பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, June 27, 2010

அழகிய கடனும் அர்ஷின் நிழலும்

அழகிய கடனும் அர்ஷின் நிழலும்

வியாபாரம் செய்வதற்காக நாடார் சமுதாயத்தில் பொருள் கடன் கொடுத்து உதவுகின்றார்கள். அதல பாதாளத்தில் கிடப்பவனுக்கு பொருளாதாரம் எனும் மலை உச்சியில் இருப்பவர்கள் கடன் எனும் கயிறு கொடுத்து, கை கொடுத்து உதவுகின்றார்கள்.


உலகையே குறிக்கோளாகக் கொண்ட அந்தச் சமுதாயம் இந்த நல்ல காரியத்தைச் செய்கின்றது. ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்ட இந்தச் சமுதாயம் இதைக் கண்டு கொள்ளவேயில்லை.

இஸ்லாமிய மார்க்கம் ஐந்து நேரத் தொழுகையின் மூலம் கூட்டுத் தொழுகையைத் தந்து சமுதாயத்தின் உறுப்பினர்கள் படும் அவதிகளைக் கண்டு கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பள்ளிக்கு வரக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமின் வாழ்க்கை எப்படிக் கழிகிறது என்பதைக் கணக்கில் கொள்ளச் செய்கிறது. இது அல்லாமல் ஒரு முஸ்லிம் தன் அண்டை வீட்டுக்காரருக்கு, தன் வீட்டில் ஆக்கிய உணவுகளை வழங்கச் செய்து அவர் எப்படி காலம் தள்ளுகிறார் என்று பக்கத்து வீட்டுக்காரரின் பிரச்சனையை இஸ்லாம் பார்க்கச் செய்கிறது. இன்று நம்முடைய சமுதாயம் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது கிடையாது.


(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன்2:273)

தன் சமுதாயத்தில் உள்ள சகோதரன் என்ன சிக்கலில் சிரமத்தில் இருக்கிறான்? என்று பார்த்து அல்லாஹ் உதவச் சொல்கிறான். இவ்வாறு கண்டறியாதவர்களை அல்லாஹ் அறிவிலி என்கின்றான். அல்லாஹ் தனது வசனத்தில் கூறியது போன்று அடுத்தவரிடம் வாய் திறந்து யாசிக்காமல் இருப்பவர்களை, அவர்கள் வாய் திறந்து யாசிக்க வைக்காது உதவச் சொல்கின்றது இஸ்லாம். ஜகாத்’ எனும் பொருளாதாரத்தை இது போன்றவர்களுக்கு வழங்கச் சொல்கின்றது.

இன்று இஸ்லாமிய சமுதாயக் கூட்டமைப்பில் இது போன்ற நற்பணிகளெல்லாம் அரிதாகிப் போய் விட்டது. விபச்சாரம் என்ற வாசலை அடைத்த இஸ்லாம் மனிதனின் உடற்கூறுகளைக் கவனித்து ஒன்றுக்கு மேல் நான்கு வரை திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. அது போல் யாசகம் கேட்கும் பாதையை அடைத்த இஸ்லாம் ஜகாத், தான தர்மம், கடன் போன்ற வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றது.

தொழிலுக்கு யாரேனும் வந்து கடன் உதவி கேட்கும் போது கொடுக்கும் நிலையில் உள்ளவரின் உள்ளத்தில் உதிக்கின்ற முதல் எண்ணம் இவன் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் என்ன செய்வது? என்பது தான். இந்த எண்ணத்திற்கு அவர் வலுவூட்டினால் நிச்சயமாக அவர் கொடுக்க மாட்டார். இப்படிப்பட்டவர் ஏதேனும் ஒன்றில் ஏமாந்ததும் அன்று அவன் கடனாகக் கேட்டானே, அவனுக்குக் கொடுத்திருந்தாலாவது, நம்முடைய பணம் அவனிடம் கடனாக நின்றிருக்குமே என்று பின்னால் யோசிப்பார். இது ஒரு நிலை.

கொடுக்கும் நிலையில் உள்ளவரின் சிந்தனைப் பொறியில் தட்டுகின்ற இன்னொரு சிந்தனை என்னவெனில், நாம் இவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து நம்முடைய அந்தத் தொகையில் இவன் முன்னேறுவதை விட நாமே அந்தத் தொகையைப் பயன்படுத்தி முன்னேறினால் என்ன? என்ற எண்ணம் ஏற்படுவது மற்றொரு நிலை. இது போன்ற எண்ணம் ஏற்படுவது இயல்பானது தான்.

 மறுமையில் கிடைக்கும் மகத்தான கூலி இஸ்லாத்தில் எல்லாமே மறுமையை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன. ஒருவர் அடுத்தவருக்காகக் கொடுக்கும் அந்தத் தொகையில் இவரே தன்னை வளர்க்கலாம். ஆனால் இவர் அடுத்தவருக்காகக் கொடுக்கின்ற இந்த தொகைக்குரிய நன்மைகளையெல்லாம் மறுமையில் அல்லாஹ் இவருக்கு வழங்கி விடுகின்றான். எல்லாவற்றிற்குமே அல்லாஹ்விடம் கூலி உண்டு. கொடுப்பவர் அல்லாஹ்வுக்காகவே கொடுக்க வேண்டும். ஒரு வேளை கடன் பெற்றவர் நட்டம் அடைந்து விட்டால் அந்தத் தொகையை மீட்பதற்காக வட்டிக்காரனைப் போன்று இரக்கமற்ற அரக்கக் குணம் கொண்டவனாக நடந்து விடக் கூடாது. ஒன்று அவகாசம் கொடுக்கலாம். அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்து விடலாம். இந்த இரண்டிற்கும் மறுமையில் கிடைக்கும் நன்மையைப் பார்ப்போம். “அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும், (கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது, “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.
அறிவிப்பவர்: சுலைமான் பின் புரைதா (ரலி), நூல்: அஹ்மத்

உதாரணமாக நஸீர் என்பவர் ஜலீல் என்பவருக்கு ஜனவரி 2005 முதல் தேதி பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுக்கின்றார். அவர் அளிக்கும் அவகாசம் ஒரு வருடம். அதாவது டிசம்பர் 2005 வரை தவணை எனில், ஒவ்வொரு நாளும் கடன் கொடுத்தவர் இந்தப் பத்தாயிரத்தைத் தர்மம் செய்தவர் போல் ஆகின்றார். டிசம்பர் 2005 தாண்டிய பிறகும் கடன் பெற்றவர் திரும்பத் தரவில்லை. அவருடைய கஷ்டத்தைப் புரிந்து கொண்டு கடன் கொடுத்தவர் 2006 டிசம்பர் வரை அவகாசம் அளிக்கின்றார் எனில் அவர் ஒவ்வொரு நாளும் ரூ.20,000/- தர்மம் செய்தவர் போலாகின்றார்.

வட்டியை ஒரேயடியாக வெட்டி வீழ்த்தும் மார்க்கம் எந்த அளவுக்கு நன்மைகளை அள்ளி அபரிமிதமாக அளவுக்கதிகமாக வழங்குகின்றது என்று பாருங்கள். மனிதன் இலாப நட்ட கணக்குப் பார்க்கும் மனநிலை கொண்டவன் என்பதாலும் கடன் வழங்கியவர் அந்தத் தொகையைத் தன் தொழிலுக்காகப் பயன்படுத்தி இலாபம் சம்பாதிப்பதை தியாகம் செய்கின்றார் என்பதாலும் அல்லாஹ் மறுமையில் இவருக்குக் கூலியாக வாரி வழங்குகின்ற சன்மானங்களைக் கவனியுங்கள்.

இதைச் செல்வந்தர்கள் கைக்கொண்டிருந்தால் ஏழைகள் எத்தனை வளங்களையும், நலங்களையும் பெற்றிருப்பார்கள் என்று நாம் எண்ணிப் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கடன் தொடர்பான விவகாரங்களில், வழக்குகளில் அல்லாவின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அணுகுமுறையைக் கையாளுகின்றார்கள்.

“இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் கொடுத்திருந்த கடனைப் பள்ளிவாசலில் வைத்து நான் கேட்டேன். எங்கள் இருவரின் குரல்கள் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தமது அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து “கஅபே!” என்று கூப்பிட்டார்கள். “இதோ! வந்தேன். அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “பாதி” என்பதைக் காட்டும் விதமாக சைகை மூலம் காட்டி “உமது கடனில் இவ்வளவை தள்ளுபடி செய்வீராக” என்று கூறினார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். “எழுவீராக! பாதியை நிறைவேற்று வீராக” என்று (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஃப் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி

தர்மங்களைப் பெற்றேனும் தள்ளுபடி செய்தல்

நபி (ஸல்) அவர்கள் கடன் பட்டவர்களைக் கண்டு வாளாவிருந்ததில்லை. உடனே அவருடைய கடனைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளைக் காண ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பழங்கள் வாங்கிய வகையில் ஒருவரது கடன் அதிகமாகி அவர் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபித் தோழர்களை நோக்கி) “அவருக்குத் தர்மம் செய்யுங்கள்” என்றார்கள். ஆனால் வசூலான தொகை கடனைப் பூர்த்தி செய்யுமளவுக்கு எட்டவில்லை. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் அவருடைய கடன்காரர்களிடம், “கிடைத்ததை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதைத் தவிர வேறு எதுவுமில்லை” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரி (ரலி) நுல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கடன்பட்டவருக்காகத் தர்மங்களைப் பெற்றேனும் கடனைச் செலுத்தியிருப்பதை நாம் காண முடிகின்றது. இன்று கடன்பட்டவர்கள் நடுத்தெருவில் உள்ள அரண்மனை போன்ற வீடுகளை விற்று விட்டுச் செல்வதை சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஏழைக்கு இரங்கியவருக்கு இறைவன் இரங்குதல்

அல்லாஹ்வின் அடியார்களிலிருந்து ஓர் அடியார் அவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனால் அவரிடம், “உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய்?” என்று அல்லாஹ் கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, “அல்லாஹ்விடத்தில் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க மாட்டார்கள்” என்ற (4:42) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதற்கு அடியான், “என்னுடைய ரட்சகனே! உன்னுடைய பொருளை எனக்கு வழங்கினாய். மக்களிடம் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கடன்பட்டவருக்கு (கடனை) தள்ளுபடி செய்வது என்னுடைய குணமாகும். அதனால் (கடன்பட்ட) பணக்காரரிடம் நளினமாகவும், (கடன்பட்ட) வறியவருக்கு தவணையும் அளித்துக் கொண்டிருந்தேன்” என்று பதிலளித்தார். உடனே மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ், “இந்த அடியானை விட நான் மிகவும் உரிமை படைத்தவன். எனவே, இந்த அடியானின் பாவத்தைக் கண்டு கொள்ளாது விட்டு விடுங்கள்” என்று (மலக்குகளிடம்) கூறுகின்றான். அறிவிப்பவர்: ரிப்ஈ பின் ஹிராஷ் (ரலி) நுால்: முஸ்லிம் 2920


இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் புகாரியிலும் பல இடங்களில் இடம் பெறுகின்றது. ஐங்காலத் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றைச் செய்தால் போதும் சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்பி இத்தகைய வணக்கங்களைச் செய்கின்றோம். ஆனால் இது போன்ற சமுதாயச் சேவையின் மூலம் சொர்க்கம் செல்வதைக் காணத் தவறி விடுகின்றோம். எனவே, நாம் செய்யும் வணக்க வழிபாடுகளுடன் இந்தச் சேவையையும் செய்கின்ற போது இது நம்மை சுவனத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றது.

அர்ஷின் நிழலில்… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த ஹதீஸுக்கு அப்படியே செயல் வடிவம் கொடுத்தனர்.


அபூகதாதா (ரலி)யிடம் ஒருவர் கடன் பட்டிருந்தார். கடனைக் கேட்டு அவரிடம் செல்லும் போது அவர் ஒளிந்து கொள்வார். ஒரு நாள் (அவ்வாறு) வந்த போது சிறுவன் வெளியே வந்தான். அவனிடம் அவரைப் பற்றி விசாரித்த போது “ஆம் வீட்டில் கஸரா (இறைச்சியும் மாவும் கலந்த சூப்) சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்” என்று சொன்னார். உடனே அபூகதாதா (ரலி) “இன்னாரே! வெளியே வந்து விடு. நீ அங்கு தான் இருக்கிறாய் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது” என்று சொன்னார், அவர் வெளியே வந்ததும் “நீ என்னை விட்டும் ஒளியக் காரணம் என்ன?” என்று கேட்டார். “என்னிடம் (ஒன்றும்) இல்லை. நான் கஷ்டப்படுகிறேன்” என்று சொன்னார். இதைக் கேட்ட அபூகதாதா (ரலி) அழுதார்கள். பிறகு “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஹம்மது பின் அல்குரளி நூல்: அஹ்மத்

இதே கருத்தில் முஸ்லிமிலும் ஹதீஸ் இடம் பெறுகின்றது. கடன் பட்டவர் தான் அழ வேண்டும். ஆனால் மேற்கண்ட இந்த ஹதீஸில் கடன் கொடுத்தவரான அபூகதாதா (ரலி) அழுகின்றார்கள். இதை எங்கேனும் நாம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உருவாக்கிய தோழர்களின் கூட்டத்தில் உள்ள அபூகதாதா (ரலி) அவர்கள் கடன்பட்டவர் படும் கஷ்டத்தைக் கண்டு அழுகின்றார். இப்படி இந்தச் சமுதாயம் சஹாபாக்களின் வழியில் ஆக்கம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இன்று கடன் கொடுத்தவர் கடன் பட்டவரிடம் காட்டு மிராண்டித்தனமாக நடப்பதைப் பார்க்கின்றோம். வாயில் வரும் வார்த்தைகளைத் திட்டி தீர்ப்பதை, தனது கொதிப்பைக் கொட்டி வார்ப்பதையும் பார்க்கின்றோம். நாக்கை பிடுங்கி சாகக் கூடாதா? தூக்கு மாட்டி தொங்கக் கூடாதா? என்று நெருப்புக் கங்குகளை அள்ளி வீசுகின்றார்கள். அரசாங்கம் ஜப்தி செய்வதைப் போன்று தட்டுமுட்டு சாமான்களைத் தெருவில் வீசி எறிந்து, ஏற்கனவே. நாணி, கூனி குறுகி நிற்கும் கடன்பட்டவர் கடுமையாக அவமானப் படுத்தப்படுகின்றார். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் தோழர் அபூகதாதா (ரலி) நபி (ஸல்) அவர்கள் காட்டிய பாதையில் ஊட்டிய போதனையில் நடந்து கொள்கின்றார். இந்த ஹதீஸில் அபூகதாதா (ரலி) தவணை யளித்தார்களா? அல்லது தள்ளுபடி செய்தார்களா? என்ற குறிப்பு நமக்கு கிடைக்கவில்லை.


பின் வரும் புகாரி ஹதீஸின் படி அபூகதாதா (ரலி) அவர்கள் கடனைத் தள்ளுபடி செய்யும் பண்பாளர் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. அந்த அடிப்படையில் இங்கும் அவர்கள் நிச்சயமாகக் கடனைத் தள்ளுபடி செய்திருப்பார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். இது பற்றி இன்னொரு ஹதீஸைப் பார்ப்போம். ஹராமிய்யா கிளையைச் சார்ந்த இன்னார் மகன் இன்னாரிடம் எனக்குத் தரவேண்டிய பணப் பற்று உள்ளது. நான் அவருடைய குடும்பத்தாரிடம் சென்று ஸலாம் சொல்லி “அவர் இங்கிருக்கின்றாரா?” என்று கேட்டேன். வீட்டினர் “இல்லை” என்று பதிலளித்தனர். அப்போது வீட்டிலிருந்து விடலைப் பையன் ஒருவன் வெளியே என்னை நோக்கி வந்தான். நான் அவனிடம், “உன்னுடைய தந்தை எங்கிருக்கின்றார்?” என்று கேட்டேன். “உங்களுடைய சப்தம் கேட்டதும் என் தாயாரின் படுக்கை அறை கட்டிலுக்குச் சென்று விட்டார்” என்று பதில் சொன்னான். உடனே நான் (அவரை நோக்கி) “எங்கிருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். வெளியே என்னிடம் வந்து விடு” என்று கூறினேன். உடனே அவர் வந்தார். “நீ என்னை விட்டு ஒளிய வேண்டிய காரணம் என்ன?” என்று கேட்டேன் அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களிடத்தில் பொய் சொல்லவும் வாக்களித்து விட்டு உங்களுக்கு மாறு செய்வதையும் பயந்தேன். (அதனால் தான் ஒளிந்தேன். இந்த விஷயத்தில்) நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழராவீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீ கஷ்டப்படுபவனா? என்று நான் கேட்டேன். அவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கஷ்டப்படுபவன் தான் என்றார். அபுல் யஸார் (ரலி) யிடமிருந்து இதை அறிவிக்கும் உப்பாதா பின் ஸாமித் (ரலி)யின் மகன் தொடர்ந்து கூறுகின்றார். அவருடைய கணக்குச் சீட்டைக் கொண்டு வந்து அதைத் தன் கையால் அழித்து விட்டு (கடன்பட்டவரை நோக்கி) திருப்பிக் கொடுக்கும் வசதியைப் பெற்றால் எனக்கு (அதை) நிறைவேற்றிவிடு. “(கடன்பட்டு) கஷ்டப்படுபவருக்கு யார் அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவரை அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலில் நிறுத்தி நிழலிடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லும் போது அவர்களை (தன் கண்களைச் சுட்டிக்காட்டி) என்னுடைய இரு கண்களின் பார்வை பார்த்தது. அவர்கள் சொன்னதை என்னுடைய செவிப் புலன் செவியுற்றது. அதை இந்த மனம் மனனம் செய்தது என்று நான் சான்று கூறுகின்றேன் என்று அபுல் யஸார் (ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸில் வாங்கிய கடனைத் தரவில்லையே என்று இந்த நபித்தோழர் கோபப்படுகின்றார். அதன் பின் நிதானமாகி நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளை நினைத்துப் பார்க்கின்றார்கள். உச்சந்தலைக்கு மிக நேராக மிக நெருக்கமாக வரும் உதய சூரியன் மறுமை நாளில் மூளையை உருகச் செய்யும் அவ்வேளையை ஒரு கணம் தனது எண்ண ஓட்டத்தில் ஓட விட்டுப் பார்த்து, அபூயஸார் (ரலி) கடனாளியை விட்டு விடுகின்றார்.

கடன் கொடுக்கும் நிலையில் உள்ளவர்கள், கடன்பட்டவர் கொடுக்க முடியாவிட்டால் இது போன்று தள்ளுபடி செய்யும் மனப் பாங்குள்ளவர்களாக நமது சமுதாயத்தில் உருவாக வேண்டும். அப்போது தான் இந்தச் சமுதாயம் சீரும் சிறப்பும் பெறும்.

இதையெல்லாம் இங்கே கூற வேண்டிய காரணம் மறுமையை நம்பிய முஸ்லிம்கள் மறுமைக்காக கடன் கொடுப்பதில்லை. உலகத்தின் லாப நட்டக் கணக்கைப் பார்த்து, தன்னிடம் பொருளிலிருந்தும் கொடுக்க மறுத்து விடுகின்றனர். என்ன தான் நெருக்கமாக இருந்தாலும். எவ்வளவு தான் பழகியிருந்தாலும் நாம் கடன் என்று கேட்டதும் செல்வந்தர்கள் நம்மை ஏற இறங்கப் பார்க்கின்றார்கள் இவரெல்லாம் திரும்பத் தரப்போகிறாரா? என்று எத்தனையோ இழிவான எண்ணங்களைக் கடன் கேட்ட நொடிப் பொழுதில் கொண்டிருக்கின்றார் என்று அவரது பார்வை நமக்குப் புலப்படுத்திக் காட்டுகின்றது.

அந்த நேரத்தில் கடன் கேட்ட நாம் நொந்து நுாலாகப் போய் விடுகின்றோம். ஏதோ பழகிய நண்பராலேயே அவர் நம் மீது கொண்டிருக்கும் பாரதூரமான பலவீன எண்ணத்தாலேயே, அவர் நம்மை ஒரு பெரும் மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விட்ட ஒரு பிரமையை உணர்கின்றோம். மறுமையின் நம்பிக்கை பிரதிபலிக்குமேயானால் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் அரவணைப்பு என்ற அருட்கொடையை எண்ணிப் பார்ப்போமானால் இதுவெல்லாம் எம்மாத்திரம் என்றாகி விடும். இப்படி ஒரு நிலை சமுதாயத்தில் நீடிக்குமானால் வங்கிப் பக்கம் வட்டி வாங்க எவருமே சென்றிருக்க மாட்டார்கள். எத்தனையோ சகோதரர்கள் பீடி, லாட்டரி, மது, வட்டி போன்ற தொழில்களை விட்டு வெளியே வரத் துடிக்கின்றனர். வங்கியில் வளமான இருப்பு வைத்திருக்கும் வசதிமிக்க சீமான்கள் இவர்களுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து உலகத்தில் அனுபவிக்கும் நரக வாழ்க்கையை விட்டும் மறுமை உலக நரக வாழ்க்கையை விட்டும் பாதுகாக்க, கடன் கொடுத்துக் கை தூக்கி விட மறுக்கின்றனர்.

அப்படியே கடன் கொடுத்த பின் கடன்பட்டவர் கடனைச் செலுத்தாமல் தவிக்கும் போது அதைத் தள்ளுபடி செய்ய முன் வருவதில்லை. அத்தகையவர்கள் மன நிலையில் மேற்கண்ட ஹதீஸ்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பது இந்தக் கட்டுரையின் பலமான எதிர்பார்ப்பு. இதை ஒவ்வொருவரும் தன்னுடைய உறவினரிடமிருந்து துவங்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தனது குடும்பத்திலிருந்து துவங்கி விட்டால் நிச்சயமாக அது சமுதாய மாற்றமாகப் பரிணமிக்கும். ஏனெனில் பல குடும்பங்களின் சங்கமம் தான் ஒரு சமுதாயம். அது தான் நாம் எதிர்பார்க்கும் சஹாபிய சமுதாயமாகும்.


--------------நன்றி டி.என்.டி.ஜே நெட்

கடன் தள்ளுபடி


கடன் தள்ளுபடி



மனிதனை இவ்வுலகில் படைத்த அல்லாஹ், அவர்களை செல்வந்தர்களாகவும் ஏழைகளாகவும், நடுத்தர வர்க்கத்தினராகவும் படைத்துள்ளான். இவ்வாறு படைத்த இறைவன் செல்வந்தர்களாக இருப்பவர்கள், ஏழைகளாக இருப்பவர்களுக்கு உதவுமாறும் கட்டளையிட்டுள்ளான்.




''ஒரு முஸ்லி­ம் மற்றொரு முஸ்­லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லி­மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்­லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (2442)

இவ்வுலகில் ஏழைகளே அதிகமாக வாழுகின்றனர். அவர்களின் வாழ்க்கையை பெரும்பாலும் சிரமத்துடனே கழிக்கின்றனர். இவர்களின் சிரமத்தைக் குறைக்கும் பணியில் ஒவ்வொரு முஸ்லி­மும் ஈடுபட வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் இருப்பிடத்திற்காக, நோய் நொடிகளுக்க ஏராளமான பணம் தேவைப்படுகிறது. இதற்காகக் கடன் பெற்றுச் செலவழிக்கும் இந்த ஏழைகள் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லது முழுமையாக கடனை திருப்பிச் செலுத்த வசதியில்லாத நிலையில் இருக்கின்றனர்.

இவ்வாறு தவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளின் கடன்களை திருப்பிக் கேட்கும் போது மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.

''வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், உரிமையைக் கேட்கும் போதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ர­லி) நூல்: புகாரி (2076)

இதைப் போன்று கால அவகாசம் கேட்பவருக்குக் கால அவகாசம் கொடுப்பதும், திருப்பிச் செலுத்த முடியாத ஏழைகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதும் நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியை ஏற்படுத்தும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரிடம் (உயிரைக் கைப்பற்றும்) வானவர் அவரது உயிரைக் கைப்பற்றிச் செல்ல வந்தார். அந்த மனிதரிடம் (உன் வாழ்நாளில்) ''நீ ஏதாவது நன்மை செய்திருப்பதாக அறிந்திருக்கின்றாயா?'' என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், (அப்படி எதுவும்) எனக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார். (நன்மை ஏதாவது செய்திருக்கின்றாயா? என்று) சிந்தித்துப் பார் என்று கூறப்பட்டது.

அவர், ''அப்படி எதுவும் (நன்மை) செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உலக மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். அப்போது அவர்களிடம் நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பேன். அப்போது, வசதியுள்ளவருக்கு (கடனை அடைக்க) அவகாசம் தருவேன். வசதியுல்லாதவரை மன்னித்து (கடனை தள்ளுபடி செய்து) விடுவேன்'' என்று பதிலளித்தார். அதன் காரணத்தால் அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தில் புகுத்தினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைஃபா (ர­லி) நூல்: புகாரி 3451, அஹ்மத் 22263

(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால் தமது பணியாளர்களிடம், ''இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும்'' என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி (2078)

முற்காலத்தில் வாழ்ந்த ஒருவர் எந்த நல்லறமும் செய்யாமல் இருந்தும் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் காரியத்தில் ஈடுபட்டதால் அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, சொர்க்கத்தில் நுழையச் செய்துள்ளான்.

ஏழைகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தால் அல்லாஹ் நமது பாவங்களை தள்ளுபடி செய்வான் என்ற அவரின் நல்லெண்ணத்திற்குக் கூ­யாக அல்லாஹ் அவர் விருப்பப்படியே அவரின் பாவங்களை மன்னித்துள்ளான்.

செல்வந்தராக உள்ளவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல ஆசைப்பட்டால் ஏழைகளுக்குக் கடன் கொடுத்து உதவுங்கள். இந்தக் கடனைக் கூட இறைவனுக்குக் கொடுக்கும் கடனாக அல்லாஹ் கூறுகின்றான்.


அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 2:245)

ஏழைகளுக்கு வழங்கும் கடன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அல்லாஹ் மறுமை நாளில் வழங்குவான். மேலும் அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்து நன்மை புரிந்தால் நாம் எதிர்பார்க்கும் சொர்க்கத்தைக் கூட வழங்குவான். இந்த நற்காரியத்தை எப்போதும் விட்டு விடாதீர். நன்மை இழந்து விடாதீர்.

இடையூறுகளை அகற்றுதல்

இடையூறுகளை அகற்றுதல்

சிறிய காரியங்கள் என்று நாம் கருதும் பல செயல்களை நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் என்ற மிகப் பெரிய பரிசை அள்ளித் தரும் காரியமாகக் காட்டியிருக்கிறார்கள். அதில் ஒன்று தான் மக்களுக்கு இடையூறு தரும் பொருட்களை அகற்றுவதாகும்.


ஒரு மனிதர் வழியில் இருந்த முள் மரத்தைக் கடந்து சென்றார். அப்போது, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது முஸ்லிம்களுக்குத் தொல்லை தரக் கூடாது என்பதற்காக இதை அவர்களை விட்டும் அகற்றுவேன்'' என்று கூறி (அதை நிறைவேற்றி)னார். இதனால் அவர் சுவர்க்கத்தில் நுழைக்கப்பட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4744)

மக்களுக்குத் தொல்லை தரும் விதமாக இருந்த முள் மரத்தை வெட்டியெடுத்து, மக்களுக்கு நல்ல பாதையை அமைத்துக் கொடுத்ததன் காரணமாக ஒருவர் சுவர்க்கம் செல்ல முடிந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்று மக்களுக்குத் தொல்லை தரும் வீதிகள் ஏராளம் உள்ளன. இதைக் கடந்து செல்லும் செல்வந்தர்களும் ஏராளம் உள்ளனர். ஆனால் எவருக்கும் நல்ல வீதிகளை அமைத்துக் கொடுக்கும் எண்ணம் வருதில்லை.

குறுகலான பாதைகள், கரடு முரடான தெருக்கள் என்று ஏராளமான தொல்லைகளை சாதாரண வகுப்பு மக்கள் வசிக்கும் பகுதிகளில் காண முடிகின்றது. இவற்றையெல்லாம் சரி செய்யும் பொறுப்பும் கடமையும் இறை நம்பிக்கை உள்ள, தகுதி படைத்தவர்களுக்கு உள்ளது.

இடையூறை அகற்றுதல் என்ற சின்னச் சின்ன உதவிகள் மூலம் சொர்க்கம் என்ற மிகப் பெரிய பரிசைப் பெற முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மேலும் வீதிகளில் தொல்லை தரும் வண்ணம் கற்கள், முற்கள் இருந்தால் அதைப் பார்த்தும் பார்க்காதது போல் செல்லாமல் அதை அகற்ற வேண்டும். சாலைகளில் பாதாளச் சாக்கடையின் மூடிகள் திறந்து இருந்தால் அதை மூடிச் செல்ல வேண்டும். இந்தக் காரியங்களும் தர்மமாகக் கணக்கில் கொள்ளப்படும்.

''வீதியில் உள்ள இடையூறு தரும் பொருட்களை அகற்றுவதும் தர்மமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (2989)

''வீதிகளில் இடையூறு தரும் பொருட்களை அகற்றுவது ஈமானில் உள்ளது'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம் 58

வீதிகளில் உள்ள இடையூறுகளை அகற்றுவது இறை நம்பிக்கையாளர்களின் கடமை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க, முஸ்­ம்லிகளே இதற்கு மாற்றமாக நடந்து கொள்கிறார்கள்.

வீடு கட்டுகிறேன் என்ற பெயரில் வீட்டின் முன்னர் கற்களையும் மண்ணையும் குவித்து, பாதைகளை அடைக்கின்றனர். வீதிகளில் குப்பைகளைக் கொட்டுகின்றனர். இதன் மூலம் வருவோர், போவோருக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக வயது முதிந்தோர் செல்லும் போது கற்களினால் தடுமாறி விழ நேரிடுகிறது.

வீடு கட்டுவோர் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், ஓரங்களில் கல்லையும் மண்ணையும் போட வேண்டும். நடு வீதிகளுக்கு வரும் கற்கள் மற்றும் மண்ணை அவ்வப்போது ஓரங்களில் கொண்டு சேர்த்து வழியில் செல்வோருக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குப்பைகளை குப்பைத் தொட்டிகளிலேயே போட வேண்டும்; வீதிகளில் கொட்டக் கூடாது.

அடுத்தவர்களுக்கு இடையூறு தரும் வண்ணம் வீதிகளில் சிக்கலை ஏற்படுத்தாமல் இருப்பதுடன், இடையூறு உள்ள இடங்களில் நம்மால் முடிந்த அளவு அந்த இடையூறுகளை அகற்றி, அதன் மூலம் சொர்க்கம் என்ற பரிசைப் பெற முயற்சி செய்வோம்.

குழந்தைகளை எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது?


குழந்தைகளை எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது?

புதிய கல்வியாண்டு துவக்கத்தில் நாம் இருக்கிறோம். தம்முடைய குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கும், தாம் பெற்ற கஷ்டங்களைத் தங்கள் குழந்தைகள் பெறா வண்ணம் தடுக்கவும், அவர்களின் தரத்தை கல்வியின் மூலம் உயர்த்துவதற்கும் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.


தன்னுடைய குழந்தைகள், பிற குழந்தைகளை காட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் அவர்கள் தேர்ந்தேடுக்கும் துறையில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவக்கப் பள்ளியில் சேர்க்கும் போதே,

தன்னுடைய குழந்தையை சாதனையாளராக மாற்றும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோர்களின் உள்ளத்திலும் உதிக்கிறது.

இந்த ஆசை நியாயமானது தான். ஆனால் பள்ளிக்கூடங்களால் மாணவர்களின் சேர்க்கைக்காகச் செய்யப்படும் பல கவாச்சியான விளம்பரங்களுக்கு மத்தியில் எந்தப் பள்ளியில் தன்னுடைய குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்ற குழப்பத்தில் பெற்றோர்கள் ஆழ்ந்து விடுகின்றனர்.

ஆங்கில மொழி உலகளாவிய மொழி என்ற அந்தஸ்தை அடைந்திருப்பதால் தாய்மொழியின் நிழல் கூட படாமல் நுனி நாக்கில் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத் தரும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதா? அல்லது தொழில் நுட்ப உலகமான இன்று கம்ப்யூட்டர் உதவியன்றி எதையும் சாதிக்க இயலாது என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிற நிலையில் துவக்கப் பள்ளியிலேயே கம்ப்யூட்டரை கற்றுத் தரும் பள்ளிக்கூடத்தில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்ப்பதா? போன்ற பல குழப்பங்கள் பெற்றோர்களை ஆட்டுகின்றன.

இவற்றிற்கு மத்தியில் முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை மார்க்க ரீதியாக யோசிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கல்வியை கற்றுத் தருகிறோம் என்ற போர்வையில் மாற்று மதக் கலாச்சாரத்தையும், ஆடைகளை உடுத்துவது முதல் பல ஒழுக்கக் கேடுகளை பிஞ்சுகளின் மனதில் பதிவது போன்ற பல சீர்கேடுகளை ஏற்படுத்துகின்ற பள்ளிக்கூடங்களில் நம்முடைய குழந்தைகளைச் சேர்க்க வேண்டுமா? என்பதை ஆழமாக யோசிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நம்முடைய இம்மை வாழ்க்கையின் வெற்றிக்கும் மறுமை வாழ்வின் வெற்றிக்கும் தேவையான கல்வி மார்க்கத்துடன் கூடிய உலகக் கல்வி தான். அதுவும் மார்க்கக் கல்வி என்றால் தூய மார்க்கத்தை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் போதிக்கக்கூடிய கல்வி தான்.

இவ்வாறு மார்க்கத்துடன் கூடிய உலகக் கல்வியைப் பெறும் குழந்தைகள் வாழ்வில் எந்த வித பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தற்கொலை என்கிற கோழைத்தனமான முடிவை நாடாமல் உறுதியுடன் பிரச்சனைகளை சந்திப்பவர்களாகவும், பெற்றோர்களை மதித்து அவர்களுக்கு நல்ல முறையில் சேவை செய்பவர்களாகவும், சமுதாயத் தீமைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வாறு வளர்க்கும் பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகும் நிரந்தரக் கூ­யை பெற்றுத் தரும் கேடயமாகவும் மாறுவார்கள் என்பது திண்ணம்.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுடைய அமல்கள் அனைத்தும் நின்று விடுவின்றன. மூன்றை தவிர!

1. நிரந்தரப் பயன் தரும் தர்மம்
2. பயன் தரக்கூடிய கல்வி
3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் நல்ல குழந்தைகள்
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ர­லி) நூல்: முஸ்­லிம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபிமொழியில் பெற்றோர்களுக்காகப் பிரார்த்திக்கும் சா­ஹான (நல்ல) குழந்தைகள் மரணத்திற்குப் பிறகும் நிரந்தரக் கூ­யை பெற்றுத் தரும் கேடயமாக இருப்பார்கள் என்று தெளிவாக விளக்கப்படுகிறது. வல்ல அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் சா­ஹீன்கள் யார் என்ற விளக்கத்தைப் பின்வருமாறு தருகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)

எனவே உலகக் கல்வியுடன் தூய்மையான மார்க்கத்தைப் போதிக்கக்கூடிய கல்விக் கூடத்தில் நம்முடைய குழந்தைகளைச் சேர்த்து, வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியபடி மேற்கூறிய பண்புகளுடன் நம்முடைய குழந்தைகளை வளர்த்து, ஈருலக வெற்றியைப் பெற முயற்சிப்போமாக! வல்ல ரஹ்மான் அதற்குத் துணை புரிவானாக!

மாற்றுமதத்தவர்கள் குர்ஆனைத் தொடலாமா?



ஒரு முஸ்லிம் பத்திரிகையில் மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடலாமா? என்ற கேள்விக்கு கூடாது, ஹராமாகும் என்று பதிலளித்துள்ளார்கள். இது சரியா? தவறாக இருந்தால் விரிவாக விளக்கவும். எஸ். ராமதாஸ், தஞ்சாவூர்லி 6.




அந்தப் பத்திரிகையில் கூறப்பட்ட பதில் தவறு மட்டுமல்ல! வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு பதிலாகும். இது போன்ற குறுகிய சிந்தனைகளால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் தடைக் கல்லாக முஸ்லிம்களே நிற்பது தான் வேதனை!



இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.(அல்குர்ஆன்38:87)


குர்ஆன் மனித சமுதாயம் முழுமைக்கும் வழிகாட்டி என்று கூறக்கூடிய ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. (2:185, 3:138, 14:52, 17:89, 18:54, 30:58, 39:27)

இந்தக் குர்ஆனைச் சிந்திப்பவர்கள் உண்டா? என்று மக்கள் அனைவருக்கும் குர்ஆன் பொது அழைப்பு விடுக்கின்றது. (4:82, 23:68, 47:24, 54:17, 54:22, 54:32, 54:40)

இப்படி முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டியாக அருளப்பட்ட குர்ஆனை முஸ்லிமல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

''வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் ''நாங்கள் முஸ்­ம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 7, 2941

 இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதியிருக்க மாட்டார்கள். எனவே முஸ்லிமல்லாதவர்கள் குர்ஆனைத் தொடலாம்; படிக்கலாம் என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது.

முஸ்லிமல்லாதவர்களிடம் ஒரு வசனத்தை எழுதிக் கொடுப்பதில் தவறில்லை, முழுக் குர்ஆனைத் தான் அவர்கள் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றார்கள். இது அர்த்தமற்ற வாதமாகும். ஒரு வசனத்துக்கு என்ன சட்டமோ அது தான் முழுக் குர்ஆனுக்கும் உள்ள சட்டமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு முழுக் குர்ஆனும் தற்போதுள்ளது போல் மொத்தமாக அருளப்படவில்லை.

சிறிது சிறிதாகத் தான் அருளப்பட்டது. அப்போதும் அது குர்ஆன் என்றே கூறப்பட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது போல், 'மாற்று மதத்தவர்களிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்புகளை வழங்கலாம், அரபு மொழியில் அமைந்த குர்ஆனைத் தான் அவர்கள் தொடக் கூடாது' என்றும் சிலர் கூறுகின்றார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அரபு மொழி மட்டுமே தெரிந்த முஸ்லிமல்லாதவருக்கு எந்த மொழி பெயர்ப்பைக் கொடுக்க முடியும் என்று சிந்தித்தால் இது அர்த்தமற்ற வாதம் என்பதை அறியலாம்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, ''நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில் 279 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமத் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ்ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரது ஹதீஸ் பின்பற்றக் கூடியதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்வூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் முஸ்லிமல்லாதவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது.

ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ இதில் குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

Saturday, June 5, 2010

இணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்

இணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்

முன்னுரை 
அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தி யிருக்கிறான் அப்படியிருக்க வணங்கத் தகுதியான் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்த முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும் அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றாத மூதாதையர்கள்தான், இவர்கள் மார்கத்திற்கு முரணாக கடைபிடித்து வந்த தவறான கொள்கையே ஆகும்.

நம்முடைய மூதாதையர்கள் குர்ஆன் ஹதீஸ்களை தங்களது தாய்மொழியில் உணர்ந்து படித்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்காக மார்க்க அறிவை போதித்து வந்திருந்தால் இந்த இழிவு நம் முஸ்லிம் சகோதரர்களிடம் ஏற்பட்டிருக்காது. எனவே இணைவைத்து வணங்கக்கூடிய சகோதரர்கள் வழிகெட்ட மூதாதையர்களின் மீது கொண்டிருக்கும் அளவுக்கதிகமான பாசம் அவர்களை நரகத்தை நோக்கி நகரச் செய்கிறது.

எனவே மார்க்க அறிவில் மிகவும் பின்தங்கியுள்ள, இணைவைக்கும் சகோதரர்களுக்கு இந்த கட்டுரை உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திவனாக ஆரம்பம் செய்கிறேன்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு கூறும் அறிவுரை
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்குர்ஆன் 7:194) 

இந்த வசனத்தில் கூறப்பட்ட அறிவுரை என்ன?
  • அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக் கின்றீர்களோ

இங்கு அல்லாஹ்வையன்றி என்று கூறப்பட்டுள்ளது எனவே ஆற்றல்கள் அனைத்திற்கும் உரிமையாளன் அல்லாஹ்தான் என்று உணர வேண்டும. அடுத்து எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ என்று கூறப்பட்டுள்ளது இதன் மூலம் அல்லாஹ்வையன்றி எவராக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது என்று உணர வேண்டும்.

  • அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!

இங்கு அவர்களும் என்று கூறப்பட்டுள்ளது அவர்கள் என்றால் அல்லாஹ்வைத் தவிர உள்ள மற்ற அனைத்து படைப்பினங்களும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.  உதாரணமாக நபிமார்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள், மனிதர்கள், ஜின்கள் என்று அல்லாஹ்வின் படைப்பினங்களை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம் அத்தனையும் இந்த அவர்கள் என்ற அர்த்தத்தில் அடங்கிவிடுகிறது.

இதன் அடிப்படையில் இணைவைக்கும் மக்கள் அவ்லியா என்று யாரை கருதுகிறார்களோ அவர்களும் இந்த அவர்கள் என்ற வட்டத்திற்குள் அடங்குகிறார்கள்.

இந்த வசனத்தின் இறுதியில் இணைவைப்பாளர்கள் அழைக்கும் அந்த அவர்களை அழைத்தால் எந்த பதிலும் கிடைக்காது என்று அல்லாஹ் கூறிவிட்டு கூடவே சவால் விடுகிறான்.

எனவே சகோதரர்களே இந்த அவர்கள் என்ற வட்டத்தில் அடங்கும் அல்லாஹ்வின் படைப்பினங்களை நீங்கள் வணங்குவதாக இருந்தால் மறுமையின் கேள்விக்கணக்கு நாளில் அல்லாஹ்வின் சவாலுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்!

அல்லாஹ்வுடைய அந்தஸ்தை எடை போடும் அவலம்!
 எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே! (அல்குர்ஆன் 7:191)

சகோதரர்களே சிந்தித்துப்பாருங்கள் அல்லாஹ்வுக்கு என்று ஒரு அந்தஸ்து உள்ளது.  அருள்புரிவதை அல்லாஹ் தமக்கு கடமையாக்கி வைத்துள்ளான் இந்த அந்தஸ்துக்கு நிகராக யாரேனும் இருப்பார்களா? ஆனால் மக்களில் பலர் அவ்லியாக்கள் என்று கூறிக்கொண்டு அவர்கள் தங்களுக்கு உதவுவார்கள் அருள்புரிவார்கள் என்று கருதுவது நியாயமா? அவ்லியா என்று நீங்கள் கருதும் நபர்களை ஏன் அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துகிறீர்கள். இப்படி கருதுவதால் அல்லாஹ்வின் அந்தஸ்தை நீங்கள் எடைபோடும் குற்றத்திற்கு ஆளாகிறீர்களே இது நியாயமா?

சிந்தித்துப் பாருங்கள்!
  • ஒரு அவ்லியா உயிருடன் இருந்து அவருக்கு நோய் வந்து அவதிப்பட்டால் என்ன செய்வார் இன்னொரு அவ்லியாவை பிரார்த்தித்து அழைப்பாரா அல்லது அல்லாஹ் என்று கண்ணீர்விட்டு அழைப்பாரா?

  • சரி அந்த அவ்லியாவுக்கு நோய் குணமாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்து விட்டு உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகுவாரா? அல்லது தனக்கு சக்தி உள்ளது என்று கூறி தாயத்த கட்டிக்கொள்வாரா? தாயத்து கட்டுவது இஸ்லாத்தில் கூடுமா?

  • அல்லது ஒரு அவ்லியா உயிருடன் இருக்கிறார் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது கழிப்பிடம் சென்று விடுகிறார் அங்கு வாளியில் தண்ணீர் தீர்ந்துவிடுகிறது! உடனே அவர் என்ன செய்வார்? தன்னுடைய பணியாளை கூப்பிட்டு ஒரு சொம்பு தண்ணீர் கொடு என்று சத்த்ம் போட்டு கேட்பாரா? அல்லது தன்னிடம் உள்ள ஆற்றிலின் காரணமாக அந்த அசுத்தம் தானாகவே நீங்கிவிடுமா?

அவ்லியாவின் ஆற்றல் இங்கு ஏன் வெளிப்படுவதில்லை
  • ஒரு அவ்லியா இறந்துவிடுகிறார் உடனே அவருடைய ஜனாஸா தானாகவே எழுந்து நின்று தன்னைத்தானே குழிப்பாட்டிக் கொள்கிறதா? அல்லது அவருடைய ஜனாஸாவை சாதாரண மனிதன் குளிப்பாட்டுகிறானா?

  • அந்த இறந்த அவ்லியாவின் மீது கபன் துணி தானாகவே போர்த்தப்படுகிறதா? மனிதன் போர்த்தி விடுகிறானா?

  • அந்த இறந்த அவ்லியாவுக்கு மனிதர்கள் ஒன்று கூடி ஜனாஸா தொழுகை மேற்கொள்கிறார்களா? அல்லது அந்த அவ்லியாவின் ஜனாஸா தன்னைத்தானே ஜனாஸா தொழுகையை நிறைவேற்றிக்கொள்கிறதா?

  • அந்த இறந்த அவ்லியாவின் ஜனாஸாவை மனிதர்கள் தோல் கொடுத்து கப்ருஸ்தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்வார்களா, அல்லது அந்த அவ்லியாவின் ஜனாஸா காற்றில் மிதந்தவாறு தன்னைத்தானே சுமந்து செல்கிறதா?

  • அந்த இறந்த அவ்லியாவுக்காக மனிதன் கப்ரு தோண்டுகிறானா? அல்லது அவருடைய கப்ரு தானாக வெளிப்பட்டு அந்த ஜனாஸாவை உள்ளே இழுத்துக் கொள்கிறதா?

இதை ஏன் இந்த இணைவைக்கும் சகோதரர்கள் சிந்திப்பதில்லை, அடிக்கடி அல்லாஹ் திருமறையில் சிந்தியுங்கள் என்று கூறுகிறானே ஒருமுறையாவது கீழ்க்கண்ட இறைவசனத்தை சிந்தித்துப்பார்த்தால் இந்த சமுதாயம் திருந்திவிடுமே! ஏன் இதை மேற்கொள்வதில்லை! இதோ இணைவைப்பாளர்கள் சிந்திக்க வேண்டிய வசனம்

அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள். (அல்குர்ஆன் 7:192) 


இணைவைப்பாளர்களை நோக்கி அல்லாஹ் விடும் சவால்
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா?  
அல்லது
அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா?
அல்லது
அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா?
அல்லது
அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா?
(நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”" என்று. (அல்குர்ஆன் 7:195)

அல்லாஹ்வை இணைவைத்து வணங்கும் தர்காஹ்வாதிகளே அருமைச் சகோதர சகோதரிகளே நீங்கள் அவ்லியா என்று கூறும் நபர்கள் இறந்துவிட்டார்கள். மேலும் மண்ணோடு மண்ணாகவும் மக்கிவிட்டார்கள். எனவே அல்லாஹ் இணைவைப்பாளர்களிடம் முன்வைக்கும் இந்த சவால் நிறைந்த அருள்மறை வசனத்தை சிந்தித்துப்பாருங்கள்!

நீங்கள் அவ்லியா என்று யாரை கருதுகிறீர்களோ அவர்கள் ஒருகாலத்தில் கப்ரில் நல்லடக்கம் செய்யப் பட்டவர்கள்தானே அப்படியானால் அந்த கப்ரில் உறங்கும் அவ்லியாக்களுக்கு

  • இப்போது நடக்கும் கால்கள் உண்டா?
  • இப்போது பிடிக்கும் கைகள் உண்டா?
  • இப்போது பார்க்கக்கூடிய கண்கள் உண்டா?
  • இப்போது உங்கள் பிரார்த்தனைகளை கேட்க காதுகள் உண்டா?
மேலும் அல்லாஹ் தன்னை இணைவைத்து வணங்குவோர்களை நோக்கி கேட்கிறான்

நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்”

தெய்வம் என்றால் தெய்வீகத்தன்மை கொண்டவை என்று பொருள்படுகிறது. எனவே அல்லாஹ்வைத்தவிர யாரிடமாவது நீங்கள் அருள் தேடினால் அந்த அருள் தேடப்படக்கூடிய நபருக்கு தெய்வீகத்தன்மை இருக்கிறது என்றுதானே நம்புகிறீர்கள் அப்படியானால் தர்காஹ்வாதிகள் யாரை அவ்லியாக்கள் என்று அழைத்து கப்ருவணக்கம் புரிகிறார்களோ அவர்கள் தெய்வங்கள் என்றுதானே மறைமுகமாக பொருள்படுகிறது!

அவ்லியாக்கள் உங்களுக்கு உதவ இயலாது உணருங்கள்
  • உங்கள் தாய் உங்களை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்தாள்,

  • பாலகனாக இருந்த உங்களை ஆசையோடு தாய்ப்பால் ஊட்டி வளர்த்தால்!

  • ஓடியாடும் குழந்தையாக இருந்த உங்களுக்கு தினமும் தலையை வாரிவிட்டு, பவுடர் அடித்து, நறுமனம் தடவி, புதுப்புது டிசைன்களில் ஆடைகளை உடுத்தி அழகுபடுத்தி பார்த்தால்!

  • உங்கள் தந்தையோ நீங்கள் படிக்க வேண்டும் என்று எண்ணி மூதுகில் மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்!

  • பெற்றோர் வயதான பருவத்தை அடைந்தவுடன் தன் மகன் அநாதையாக நின்றுவிடக்கூடாதே என்று உங்களுக்கு திருமணம் முடித்துவைத்து அழகுபார்த்து மகிழ்நதனர் இறுதியாக இருவரும் மரணித்துவிடுகின்றனர்.

இப்போது நீங்கள் அந்த அருமைத்தாயாரின் கப்ருக்கு அருகில் நின்று அம்மா! என்று அழைத்தால் அவர் பேசுவாரா? அப்பா என்று அழைத்தால் பதில் கொடுப்பாரா?

உங்களுக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்த்த உங்கள் அன்புத்தாய் இறந்தபிறகு உங்களுக்கு உதவ முடியவில்லை அப்படியிருக்க யாரோ ஒருவர் அவ்லியாவாம் அவர் உங்களுக்கு உதவி செய்வாரா?

என் மகன் கஷ்டப்படக்கூடாது படித்து பட்டம் வாங்கி பாரினில் வேலை செய்ய வேண்டும் என்று துடித்து வாழந்து மடிந்த உங்கள் அன்புத்தந்தை இறந்தபிறகு உங்களுக்கு உதவ முடியவில்லை அப்படியிருக்க யாரோ ஒருவர் அவ்லியாவாம் அவர் உங்களுக்கு உதவி செய்வாரா?

தன்னுடைய கணவன் இல்லற சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தன் உடலையே உங்களுக்கு அர்ப்பணம் செய்த அன்பு மனைவி இறந்தபிறகு உங்களுக்கு உதவ முடியவில்லை அப்படியிருக்க யாரோ ஒருவர் அவ்லியாவாம் அவர் உங்களுக்கு உதவி செய்வாரா?

நீங்கள் பெற்றெடுத்த அன்புமகன் ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துவிடுகிறான் அவனை நல்லடக்கம் செய்துவிடுகிறீர்கள் பின்னர் சிலகாலம் கழித்து தன் மகன் கப்ருக்கு அருகில் நின்று மகனே என்று கூப்பிடுகிறீர்கள் அந்த இறந்த மகன் தந்தைக்கு பதில் கொடுப்பானா? இறந்தபிறகு உங்களுக்கு உதவ உங்கள் மகனுக்கு இயலவில்லை அப்படியிருக்க யாரோ ஒருவர் அவ்லியாவாம் அவர் உங்களுக்கு உதவி செய்வாரா?

அட! நீங்கள் மரணித்துவிட்டீர்கள் உங்கள் மகன், மனைவி, மருமகன் உங்கள் கப்ருக்கு அருகில் நின்று அழுகின்றனர் உதவி கேட்கின்றனர் உங்களால் உதவி செய்துவிட முடியுமா? உங்களுக்கு இல்லாத அந்த ஆற்றல் யாரோ அவ்லியாவாம் அவருக்கு கிடைத்துவிடுமா?

அப்படி அவ்லியாவுக்கு ஆற்றல் உள்ளது என்று நினைத்தால் அல்லாஹ் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டானா?

என் அருமைச் சகோதரர்களே!
இணைவைப்பை விட்டுவிடுங்கள் சகோதரகளே அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக மாறிவிடுங்கள்! அல்லாஹ் உங்ககளுக்கு மிக சமீபமாக இருக்கிறதாக பிரகடனப்படுத்துகிறான் இதோ அல்லாஹ்வின் வார்த்தைகள்!

(البقرة )   وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ  
மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு  அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்!

சூனியம்,ஜோசியம்,நாள் நட்சத்திரம்,தாயத்து,சகுனம் பார்ப்பது

 சூனியம்,ஜோசியம்,நாள் நட்சத்திரம்,தாயத்து,சகுனம் பார்ப்பது

 சூனியம்,கைரேகை,ஜோசியம்,ஜாதகம்,குறி,பால்கிதாபு பார்ப்பதில் இணைவைத்தல் : 

சூனியம் இறை நிராகரிப்புசசெயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் எந்த பயனையும் பெற்றுத்தராது தீமையை விளைவிக்கும் பாவச்செயலாகும்.
”அவர்களுக்கு எந்தப்பயனையும் தராத துன்பம் தரும் ஒன்றை -சூனியத்தைக்- கற்றுக்கொண்டார்கள். அல்குர்ஆன் 2:102
”சூனியக்காரன் எங்கு வந்தாலும் வெற்றி பெறமாட்டான். அல்-குர்ஆன் 20:69
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தர்ர்கள்:-
சூனியம் மற்றும் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென நம்புபவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தை நிராகரித்துவிட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.
‘யாரேனும் குறிகாரனிடம் வந்து ஏதேனும் கேட்டால் அவனது நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம்.

 கிளி ஜோஸியம்,பறவை சகுனம் பார்ப்பதும் இணைவைத்தலாகும்.

பறவைகள் போடும் சப்தத்தையும்,செயலையும் வைத்து நல்ல சகுகுனம்,அபசகுனம் பார்ப்பது, நல்லது கெட்டதை தீர்மானிப்பது அன்றைய அரபிகளின் வழக்கமாக இருந்தது.
கூண்டிலிரந்து பறவை வலது பக்கம் பறந்தால் நல்லது நடக்கும். வெற்றி ஏற்படும் எனவும், இடப்பக்கம் பறந்தால் தீமை ஏற்படும்,தோலவி ஏற்படும் என்நும் நம்பினார்கள். இன்றும் நம்மிடையே பறவைகளை வைத்து நல்லது கெட்டதைத் தீர்மானிப்பதையும் பார்க்கிறோம்.
காக்கை கரைந்தால் விருந்தினா வருவர்.ஆந்தை சப்தமிட்டால் யாராவது மரணமடைவர்.பூனை குறுக்கே வந்தால் காரியம் கெட்டுப்போகும் என்றெல்லாம் நம்புகின்றனர்.
பறவைகள் பறப்பதற்கும், சப்தமிடுவதற்கும் மனிதர்களின் வாழ்வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை எடுத்துக்காட்டும் முகமாக ‘ பறவை சகுனம் கிடையாது.’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). ஆதாரம் : புகாரி எண்கள்: 5753, 5754, 5755, 5756, 5757
மேலும் ‘ சகுனம் பார்ப்பது ஷிர்க் ஆகும்’ என்றார்கள். (ஆதாரம் : முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி)

 நாள்,நட்சத்திரம், ராவு காலம் பார்ப்பதும் ஷிர்க் இணை வைத்தலாகும்.

இன்று இந்தக்கள் மார்கழி மாதத்தை பீடையாகக் கருதுவதைப் போல அன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக்கருதி அதில் எந்த லேலை செய்தாலும் பீடையே சூழும் என்றும் அரேபியர்களின் நம்பினர்.செவ்வாய் புதன் கிழமைகளைப் பீடையாகக் கருதினர்.
எனவே நாள், மாதத்திற்கு நல்லது கெட்டதை தீர்மானிக்கும் சக்தி கிடையாது என்பது நமது நம்பிக்கையாகும். நபி (ஸல்) அவர்கள்
” ஸஃபர் மாதம் பீடை என்பது கிடையாது” என்றார்கள் (அறிவிப்பவர்:அபூஹ~ரைரா (ரலி), நூல் : புகாரி)

காலத்தை குறை கூறுவதும் ஷிர்க் அகும்
.இது கெட்ட காலம்!இது கெட்ட நேரம்! காலம் என்னை வஞ்சித்து விட்டது! இயற்கை சதி செய்த விட்டது! என்று மக்கள் குறைபடுவதைக் காணுகிறோம். காலத்தையும் நாளையும் எசுவது இறைலனை ஏசுவது போலாகும். நபி (ஸல்) அருளியதாக அபூ ஹுரைரா (ரலி)அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான், ஆதமின் மகன் என்னை செய்கிறான்.அவன் காலத்தை திட்டுகிறான். நானெ காலத்தைப் படைத்தவன்.எனத கையில் தான் அனைத்தின் அதிகாரமும் இருக்கிறது. நானே இரவு பகலை இயக்ககிறேன். (அதாரம்: புகாரி,முஸ்லிம்)

நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள் நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என நம்புவது குஃப்ரு இறை நிராகரிப்பாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-
‘அல்லாஹ்வின் கிருபையாலும் அருளாலும் மழை பொழிந்தது என்று கூறியவர் என்னை விசுவாசித்து கிரகங்களை மறுத்தவராவார்.இன்ன கிரகத்தின் காரணமாக மழை பொழிந்தது எனக்கூறுபவர் என்னை நிராகரித்து கிரகத்தை விசுவாசித்தவராவார். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
நாளிதழ், வாரஇதழ், மாதஇதழ்களில் வெயியிடப்படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவதும் ஷிர்க் ஆகும்.தொலைக்காட்சியின் எல்லா சேனல்களிலும் ராசிபலன்கள் பற்றிய நிகழ்சிசிகள் இடம்பெறாத நாட்களே இல்லை.இவற்றைப்படிப்பதும்,பார்ப்பதும் பெரும் கற்றமாகும்.ஏனெனில் இவை ஷிர்கிற்கு வழி வகுத்துவிடும்.


தாயத்து தகடுகளில் பலன் இருப்பதாக நம்புவதும் இணைவைத்தலாகும்.

சூனியக்காரன், ஜோஸ்யக்காரனின் ஆலோசனைப்படி கழுத்தில்,கையில்,இடுப்பில், தாயத்துகளையும் வீடுகளில் கடைகளில் தகடுகளையும் நம்மில் பலர் தொங்க விடுகிறார்கள். இதனால் சோதனைகளிலிருந்தும் திருஷ்டிகளிலிருந்தும் பாதுகாப்புப்பெற முடியும் என நம்புகிறாாகள். இதைப்போன்றே செல்வம் பெருகவும்,வளவாழ்வு அமையவும் பலவடிவங்களில் ராசியான கற்களில் மோதிரங்களும் அணிந்து கொள்கின்றனர். இவையனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதற்கு எதிரான கொள்கைகளாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-

‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’ (அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்)

தாயத்து, தகடு, தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகிறவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து மன்னிக்க முடியாத பெரும் பாவியாகிறான்.

புதுமனை,கட்டிடங்கள் கட்டும்போது அங்கே திருஷ்டிக் காப்பிற்காக பூசணிக்காய், கொலுக்கள், பொம்மை உருவங்கள் போன்றவற்றை தொங்கவிடுகிறார்கள்.இவையும் ஷிர்க் ஆகும்

 கப்ருகளை வணங்குவதும் ஷிர்க் ஆகும்

இறந்துவிட்ட நபிமார்கள், அவ்லியாக்கள், பெரியார்கள் நமது தேவைகளை நிறைவேற்றுவார்கள்.துன்பங்களை போக்குவார்கள்.பிள்ளை வரம் தருவார்கள், பரிந்துரை செய்வார்கள்; என எண்ணி உதவி தேடுவது, பிரார்த்திப்து போன்ற செயல்கள் அனைத்தும் ஷிர்க் ஆகும்.

‘அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை அழைக்காதீர். அவ்வாறு அழைத்தால் நீர் வேதனை செய்யப்படுவோரில் ஆகிவிடுவீர்.’ (அல்-குர்ஆன் 26:213)
‘அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாகக் கருதி அதே நிலையில் மரணித்தவன் நிச்சயமாக நரகில் புகுந்துவிட்டான்.’ என நபி(ஸல்)அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)நூல் : புகாரி)

கப்ருகளை கட்டுவது, விளக்கேற்றுவது, பட்டுவிரிப்பது, பூமாலை போடுவது,விழா எடுப்பது ஆகிய அனைத்தும் ஷிர்க் மன்னிக்க முடியாத இணைவைத்தல் ஆகும்.

நபி(ஸல்) அவர்கள் ‘ கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும்.அவற்றை வணக்கஸ்தலமாக ஆக்குபவர்களையும், அங்கே விளக்கேற்பவாகளையும் சபிப்பானாக” என கடுமையாக எச்செரித்துள்ளார்கள்.

சிலர் கப்ரை வணங்குகிறார்கள். அதை வலம் வருகிறார்கள். அங்குள்ள சுவர்களையும், தூண்களையும் தொட்டுத்தடவி முத்தமிடுகிறார்கள். அதன் மண்ணை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள்.ஸஜ்தா செய்கிறார்கள்.பணிவுடன் நின்று மரியாதை செய்கிறார்கள். மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். ஹஜ்ஜிற்கு வரும் ஹாஜைிகளில் சிலர் மதீனாவிலுள்ள ஜன்னத்துல் பகீஹ் அடக்கஸ்தலத்திலள்ள மண்ணையும்,கற்களையும் பரக்கத்திற்காக சுமந்து வருகிறார்கள்.இவையெல்லாம் அல்லாஹ்வுக்கெதிராகச் செய்யும் இணைவைக்கும் பாவச்செயலகளாகும்.

அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தலும் இணைவைக்கும் பெரும் பாவமாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
‘அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான்.’ (அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்: அபூ தாவூது.)
கஃபத்துல்லாஹ், மஸ்ஜிதுந்நபவீ, இதரபள்ளிவாசல்கள், கப்ருகள்,அவ்லியாக்கள், பெற்றோர், பெரியார், குழந்தைகள் மீது சத்தியம் செய்வது அனைத்தும் அல்லாஹ் அல்லாதவற்றைச் சாரும். இவற்றுள் எதன் மீது சத்தியம் செய்தாலும் ஷிர்க் – இணைவைத்த பாவத்தைப் புரிந்ததாகும்
.
 அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவதும், ஆகுமாக்கியதை விலக்கிக்கொள்வதும் ஷிர்க் ஆகும்.

அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது, அல்லாஹ்வைத்தவிர பிறருக்கும் அவனது செயலில் பங்கு உண்டு என நம்புவது, ஷரீஅத்தின் தீர்ப்பை விட்டுவிட்டு ஏனையத்தீர்ப்புகளை சரியெனக்கொள்வது இவையனைத்தும் சமுதாயத்தில் பரவி நிற்கும்’ஷிர்”கான காரியங்களாகும்.

இவையனைத்தும், “ஷிர்க்” என்பதற்குரிய ஆதாரம்:-

இவையனைத்தும், ”ஷிர்க் என்பதற்கு பின்வரும் இறை வசனம் சான்றாகும்.
‘இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும்,மதகுருமார்களையும் , மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்களின் தெய்வங்களாக எடுத்துக்கொண்டி ருக்கின்றனர்’. (அல்குர்ஆன்-9:31)
அதீ இப்னு ஹாதிம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக்காட்டிய போது, ‘ கிறித்தவர்கள் தங்கள் பாதிரிகளையும், மத குருமார்களையும் வணங்கவில்லையே!’ என்று நான் கேட்டேன்.அதற்கு நபி(ஸல்) ‘ஆம்!’ எனினும் அல்லாஹ் விலக்கியதை பாதிரிகள் ஆகுமாக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள். அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள் விலக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்கி றார்கள். எனவே இதுதான் கிறித்தவர்கள் ‘தங்களின் பாதிரிகளுக்கும் துறவி களுக்கும் செய்யும் ‘இபாதத்’ வணக்கமாகும்” என்றும் கூறினார்கள்.’ (திர்மிதி)


பாத்திஹாக்கள் பலவிதம் ? (2)

பாத்திஹாக்கள் பலவிதம் ? (2)

பந்தக்கால் பாத்தி(ஹா) யா? 

 கிழக்கு இராமனாதபுரம் பகுதியில் முஸ்லிம் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் ‘பந்தக்கால் ஊன்றுதல்’  பக்தி சிரத்தையோடு நடைபெறுகிறது! அதாவது திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக திருமணவீட்டார், ஊர்த்தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம்’ இத்தனை மணிக்கு பந்தக்கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்’ என்று அழைப்பு விடுப்பார்கள்.
 குறிப்பிட்ட நேரத்தில் ஊர் பெரியவர்கள் எல்லோரும் திருமண வீட்டிற்கு வந்து விடுவார்கள். அவர்களில் சிலரை கம்பீரமான தலைப்பாகைத் தோற்றததில் காணலாம்.

 மேதகு ஆலிம்சா அவர்கள் அவசியம் போயாகவேண்டும். வந்தவர்களுக்கெல்லாம் தேனீர் அளித்துமுடித்தபின் வீட்டுக்காரர் ஆலிம்சா வைப்பார்க்க,ஆலிம்சா நாட்டாண்மையைப் பார்க்க, நாட்டாண்மையின் சிக்னல் கிடைத்ததும், ஆலிம்சா வழக்கமான ‘அல்பாத்திஹாவை‘ உரத்த குரலில் சொல்ல, துஆ ஓதிமுடித்த பிறகு வீட்டு தலைவாசலின் முன்புறம் ஒரு குழியை வெட்டி அதில் சட்டத்தை ஊன்றுவார்கள்.ஊர் பெரியவர்களெல்லாம் மிகுந்த பக்தியோடு அந்தச் சட்டத்தை (அல்லது மூங்கிலை) ஆளுக்கொரு கைகொடுத்து குழியில் இறக்கி மண் போட்டு ஊன்றி முடித்ததும், அங்கு தயாராக அரைத்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சளை ஒவ்வொருவராக எடுத்து சட்டத்துக்குத் தடவுவார்கள். அதிலும் கீழிருந்து மேல் நோக்கித்தான் தடவவேண்டும் என்பது கட்டாய விதிகளில் ஒன்றாகும்..

 பின்னர் வீட்டுக்காரர் ஒரு தட்டு கொண்டு வருவார்.அதில் நூலில் கோர்க்கப்பட்ட மஞ்சள் துண்டுகளும் வெற்றிலைகளும் இருக்கும். அந்த மஞ்சள் வெற்றிலை மாலையை ஒரு பெரியவர் எடுத்து அந்த சட்டத்துக்குச் சூட்டுவார்.பின்னர் ஒரு தங்கச்சங்கிலியும் அந்த பந்தல் காலுக்கு அணிவிக்கப்படும! பின்னர் சலாம் சொல்லி அனைவரும் புறப்பட்டு விடுவார்கள். ஓதிய பாத்திஹாவுக்குரிய ‘பலனோடு’ மாண்புமிகு ஆலிம்சாஅவர்களும் கிளம்பிவிடுவார்கள்.

 இத்தனை கூத்துகளும் எதற்காக என்று நினைக்கிறீர்கள்?  வெயிலுக்கு இளைப்பாற ஒரு பந்தல் போடத்தான்! அதற்கென ஒரு வைபவம்! ஒரு பாத்திஹா!! ” பாத்திஹா இதற்காகவா அருளப்பட்டது ?”

 இதைவிட அசிங்கம் சில ஊர்களில் திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு ‘சேவிங்’ முகத்தைச் சிரைப்பதற்குக்குக் கூட ஆலிம்சாவைக் கூப்பிட்டு பாத்திஹா ஓதித்தான் சிரைக்கிறார்கள். அல்லாஹ்வும்,அவனது சத்தியத் தூதரும் காட்டிய உண்மையான இஸ்லாத்தின் தூய வடிவத்தை மறந்து நாசகார ‘பித்அத்’களில் ஆழ்ந்திருக்கும் நமது சமுதாயம் விழத்தெழுவது என்றோ ?

 ஆனால், அல்லாஹ்வின் அளப்பரிய அருளால் இன்று படிப்டியாக விழித்து விட்டது நமது சமுதாயம். . இளைய சமுதாயத்துடன் போட்டி போட்டுக் கொண்டு மூத்த சமுதாயமும் பீடுநடைபோட்டு வருகிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு மறுமலர்ச்சியைக் காண்போம்!

பீடி பாத்திஹா

எனது தந்தையார் இறந்தபோது அவர்களின் அடக்கத்தில் பங்கேற்க முடியாது போயிற்று. காரணம் தகவல் கிடைத்தவேளை என் கணவர் கர்னாடகாவில் அலுவலக வேலையாக டூரில் இருந்தார்.

ஆகவே,அடக்கம் செய்த ஒருவாரத்திற்குப் பிறகே சென்னையிலிருந்து ஊர் செல்லமுடிந்தது.எங்கள் பகுதியில் ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்த அன்றிலிருந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் மஃரிபு நேரத்திற்குப் பிறகு பாத்திஹா ஓதுவார்கள். (தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களிலும் இந்த வழக்கம் இருந்து வருகிறது)
இங்கெல்லாம் பெரும்பாலும் ஏதாவது தின்பண்டங்களை வைத்தே பாத்திஹா ஓதுவார்கள். பண்டத்தின் ஒரு பகுதி பாத்திஹா ஓதும் ஆலிம்சாவுக்குக் கொடுக்கப்படும். மீதியைத்தான் உறவினர்ளுக்கும் அண்டை அயலாருக்கும் பங்கு வைத்துக் கொடுப்போம். ஒருசில உறவினர்கள் தங்கள் பங்காக பாத்திஹாவிற்கு சில தின்பண்டங்களை அனுப்பி வைப்பார்கள்.
என் தந்தை பீடி குடிக்கும் பழக்கமுடையவராக இருந்தார்.ஆகவே ஒருநாள் என் அக்கா பாத்திஹா நேர்ச்சைக்கு சில தின்பண்டங்களுடன் தனியாக ஒரு சிறு தட்டில் எங்கள் தந்தை விரும்பி புகைக்கும் “பீடி பிராண்ட்” ஒரு கட்டும் ” ஒரு தீப்பெட்டியும்” வைத்து பாத்திஹா ஓதச் சொன்னாள்.
இந்த பாத்திஹா சடங்கே தேவையற்றது, அறிவீனமானது என நினைனப்பவள் நான்.பீடியை வைத்து பாத்திஹா ஓதுவது என்பது … நினைக்கவே மனதிற்கு மிகவும் கஷ;டமாக இருந்தது. அந்த மௌலவியிடம், ஏங்க, இப்படி பாத்திஹா ஓதலாமா? ” ஏன் தாராளமாக செய்யலாம். இறந்தவர்களுக்குப் பிடித்தமான பொருட்களை வைத்து தாராளமாக ஓதலாம்” என உடனே ஃபத்துவாவும் கொடுத்துவிட்டார். அடப்பாவமே! இப்படிப்பட்ட அனாச்சாரங்களுக்கெல்லாம் சாவு மணிஅடிக்க வேண்டிய மார்க்கம் தெரிந்தவர்கள் வயிறு வளர்ப்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு ஃபத்துவாக்களை வீசுகிறார்களே!
என் அக்கா தான் மார்க்கம் தெரியாதவள். இந்த முல்லாக்களும் வழிகெடுப்பதில் சைத்தானை மிஞ்சுமளவிற்குக் போய் கொண்டிருக்கிறார்களே! இவர்கள் எங்கே உருப்படப் போகிறார்கள்? இறந்து போன ஒரு ஜீவன் பெயரால் என்னென்ன சடங்ககுள், சம்பிரதாயங்கள!; சொல்வதற்கே நாவு கூசுகிறது.
அக்காவின் அறியாமையை நினைத்துப் பரிதாபப் படுவதா? இந்த வழிகாட்டியான ஆலிம்சாவின் முட்டாள் தனத்தைப் பார்த்து ஆத்திரப்படுவதா?  என எனக்குத் தெரியவில்லை. அவரிடம் முடிந்தவரை மண்டையில் படுமளவிற்கு விளக்கிவிட்டு “இந்த அறிவிலிகளுக்கு சத்தியப் பாதையைக் காட்டுமாறு” துஆ செய்துவிட்டு சென்ளைனக்குக் கிளம்பிவிட்டோம்.

சமுதாயமே! நினைவில் வைத்துக்கொள்!

ஒருமனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர அவனது மற்றையக் கிரியைகள் யாவும் முடிவடைந்துவிடுகின்றன.
1. நிலையான தர்மம். 2. அவன் விட்டுச் செல்லும் பயனுள்ள கல்வி. 3. அவனின் நன்மைக்காக அல்லாஹ்விட்ம் பிரார்த்திக்கும் அவனது சந்ததி.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூலகள்: புகாரி,முஸ்லிம்)
தகவல்: மும்தாஜ் பேகம்,சென்னை.(http://albaqavi.com)





பாத்திஹாக்கள் பலவிதம் ? (1)

பாத்திஹாக்கள் பலவிதம் ? (1)


நெஞ்சு பொறுக்குதில்லையே!
‘ரொட்டி’ அடுக்க வாருங்கள்!

தலைப்பார ரொட்டி பாத்திஹா – இது ஒன்றும் நவீன பாத்திஹா அன்று.
 மிகப்பழமையான பாத்திஹாதான். குடும்பத்தில் மூத்தவர்களுக்கு, அதுவும் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே ஓதும் ஓர வஞ்சனையான பாத்திஹா இது. ஒரு நபரின் திருமண நாளுக்கு முந்திய நாள், அல்லது சுன்னத் (விருத்தசேதனம்) செய்வதற்கு முந்திய நாள் இந்நிகழ்ச்சியைச் செய்யும் பழக்கம் இன்று வரை நெல்லை மாவட்டத்தில் வழக்கத்திலுள்ளது. ரொட்டி அடுக்க வாருங்களென வீட்டுக்கு வீடு அழைப்பு வரும். ஊரில் மாண்புமிகு பேஷ் இமாம் அவர்களும் மரியாதைக்குரிய மோதினார்(முஅத்தின்) அவர்களும் ஊர்த்தலைவர் மற்றும் ஜமாத்தார்கள் அனைவரும் புதுப் பொலிவுடனும் பூரிப்புடனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

இதன் சிறப்பு அம்சம் யாதெனில் குடும்பச் சுமையை (திருமணம்) ஏற்கப் போகும் நபரின் உயரத்திற்கு அரிசி மாவு ரொட்டி 25 சதவீதமும், மெதுவான பேக்கரி பன் ரொட்டி 75 சதவீதமும் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்குவார்கள். இந்த அடுக்கின் மேற்புறமும் தரையிலும் பல்சக்கர வடிவில் தயாரித்த அரிசி மாவு ரொட்டியை அடுக்குவது அழகுக்கு அழகு ஊட்டுவதாக அமைகிறது.
பின்பு நாரிலே தொடுத்த மல்லிகைப் பூவின் ஒரு முனையை ரொட்டி அடுக்குகளின் முன்பாக, கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் மாப்பிள்ளையின் தொப்பியில் சுற்றுவார்கள். மற்றோர் முனையை மேற்புறமுள்ள சக்கர ரொட்டியுடன் ‘கணெக்ஷன்’(இணைப்பு) கொடுத்து விடுவார்கள். அடுக்கப்படும் ரொட்டிகள் கீழே விழாதா? பெரிய ‘கராமத்தாக இருக்கிறதே? என்று நீங்கள் பார்க்க ஆசைப்படலாம்.

ஆனால் நமது மரியாதைக்குரிய மோதினார் அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கராமத் நிகழ்வதைத் தடுத்து விடுகிறார். ஆம், மூன்று ஆள் உயர குச்சிகளை, அடுக்கும் ரொட்டிகள் விழாதவாறு பயபக்தியுடன் முக்கோண வடிவத்தில் பிடித்துக் கொள்வார். மெய் மறந்த நிலையில் அனைவரும் இந்த அதிசய நிகழ்ச்சியை, பயபக்தியுடனும் ரொட்டியைச் சிறிது நேரத்தில் சுவைக்கப் போகிறோம் என்ற ஆவலிலும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, உரத்த குரலில் ஒரு சப்தம் வரும், நடுங்கி விடாதீர்கள்!

வழக்கமாக நாம் கேட்கும் ‘அல் பாத்திஹா’ தான். சப்தத்தைக் கேட்டவுடன், தெரிந்த சிலர் சூராக்களை முணுமுணுப்பர். தெரியாத பலர், ரொட்டியைப் பார்த்து வாயைச் சப்புவர். பின்பு ஓரவஞ்சனையாக நடந்து கொள்வதைப் பாருங்கள். மாண்புமிகு பேஷ் இமாம் , மோதினார், ஊர் முக்கியஸ்தர்களுக்கு பல் சக்கர வடிவமுள்ள அரிசி மாவு ரொட்டி. மற்றவர்களுக்கு ஜுரம் கண்டவர்களை டாக்டர்கள் சாப்பிடச் சொல்லும் ‘பன் ரொட்டி’, சிரிக்காதீர்கள்!
சிந்தியுங்கள்!

வேடிக்கையான நிகழ்ச்சி மட்டுமன்று, வேதனையான நிகழ்ச்சியும்கூட. மூடப்பழக்க வழக்கத்தைப் போக்க வந்த நம் உயிரிலும் மேலான நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் நம்மவர்களிடத்தில் இவ்வளவு பெரிய அறியாமையா?
நம்முடைய மாண்புமிகு லெப்பைமார்கள் ரொட்டி சாப்பிடுவதற்காகச் செய்த திட்டமிட்ட சதி இது என்று புரியவில்லையா?

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்! - Part 3

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்!  - Part 3

அவ்லியாவின் ஆசி பெற டிஸ்கோ நடன நிகழ்ச்சிகள்.
திருவாரூர் மாவட்டம் திட்டச்சேரி மன்சூர் அவ்லியாவின் வருடாந்தர விழாவை வெகுவிமரிசையாக நடத்துவார்கள் அந்த ஊர் அவ்லியா பக்தர்கள்.நாகூரைப் போன்று உரூஸ் நடத்த நம்மிடம் அவ்லியாக்கள் இல்லையே என்று தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட அவலியா தான் மகான் மன்சூர் அவ்லியா. அப்படி ஒரு மனிதர் அந்த ஊரில் வாழ்ந்ததாக வரலாறே இல்லையாம். இன்று இந்த அவ்லியா பெயரில் அர்ச்சனைகள்!ஆராதனைகள்! ஆடல் பாடல்கள்! அமர்க்களமாக நடைபெறுகிறது.
1977ல் அந்த ஊருக்குச் சென்றபோது நம்மை வரவேற்றதே அந்த அவ்லியாவின் உரூஸ் விளம்பரம் தான்! அது தான் கிளைமேக்ஸ்! அந்த விளம்பர அழைப்பிதழ் வாசகங்கள் என்ன தெரியுமா ?

மன்சூர் அவ்லியாவின் ஆசி பெற வெண்ணிற
ஆடை நிர்மலாவின் நடன நிகழ்ச்சி காண வாரீர்!

இந்த விளம்பர நோட்டீஸைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டோம்.
சமுதாயம் எங்கே சென்றுவிட்டது பர்hத்தீர்களா?

அவ்லியாவின் மாண்பைப்பெற திரைப்படங்கள்!கரக ஆட்டங்கள்!

சோலியக்குடி என்னும் முத்துவடுகநாத பட்டணம் செய்யது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் 56-வது ஆண்டு சந்தனக்கூடுவிழா! ஹிஜ்ரி 1403 ஜமாதுல் அவ்வல பிறை 19 (4.3.83) வெள்ளி பினனேரம் சனி இரவு சந்தனக்கூடு விழா அதிவிமரிசையாக நடைபெறும்.

அன்று இரவு 10 மணியளவில் இரண்டு திரைப்படங்கள்
இலவசமாகக் காண்பிக்கப்படும். (பெண்களுக்கு தனி இடம் உண்டு)

அன்று இரவு 7 மணியளவில் கரக ஆட்டமும் உண்டு.

இப்படிக்கு தர்ஹா கமிட்டியார், சோலியக்குடி எம்.வி.பட்டணம்.
அவ்லியாவின் ஆசியைப் பெற இத்தனை அம்சங்களும் இடம் பெறவேண்டுமாம். எப்படி அவ்லியாவின் மீது நம்பிக்கையை வளர்த்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள். அவ்லியாவுக்கும், திரைப்படத்துக்கும், கரக ஆட்டத்துக்கும் என்ன தொடர்போ? எப்படிப்பட்ட சம்மந்தத்தைப் பிணைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்தாலே மார்க்கத்தை எந்த இலட்சணத்தில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது புரியவரும்.

அவ்லியாவின் ஆசிபெறும் சிவப்பு விளக்குக் கன்னியர்!

இதயமே வெடித்து விடும் போலிருந்தது அந்த ஆபாசக் காட்சியைக் கண்டதும்! வேறு எங்கும் அல்ல. சுல்தானுல் ஆரிபீன் நாகூர் நாயகத்தின் தர்கா வளாகத்தில் தான்! 1960ல் நாகூரில் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள சாபு குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் ஆசிரியரின் தம்பி என்னை வளாகத்தின் உள்ளே நடக்கும் ஆபாசங்களை விவரித்து வந்தார். அங்கே வடிவமைக்கப்பட்ட சில டென்டுகளின் முன் அரை நிர்வாணத்தில் தங்ளை அலங்கரித்துக்கொண்டு நிற்கும் இளம் குமரிகள் சிலர் அங்கே நின்று கொண்டிருந்தனர். திடுக்கிட்டவனாக இவர்கள் யார்? எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் ? எனக் கேட்டபோது வாடிக்கையாயர்களை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்றார் அந்த நண்பர். அவ்லியா கண்டு கொள்ளாமல் அனுமதிக்கிறாரே ! இவருக்கு இந்த அசிங்கத்தை தடுப்பதற்கோ இந்த வேசிகளை அழிப்பதற்கோ சக்தியில்லையா ? எனக்கேட்டபோது இது இங்கே சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது என்றாரே பர்க்கலாம். அன்றுதான் அவ்லியாவுக்கு ஆக்கவோ அழிக்கவோ சக்தியில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

அவ்லியாவின் ஆசியை வழங்கும் குடிமக்கள்.

குடிமக்கள் என்றதும் நாட்டு மக்கள் என நினைத்து விடாதீர்கள்!
இந்த புண்ணியவான்கள் யார் தெரியுமா? முத்துப்பேட்டை செய்கு தாவூது வலியுல்லாஹ்வின் ஆதீன கர்த்தாக்கள.இவர்கள் இரவு வேளையில் அவலியாவின் (கப்ரின்)அருகிலேயே அமர்ந்து கொண்டு பரோட்டா,விஸ்கி போன்ற மது வகைகளை அருந்திக்கொண்டிருந்ததை அந்த ஊரைச்சார்ந்த ”யாகூப் சார்” என்னும் ஆசிரியர் என்னிடம் காட்டி ”இதோ பாருங்கள் அவ்லியாவின் அருள் பெற்ற புரோகிதர்கள்” என்று அவர்களது வண்டவாளங்களை விவரித்தார். நீங்கள் நம்பும் இந்த அவ்லிக்களுக்கு தன் பக்கத்திலே நடக்கும் அக்கிரமங்களை , லீலைகளை கண்டிக்கும் ஆற்றல் இல்லையல்லவா? இவர்கள் எங்கே உங்களது வேண்டுகோளை ஏற்று உங்களுக்கு அருள் புரியப்போகிறார்கள்?
இதனால் தான் “அல்லாஹ்வையன்றி நன்மையோ தீமையோ செய்ய இயலாத இவர்களை நீங்கள் அழைத்துப்பிரார்த்திக்காதீர்கள்” ( 10:106)என இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான்.

அவ்லியாவின் அருளைப்பெற யானை,தேர் ஊர்வலங்கள்!
மேளதாளங்கள்!! வாண வெடிகள்!!


அவ்லியாவுக்கும் யானைக்கும் என்ன சம்பந்தமோ? அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில் உண்ண உணவுக்கும் உடுத்த உடைக்கும் வழியில்லாது, தங்குவதற்கு போக்கிடமில்லாது பரதேசிகளாக அலைந்து திரிந்தபோது ஏறிட்டுப் பார்க்க நாதியில்லை. இப்போது மட்டும் இந்த அவ்லியாக்கள் மீது இவ்வளவு பக்தியா? பாசமா?
இந்த அவ்லியாக்கள் பெயரால் இத்தனை அர்ச்சனைகளா ? ஆர்பாட்டங்களா? மேள தாளங்களா ? யானை ஊர் வலங்களா?

ஆயிரக்கணக்கில் வீடு தோறும் வசூல் செய்து பல இலட்சங்களை செலவு செய்து ஊரே அமர்க்களப்படுத்துகிறார்களே! யானையின் மீது பவனிவர, கொடியைப்பிடித்து முன்வரிசையில் நிற்க ஊர் பிமுகர்களிடையே போட்டா போட்டி! அடிதடிகள்! நானா ? நீயா ? என்ற வீராப்புகள்! கைகலப்புக்குப்பின்னரே ஒருவழி பிறக்கும். யார் ஆதீனத்துக்கு அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே கொடியைப்பிடித்துவர அதிக வாய்ப்பு!

இதில் பல ஆயிரங்கள் புரளும். பின்னர் கேட்கவா வேணடும்? ஊர்வலத்தில் உலா வரும் அந்த மாண்புக்குரிய பக்தருக்கு ஜரிகைத்துணியால் தலைப்பாகை கட்டி, கிரீடம் அணிவித்து, பூமாலை சகிதமாக ஊர்வலமாக அழைத்துவரும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக்காண தெருவெல்லாம் தோரணங்களோடு ஆண்கள், பெண்கள், சிறுவர்,சிறியவர், குழந்தைகள்,கிழடுகள் சகிதமாக கட்டிடங்கள், கூரைகள், மரக்கொப்புகள்; என உயரமான இடங்களில் ஏறி நின்று பார்க்க வரிந்து கொண்டு போட்டியிடும் காட்சிகள் உலகக் கோப்பையைத் தட்டிச் செலல்லப்போகும் ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போலிருக்கும்.
இவையெல்லாம் எங்கு நடைபெறுகின்றது எனக் கேட்கிறீர்களா ?

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை, தக்கலை, கோட்டார் போன்ற ஊர்களிலும், திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் புதூர் போன்ற புற நகரங்களிலும், நாகூர், காரைக்கால், திருச்சி போன்ற பெருநகரங்களிலும் இன்றும் வீம்புக்காக நடத்தப்பட்டு வருவதைப் போய் பார்த்து வாருங்கள்.
அப்போது தான் அறிவுக்கேற்ற மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் முஸ்லிம்களின் இலட்சணங்கள் புரியும். இந்த போலி முஸ்லிம் பெயர்தாங்கிகள் இந்த அறிவியல் யுகத்திலும் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.

சமுதாயமே! இன்னுமா இந்த அறியாமை ? 

எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படியே வாழ்வது? சமுதாயமே கொஞ்சம் சிந்தித்துபார்! அதள பாதாளத்துக்குச் செல்லும் நம் சமுதாயத்தைக் கட்டிக் காக்க வேண்டாமா? இவற்றிற்கெல்லாம் மறுமையில் கேள்வி கணக்குகள் கிடையாதா? அல்லாஹ்வின் முன்னிலையில் என்ன பதில் சொல்வது? என்பதை ஒரு கணம் ஆராய்ந்து பார்!
இதற்கெல்லாம் துணை போகும் ஆதீன கர்த்தாக்கள், செய்குமார்கள், ஆலிம்சாக்கள், ஊர் ஜமாஅத் தலைவர்கள், முக்கியப்பிரமுகர்கள் எல்லாம் இதற்குச் சமாதி கட்ட முன்வரக்கூடாதா? இந்த அறியாமையிலிருந்து நம் சமுதாயத்தைக் காத்து உலக அரங்கில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கத் துணை புரியக்கூடாதா? ஏனைய சமுதாயங்களெல்லாம் அறிவிலும்,திறமையிலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும் ஓங்கி நிற்கும்போது இவற்றிற்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழ்வேண்டிய நாம் தாழ்ந்து நிற்கலாமா ? தலை குனியலாமா? தலை நமிர்ந்து நிற்க வேண்டாமா?

அல்லாஹ்வை அஞ்சும் நேரம் இன்னும் வரவில்லையா?

இன்னும் ஒரு சுனாமி வரவேண்டுமா?
அல்லாஹ் தன்மானமுள்ள நம்மைப்பார்த்துக் கேட்கிறான் :-
விசுவாசம் கொண்ட மக்களுக்கு இறைவனுடைய போதனைகளைக் கேட்டும் இன்னும் அவனை அஞ்ச வேண்டிய நேரம் வரவில்லையா ? (அல்குர்ஆன் :57:16)

மக்களைக் காக்கும் கடவுள் அவதாரங்கள்!

கடவுளில் தான் எத்தனை எத்னை வகைகளை ரகம் ரகமாக வகைப்படுத்தியள்ளனர். ஊருக்கொரு கடவுள்! ஆளுக்கொரு கடவுள் என்ற நிலை வந்து விட்டது. இவைகள் என்ன என்று பாருங்கள்.
முருகன் துணை ! அம்மன் துணை! அனுமான் துணை! பராசக்தி துணை! என்ற நம்பிக்கை வாசகங்கள் இந்துக்களிடம் பரவலாகக் காணலாம். இதைக்காப்பியடித்த முஸ்லிம் பெயர் தாங்கிகள் தங்களுக்கும் இப்படிப்பட்ட கடவுள் அவதாரத் துணைகள் தேவைப்படுகின்றன என்று கருதி அவர்களும் இதுபோன்ற வாசகங்களை எழுதிவைத்திருக்கும் வேதனையைப் பாருங்கள்.

முகைதீன் ஆண்டவர் துணை!
காதர் அவ்லியா துணை!
யா கவுஸ் துணை!
ஷhஹுல் ஹமீது நாயகம் துணை!
செய்யிதலி பாத்திமா துணை!
சிக்கந்தர் அவ்லியா துணை!
ஏர்வாடி அவ்லியா துணை!
பீரான்மலை அவ்லியா துணை!
பாதுஷh நாயகம் துணை!
நாகூர் ஆண்டவர் துணை!
சுல்தான் அலாவுத்தீன் அவ்வியா துணை!
நத்கர் ஒலியுல்லாஹ் துணை!
பாசிப்பட்டணம் அவ்லியா துணை!
பீமா அம்மாள் துணை!
முஸாபர் அவ்லியா துணை!

இவையெல்லாம் என்ன தெரியுமா? மதுரையிலுள்ள ரிக்சாக்கள், லாரிகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.

இப்படியெல்லாம் இறைவனது படைப்புகளிடம் துணை தேடலாமா? உதவி தேடலாமா ? இஸ்லாம் இதை அனுமதிக்கிறதா? இவையெல்லாம் ‘ இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கும் கொடிய ‘ஷிர்க்’ என்னும் மிகப்பெரிய பாவமாகும். இதற்கு மன்னிப்பே கிடையாது. நிரந்தர நரகமே இதற்குரிய தண்டனையாகும். சுவர்க்கம் ஹராமாகிவிடும்.’ என்பதை வான்மறை அல் குர்ஆன் (4:48,5:72,46:5,31:13, 26:213) வசனங்கள் எச்சரிக்கின்றன.
இறைமறை அல்குர்ஆன் கூறுகிறது

1.அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள் 72:18,
2.அல்லாஹ்வைத்தவிர்த்து நன்மையோ தீமையோ செய்ய முடியாதவற்றை அழைக்காதீர்கள 40:14,

நீங்கள் உங்கள் தேவைகளுக்காக என்னையே அழையுங்கள். நான் உங்களு(டைய பிரார்த்தனைகளு)க்குப் பதிலளிப்பேன் 40:60,
3.உதவி என்பது வல்லமையும் ஞானமுடையோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிரவேறு (எவரிடமிருந்தும்)இல்லை 3:26,
4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவி தேடுகிறோம் 1:5
என்ற இறைமறை வசனங்களும் ‘உதவி வேண்டுமாயின் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுங்கள்’ (திர்மிதி) போன்ற நபிமொழிகளும்
மனிதனின் எவ்வகை தேவையானாலும், எவ்வகை உதவியானாலும் இறைவனிடமே கேட்கவேண்டும்.

அவனைத்தவிர வேறு எவரிடமும் உதவியை தேடவே கூடாது. அவ்வாறு கேட்டால் அவன் இறைவனுக்கு இணைவைத்த பாவியாகி விடுவான். இறைவனே அனைத்துக்கும் துணை புரிபவன் என்பது முஸ்லிம்களின் அசைக்க முடியாத ஈமானிய நம்பிக்கையாகும். இன்று இந்த நம்பிக்கையிலிருந்து தடம் புரண்டு முஸ்லிம்கள் எங்கோ சென்றுவிட்டார்கள். யார் யாரிடமோ உதவி தேடுகிறார்கள். இறைவன் நம்மைக் காப்பானாக! நவூதுபில்லாஹ்.

அவ்லியாக்கள் யார்? அவர்களின் இலக்கணம் என்ன?                                                                     
                                                                                                                                                               அவ்லியாக்களின் இலக்கணத்தை இறைமறை பின்வருமாறு கூறுகிறது:-அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் இறைவனை நம்புவார்கள்.(அவனை) அஞ்சுவோராகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-10:62,63)    அவர்கள் 1) இறைவனைத்தவிர எவருக்கும் பயப்படமாட்டார்கள்.  2. எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள் 3) இறைவனை உறுதியாக நம்புவார்கள் 4. உள்ளும் புறமும் இறைவனைஅஞ்சுபவர்களாக (தக்வா உடையவர்களாக) இருப்பார்கள்.

இந்த பண்புகளில் ஒருவர் உண்மையாகவும் உறுதியாகவும் இறைவனை நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் ஈமான், தக்வா என்னும் இருதன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும். இறைவனைத்தவிர எவரும் இதனை அறிந்து கொள்ள முடியாது. எனவே யார் “இறை நேசர்” என்பதை  எவரும் அறிந்து கொள்ள முடியாது.

 மேலும் அவலியாவுக்குரிய இலக்கணத்தைப் பாருங்கள்:-
 இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் “வலி என்பவர் 1. அல் ஆலிமு பில்லாஹ்- இறைவனைப்பற்றி அறிந்தவராக இருப்பார்.2. அல்முவாளிபு அலா தாஅத்திஹி- அவனது கட்டளைகளை சரியாகக் கடைபிடிப்பவராக இருப்பார்.3. அல்முக்லிசு ஃபீ இபாததிஹி -அவனை வணங்கி வழிபடுவதில் பரிசுத்தமானவராக இருப்பார்”  என விளக்கமிளிக்கிறார்கள்.   
                                                             
 இமாம் சவ்கானீ (ரஹ்) அவர்கள் ” இறைவேதத்தை முற்றிலும் கடைபிடிப்வராகவும், பெருமானார(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியைப் வாழ்வின் அனைத்து அமசங்களிலும் பின்பற்றுபவராகவும் இருப்பவரே இறைநேசராக  இருக்கமுடியும் எனக் கூறுகிறார்கள்.
 இவ்வாறிருக்க, நாம் எவ்வாறு ஒருவரை “வலி” என்றும் “மகான்” என்றும் சான்றிதழ் வழங்க முடியும்? இன்று நாம் அவ்லியாக்கள் எனக்கூறிடு்ம் எவரைப்பற்றியும் எதையும்  நாம் அறிந்திருக்கவில்லை. அவர்களின்  அகவாழ்வைப்றியோ புறவாழ்வைப்பற்றியோ எதுவும் நமக்குத்தெரியாது.       
இறைவனை உள்ளும் புறமும் அஞ்சி வாழ்ந்த அவனது அடியார்களைப்பற்றிக் குறிப்பிடும் போது,         
                                                                                   ” அவர்களை அல்லாஹ்வும் பொரிந்துக்கொண்டான்.   அவர்களும் அவனைப் பொரிந்திக்கொண்டார்கள்”  (அல்குர்ஆன் 98:8) என இறை மறை குறிப்பிடுகின்றது. இதன்படி இறை நேசர்கள் என நாம் கூறுவோர் இறைவனைப் பொரிந்திக் கொண்டிருக்கலாம். ஆனால் இறைவன் அவர்களைப் பொரிந்திக் கொண்டானா இல்லையா என்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும் ? இறைவனோ இறை தூதரோ அறிவிக்காத ஒரு செய்தியை நாம் எவ்வாறு நம்ப முடியும?  எனவே எவரையும் நாமாக வலி என்றோ அவ்லியா என்றோ கூறவே முடியாது. அவ்வாறு ஒருவர் தன்னை அவ்லியா என்று கூறினால் அவர் பொய்யராகவே கருதப்படுவார்.

(வலி என்றால் இறை நேசர், அவ்லியா என்றால் இறைநேசர்கள் என்பது பொருளாகும்.  ஒருமைக்கும் பன்மைக்கும் வேறு பாடு தெரியாமல் அவ்லியா என்றே மக்கள் கூறுகின்றனர். எனவே வழக்குப்படியே நாம் அவ்லியா என்ற பன்மைச்சொல்லையே பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கவனத்திற் கொள்க!)

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்! - Part 2

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்!- Part 2

விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான கப்ருஉள்ளது. அது மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த கப்ருமட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது என அதன் ஆதீன கர்;த்தாவான மக்காமு இலப்பையிடம் 1958-ம் ஆண்டு நாம் கேட்டபோது ‘இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். இது வளர்ந்துகொண்டேஇருக்கும்.வளர்ந்து வளர்ந்து விண்ணை முட்டும் போது கியாமத் நாள்-மறுமை நாள்- வந்துவிடும் என்றார்.  


அவர் காலமான பிறகு அவரது மகனார் தந்தையின் பதவிக்கு வந்தார். அவரிடம் இது பற்றி விசாரித்தபோது “அப்படி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறிவிட்டார். இப்போது அவரது பேரரைக் கேட்டால் “இதுவெல்லாம் போலியான செய்திகள்” என விளக்கமளித்தார். ஆதீன கர்த்தாக்களான அவரது குடும்பத்தாரே இந்தப் பொய்ச் செய்திகளை நம்பமுடியவில்லை. இருந்தும் பொய்களைப் பரப்பி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.

வியாபாரி அவ்லியா 

அவரே மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ். இவர் யார் ? எந்த ஊர் ? எப்போது
பிறந்தார்? என்பது தெரியவில்லை. வியாபாராத்திற்காக வந்தவர் அந்த ஊரிலே இறந்து விட்டார். நல்ல மனிதராகத் தெரிந்ததால் அவரை அடக்கம் செய்து பெரிதாக கப்ரும் கட்டிவிட்டார்கள். பின்னர் அவரை ஒரு மகானாகச் சித்தரித்து “மெய்நிலை கண்ட ஞானி மஹான் மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்வாக” விளம்பரப்படுத்தி இன்று ஆண்டு தோறும் விமரிசையாக விழா நடத்தி வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்.

மோதீனார் அவ்லியா 

இவர் தான் மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்! திருவிதாங்கோடு அஞ்சு வன்னம் ஜும்மா பள்ளியில் அடக்கமாயிருக்கும் இவர் அந்தப்பள்ளி வாசலில் மோதீனாராக பணியாற்றி வந்தவர். அங்கே அவ்லியா இல்லாத குறையை போக்க வழி தேடிக்கொண்டிருந்த ஊர் மக்களுக்கு,”இது நமக்குக் கிடைத்த மிகப் பெரும் பேறு” எனக் கருதி சாதாரண நூருத்தீன் மோதீனாராக இருந்த இவரை “மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்” என விளம்பரப்படுத்தி இன்று அவருக்கும் கோலாகலமாக ஆண்டு தோறும் விழா நடைபெற்று வருகிறது.

பாறையை தாங்கி நிற்கும் ராட்சஸ அவ்லியா

சிரியாவிலிருந்து படகேறி வந்த இவரும் இவரது சீடர்களும் திருச்சி வந்து அங்குள்ள மலைமீது தவம் செய்து வந்தனர்.அப்போது சில பூதங்கள் ஒன்று திரண்டு இவர்கள் மீது ஒரு பாறையைத்தள்ள இவர்கள் தம் தவவலிமையால் அது தம்மீது விழாது செய்தனர். அப்பாறை இப்போதும் சாய்ந்த நிலையிலேயே இருக்கிறது. அது தம்மீது விழாது இவர்கள் தம் பாதங்களை ஊன்றி நின்றபோது இவர்களின் பாதங்கள் பதிந்த அடையாளமும், பாறையின் மீது இவர்களின் கை பதிந்த அடையாளமும் இப்பொழுதும் இருக்கின்றன என அவர்களது பக்தர்கள் கூறி வருகின்றனர். திருச்சி நத்ஹர்ஷh வலியைப்பற்றிச் சொல்லப்படும் இந்த கதையை நம்ப முடிகிறதா ? அனுமான் கதை தான் இது!

புலியாக வந்து காப்பாற்றும் நடமாடும் அவ்லியா

நெல்லை மாவட்டம் பொட்டல் புதூருக்கு மேற்கே ஏழு கல் தொலைவில் 1800 அடி உயரத்தில் கோதரிசா மலை உள்ளது. இங்கு கோதரிசா என்ற அவ்லியா வாழ்ந்து மறைந்தார். அவரின் நடமாட்டம் இப்பொழுதும் இருக்கிறதென்றும் புலிமீது இவர் இவர்ந்து வருவதைச் சிலர் பார்த்திருப்பதாகவும், சிலர் அவருடன் உரையாடியிருப்பதாகவும், எவருக்கேனும் வன விலங்குகளால் ஆபத்து நேரும்போது இவர் காட்சி அளித்துக் காப்பாற்றுவதாகவும் கூறப்படுகிறது. கிள்று (அலை)மீது கட்டிவிடப்பட்ட கதை தான் இது.

ஐவேளையிலும் ஆடுபோல் கத்தும் அவ்லியா

துருக்கி நாட்டைச் சேர்ந்த கோயுன் பாபா என்ற அவ்லிய வாய்பேசுவது இல்லை. ஐந்து வேளை தொழுகைகளின் போது ஆடு கத்துவது போன்று கத்துவார். இதன் காரணமாக இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது எனக்கூறும் மக்கள், எப்படித்தான் வாய் பேசாமல் ஆட்டைப்போன்று கத்தும் ஊமையரை ஆன்மீக ஞானம் பெற்ற அவ்லியா என ஏற்க மனம் வந்ததோ ?

காடு மலைகளில் தாவி தவமிருந்த அவ்லியா

கருவிலே ஞானியான மோன குரு மஸ்தான் ஏழு வயதிலேயே வாயை மூடியதால்”ஊமைப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டார்.இளம் வயதிலேயே துறவறத்தை மேற் கொண்ட இவர் நாற்பது நாட்கள் கல்வத்தில் (தனித்திருந்து இறை தியானத்தில)ஈடு பட்டிருந்தனர். பின்னர் சிகக்ந்தர் மலையிலும், பீரான் மலையிலும், மலேயாவிலுள்ள கொடிமலையிலும், இலங்கையிலுள்ள ஆதம் மலையிலும், தஃப்தர் ஜெய்லானியிலும் தவமிருந்தார். பின்னர் சாமி நாதன் செட்டியாரும், சுப்ரமண்யம் செட்டியாரும் இவருக்கு தொண்டியின் கடற்கரை அருகில் கடடிக் கொடுத்த மடத்தில் அமர்ந்து அருளுரை வழங்கினார்.இவர் யாரிடமும் பேசுவதில்லை. எப்போதும் மௌனமாகவே இருப்பார். பின்னர் எப்படித்தான் அருளுரை வழங்கினாரோ? அவரைப்பற்றிய மோனகுரு மஸ்தான் சாகிபு பாடலில் இந்தச்செய்தி இடம் பெற்றிருக்கிறது.

பறக்கும் அவ்லியாக்கள்!

விமானங்களோ விண்கலங்களோ பறக்கும் தட்டுகளோ இல்லாமல் மனிதர்கள் பறக்கும் அதியத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
பல்கு நாடு ஈன்ற மாபெரும் இறை நேசர் எனப்போற்றப்படும் அஹ்மது இப்னு கஸ்ரவிய்யா அவர்களுக்கு 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். இவர்களது வரலாறறில் இவர்கள் அத்தனை பேரும் ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் போது நடந்து செல்வதில்லையாம். பறந்தே செல்வார்களாம!

இதைப்போன்றே ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் தண்ணீரிலே தொழுகை விரிப்பை (முஸல்லாவை) விரித்து தொழுது கொண்டிருந்தார்களாம். இதைப்பார்த்துக் கொண்டிருந்த இறை நேசச்செல்வி ராபியா பஸரிய்யா அவர்கள், இதற்குப் போட்டியாக” இவ்வளவு தானா உங்களின் வல்லமை!” நான் விண்ணிலே தொழப்போகிறேன்’ என முஸல்லாவை வானத்தை நோக்கி வீசியெறிந்து விட்டு அதில் தாவிச்சென்று தொழுது கொண்டிருந்தார்களாம். இப்படியெல்லாம் சாகஸங்கள் செய்ய இந்த அவ்லியாக்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? விளம்பரமே இல்லாது இலைமறைகாயாக வாழ்ந்த இந்த இறையடியார்களை மார்க்கத்தின் பெயரால் இப்படித்தான் புகழவேண்டுமா? இவ்வாறு தான் பெருமைப் படுத்த வேண்டுமா? கப்ஸாக்களை அள்ளி வீசவேண்டுமா? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

மிதக்கும் மஹான்கள்!!!

மஹான் அஹ்மது கஸ்ரவிய்யாவின் மாணவர்கள் தண்ணீரிலே நடந்து செல்வார்களாம். இவ்வாறு பல அவ்லியாக்கள் தண்ணீரிலே நடந்ததாகவும் மிதந்ததாகவும் பலரைப்பற்றியும் பொய்க் கதைகளை வாய் கூசாமல் அள்ளி வீசுகிறார்கள்.எழுதுகிறார்கள். இதற்கெல்லாம் மறுமையில் விசாரணைகள்  இல்லையா?

இலங்கையில ஒளிவீசும் அவ்லியா

இலங்கையில் தஃப்தர் ஜெய்லானி என்றொரு இடம் மலை முகட்டில் உள்ளது. அங்கே உள்ள துவாரத்தில் பார்த்தால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானின் ஒளி வீசிக்கொண்டு இருப்பதாக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்து வருகின்றனர். இந்த அதிசயத்தை 1978ல் நாமும் பார்த்து வர மாணவர் குழுவுடன் சென்றோம்.அந்த இடத்தை பார்வையிட்டபோது துவாரம் செல்லும் அடிவாரத்தில் சூரியனின் ஒளிபட்டு அங்கே வெளிச்சம் தெரிகிறது.இதை வைத்து அவ்லியாவின் ஒளி வீசுகிறது என கதை கட்டிவிட்டார்கள். இந்த ஒளி பகலில் மட்டும் தான் தெரியும். இரவில் தெரிவதில்லை.இதிலிருந்தே அவ்லியாவின் ஒளி இல்லை எனடபதை எந்த பாமரனும் புரிந்து கொள்ளலாம். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி இலங்கைக்கு வந்ததாக வரலாறே கிடையாது. ஏன் இந்தியாவுக்கக் கூட அவர்கள் வந்ததில்லை.

இந்த கதையைப்பார்க்கும் போது கடலூர் வள்ளலாரின நினைவு தான் வருகிறது. கடலூரில் வள்ளலாரின் ஜோதி அதிகாலை 4.30 மணிக்குத் தெரியும் என்று மக்கள் திரளாகச் சென்று பார்த்துவருவார்கள். இதைப்பற்றி தீர விசாரித்தபோது அங்கே ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நமது சகோததரர் சொன்ன செய்தி நம்மை சிரிக்க வைத்தது.
அங்கே ஒவ்வொரு நாளும் சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கிப்போகும் இரயில் அதிகாலையில் கடலூர் வழியாகச் செல்லும்.கடலூரை கடந்து செல்லும் ரயில் அங்கே உள்ள வளைவில் திரும்பும்போது அதன் விளக்கொளி சிலநிமிடங்கள் ஊருக்குள் வீசும். அதைப்பார்த்து வள்ளலாரின் ஒளி வீசுவதாக வள்ளலார் பக்தர்கள் கட்டி விட்ட கதை இது என்று அவர் சொன்னபோது வாய்வெடிக்ச் சிரித்தோம்.

காலடியில் கஃபத்துல்லாஹ்!

பல்லாயிரம் மைல்களைத் தாண்டி கண நேரத்தில் மக்கா வந்து தொழும் அவ்லியாக்களைப் பார்த்திருக்கிறீர்களா ? ஒருமுறை ‘பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் அவர்கள் பள்ளிவாசல் வந்து தொழுவதில்லை’ என மக்கள் ஸதகத்துல்லாஹ் அப்பாவிடம் புகார் கூறினார்கள். அதை நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக அவர்களின் வீட்டைத்தேடி வந்த அப்பா அவர்கள், பீரப்பாவின் நலன் விசாரித்த பிறகு வந்த விசயத்தை கேட்டேவிட்டார்கள். அப்போது பீரப்பா அவர்கள் ‘நான் மக்கள் நடமாடும் பள்ளிவாசல்களில் தொழுவதில்லை.எப்போதும் மக்கா சென்று கஃபத்துல்லாஹ்வில் தொழுவது தான் வழக்கம் என்று கூறியதும், அது எவ்வாறு சாத்தியப்படும்? என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள் ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள். அதைக் கேட்ட பீரப்பா அவர்கள் ‘இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டுவிட்டு ‘இதோ பாருங்கள்! என்று தாம் நெசவு நெய்துகொண்டிருந்த குழியிலிருந்து தமது காலை அகற்றினார்கள். அங்கே பாதம் இருந்த இடத்தில் கஃபத்துல்லாஹ் தெரிந்ததாம். அதில் பீரப்பா பக்தியோடு தொழுது கொண்டிருந்தார்களாம். இந்தப் பொய்க் கதையை அறிவுலகில் வாழும் உங்களால் நம்ப முடிகிறதா?

கஃபாவுக்குப் பறக்கும் அவ்லியா

காயல்பட்டணம் தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் ஒவ்வொரு வக்துக்கும் கஃபத்துல்லாஹ்வுக்குச் சென்று தொழுது வருவார்களாம். அதற்காக வைத்திருக்கும் ஒருமரப்பெட்டியில் ஏறி அமர்ந்ததும் அது கஃபாவுக்குப் பறந்து சென்று திரும்பி வந்து விடுமாம். அந்த மரப்பெட்டி இன்றும் அவர்கள் நினைவாக அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் வேடிக்கையைப் பார்க்கலாம்.

குடலைக்கழுவும் அவ்லியா!

 ஒருமுறை ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள் காட்டுபாவா சாஹிப் மலை முகட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார்களாம். அங்கே ஒரு நீரோடையில் பீரப்பா அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் தமது குடலை காறி உமிழ்ந்து துவைத்துக் கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எனக்கேட்டார்கள் அப்பா அவர்கள். உடனே பீரப்பா அதை மீண்டும் விழுங்கிவிட்டு ‘ துவைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்’. என பதில் சொன்னார்களாம். இவையெல்லாம் நடக்கக்கூடிய காரியங்களா?

கயிறில்தொங்கும் அவ்லியா

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1950களில் மக்கட்டி இலப்பை என்று ஒரு மஹான் இருந்தார்.அவர் பல வேடிக்கைகளை செய்வதுண்டாம். ஒரு நாள் ஒரு கடைக்குச் சென்று வாழைப்பழம் கேட்டிருக்கிறார். கடைக்காரர் இல்லையென்று விரட்டிவிட்டார். மறுநாள் காலையில் கடையைத்திறந்தபோது இந்த அவ்லியா பழக்குலை கட்டியிருந்த கயிற்றில் கழுத்தைக்கட்டி தொங்கிக் கிடந்தாராம். திடுக்கிட்ட கடைக்காரர் உடனே காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததும் அவர்கள் விரைந்து வந்தனர். பிரேத விசாரணைக்காக உடலை பரிசோதனைக்குக் கொண்டு செல்ல கயிற்றை அறுத்தபோது ‘ இங்கேயும் தூங்க விடமாட்டீர்களா?  தொல்லை தருகிறீர்களே! என்று சலித்துக்கொண்டு அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டாராம்.

புறா,வண்டு,ஈ,ஓலையிடம் பேசும் வித்தக அவ்லியா!

கி.பி 1268 ல் வாழ்ந்த கீழக்கரை பல்லாக்கு வலியுல்லாஹ்வைப்பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. இவர் ஒரு மஜ்துர்ப். தன்னிலை மாறும் போது உணர்வற்று வாயில் வந்த படி உளறுவார். அப்போது இவர்களுக்கு தொழுகை கடமையில்லையாம்.
புறா,வண்டு, ஈ, ஓலை ஆகியவை பேசும் பேச்சை அறியும் ஆற்றலை இறைவன் இவர்களுக்கு வழங்கியிருந்தானாம். ஒரு தடவை இவர்கள் ஒரு புறாவைச் சுட்டிக்காட்டி ‘இது என்னை காத்தமுல் வலி (வலிமார்களுக்கெல்லாம் இறுதி வலி) என்று கூறுகின்றது என்றார்;. மற்றொரு தடைவ ஒரு வண்டைச் சுட்டிகாட்டி இது என்னை ‘ ஸையிதுல் ஆலிம்’ ( அறிஞர்களின் தலைவர்’ என்று கூறுகின்றது என்றார்.

வேறொரு தடவை தம் உடல் மீது வீற்றிருந்த இரு ஈக்களை சுட்டிக்காட்டி ‘ இதில் ஒன்று பல்லாக்குத் தம்பி ஒரு முஃமின்’ என்று கூறுகின்றது. முற்றொன்று பல்லாக்குத் தம்பி ஒரு வலியென்று கூறுகின்றது என்றாராம்.
நபி ஸுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டுமே பறவை இனங்களின் மொழியை அறியும் ஆற்றல் வழங்கப்பட்டிருப்தாக திருக்குர்ஆனின் 27:16 வசனம் கூறுகிறது.ஆனால் இந்த மகானோ தனக்கே எல்லாம் வழங்கப்டிருப்பதாகக் கூறுகிறார்.தன்னிலை மறந்து உளறும் இவரது கூற்றை எப்படி நம்புவது ? அதுவும் தொழுகையே இல்லாத இவர் எப்படி அல்லாஹ்வின் அருளைப்பெற்று பறவை,வண்டு,ஈ போன்றவற்றின் மொழிகளை அறிந்திருக்கும் ஆற்றலைப் பெற்றார். இது சாத்தியம் உண்டுமா என ஆராய்ந்தாலே இவரைப் பற்றிக் கூறப்படும் கதைகள் பொய்யானவை என்பது நமக்குப் புரிய வரும்.

40, 60, 80 அடி நீளத்தில் அவ்லியாக்கள்.

தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டையில் அடங்கப்பெற்றிருக்கும் செய்கு தாவூது வலி யார் , எங்கிருந்து எப்பொழுது இங்கு அடக்கமானார் என்று எவருக்கும் தெரியாது.இவரின் அடக்கவிடம் 40 ழுழம் நீளமுள்ளதாக இருக்கிறது. இவர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து பல சித்து வேலைகள் செய்து அடங்கப்பெற்றார் என்றும் அது கால வெள்ளத்தால அழிந்து விட்டதென்றும் பின்னர் 200 ஆண்டுகளுக்குப்பின் கருப்பையாக் கோனார் தம் தரிசு நிலத்தை உழவே ஏரின் கொழுமுனை இவரின உடலைத் தாக்கி இரத்தம் பீருட்டு வந்ததென்றும், அவரும் கண்ணொளி இழந்தார் என்றும் அன்றிரவு, அவரின் கனவில் இவர் தோன்றி ‘ தம் பெயர் iஷகு தாவூத் என்பதாகவும் தாம் அங்கே அடங்கப் பெற்றிருப்பதாகவும் அண்மையிலுள்ள நாச்சி குளத்துக்குச் சென்று அங்குள்ள பீர்கான், ஹமீது கான் இருவரையும் அவ்விடம் அழைத்துவரின் அவர் கண்ணொளி மீளப்பெறுவார் என்று கூறியதாகவும் அவ்விரு பெரியார்களின் கனவிலும் இம்மகான் தோன்றி தம்மைப்பற்றியும் கோனார் வருவது பற்றியும் எடுத்துரைத்து மறைந்ததாகவும், அவ்வாறே கோனார் செய்யவே கண்ணொளி மீளப்பெற்றார். அந்த நன்றிகடனாகவே ஐந்தரை வேலி நிலத்தை மானியமாக வழங்கி அதன் மீதே 40 அடி தர்கா எழுப்பியதாகவும் கதை போகிறது.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள்,சித்த சுவாதீனமற்றவர்கள்,சூனியம் வைக்கப்பட்டவர்கள், மகப்பேறில்லாதவர்கள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர்.அவர்களின் கனவில் இம்மகான் தோன்றி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும்,கனவில் நோயாளர்களுக்கு அறுவை சிகிட்சை செய்வதாகவும் , அவர்களுக்குத்துணையாக ஒரு பர்லாங் தொலைவில காஷ்மீரிலிருந்து வந்து அடங்கப் பெற்றுள்ள ‘பாத்திமா நாச்சியார்’ நர்ஸாக நின்று உதவுவதாகவும் கதை கூறப்படுகிறது.

அவ்லியாவின் சித்து வித்தைகளும் அந்நிய மங்கையான ‘காஷ்மீர் கன்னி’ இரவிலே வந்து இவருக்கு உதவும் கற்பனைக் கதைகளையும் இன்னும் நம்பிக் கொண்டு ஈமானை அடகு வைக்கும் மக்களின் அறியாமையை என்னென்பது ?
இவருக்கு போட்டியாக கொடிக்கால் பாளையத்தில் ஜஹான்ஷா அவ்லியாவின் அடக்கவிடம் 60 அடி நீளமுள்ளது என்றும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

இன்னும் ஒரு படி மேல் சென்று ஓமான் நாட்டில் ஸலாலாவில் ஸாலிஹ் என்ற பெரியாரின் கப்றை 80 அடி நீளத்தில் கட்டி இவர் 80 அடி உயரமுள்ளவர் எனக்கூறி வருவது இதை விட வேடிக்கையாக இல்லையா ?
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த (மகாமு இப்றாஹீம்) கல்லைப்பற்றி திருமறை திருக்குர்ஆன், ‘அல்லாஹ்வின அத்தாட்சியாக’ வர்ணிக்கும் தடயத்தை புனித ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஆண்டுதோறும் தம் கண்களாலேயே கண்டு வருகின்றனர். அந்தக் கல் அடையாளத்தைப் பார்க்கும் போது இப்றாஹீம் நபி சுமார் ஏழு அடி உயரமுடையோராகவே இருந்திருப்பார்கள் என நம்மால் கணிக்க முடிகிறது. இவ்வாறிருக்க 700 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த மனிதர்கள் 40,60,80 அடி உயரமுடையவர்களாக இருந்திருக்க முடியும் என்பதை நம்ப முடிகிறதா? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? இன்றைய அறிவுலகம் இதை ஏற்றுக் கொள்ளுமா ? இவ்வாறு பிதற்றுவோரைப் பைத்தியக்காரர்கள் என உலகம் நகைக்காதா ?

காற்றாடி அவ்லியா 

1975 ஆம் ஆண்டுகளில் கன்னியா குமரி மாவட்டம் ஆளுரில் ஒரு அதிசயம் நடைபெற்றது. அங்கிருந்த கப்ரு ஒன்றில் கப்ரைப் போர்த்தியிருக்கும் துணி காற்றில் வேகமாக ஆடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட சுற்று வட்டார மக்களும், பள்ளிவாசல் இமாம்களும், ஹஸ்ரத் மார்களும் கப்ரு ஆடிக் கொண்டிருக்கும் அதிசயத்தைக்காண படையெடுத்துச் சென்றனர்.
பின்னர் தான் வேடிக்கை காட்ட அந்த ஊரிலுள்ள விஷமம் நிறைந்த சில இளைஞர்கள் ‘ இதை வியாபாரமாக்க துணிக்குள்ளே சிறிய மின் விசிறி ஒன்றை பொருத்தி மூடிவிட்டனர். சற்றுத் தொலைவில் யாரும் பார்க்காத வண்ணம் மின்விசிறிக்கு மின்சார இணைப்பைக் கொடுத்து இயக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

மின்விசிறியினால் துணி ஆடிக்கொண்டிருந்ததால் ‘அவ்லியாவே ஆடிக்கொண்டிருப்பதாக’ வதந்திகள் பரவின. காற்றாடி அவ்லியாவைப் பார்க்க பக்தர்களும், பக்தைகளும் திரள ஆரம்பித்தனர். இந்த ஒரு மாத காலத்தில் நேர்ச்சைகளும், உண்டியல் பணங்களும் குவியத்தொடங்கின. திட்டமிட்ட வசூலைப் பெற்றதும் அந்தப் போலிகள் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டனர். மக்களை ஏமாற்ற எத்தனையோ வழிகள் ! வியாபார வித்தைகள் !! மக்கள் ஏமாற ஏமாற புதுப்புது அவ்லியாக்கள் திடீர் பிள்ளையாரைப் போல் திடீர் திடீரென முளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹயாத் அவ்லியாக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார், திட்டுவிளையில் இரு கப்றுகளை ‘ஹயாத் அவ்லியா’ என்று கூறுகின்றனர். இவர்களை மண் தோண்டிப் புதைத்தபிறகு மீண்டும் வேறு வழியாக வெளியேறிவிடுவதால் இவர்கள் ‘ஹயாத் அவ்லியா’ உயிருள்ள அவ்லியா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மட்டும் உயிரோடிருந்து மற்றவர்களெல்லாம் செத்த அவ்லியாக்கள் என சொல்ல வருகிறார்களா? இவையெல்லாம் சாத்தியப்படுமா? என்பதைக்கூட சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

படகிலே மையித்தாக மிதந்து வந்த குளச்சல் அவ்லியா

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் முன்பொரு காலம் ஒரு படகு மிதந்து வந்ததாம். அதை கிறித்தவர்கள் பிடிப்பதற்காக சென்றபோது அது ஓடிவிட்டதாம். பின்னர் இந்துக்கள் பிடிப்பதற்காக ஓடினார்களாம். படகு பிடிதரவில்லை. இறுதியாக முஸ்லிம்கள் பிடிப்பதற்குச் சென்ற போது அது அருகே வந்ததாம். பின்னர் அந்த படகைத் திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு கடிதம் இருப்பது தெரியவந்தது. அதை படித்த போது ‘ நான் இன்னார்! என்னை குளச்சலில் இந்த கடற்கரை அருகில் அடக்கம் செய்யவேண்டும்’ என எழுதப்பட்டிருந்தது.

இதை 1974 ல் குளச்சல் வந்த பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்களிடம் ஊர் தலைவர் சொன்ன தகவலை எழுதிக்கொடுத்தேன். பின்னர் சென்னை வந்தபோது கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம்,அதிராம்பட்டணம் போன்ற நான்கு ஊர்களிலிருந்தும் இதைப்போன்ற செய்திகள் வந்திருந்தன. அப்போது தான் புரிந்தது இதில் எந்த உண்மையும் இல்லை.யாரோ கடற்கரை பகுதிகளில் பயானில் கப்ஸா விட்டிருக்கிறார்கள். நம்பவே முடியவில்லை.

‘மையித் படகு’ மக்களைத்தேடி ஓடி வருமா ? அதை நம்பவேண்டுமாம்! அவரது பெயர், முகவரி. எந்த ஊர்? எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார்? ஊருக்கு என்ன செய்தார்? என்ற எந்த விதமான நம்பகரமான தகவலுமில்லை. ஊர் மக்கள் முதலில் ‘வப்பூசன்’ எனப் பெயர் சொன்னார்கள்.பின்னர் ‘வாப்பு ஹுஸைன்’ என்று சொல்லத்தொடங்கினார்கள். அவ்லியாவுக்கு கூட்டம் சேரச் சேர இப்போது செய்கு பாபுல் ஹுஸைன் அவ்லியா (ரலி)’ என கிரேடு உயர்த்தி பெயர் பலகையும் தொங்க விட்டிருக்கிறார்கள். மக்கள் சாரை சாரையாக இப்போது படையெடுத்து வரத் தொடங்கிவிட்டார்கள்.
இவ்வளவு காலமாக இல்லாதிருந்த இந்த ஊரில் இப்போது மவ்லிது,கந்தூரி, நேர்ச்சை, விழா என திடீரென்று எப்படி முளைத்தது? இப்போது ஆண்டுதோறும் இங்கு பெரிய விழாவே நடத்தப்படுகிறது.மக்கள் மூட்டை மூட்டையாக அரிசி,மசாலா,பழவகைகளைக் கொண்டு கொட்டுகிறார்கள். ஆடு, கோழிகள் என இன்னொரு பக்கம் குவிகிறது. சில்லரையாக சிறிது விளம்பிவிட்டு மொத்தமாக வேறு பக்கம் பதுக்கப்படுகிறது.

இந்தப் போலித்தனங்கள் ஊர் மக்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் தெரிந்தும் அவ்லியாவின் மீது கொண்ட பக்தி இவர்களின் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.
சுனாமி வந்தபோது இன்னொரு புரளியையும் கிளப்பிவிட்டார்கள் இந்த கப்ரு ஆராதனைக்காரர்கள். சுனாமி வந்த போது கப்றைச் சுற்றிலும் வெள்ளம் புரண்டு வந்து அனைத்தையும் அழித்துவிட்டதாம். ஆனால் கப்றின் மீது விரிக்கப்பட்டிருந்த பட்டுத்துணி மட்டும் நனையவில்லையாம். எல்லாம் அழிந்த பின்னர் கப்ரின் மீது ஒரு புதிய பட்டுத்துணியை விரித்துவிட்டு அவ்லியாவின் பட்டுத்துணி மட்டும் நனையவில்லை. அது அப்படியே தான் இருந்தது என கிளப்பிவிட்டார்கள் புதிய புரளியை! பாருங்கள் அவ்லியாவின் கராமத்தை!

மறுபிறவி எடுத்த கமுதி அவ்லியா! 

இப்போது ஆங்காங்கே சில கம்பங்களைக்கட்டி நாகூர் தர்ஹா கொடி, அஜ்மீர் நாதா கொடி! கவ்துல் அஃலம் கொடி என எழுதி சற்று உயரமான கொடிகளில் கம்பங்களை நாட்டி சென்னை மண்ணடி , புதுப்பேட்டை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் காணிக்கை உண்டியல்களைக் காணலாம். அது போல சில ஊர்களில் நாகூர் தர்ஹா போன்ற ஒரு கப்ரைக்கட்டி இங்கும் நாகூர் அவ்லியா அடக்கமாயிருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.
இவ்வாறு போலியாக எழுப்பப்பட்ட ஒரு கட்டடம் கமுதியில் காணப்படுகிறது. நாகூர் நாயகம் எங்கள் ஊரிலும் வந்து மீண்டும் அடக்கமாகி இருக்கிறார்கள் என்று அந்த ஊர் மக்களே சொல்லும் போது தலையை முட்டிக்கொள்ளலாம் போலிறிருக்கிறது. இது போல் பொட்டல் புதூரிலும் முஹ்த்தீன அப்துல் காதிர் (ரஹ்) பெயரில் ஒரு கப்றை கட்டிவைத்திருக்கிறார்கள்.அவர்கள் இந்தியாவுக்கு வந்ததாகவே எந்த ஆதாரமுமில்லை. போலி சமாதிகள் எப்படி உருவாகிறது? மக்களின் கற்பனை வளத்தைப் பாருங்கள்.

இன்றும் நடமாடும் அவ்லியா

தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த காயல் ஜலீல் மைதீன் என்னும் நடமாடும் அவ்லியா தம் சீடப்பெண்ணுக்கு ஆண்மகவு தான் பிறக்கும் என்று தமது ஞானக் கண்களால் அறிந்து ஆரூடம் கூறியிருக்கிறார். அதை நம்பியிருந்த அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை ஏமாற்றத்தோடு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார். உடனே அந்த அவ்லியா அது பெண் குழந்தை இல்லை.ஆண்குழந்தை தான்! நான் வந்து நிரூபித்துக்காட்டுவதாகக் கூறி அந்த ஊருக்குப் பயணம் போயிருக்கிறார் நடமாடும் அந்த அவ்லியா. அங்கு சென்ற அவ்லியா சில மந்திரங்களை ஓதிவிட்டு ‘இப்போது பாருங்கள்! இது பெண்குழந்தையல்ல. ஆண்குழந்தை தான். உங்கள் கண்களுக்கு பெண் குழந்தையாகத் தெரிந்திருக்கிறது என்று கூறியதும் அந்தக் குடும்பமே வியந்து போனதாம். அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லையாம்’ என்று அந்த அவ்லியாவே ஒரு மேடையில் பேசியிருக்கிறார். இதை நம்புவதற்கும் ஒரு கூட்டமிருக்கிறது. பாருங்கள் இந்த அறியாமையை.

அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள்! - Part 1

அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள் ! - Part 1

அவ்லியாக்களின் திரை கிழிகிறது.
அறிவுலகம் வெட்கித் தலைகுனிகிறது.


அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?


1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !

2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !

3. பச்சைத் தலைப்பாகை,நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!

4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!

5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!

6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!

7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)

8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீதுகொடுப்பவர் அவ்லியா!

9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!

10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !

11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!

12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக

நடிப்போர் அவ்லியாக்கள்!

இவர்கள் பெயரை உச்சரித்துக் கொண்டு சில போலிப்பேர்வழிகள் ஆங்காங்கே கடற்கரையில், வாய்க்கால் ஓரங்களில், காடுகளில், மேடுகளில், பாலைப் பெருவெளிகளில் கல்லறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர் ‘அவ்லியா’ எனக் கூறி கட்டுக்கதைகளையும், கனவுக்காட்சிகளையும் அரங்கேற்றி மக்களை நம்ப வைத்து போலிச்சாமியார்;களையும் மிஞ்சுமளவுக்கு போடும் ஆட்டங்கள் அப்பப்பா சொல்லவே வாய் கூசுகிறது.
மனிதப்புனிதர்கள், மகான்கள், மெய் நிலை கண்ட ஞானிகள் எனச் சித்தரிக்கப்படுவோரின் பெயர்களைப் பார்த்தாலே இவர்கள் யார்? இவர்களின் வண்டவாளங்கள் என்ன என்பது தெரிந்து விடும்.

அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!

1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)
47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள்
பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால் பாளையம்)   
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)

அப்பப்பா அவ்லியாக்களில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்! எத்தனை எத்தனை வகைகள்!  இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

இவர்கள் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்கள் ? எப்போது இறந்தார்கள் ?
இங்கே எதற்கு வந்தார்கள் ? இவர்கள் மக்களுக்காக செய்த சேவைகள் என்னென்ன?மார்க்கத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள் ?
சமுதாயம் அடைந்த பயன்கள் என்ன ? இவர்கள் செய்த சாதனைகள் என்ன ?
இவர்கள் குர்ஆன் நபிவழியில் வாழ்ந்தவர்களா?

என மக்களைக் கேட்டால் மக்கள் திருதிரு என்று முழிக்கிறார்கள்.              இவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முகவரி என்ன?
என்பதையெல்லாம் தெரியாமல் கூடு,கொடி, உரூஸ், சந்தனக்கூடு என கண்மூடித்தனமாக இந்த போலிகள் பெயரால் ஆண்டுதோறும் விழாக்கள் எடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.

இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் அறிவு ஜீவிகளான நாம் இந்தப் போலி மஸ்தான்கள், அவ்லியாக்களை நம்பலாமா? இநதப்போலிகளுக்கு நாம் பலியாகலாமா? நம்பி மோசம் போகலாமா ? உரூஸ்கள், கந்தூரிகள், யானை ஊர்வலங்கள் என நடத்தலாமா? என நாம் சற்று சிந்தித்தாலே இவையெல்லாம் போலியானவை., மார்க்கத்திற்கு எதிரானவை என நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

அப்படியானால் மக்களை ஏமாற்றும் சாய்பாபாக்கள், சந்திர பாபாக்கள், பிரேமானாந்தக்கள், ஜான்கள், ஆனந்த ராஜ்கள் பின்னால் செல்லும் மக்களுக்கும் நமக்கும் என்ன தான் வேற்றுமை? திருப்பதிக்கும்,திருச்செந்தூருக்கும், வேளாங் கண்ணிக்கும் செல்லும் பக்தர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்?
இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களே! அறிவுக்கேற்ற மார்க்க்கமாக உலகே ஒப்புக்கொண்டிருக்கும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட போலித்தனங்களை, பேதைத்தனங்களை அனுமதிக்கலாமா? பின்பற்றலாமா ? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தின் பெயரால் ஏமாற்றும் கபோதிகளின் களியாட்டங்கள் நாளிதழ், வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சிகள்,இன்டெர்நெட் போன்றவற்றில் அம்பலப்படுத்தும் போலித்தனங்களை நாள் தோறும் கண்டு வருகிறோமே! இன்னுமா இந்த அறியாமை ? இந்த மாயையிலிருந்து விடுபடவேண்டாமா? என உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

இதோ பாருங்கள் !
நம் மக்களின் அறியாமையை
!

யானைக்கு ஒரு தர்ஹா!
குதிரைக்கு ஒரு தர்ஹா!!
கழுதைக்கு ஒரு தர்ஹா!!!
கழிப்பறைக்கு ஒரு தர்ஹா!!!!

வியப்பாக இருக்கிறதா ? 

ஆம். இவையெல்லாம் உண்மை தான்!
நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் ‘மைதீன் பிச்சை’ யென்ற யானைக்கு தர்ஹாகட்டிவழி படுகிறார்கள். பாக்கியம் பெற்ற யானை!

கன்னியா குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஹ்யித்தீன் பள்ளிவாசல் எதிரிலுள்ள கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ரடி அவ்லியாவின் பக்கத்து கப்ரு, அவர் பயணம் செய்த குதிரையின் சமாதி! இதற்கும் ஆண்டு தோறும் விழாக்கள் எடுக்கின்றனர். கொடுத்து வைத்த குதிரை!

திருநெல்வேலி பேட்டையிலிருந்து சேரன்மாதேவி செல்லும் வழியில் ஓரிடத்தில பெயர் தெரியாத அவ்லியா ஒருவர் கழுதையில் பயணம் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் அது இறந்து விடவே அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள். இன்று அதற்கும் வழிபாடு நடக்கிறது. அதிர்ஷ்டக்காரக் கழுதை!

கேரளாவில் கொல்லம் முல்லக்கல் அருகே ஒருகழிப்பிடம் (டாய்லெட் கட்டிடம்) இருக்கிறது. அது இன்று ஒரு தர்ஹாவாக ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. அங்கே சென்ற கப்ரு பக்தரான ஆலிம் பேராசிரியர் ஒருவர் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து தானும் சென்று தமது பங்காக ஸியாரத்தை மிகவும் பயபக்தியோடு முடித்துக்கொண்டு திரும்பினார். பின்னர் அது பற்றி விசாரித்த போது தான் அது அவ்லியாவின் கப்ரல்ல. அது மக்கள் செல்லும் ஒரு பொதுக் கழிப்பறை எனத் தெரிய வந்தது. தரிசனத்துக்குரிய தர்ஹா!

என்னே மக்களின் மதியீனம்.

இதில் படித்தவர்களும் பலியாகிறார்களே! புரிதாபமாக இருக்கிறது. பக்திப்போதையில் எதையுமே விசாரிக்காமல் கண்மூடித்தனமாக செய்யும் வழிபாடுகளின் இலட்சணத்தைப் பார்த்தீர்களா?