَالَ « إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ ». وَفِى الْبَابِ عَنْ أَبِى بَكْرٍ الصِّدِّيقِ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ. وَسَمِعْتُ مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ وَقَالَ يَحْيَى بْنُ أَبِى كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதீ-739 (670)

இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நான்காவது ஆதாரம்

9857- حَدَّثَنَا يَزِيدُ ، قَالَ : أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، قَالَ :
لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ ، وَذَلِكَ أَنَّهُ تُنْسَخُ فِيهِ آجَالُ مَنْ يَمُوتُ فِي السَّنَةِ.
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764 .
ஃபலாயிலுர் ரமளான் – இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8

இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஐந்தாவது ஆதாரம் அரபி ???

9 – أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي الْحَسَنِ الْحُسَيْنِيِّ، عَنْ مُحَمَّدٍ الْعَرْزَمِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، رَفَعَهُ قَالَ:
«مَنْ صَلَّى لَيْلَةَ النِّصْفِ مِنْ رَمَضَانَ، وَلَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ مِائَةَ رَكْعَةٍ يَقْرَأُ فِيهَا بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ أَلْفَ مَرَّةٍ، لَمْ يَمُتْ حَتَّى يُبَشَّرَ بِالْجَنَّةِ»
4. ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129) குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில், இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

7928 – أخبرنا عبد الرزاق قال أخبرنا معمر عن أيوب قال قيل لابن أبي مليكة إن زيادا المنقري وكان قاصا يقول إن أجر ليلة النصف من شعبان مثل اجر ليلة القدر فقال بن أبي مليكة لو سمعته يقول ذلك وفي يدي عصا لضربته بها
அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர், ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7928 , (பாகம்: 4, பக்கம்: 317)

حدثنا محمد بن سلام، سألت عبدالله بن المبارك
عن نزول ليلة النصف من شعبان، فقال عبدالله: يا ضعيف ليلة النصف! ينزل في كل ليلة، فقال الرجل يا أبا عبدالله! كيف ينزل؟ أليس يخلو ذلك المكان منه؟ فقال عبدالله: ينزل كيف يشاء ” وفي رواية أخرى لهذه الحكاية أن عبدالله ابن المبارك قال للرجل: ” إذا جاءك الحديث عن رسول الله صلى الله عليه وسلم فأصغ له “.
முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.

நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2697- حَدَّثَنَا يَعْقُوبُ ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ.
رَوَاهُ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الْمَخْرَمِيُّ وَعَبْدُ الْوَاحِدِ بْنُ أَبِي عَوْنٍ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி-2697 

4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ
أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

முஸ்லிம்-3541 (3243)

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

Saturday, January 24, 2026

அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி)


💞 முந்தியவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞

• மக்காவில் செல்வமும் அரசியல் வளமும் மிக்க சுஹைல் இப்னு அம்ர், ஃபாகிதா இவர்கள் இருவருக்கும் மகனாக அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்! அபு ஜந்தல் (ரழி) என்ற ஒரு சகோதரும் இவருக்கு உண்டு!

• இவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ர், குரைஷ் குலத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்! மேலும் குரைஷ் குலத்தின் முக்கிய பேச்சாளர்,
மக்காவின் அரசியல்–தூதரகத் தலைவராகவும் விளக்கினார்! மக்காவில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். முஸ்லீம்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர். இதற்கு நிறைய ஆலோசனைகளும் கூறியுள்ளார்கள்!

• இந்த அளவிற்கு தந்தை கடுமையாக இஸ்லாத்தை எதிர்த்தாலும், இவரின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி), நபித்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர் அதை வெளிப்படுத்தாமல் மறைமுகமாகவே வைத்திருந்தார்கள்!

• குரைஷிகளின் சபைகளை புறக்கணித்து விட்டு, அர்கம் (ரழி) அவர்கள் வீட்டில் மறைமுகமாக இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்வார்கள்! தந்தைக்கு இந்த விசியம் தெரியவர இவரை கண்டித்தார்கள் மேலும் பொருளாதாரம் எதையும் கொடுக்கமாட்டேன் என்றும் கடுமையாக கூறினார்கள்!

• ஒரு கட்டத்தில் மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு, மக்கா காஃபிர்கள் அதிகம் கொடுமை இழைக்க, நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்களை அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்ய சொன்னார்கள், அதில் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்களும் ஒருவர் என்பதை வரலாற்று அறிஞர் இப்னு ஹிஷாம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்!

• பின்பு, சில மாதம் கழித்து ஹிஜ்ரத் செய்தவர்கள் மக்கா வர, அப்துல்லாஹ் (ரழி) அவர்களை அவர் தந்தை வீட்டிலயே சிறை வைத்தார். இவ்வாறு சில நாட்கள் செல்ல, இவரின் சகோதரன் அபு ஜந்தல் (ரழி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். 

• பத்ருப் போர் சமயத்தில் இவர் தந்தையும் முஸ்லீம்களுக்கு எதிராக போர் புரிய தயாராகினார். அப்போது அப்துல்லாஹ் (ரழி) சாமர்த்தியாக சிந்தித்து, தந்தையிடம் மன்னிப்பு கேட்டு தான் நம்முடைய பழைய மார்க்கத்திற்கே வந்து விட்டேன்! என்னையும் உங்களுடன் போருக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய தந்தை அவரையும் உடன் அழைத்து சென்றார்.

• போர் ஆரம்பம் ஆகும் முன்பே, பிறர் தன்னை கவனிக்காத சூழ்நிலையில் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டார் அப்துல்லாஹ் (ரழி). அந்த வகையில் இவரும் பத்ர் போரில் கலந்து கொண்டு ஸஹாபி ஆவார்!

• இதன் பின்பு, மதினாவிலயே தங்கி இருந்தார்கள்! இவர் பத்ர் போர், உஹத் போர், அகழ்ப்போர், யர்மூக் போர், யமாமா போர் போன்றவற்றில் கலந்து கொண்டு வீரமாக போரிட்டுள்ளார்.

• மக்காவிற்கு உம்ராவிற்காக நபி (ஸல்) அவர்களுடன், 1,400 ஸஹாபாக்கள் வந்தார்கள். மக்கா காபிர்கள் இவர்கள் போருக்கு வந்து உள்ளார்கள் என்று உள்ளே விடமால் ஹுதைபியா எனும் இடத்திலயே தடுத்து விட்டார்கள். இதன் பின்பு முஸ்லீம்கள் வந்த நோக்கத்தை பற்றி எடுத்து கூற உஸ்மான் (ரழி) அவர்கள் மக்காவிற்கு சென்றார்கள்.

• சில நாட்கள் ஆகியும் உஸ்மான் (ரழி) அவர்கள் திரும்பி வராததால் உஸ்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார் என்று ஒரு தகவல் பரவுகிறது! இதற்கு கண்டிப்பாக நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) ஒரு மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) ஸஹாபாக்களிடம் மரணம் வரும் வரை போரிடுவோம், மாறாக, (எந்தச் சூழ்நிலையிலும்) நாங்கள் புறமுதுகிட்டு ஓட மாட்டோம் என்று உறுதிமொழி வாங்கினார்கள்! அதில் அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் ஒருவர்! ஸஹாபாக்களின் இந்த உறுதியை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் வசனமே அருளியுள்ளான்!
 
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.

(அல்குர்ஆன் : 48:18)

• இதன் பின்பு முஸ்லீம்களுக்கும், மக்கா காஃபிர்களுக்கும் இடையே நடைபெற்ற ஹுதைபியா உடன் படிக்கையில் முஸ்லீம்கள் சார்பாக நபி (ஸல்) அவர்கள், அபூக்கர் (ரழி) உமர் (ரழி) போன்ற பெரும் ஸஹாபாக்கள் சாட்சியாக முத்திரையிட அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் அதில் கலந்து கொண்டு தன்னுடைய கையெழுத்தை முத்திரையாகயிட்டார்கள்! காஃபிர்களின் சார்பாக சுஹைல் இப்னு அம்ர் கலந்து கொண்டார்.

• இதன் பின்பு சில மாதம் கழித்து மக்கா வெற்றியின் போது, முஸ்லீம்கள் மக்காவிற்கு உள்ளே நுழைந்தார்கள்! அப்போது தன்னுடைய தந்தையான சுஹைல் இப்னு அம்ர் அவருக்காக நபி (ஸல்) அவர்களிடம் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள் நபி (ஸல்) அவர்களும் அவரை மன்னித்தார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் இறப்பிற்கு பிறகு, மக்காவில் குழப்பம் ஏற்பட அப்போது சுஹைல் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் தான் மக்களுக்கு உபதேசம் செய்து அந்த குழப்பத்தை போக்கி, முஸ்லீம்களை ஈமானில் உறுதியாக இருக்கும்படி செய்தார்கள்!

• நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு, அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் யமாமா என்ற இடத்தில் பொய்யன் நபி முஸைலமாவிற்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பெரும் போர் ஒன்று நடைபெற்றது.

• போர் மிக கடுமையாக நடைபெற்றது. இதில் பல ஸஹாபாக்கள் வீரமாக போரிட்டு ஷஹீத் ஆனார்கள். அவ்வாறு போரிட்டு ஷஹீத் ஆனவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் பின் சுஹைல் (ரழி).

• மக்காவில் செல்வம், அரசியல் பலமிக்க, வசதியான வாய்ப்புகள் உள்ள வீட்டில் பிறந்தாலும் இஸ்லாத்திற்காக அனைத்தையும் விட்டு வந்தார்கள். முஸ்லீம்களிடம் ஆட்சியில், அதிகமான செல்வங்கள் வந்த போதும் அதை எதையும் அனுபவிக்காமல் இஸ்லாத்திற்காக தன்னையே அர்ப்பணம் செய்தவர் தான் அப்துல்லாஹ் பின் சுஹைல் ரலியல்லாஹு அன்ஹு!

@அல்லாஹ் போதுமானவன் 💞

Wednesday, January 21, 2026

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞


💞 ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• இஸ்லாத்தில் 8 வது மாதம் ஷஃபான் மாதமாகும்! ரஜப் மற்றும் ரமலான் இரண்டு மாதத்திற்கு இடையில் இந்த மாதம் வருகிறது.

• ரமலான் மாதத்தில் நாம் வணக்க வழிபாடுகளிலும், மறுமைக்கான தயாரிப்புகளிலும் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு ஒரு பயிற்சியாக அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த ஷஅபான் மாதத்தை கொடுத்திருக்கின்றான்.

• இன்ஷாஅல்லாஹ் ரஜப் மாதம் (21/01/2026) இன்றைய மஹ்ரிபுடன் முடிவடைகிறது! (21/01/2026) இன்றைய மஹ்ரிப் பின்பு இருந்து ஷஃபான் மாதம் ஆரம்பம் ஆகுகிறது! இன்ஷாஅல்லாஹ் அடுத்தது ரமலான் மாதம் தான்!!!! 

💟 ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நேற்க்கலாம் :  

• ரமலானில் நோன்பு வைத்தால் அனைவரும் அறிந்து கொள்ளுவார்கள் ஆனால் இந்த ஷஃபான் மாதத்தில் நோன்பு வைத்தால் பலரும் நம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள் நம்மை படைத்த அல்லாஹ்வை தவிர! எனவே இந்த மாதத்தில் நோன்பு வைப்பதால் இக்லாஸ் (மன தூய்மை) உடன் நம்மால் அமல் செய்ய வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது!

• பலர் நோன்பு என்றாலே ராமலனில் மட்டும் வைக்கிறார்கள் இதனால் ஒரு சில நோன்புலயே சோர்ந்து விடுகிறார்கள் இன்னும் சிலர் முடியவில்லை என்று விட்டு விடுகிறார்கள்!

• நாம் ரமலான் வருவதற்கு முன்பு இந்த மாதத்திலயே நோன்பு வைக்க ஆரம்பம் செய்தால் ரமலானில் நோன்பு வைப்பது நமக்கு எளிதாக இருக்கும்!

• ஷஃபான் மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு நோன்பு வைக்கலாம் இது சுன்னாஹ், கட்டாயம் இல்லை! ஷஃபான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பும் வைத்து உள்ளார்கள் பிறறையும் நோன்பு வைக்க வலியுறுத்தி உள்ளார்கள்!

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :

ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை! ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1969)

உம்மு சலமா ரழியல்லாஹுஅன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் :

இரண்டு மாதங்களைத் தவிர தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு வைத்து பார்த்ததில்லை. அவை, ஷஅபான் மற்றும் ரமலான்.

(நூல் : சுனன் திர்மிதி : 736)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறுவதை அபதுல்லாஹ் பின அபீ கைஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும் அதனைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும்” 

(நூல் : சுனன் அபூதாவூத் : 2431)

💟 ஷாபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன :

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நபி (ஸல்) அவர்களிடம் : அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது,

ஷாபான் -  ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்! இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள்!

இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன! இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்!

(நூல் : சுனன் நஸயீ : 2357 | தரம் : ஹஸன் | அல்பானி (ரஹ்))

• இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் அதிகம் நோன்பு வைத்து உள்ளார்கள்! இதை தவிர வேறு எந்த காரணத்திற்கும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்க வில்லை!

• அதே போன்று இதை தவிர ஷஃபானில் நோன்பு நேற்பதற்கு சிறப்புகள் வேறு எதுவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸ்கள் கிடையாது!

• ஷஃபானில் நோன்பு நேற்ப்பதின் சிறப்புகள் என்று ஏராளமான செய்திகள் உண்டு ஆனால் அவை அனைத்துமே மிக பலகீனமான ஹதீஸ் அல்லது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்!

💟 தொடர் நோன்பு நேர்க்க கூடாது :

• தொடர் நோன்பு என்பது ரமலான் மாதத்தில் மட்டுமே வைக்க வேண்டும்! இதற்கு சில அறிஞர்கள், ரமலான் அல்லாத மாதத்தில் அதிக தொடர் நோன்பு வைப்பதால், அவர் ரமலானில் நோன்பு நோர்க்க முடியாத அளவிற்கு பலவீனமாக ஆகிவிடுவார் என்ற ஒரு காரணத்தை குறிப்பிடுகிறார்கள்.

• மேலும் நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு வைத்து உள்ளார்கள் ஆனால், மாதம் முழுவதும் விடாமல் நோன்பு வைக்க வில்லை! இவ்வாறு தொடர் நோன்பும் வைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்!

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள் :

நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1971)

• நாம் இந்த மாதத்தில் அதிகம் நோன்பு வைக்க விரும்பினால், தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு அல்லது பிறை 13,14,15 ஆகிய நாட்களில் நோன்பு வைக்கலாம் அல்லது திங்கள் வியாழன் நோன்பு வைக்கலாம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு நோன்பு வைத்து கொள்ளலாம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டு விடுவீராக! இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1976)

💟 ஷாபான் மாதத்தில் உங்களால் இயன்ற அமல்களை செய்யுங்கள் :

• ஷாபான் மாதத்தில் நோன்பு வைப்பதை நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளார்கள்! இதை தவிர்த்து வேறு எந்த ஒரு அமலையும் குறிப்பிட்டு கூறவில்லை! அதனால் நாம் வழமையாக செய்யும் அமலில் இயன்ற அளவுக்கு செய்தாலே போதுமானது!

• பர்ளான தொழுகைகளை நேரம் உடன் தொழுதல், பர்ளு தொழுகையின் முன் பின் சுன்னத் தொழுகைகள், நபிலான தொழுகைகள், அல் குர்ஆன் ஓதுதல், தஸ்பீக் செய்தல், தர்மம் செய்தல், தவ்பா செய்தால் இது போன்று நல்அமல்களை நம்முடைய சக்திக்கு இயன்ற அளவிற்கு செய்யலாம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1970)

💟 விடுப்பட்ட நோன்புகள் :

• நாம் ரமலானில் மார்க்கம் அனுமதித்த காரணத்தினால் விட்ட நோன்புகள் அல்லது நேர்ச்சை நோன்புகளை இந்த மாதத்தில் வைத்து கொள்ளலாம்!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும்! அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1950)

💟 களா நோன்பு வைக்க கால அவகாசம் :

• களா நோன்பு என்பது நம் மீது கடமையான நோன்பு ரமலான் நோன்பு மார்க்கம் அனுமதித்த காரணத்தில் விட்டு விட்டால் அல்லது நம் மீது நாமே கடமையாக்கி கொண்டு நேர்ச்சை நோன்புகள் வைக்க முடியவில்லை என்றால் நாம் பின்னர் வரும் நாட்களில் வைத்து கொள்ள வேண்டும்!

• அப்படி வைக்க முடியவில்லை என்றால் நாம் நமக்கு நோன்பு வைக்க சூழ்நிலை அமையும் வரை நோன்பை கால தாமதம் செய்யலாம் மார்க்கம் அனுமதித்த காரணம் இருந்தால் மட்டுமே!

உதாரணமாக : கர்ப்பிணி பெண்கள் - பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் - நோயாளி!

• களா நோன்பு பொறுத்த வரை இஸ்லாம் நமக்கு எந்த ஒரு வரையரையும் கொடுக்க வில்லை இந்த நாட்கள் முடிவதற்கு முன்பு வைத்து விட வேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் நமக்கு விதிக்க வில்லை!

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) -  ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்!

(சூரத்துல் : அல் பகரா : 184)

• இந்த வசனத்தில் அல்லாஹ் பின்னால் வரும் காலங்களில் நோன்பு வைத்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளான் ஆனால் இந்த நாட்கள் வைக்க வேண்டும் இல்லை என்றால் எப்போதும் வைக்க முடியாது என்று நமக்கு கூற வில்லை!

• நாம் விட்ட நோன்புகளை கணக்கு வைத்து கொண்டு பின்னால் வரும் காலங்களில் எப்போது வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம்! ஆனால் அதற்கு என்று வைக்க சூழ்நிலை நேரம் இருந்தும் அலட்சியம் செய்ய கூடாது!

💟 ஷாபான் மாதத்தின் கடைசி இரண்டு நாட்களை மட்டும் தேர்வு செய்யாதீர்கள் :

• ஷஃபான் கடைசி இரண்டு நாட்களை மட்டும் தேர்வு செய்து நோன்பு வைக்க கூடாது! ஏன் என்றால் ஷஃபான் நோன்பும் ரமலான் நோன்பும் ஒரு தொடர்ச்சியாக ஆகி விட கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் இதை தடை செய்து உள்ளார்கள்!

• ஆனால்  வழமையாக திங்கள் & வியாழன் நோன்பு வைக்க கூடியவர்கள் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைக்க கூடியவர்கள் - ஷாபான் கடைசியில் நோன்பு வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் இவர்கள் மட்டும் ஷாபான் கடைசியில் நோன்பு நோர்க்கலாம்! 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்குமுந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்)  ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1976)

💟 ஷஃபான் பிறை 15க்கு பிறகு பின் நோன்பு நோற்க்க கூடாதா?

ஷஃபானின் நடுப்பகுதியை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

(நூல் : சுனன் அபூதாவுத்)

• இந்த ஹதீஸ் பலகீனமான செய்தியாகும்! மற்றும் ஏற்று கொள்ள கூடாது!  என இமாம் அஹ்மத் (ரஹ்) , இமாம் பைஹகீ (ரஹ்) போன்ற பல ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறி உள்ளார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் ஷாபான் இறுதி இரண்டு நாட்கள் மட்டும் நோன்பு வைக்க வேண்டாம் என தடை செய்து உள்ளார்கள்! அந்த இரண்டு நாட்கள் தவிர்த்து ஷாபானில் மற்ற நாட்களில் நோன்பு நோர்க்கலாம்!

💟 அதிகம் நோன்பு நோர்ப்பத்தின் சிறப்பு :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

'சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்!
 
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1896)

💟 நோன்பை தவிர வேறு என்ன குறிப்பிட்ட அமல்கள் இந்த ஷஃபானில் செய்யலாம்?

• நபி (ஸல்) அவர்கள் நோன்பை தவிர வேறு எந்த சிறப்பான அமல்களையும் குறிப்பிட்டு இந்த ஷாபான் மாதத்தில் செய்யவில்லை!

அல்கமா (ரஹ்) அறிவித்தார்கள் :
           
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாள்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன்! அதற்கவர்கள் இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1987)

• ஷஃபான் 15 யில் பராஆத் இரவு என்று அன்றைய நாளை சிறப்பித்து கொண்டாடுவார்கள். அன்றைய இரவில் திக்ர், சிறப்பு துஆ, சிறப்பு தொழுகை என்று சிறப்பிக்க மற்றொரு புறம் சிறப்பு பயான், விஷேஷ உணவுகள், அன்றைய நாளில் புத்தாடை என்று பெருநாள் போன்று கொண்டாடுவார்கள்.

• இதை பற்றி நிறைய ஹதீஸ்கள் இருந்தாலும் அதில் ஒன்று கூட ஸஹீஹ் கிடையாது. பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே இதை பற்றி உண்டு. இன்ஷாஅல்லாஹ் இதை பற்றி விரிவாக பதிவு செய்கிறோம்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

நெருக்கடி & துன்பம் & கவலைஆகிய வற்றில் இருந்து விடுப்பட அழகிய துஆ 💞


💞 நெருக்கடி & துன்பம் & கவலை
ஆகிய வற்றில் இருந்து விடுப்பட அழகிய துஆ 💞

| துஆ தொடர் :  |

💟 சோதனைகள் ஏற்படும் போது ஓதும் அழகிய துஆ :

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ

‘ அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜு ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத்த அய்னின் வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹா இல்லா அனத்த ’

பொருள் : யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை!

(நூல் : அபூதாவூத் : 3/959 : Eng Ref)

 اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ‏

‘ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ’

பொருள் : நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்!

(அல்குர்ஆன் : 2 : 156)

• மிகவும் அழகிய அர்த்தம் உள்ள துஆ ஆனால் நம்முடைய சமூகம் இந்த துஆவை மரண செய்தி கேட்டால் மட்டும் ஓதுகிறார்கள்!

• ஆனால் அல்லாஹ் கஷ்டம் சோதனை வந்தால் இந்த துஆவை ஓத சொல்லி உள்ளான்!

💟 நபி யூனுஸ் (அலை) அவர்கள் கேட்ட அழகிய துஆ :

لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌  ‌‏

‘ லாயிலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னி குன்த்து மினழ்ழாளிமீன் ’

பொருள் : உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்!

(அல்குர்ஆன் : 21 : 87 & 88)

• நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றில் நெருக்கடியான சூழ்நிலை கேட்ட அழகிய துஆ இந்த துஆவை கேட்ட பின்பு தான் அல்லாஹ் அவர்களை துன்பத்தில் இருந்து விடு வித்தான்!

💟 நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின் போது கேட்ட அழகிய துஆ : 

لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

‘ லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் ’

பொருள் : கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை!

(நூல் : புகாரி : 6346)

اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا

‘ அல்லாஹு அல்லாஹு ரப்பீ லா உஷ்ரிகு பிஹி ஷைஆ ’

பொருள் : அல்லாஹ் அல்லாஹ் தான் எனது இறைவன் அவனுக்கு நான் எதையும் இணைவைக்க மாட்டேன்!

(நூல் : அபூதாவூத் : 1525)

💟 நெருக்கடியான நிலையில் ஓத வேண்டிய அழகிய துஆ :

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

‘ யா ஹய்யூ யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸு ’

பொருள் : என்றென்றும் வாழ்பவனே, நித்தியமான ஒருவனே, உன் கிருபையினால், என்னுடைய எல்லா காரியங்களையும் சரியான முறையில் அமைய நான் உன்னை அழைக்கிறேன்!

(நூல் : திர்மிதி : 3524)

@அல்லாஹ் போதுமானவன் 💞

ஷஅபான் மாத சுன்னத்தான நோன்புகளும் – தவிர்க்க வேண்டிய பித்அத்துகளும்


ஷஅபான் மாத  சுன்னத்தான நோன்புகளும் – தவிர்க்க வேண்டிய பித்அத்துகளும்

இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிகமாக சுன்னத்தான நோன்புகளை நோற்றுள்ளார்கள். 

அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 
நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) 
நூல் : புகாரி (1967)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில நாட்களைத் தவிர்த்து) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள்.
உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்! என்றும் நபி (ஸல்) கூறுவார்கள்.
(கூடுதலாக தொழும் வணக்கங்களில்) குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
(புகாரி: 1970)

முழுமையாக நோன்பு நோற்பதற்கு கடமையாக்கப்பட்ட மாதம் இரமலான் மாதம் மட்டும்தான். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்கவில்லை. எனினும் மற்றமாதங்களை விட அதிகமாக இந்த மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள். 

வழமையாக நோன்பு நோற்கும் வழமை உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் ஷஅபான் இறுதியில் நோன்பு நோற்பது கூடாது

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாளில் நோன்பு நோற்கலாம்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : புகாரி (1914)

திங்கள், வியாழன் நோன்பு , மாதம் மூன்று நோன்புகள் போன்ற வழமையான நோன்புகளை நோற்பவர்கள் ஷஅபான் இறுதியில் நோற்றுக் கொள்ளலாம். 

ஒரு நபித்தோழர் ஷஅபான் இறுதியில் (அதாவது பிறை 29, 30 போன்ற நாட்களில்) நோன்பு நோற்றால் பாவமாகிவிடுமோ என்ற எண்ணத்தில் தாம் வழமையாக நோற்கும் நோன்பை விட்டுவிட்டார். அவரிடம் அதைப் பற்றி விசாரித்த நபி (ஸல்) அவர்கள் வழமையாக நோற்கும் நோன்பை அவ்வாறு விட வேண்டியதில்லை என்பதை விளக்கும் வகையிலும், வழமையாக நோற்கும் நோன்பை விட்டால் அதை வேறுநாட்களில் நோற்கலாம் என்பதை தெளிவுபடுத்தும் வகையிலும் “நீர் இரமலான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக” என்று கூறினார்கள். 

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “இல்லை’ என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.
.
நூல் : முஸ்லிம் (2155)

ஷஅபான் 15 ம் நாள் மட்டும் குறிப்பாக நோன்பு நோற்பது பித்அத் ஆகும். இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும். இறைத்தூதர் செய்தார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத எந்த ஒரு செயலையும் வணக்கமாகச் செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் அது வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும். 

ஷஅபான் 15 ஆம் இரவிற்கென்று எந்த ஒரு சிறப்பும் கிடையாது. மற்ற நாட்களின் இரவுகளைப் போன்றுதான் ஷஅபான் 15 ஆம் இரவும் ஆகும். ஷஅபான் 15 ஆம் இரவைச் சிறப்பித்து வரும் செய்திகள் பலவீனமானவையாகும். 

ஷஅபான் 15 ஆம் இரவு மட்டும் சிறப்பாக இரவுத் தொழுகையை நிறைவேற்றுவது பித்அத் ஆகும். மற்ற இரவுகளில் இரவுத் தொழுகையை நிறைவேற்றும் வழமையுடையோர் இந்த இரவிலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் மற்ற இரவுகளில் தொழும் வழமை இல்லாதவர்கள் இந்த இரவை மட்டும் சிறப்பித்து தொழுவது கூடாது. இது தொடர்பாக முன்வைக்கப்படும் ஆதாரங்கள் பலவீனமானவையாகும். 

ஷஅபான் 15 ஆம் இரவில்தான் அந்த வருடம் நடைபெற வேண்டிய காரியங்கள் (விதி) நிர்ணயம் செய்யப்படுகிறது என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரான நம்பிக்கையாகும். 

லைலத்துல் கத்ர் இரவில்தான் நடைபெற வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 
அல்லாஹ் கூறுகிறான் : 
இ(வ் வேதத்)தை மதிப்புமிக்க இரவில் இறக்கினோம். மதிப்புமிக்க இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அதில் வானவர்களும், (ஜிப்ரீல் எனும்) ரூஹூம் தமது இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு செயல்திட்டத்துடன் இறங்குகின்றனர். அமைதி (நிறைந்த இரவு). அது, அதிகாலை உதயமாகும்வரை இருக்கும்.
(அல்குர்ஆன் அத்தியாயம் 97)

லைலத்துல் கத்ர் இரவு இரமலான் மாதத்தில்தான் உள்ளது. 
எனவே ஷஅபான் 15 ஆம் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டதாக நம்புவதும், ஷஅபான் பதினைந்தாம் இரவில் நடைபெறவேண்டிய காரியங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது என்ற நம்பிக்கையும் குர்ஆனுக்கு முரணான தவறான நம்பிக்கையாகும். 

மரணித்தவர்களுக்காக ஒன்றும். இரண விஸ்தீரணத்துக்காக ஒன்றும், ஆயுள் நீடிப்பதற்காக ஒன்றும் என ஷஅபான் பதினைந்தாம் இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவது என்பது எந்த ஒரு அடிப்படையுமின்றி உருவாக்கப்பட்ட பித்அத் ஆகும். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு குர்ஆன், சுன்னாவில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. 

ஷஅபான் 15 ஆம் இரவில் பிரத்யோகமாக கப்ரு ஸியாரத் செய்வதும். அந்த இரவில் பிரத்யோகமாக மரணித்தவர்களுக்குப் பிரார்த்திப்பதும் பித்அத் ஆகும். ஷஅபான் 15 ஆம் இரவில் கப்ரு ஸியாரத் செய்வது சிறப்பானது என்பதற்கு நபிமொழிகளில் எந்த ஒரு சான்றும் கிடையாது. 

சில ஊர்களில் பராஅத் ரொட்டி (வலாத் ரொட்டி) என்ற பெயரில் ரொட்டியைச் சுட்டு ஃபாத்திஹா ஒதி அதை விளம்புகின்றனர். இதுவும் குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இல்லாத வழிகெட்ட பித்அத் ஆகும். 

ஷஅபான் பதினைந்தாம் இரவிற்கு “பராஅத் இரவு” (லைலத்துல் பராஆ) என்ற பெயர் குர்ஆன் சுன்னாவில் கூறப்படவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் தமது வாழ்நாளில் “லைலத்துல் பராஆ” என்ற வார்த்தையை உச்சரித்தார்கள் என்பதற்குக் கூட எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

-- Abdun Nasir M.I.Sc.,

Sunday, January 18, 2026

கவலை - #துன்பம் - #கஷ்டம்


💟 #கவலை - #துன்பம் - #கஷ்டம் ஏற்படும் போது  நபி அவர்கள் கற்று தந்த அழகிய துஆக்கள் 🛐

💟 முதல் துஆ :-

அரபியில் :

اللِّهُمَّ إنِّي عَبْدُكَ ، ابْنُ عَبْدِكَ ، ابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي بِيَدِكَ ، مَاضِ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أنْزَلْتَهُ فِي كِتَاَبِكَ ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي ، وَ نُورَ صَدْرِي ، وَ جَلاءَ حُزْنِي ، وَ ذَهَابَ هَمِّي  

தமிழில் :

அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாஸியத்தீ பி எதிக, மாழின் ஃபிய்ய ஹுக்முக, அதுலுன் ஃபிய்ய கலாவுக, அஸ்அலுக பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹீ நஃப்ஸக, அவ் அன்ஸல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவிஸ்தஃதர்த்த பிஹீ ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அளீம ரபீஅ கல்பீ, வ நூர சதுரீ, வஜலாஹ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ வகம்மீ

பொருள் :

அல்லாஹ்வே! நான் உன் அடிமை; உனது அடிமையின் மகன்; உன் அடிமைப் பெண்ணின் மகன்; எனது உச்சி முடி உன் கையில் இருக்கிறது; என்னில் உன் தீர்ப்பு நிச்சயம் நிறைவேறக் கூடியதே; என் விஷயத்தில் உன் விதி நீதியானதே; உனக்குத் தகுதியான ஒவ்வொரு பெயரின் பொருட்டால் - அப்பெயரை நீ உனக்குச் சூட்டி இருக்கின்றாய்; அல்லது அதை உனது நூலில் இறக்கி இருக்கின்றாய்; அல்லது உனது அடியார்களில் ஒருவருக்கு அதை நீ கற்றுக் கொடுத்திருக்கின்றாய்; அல்லது உன்னிடம் உள்ள மறைவான கல்வியில் அதை நீ மறைத்து வைத்திருக்கின்றாய் - (அத்தகைய உனது பெயரால் இந்தக்) குர்ஆனை எனது உள்ளத்திற்கு வசந்தமாகவும் எனது இதயத்திற்குப் பிரகாசமாகவும் எனது கவலையை அகற்றக் கூடியதாகவும் எனது துக்கத்தை நீக்கக் கூடியதாகவும் ஆக்கி வைக்க வேண்டுமென உன்னிடம் கேட்கிறேன்.

 ( நூல் : முஸ்னது அஹ்மது : 3704 )

💟 இரண்டாவது துஆ :-

அரபியில் :

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ 

தமிழில் :

'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்'

பொருள்:

இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

( நூல் : ஸஹீஹ் புகாரி : 6363 )

💟  மூன்றாவது துஆ :-

அரபியில் :

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

தமிழில் :

 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்'

பொருள்:

 கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.

( நூல் : ஸஹீஹ் புகாரி : 6346 )

💟 நான்காவது துஆ :-

 

அரபியில் :

لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ‌ۚ‏ 

தமிழில் :

லாஇலாஹ இல்லா அந்த ஸுப்ஹானாக இன்னி குந்து மினல்லாளிமீன்

பொருள் :

 “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”

( அல் குர்ஆன் 21: 87 )

உங்களால் இயன்றவரை இந்த துஆக்களை ஓதுங்கள் 🤲.....

*நபி வழி நடப்போம்*💝

     ____________________________

Thursday, January 15, 2026

அல்லாஹ்வின் அல் கரீபு - القَرِيْبٌ என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம்


அல்லாஹ்வின் அல் கரீபு - القَرِيْبٌ என்ற அழகிய பெயர் பற்றி அறிந்து கொள்வோம் 💞
~ அல் அஸ்மா உல் ஹுஸ்னா : 49
• சென்ற பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயரான அல் ஜப்பார் பற்றி பார்த்தோம்! அதன் தொடராக இந்த பதிவில் அல்லாஹ்வின் மற்றொரு அழகிய பெயரான அல் கரீபு பற்றி பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!
• அல் கரீப் என்றால் அருகில் உள்ளவன் என்பது அர்த்தமாகும்! இந்த பெயர் அல்குர்ஆனில் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளது!
அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்! இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள்! நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்! (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்!
(சூரத்துல் : அல் ஹூத் : 61)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் : நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக.
(சூரத்துல் : அல் பகரா : 186)
• அல் கரீப் என்ற சொல்லை இரண்டு வகையாக பிரிக்கலாம் : 1) பொதுவான நெருக்கம், 2) குறிப்பான நெருக்கம்!
💟 பொதுவான நெருக்கம் :
• அல்லாஹ் அவனுடைய அறிவால், கண்காணிப்பால் அவனுடைய படைப்பினங்கள் அனைத்திற்கும் நெருக்கமாக இருக்கிறான்!
• அல்லாஹ்வுடைய அறிவிலிருந்து எதுவுமே மறைந்து விட முடியாது!
• யார் என்ன செய்தாலும் அவர்களோடு நெருக்கமாக இருந்து, அல்லாஹ் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான்!
💟 குறிப்பான நெருக்கம் :
• அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு கட்டுப்பட்டு, அவன் கூறியவற்றை செய்து, அவன் தடுத்த உள்ளவற்றை விட்டு விலகி, அவனுடைய அடியார்களாக வாழக்கூடிய மக்களுக்கு நெருக்கமாக இருப்பதை குறிக்கும்! அந்த நெருக்கத்தின் இயல்புநிலை என்ன என்பதை யாராலும் கூற முடியாது!
• ஆனால் அதன் அடையாளங்களைக் காண முடியும்! பிரார்த்தனைகள் உடனே அங்கீகரிக்கப்படுவதும், வணக்கசாலிகளுக்கு வழங்கப்படும் கூலியும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும்!
• அல்லாஹ் முஃமின்களுடன் நெருக்கமாக இருக்கிறான், அதனால் தான் நபி ﷺ அவர்களும், அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் போகின்ற நேரத்தில், அவர்கள் சவுர் குகையில் தங்கியிருக்கும் பொழுது, எதிரிகள் அவர்களை சூழ்ந்து கொள்கிறார்கள். அந்த நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் கவலைப்படுகிறார்கள். நபி ﷺ அவர்கள் அபூபக்கர் ரலி அவர்களுக்கு ஆதரவு சொல்லும்போது, “கவலைப்பட வேண்டாம் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்” என்று சொன்னார்கள்!
(சூரத்துல் : அத் தவ்பா : 40)
• நிச்சயமாக முஃமின்களோடு, இறைநேசர்களோடு, தக்வாவோடு வாழக்கூடிய மக்களோடு அல்லாஹ் இருக்கிறான், அவர்களுக்கு நெருக்கமாக அல்லாஹ் இருக்கிறான்!
• அல்லாஹ் நம்மோடு நெருக்கமாக இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, நம்முடைய உள்ளத்தில் ஒரு துணிச்சலும், தைரியமும் வரும், எந்த ஒன்றை பற்றிய கவலை மற்றும் பயம் நம்முடைய உள்ளங்களில் இருக்காது!
• அல்லாஹ் நமக்கு நெருக்கமாக இருப்பதனால், அல்லாஹ் நம்மை கைவிட மாட்டான், அல்லாஹ் நமக்கு உதவி செய்வான் என்கிற உணர்வு நமக்குள் வரும்!
• அல்லாஹ் நம்முடன் நெருக்கமாக இருக்கிறான்! அல்லாஹ் கேட்டால் கொடுப்பான்! நம்முடைய தேவைகளை கேட்க வேண்டும் என்கிற உறுதியான உணர்வு நமக்கு வரும்!
மேலும், நிச்சயமாக, நாம் தான் மனிதனைப் படைத்தோம், (நன்மை, தீமை ஆகியவற்றிலிருந்து) அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது (பேசுகிறது) என்பதையும் நாம் நன்கறிவோம், இன்னும், நாம் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாகவே இருக்கின்றோம்!
(சூரத்துல் : அல் ஃகாஃப் : 16)
• அல்லாஹ் நமக்கு மிக நெருக்கமாக இருக்கிறான், எனவே நமக்கு அவன் உதவி செய்வான், நம்முடைய பிரார்த்தனையை அவன் கபூல் செய்வான் என்ற அந்த நம்பிக்கையை தரக்கூடிய பெயர் தான் அல்கரீப்!
• நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்குக் கிடைக்கும் அவனது நெருக்கம் குறித்து ஏராளமான செய்திகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கூறி உள்ளார்கள் :
அபூ மூஸா அப்தில்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ (ரலி) அறிவித்தார்கள் :
(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்த போது) நபி(ஸல்) அவர்கள் ஒரு 'குன்றில்' அல்லது 'மேட்டில்' ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒருவர் உரத்த குரலில் 'லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் கோவேறு கழுதையில் இருந்தபடி, '(மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை' என்று கூறினார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6409)
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவிற்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவிற்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச் செல்கிறேன்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 7536)
• அல் கரீப் என்ற பெயரை நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது, அல்லாஹ் நெருக்கமாக இருக்கிறான் என்பதை நம்மோடு கலந்து நம்மோடு ஒருவனாக ஆகிவிட்டான் என்று இஸ்லாத்தில் தோன்றிய வழிகெட்ட பிரிவுகளில் ஒன்றான சூபியாக்கள் கூறி கொண்டு உள்ளார்கள்!
• அல்லாஹ் அவனுடைய பார்வை, அறிவு, கண்காணிப்பு, உதவி போன்றவற்றால் நமக்கு நெருக்கமாக இருக்கிறான் என்பதுதான் அல் கரீப் என்ற பெயருடைய அர்த்தமாகும்!
• அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நாம் இன்னும் அதிகமாக கேட்டு, அல்லாஹ்வோடு நெருக்கமாக இருந்து, அவனுடைய அன்பையும், உதவியையும் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யவதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக!
• இன்ஷா அல்லாஹ் அஸ்மா உல் ஹுஸ்னா தொடரின் அடுத்த பதிவில் நாம் அல்லாஹ்வின் அழகிய பெயர்களான அல் முஜீபு பற்றி பார்ப்போம்!
@அல்லாஹ் போதுமானவன்


 

இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் (New Year) பற்றி அறிந்து கொள்ளுவேம்


இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் (New Year) பற்றி அறிந்து கொள்ளுவேம் 💞
இன்னும் சில மணி நேரத்தில் 2023 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டு 2024 வர போகிறது! அல்லாஹ் நாடினால்....!
• புது வருடப்பிறப்பு என்று உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த நாளை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்!
• மாற்று மதத்தினருக்கு நாங்களும் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என்று அவர்களை விட ஒரு படி மேல் சென்று முஸ்லீம்கள் சிலர் அந்த நாளை இன்னும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்! (அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர)
• ஆனால் இஸ்லாத்தில் இது போன்ற கொண்டாட்டங்கள் எதுவும் கிடையாது இவை அனைத்துமே மாற்று மதத்தினரின் கொண்டாட்டங்கள் ஆகும் இதை ஒரு முஸ்லீம் கொண்டாடுவது அல்லது ஆதரிப்பது தெளிவான குஃப்ர் (இறை நிராகரிப்பு) ஆகும்!
• இந்த இடத்தில் நாம் ஒன்று சிந்திக்க வேண்டும்! எந்த ஒரு மாற்று மதத்தினறும் பெருநாளை கொண்டாடுவது கிடையாது எந்த ஒரு மாற்று மதத்தினரும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடுவது கிடையாது! ஆனால் முஸ்லீம் சமூகம் மட்டுமே மாற்று மதத்தினரின் பண்டிகைகளை விழாக்கள் போன்று பிறந்தநாள் இறந்த நாள் புது வருடம் ஸீமந்தம் என ஒன்றையும் விட்டு வைக்காமல் அதை விழா போன்று கொண்டாடி வருகின்றார்கள்! அல்லாஹ் பாதுகாக்கணும் நமது சமூகத்தை....!
• அல்லாஹ் பாதுகாக்கணும் இஸ்லாத்தில் இது ஹராம் என்று தெளிவாக தெரிந்தும் பலர் ஒரு நாள் தான் என்று ஈமான் வெட்கம் மானம் கற்பு என அனைத்தையும் இழக்கிறார்கள்!
• ஆண்கள் வாலிபர்கள் அந்த நாளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகனப்பந்தயம் வைப்பது இரவு முழுவதும் நண்பர்கள் உடன் சுற்றுவது என ஒரு பக்கம் செய்ய இஸ்லாமிய பெண்களும் அந்த நாளை கொண்டாடும் வகையில் அந்த நாளில் புது ஆடை, வீட்டில் விஷேச உணவு, வீட்டை சுத்தம் செய்து அழகாரம் செய்வது என அனைத்தும் அந்த நாளை மையப்படுத்தி செய்கிறார்கள் நவுதுபில்லாஹ்!
• இந்த ஒரு இரவில் எவ்வளவு ஹராமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்!! எவ்வளவு மார்க்கம் தடுத்தவைகளை செய்கிறார்கள்! அல்லாஹ் இந்த நிலையிலேயே மரணத்தை நமக்கு கொடுத்து விட்டால் நமது நிலை?
• மரணத்திற்கு வயது நேரம் காலம் என்று எதுவும் கிடையாது! நேரம் வந்து விட்டால் ஒரு நொடி முந்தவும் மாட்டாது பிந்தவும் மாட்டாது! யாராக இருந்தாலும் சரியே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும் போதிருந்த மன நிலையிலேயே எழுப்பப்படுவார்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5518)
• நாம் ஒரு நாள் தானே அல்லது ஒரு இரவு தானே என்று அல்லாஹ்வும் அவனது ரசூலும் எதை எல்லாம் தடுத்தார்களோ அதை எல்லாம் செய்து கொண்டு இருக்கும் நிலையில் மரணிக்க நாம் ஆசை படுவோமா?
• இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மதினா வாசிகள் இது போன்று வருடத்தில் இரண்டு நாட்களை தேர்வு செய்து கொண்டாடி வந்தனர்!
• நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும் பொழுது இதை தடை செய்து இதை விட சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு வழங்கி உள்ளான் என்று மக்களுக்கு கூறி 1) நோன்புப் பெருநாள் மற்றும் 2) ஹஜ்ஜுப் பெருநாளையும் குறிப்பிட்டார்கள்!
(நூல் : சுனன் அபூதாவுத் : 1134)
• இஸ்லாத்தில் கொண்டாட்டம் என்பது நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெரு நாளை மட்டுமே! இதை தவிர்த்து வேறு எந்த கொண்டாட்டமும் இஸ்லாத்தில் கிடையாது!
• இன்னும் கூற வேண்டும் என்றால் இஸ்லாத்தின் வருட பிறப்பை அல்லது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கூட கொண்டாட இஸ்லாத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது இவ்வாறு இருக்க மாற்று மதத்தினர் விழாக்களை மட்டும் எவ்வாறு நாம் கொண்டாட முடியும்!?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்!
(நூல் : சுனன் அபூதாவுத் : 4031)
• சில நேரத்தில் இதை விட்டு நாம் விலகினாலும் நம்முடைய பிற மத நண்பர்கள் நம்மை கொண்டாட அழைப்பது அல்லது வாழ்த்துகள் கூறுவதை பார்க்கிறோம் இதற்கு முக்கியம் காரணம் நாம் அவர்களுக்கு நம்முடைய இஸ்லாத்தை பற்றி எடுத்து கூறாதது தான்!
• நமது பிற மத நண்பர் இன்று அசைவம் உண்ண மாட்டார் என்று தெரிந்து சைவ உணவு தருகிறோம்! காரணம் அவர் அவருடைய மார்க்கத்தை பற்றி நமக்கு கூறி உள்ளார் மேலும் அதில் அவர் உறுதியாக உள்ளார் ஆனால் நம்மில் எத்தனை பேர் நம்முடைய நண்பர்களுக்கும் எங்கள் இஸ்லாத்தில் இது ஹலால் இது ஹராம் என்று எடுத்து கூறி உள்ளோம்? நாம் கூறி இருந்தால் நிச்சயமாக அவர்கள் அதற்கு எற்றால் போல் நம்மிடம் நடந்து கொள்வார்கள்!
அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்!
(சூரத்துல் : அத் தவ்பா : 62)
💟 புது வருடம் உருவான வரலாறு :
• நாம் தற்பொழுது பயன் படுத்தி கொண்டு இருக்கும் காலண்டர் முழுவதும் ரோமர்கள் உருவாக்கிய காலண்டர் ஆகும்!
• ரோமர்களின் மக்களின் நம்பிக்கை, மதம், பாரம்பரியம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே இந்த கலண்டர் உருவாக்கினார்கள்!
• ஆனால் ஆரம்ப காலத்தில் வருடத்தின் தொடக்கம் மார்ச் 1, மார்ச் 25, செப்டம்பர் 1, செப்டம்பர் 25 என பலவகையாக இருந்தது!
• ஜெர்மனியைச் சேர்ந்த ஜெசூட் பாதிரியாரான வானியல் ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் கிளாவியஸ் இவர் தான் ஜனவரி 1 யை ஆண்டின் தொடக்கமாக அறிமுகம் படுத்தினார்!
• 1582 ம் ஆண்டில் கத்தோலிக்கின் மதகுருவாக இருந்த போப் 13-வது கிரிகோரியால் என்பவர் இந்த கலெண்டர்யை சற்று மாற்றி நாம் இப்போது வைத்து உள்ள கலெண்டர் ஆக மாற்றி அறிமுகப்படுத்தினார்! இதனால் இந்த காலண்டருக்கு இவரின் பெயரான கிரிகோரியன் என்று பெயர் வைக்கப்பட்டது!
• ஆங்கில காலண்டர் பொறுத்த வரை முழுவதும் மாற்று மத கடவுள் கொள்கைகளை அடிப்படையாக உருவானது ஆகும்! இதை ஒரு முஸ்லீம் ஆதரிப்பது பாவமான செயல் ஆகும்!
• இதை கொண்டாடுவது அல்லது மகிழ்ச்சியை பிறருக்கு தெரிவிப்பது குப்ர் (இறை நிரகாரிப்பு) ஆகும்!
• உலக வாழ்கையில் மூழ்கி மறுமை வாழ்கையை மறந்து வாழ கூடியவர்கள் தான் இந்த புது வருடத்தை கொண்டாடுகிறார்கள்! இவர்களுக்கு அல்லாஹ் இந்த உலகிலேயே இவர்களுக்கு தேவை அனைத்தும் கிடைத்து விடும்! ஆனால் மறுமை நாளில் இவர்களுக்கு கைசேதம் தான்!
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்! பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்! அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்!
(சூரத்துல் : பனீ இஸ்ராயீல் : 18)
• இது மட்டும் அல்லாமல் இன்னும் சில ஊர்களில் இந்த நாளில் அதிகமான மூட நம்பிக்கைகள் கூறுவார்கள் : அன்றைய நாளில் கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது, ஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை, அந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கை! இது தெளிவான மூடநம்பிக்கை மற்றும் சகுனம் பார்ப்பதாகும் இஸ்லாத்தில் சகுனம் பார்ப்பது ஷிர்க் ஆகும்!
💟 நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் மறுமை நாளில் பதில் கூற வேண்டும் :
• நாம் செய்யும் ஒவ்வொரு நன்மையான செயல் அல்லது பாவமான செயலை யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக செய்து விடலாம் ஆனால் நம்முடைய ஒவ்வொரு செயலையும் குறித்து வைத்து கொள்ள அல்லாஹ் நம்முடன் இரண்டு மலக்கு மார்களை நியமித்து உள்ளான்!
• நம்முடைய ஒவ்வொரு செயலையும் மலக்கு மார்கள் ஒரு ஏட்டில் பதிவு செய்து வைத்து இருப்பார்கள் எதையும் குறைந்ததோ அல்லது அதிகமாகவோ எழுதாமல் துல்லியமாக எழுதி வைத்து இருப்பார்கள்!
• இதோடு மட்டும் அல்லாமல் அந்த ஏடுகளை அல்லாஹ் நம்மையே வாசிக்க சொல்லுவான் அப்போது நமது நிலை என்ன ஆகும்? சிந்திக்க மாட்டோமா?
• நாம் தெரியாமல் செய்வது வேறு ஆனால் தெரிந்தே வேண்டும் என்றே நேரம் குறித்து திட்டமிட்டு செய்வது என்பது பாவமான ஒன்றாகும்! மறுமை நாளில் அல்லாஹ் நம்முடைய ஏட்டை வாசிக்க சொன்னால் அதை அல்லாஹ்வின் முன்பு தனியாக நம்மால் வாசிக்க முடியுமா?
💟 புத்தாண்டு வாழ்த்துகள் கூறுவது கூடாது :
ஷேக் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
• மாற்று மத பண்டிகையின் போது பரிசுகளை பரிமாறிக்கொள்வது அல்லது இனிப்புகளை பகிர்ந்து கொள்ளுவது அல்லது பிற உணவுகள், அல்லது அவர்கள் விழாவிற்கு உதவுவதற்கு என்று நேரம் ஒதுக்குதல் ! இவை எல்லாம் குப்ர் (இறை நிரகாரிப்பு) ஆகும்!
• காபிர்களின் மத ரீதியான
கொண்டாட்டங்களை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி ஹராமாகும்!
(அஷ் ஷேக் உஸைமீன் (ரஹ்) : ஃபத்வா : 45/3)
• இன்னும் சிலர் ஒரு வார்த்தை கூறுவதால் என்ன ஆக போகிறது என்று ஒருவருக்கு ஒருவர் Happy New Year என்று கூறி கொள்ளுகிறார்கள் ஆனால் நாம் பெரியதாக பொறுப்படுத்தாமல் கூறும் இவ்வாறான வார்த்தைகளே நம்மை நரகில் சேர்க்க போதுமானது ஆகும்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 6478)
💟 மாற்று மதத்தினரின் வழிமுறைகளை பின் பற்றுவது :
• பலர் இந்நாளில் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதும் மேலும் தெரிந்த நபர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது! ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான்! இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்!
• அல்லாஹ்வுக்காக நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில், நடை முறை வாழ்க்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பல இடங்களில் கூறி உள்ளார்கள்!
• உதாரணமாக : சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக!
• நபி (ஸல்) அவர்கள் பல இடங்களில் யூதர்கள்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் மாற்றமே செய்ய சொல்லி உள்ளார்கள் ஆனால் நாம் இன்று நபி (ஸல்) அவர்களுக்கு மாற்றம் செய்து யூதர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஒப்பாக வாழ்கிறோம் நவுதுபில்லாஹ்!
அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள் :
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்! எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம்! அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3456)
• இந்த யூதர்கள் இறைத்தூதர்களை கொலை செய்து உள்ளார்கள் அல்லாஹ் இறக்கிய வேதங்களை தங்களுக்கு ஏற்றால் போல் மாற்றி கொண்டனர்! அல்லாஹ் நேரடியாக பல அத்தாச்சிகளை இவர்களுக்கு இறக்கி அருளியும்! இவர்கள் அதை எல்லாம் நிராகரித்து! அட்டூழியம் செய்து கொண்டு இருந்தார்கள்!
• கிருஸ்துவர்கள் அல்லாஹ்விற்கு பிள்ளை உள்ளது (அல்லாஹ் பாதுகாப்பானாக) என்று கூறுகிறார்கள் இவர்களுக்கு எல்லாம் அல்லாஹ் மறுமை நாளில் கடுமையாக பிடிப்பான்!
• இவர்கள் இவ்வளவு அல்லாஹ்விற்கு மாறு செய்து அல்லாஹ்வின் தூய தன்மையை அசுத்தமாக கூறுகிறார்கள் ஆனால் நாம் பெயர் அளவில் மட்டும் முஸ்லீம் என்று கூறி கொண்டு அவர்களுக்கு விழாவில் ஆதரவு கொடுக்கின்றோம்!
• இவ்வாறு செய்வது அவர்களின் அனைத்து விதமான கொள்கையும் நாமும் ஏற்று அவர்களுக்கு துணை போவது போன்று ஆகும்! இதை நாம் சிந்திக்க வேண்டாமா?
💟 நம்மையே கேள்வி கேட்டு கொள்வோம் :
• புது வருடம் பிறக்கிறது என்று கொண்டாடுகிறோமே நாம் இந்த ஒரு வருடத்தில் எவ்வளவு அமல் செய்து உள்ளோம் ⁉
• எத்தனை முறை அல் குர்ஆனை ஓதி முடித்தோம் - எத்தனை முறை அர்த்தம் விளங்கி ஓதி உள்ளோம்!?
• எவ்வளவு மக்களுக்கு நாம் இஸ்லாம் பற்றி எடுத்து கூறி உள்ளோம்?
• இன்னும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் அல்லாஹ் நமக்கு கொடுத்து ஆயுளில் ஒரு வருடம் முடிந்தது விட்டது இன்னும் எவ்வளவு நாட்கள் நாம் இந்த துன்யாவில் இருக்க போகிறோம் என்று நமக்கு தெரியாது! இருக்கும் நாட்களில் ஆவது அல்லாஹ்வை நாம் நெருக்க முயற்சி செய்ய வேண்டும் தூரம் விலக அல்ல!
💟 நிறைய பேர் புது வருடம் கொண்டாடுகிறார்கள் நாம் கொண்டாட கூடாதா?
• பலரின் உள்ளத்தில் ஷைத்தான் இவ்வாறு எண்ணங்களை நமக்கு ஏற்படுத்துவான் நீ மட்டுமா இதை செய்கிறாய் எவ்வளவோ மக்கள் இதை செய்கிறார்கள் என்று!
• அதிகமானனோர்கள் தொழுகிறார்கள் நானும் தொழுவேன்! அதிகமானோர்கள் அல்குர்ஆன் ஒதுகிறார்கள்! நானும் ஒதுவேன் என்ற எண்ணம் ஏன் நமக்கு வர வில்லை?
• எல்லோரும் செய்கிறார்கள் என்றால் எல்லோருமே உங்களுடன் கபூருக்கு வர மாட்டார்கள்! நம்மை மறுமை நாளில் அல்லாஹ் விசாரணை செய்யும் பொழுது யாரும் நம்முடன் வர மாட்டார்கள் நமக்கு பதிலாக அவர்கள் பதில் கூற? நம்முடைய செயல்களுக்கு நாம் தான் பதில் அளிக்க வேண்டும்!
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள்! (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்!
(சூரத்துல் : அல் அன்ஆம் : 116)
💟 மார்க்கத்திற்கு முரணான காரியத்தை நடந்தால் :
• இஸ்லாம் தடுத்த ஒன்றிக்கு நாம் எந்த விதத்திலும் உதவி செய்ய கூடாது! மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு எடுத்து சொல்லி தடுக்க வேண்டும்! அதற்கு நம்மால் முடியாவிட்டால் நாம் இயன்ற அளவுக்கு சொல்லித் தடுக்க வேண்டும்! அதுவும் முடியாவிட்டால், நம்முடைய உள்ளத்தால் அந்த செயலை வெறுத்து ஒதுக்க வேண்டும்!
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 78)
வீணான காரியம் நடக்கும் இடத்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள்!
(சூரத்துல் : அல் ஃபுர்காஃன் : 72)
@அல்லாஹ் போதுமானவன்