மனித ஆசைக்கு முடிவு எங்கே?
கிடைத்தவற்றில் திருப்தி அடைவதை விட, கிடைக்காதவற்றை அடைய வேண்டும் என்ற ஆசை மனிதனை தொடர்ந்து ஓட வைக்கிறது.
✍️✍️நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"ஆதமின் மகனுக்கு ஒரு பள்ளத்தாக்கு அளவு தங்கம் இருந்தாலும், அவன் இன்னொரு பள்ளத்தாக்கு (தங்கம்) தனக்கு வேண்டும் என்று விரும்புவான். அவனுடைய வாயை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது. மேலும் தவ்பா செய்பவரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்."
(ஸஹீஹ் புகாரி 6439)
மனிதன் செல்வத்தைத் தேடுகிறான்…
பதவியைத் தேடுகிறான்…
புகழைத் தேடுகிறான்…
உலக இன்பங்களைத் தேடுகிறான்…
ஆனால் ஆசைக்கு ஒரு எல்லை வைக்கவில்லை என்றால், அவன் கையில் எவ்வளவு இருந்தாலும் அவன் மனம் ஏழையாகவே இருக்கும்.
உண்மையான செல்வம் பொருட்களின் அதிகரிப்பு அல்ல; மனதின் திருப்தியே ஆகும்.
✍️✍️நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்
(ஸஹீஹ் புகாரி 6446,)
இந்த உலகில் நாம் சேர்ப்பது அனைத்தும் ஒருநாள் நம்மை விட்டு பிரியும்.
ஆனால் அல்லாஹ்விடம் நாம் அனுப்பி வைக்கும் நற்காரியங்களே நிரந்தரமாக இருக்கும்.
எனவே…
கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குவதற்கு முன், அல்லாஹ் கொடுத்திருக்கும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்.
ஏனெனில்…
ஆசைக்கு முடிவு இல்லை; ஆனால் வாழ்க்கைக்கு முடிவு உண்டு. உலகம் தற்காலிகமே!மறுமையே நிலையானது.
மறுமைக்கு முடற்சிப்போம்🤲
- Abdun Nasir M.I.Sc.,