பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 4, 2026

ஷஃபான் மாதம்


💥ஷஃபான் மாதம் பற்றிய சட்டங்கள் 💥
~~~~~~~~~~~~~~~~~~~~~

(1) ஷஃபான் மாதம் நோன்பு நோற்பது ஸுன்னத் ஆகும் . ( புஹாரி : 1969 , முஸ்லிம் : 1156 )

(2) ஷஃபான் மாதம் 15க்கு பின், நோன்பு நோற்கவேண்டாம் என்ற ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும் . அதன் அறிவிப்பாளர்  தொடரில் " அலாஃ பின் அப்திர் ரஹ்மான்" காணப்படுகின்றார் . அவர் தனித்து அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல .

(3) ஷஃபான் மாதம் 15 வது இரவுக்கு தனிச் சிறப்பு கிடையாது . அது பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் மிகவும் பலவீனமானதாகும் . 

(4) ஷஃபான் மாதம் 15 வது இரவில் நின்று வணங்குவது பற்றிய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட  பொய்யான ஹதீஸ்கள் ஆகும் .

(5) ஷஃபான் மாதம் நோன்பு நோற்பது ஸுன்னத் ஆகும் . ஆனால் , 15 வது நாளைக் குறிப்பாக்கி , சிறப்புப்படுத்தி நோன்பு பிடிப்பது "பித்அத்" ஆகும் .

(6) ஷஃபான் மாதம், 15 யை சிறப்புப்படுத்தி வணக்கங்கள் செய்யும் பித்அத், ஷாம் தேசத்தில் தோன்றியது . யூதர்கள் " பாவமன்னிப்பு நாள் " என்ற ஒரு நாளை , விரதம் , வணக்கங்கள் மூலம் கழிப்பார்கள் . இதன் தாக்கத்தின் வெளிப்பாடாக , அங்குள்ள சில முஸ்லிம்கள் , ஷஃபான் 15, சிறப்பானது என்றும் , அதில்  வணக்கங்களை  உருவாக்கியுள்ளார்கள் . இதனை அக்காலத்தில் வாழ்ந்த மதீனா உலமாக்கள் வன்மையாகக் கண்டித்தார்கள் .

(மேலதிக தகவல்களை , ஷாபி மத்ஹபைச் சேர்ந்த , மிக முக்கியம் வாய்ந்த இமாம், இப்னு ஹஜர் ஹைத்தமி அவர்கள்  எழுதிய " அல் ஈலாஹ் வல் பயான் என்ற நூலிலும் , அந்நூலின் எனது முன்னுரை , அடிக்குறிப்புகள் , முடிவுரையிலும் பெற்றுக்கொள்ளலாம் )

டாக்டர் அஷ்ஷைஹ் அஹ்மத் அஷ்ரப் (இலங்கை)
பேராசிரியர்,
ஹதீஸ் துறை,
நஜ்ரான் பல்கலைக்கழகம் 
சவூதி அரேபியா.

பராஅத் இரவு



Monday, February 2, 2026

ஷஃபான்_15ம்_இரவு_பற்றிய_சரியான_நிலைப்பாடு_


بسم الله الرحمن الرحيم

#ஷஃபான்_15ம்_இரவு_பற்றிய_சரியான_நிலைப்பாடு_(அறிஞர்களின்_மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)
_____

1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்)  (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்)

எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை.

பார்க்க: இப்னு வழ்ழாஹ் அவர்களின் "அல்பிதஃ" (92)

2. அபுல் ஹத்தாப் அல்கல்பீ (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவின் சிறப்பு தொடர்பாக எந்தவொரு ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லையென ஹதீஸ் விமர்சன அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பார்க்க: மா ஸஹ்ஹ வஸ்தபான பீ பளாஇலி ஷஹ்ரி ஷஃபான் (43)

3. அபூபக்ர் இப்னுல் அல்அரபீ (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவு பற்றியும், அதனுடைய சிறப்பு பற்றியும் அதிலே மனிதர்களின் தவணைகள் மாற்றப்படுவது பற்றியும் எந்தவொரு ஹதீஸும் இல்லை.

பார்க்க: அஹ்காமுல் குர்ஆன் (4/117)

4. இப்னு அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ்*

ஸியாத் அந்நுமைரீ என்பவர் "ஷஃபான் நடு இரவில் வணக்கம் புரிவதின் கூலி லைலதுல் கத்ரில் வணக்கம் புரிவதின் கூலி போன்றாகும்" என்று கூறுவதாக இப்னு அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சொல்லப்பட்டது. அப்போது அவர் "ஸியாத் இவ்வாறு கூறுவதை நான் கேட்கும் போது எனது கையில் தடி இருந்தால் அதனால் அவருக்கு அடித்திருப்பேன்" என்று கூறினார். இப்னு அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ் அந்த சமயத்தில் நீதிபதியாக இருந்தார். 

பார்க்க: அல்ஹவாதிஸ் வல்பிதஃ (263) 

5. அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவு குறித்து எந்தவொரு ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் இல்லை. அது குறித்து வரக்கூடிய சகல ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டதாகவும் பலவீனம் கொண்டதாகவுமே இருக்கின்றன. எனவே, இந்த இரவைக் குறிப்பாக்கி விஷேட ஓதல்கள், தொழுகை, ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு எந்த தனிச்சிறப்பும் இல்லை. இந்த இரவுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக சில அறிஞர்கள் கூறியது பலவீனமான கருத்தாகும். இது தொடர்பாக பலவீனமான ஹதீஸ்களே வந்துள்ளன. அவை ஆதாரபூர்வமற்ற செய்திகளாகும். எனவே, ஷஃபானின் நடு இரவை எந்தவொரு வணக்கத்தைக் கொண்டும் விஷேடப்படுத்த முடியாது. இதுவே சரியான கருத்து.

பார்க்க: இணையதளம் https://binbaz.org.sa

6. அஷ்ஷெய்ஹ் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவுக்கு முக்கியத்துவம் வழங்கி அதை விஷேடப்படுத்துவது அவசியமற்றது. அதனுடைய சிறப்பு குறித்து எந்தவொரு ஆதாரபூர்வமான செய்திகளும் இல்லை. பின்வந்தோர் இந்த இரவுக்கு முக்கியத்துவம் செலுத்துவது போன்று நல்வழி சென்ற ஸலபுஸ்ஸாலிஹீன்கள் இந்த இரவுக்கு முக்கியத்துவம் வழங்கியதாக நாம் கேள்விப்பட்டதில்லை.

பார்க்க: ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர் (186)

7. அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவின் சிறப்பு குறித்து வரக்கூடிய சகல செய்திகளும் பலவீனமானவை. அவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. அவற்றில் சில செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை. நபித்தோழர்கள் இந்த இரவை கண்ணியப்படுத்தியதாகவோ, இந்த இரவை அமல்களைக் கொண்டு விஷேடப்படுத்தியதாகவோ அறியப்படவில்லை. ஷஃபானின் நடு இரவு ஏனைய இரவுகளைப் போன்ற ஒரு இரவு என்பதே சரியான கருத்தாகும். 

பார்க்க: லிகாஉல் பாபில் மப்தூஹ் (115)

8. அல்லஜ்னதுத் தாஇமா அறிஞர்களின் தீர்ப்பு

விஷேட துஆக்களைக் கொண்டும் வணக்க வழிபாடுகளைக் கொண்டும் ஷஃபானின் நடு இரவைக் குறிப்பாக்குவது பற்றி ஆதாரபூர்வமான எந்தவொரு செய்தியும் உறுதி செய்யப்படவில்லை. எனவே, அவ்வாறு குறிப்பாக்குவது பித்அத் ஆகும். ஏனெனில் நபியவர்கள் கூறினார்கள் "ஒவ்வொரு நூதன அனுஷ்டானங்களும் பித்அத்தாகும். ஒவ்வொரு பித்அத்களும் வழிகேடாகும்."

பார்க்க: பதாவா அல்லஜ்னதுத் தாஇமா (21264)

9. அஷ்ஷெய்ஹ் முக்பில் அல்வாதிஈ (ரஹிமஹுல்லாஹ்)

பிறந்த நாள் கொண்டாட்டம், ஷஃபானின் நடு இரவைக் கொண்டாடுதல், ரஜப் 27ம் நாளில் இஸ்ரா, மிஃராஜ் இடம்பெற்றது என்ற நம்பிக்கையில் அத்தினத்தைக் கொண்டாடுதல் போன்றவை ஹதீஸ்களில் உறுதி செய்யப்படவில்லை.

பார்க்க: இணையதளம் muqbil.net

10. அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் (ஹபிளஹுல்லாஹ்)

ஷஃபான் மாதத்தின் நடு இரவு அல்லது அதனுடைய பகல் நேரத்தின் சிறப்பு பற்றிய ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இல்லை. எனவே, குறிப்பாக ஷஃபானின் நடு இரவை விஷேடப்படுத்தி இரவுத் தொழுகைகளில் ஈடுபடக்கூடாது. வழமையாக இரவுத் தொழுகை தொழக்கூடியவர் ஏனைய நாட்களைப் போன்று ஷஃபானின் நடு இரவிலும் தொழுது கொள்ளட்டும். அதற்கு மாறாக இவ்விரவை விஷேடப்படுத்தி அதற்கு குறிப்பான இரவுத் தொழுகையில் ஈடுபடுவது பித்அத்தாகும். இத்தினத்தை சிறப்பித்து விஷேட நோன்பு நோற்பதும் பித்அத்தாகும்.
வழமையாக அய்யாமுல் பீழ் தினங்களில் நோன்பு நோற்பவராக இருந்தால் அவர் ஷஃபானிலும்  அதுபோல் ஏனைய மாதங்களிலும் அந்த நோன்புகளை நோற்கலாம்.

பார்க்க: இணையதளம் alfawzan.af.org.sa

11. அஷ்ஷெய்ஹ் அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் (ஹபிளஹுல்லாஹ்)

ஷஃபானின் நடு இரவின் சிறப்பு குறித்து விஷேடப்படுத்தி வரக்கூடிய செய்திகள் ஆதாரபூர்வமற்றவை. இது தொடர்பாக எமது ஆசிரியர் அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "பித்அத்களிலிருந்து எச்சரிக்கையாக இருத்தல்" என்ற நூலில் ஒர் ஆக்கத்தை எழுதியுள்ளார். ஏனைய அவருடைய ஆக்கங்களுடன் இந்த நூலும் அச்சிடப்பட்டுள்ளது.

பார்க்க: இணையதளம் (அஷ்ஷபகதுல் இஸ்லாமிய்யா)

12. அஷ்ஷெய்ஹ் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் (ஹபிளஹுல்லாஹ் )

ஏனைய நாட்களை விட ஷஃபான் நடு இரவை தொழுகையைக் கொண்டும் இரவுத் தொழுகையைக் கொண்டும் விஷேசமாக குறிப்பாக்குவது, அந்த இரவை விஷேட திக்ர், துஆக்களைக் கொண்டு உயிர்ப்பிப்பது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செயல்களாகும். இதை நபியவர்கள் செய்யவில்லை. நபித்தோழர்களும் செய்யவில்லை. அவர்கள் செய்திருந்தால் அது சரியான அறிவிப்பாளர் வரிசையின் மூலம் எமக்கு கிடைத்திருக்கும்.

பார்க்க: அஷ்ஷெய்ஹ் அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் நிகழ்த்திய குத்பா பிரசங்கம் (27/06/2012) இணையதளம் islamekk.net 

13. அஷ்ஷெய்ஹ் சுலைமான் அர்ருஹைலீ (ஹபிளஹுல்லாஹ்)

ஷஃபானின் 15ம் இரவையோ அல்லது அதனுடைய பகலையோ அமல்களைக் கொண்டு அல்லது வார்த்தைகளைக் கொண்டு விஷேடப்படுத்துவது ஹதீஸ்களில் உறுதி செய்யப்படவில்லை. ஏனைய நாட்களில் எதுவெல்லாம் மார்க்க கடமைகளாக இருக்குமோ அவைகளே இந்த நாளிலும் மார்க்கமாக இருக்கும். விஷேட இரவுத் தொழுகை, நோன்பு, தர்மம், துஆ, உணவளித்தல் ஆகிய செயல்களைக் கொண்டு இத்தினத்தை குறிப்பாக்க முடியாது. "ஷஃபான் 15ம் நாளில் நோன்பு பிடியுங்கள், அதனுடைய இரவில் நின்று வணங்குங்கள்" என்ற செய்தி ஹதீஸ் கலை மேதைகளிடம் பலவீனமானதாகும். அவர்களில் ஒரு சாரார் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் கூறியுள்ளனர். 

பார்க்க: சுலைமான் ருஹைலீ அவர்களின் சமூக வலைதளம் (sukaruhaily)
___

✒️✒️✒️
*அஸ்கி அல்கமி* (பலகத்துறை-இலங்கை)

கூட்டாகச் சேர்ந்து ஸலவாத் மஜ்லிஸ் நடத்துவது நபிவழியா?


🔥ஸலவாத்துன்னாரிய்யா ஓதினால் இறையருள் கிடைக்குமா? 🔥

💥கூட்டாகச் சேர்ந்து ஸலவாத் மஜ்லிஸ் நடத்துவது நபிவழியா?💥

ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 

நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். 

ஏனென்றால் இதன் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு இணையாக்குகின்ற வாசகங்கள் தான். 

இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய (?) பெருமக்கள் தங்கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் ஆலிம்களையும், லெப்பைமார்களையும் அழைத்து ஓதி வருகின்றனர்.

இந்த நாரிய்யா ஸலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அல்லது நான்கு இமாம்களில் யாருமோ ஓதியதில்லை. 

மாறாக இது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று தான். இதன் காரணமாகத் தான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரணமாக யாரும் எண்ண இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த 4444 தடவை என்பது அல்லாஹ்வோ அவன் தூதரோ கூறியதில்லை.

தற்போது ஒருஇலட்சம் தடவை ஓதுவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்த நாரிய்யா ஸலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துடன் மோதுகின்றன என்பதைப் பாருங்கள். 

💥அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃப்சின் பி அததி குல்லி மஃலூமின் லக்க 💥

பொருள்: அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும்  ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மத் எப்படிப்பட்டவரென்றால் அவர் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது.  அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது. 

🏵️துன்பங்களை நீக்குபவன் யார்?🏵️

மேற்கண்ட நாரிய்யா ஸலவாத்தில், நபி (ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல் அவிழ்கிறது என்றும், துன்பம் நீங்குகிறது என்றும், தேவை நிறைவேறுகிறது என்றும் வருகிறது.

 உண்மையில் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்குவதும் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றலாகும். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு, இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய இணை கற்பிக்கின்ற காரியமாகும்.
அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறு யாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது.

🌲ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்.

அல்குர்ஆன் 6:64

நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமறை குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

🌲“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எந்த நன்மையோ, தீமையோ செய்வதற்கு சக்தி பெற மாட்டேன். நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மைகளையே அதிகம் பெற்றிருப்பேன். எனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டிருக்காது. இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனும் நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

🌲“நான் என் இறைவனிடமே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டேன்” என்று (நபியே!) கூறுவீராக!
 “நான் உங்களுக்குத் தீமையோ, நன்மையோ செய்ய சக்தி பெற மாட்டேன்” என்றும் கூறுவீராக!
 “என்னை அல்லாஹ்விடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது. அவனையன்றி எந்தப் புகலிடத்தையும் நான் காண மாட்டேன்” என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 72:20, 21, 22

🌲அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தை ஏற்படுத்தினால் அதை நீக்குபவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அவன் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன். 

அல்குர்ஆன் 10:107

🌲அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் துன்பங்களை, சிக்கல்களை நீக்க முடியும் என்று நம்பியவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்
(அவர்கள் இணையாக்குபவை சிறந்தவையா?) அல்லது துன்பத்திற்கு உள்ளானவன் பிரார்த்திக்கும்போது அவனுக்குப் பதிலளித்து, அத்துன்பத்தை நீக்கி, பூமியில் உங்களைத் தலைமுறைகளாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருக்கிறானா? நீங்கள் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.

அல்குர்ஆன் 27:62

நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நாரிய்யா ஸலவாத்தை நாம் ஓதலாமா?

 இதனை ஓதி வருகின்ற இஸ்லாமியப் பெருமக்கள் நன்றாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

🏵️“நாட்டங்களை நிறைவேற்றுபவன் யார்?”🏵️

மேற்கண்ட நாரிய்யா ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.

நபி (ஸல்) அவர்களின் எத்தனையோ நாட்டங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நாட்டங்களை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமானால் அவர்கள் முதலில் தம்முடைய நாட்டங்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், முனாஃபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அது நிறைவேறாதது மட்டுமல்லாமல் அல்லாஹ், அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான்.

🌲(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடினாலும் சரி! அல்லது பாவ மன்னிப்புத் தேடாவிட்டாலும் சரி! அவர்களுக்காக எழுபது தடவை நீர் பாவ மன்னிப்புத் தேடினாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததுதான். பாவிகளான கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

 அல் குர்ஆன் 9:80

நபியவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபூ தாலிப், ஏகத்துவக் கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள். அவர்களுடைய மரணத் தருவாயில் அவர்களிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கூறுமாறு மன்றாடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ற வரை பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள்.
ஆனால் அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை இறைவன் நிறைவேற்றவில்லை. மாறாக, நபிக்கு நாடியதைச் செய்யும் ஆற்றல் கிடையாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

🌲நபியே!) நீர் விரும்பியவர்களை நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது. மாறாக, அல்லாஹ்வே தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அவனே நேர்வழி பெற்றவர்களை மிக அறிந்தவன்.

அல் குர்ஆன் 28:56

மேலும் நபியவர்கள் மக்காவில் வாழ்ந்த அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற அனைத்து காஃபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

🌲(நபியே!) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக ஆகவில்லை என்பதால் நீர் உம்மையே மாய்த்துக் கொள்வீர் போலும்!

அல்குர்ஆன் 26:3

நபியவர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஒன்றை விரும்பியும் அந்த நாட்டம் நிறைவேறவில்லை. நாட்டங்களை நிறைவேற்றக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். நபியவர்கள் மூலம் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று இந்த ஸலவாத்தில் வரக்கூடிய வரிகள் நிரந்தர நரகத்தைத் தரக் கூடிய வரிகளே என்பது தெளிவாகிறது.

🏵️“அழகிய இறுதி முடிவை தருபவன் யார்?”🏵️

நபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிடைக்கிறது என ஸலாத்துந் நாரியாவில் வருகிறது. 

இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.

ஒருவன் மரணிக்கும் போது சுவர்க்கவாசியாக மரணிப்பதும் நரகவாசியாக மரணிப்பதும் இறைவனின் நாட்டமே!

🌲நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்.

 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 5175

மேற்கண்ட ஹதீஸ் ஒருவனின் இறுதி முடிவு இறைவனின் நாட்டப்படியே தீர்மானிக்கப்படுகிறது என்பதை மிக உறுதிப்படுத்துகிறது.

 எனவே, நபியவர்கள் மூலம் அழகிய இறுதி முடிவு ஏற்படுகிறது என்பது நபியவர்களைக் இறைவனுக்கு இணையாக்குவதாகும்.

மேலும் நபியவர்கள் மூலம் அழகிய முடிவு ஏற்படுகிறதென்றால் அவர்கள் விரும்பிய அபூ தாலிப், அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற இன்னும் பலர் முஸ்லிம்களாக மரணித்திருக்க வேண்டும். அவர்கள் ஏன் காஃபிர்களாக மரணித்தார்கள்?

 இதைச் சிந்தித்தாலே மேற்கண்ட வரிகளை ஓதினால் நாம் நிரந்தர நரகத்தைத் தான் சென்றடைவோம் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

🏵️“மழை பொழிவிப்பவன் யார்?”🏵️

ஸலவாத்துன்னாரிய்யா வில் நபியவர்களின் திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது என்று வருகிறது. இந்த வரிகளும் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற வரிகளாகும்.
மழையைப் பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

🌲நீங்கள் குடிக்கும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
அதை மேகத்திலிருந்து நீங்கள் பொழிவிக்கிறீர்களா? அல்லது நாம் பொழிவிக்கிறோமா?
நாம் நாடினால் அதை உப்பு நீராக்கியிருப்போம். எனவே நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

அல் குர்ஆன் 56:68, 69, 70

🌲அவர்கள் விரக்தியுற்ற பின் அவனே மழையைப் பொழிவித்துத் தனது கருணையைப் பரவலாக்குகிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன். 

அல் குர்ஆன் 42:28

🌲அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். அவை மேகங்களை நகர்த்திச் செல்கின்றன. பிறகு, தான் நாடியவாறு வானத்தில் பரப்பி, அதைப் பற்பல துண்டுகளாக ஆக்குகிறான். பின்னர், அதற்கு இடையிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் பார்க்கிறீர். அதனைத் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு அவன் பொழிவித்தால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

அல்குர்ஆன் 30:48

🌲நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய முடியாது. நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும், அவன் கர்ப்பங்கல் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ் தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன். (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)

நூல்: புகாரி 4777

மேற்கண்ட இறை வசனங்களும், ஹதீஸ்களும் மழையைப் பொழியச் செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே நபியவர்களின் திருமுகத்தின் மூலமே மழை பொழிகிறது என்று நரகத்து ஸலவாத்தில் வரக்கூடிய இந்த வாசகங்களை நாம் ஓதினால் நாம் செல்லுமிடம் நரகம் தான்.

🌲கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: புகாரி 3445

💐💐நாம் ஓத வேண்டிய ஸலவாத் எது? எப்படி ஓத வேண்டும்.?💐💐

இந்த ஸலவாத்துன் நாரியாவை ஓதினால் நரகம் தான் பரிசாகக் கிடைக்கும். அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.

🌲இந்த நபியின்மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அவனது  வானவர்களும் (அவருக்காகப்) பிரார்த்திக்கின்றனர். இறைநம்பிக்கையாளர்களே! அவர்மீது ஸலவாத் சொல்லுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!

அல்குர்ஆன் 33:56

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

🌲நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 

💥அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் 💥

என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரி 4797

🌲எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது? என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது. 

🌲யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 577

🌲முஅத்தினின் பாங்கை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள்.  பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள்.  ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள்.  நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்). அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆக வேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)
நூல்: முஸ்லிம்

பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா வேண்டிப் பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்காக மக்கள் அலைமோதும் மறுமை நாளில் நமக்குப் பரிந்துரையைப் பெற்றுத் தரும் சாதனமாக இந்த ஸலவாத் அமைந்துள்ளது.

🌲உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்  நூல்: அபூதாவூத் 883

🌲நிச்சயமாகப் பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: நஸயீ 1265

🔥“கூட்டாக ஸலவாத் ஓதலாமா?“🔥

நபியவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தினை உரத்த சப்தமின்றி, அவரவர் தன்னளவில், தனக்கு இயலுமான நேரத்தில், தனது சக்திக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் ஓதிக் கொள்ளலாம். 

ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து, உரத்த சப்தத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையை வரையறுத்து ஸலவாத்து ஓதுதல் என்பது நபிவழியில் இல்லாத காரியமாகும். 

உரத்த சப்தமின்றி, அவரவர் தன்னளவில், தனக்கு சாத்தியமான நேரத்தில், தான் விரும்பிய அளவில் ஓதுவதே நபிவழியாகும். 

மஃரிப் தொழுகைக்குப் பின், ஒரு இலட்சம் ஸலவாத் ஓதப்போகிறோம் என்று அறிவிப்புச் செய்து ஸலவாத் மஜ்லிஸ் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்வது நபியவர்கள் காட்டித்தராத ஒரு வழிமுறையாகும். 

நபியவர்கள் வாழும் காலத்தில் நபியவர்களோ, நபித்தோழர்களோ இவ்வாறு கூட்டாகச் சேர்ந்து, உரத்த சப்தத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையை வரையறுத்து ஸலவாத் ஓதியதாக எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. 

🌲நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!  

அறிவிப்பவர்  : ஆயிஷா(ரலி) நூல் : புகாரீ (2697)
 
🌲நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். 

ஆயிஷா(ரலி) நூல் : முஸ்லிம் (3243)

அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலாத்துந் நாரிய்யாவை விட்டு விட்டு, நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தை நபியவர்கள் கற்றுத் தந்த முறைப்படி ஓதி நன்மைகளை அடைவோமாக !

-- Abdun Nasir M.I.Sc.,

பராஅத்_இரவு_உண்டா


#பராஅத்_இரவு_உண்டா?

ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவை ஷபே பராஅத் என்ற பெயரில் சிறப்புமிக்க இரவாகக் கருதி அந்த இரவு முழுவதும் விழித்து நோன்பு நோற்று பல விதமான வணக்கங்களைச் சிலர் செய்து வருகிறார்கள்.

இந்த இரவு சிறப்புமிக்க இரவு என்பதற்கு கீழே நாம் எடுத்துக்காட்டும் செய்திகளை ஆதாரங்களாக எடுத்துக் காட்டுகின்றனர்.

முதல் ஆதாரம்

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

திருக்குர்ஆன் 44:2-4

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு பராஅத் இரவு தான் என்பது இவர்களின் முதல் ஆதாரமாகும்.

பாக்கியமுள்ள இரவு என்று அல்லாஹ் ஒரு இரவைக் குறிப்பிட்டால் நிச்சயம் அது பாக்கியமிக்கது தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் பாக்கியமிக்க இரவு என்பது ஷஅபான் மாதத்தின் 15 ஆம் இரவு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பாக்கியமிக்க இரவு என்று அல்லாஹ் கூறும் போது அதற்கான காரணத்தையும் சேர்த்தே சொல்கிறான்.

இந்த இரவில் திருக்குர்ஆனை நாம் இறக்கினோம் என்பது தான் அந்தக் காரணமாகும்.

எந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டதோ அந்த இரவைத் தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது.

எந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டது என்பதை நாம் திருக்குர்ஆனில் தேடிப் பார்த்தால் அந்த இரவு ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவு என்று அறிந்து கொள்ளலாம்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

திருக்குர்ஆன் 2:185

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.

திருக்குர்ஆன் 97:1

அந்த இரவு ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவு தான் என்று இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் விளக்கம் கொடுத்து விட்டான்.

பாக்கியமிக்க இரவு என்பது ரமலான் மாதத்தில் உள்ள லைத்துல் கத்ரைத் தான் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15 ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இரண்டாம் ஆதாரம்

حدثنا الحسن بن علي الخلال حدثنا عبد الرزاق أنبأنا ابن أبي سبرة عن إبراهيم بن محمد عن معاوية بن عبد الله بن جعفر عن أبيه عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلهاوصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر – ابن ماجة 1378

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களைப் போக்குகின்றேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல் : இப்னுமாஜா 1378

இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

இப்னு அபீ ஸப்ரா என்பவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் அபூபக்ர்  பின் அப்துல்லாஹ் பின் முஹம்மது அபீ புஸ்ரா” ஆகும்.

موسوعة أقوال الإمام أحمد بن حنبل في رجال الحديث وعلله

 قال عبد الله بن أحمد: سمعتُ أَبي يقول: أبو بكر بن أبي سبرة كان يضع الحديث، ثم قال: قال حجاج: قال لي أبو بكر السبري: عندي سبعون ألف حديث في الحلال والحرام. قال أبي: وليس حديثه بشيء، كان يكذب ويضع الحديث.

இப்னு அபீ ஸப்ரா என்பவர் ஹதீஸ்கள் என்ற பெயரால் இட்டுக்கட்டிக் கூறுபவர் என அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ت أبو بكر بن عبد الله ق بن أبي سبرة المدني القاضي الفقيه عن الأعرج وعطاء بن أبي رباح وعنه عبد الرزاق وأبو عاصم و جماعة ضعفه البخاري و غيره وروى عبد الله وصالح ابنا أحمد عن أبيهما قال كان يضع الحديث

 ميزان الإعتدال في نقد الرجال

இப்னு அபீ ஸப்ரா என்பவர் பலவீனமனவர் என்று புகாரி அவர்களும், ஹதீஸ்களை கட்டுக்கட்டிச் சொல்பவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் அவர்களும் கூறியுள்ளனர்.

666 أبو بكر بن عبد الله بن أبي سبرة متروك الحديث (الضعفاء والمتروكين للنسائي

அபூபக்ர் என்பார் பலவீனமானவர் என்று நஸாயி அவர்கள் அல்லுஅஃபாஉ வல் வல்மத்ருகீன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் ஆதாரம்

سنن الترمذي

739 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا الحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ، فَإِذَا هُوَ بِالبَقِيعِ، فَقَالَ: «أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ» وَفِي البَابِ عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ.: «حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ الحَجَّاجِ»،

 وَسَمِعْتُ مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الحَدِيثَ، وقَالَ: يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ، وَالحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ “

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீவு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: திர்மிதி

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதை இதைப் பதிவு செய்த திர்மிதீ அவர்களே விளக்கியுள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் அபீ கஸீர் என்பார் உர்வா என்பார் வழியாக அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் யாஹ்யா பின் அபீ கஸீர் என்பார் உர்வாவிடம் எதையும் செவியுற்றதில்லை என்று புகாரி கூறுகிறார். மேலும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பார் இதை யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஹஜ்ஜாஜ் என்பார் யஹ்யா பின் அபீ கஸீரிடம் எதையும் செவியுறவில்லை. எனவே இது பலவீனமான ஹதீஸ் என்று புகாரி கூறுகிறார். இந்த விபரத்தை இந்த ஹதீஸின் இறுதியில் திர்மிதி அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

நான்காவது ஆதாரம்

مصنف ابن أبي شيبة

9764 – حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ: «لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ وَذَلِكَ أَنَّهُ تُنْسَخُ فِيهِ آجَالُ مَنْ يَمُوتُ فِي السَّنَةِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போல் வேறு எந்த மாதத்திலும் நோற்பவர்களாக இருக்கவில்லை. அந்த ஆண்டு மரணிக்க உள்ளவர்களின் தவணை அம்மாதத்தில் மாற்றப்படுகிறது என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்

நூல்கள்: முஸன்னப் இப்னு அபீஷைபா

இதை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தைச் சேர்ந்தவர் அல்ல. அதாவது நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதன் முதல் அறிவிப்பாளராக நபித்தோழர் தான் இருக்க வேண்டும். நபித்தோழர் அல்லாதவர் அறிவித்தால் அது பலவீனமான ஹதீஸாகும்.

ஐந்தாவது ஆதாரம்

فضائل رمضان لابن أبي الدنيا

9 – أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي الْحَسَنِ الْحُسَيْنِيِّ، عَنْ مُحَمَّدٍ الْعَرْزَمِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، رَفَعَهُ قَالَ: «مَنْ صَلَّى لَيْلَةَ النِّصْفِ مِنْ رَمَضَانَ، وَلَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ مِائَةَ رَكْعَةٍ يَقْرَأُ فِيهَا بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ أَلْفَ مَرَّةٍ، لَمْ يَمُتْ حَتَّى يُبَشَّرَ بِالْجَنَّةِ

ரமலான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் அலீ

நூல் : ஃபலாயிலு ரமலான்- இப்னு அபித் துன்யா

முஹம்மத் பின்அலீ என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல.  எனவே இச்செய்தியும் பலவீனமான செய்தியாகும்.

எனவே பராஅத் இரவு குறித்து எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

மேலும் இந்த இரவில் மூன்று தடவை யாஸீன் அத்தியாயம் ஓத வேண்டும்; முதல் யாஸீன் பாவமன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாஸீன் மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்கவும், மூன்றாவது யாஸீன் நீண்ட ஆயுளுக்காகவும் என்று ஓதுகின்றனர்.

இப்படி ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இது போலி ஆலிம்கள் வீடுகளுக்குப் போய் சம்பாதிப்பதற்காக உருவாக்கிய பொய் வணக்கமாகும்.

ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் நோன்பு நோற்பதும் பித்அத்தாகும்.

صحيح البخاري

2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

நமது மார்க்கத்தில் ஒருவர் புதிதாக ஒன்றை உருவாக்கினால் அது ரத்து செய்யப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 2697

صحيح مسلم

4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு மதிப்பளித்து பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட பராஅத் வணக்கங்களை விட்டொழிப்போமாக!

இன் ஷா அல்லாஹ்...

அஸ்ஸலாமு அலைக்கும் 💟
வ ரஹ்மத்துல்லாஹி 💟
வ பரக்காத்தஹூ 💟

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் அபிவிருத்தியும் உங்கள் மீதும் 

உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக...!!

❤️❤️❤️❤️❤️❤️❤️

ஷபே பராஅத் இரவு பற்றி அறிந்து கொள்ளுவோம்


💞 ஷபே பராஅத் இரவு பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• ஷஃபான் மாதத்தின் 15வது தினத்தை ஷபே பராஅத் இரவு, பரக்கத் பொருந்திய இரவு என்று கூறி அன்றைய நாளையும், இரவையும் சிறப்பித்து கொண்டாடுவார்கள். 

• அன்றைய நாளை மஹ்ரிப் நேரத்தில் சிறப்பு துஆ, பயான், அன்றைய நாளில் புதிய ஆடை, விஷேச உணவுகள் சிறப்பு தொழுகை, சிறப்பு நோன்பு என்று அன்றைய இரவை சிறப்பிப்பார்கள்.

• இது மட்டுமில்லாமல் பள்ளி, வீடுகளில் மஹ்ரிப் பிறகு மூன்று யாசின்கள் ஓதி, சிறப்பு துஆ செய்து உணவுகள் பரிமாறுவார்கள்! ஒவ்வொரு யாசின் ஓதும் போதும் ஒவ்வொரு சிறப்பு கூறுவார்கள்!

• இது மட்டுமல்லாமல் ஷஃபான் 15 வது இரவு சிறப்புக்குரிய ஒன்று என்றும், ஒரு சில ஹதீஸ்கள் வந்துள்ளன, ஆனால் அவை அனைத்துமே (ளஈஃப்) மிக பலவீனமானவை அல்லது மௌளூ (இட்டுக்கட்டப்பட்ட) செய்திகளாகவே உள்ளன! இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

💟 பராஆத் இரவு தோன்றிய வரலாறு :

• ஷாபான் 15 த்தாம் நாளை பராஆத் இரவு என்று ஒரு கொண்டாட்ட தினமாக குறிப்பாக அறிமுகப்படுத்தியவர்கள் (நெருப்பு மூட்டி) “பராமிகாக்கள்" ஆவார்கள்.

அல்ஹாபிழ் அபுல் கத்தாப் இப்னு தஹிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

• இஸ்லாத்தை சார்ந்த சில பித்அத்வாதிகள், மஜுஸி (நெருப்பு வணங்கிகளின் வழிமுறைகளை பின்பற்றினார்கள் அது மட்டும் அல்லாமல் அவர்கள் கொள்கைகளை தூய இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டு வந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை  வீணாகவும் விளையாட்டாகவும் எடுத்து கொண்டார்கள்.

• இந்த ஷாபான் மாதத்தில் 15 ஆம் நாளை சிறப்பு நாளாக பராமிக்காக்களின் காலத்தில் தான் ஏற்படுத்தினார்கள்! அவர்கள் தான் நெருப்பு வணக்கத்தின் அடிப்படைகளை இஸ்லாத்தில் புகுத்தினார்கள்!

• ஷியா கொள்கை கொண்ட முஹம்மத் பின் அலீ பின் ஹலப் ஆபூ காலிப் என்பவன் முதன் முதலில் ஷாபான் நடுப்பகுதியை வித்தியாசமான முறையில் இனிப்பு பண்டங்கள் - உணவுகள் மூலமாக பண்டிகைத் போன்று உருவாக்கினான்!

(நூல் : அல்கயாத் அல்முஹ்தனவா வ மவ்ப்புல் இஸ்லாம் மீஹைா : 210)

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

•  ஒரு காலத்திலிருந்து 
இன்னொரு காலத்திற்கும் ஏற்றால் போல் ஷாபான் நடுப்பகுதியை வித்தியாசமாக கொண்டாட ஆரம்பம்பித்தார்கள்!

 • ஆரம்ப காலத்தில் ஷாபான் 15 ம் நாளை மெழுகுவர்த்திகள், தீப்பந்தங்கள், பள்ளிவாயல்களில் விளக்குகள் பற்றவைத்து கொண்டாடினார்கள் !

• இந்த இரவில் மட்டும் அமல் செய்யவும் அல்லாஹ்வை ஞாபகமூட்டுவதற்காகவும் என்று மக்கள் ஒன்றுகூட ஆரம்பம் செய்தார்கள்! அதனுடன் சேர்த்து கப்ருகளையும் ஜியாரத் செய்யவும் ஆரம்பம் செய்தார்கள்!

• வீடுகளில் இந்த தினத்தில்
இனிப்புப்பண்டங்களும் , சிறப்பு உணவு சமைத்தல், அந்த நாளுக்குகேன்று வீட்டை அழங்காரம் செய்ய ஆரம்பம் செய்தார்கள் 

(நூல் : இக்திழாஉ அஸ்சிராத்தல் முஸ்தகீம் : 12/128)

• இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் அடிப்படை விதி இது தான்! 1) நபி (ஸல்) அவர்கள் ஒன்றை சொல்லவும் இல்லை செய்யவும் இல்லை, 2) ஸஹாபாக்கள் செய்யவில்லை, 3) தாபிஈன்களின், தபா தாபிஈன்களின் பொதுநடைமுறைகளிலும் இது இல்லை! தொடர்ந்து மூன்று தலைமுறைகளிலும் தெளிவான ஆதாரம் இல்லை என்றால் அது ஒரு இபாதத் (அமல்) ஆக நிரூபிக்கப்படாது!

• ஷபே பராஅத் இரவு பற்றி ஸஹீஹான எந்த ஆதாரமும் கிடையாது! ஷபே பராஅத் என்ற ஒரு பெயர் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களிலும் கிடையாது! இது தெளிவான பித்அத் (புதுமை) ஆகும்!

💟 ஷபே பராஅத் இரவு சிறப்பு பற்றி ஹதீஸ்கள் :
 
• ஷபே பராஅத் இரவு என்று குறிப்பிட்டு இல்லாமல், ஷஃபான் 15வது நாளை குறிப்பிட்டு, சில ஹதீஸ்களும் இன்னும் ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் வந்துள்ளன! அனைத்தையும் இங்கு குறிப்பிடுவது கடினம், சில பிரபலமான செய்திகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்!

1)  ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹ், தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1.பகைமை கொள்பவன் 2. கொலை செய்தவன்!

• இந்த ஹதீஸ் இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பான் ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளது. இது மிகவும் பலவீனமான ஹதீஸ் இந்த ஹதீஸை இமாம் அல் முன்திரி (ரஹ்), அல் பைஹகி (ரஹ்), இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்) ஆகிய அனைவரும் பலவீனம் என்றே கூறியுள்ளார்கள்!

(நூல் : அத்தர்கீப் வத் தர்ஹீப்)

2) ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களைப் போக்குகின்றேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• மேலே உள்ள ஹதீஸ் இப்னுமாஜா, பைஹகி ஆகிய ஹதீஸ் நூல்களில் வந்துள்ளது! இது மிகவும் பலவீனமான ஹதீஸ் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் இமாம் அல்பானி (ரஹ்), நவவி (ரஹ்), இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் தஹபி (ரஹ்) ஆகிய அனைவரும் கூறியுள்ளார்கள்!

(நூல்கள் : ஸில்ஸிலதுல் அஹாதீஸிழ் ழஈபா, அல்-முஜமூ, மிஜானுள் திடல் பி நஹ்திர் ரிஜால்) 

3) தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

(அல் குர்ஆன் : 44:2-4)

• மேலே உள்ள அல்குர்ஆன் வசனம் ஷபே பராஅத் இரவை குறித்தே அருளப்பட்டுள்ளது. என்று இதை ஆதரிக்ககூடியவர்கள் கூறுகிறார்கள். 

• ஆனால் இந்த வசனம் லைலத்துல் கத்ர் இரவை பற்றியே குறிப்பிடுகிறது என்பதை இப்னு உமர் (ரழி), முஜாஹித் (ரழி), அபூ மாலிக் (ரழி), அத்-தஹ்ஹாக் (ரழி) ஆகிய ஸஹாபாக்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்!

(நூல்கள் : தப்ஸிர் இப்னு கசிர் : சூரத்துல் துகானின் ஆரம்ப வசனத்தின் விளக்க உரை)

4) அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீவு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் திர்மிதி,இப்னு மாஜா போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது! இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானது என்று இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), அல்பானி (ரஹ்) ஆகிய ஹதீஸ் கலை அறிஞர்களும் மேலும் இது பலஹீனமான ஹதீஸ் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்!

(நூல்கள் : திர்மிதி,ஷுஅபுல் ஈமான், அல்-முதனாஹியா பி அல்-அஹாதீஸ் அல்-வாஹியா, ஸில்ஸிலதுல் அஹாதீஸிழ் ழஈபா)

5) யார் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப் பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்!

• மேலே குறிப்பிட்டுள்ளவாறு ஒரு செய்தி அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான எந்த ஒரு ஹதீஸ் நூலிலும் நேரயாகவோ அல்லது மறைமுகமாகவோ இடம்பெறவில்லை! இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய்யான செய்தியாகும்! நபி (ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பெரும் பாவமாகும்!

ஸலமா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :

நான் கூறாத ஒன்றை கூறினார்கள் என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 109)

6) ஐந்து நாட்களின் இரவுகளில் கேட்க்கப்படும் துஆக்கள் மறுக்கப்படமாட்டாது: 1) ரஜப் மாதத்தின் முதல் இரவு, 2) ஷஃபானின் 15வது இரவு, 3) ஜும்ஆ இரவு, 4) நோன்புப் பெருநாள் இரவு, 5)உழ்ஹியாப் பெருநாள் இரவு என்று நபியவர்கள் கூறினார்கள். 

• இந்த ஹதீஸ் தாரீகு இப்னு அஸாகிர் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது! இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமான ஹதீஸ் என்றும் இந்த ஹதீஸ் நிராகரிக்கப்பட்டது என்றும் இமாம் அல்பானி (ரஹ்), இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்), இமாம் இப்னுல் ஜௌஸி (ரஹ்), இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளார்கள்!

(நூல்கள் : ஸில்ஸிலதுல் அஹாதீஸிழ் ழஈபா, இக்திதாஉஸ் ஸிராத்தில் முஸ்தகீம், லதாஇஃபுல் மஆரிஃப், அல் இலல் அல் முதநாஹிய்யா)

• மேலே குறிப்பிட்டதை விட அதிகமான செய்திகள் உள்ளன ஆனால் அவற்றை எடுத்து அமல் செய்யும் அளவிற்கு அந்த செய்திகள் பலமாக இல்லை. 

• இந்த இரவில் நாம் குறிப்பிட்டு எந்த விதமான அமல்களும் செய்ய வேண்டியது கிடையாது! மற்ற நாட்களை போல் இந்த நாட்களையும் நம்முடைய சக்திக்கு இயன்ற அளவுக்கு அமல்களை செய்தாலே போதுமானது!

Tuesday, January 27, 2026

ஷஃபான மாத பித்அத்கள்பாவியாக்கும் பரா அத் இரவு!


ஷஃபான மாத பித்அத்கள்
பாவியாக்கும் பரா அத் இரவு!

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்
இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்
மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் 
ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும். அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10 மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?

அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100 ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

(قوله: فائدة: أما الصلاة المعروفة ليلة الرغائب إلخ) قال المؤلف في إرشاد العباد: ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الامر منع فاعلها: صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب.
وصلاة ليلة نصف شعبان مائة ركعة، وصلاة آخر جمعة من رمضان سبعة عشر ركعة، بنية قضاء الصلوات الخمس التي لم يقضها.

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது)

(فائدة) أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة، وأحاديثها موضوعة.
மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.)

مَسَاجِدِ الْقَاهِرَةِ وَلَوْ شَرَطَ الْوَاقِفُ لِأَنَّ شَرْطَهُ لَا يُعْتَبَرُ فِي الْمَعْصِيَةِ وَفِي الْقُنْيَةِ وَإِسْرَاجُ السُّرُجِ الْكَثِيرَةِ فِي السِّكَكِ وَالْأَسْوَاقِ لَيْلَةَ الْبَرَاءَةِ بِدْعَةٌ وَكَذَا فِي الْمَسَاجِدِ وَيَضْمَنُ الْقَيِّمُ وَكَذَا يَضْمَنُ إذَا أَسْرَفَ فِي السُّرُجِ فِي رَمَضَانَ وَلَيْلَةِ الْقَدْرِ وَيَجُوزُ الْإِسْرَاجُ عَلَى بَابِ الْمَسْجِدِ فِي السِّكَّةِ أَوْ السُّوقِ وَلَوْ اشْتَرَى مِنْ مَالِ الْمَسْجِدِ شَمْعًا فِي رَمَضَانَ يَضْمَنُ قُلْتُ : وَهَذَا إذَا لَمْ يَنُصَّ الْوَاقِفُ عَلَيْهِ وَلَوْ أَوْصَى بِثُلُثِ مَالِهِ أَنْ يُنْفَقَ عَلَى بَيْتِ الْمَقْدِسِ جَازَ وَيُنْفَقُ فِي سِرَاجِهِ وَنَحْوِهِ قَالَ هِشَامٌ فَدَلَّ هَذَا عَلَى أَنَّهُ يَجُوزُ أَنْ يُنْفَقَ مِنْ مَالِ الْمَسْجِدِ عَلَى قَنَادِيلِهِ وَسُرُجِهِ وَالنَّفْطِ وَالزَّيْتِ ا هـ .
பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக! பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?

(قوله: وكذا بعد نصف شعبان) أي وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله (ص): إذا انتصف شعبان فلا تصوموا.
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

ஏன் இந்த சிறப்பு?

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.

இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.

மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.

முதல் ஆதாரம்

وَالْكِتٰبِ الْمُبِيْنِ ‌ ۛ‌ۙ‏

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.

فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ‏

அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

அல்குர்ஆன் 44:2-4

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ‏

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.

(அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.

 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

(அல்குர்ஆன் 2:185)

இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இரண்டாம் ஆதாரம்

1388 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “
إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا، فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا، حَتَّى يَطْلُعَ الْفَجْرُ “
ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னு மாஜா-1388 (1378)

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மூன்றாம் ஆதாரம்

744 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ
فَقَدْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ « أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ». قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ.
فَقَالَ « إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ ». وَفِى الْبَابِ عَنْ أَبِى بَكْرٍ الصِّدِّيقِ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ. وَسَمِعْتُ مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ وَقَالَ يَحْيَى بْنُ أَبِى كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதீ-739 (670)

இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நான்காவது ஆதாரம்

9857- حَدَّثَنَا يَزِيدُ ، قَالَ : أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، قَالَ :
لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ ، وَذَلِكَ أَنَّهُ تُنْسَخُ فِيهِ آجَالُ مَنْ يَمُوتُ فِي السَّنَةِ.
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764 .
ஃபலாயிலுர் ரமளான் – இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8

இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஐந்தாவது ஆதாரம் அரபி ???

9 – أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي الْحَسَنِ الْحُسَيْنِيِّ، عَنْ مُحَمَّدٍ الْعَرْزَمِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، رَفَعَهُ قَالَ:
«مَنْ صَلَّى لَيْلَةَ النِّصْفِ مِنْ رَمَضَانَ، وَلَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ مِائَةَ رَكْعَةٍ يَقْرَأُ فِيهَا بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ أَلْفَ مَرَّةٍ، لَمْ يَمُتْ حَتَّى يُبَشَّرَ بِالْجَنَّةِ»
4. ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129) குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில், இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

7928 – أخبرنا عبد الرزاق قال أخبرنا معمر عن أيوب قال قيل لابن أبي مليكة إن زيادا المنقري وكان قاصا يقول إن أجر ليلة النصف من شعبان مثل اجر ليلة القدر فقال بن أبي مليكة لو سمعته يقول ذلك وفي يدي عصا لضربته بها
அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர், ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7928 , (பாகம்: 4, பக்கம்: 317)

حدثنا محمد بن سلام، سألت عبدالله بن المبارك
عن نزول ليلة النصف من شعبان، فقال عبدالله: يا ضعيف ليلة النصف! ينزل في كل ليلة، فقال الرجل يا أبا عبدالله! كيف ينزل؟ أليس يخلو ذلك المكان منه؟ فقال عبدالله: ينزل كيف يشاء ” وفي رواية أخرى لهذه الحكاية أن عبدالله ابن المبارك قال للرجل: ” إذا جاءك الحديث عن رسول الله صلى الله عليه وسلم فأصغ له “.
முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.

நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2697- حَدَّثَنَا يَعْقُوبُ ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ.
رَوَاهُ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الْمَخْرَمِيُّ وَعَبْدُ الْوَاحِدِ بْنُ أَبِي عَوْنٍ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி-2697 

4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ
أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

முஸ்லிம்-3541 (3243)

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

Saturday, January 24, 2026

அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி)


💞 முந்தியவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) வாழ்கை வரலாறு சுருக்கம் 💞

• மக்காவில் செல்வமும் அரசியல் வளமும் மிக்க சுஹைல் இப்னு அம்ர், ஃபாகிதா இவர்கள் இருவருக்கும் மகனாக அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்! அபு ஜந்தல் (ரழி) என்ற ஒரு சகோதரும் இவருக்கு உண்டு!

• இவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ர், குரைஷ் குலத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்! மேலும் குரைஷ் குலத்தின் முக்கிய பேச்சாளர்,
மக்காவின் அரசியல்–தூதரகத் தலைவராகவும் விளக்கினார்! மக்காவில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். முஸ்லீம்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர். இதற்கு நிறைய ஆலோசனைகளும் கூறியுள்ளார்கள்!

• இந்த அளவிற்கு தந்தை கடுமையாக இஸ்லாத்தை எதிர்த்தாலும், இவரின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி), நபித்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர் அதை வெளிப்படுத்தாமல் மறைமுகமாகவே வைத்திருந்தார்கள்!

• குரைஷிகளின் சபைகளை புறக்கணித்து விட்டு, அர்கம் (ரழி) அவர்கள் வீட்டில் மறைமுகமாக இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்வார்கள்! தந்தைக்கு இந்த விசியம் தெரியவர இவரை கண்டித்தார்கள் மேலும் பொருளாதாரம் எதையும் கொடுக்கமாட்டேன் என்றும் கடுமையாக கூறினார்கள்!

• ஒரு கட்டத்தில் மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு, மக்கா காஃபிர்கள் அதிகம் கொடுமை இழைக்க, நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்களை அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்ய சொன்னார்கள், அதில் அப்துல்லாஹ் இப்னு சுஹைல் (ரழி) அவர்களும் ஒருவர் என்பதை வரலாற்று அறிஞர் இப்னு ஹிஷாம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்!

• பின்பு, சில மாதம் கழித்து ஹிஜ்ரத் செய்தவர்கள் மக்கா வர, அப்துல்லாஹ் (ரழி) அவர்களை அவர் தந்தை வீட்டிலயே சிறை வைத்தார். இவ்வாறு சில நாட்கள் செல்ல, இவரின் சகோதரன் அபு ஜந்தல் (ரழி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். 

• பத்ருப் போர் சமயத்தில் இவர் தந்தையும் முஸ்லீம்களுக்கு எதிராக போர் புரிய தயாராகினார். அப்போது அப்துல்லாஹ் (ரழி) சாமர்த்தியாக சிந்தித்து, தந்தையிடம் மன்னிப்பு கேட்டு தான் நம்முடைய பழைய மார்க்கத்திற்கே வந்து விட்டேன்! என்னையும் உங்களுடன் போருக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய தந்தை அவரையும் உடன் அழைத்து சென்றார்.

• போர் ஆரம்பம் ஆகும் முன்பே, பிறர் தன்னை கவனிக்காத சூழ்நிலையில் முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டார் அப்துல்லாஹ் (ரழி). அந்த வகையில் இவரும் பத்ர் போரில் கலந்து கொண்டு ஸஹாபி ஆவார்!

• இதன் பின்பு, மதினாவிலயே தங்கி இருந்தார்கள்! இவர் பத்ர் போர், உஹத் போர், அகழ்ப்போர், யர்மூக் போர், யமாமா போர் போன்றவற்றில் கலந்து கொண்டு வீரமாக போரிட்டுள்ளார்.

• மக்காவிற்கு உம்ராவிற்காக நபி (ஸல்) அவர்களுடன், 1,400 ஸஹாபாக்கள் வந்தார்கள். மக்கா காபிர்கள் இவர்கள் போருக்கு வந்து உள்ளார்கள் என்று உள்ளே விடமால் ஹுதைபியா எனும் இடத்திலயே தடுத்து விட்டார்கள். இதன் பின்பு முஸ்லீம்கள் வந்த நோக்கத்தை பற்றி எடுத்து கூற உஸ்மான் (ரழி) அவர்கள் மக்காவிற்கு சென்றார்கள்.

• சில நாட்கள் ஆகியும் உஸ்மான் (ரழி) அவர்கள் திரும்பி வராததால் உஸ்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார் என்று ஒரு தகவல் பரவுகிறது! இதற்கு கண்டிப்பாக நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) ஒரு மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) ஸஹாபாக்களிடம் மரணம் வரும் வரை போரிடுவோம், மாறாக, (எந்தச் சூழ்நிலையிலும்) நாங்கள் புறமுதுகிட்டு ஓட மாட்டோம் என்று உறுதிமொழி வாங்கினார்கள்! அதில் அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் ஒருவர்! ஸஹாபாக்களின் இந்த உறுதியை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் வசனமே அருளியுள்ளான்!
 
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.

(அல்குர்ஆன் : 48:18)

• இதன் பின்பு முஸ்லீம்களுக்கும், மக்கா காஃபிர்களுக்கும் இடையே நடைபெற்ற ஹுதைபியா உடன் படிக்கையில் முஸ்லீம்கள் சார்பாக நபி (ஸல்) அவர்கள், அபூக்கர் (ரழி) உமர் (ரழி) போன்ற பெரும் ஸஹாபாக்கள் சாட்சியாக முத்திரையிட அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் அதில் கலந்து கொண்டு தன்னுடைய கையெழுத்தை முத்திரையாகயிட்டார்கள்! காஃபிர்களின் சார்பாக சுஹைல் இப்னு அம்ர் கலந்து கொண்டார்.

• இதன் பின்பு சில மாதம் கழித்து மக்கா வெற்றியின் போது, முஸ்லீம்கள் மக்காவிற்கு உள்ளே நுழைந்தார்கள்! அப்போது தன்னுடைய தந்தையான சுஹைல் இப்னு அம்ர் அவருக்காக நபி (ஸல்) அவர்களிடம் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள் நபி (ஸல்) அவர்களும் அவரை மன்னித்தார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் இறப்பிற்கு பிறகு, மக்காவில் குழப்பம் ஏற்பட அப்போது சுஹைல் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் தான் மக்களுக்கு உபதேசம் செய்து அந்த குழப்பத்தை போக்கி, முஸ்லீம்களை ஈமானில் உறுதியாக இருக்கும்படி செய்தார்கள்!

• நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு, அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சி காலத்தில் யமாமா என்ற இடத்தில் பொய்யன் நபி முஸைலமாவிற்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பெரும் போர் ஒன்று நடைபெற்றது.

• போர் மிக கடுமையாக நடைபெற்றது. இதில் பல ஸஹாபாக்கள் வீரமாக போரிட்டு ஷஹீத் ஆனார்கள். அவ்வாறு போரிட்டு ஷஹீத் ஆனவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் பின் சுஹைல் (ரழி).

• மக்காவில் செல்வம், அரசியல் பலமிக்க, வசதியான வாய்ப்புகள் உள்ள வீட்டில் பிறந்தாலும் இஸ்லாத்திற்காக அனைத்தையும் விட்டு வந்தார்கள். முஸ்லீம்களிடம் ஆட்சியில், அதிகமான செல்வங்கள் வந்த போதும் அதை எதையும் அனுபவிக்காமல் இஸ்லாத்திற்காக தன்னையே அர்ப்பணம் செய்தவர் தான் அப்துல்லாஹ் பின் சுஹைல் ரலியல்லாஹு அன்ஹு!

@அல்லாஹ் போதுமானவன் 💞

Wednesday, January 21, 2026

ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞


💞 ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• இஸ்லாத்தில் 8 வது மாதம் ஷஃபான் மாதமாகும்! ரஜப் மற்றும் ரமலான் இரண்டு மாதத்திற்கு இடையில் இந்த மாதம் வருகிறது.

• ரமலான் மாதத்தில் நாம் வணக்க வழிபாடுகளிலும், மறுமைக்கான தயாரிப்புகளிலும் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு ஒரு பயிற்சியாக அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த ஷஅபான் மாதத்தை கொடுத்திருக்கின்றான்.

• இன்ஷாஅல்லாஹ் ரஜப் மாதம் (21/01/2026) இன்றைய மஹ்ரிபுடன் முடிவடைகிறது! (21/01/2026) இன்றைய மஹ்ரிப் பின்பு இருந்து ஷஃபான் மாதம் ஆரம்பம் ஆகுகிறது! இன்ஷாஅல்லாஹ் அடுத்தது ரமலான் மாதம் தான்!!!! 

💟 ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நேற்க்கலாம் :  

• ரமலானில் நோன்பு வைத்தால் அனைவரும் அறிந்து கொள்ளுவார்கள் ஆனால் இந்த ஷஃபான் மாதத்தில் நோன்பு வைத்தால் பலரும் நம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள் நம்மை படைத்த அல்லாஹ்வை தவிர! எனவே இந்த மாதத்தில் நோன்பு வைப்பதால் இக்லாஸ் (மன தூய்மை) உடன் நம்மால் அமல் செய்ய வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது!

• பலர் நோன்பு என்றாலே ராமலனில் மட்டும் வைக்கிறார்கள் இதனால் ஒரு சில நோன்புலயே சோர்ந்து விடுகிறார்கள் இன்னும் சிலர் முடியவில்லை என்று விட்டு விடுகிறார்கள்!

• நாம் ரமலான் வருவதற்கு முன்பு இந்த மாதத்திலயே நோன்பு வைக்க ஆரம்பம் செய்தால் ரமலானில் நோன்பு வைப்பது நமக்கு எளிதாக இருக்கும்!

• ஷஃபான் மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு நோன்பு வைக்கலாம் இது சுன்னாஹ், கட்டாயம் இல்லை! ஷஃபான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பும் வைத்து உள்ளார்கள் பிறறையும் நோன்பு வைக்க வலியுறுத்தி உள்ளார்கள்!

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :

ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை! ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1969)

உம்மு சலமா ரழியல்லாஹுஅன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் :

இரண்டு மாதங்களைத் தவிர தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு வைத்து பார்த்ததில்லை. அவை, ஷஅபான் மற்றும் ரமலான்.

(நூல் : சுனன் திர்மிதி : 736)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறுவதை அபதுல்லாஹ் பின அபீ கைஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும் அதனைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும்” 

(நூல் : சுனன் அபூதாவூத் : 2431)

💟 ஷாபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன :

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நபி (ஸல்) அவர்களிடம் : அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது,

ஷாபான் -  ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும்! இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள்!

இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன! இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்!

(நூல் : சுனன் நஸயீ : 2357 | தரம் : ஹஸன் | அல்பானி (ரஹ்))

• இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் அதிகம் நோன்பு வைத்து உள்ளார்கள்! இதை தவிர வேறு எந்த காரணத்திற்கும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்க வில்லை!

• அதே போன்று இதை தவிர ஷஃபானில் நோன்பு நேற்பதற்கு சிறப்புகள் வேறு எதுவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸ்கள் கிடையாது!

• ஷஃபானில் நோன்பு நேற்ப்பதின் சிறப்புகள் என்று ஏராளமான செய்திகள் உண்டு ஆனால் அவை அனைத்துமே மிக பலகீனமான ஹதீஸ் அல்லது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்!

💟 தொடர் நோன்பு நேர்க்க கூடாது :

• தொடர் நோன்பு என்பது ரமலான் மாதத்தில் மட்டுமே வைக்க வேண்டும்! இதற்கு சில அறிஞர்கள், ரமலான் அல்லாத மாதத்தில் அதிக தொடர் நோன்பு வைப்பதால், அவர் ரமலானில் நோன்பு நோர்க்க முடியாத அளவிற்கு பலவீனமாக ஆகிவிடுவார் என்ற ஒரு காரணத்தை குறிப்பிடுகிறார்கள்.

• மேலும் நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு வைத்து உள்ளார்கள் ஆனால், மாதம் முழுவதும் விடாமல் நோன்பு வைக்க வில்லை! இவ்வாறு தொடர் நோன்பும் வைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்!

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள் :

நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1971)

• நாம் இந்த மாதத்தில் அதிகம் நோன்பு வைக்க விரும்பினால், தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு அல்லது பிறை 13,14,15 ஆகிய நாட்களில் நோன்பு வைக்கலாம் அல்லது திங்கள் வியாழன் நோன்பு வைக்கலாம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு நோன்பு வைத்து கொள்ளலாம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டு விடுவீராக! இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1976)

💟 ஷாபான் மாதத்தில் உங்களால் இயன்ற அமல்களை செய்யுங்கள் :

• ஷாபான் மாதத்தில் நோன்பு வைப்பதை நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளார்கள்! இதை தவிர்த்து வேறு எந்த ஒரு அமலையும் குறிப்பிட்டு கூறவில்லை! அதனால் நாம் வழமையாக செய்யும் அமலில் இயன்ற அளவுக்கு செய்தாலே போதுமானது!

• பர்ளான தொழுகைகளை நேரம் உடன் தொழுதல், பர்ளு தொழுகையின் முன் பின் சுன்னத் தொழுகைகள், நபிலான தொழுகைகள், அல் குர்ஆன் ஓதுதல், தஸ்பீக் செய்தல், தர்மம் செய்தல், தவ்பா செய்தால் இது போன்று நல்அமல்களை நம்முடைய சக்திக்கு இயன்ற அளவிற்கு செய்யலாம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1970)

💟 விடுப்பட்ட நோன்புகள் :

• நாம் ரமலானில் மார்க்கம் அனுமதித்த காரணத்தினால் விட்ட நோன்புகள் அல்லது நேர்ச்சை நோன்புகளை இந்த மாதத்தில் வைத்து கொள்ளலாம்!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும்! அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1950)

💟 களா நோன்பு வைக்க கால அவகாசம் :

• களா நோன்பு என்பது நம் மீது கடமையான நோன்பு ரமலான் நோன்பு மார்க்கம் அனுமதித்த காரணத்தில் விட்டு விட்டால் அல்லது நம் மீது நாமே கடமையாக்கி கொண்டு நேர்ச்சை நோன்புகள் வைக்க முடியவில்லை என்றால் நாம் பின்னர் வரும் நாட்களில் வைத்து கொள்ள வேண்டும்!

• அப்படி வைக்க முடியவில்லை என்றால் நாம் நமக்கு நோன்பு வைக்க சூழ்நிலை அமையும் வரை நோன்பை கால தாமதம் செய்யலாம் மார்க்கம் அனுமதித்த காரணம் இருந்தால் மட்டுமே!

உதாரணமாக : கர்ப்பிணி பெண்கள் - பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் - நோயாளி!

• களா நோன்பு பொறுத்த வரை இஸ்லாம் நமக்கு எந்த ஒரு வரையரையும் கொடுக்க வில்லை இந்த நாட்கள் முடிவதற்கு முன்பு வைத்து விட வேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் நமக்கு விதிக்க வில்லை!

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) -  ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்!

(சூரத்துல் : அல் பகரா : 184)

• இந்த வசனத்தில் அல்லாஹ் பின்னால் வரும் காலங்களில் நோன்பு வைத்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளான் ஆனால் இந்த நாட்கள் வைக்க வேண்டும் இல்லை என்றால் எப்போதும் வைக்க முடியாது என்று நமக்கு கூற வில்லை!

• நாம் விட்ட நோன்புகளை கணக்கு வைத்து கொண்டு பின்னால் வரும் காலங்களில் எப்போது வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம்! ஆனால் அதற்கு என்று வைக்க சூழ்நிலை நேரம் இருந்தும் அலட்சியம் செய்ய கூடாது!

💟 ஷாபான் மாதத்தின் கடைசி இரண்டு நாட்களை மட்டும் தேர்வு செய்யாதீர்கள் :

• ஷஃபான் கடைசி இரண்டு நாட்களை மட்டும் தேர்வு செய்து நோன்பு வைக்க கூடாது! ஏன் என்றால் ஷஃபான் நோன்பும் ரமலான் நோன்பும் ஒரு தொடர்ச்சியாக ஆகி விட கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் இதை தடை செய்து உள்ளார்கள்!

• ஆனால்  வழமையாக திங்கள் & வியாழன் நோன்பு வைக்க கூடியவர்கள் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைக்க கூடியவர்கள் - ஷாபான் கடைசியில் நோன்பு வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் இவர்கள் மட்டும் ஷாபான் கடைசியில் நோன்பு நோர்க்கலாம்! 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்குமுந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்)  ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 1976)

💟 ஷஃபான் பிறை 15க்கு பிறகு பின் நோன்பு நோற்க்க கூடாதா?

ஷஃபானின் நடுப்பகுதியை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

(நூல் : சுனன் அபூதாவுத்)

• இந்த ஹதீஸ் பலகீனமான செய்தியாகும்! மற்றும் ஏற்று கொள்ள கூடாது!  என இமாம் அஹ்மத் (ரஹ்) , இமாம் பைஹகீ (ரஹ்) போன்ற பல ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறி உள்ளார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் ஷாபான் இறுதி இரண்டு நாட்கள் மட்டும் நோன்பு வைக்க வேண்டாம் என தடை செய்து உள்ளார்கள்! அந்த இரண்டு நாட்கள் தவிர்த்து ஷாபானில் மற்ற நாட்களில் நோன்பு நோர்க்கலாம்!

💟 அதிகம் நோன்பு நோர்ப்பத்தின் சிறப்பு :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

'சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்!
 
(நூல் : ஸஹீஹ் புகாரி : 1896)

💟 நோன்பை தவிர வேறு என்ன குறிப்பிட்ட அமல்கள் இந்த ஷஃபானில் செய்யலாம்?

• நபி (ஸல்) அவர்கள் நோன்பை தவிர வேறு எந்த சிறப்பான அமல்களையும் குறிப்பிட்டு இந்த ஷாபான் மாதத்தில் செய்யவில்லை!

அல்கமா (ரஹ்) அறிவித்தார்கள் :
           
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாள்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன்! அதற்கவர்கள் இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்! 

(நூல் : ஸஹீஹ் புகாரி : 1987)

• ஷஃபான் 15 யில் பராஆத் இரவு என்று அன்றைய நாளை சிறப்பித்து கொண்டாடுவார்கள். அன்றைய இரவில் திக்ர், சிறப்பு துஆ, சிறப்பு தொழுகை என்று சிறப்பிக்க மற்றொரு புறம் சிறப்பு பயான், விஷேஷ உணவுகள், அன்றைய நாளில் புத்தாடை என்று பெருநாள் போன்று கொண்டாடுவார்கள்.

• இதை பற்றி நிறைய ஹதீஸ்கள் இருந்தாலும் அதில் ஒன்று கூட ஸஹீஹ் கிடையாது. பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே இதை பற்றி உண்டு. இன்ஷாஅல்லாஹ் இதை பற்றி விரிவாக பதிவு செய்கிறோம்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

நெருக்கடி & துன்பம் & கவலைஆகிய வற்றில் இருந்து விடுப்பட அழகிய துஆ 💞


💞 நெருக்கடி & துன்பம் & கவலை
ஆகிய வற்றில் இருந்து விடுப்பட அழகிய துஆ 💞

| துஆ தொடர் :  |

💟 சோதனைகள் ஏற்படும் போது ஓதும் அழகிய துஆ :

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ

‘ அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜு ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத்த அய்னின் வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லாயிலாஹா இல்லா அனத்த ’

பொருள் : யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை!

(நூல் : அபூதாவூத் : 3/959 : Eng Ref)

 اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ‏

‘ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ’

பொருள் : நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்!

(அல்குர்ஆன் : 2 : 156)

• மிகவும் அழகிய அர்த்தம் உள்ள துஆ ஆனால் நம்முடைய சமூகம் இந்த துஆவை மரண செய்தி கேட்டால் மட்டும் ஓதுகிறார்கள்!

• ஆனால் அல்லாஹ் கஷ்டம் சோதனை வந்தால் இந்த துஆவை ஓத சொல்லி உள்ளான்!

💟 நபி யூனுஸ் (அலை) அவர்கள் கேட்ட அழகிய துஆ :

لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌  ‌‏

‘ லாயிலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னி குன்த்து மினழ்ழாளிமீன் ’

பொருள் : உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்!

(அல்குர்ஆன் : 21 : 87 & 88)

• நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றில் நெருக்கடியான சூழ்நிலை கேட்ட அழகிய துஆ இந்த துஆவை கேட்ட பின்பு தான் அல்லாஹ் அவர்களை துன்பத்தில் இருந்து விடு வித்தான்!

💟 நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின் போது கேட்ட அழகிய துஆ : 

لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ ورَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

‘ லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம் ’

பொருள் : கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை!

(நூல் : புகாரி : 6346)

اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا

‘ அல்லாஹு அல்லாஹு ரப்பீ லா உஷ்ரிகு பிஹி ஷைஆ ’

பொருள் : அல்லாஹ் அல்லாஹ் தான் எனது இறைவன் அவனுக்கு நான் எதையும் இணைவைக்க மாட்டேன்!

(நூல் : அபூதாவூத் : 1525)

💟 நெருக்கடியான நிலையில் ஓத வேண்டிய அழகிய துஆ :

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

‘ யா ஹய்யூ யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸு ’

பொருள் : என்றென்றும் வாழ்பவனே, நித்தியமான ஒருவனே, உன் கிருபையினால், என்னுடைய எல்லா காரியங்களையும் சரியான முறையில் அமைய நான் உன்னை அழைக்கிறேன்!

(நூல் : திர்மிதி : 3524)

@அல்லாஹ் போதுமானவன் 💞

ஷஅபான் மாத சுன்னத்தான நோன்புகளும் – தவிர்க்க வேண்டிய பித்அத்துகளும்


ஷஅபான் மாத  சுன்னத்தான நோன்புகளும் – தவிர்க்க வேண்டிய பித்அத்துகளும்

இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிகமாக சுன்னத்தான நோன்புகளை நோற்றுள்ளார்கள். 

அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 
நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) 
நூல் : புகாரி (1967)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில நாட்களைத் தவிர்த்து) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள்.
உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்! என்றும் நபி (ஸல்) கூறுவார்கள்.
(கூடுதலாக தொழும் வணக்கங்களில்) குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
(புகாரி: 1970)

முழுமையாக நோன்பு நோற்பதற்கு கடமையாக்கப்பட்ட மாதம் இரமலான் மாதம் மட்டும்தான். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்கவில்லை. எனினும் மற்றமாதங்களை விட அதிகமாக இந்த மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள். 

வழமையாக நோன்பு நோற்கும் வழமை உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் ஷஅபான் இறுதியில் நோன்பு நோற்பது கூடாது

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாளில் நோன்பு நோற்கலாம்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : புகாரி (1914)

திங்கள், வியாழன் நோன்பு , மாதம் மூன்று நோன்புகள் போன்ற வழமையான நோன்புகளை நோற்பவர்கள் ஷஅபான் இறுதியில் நோற்றுக் கொள்ளலாம். 

ஒரு நபித்தோழர் ஷஅபான் இறுதியில் (அதாவது பிறை 29, 30 போன்ற நாட்களில்) நோன்பு நோற்றால் பாவமாகிவிடுமோ என்ற எண்ணத்தில் தாம் வழமையாக நோற்கும் நோன்பை விட்டுவிட்டார். அவரிடம் அதைப் பற்றி விசாரித்த நபி (ஸல்) அவர்கள் வழமையாக நோற்கும் நோன்பை அவ்வாறு விட வேண்டியதில்லை என்பதை விளக்கும் வகையிலும், வழமையாக நோற்கும் நோன்பை விட்டால் அதை வேறுநாட்களில் நோற்கலாம் என்பதை தெளிவுபடுத்தும் வகையிலும் “நீர் இரமலான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக” என்று கூறினார்கள். 

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “இல்லை’ என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.
.
நூல் : முஸ்லிம் (2155)

ஷஅபான் 15 ம் நாள் மட்டும் குறிப்பாக நோன்பு நோற்பது பித்அத் ஆகும். இது தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாகும். இறைத்தூதர் செய்தார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத எந்த ஒரு செயலையும் வணக்கமாகச் செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் அது வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும். 

ஷஅபான் 15 ஆம் இரவிற்கென்று எந்த ஒரு சிறப்பும் கிடையாது. மற்ற நாட்களின் இரவுகளைப் போன்றுதான் ஷஅபான் 15 ஆம் இரவும் ஆகும். ஷஅபான் 15 ஆம் இரவைச் சிறப்பித்து வரும் செய்திகள் பலவீனமானவையாகும். 

ஷஅபான் 15 ஆம் இரவு மட்டும் சிறப்பாக இரவுத் தொழுகையை நிறைவேற்றுவது பித்அத் ஆகும். மற்ற இரவுகளில் இரவுத் தொழுகையை நிறைவேற்றும் வழமையுடையோர் இந்த இரவிலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் மற்ற இரவுகளில் தொழும் வழமை இல்லாதவர்கள் இந்த இரவை மட்டும் சிறப்பித்து தொழுவது கூடாது. இது தொடர்பாக முன்வைக்கப்படும் ஆதாரங்கள் பலவீனமானவையாகும். 

ஷஅபான் 15 ஆம் இரவில்தான் அந்த வருடம் நடைபெற வேண்டிய காரியங்கள் (விதி) நிர்ணயம் செய்யப்படுகிறது என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரான நம்பிக்கையாகும். 

லைலத்துல் கத்ர் இரவில்தான் நடைபெற வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 
அல்லாஹ் கூறுகிறான் : 
இ(வ் வேதத்)தை மதிப்புமிக்க இரவில் இறக்கினோம். மதிப்புமிக்க இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அதில் வானவர்களும், (ஜிப்ரீல் எனும்) ரூஹூம் தமது இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு செயல்திட்டத்துடன் இறங்குகின்றனர். அமைதி (நிறைந்த இரவு). அது, அதிகாலை உதயமாகும்வரை இருக்கும்.
(அல்குர்ஆன் அத்தியாயம் 97)

லைலத்துல் கத்ர் இரவு இரமலான் மாதத்தில்தான் உள்ளது. 
எனவே ஷஅபான் 15 ஆம் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டதாக நம்புவதும், ஷஅபான் பதினைந்தாம் இரவில் நடைபெறவேண்டிய காரியங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது என்ற நம்பிக்கையும் குர்ஆனுக்கு முரணான தவறான நம்பிக்கையாகும். 

மரணித்தவர்களுக்காக ஒன்றும். இரண விஸ்தீரணத்துக்காக ஒன்றும், ஆயுள் நீடிப்பதற்காக ஒன்றும் என ஷஅபான் பதினைந்தாம் இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவது என்பது எந்த ஒரு அடிப்படையுமின்றி உருவாக்கப்பட்ட பித்அத் ஆகும். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு குர்ஆன், சுன்னாவில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. 

ஷஅபான் 15 ஆம் இரவில் பிரத்யோகமாக கப்ரு ஸியாரத் செய்வதும். அந்த இரவில் பிரத்யோகமாக மரணித்தவர்களுக்குப் பிரார்த்திப்பதும் பித்அத் ஆகும். ஷஅபான் 15 ஆம் இரவில் கப்ரு ஸியாரத் செய்வது சிறப்பானது என்பதற்கு நபிமொழிகளில் எந்த ஒரு சான்றும் கிடையாது. 

சில ஊர்களில் பராஅத் ரொட்டி (வலாத் ரொட்டி) என்ற பெயரில் ரொட்டியைச் சுட்டு ஃபாத்திஹா ஒதி அதை விளம்புகின்றனர். இதுவும் குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இல்லாத வழிகெட்ட பித்அத் ஆகும். 

ஷஅபான் பதினைந்தாம் இரவிற்கு “பராஅத் இரவு” (லைலத்துல் பராஆ) என்ற பெயர் குர்ஆன் சுன்னாவில் கூறப்படவில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் தமது வாழ்நாளில் “லைலத்துல் பராஆ” என்ற வார்த்தையை உச்சரித்தார்கள் என்பதற்குக் கூட எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

-- Abdun Nasir M.I.Sc.,