பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, November 30, 2019

நன்மைகளை வாரி - 44

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 44 ]*_

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 14 }*

*🏖வரிசையை*
           *சீராக்குவதன்*
                    *சிறப்புகள் { 02 }🏖*

*☄உள்ளமும் நோக்கமும்*
               *ஒன்றுபடுகிறது☄*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﻮﻟﻴﺪ ﻫﺸﺎﻡ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻤﻠﻚ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻣﺮﺓ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺳﺎﻟﻢ ﺑﻦ ﺃﺑﻲ اﻟﺠﻌﺪ، _*ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ اﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ ﺑﺸﻴﺮ، ﻳﻘﻮﻝ: ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻟﺘﺴﻮﻥ ﺻﻔﻮﻓﻜﻢ، ﺃﻭ ﻟﻴﺨﺎﻟﻔﻦ اﻟﻠﻪ ﺑﻴﻦ ﻭﺟﻮﻫﻜﻢ*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.*_

*🎙அறிவிப்பவர்:*
           *நுஅமான் பின் பஷீர் (ரலி),*

*📚நூல்: புகாரி (717)📚*

_*🍃"நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் அல்அன்சாரி (ரலி),*

*📚 நூல்: முஸ்லிம் (739) 📚*

*🏮🍂தொழுகை வரிசையை சீராக ஆக்குவதன் மூலம் அல்லாஹ் தொழுகையாளிகளின் உள்ளங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறான். இது தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுபவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியமாகும்.*

*அதே நேரத்தில் வரிசையில் சீர்குலைவு ஏற்படுமென்றால் அதுவே உள்ளப் பிரிவினைகளுக்கும் காரணமாகிவிடும். எனவே வரிசையை சீர் செய்த பின்பே தொழுகையை ஆரம்பம் செய்ய வேண்டும்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄வரிசை சீர்பெற்றாலே*
    *தொழுகை முழுமை பெறும்☄*

حَدَّثَنَا  مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا  مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ،  _*يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله  عليه وسلم ‏"‏ سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاَةِ ‏"*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும்.*_

*🎙அறிவிப்பவர்: அனஸ் (ரலி),*

*📚 நூல்: முஸ்லிம் (741) 📚*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﻮﻟﻴﺪ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ، _*ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «-[146]- ﺳﻮﻭا ﺻﻔﻮﻓﻜﻢ، ﻓﺈﻥ ﺗﺴﻮﻳﺔ اﻟﺼﻔﻮﻑ ﻣﻦ ﺇﻗﺎﻣﺔ اﻟﺼﻼﺓ*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (நிறைவுடன்) நிலை நாட்டுவதேயாகும்.*_

*🎙அறிவிப்பவர்:  அனஸ் (ரலி),*

*📚நூல்: புகாரி (723)📚*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺤﻤﺪ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﺮﺯاﻕ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﻌﻤﺮ، ﻋﻦ ﻫﻤﺎﻡ ﺑﻦ ﻣﻨﺒﻪ، _*ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻧﻪ ﻗﺎﻝ: " ﺇﻧﻤﺎ ﺟﻌﻞ اﻹﻣﺎﻡ ﻟﻴﺆﺗﻢ ﺑﻪ، ﻓﻼ ﺗﺨﺘﻠﻔﻮا ﻋﻠﻴﻪ، ﻓﺈﺫا ﺭﻛﻊ، ﻓﺎﺭﻛﻌﻮا، ﻭﺇﺫا ﻗﺎﻝ: ﺳﻤﻊ اﻟﻠﻪ ﻟﻤﻦ ﺣﻤﺪﻩ، ﻓﻘﻮﻟﻮا: ﺭﺑﻨﺎ ﻟﻚ اﻟﺤﻤﺪ، ﻭﺇﺫا ﺳﺠﺪ ﻓﺎﺳﺠﺪﻭا، ﻭﺇﺫا ﺻﻠﻰ ﺟﺎﻟﺴﺎ، ﻓﺼﻠﻮا ﺟﻠﻮﺳﺎ ﺃﺟﻤﻌﻮﻥ، ﻭﺃﻗﻴﻤﻮا اﻟﺼﻒ ﻓﻲ اﻟﺼﻼﺓ، ﻓﺈﻥ ﺇﻗﺎﻣﺔ اﻟﺼﻒ ﻣﻦ ﺣﺴﻦ اﻟﺼﻼﺓ "*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை வரிசையை நேராக்குங்கள். ஏனெனில் வரிசை நேராக்குவது தொழுகையை அழகுறச் செய்வதேயாம்.*_

*🎙அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),*

*📚நூல்: புகாரி (722)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment