💥ஷஃபான் மாதம் பற்றிய சட்டங்கள் 💥
~~~~~~~~~~~~~~~~~~~~~
(1) ஷஃபான் மாதம் நோன்பு நோற்பது ஸுன்னத் ஆகும் . ( புஹாரி : 1969 , முஸ்லிம் : 1156 )
(2) ஷஃபான் மாதம் 15க்கு பின், நோன்பு நோற்கவேண்டாம் என்ற ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும் . அதன் அறிவிப்பாளர் தொடரில் " அலாஃ பின் அப்திர் ரஹ்மான்" காணப்படுகின்றார் . அவர் தனித்து அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல .
(3) ஷஃபான் மாதம் 15 வது இரவுக்கு தனிச் சிறப்பு கிடையாது . அது பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் மிகவும் பலவீனமானதாகும் .
(4) ஷஃபான் மாதம் 15 வது இரவில் நின்று வணங்குவது பற்றிய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் ஆகும் .
(5) ஷஃபான் மாதம் நோன்பு நோற்பது ஸுன்னத் ஆகும் . ஆனால் , 15 வது நாளைக் குறிப்பாக்கி , சிறப்புப்படுத்தி நோன்பு பிடிப்பது "பித்அத்" ஆகும் .
(6) ஷஃபான் மாதம், 15 யை சிறப்புப்படுத்தி வணக்கங்கள் செய்யும் பித்அத், ஷாம் தேசத்தில் தோன்றியது . யூதர்கள் " பாவமன்னிப்பு நாள் " என்ற ஒரு நாளை , விரதம் , வணக்கங்கள் மூலம் கழிப்பார்கள் . இதன் தாக்கத்தின் வெளிப்பாடாக , அங்குள்ள சில முஸ்லிம்கள் , ஷஃபான் 15, சிறப்பானது என்றும் , அதில் வணக்கங்களை உருவாக்கியுள்ளார்கள் . இதனை அக்காலத்தில் வாழ்ந்த மதீனா உலமாக்கள் வன்மையாகக் கண்டித்தார்கள் .
(மேலதிக தகவல்களை , ஷாபி மத்ஹபைச் சேர்ந்த , மிக முக்கியம் வாய்ந்த இமாம், இப்னு ஹஜர் ஹைத்தமி அவர்கள் எழுதிய " அல் ஈலாஹ் வல் பயான் என்ற நூலிலும் , அந்நூலின் எனது முன்னுரை , அடிக்குறிப்புகள் , முடிவுரையிலும் பெற்றுக்கொள்ளலாம் )
டாக்டர் அஷ்ஷைஹ் அஹ்மத் அஷ்ரப் (இலங்கை)
பேராசிரியர்,
ஹதீஸ் துறை,
நஜ்ரான் பல்கலைக்கழகம்
சவூதி அரேபியா.