பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, June 30, 2020

முகமன் கூறுதல்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் முகமன் கூறுதல் குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்!

முகமன் கூறுதல்

வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறுதல்

வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறி நுழையும் வழக்கம் நம்மில் அதிகமானோரிடத்தில் இல்லை. ஆடு மாடுகள் முறையின்றி நுழைவதைப் போன்றே ஆறரிவு பெற்ற நாமும் நடந்து கொள்கிறோம். நாகரீகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலகட்டத்தில் இந்த ஒழுங்கு பேணப்படுவதில்லை.

தன்னுடைய சொந்த வீடாக இருந்தாலும் சலாம் சொல்லியே வீட்டிற்குள் நுழைய வேண்டும் என நம் மார்க்கம் பணிக்கிறது.ஒருவருடைய வீட்டிற்கு நாம் செல்லும் போது அவர் எந்த நிலையில் இருப்பார் என்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம்.

பெண்கள் பெரும்பாலும் வெளியே தங்களுடைய உடல்களை மறைக்கும் அளவுக்கு வீட்டில் மறைக்கமாட்டார்கள். தன்னுடைய வீடு என்பதால் ஆடை விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பார்கள். வருபவர் சலாம் கூறி அனுமதி பெற்று நுழைந்தால் யாரோ ஒருவர் வருகிறார் என்று அவர்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்வார்கள்.

பிறரது வீட்டில் அனுமதியின்றி நுழைவது ஒழுக்கக் கேடான செயலாகவும் உள்ளது. மனிதனுக்கு ஒழுக்க மாண்புகளை கற்றுத்தருகின்ற இஸ்லாம் இந்த ஒழுங்குமுறையை மிகவும் வலியுறத்திச் சொல்கிறது. சலாம் கூறாமலும் அனுமதி பெறாமலும் வீட்டிற்குள் நுழைவதை தடை செய்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ‘திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
அல்குர்ஆன் (24 : 28)

நபி (ஸல்) அவர்கள் ஒருவருடைய இல்லத்திற்குச் செல்லும் போது மூன்று முறை சலாம் கூறி அனுமதி கோருவார்கள். பதில் வந்தால் வீட்டின் உள்ளே செல்வார்கள். இல்லெயென்றால் திரும்பச் சென்றுவிடுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சஃத் பின் உபாதா அவர்களிடம் (வீட்டின் உள்ளே வர) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று சலாம் கூறி அனுமதி கோரினார்கள். சஃத் நபி (ஸல்) அவர்களுக்குக் கேட்காதவாறு (வேண்டுமென்றே) வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை சலாம் சொல்ல சஃதும் மூன்று முறை பெமானாருக்குக் கேட்காதவாறு பதில்சலாம் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள். சஃத் அவர்களை பின்தொடர்ந்து சென்று அல்லாஹ்வின் தூதரே என்தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். நீங்கள் கூறிய சலாம் அனைத்தும் என்காதில் விழாமல் இருக்கவில்லை. உங்களுக்குக் கேட்காதவாறு உங்களுக்கு நான் பதில் கூறினேன். உங்களது சலாத்தையும் பரகத்தையும் நான் அதிகம் பெற விரும்பினேன் என்று கூறினார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : அஹ்மத் (11957,14928)

நபி (ஸல்) அவர்கள் பால்அருந்துவதற்காக மிக்தாத் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் வீட்டில் நுழையும் போது சலாம் கூறியே நுழைந்தார்கள். பின்வரும் ஹதீஸிலிருந்து வேறொரு செய்தியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். உரத்த குரலால் சப்தமிட்டும் யாருக்கும் கேட்காதவாறு மிகவும் மெதுவாகவும் சலாம் சொல்லக்கூடாது. சலாம் சொல்வதில்

நடுநிலையைப் பேண வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (எங்களிடம்) வந்து உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பாதவாறு விழித்திருப்பவருக்கு கேட்கக்கூடிய வகையில் சலாம் சொல்வார்கள்.
அறிவிப்பவர் : மிக்தாத் பின் அஸ்வத் (ரலி)
நூல்கள் : முஸ்லிம் (4177), அஹ்மத் (22692)

சஹாபாக்கள் இந்த ஒழுக்கத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ளும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களிடம் சிறந்த பயிற்சியைப் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தன் மனைவிமார்களை கோபித்துக் கொண்டு ஒரு அரையில் தனியாக இருந்தார்கள். அப்போது அவர்களை சந்திப்பதற்காக உமர் (ரலி ) அவர்கள் அங்கு வருகை தந்தார்கள்.

மூன்று முறை உமர் (ரலி) அவர்கள் சலாம் கூறியும் நபி (ஸல்) அவர்கள் பதில் சொல்லவில்லை. இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். உள்ளே சென்றார்கள். சலாத்திற்கு பதில் வரவில்லையென்றால் உள்ளே செல்லக்கூடாது என்பதை உமர் (ரலி) அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்ததால் இவ்வாறு நடந்துகொண்டார்கள்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்குச் ஏறிச்சென்றார்கள். (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் கூறினார்கள். ஆனால் யாரும் உமருக்கு பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும் சலாம் சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) சலாம் சொன்னார்கள். அப்போதும் யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தபோது வந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (5203)

கணவன் மனைவிக்குள் சலாம்

பலர் நண்பர்களிடத்தில் சலாம் கூறிக்கொள்வார்கள். ஆனால் தன்னுடைய வீட்டார்களை அல்லது உறவினர்களை சந்திக்கும் போது சலாம் கூறமாட்டார்கள். புதிதாக சலாம் கூறுவதற்கு கூச்சமும் உறவும் அவர்களுக்கு தடையாக அமைந்துவிடுகின்றது. கணவன் மனைவியாக இருந்தாலும் தந்தை மகனாக இருந்தாலும் சலாம் கூறுவதற்கு தயங்கக்கூடாது. பேசக்கூடாத பேச்சுக்களை பேசுவதற்கு வெட்கப்படாத நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை கடைபிடிக்க ஏன் வெட்கப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானாரை விட அதிக வயது குறைந்தவர்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வரும்போது சலாம் கூறி நுழையும் பழக்கம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். குறிப்பாக ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி கயவர்கள் அவதூறுகளைப் பரப்பியதால் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொண்ட நேரத்திலும் சலாம் சொல்வதை கைவிடவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து சலாம் கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2661)

நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று வீட்டாலே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ் (தங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரகல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்) என்று (மணவாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தங்களின் துணைவியர் அனைவரின் இல்லங்களையும் தேடிச் சென்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொன்னது போன்றே (முகமன்) சொல்ல அவர்களும் ஆயிஷா (ரலி)அவர்கள் சொன்னது போன்று (பிரதிமுகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (4793)

ஆள் இல்லா வீட்டில் நுழையும் போது

வீட்டில் யாரும் இல்லையென்றால் நம்முடைய வீடாகஇருந்தாலும் சலாம் சொல்லிய நுழைய வேண்டும். இந்நேரத்தில் நாம் நமக்காகவே சலாம் சொல்லிக் கொள்கிறோம். வீட்டிற்குள் வந்துவிட்டதால் எந்த தீங்கும் நமக்கு நேரிடாது யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. சொகுசு அறையில் படுத்து உறங்குபவனுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகையால் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் சாந்தி நமக்குத் தேவைப்படுகிறது. பின்வரும் வசனம் நாம் நமக்கே சலாம் கூறிக்கொள்ள வேண்டும் என கட்டளையிடுகின்றது.

வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

அல்குர்ஆன் (24 : 61)

பலமுறை சலாம் கூறுதல்

ஒருவரை நாம் சந்திக்கும் போது சலாம் கூறிவிட்டோம். பிறகு மீண்டும் அவர் நம் கண்ணில் தென்படும் போது மறுபடியும் சலாம் கூறிக்கொள்வதில் தவறேதும் இல்லை. நபி (ஸல்) அவர்களுக்கு சஹாபாக்கள் பலமுறை சலாம் கூறியுள்ளார்கள்.

ஒரு மனிதர் பள்ளிவாசலில் நுழைந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். (பள்ளிக்குள் நுழைந்த அவர்) தொழுதார். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து) அவர்களுக்கு சலாம் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஅலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள்.

ஆகவே அவர் திரும்பிச் சென்று தொழுதார். பிறகு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் அவர்கள் வஅலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள். இரண்டாம் தடைவையிலோ அல்லது அதற்குப் பின்போ அவர் அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் (தொழுகை முறையைக்) கற்றுத்தாருங்கள் என்றார்.

அறிவிப்பவர் : அபூஹ‏þரைரா (ரலி)
நூல் : புகாரி (6251)

பள்ளிக்குள் நுழைந்த நபித்தோழர் தொழுதுவிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மீண்டும் தொழச்சொன்ன உடன் தொழுதுவிட்டு மறுபடியும் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இருமுறையும் சலாத்திற்கு பதில் கூறியுள்ளார்கள். சந்தித்து சிறிது நேரம் ஆனாலும் அவருக்காக மீண்டும் சலாம் சொல்வது நபிவழி என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் சொல்லும் சலாம் யாருக்கு சலாம் சொல்கிறோமோ அவருடைய காதில் விழவில்லையென்றால் மூன்று முறை திரும்பத்திரும்ப சலாம் கூறலாம். நபி (ஸல்) அவர்கள் சலாம் கூறும் போது மூன்றுமுறை சலாம் கூறுவோராக இருந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தைப் பேசினால் அது அவர்களிடமிருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை சலாம் கூறுவார்கள். 
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (95)

மூன்று முறை ஸலாம் சொன்ன செய்தியில் ஒரு சமூகத்தாரிடம் சென்றால் என்ற வாசகமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான நபர்கள் நிரம்பிய ஒரு சபைக்கு சென்றால் அச்சபையில் உள்ள அனைவரும் தன்னுடைய சலாத்தை செவியேற்று பதில் சலாம் கூறவேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருப்பார்கள் என்று விளங்கலாம். ஏனெனில் அனைவரிடமும் மூன்று முறை ஸலாம் கூற வேண்டும் என்று இந்த ஹதீஸுக்கு பொருள் கொண்டால் நபி (ஸல்) அவர்கள் உட்பட நபித்தோழர்கள் அனைவரும் ஒவ்வொருவருக்கும் மூன்று முறை ஸலாம் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் யாரும் அவ்வாறு செய்யவில்லை. மாறாக ஒரு முறையே ஸலாம் கூறியுள்ளார்கள். இந்த நடைமுறையிலிருந்து அதிகமாக இருக்கும் சபைகளில் அல்லது தனது ஸலாம் காதில் விழவில்லை என்ற நிலையில் மூன்று முறை ஸலாம் கூற வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.

மாற்றுமதத்தவர்களுக்கு சலாம் கூறுதல்

மாற்று மதத்தைச் சார்ந்த இந்துக்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் சலாம் கூறுவது தவறில்லை. அவர்கள் நமக்கு சலாம் கூறினால் பதில் சலாம் கூறலாம். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவராக இருந்தாலும் தெரியாதவராக இருந்தாலும் சலாம் சொல்லும்படி கூறியுள்ளார்கள். அறிமுகம் இல்லாதவர் என்கிற போது அவர் முஸ்லிமாகவும் இருக்கலாம் முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். இதனடிப்படையில் மாற்றார்களுக்கு சலாம் கூறுவது குற்றமாகாது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும் உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி (6236)

மேலும் நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களும் யஹூதிகளும் முஸ்லிம்களும் கூடியிருந்த ஒரு சபைக்கு வந்தபோது அனைவருக்கும் சேர்த்து சலாம் கூறியுள்ளார்கள். புகாரியில் இடம்பெற்றுள்ள நீண்ட ஹதீஸில் இக்கருத்து இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல் புகாரி (5663)

பிறருக்காக பிரார்த்தனை செய்யவதற்காகவே சலாம் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் சாந்தி நம்மை விட பலமடங்கு மாற்றுமதத்தவர்களுக்குத் தேவைப்படுகின்றது. ஏனென்றால் அல்லாஹ் நமக்கு நேர்வழிகாட்டியுள்ளான். ஆனால் அவர்களுக்கு இந்தபாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை. ஆகையால் அவர்கள் நேர்வழிபெறுவதற்காக சலாம் கூறி பிரார்த்திப்பது குற்றமாகாது. அவர்களுக்கு நல்லது நினைப்பதாகத்தான் ஆகும். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நன்மை செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லை.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
அல்குர்ஆன் (60 : 8)

அதே நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் யஹ‏þதிகளுக்கும் கிரிஸ்தவர்களுக்கும் முதலில் சலாம் கூறுவதை தடை செய்தார்கள். ஏனென்றால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறும்போது அஸ்ஸலாமு அலைக்க (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுவதற்கு பதிலாக அஸ்ஸாமு அலைக்க (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய போலித்தனத்தை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.
அல்குர்ஆன் (58 8)

முஸ்லிம் அழிய வேண்டும் என்ற நோக்கிலேயும் நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பினாலும் இவ்வாறு கூறிவந்தார்கள். ஆகையால் தான் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு முதலில் சலாம் சொல்ல வேண்டாம் எனத் தடைசெய்தார்கள். முதலில் நாம் சலாம் சொல்லும் போது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவோம். ஆனால் அவர்கள் மரணம் உண்டாகட்டும் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் முதலில் மரணம் உண்டாகட்டும் என்று கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும் உண்டாகட்டும்) என்று முஸ்லிம்கள் கூறவேண்டும்.

வேதம்கொடுக்கப்பட்டவர்கள் உங்களுக்கு சலாம் கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும் உண்டாகட்டும்) என்று (மாத்திரம்) கூறுங்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
புகாரி : புகாரி (6258)

அவர்கள் நமக்கு இழைக்க விரும்பியத் தீமை அவர்களையே சார்ந்துவிடும். இது மட்டுமல்லாமல் அன்றைக்கு வாழ்ந்த வேதம்கொடுக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களை இழிவாகவும் தங்களை உயர்வாகவும் கருதினார்கள். இந்நேரத்தில் முஸ்லிம்கள் அவர்களுக்கு சலாம் சொன்னால் அது அவர்களுக்குப் பெருமையாகத் தோன்றும். பெருமையை களைந்து அவர்கள் முஸ்லிம்களிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் முதலில் சலாம் சொல்வதை தடைசெய்தார்கள்.

இன்று பெரும்பாலும் மாற்றுமதத்தினர்கள் நம்மிடம் அண்ணன் தம்பியைப் போன்று பழகிவருகிறார்கள். நம்மை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அப்பாவிமக்களிடம் பெரும்பாலும் இல்லை. இவர்களையும் நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த வேதம் வழங்கப்பட்டவர்களையும் சமமாக கணக்கிட முடியாது. ஆகையால் இவர்களுக்கு நாம் சலாம் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் யஹூதிகள் கூறியதை பெருமானார் (ஸல்) அவர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை போலும் என்று எண்ணி கெட்ட எண்ணத்தில் வார்த்தையை மாற்றிக்கூறிய அவர்களை சபிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை கண்டிக்கிறார்கள். மென்மையை கையாளச் சொல்கிறார்கள். அவர்கள் கூறிய வார்த்தையைக் கூட அப்படியே திரும்பக் கூறாமல் வஅலைக்கும் (உங்கள் மீதும் உண்டாகட்டும்) என்று மறைமுகமாகத்தான் கூறினார்கள். தீய எண்ணம் கொண்டவர்களிடத்தில் மென்மையை கடைபிடித்த நபி (ஸல்) அவர்கள் நல்லலெண்ணம் கொண்டு பழகும் மாற்றுமதநண்பர்களிடம் கடுமைகாட்டவா சொல்வார்கள்?

யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கும் மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றிச் சலாம்) கூறினார்கள். அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்ட நான் வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள் மீதும் மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்றேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா நிதானம்! எல்லா விஷயத்திலும் நளினத்தைக் கையாலுவதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டேன், அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான்தான் வஅலைக்கும் (அவ்வாறே உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (6024)

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைமறுப்பாளராக இருந்த தனது தந்தைக்கு சலாம் கூறியுள்ளார்கள்.

‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 19:47)

இப்ராஹிம் (அலை) அவர்களுடைய வாழ்கையில் அழகான முன்மாதிரி இருக்கின்றது என அல்லாஹ் கூறுவதினாலும் இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த இந்த காரியத்தை மார்க்கமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். தனது தந்தைக்காக அவர்கள் பாவமன்னிப்புத் தேடியதை மட்டும் தான் நாம் பின்பற்றக்கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்ளூ சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)

ஒரு விஷயத்தை இறைவன் கண்டிக்காமல் திருமறைக் குர்ஆனில் குறிப்பிட்டால் அது அனுமதிக்கப்பட்டதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். இதனடிப்படையில் கஃபிராக இருந்த தன் தந்தைக்கு தந்தைக்கு இப்ராஹிம் (அலை) அவர்கள் சலாம் கூறியிருப்பதிலிருந்து காஃபிர்கள் முஷ்ரிக்குகள் ஆகியோருக்கு சலாம் கூறலாம் என்ற முடிவுக்கு வரலாம்.

சலாத்தைச் சுருக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த வேதம்வழங்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் வஅலைக்கும் என்று பதில் சலாம் கூறவேண்டும் என்று கூறியுள்ளார்கள். இதற்கான காரணத்தை நாம் முன்னரே விளக்கியுள்ளோம். அவர்களைத் தவிர்த்து முஸ்லிம்களுக்கு இதுபோன்று சலாத்தைக் குறைத்து வஅலைக்கும் என்று பதில் சலாம் சொல்லக்கூடாது. வஅலைக்கும் சலாம் என்று பூரணமாகக் கூற வேண்டும்.

ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ‏þ என்று பூரணமாக சலாம் கூறும்போது நாமும் அவருக்கு வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ‏þ என்று பூரணமாக சலாத்திற்கு பதில்தர வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் நமக்கு கூறப்பட்ட முகமனையோ அல்லது அதை விட சிறந்த முகமனையோ கூறும் படி கட்டளையிடுகிறான். முதலில் கூறியவரின் சலாம் ஒன்று பதில் கூறுவோரின் சலாத்தைப் போன்று இருக்க வேண்டும். அல்லது அதை விடச் சிறப்பானதாக இருக்க வேண்டும்..

ஆதம் (அலை) அவர்கள் மலக்குமார்களுக்கு சலாம் சொன்னார்கள். மலக்குமார்கள் ஆதம் (அலை) அவர்கள் கூறிய சலாத்தை விட சிறந்த சலாத்தைக் கூறினார்கள். அந்த மலக்குமார்கள் கூறிய சலாமே முஹம்மது நபியின் சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய சலாமாகும்.
அல்லாஹ் ஆதமை அவருக்குரிய (அழகிய) உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது நீங்கள் சென்று அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள்.

அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும். என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (6227)

இன்னும் பதில் சலாம் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் கடமை என்று கூறயுள்ளார்கள். சலாம் கூறியவர் பூரணமாக சலாம் கூறி நாம் குறைவாக பதில் சலாம் கூறினால் நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமையில் குறைவு ஏற்பட்டதாக ஆகிவிடுகின்றது. சலாத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி நீட்டி சொல்லும் போது சுருக்கிச் சொல்வதை விட நன்மை அதிகம் கிடைக்கிறது.

இக்காரணங்களினால் நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாக சலாம் சொல்வதை புறக்கணிக்கச் சொல்கிறார்கள்.. சுருக்கமாக சலாம் சொல்வது தடைசெய்யப்படவில்லை என்றாலும் அதைவிட விரிவாக கூறுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
சலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது.

அறிவிப்பவர் : அபூஹ‏þரைரா (ரலி) 
நூல் : அபூதாவூத் (793)

மாற்றம் செய்யக் கூடாது

நபி (ஸல்) சலாத்திற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அல்லாஹ்வுடை திருவசனங்களை காணும் போதும் சலாம் எப்படி கூற வேண்டும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இவ்விரண்டை விடுத்து நாமாக நமக்குத் தோன்றிய விதத்தில் சலாத்தை அமைத்துக்கொள்ளக்கூடாது.  அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் காட்டித்தராத எந்த ஒன்றையும் முஸ்லிம்கள் செய்யக் கூடாது என்பது பொதுவான் ஒரு விதியாகும். இதனடிப்படையில் நம் இஷ்டத்திற்கு சலாம் கூறுவதற்கு மார்க்கத்தில் தடை இருக்கிறது. பின்வரக்கூடிய ஹதீஸ் இதை தெளிவாக விளக்கும்.

நாம் சற்று முன் படித்த புகாரியில் (6227) வது செய்தியாக இடம்பெற்றுள்ள ஹதீஸில் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு சலாம் சொல்லும் முறையைக் கற்றுக் கொடுக்கிறான். மலக்குமார்களுக்கு ஆதம் (அலை) அவர்கள் சலாத்தை முதலில் ஆரம்பம் செய்யும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஆரம்பிப்பதால் அப்படியே நாமும் கூற வேண்டும். மலக்குமார்கள் அவர்களுக்குக் கூறிய பதில் சலாமை கவனிக்கும் போது வஅலைக்கும் என்று கூறுவதற்கு பதிலாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று பதிலளிப்பது கூடும் என்று விளங்குகிறது. இதன்படி சலாத்தை ஆரம்பிக்கும் போதும் பதில் கூறும் போதும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறலாம். வஅலைக்குமுஸ்ஸலாம் என்று பதில் கூறுவதற்கு மாத்திரம் ஆதாரம் உள்ளதேத் தவிர ஆரம்பம் செய்வதற்கு ஆதாரம் இல்லை.

தவறானப் பார்வை

சிலர் முஸ்லிமான சகோதரனுக்கு சலாம் கூறுவதில்லை. சலாம் சொன்னாலும் பதில் சலாம் கூறுவதில்லை. கொள்கை விஷயத்தில் முரண்பாடுகள் இருப்பதால் எதிரியைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். பதில் சலாம் சொல்வதை குற்றமாக பாவிக்கிறார்கள். இந்த கெட்டப் பழக்கத்தை நம்மக்கள் அனைவரும் கைவிடவேண்டும். ஏனென்றால் பதில் சலாம் சொல்வது ஒவ்வொரு முஸ்லிமுடையக் கடமை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமிற்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாசாவை பின்தொடர்வது விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவ : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (1240)

ஒரு முஸ்லிம் மூன்று நாட்களுக்கு மேல் தனது சகோதரனிடத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. சண்டையிட்டுக்கொண்ட இருவரும் ஒருவர் மற்றவருக்கு சலாம் கூறி பேசிக்கொண்டால் அவர்களுக்கு நன்மை உண்டு. ஒருவர் சலாம் கூறி மற்றொருவர் பதில் சலாம் கூறவில்லையென்றால் முதலில் சலாம் சொன்னவர் குற்றத்திலிருந்து விலகிவிடுவார். ஆனால் சலாம் சொல்லதவர் அல்லாஹ்விடத்தில் பாவியாகிவிடுவார். பார்க்க புகாரீ (6077)

தூரத்தில் இருப்பவருக்கு சலாத்தை எத்திவைக்கும் முறை

தூரத்தில் இருக்கும் நம்முடைய உறவினர்களுக்காக அவர்களை சந்திக்கச் செல்பவர்களிடத்தில் தன்சார்பில் சலாத்தை சொல்லி அனுப்புவதற்கு அனுமதியுள்ளது. ஆயிஷா (ரலி) அவர்களுக்காக ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சலாம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறிய போது வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ‏‏þ (அவர்கள் மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் அபிவிருத்தியும் உணிடாகட்டும்) என்று ஆயிஷா (ரலி) அவர்கள் பதில் சலாம் கூறினார்கள்.

கண்முன்னே நபர் இல்லாதகாரணத்தினால் சலாம் சொல்லும் போது வஅலைஹி (அவர் மீது) என்று படர்க்கையாக கூற வேண்டும். வெகுதொலைவில் இருப்பவர்களை நம்மால் நேரடியாக சந்திக்க முடியாவிட்டாலும் மார்க்கம் காட்டித்தந்துள்ள இந்த வழிமுறையை கடைபிடித்தால் உறவுகள் நட்புகள் தொடர்பு அறுந்துவிடாமல் பாசமும் அன்பும் நீண்டகாலம் நீடிக்க வழிவகை ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷே இதோ ஜிப்ரீல் உமக்கு சலாம் கூறுகிறார் என்று கூறினார்கள். அதற்கு நான் வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ‏‏þ (அவர்கள் மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் அபிவிருத்தியும் உணிடாகட்டும்) என்று கூறிவிட்டு (அல்லாஹ்வின் தூதரே) நான் காணாததையெல்லாம் நீங்கள் காணுகிறீர்கள் என்று கூறினேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (3768)

இது போன்று அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சலாம் கூறியுள்ளார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே இதோ கதீஜா தன்னுடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காணமுடியாத முத்துமாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‏þரைரா (ரலி) 
நூல் : புகாரி (3820)

நபி (ஸல்) அவர்களுக்கு சஹாபாக்கள் ஆட்களின் மூலம் சலாத்தை சொல்லி அனுப்பியுள்ளார்கள். 
நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து தனது மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டார்கள். (அப்போது) எனது தாய் உம்மு சுலைம் அவர்கள் ஹைஸை (பால் நெய் பேரித்தம்பழம் ஆகியவற்றால் ஆன உணவை) தயாரித்து வைத்திருந்தார்கள். நான் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று எனது தாய் உங்களுக்கு சலாம் கூறினார்கள் எனக் கூறினேன்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : நஸயீ (3334)

எனது வாழ்நாள் நீடிக்குமேயானால் மர்யமின் மகன் ஈஸாவை நான் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுவேன். எனக்கு மரணம் விரைவில் சம்பவித்துவிட்டால் உங்களில் யார் அவரை சந்திக்கிறாரோ அவர் என்புறத்திலிருந்து அவருக்கு சாலம் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹ‏þரைரா (ரலி)
நூல் : அஹ்மத் (7629,7630)

நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களுக்கு சலாத்தை எத்திவைக்கும் படி கூறியிருக்கிறார்கள்.
அன்சாரிகளில் ஒரு இளைஞர் அல்லாஹ்வின் தூதரே நான் ஜிஹாத் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். தயார் செய்வதற்கென்று என்னிடத்தில் எந்தப் பொருளும் இல்லை என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) அன்சாரிகுலத்தைச் சார்ந்த இந்த நபரிடம் செல். அவர் (போருக்கான ஏற்பாடுகளை) தயார்செய்து வைத்திருந்தார். பிறகு நோய்வாய்ப் பட்டுவிட்டார். ஆகையால் நீ (அவரிடம் சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு சலாம் கூ‎றினார்கள். இன்னும் நீங்கள் தயார் செய்துவைத்திருந்ததை என்னிடத்தில் ஒப்படைக்கும் படி கூறினார்கள் என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : அஹ்மத் (12684)

சலாம் சொல்லக்கூடாத நேரங்கள்

ஒருவர் மலம் ஜலம் கழிக்கும் போது அவருக்கு சலாம் சொல்லக்கூடாது. அப்படியே ஒருவர் கூறினாலும் நாம் அந்த நேரத்தில் பதில் சலாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் இந்நேரங்களில் சலாம்மட்டுமல்ல பொதுவாக எந்தப் பேச்சையும் பேசக்கூடாது. சாதாரண பேச்சுகளையே தவிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறபோது பிரார்த்தனையாக இருக்கக்கூடிய சலாத்தை எப்படி அந்நேரத்தில் கூறமுடியும்?. எனவே நபி (ஸல்) அவர்கள் இதை தடைசெய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒருமனிதர் அவர்களை கடந்து சென்றார். அப்போது அவர் (பெருமானருக்கு) சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் சலாம் கூறவில்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (555) திர்மிதி (83)

இயற்கைத் தேவையை நிறைவேற்றியதற்குப் பின்னால் சலாம் சொன்னவருக்கு பதில் சலாம் கூற வேண்டும். அசுத்தமான நிலையில் இருக்கும் போதோ அல்லது அசுத்தமான இடங்களில் இருக்கும் போதோ சலாம் சொல்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். பின்வரும் ஹதீஸ் அசுத்தமான இடங்களில் சலாம் சொல்லக்கூடாது என ‏கூறுகிறது. வணக்கவழிபாடுகள் செய்யும் போது ஒழுவுடன் செய்வது சிறப்பிற்குரியது என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிந்துகொள்ளலாம்

நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜமல் என்ற கிணற்றுக்கு அருகே அவர்களை சந்தித்து சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சுவற்றுக்கு அருகே வந்து கைகளை சுவற்றில் வைத்து பிறகு அதை தன் முகத்திலும் கைகளிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில்சலாம் கூறினார்கள்..

அறிவிப்பவர் : அபூ ஜ‏‏ýஹைர் (ரலி), இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (280) புகாரி (337)

ஆரம்பக்காலக்கட்டங்களில் நபித்தோழர்கள் தொழுகையில் இருக்கும் ஒருவருக்கு சலாம் கூறிக்கொண்டு இருந்தார்கள். தொழுபவரும் தொழுகையில் இருந்து கொண்டே பதில் சலாம் கூறுவார். பிறகு இந்த வழிமுறை மாற்றப்பட்டுவிட்டது.

நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். எனக்கு பதில் சலாம் சொல்வார்கள். (ஒருமுறை) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு சலாம் கூறினேன். எனக்கு பதில் சலாம் அவர்கள் கூறவில்லை. அவர்கள் (தொழுது முடித்து) சலாம் கொடுத்தபோது மக்களை நோக்கி கண்ணியத்திற்குரிய மகத்துவமிக்க அல்லாஹ் தொழுகையில் அல்லாஹ்வின் திக்ருகளைத் தவிர வேறெதையும் நீங்கள் மொழியக்கூடாது என (புதிதாக) ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நிற்பதற்கு உங்களுக்கு என்ன (சிரமம்)? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : நஸயீ (1205)

முகமன் கூறும் வழிமுறைகளை தெரிந்து கொண்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

Saturday, June 27, 2020

அபூபக்ர் சித்தீக்(ரலி)🍃* ⤵️ *🍃வாழ்க்கை வரலாறு - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

     *🍃அபூபக்ர் சித்தீக்(ரலி)🍃*
                                 ⤵️
          *🍃வாழ்க்கை வரலாறு🍃*

          *✍🏻....தொடர் ➖0️⃣7️⃣*

*🌸ஆரம்பக் காலத்தில்🌸*
         *🌸இஸ்லாத்தை*
                         *ஏற்றவர் [ 01 ]🌸*

*🏮🍂சமுதாய அந்தஸ்தும், மக்கள் செல்வாக்கும், வசதி வாய்ப்பும் பெற்றவர்கள் பெரும்பாலும் எளிதில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.* மக்காவில் இஸ்லாம் பரவிய காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் அதிகமானோர் சாமானியர்கள் தான். *ஆனால் இதற்கு விதிவிலக்காக பேர் புகழ் செல்வம் ஆகிய அனைத்தையும் உதறிவிட்டு சத்தியத்தின் பால் ஆஜ்ம்ப காலகட்டத்தில் விரைந்து வந்தவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் முதன்மையானவர்கள்.*

*🏮🍂எதிர்ப்புகள் இருந்தால் ஒரு மாதிரியும் ஆதரவுகள் இருந்தால் இன்னொரு மாதிரியும் நடந்து கொள்பவர்கள் சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அவசியம் பாடம் பெற வேண்டும்.*

_அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறுவதாவது_

_*🍃நபி (ஸல்) அவர்கள் (மக்களே) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் (ரலி) அவர்களோ நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று சொன்னார். மேலும் தம்னையும் தம் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார் என்று கூறினார்கள்.*_

       *📚 புகாரி (3661) 📚*

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ أَبُو عَمَّارٍ، وَيَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي أُمَامَةَ، - قَالَ عِكْرِمَةُ وَلَقِيَ شَدَّادٌ أَبَا أُمَامَةَ وَوَاثِلَةَ وَصَحِبَ أَنَسًا إِلَى الشَّامِ وَأَثْنَى عَلَيْهِ فَضْلاً وَخَيْرًا - عَنْ أَبِي أُمَامَةَ قَالَ *قَالَ عَمْرُو بْنُ عَبَسَةَ السُّلَمِيُّ كُنْتُ وَأَنَا فِي الْجَاهِلِيَّةِ أَظُنُّ أَنَّ النَّاسَ عَلَى ضَلاَلَةٍ وَأَنَّهُمْ لَيْسُوا عَلَى شَىْءٍ وَهُمْ يَعْبُدُونَ الأَوْثَانَ فَسَمِعْتُ بِرَجُلٍ بِمَكَّةَ يُخْبِرُ أَخْبَارًا فَقَعَدْتُ عَلَى رَاحِلَتِي فَقَدِمْتُ عَلَيْهِ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَخْفِيًا جُرَءَاءُ عَلَيْهِ قَوْمُهُ فَتَلَطَّفْتُ حَتَّى دَخَلْتُ عَلَيْهِ بِمَكَّةَ فَقُلْتُ لَهُ مَا أَنْتَ قَالَ ‏‏ أَنَا نَبِيٌّ ‏"‏ ‏.‏ فَقُلْتُ وَمَا نَبِيٌّ قَالَ ‏"‏ أَرْسَلَنِي اللَّهُ ‏"‏ ‏.‏ فَقُلْتُ وَبِأَىِّ شَىْءٍ أَرْسَلَكَ قَالَ ‏"‏ أَرْسَلَنِي بِصِلَةِ الأَرْحَامِ وَكَسْرِ الأَوْثَانِ وَأَنْ يُوَحَّدَ اللَّهُ لاَ يُشْرَكُ بِهِ شَىْءٌ ‏"‏ ‏.‏ قُلْتُ لَهُ فَمَنْ مَعَكَ عَلَى هَذَا قَالَ ‏"‏ حُرٌّ وَعَبْدٌ ‏"‏ ‏.‏ قَالَ وَمَعَهُ يَوْمَئِذٍ أَبُو بَكْرٍ وَبِلاَلٌ مِمَّنْ آمَنَ بِهِ ‏.‏ فَقُلْتُ إِنِّي مُتَّبِعُكَ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّكَ لاَ تَسْتَطِيعُ ذَلِكَ يَوْمَكَ هَذَا أَلاَ تَرَى حَالِي وَحَالَ النَّاسِ وَلَكِنِ ارْجِعْ إِلَى أَهْلِكَ فَإِذَا سَمِعْتَ بِي قَدْ ظَهَرْتُ فَأْتِنِي ‏"‏ ‏.‏ قَالَ فَذَهَبْتُ إِلَى أَهْلِي وَقَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَكُنْتُ فِي أَهْلِي فَجَعَلْتُ أَتَخَبَّرُ الأَخْبَارَ وَأَسْأَلُ النَّاسَ حِينَ قَدِمَ الْمَدِينَةَ حَتَّى قَدِمَ عَلَىَّ نَفَرٌ مِنْ أَهْلِ يَثْرِبَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ فَقُلْتُ مَا فَعَلَ هَذَا الرَّجُلُ الَّذِي قَدِمَ الْمَدِينَةَ فَقَالُوا النَّاسُ إِلَيْهِ سِرَاعٌ وَقَدْ أَرَادَ قَوْمُهُ قَتْلَهُ فَلَمْ يَسْتَطِيعُوا ذَلِكَ ‏.‏ فَقَدِمْتُ الْمَدِينَةَ فَدَخَلْتُ عَلَيْهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَعْرِفُنِي قَالَ ‏"‏ نَعَمْ أَنْتَ الَّذِي لَقِيتَنِي بِمَكَّةَ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ بَلَى ‏.‏ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ أَخْبِرْنِي عَمَّا عَلَّمَكَ اللَّهُ وَأَجْهَلُهُ ‏.‏ أَخْبِرْنِي عَنِ الصَّلاَةِ قَالَ ‏"‏ صَلِّ صَلاَةَ الصُّبْحِ ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلاَةِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَتَّى تَرْتَفِعَ فَإِنَّهَا تَطْلُعُ حِينَ تَطْلُعُ بَيْنَ قَرْنَىْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ ثُمَّ صَلِّ فَإِنَّ الصَّلاَةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حَتَّى يَسْتَقِلَّ الظِّلُّ بِالرُّمْحِ ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلاَةِ فَإِنَّ حِينَئِذٍ تُسْجَرُ جَهَنَّمُ فَإِذَا أَقْبَلَ الْفَىْءُ فَصَلِّ فَإِنَّ الصَّلاَةَ مَشْهُودَةٌ مَحْضُورَةٌ حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلاَةِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ فَإِنَّهَا تَغْرُبُ بَيْنَ قَرْنَىْ شَيْطَانٍ وَحِينَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَالْوُضُوءُ حَدِّثْنِي عَنْهُ قَالَ ‏"‏ مَا مِنْكُمْ رَجُلٌ يُقَرِّبُ وَضُوءَهُ فَيَتَمَضْمَضُ وَيَسْتَنْشِقُ فَيَنْتَثِرُ إِلاَّ خَرَّتْ خَطَايَا وَجْهِهِ وَفِيهِ وَخَيَاشِيمِهِ ثُمَّ إِذَا غَسَلَ وَجْهَهُ كَمَا أَمَرَهُ اللَّهُ إِلاَّ خَرَّتْ خَطَايَا وَجْهِهِ مِنْ أَطْرَافِ لِحْيَتِهِ مَعَ الْمَاءِ ثُمَّ يَغْسِلُ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ إِلاَّ خَرَّتْ خَطَايَا يَدَيْهِ مِنْ أَنَامِلِهِ مَعَ الْمَاءِ ثُمَّ يَمْسَحُ رَأْسَهُ إِلاَّ خَرَّتْ خَطَايَا رَأْسِهِ مِنْ أَطْرَافِ شَعْرِهِ مَعَ الْمَاءِ ثُمَّ يَغْسِلُ قَدَمَيْهِ إِلَى الْكَعْبَيْنِ إِلاَّ خَرَّتْ خَطَايَا رِجْلَيْهِ مِنْ أَنَامِلِهِ مَعَ الْمَاءِ فَإِنْ هُوَ قَامَ فَصَلَّى فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَمَجَّدَهُ بِالَّذِي هُوَ لَهُ أَهْلٌ وَفَرَّغَ قَلْبَهُ لِلَّهِ إِلاَّ انْصَرَفَ مِنْ خَطِيئَتِهِ كَهَيْئَتِهِ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ ‏"‏ ‏.‏ فَحَدَّثَ عَمْرُو بْنُ عَبَسَةَ بِهَذَا الْحَدِيثِ أَبَا أُمَامَةَ صَاحِبَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ أَبُو أُمَامَةَ يَا عَمْرَو بْنَ عَبَسَةَ انْظُرْ مَا تَقُولُ فِي مَقَامٍ وَاحِدٍ يُعْطَى هَذَا الرَّجُلُ فَقَالَ عَمْرٌو يَا أَبَا أُمَامَةَ لَقَدْ كَبِرَتْ سِنِّي وَرَقَّ عَظْمِي وَاقْتَرَبَ أَجَلِي وَمَا بِي حَاجَةٌ أَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ وَلاَ عَلَى رَسُولِ اللَّهِ لَوْ لَمْ أَسْمَعْهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا - حَتَّى عَدَّ سَبْعَ مَرَّاتٍ - مَا حَدَّثْتُ بِهِ أَبَدًا وَلَكِنِّي سَمِعْتُهُ أَكْثَرَ مِنْ ذَلِكَ ‏.‏"*

_அம்ர் பின் அபசா (ரலி) அவர்கள் கூறுவதாவது_

_*🍃நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த போது மக்கள் அனைவரும் வழிகேட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கென (வாழ்க்கை நெறி) எதுவும் கிடையாது. அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணி (வருந்தி)னேன். இந்நிலையில் மக்காவில் ஒரு மனிதர் (புதிய) செய்திகளைச் சொல்லி வருவதாக கேள்விப்பட்டேன். எனவே நான் என் வாகனத்தில் அமர்ந்து அவரை நோக்கிச் சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டிருந்தார்கள். எனவே நான் அரவமின்றி மெதுவாக மக்காவிற்குள் நுழைந்து அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் நான் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் யார் உங்களுடன் இருக்கிறார்கள்❓ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு சுதந்திரவானும் ஒரு அடிமையும் உள்ளனர் என்றார்கள். (அன்றைய நாளில் அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நபியவர்களை ஏற்று அவர்களுடன் இருந்தார்கள்.*_

    *📚நூல் : முஸ்லிம் (1512)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
        
                  *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மக்கத்துக் காஃபிர்களும் இன்றைய முஸ்லிம்களும் ....

*மக்கத்துக் காஃபிர்களும் இன்றைய முஸ்லிம்களும்⁉️*

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் *மக்கத்துக் காபிர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது.*

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை. 

ஒரு வகையில் பார்த்தால் இன்றைய தமிழக முஸ்லிம்கள் பலரின் நம்பிக்கையை விட மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கை சற்று மேலானதாக இருந்தது என்று கூறலாம்.

ஏனெனில் இன்றைய தமிழக முஸ்லிம்களில் பலர் கடுமையான துன்பம் நேரிடும் போதும், பெரிய ஆபத்தைச் சந்திக்கும் போதும் *முஹ்யித்தீனே* என்று அழைப்பதைக் காண்கிறோம்.

ஆனால் *மக்கத்துக் காபிர்கள் சிறிய துன்பம் ஏற்படும் போதும், சிறிய அளவிலான கோரிக்கையின் போதும் மட்டுமே அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்து வந்தனர்.*

மிகப் பெரிய ஆபத்தின் போது அவர்கள் அல்லாஹ்வைத் தான் அழைப்பார்கள். குட்டித் தெய்வங்களையும், மகான்களையும் மறந்து விடுவார்கள்.

இதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

‘இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்’ என்று பணிவாகவும், இரகசியமாகவும் அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது *நிலம் மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?’ என்று கேட்பீராக*! ‘இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். *பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்’ என்றும் கூறுவீராக!*

(அல்குர்ஆன் 6:63, 64)

அபூபக்ர் சித்தீக்(ரலி)🍃* ⤵️ *🍃வாழ்க்கை வரலாறு - 6

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

     *🍃அபூபக்ர் சித்தீக்(ரலி)🍃*
                                 ⤵️
          *🍃வாழ்க்கை வரலாறு🍃*

          *✍🏻....தொடர் ➖0️⃣6️⃣*

*🌺சமுதாய*
               *அந்தஸ்து { 02 }🌺*

*🏮🍂இஸ்லாத்தை ஏற்றவர்களை கொலைவெறியுடன் பார்த்த இணை வைப்பாளர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதைக் கண்டு அவர்களுக்கு மாத்திரம் இஸ்லாத்தைப் பகிரங்கப்படுத்தாமல் வீட்டில் கடைப்பிடிப்பதற்கு அனுமதியளித்தார்கள்.*

_ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது_

_*🍃முஸ்லிம்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபிசீனியாவை நோக்கிச் சென்றார்கள். பர்குல் ஃகிமாத் எனும் இடத்தை அடைந்த போது அப்பகுதியின் தலைவர் இப்னு தகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம் எங்கே செல்கிறீர்❓ என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் என் சமுதாயத்தினர் என்னை வெளியேற்றி விட்டனர். எனவே பூமியில் பயணம் சென்று என் இறைவனை வவ்ங்கப் போகிறேன் என்று கூறினார்கள். அதற்கு இப்னு தகினா அவர்கள் உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர். உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர். பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர். விருந்தினர்களை உபசரிக்கிறீர். துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர். எனவே நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன். ஆகவே திரும்பி உமது ஊருக்குச் சென்று உமது இறைவனை வணங்குவீராக என்று கூறினார். இப்னு தகினா தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு குரைஷிக் காஃபிர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம் அபூபக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏழைகளுக்காக உழைக்கின்ற உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற விருந்தினரை உபசரிக்கின்ற பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற துன்பப்படுபவர்களுக்கு உதவுகின்ற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா? என்று கேட்டார். ஆகவே குரைஷியர் இப்னு தகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். மேலும் இப்னு தகினாவிடம் தம் வீட்டில் இறைவனைத் தொழுதுவருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் தங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அதை பகிரங்கமாக செய்யாதிருக்கும் படியும் அபூக்ருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பிவிடுவார் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்றனர்.*_

    *📚நூல் : புகாரி (2297)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
               
           *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சத்தியப் பாதையில் அழைப்புப் பணி

சத்தியப் பாதையில் அழைப்புப் பணி

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளைத் தெளிவு படுத்துகிறான்.
அல்குர்ஆன் (3:103)

அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, நல்லறம் செய்து, நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? 
அல்குர்ஆன் (41:33)

3461- حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ ، عَنْ أَبِي كَبْشَةَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ
بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ ، وَلاَ حَرَجَ ، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதை (பிறருக்கு) எடுத்துரையுங்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி (3461)

4210- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِي حَازِمٍ قَالَ : أَخْبَرَنِي سَهْلُ بْنُ سَعْدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
يَوْمَ خَيْبَرَ لأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ غَدًا رَجُلاً يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ قَالَ فَبَاتَ النَّاسُ يَدُوكُونَ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَاهَا فَلَمَّا أَصْبَحَ النَّاسُ غَدَوْا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم كُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَاهَا فَقَالَ أَيْنَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقِيلَ هُوَ يَا رَسُولَ اللهِ يَشْتَكِي عَيْنَيْهِ قَالَ فَأَرْسِلُوا إِلَيْهِ فَأُتِيَ بِهِ فَبَصَقَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ فَأَعْطَاهُ الرَّايَةَ فَقَالَ عَلِيٌّ يَا رَسُولَ اللهِ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللهِ فِيهِ فَوَاللَّهِ لأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلاً وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் மூலமாக ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும். 
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புகாரி (4210)

2398 – حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَوْنِ بْنِ أَبِى جُحَيْفَةَ عَنِ الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ عَنْ أَبِيهِ قَالَ
كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى صَدْرِ النَّهَارِ قَالَ فَجَاءَهُ قَوْمٌ حُفَاةٌ عُرَاةٌ مُجْتَابِى النِّمَارِ أَوِ الْعَبَاءِ مُتَقَلِّدِى السُّيُوفِ عَامَّتُهُمْ مِنْ مُضَرَ بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ فَدَخَلَ ثُمَّ خَرَجَ فَأَمَرَ بِلاَلاً فَأَذَّنَ وَأَقَامَ فَصَلَّى ثُمَّ خَطَبَ فَقَالَ « (يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِى خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ) إِلَى آخِرِ الآيَةِ (إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ) وَالآيَةَ الَّتِى فِى الْحَشْرِ (اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ) تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ مِنْ دِرْهَمِهِ مِنْ ثَوْبِهِ مِنْ صَاعِ بُرِّهِ مِنْ صَاعِ تَمْرِهِ – حَتَّى قَالَ – وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ ». قَالَ فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا بَلْ قَدْ عَجَزَتْ – قَالَ – ثُمَّ تَتَابَعَ النَّاسُ حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَتَهَلَّلُ كَأَنَّهُ مُذْهَبَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ سَنَّ فِى الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ وَمَنْ سَنَّ فِى الإِسْلاَمِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَىْءٌ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதைப் பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூலி கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதைச் செய்தவர்களின் கூலியிலிருந்து கொஞ்சம் கூட குறைத்து விடாது.கவலைப்பட வேண்டும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (4831)

கவலைப்பட வேண்டும்

3231- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ : أَخْبَرَنِي يُونُسُ ، عَنِ ابْنِ شِهَابٍ ، قَالَ : حَدَّثَنِي عُرْوَةُ
أَنَّ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ قَالَ لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ ، وَكَانَ أَشَدُّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي فَلَمْ أَسْتَفِقْ إِلاَّ وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِيفَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ فَنَادَانِي فَقَالَ إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ وَمَا رَدُّوا عَلَيْكَ وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الْجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ فَنَادَانِي مَلَكُ الْجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ فَقَالَ ذَلِكَ فِيمَا شِئْتَ إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمِ الأَخْشَبَيْنِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மாற்று மதத்தார்களிடம் எடுத்துச் சொல்வதற்காக தாயிஃப் நகரத்திற்குச் சென்றார்கள். ஆனால் அவ்வூர் தலைவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையாகப் பேசவில்லை. நபி (ஸல்) அவர்களுடைய விருப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நபியவர்களுக்குக் கடும் துன்பங்களைக் கொடுத்தார்கள். மக்களுக்கு ஏகத்துவக் கொள்கையை சொல்ல முடியாமல் போனதை எண்ணி நபி (ஸல்) அவர்கள் மிகவும் கவலைப்பட்டவர்களாகத் திரும்பி வந்தார்கள்.

மக்களால் நபி (ஸல்) அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் சுய உணர்வையே இழந்து விட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை இடையில் சந்தித்து, ‘நீங்கள் அனுமதி கொடுத்தால் இரண்டு மலைகளுக்கிடையில் இருக்கும் இந்த ஊரின் மேல் மலைகளைப் புரட்டிப் போட்டு அழித்து விடுகிறேன்’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”இவர்களை அழிக்க வேண்டாம். இவர்களுடைய சந்ததிகள் ஏகத்துவக் கொள்கைவாதிகளாக வருவார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (3231)

அழகிய முறையில் நட்புக்கொள்ளுதல்

2068- حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ ، حَدَّثَنَا الأَعْمَشُ ، قَالَ ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَمِ فَقَالَ : حَدَّثَنِي الأَسْوَدُ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ
நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தமது இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (2068)

1356- حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا حَمَّادٌ ، وَهْوَ ابْنُ زَيْدٍ – عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهْوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு ”இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!” என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், ”அபுல் காசிம் (என்ற) நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!” என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், ”இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்விற்கே சகல புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள். 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (1356)

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். 
அல்குர்ஆன் (9:60)

சண்டைக்கு வந்தவர்களிடமும் சன்மார்க்கத்தைப் பரப்புதல்

எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக! அல்குர்ஆன் (25: 52)

நாவுகளால் போரிட வேண்டும் என்றால் இணை வைப்பாளர்களிடத்தில் உள்ள அசத்தியக் கருத்துக்களை எடுத்துக் கூறி, அவர்களை சத்தியத்தின் பால் கொண்டு வருவதாகும். நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு போருக்குச் சென்றாலும் முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள்.

2053- حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَرْطَاةَ ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ
مَا قَاتَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمًا حَتَّى يَدْعُوَهُمْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தார்களிடத்தில் போரிட்டாலும் அவர்களை (இஸ்லாத்தின் பால்) அழைக்காமல் இருந்ததில்லை. 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத் (2001)

கைபர் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்கள் களம் இறங்கினார்கள். அவர்களிடத்தில் போரிடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமிக்கிறார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ”எதிரிகள் நம்மைப் போன்று இஸ்லாமியர்களாக ஆகும் வரை நான் அவர்களிடம் போர் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய பதில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

2942- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ، عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ
يَوْمَ خَيْبَرَ لأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلاً يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى فَقَالَ أَيْنَ عَلِيٌّ فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ فَأَمَرَ فَدُعِيَ لَهُ فَبَصَقَ فِي عَيْنَيْهِ فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّهُ لَمْ يَكُنْ بِهِ شَيْءٌ فَقَالَ نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ فَوَاللَّهِ لأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَم
”நிதானத்தைக் கடைபிடிப்பீராக! அவர்களுடைய களத்திற்கு நீர் சென்றவுடன் அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்து அவர்கள் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல்: புகாரி (2942)

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னந்தனியாக…

ஆரம்ப கால கட்டத்தில் பெருமானாரை அதிகமான மக்கள் மறுத்தார்கள். விரல் விட்டு எண்ணும் விதத்தில் சில நபர்கள் மாத்திரம் பெருமானாரைத் தூதராக ஏற்றிருந்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்கள் எதற்கும் அஞ்சாமல் தன்னந்தனியாக ஏகத்துவக் கொள்கையை மக்களிடத்தில் பிரகடனம் செய்தார்கள். தாயிஃப் நகரத்திற்குத் தனிமையில் சென்ற போது அங்கு மக்கள் அவர்களுக்கு அளித்த கஷ்டங்களை அனுபவித்து விட்டுக் கவலையோடு திரும்பினார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (3231)

(16022) 16118- قَالَ عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ : حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ ، قَالَ : حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ، عَنْ رَبِيعَةَ بْنِ عِبَادٍ ، قَالَ
رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَدْعُو النَّاسَ إِلَى الإِِسْلاَمِ بِذِي الْمَجَازِ وَخَلْفَهُ رَجُلٌ أَحْوَلُ ، يَقُولُ : لاَ يَغْلِبَنَّكُمْ هَذَا ؟ عَنْ دِينِكُمْ وَدِينِ آبَائِكُمْ ، قُلْتُ لأَبِي وَأَنَا غُلاَمٌ : مَنْ هَذَا الأَحْوَلُ ، الَّذِي يَمْشِي خَلْفَهُ ؟ قَالَ : هَذَا عَمُّهُ أَبُو لَهَبٍ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்மஜாஸ் என்னும் இடத்தில் மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்களுக்குப் பின்னால் மாறுகண் கொண்ட ஒருவர், ”இவர் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களது முன்னோர்களின் மார்க்கத்தை விட்டும் உங்களை (மாற்றி) வென்றுவிட வேண்டாம்” என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போது நான் சிறுவனாக இருந்தேன். என் தந்தையிடம் ”இவருக்குப் பின்னால் நடந்து வருபவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, ”இவர் முஹம்மதுடைய பெரிய தந்தை அபூலஹப் ஆவார்” என்று கூறினார். 
அறிவிப்பவர்: ரபீஆ பின் அப்பாத் (ரலி) நூல்: அஹ்மத் (15447)

1360- حَدَّثَنَا إِسْحَاقُ ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ صَالِحٍ ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ : أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ ، عَنْ أَبِيهِ
أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ وَعَبْدَ اللهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لأَبِي طَالِبٍ يَا عَمِّ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللهِ فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَلْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَعْرِضُهَا عَلَيْهِ وَيَعُودَانِ بِتِلْكَ الْمَقَالَةِ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ وَأَبَى أَنْ يَقُولَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَمَا وَاللَّهِ لأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ {مَا كَانَ لِلنَّبِيِّ} الآيَةَ
பெருமானாரின் பெரிய தந்தையான அபூதாலிப் அவர்கள் மரண வேளையில் இருந்த போது அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்குத் தடையாக அபூஜஹ்ல் இருந்தான். முடிவில் அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் இருப்பதாகக் கூறிவிட்டு மரணித்தார். 
அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி) நூல்: புகாரி (1360)

2925- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، قَالَ : أَخْبَرَنَا إِسْرَائِيلُ ، قَالَ : حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْمُغِيرَةِ ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ ، عَنْ جَابِرٍ ، قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ يَعْرِضُ نَفْسَهُ بِالْمَوْقِفِ ، فَقَالَ : أَلاَ رَجُلٌ يَحْمِلْنِي إِلَى قَوْمِهِ ؟ فَإِنَّ قُرَيْشًا قَدْ مَنَعُونِي أَنْ أُبَلِّغَ كَلاَمَ رَبِّي
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுடைய காலத்தில் (மக்களிடத்தில்) தன்னை (நபி என்று) எடுத்துரைத்தார்கள். தன்னுடைய கூட்டத்தாரிடம், ”என்னை அழைத்துச் செல்பவர் யாரும் (உங்களில்) இல்லையா? குரைஷிகள் எனது இறைவனின் கூற்றை எடுத்துரைக்க விடாமல் என்னைத் தடுத்து விட்டார்கள்” என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதி (2849)

4566- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى حِمَارٍ عَلَى قَطِيفَةٍ فَدَكِيَّةٍ وَأَرْدَفَ أُسَامَةَ بْنَ زَيْدٍ وَرَاءَهُ يَعُودُ سَعْدَ بْنَ عُبَادَةَ فِي بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ قَبْلَ وَقْعَةِ بَدْرٍ قَالَ : حَتَّى مَرَّ بِمَجْلِسٍ فِيهِ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ ، وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ فَإِذَا فِي الْمَجْلِسِ أَخْلاَطٌ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ وَالْيَهُودِ وَالْمُسْلِمِينَ وَفِي الْمَجْلِسِ عَبْدُ اللهِ بْنُ رَوَاحَةَ فَلَمَّا غَشِيَتِ الْمَجْلِسَ عَجَاجَةُ الدَّابَّةِ خَمَّرَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ أَنْفَهُ بِرِدَائِهِ ثُمَّ قَالَ : لاََ تُغَبِّرُوا عَلَيْنَا فَسَلَّمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَيْهِمْ ثُمَّ وَقَفَ فَنَزَلَ فَدَعَاهُمْ إِلَى اللهِ وَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ أَيُّهَا الْمَرْءُ إِنَّهُ لاَ أَحْسَنَ مِمَّا تَقُولُ إِنْ كَانَ حَقًّا فَلاَ تُؤْذِينَا بِهِ فِي مَجْلِسِنَا ارْجِعْ إِلَى رَحْلِكَ فَمَنْ جَاءَكَ فَاقْصُصْ عَلَيْهِ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ رَوَاحَةَ بَلَى يَا رَسُولَ اللهِ فَاغْشَنَا بِهِ فِي مَجَالِسِنَا فَإِنَّا نُحِبُّ ذَلِكَ فَاسْتَبَّ
ஓரிடத்தில் மக்கள் கூட்டம் காணப்படுமேயானால் நபி (ஸல்) அவர்கள் உடனே அங்க இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். சிறியவர் பெரியவர் என்று பார்க்காமல் கூச்சப்படாமல் யாவருக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழரை நலம் விசாரிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு சபையைக் கண்டார்கள். அதில் முஸ்லிம்களும் யூதர்களும் இணை வைப்பாளர்களும் கலந்திருந்தார்கள். வந்த நோக்கம் வேறாக இருந்தாலும் கூட்டத்தைப் பார்த்தவுடன் அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டது.

ஆகையால் அவர்கள் அந்த சபையோர்களை நோக்கித் தமது வாகனத்தைச் செலுத்தினார்கள். வாகனத்தை விட்டு இறங்கி அவர்களுக்கு சலாம் கூறி இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். குர்ஆனுடைய வசனங்களையும் அவர்களிடத்தில் ஓதிக் காட்டினார்கள். நயவஞ்சகர்களின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் நபிகளாரிடத்தில், ”இது போன்ற சபைகளில் உம்முடைய கூற்றைச் சொல்லி எங்களைத் தொல்லைப்படுத்தாதீர். இங்கிருந்து சென்று விடும். உம்மிடம் வருபவர்களிடம் மாத்திரம் இதை பரப்பிக் கொள்ளும்” என்று கூறினாôன். அங்கிருந்த நபித்தோழர் ஒருவரும் ”ஆம்! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நம்முடைய அவையில் இதை எடுத்துரைக்கலாம்” என்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் கூறியதை நியாயப்படுத்தினார். இவர்கள் கூறிய இந்தப் பதிலைக் கேட்டு நபியவர்கள் கவலைப்பட்டார்கள். 
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி), நூல்: புகாரி (4566)

1355 – وَقَالَ سَالِمٌ سَمِعْتُ ابْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ
انْطَلَقَ بَعْدَ ذَلِكَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأُبَيُّ بْنُ كَعْبٍ إِلَى النَّخْلِ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍوَهُوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنِ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ ابْنُ صَيَّادٍ فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ مُضْطَجِعٌ يَعْنِي فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْزَةٌ ، أَوْ زَمْرَةٌ فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ فَقَالَتْ لاِبْنِ صَيَّادٍ يَا صَافِ ، وَهْوَ اسْمُ ابْنِ صَيَّادٍ – هَذَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم فَثَارَ ابْنُ صَيَّادٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَوْ تَرَكَتْهُ بَيَّنَ.
وَقَالَ شُعَيْبٌ فِي حَدِيثِهِ فَرَفَصَهُ رَمْرَمَةٌ ، أَوْ زَمْزَمَةٌ
பெருமானார் (ஸல்) அவர்கள் தம்மை விட வயது குறைந்தவர்களிடத்திலும் இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள்.

இப்னு சய்யாத் என்பவன் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் பருவ வயதை எட்டியிருந்தான். நபியவர்கள் இப்னு சய்யாதைத் தனது கையால் தட்டிக் கொடுத்து விட்டு இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (1355)

யமன் நாட்டிற்கு முஆத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ஆளுநராக நியமித்தார்கள்..

1395- حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ زَكَرِيَّاءَ بْنِ إِسْحَاقَ ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللهِ بْنِ صَيْفِيٍّ ، عَنْ أَبِي مَعْبَدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، إِلَى الْيَمَنِ فَقَالَ ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ
நபி (ஸல்) அவர்கள் முஆதை யமனுக்கு அனுப்பினார்கள். அப்போது அவரிடம், ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தவர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (1395)

இஸ்லாத்தைப் பரப்பும் ஆயுதம் எழுதுகோல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய நாவால் இஸ்லாத்தைப் பரப்பியதைப் போல் எழுத்தின் மூலமும் பரப்பினார்கள். அவர்களுக்கு எழுதத் தெரியாவிட்டாலும் எழுதத் தெரிந்தவர்களை

வைத்து இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளை எழுதி அன்றைக்கு அவர்களைச் சுற்றி ஆட்சி செய்து கொண்டிருந்த பல மன்னர்களுக்கு அனுப்பினார்கள். இன்னும் பல கூட்டத்தார்களுக்கும் இவ்வாறு கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள்..

(20667) 20943- حَدَّثَنَا يُونُسُ ، وَحُسَيْنٌ ، قَالاَ : حَدَّثَنَا شَيْبَانُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ مُضَارِبِ بْنِ حَزْنِ الْعِجْلِيِّ ، قَالَ : وَحَدَّثَ مِرْثَدُ بْنُ ظَبْيَانَ ، قَالَ
جَاءَنَا كِتَابٌ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَمَا وَجَدْنَا لَهُ كَاتِبًا يَقْرَؤُهُ عَلَيْنَا ، حَتَّى قَرَأَهُ رَجُلٌ مِنْ بَنِي ضُبَيْعَةَ : مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَكْرِ بْنِ وَائِلٍ ، أَسْلِمُوا تَسْلَمُوا.
حَدِيثُ رَجُلٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எங்களுக்குக் கடிதம் வந்தது. அதை எங்களுக்குப் படித்துக் காட்டுவதற்கு ஒருவரும் இல்லை. கடைசியாக ளுபைஆ கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அதைப் படித்தார். (அதில்) ”பக்ர் பின் வாயிலிற்கு, அல்லாஹ்வின் தூதர் எழுதிக் கொண்டது நீங்கள் இஸ்லாத்தைத் தழுவுங்கள்; சாந்தியடைவீர்கள்” என்று இருந்தது. 
அறிவிப்பவர்: மிர்சத் பின் லப்யான் (ரலி), நூல்: அஹ்மத் (19746)

5872- حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، حَدَّثَنَا سَعِيدٌ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ نَبِيَّ اللهِ صلى الله عليه وسلم أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى رَهْطٍ ، أَوْ أُنَاسٍ مِنَ الأَعَاجِمِ فَقِيلَ لَهُ إِنَّهُمْ لاَ يَقْبَلُونَ كِتَابًا إِلاَّ عَلَيْهِ خَاتَمٌ فَاتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ فَكَأَنِّي بِوَبِيصِ ، أَوْ بِبَصِيصِ الْخَاتَمِ فِي إِصْبَعِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، أَوْ فِي كَفِّهِ
நபி (ஸல்) அவர்கள் அரபியல்லாதவர்களான (ரோம் நாட்டைச் சேர்ந்த) ஒரு குழுவினருக்கு அல்லது மக்களில் சிலருக்குக் கடிதம் எழுத விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினைப் பொறித்தார்கள். இப்போதும் நான் நபி (ஸல்) அவர்களின் விரலில் அந்த மோதிரம் மின்னியதைப் பார்ப்பது போன்றுள்ளது. 
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி (5872)

7- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ قَالَ : أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ
أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي رَكْبٍ مِنْ قُرَيْشٍ ، وَكَانُوا تُجَّارًا بِالشَّامِ ، فِي الْمُدَّةِ الَّتِي كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَادَّ فِيهَا أَبَا سُفْيَانَ وَكُفَّارَ قُرَيْشٍ فَأَتَوْهُ وَهُمْ بِإِيلِيَاءَ فَدَعَاهُمْ فِي مَجْلِسِهِ وَحَوْلَهُ عُظَمَاءُ الرُّومِ ثُمَّ دَعَاهُمْ وَدَعَا بِتَرْجُمَانِهِ ، فَقَالَ : أَيُّكُمْ أَقْرَبُ نَسَبًا بِهَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ ، فَقَالَ : أَبُو سُفْيَانَ فَقُلْتُ أَنَا أَقْرَبُهُمْ نَسَبًا ، فَقَالَ : أَدْنُوهُ مِنِّي وَقَرِّبُوا أَصْحَابَهُ فَاجْعَلُوهُمْ عِنْدَ ظَهْرِهِ ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ قُلْ لَهُمْ إِنِّي سَائِلٌ هَذَا عَنْ هَذَا الرَّجُلِ فَإِنْ كَذَبَنِي فَكَذِّبُوهُ فَوَاللَّهِ لَوْلاَ الْحَيَاءُ مِنْ أَنْ يَأْثِرُوا عَلَيَّ كَذِبًا لَكَذَبْتُ عَنْهُ ثُمَّ كَانَ أَوَّلَ مَا سَأَلَنِي عَنْهُ أَنْ قَالَ كَيْفَ نَسَبُهُ فِيكُمْ قُلْتُ هُوَ فِينَا ذُو نَسَبٍ ، قَالَ : فَهَلْ قَالَ هَذَا الْقَوْلَ مِنْكُمْ أَحَدٌ قَطُّ قَبْلَهُ قُلْتُ : لاَ ، قَالَ : فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ : لاَ قَالَ فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَقُلْتُ بَلْ ضُعَفَاؤُهُمْ قَالَ أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ قُلْتُ بَلْ يَزِيدُونَ ، قَالَ : فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ قُلْتُ : لاَ ، قَالَ : فَهَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا ، قَالَ : قُلْتُ : لاَ ، قَالَ : فَهَلْ يَغْدِرُ قُلْتُ : لاَ وَنَحْنُ مِنْهُ فِي مُدَّةٍ لاَ نَدْرِي مَا هُوَ فَاعِلٌ فِيهَا قَالَ وَلَمْ تُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا غَيْرُ هَذِهِ الْكَلِمَةِ قَالَ : فَهَلْ قَاتَلْتُمُوهُ قُلْتُ نَعَمْ قَالَ فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ قُلْتُ الْحَرْبُ بَيْنَنَا وَبَيْنَهُ سِجَالٌ يَنَالُ مِنَّا وَنَنَالُ مِنْهُ قَالَ مَاذَا يَأْمُرُكُمْ قُلْتُ يَقُولُ اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالصِّلَةِ فَقَالَ لِلتَّرْجُمَانِ قُلْ لَهُ سَأَلْتُكَ عَنْ نَسَبِهِ فَذَكَرْتَ أَنَّهُ فِيكُمْ ذُو نَسَبٍ فَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي نَسَبِ قَوْمِهَا وَسَأَلْتُكَ هَلْ قَالَ أَحَدٌ مِنْكُمْ هَذَا الْقَوْلَ فَذَكَرْتَ أَنْ لاَ فَقُلْتُ لَوْ كَانَ أَحَدٌ قَالَ هَذَا الْقَوْلَ قَبْلَهُ لَقُلْتُ رَجُلٌ يَأْتَسِي بِقَوْلٍ قِيلَ قَبْلَهُ وَسَأَلْتُكَ هَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ فَذَكَرْتَ أَنْ لاَ قُلْتُ فَلَوْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ رَجُلٌ يَطْلُبُ مُلْكَ أَبِيهِ وَسَأَلْتُكَ هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ فَذَكَرْتَ أَنْ لاَ فَقَدْ أَعْرِفُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَذَرَ الْكَذِبَ عَلَى النَّاسِ وَيَكْذِبَ عَلَى اللهِ وَسَأَلْتُكَ أَشْرَافُ النَّاسِ اتَّبَعُوهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَذَكَرْتَ أَنَّ ضُعَفَاءَهُمُ اتَّبَعُوهُ وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ وَسَأَلْتُكَ أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ فَذَكَرْتَ أَنَّهُمْ يَزِيدُونَ وَكَذَلِكَ أَمْرُ الإِيمَانِ حَتَّى يَتِمَّ وَسَأَلْتُكَ أَيَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ فَذَكَرْتَ أَنْ لاَ وَكَذَلِكَ الإِيمَانُ حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ الْقُلُوبَ وَسَأَلْتُكَ هَلْ يَغْدِرُ فَذَكَرْتَ أَنْ لاَ وَكَذَلِكَ الرُّسُلُ لاَ تَغْدِرُ وَسَأَلْتُكَ بِمَا يَأْمُرُكُمْ فَذَكَرْتَ أَنَّهُ يَأْمُرُكُمْ أَنْ تَعْبُدُوا اللَّهَ ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَيَنْهَاكُمْ عَنْ عِبَادَةِ الأَوْثَانِ وَيَأْمُرُكُمْ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ فَإِنْ كَانَ مَا تَقُولُ حَقًّا فَسَيَمْلِكُ مَوْضِعَ قَدَمَيَّ هَاتَيْنِ وَقَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّهُ خَارِجٌ لَمْ أَكُنْ أَظُنُّ أَنَّهُ مِنْكُمْ فَلَوْ أَنِّي أَعْلَمُ أَنِّي أَخْلُصُ إِلَيْهِ لَتَجَشَّمْتُ لِقَاءَهُ وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ عَنْ قَدَمِهِ ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الَّذِي بَعَثَ بِهِ دِحْيَةُ إِلَى عَظِيمِ بُصْرَى فَدَفَعَهُ إِلَى هِرَقْلَ فَقَرَأَهُ فَإِذَا فِيهِ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى أَمَّا بَعْدُ فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ أَسْلِمْ تَسْلَمْ يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ ، وَ{يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لاَ نَعْبُدَ إِلاَّ اللَّهَ ، وَلاَ نُشْرِكَ بِهِ شَيْئًا ، وَلاَ يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ} قَالَ أَبُو سُفْيَانَ فَلَمَّا قَالَ مَا قَالَ وَفَرَغَ مِنْ قِرَاءَةِ الْكِتَابِ كَثُرَ عِنْدَهُ الصَّخَبُ وَارْتَفَعَتِ الأَصْوَاتُ وَأُخْرِجْنَا فَقُلْتُ لأَصْحَابِي حِينَ أُخْرِجْنَا لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ إِنَّهُ يَخَافُهُ مَلِكُ بَنِي الأَصْفَرِ فَمَا زِلْتُ مُوقِنًا أَنَّهُ سَيَظْهَرُ حَتَّى أَدْخَلَ اللَّهُ عَلَيَّ الإِسْلاَمَ.
وَكَانَ ابْنُ النَّاظُورِ صَاحِبُ إِيلِيَاءَ وَهِرَقْلَ سُقُفًّا عَلَى نَصَارَى الشَّامِ يُحَدِّثُ أَنَّ هِرَقْلَ حِينَ قَدِمَ إِيلِيَاءَ أَصْبَحَ يَوْمًا خَبِيثَ النَّفْسِ فَقَالَ بَعْضُ بَطَارِقَتِهِ قَدِ اسْتَنْكَرْنَا هَيْئَتَكَ قَالَ ابْنُ النَّاظُورِ ، وَكَانَ هِرَقْلُ حَزَّاءً يَنْظُرُ فِي النُّجُومِ فَقَالَ لَهُمْ حِينَ سَأَلُوهُ إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ حِينَ نَظَرْتُ فِي النُّجُومِ مَلِكَ الْخِتَانِ قَدْ ظَهَرَ فَمَنْ يَخْتَتِنُ مِنْ هَذِهِ الأُمَّةِ قَالُوا لَيْسَ يَخْتَتِنُ إِلاَّ الْيَهُودُ فَلاَ يُهِمَّنَّكَ شَأْنُهُمْ وَاكْتُبْ إِلَى مَدَايِنِ مُلْكِكَ فَيَقْتُلُوا مَنْ فِيهِمْ مِنَ الْيَهُودِ فَبَيْنَمَا هُمْ عَلَى أَمْرِهِمْ أُتِيَ هِرَقْلُ بِرَجُلٍ أَرْسَلَ بِهِ مَلِكُ غَسَّانَ يُخْبِرُ عَنْ خَبَرِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَلَمَّا اسْتَخْبَرَهُ هِرَقْلُ قَالَ اذْهَبُوا فَانْظُرُوا أَمُخْتَتِنٌ هُوَ أَمْ لاَ فَنَظَرُوا إِلَيْهِ فَحَدَّثُوهُ أَنَّهُ مُخْتَتِنٌ وَسَأَلَهُ ، عَنِ الْعَرَبِ فَقَالَ هُمْ يَخْتَتِنُونَ فَقَالَ هِرَقْلُ هَذَا مَلِكُ هَذِهِ الأُمَّةِ قَدْ ظَهَرَ ثُمَّ كَتَبَ هِرَقْلُ إِلَى صَاحِبٍ لَهُ بِرُومِيَةَ ، وَكَانَ نَظِيرَهُ فِي الْعِلْمِ وَسَارَ هِرَقْلُ إِلَى حِمْصَ فَلَمْ يَرِمْ حِمْصَ حَتَّى أَتَاهُ كِتَابٌ مِنْ صَاحِبِهِ يُوَافِقُ رَأْيَ هِرَقْلَ عَلَى خُرُوجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَّهُ نَبِيٌّ فَأَذِنَ هِرَقْلُ لِعُظَمَاءِ الرُّومِ فِي دَسْكَرَةٍ لَهُ بِحِمْصَ ثُمَّ أَمَرَ بِأَبْوَابِهَا فَغُلِّقَتْ ثُمَّ اطَّلَعَ ، فَقَالَ : يَا مَعْشَرَ الرُّومِ هَلْ لَكُمْ فِي الْفَلاَحِ وَالرُّشْدِ ، وَأَنْ يَثْبُتَ مُلْكُكُمْ فَتُبَايِعُوا هَذَا النَّبِيَّ فَحَاصُوا حَيْصَةَ حُمُرِ الْوَحْشِ إِلَى الأَبْوَابِ فَوَجَدُوهَا قَدْ غُلِّقَتْ فَلَمَّا رَأَى هِرَقْلُ نَفْرَتَهُمْ وَأَيِسَ مِنَ الإِيمَانِ قَالَ رُدُّوهُمْ عَلَيَّ وَقَالَ إِنِّي قُلْتُ مَقَالَتِي آنِفًا أَخْتَبِرُ بِهَا شِدَّتَكُمْ عَلَى دِينِكُمْ فَقَدْ رَأَيْتُ فَسَجَدُوا لَهُ وَرَضُوا عَنْهُ فَكَانَ ذَلِكَ آخِرَ شَأْنِ هِرَقْلَ.
رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ ، وَيُونُسُ وَمَعْمَرٌ ، عَنِ الزُّهْرِيِّ.

புஸ்ராவின் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி (ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில், ”அளவற்ற அருளாளனும் கருணையாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார் ரோமபுரி சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது. நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர். அல்லாஹ் உமக்கு இருமடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

வேதத்தை உடையவர்களே! நாம் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்கக் கூடாது. அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை நமது இரட்சகராக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான கொள்கையை நோக்கி வந்து விடுங்கள். (இக்கொள்கையை) நீங்கள் (ஏற்க மறுத்து) புறக்கணித்தால் நாங்கள் நிச்சயமாக (அந்த ஒரே இறைவனுக்கு கீழ்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக ஆகிவிடுங்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (7)

அரசன் இஸ்லாத்தைத் தழுவி விட்டால் அந்த அரசனுக்குக் கீழ் வாழும் குடிமக்கள் சுலபமாக இஸ்லாத்தில் வந்து விடுவார்கள் என்பதால் அரசனுக்கு இக்கடிதத்தை அனுப்புகிறார்கள்.

தொழுகையில் சஃப் இடைவெளிவிட்டு தொழுவது சரியா?? தவறா??

தொழுகையில் சஃப் இடைவெளிவிட்டு தொழுவது சரியா?? தவறா?? ஆதாரங்கள் & அடிப்படை:

தோற்று நோய்: 
   உள்ளூரில் உள்ளவர்கள் அந்த ஊரை விட்டு வெளியே போகக்கூடாது. வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு வரக்கூடாது என்பது இஸ்லாத்தில் உள்ள சட்டம். 

  அந்த மாதிரி தொற்று நோய் உமர்(ரலி) காலத்தில் வந்தது. அந்த சமயத்தில் பள்ளிவாசலை மூடியோ , பள்ளிவாசலுக்கு வருபவர்களை தடுக்கவோ இல்லை. மேலும் இந்த மாதிரி சஃப்பில் இடைவெளிவிட்டு தொழுகை செய்யவும் இல்லை. எப்போதும் செய்தது போல் தான் செய்தார்கள். 

 முஸ்லீம் நாடுகளின் மிகப்பெரிய தவறு என்னவென்றால் இவர்களிடம் இந்த தொற்று நோய்யை உண்மையா என்பதை ஆய்வு செய்ய அனைத்து வசதிகளும் இருந்தும் ஆய்வு செய்யாமல் WHO சொல்வதை அப்படியே கண்மூடித்தனமாக கடைப்பிடித்து வருகின்றன. எனவே பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் ஆய்வு செய்யாமல் மக்களை துன்புறுத்துவது தவறு. 
  
  நபிகளார்(ஸல்) இறைவா என் சமுதாயத்தவரின் விவகாரங்களில் ஒன்றுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்ட  ஒருவர் தேவையில்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கினால் நீ அவனுக்கு சிரமத்தை உருவாக்கு என்று தூவா செய்தார்கள். 
(முஸ்லீம் ஹதீஸ்)

இந்த ஆட்சியாளர்களுக்கு முட்டு கொடுக்கும் சில மார்க்க அறிஞர்களும் இந்த சாபத்திற்கு ஆளாவார்கள்.

நபிகளாரின(ஸல்) கட்டளைகள்:
   நபிகளாரின்(ஸல்) கட்டளைகளில் இரண்டு வகை உள்ளன.  அமுரு பின் மஹ்ருஃப் - நன்மையை செய்வது, ஏறுவது,   நைய்யனிர் முன் கஃர்- தீமையை தடுப்பது, விலகுவது.

முஸ்லீம் 1337 , புகாரி -7288
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும்விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 7288. 
அத்தியாயம் : 96. இறைவேதத்தையும் நபிவழியையும் கடைப்பிடித்தல்

  இதில் தீமையை தவிர்ப்பது, தடுப்பது 100% கடைப்பிடிக்க வேண்டும். அதுவே நன்மையை செய்வது, ஏறுவது முடிந்த அளவு செய்வது. 

 இந்த சஃப் சரியாக நெருங்கி நிற்பது நன்மை ஏவுவதில் வரும் என்று ஒரு ஆலீம் கூறினார். ஆனால் அதற்கான ஹதீஸ்களை பார்த்தால் தெரியும் எப்படி சொல்லப்பட்டது என்பது.. ! 

முஸ்லீம் 739

அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் ஆரம்பத்தி)ல் எங்களுடைய தோள்களைத் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள்; மேலும், நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும். உங்களில் அறிவிற்சிறந்தவர்கள் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும் என்று கூறுவார்கள்.
தொடர்ந்து அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், நீங்களோ இன்று (வரிசையில் சீராக நிற்காத காரணத்தால்) கடுமையான கருத்துவேறுபாட்டுடன் காணப்படுகின்றீர்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 739. 
அத்தியாயம் : 4. தொழுகை

 இந்த வார்த்தை பிரேயோகம் தீமையை தடுப்பதில் வரும். 

சாஹிஹ் முஸ்லீம்  978
அல்லாஹ்வின் அடியார்கள் சஃப்களை சரி செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அல்லாஹ் உங்கள் மீது பிரிவினையை உண்டாக்குவான். 

 இது தீமை தடுக்க கட்டளையிட்டது. இதை கண்டிப்பாக பின்பற்றுவதில் வரும். அல்லாஹ் நம் மீது பிரிவினை உண்டாக்க நினைத்தால் நாம் பண் மடங்காக பிரிவோம், பண் மடங்கு இழிவு வரும்., அல்லாஹ்வின் கோபம் வரும். 

 ஒரு நபித்தோழர் அபு மசூத் (ரலி)- இன்று  நீங்களோ வரிசையில் சரியாக நிற்காத காரணத்தால்   கடுமையான கருத்து வேறுபாடுடன் காணப்படுகிறீர்கள்" என்று சொன்னார்கள். 

சஃப்பின் முக்கியத்துவம்: 
As-Saf 61:4

اِنَّ اللّٰهَ یُحِبُّ الَّذِیۡنَ یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِهٖ صَفًّا كَاَنَّهُمۡ بُنۡیَانٌ مَّرۡصُوۡصٌ 

4. (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட பலமான அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.

 இது போரில் நிற்கும் சஃப் மட்டுமில்லை தொழுகையில் நிற்கும் சஃப்பிற்கும் பொருந்தும் என்று பல சஹப்பாக்கள் கூறியுள்ளனர். 

முஸ்லீம் 745
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வளைந்த) அம்புக் குச்சிகளைச் சீராக்குவதைப் போன்று எங்கள் (தொழுகை) அணிகளைச் சீராக்குவார்கள். இதை நாங்கள் (நன்கு) புரிந்து கொண்டோம் என்று அவர்கள் கருதியவரை (இவ்வாறு செய்துவந்தார்கள்). பின்னர் ஒரு நாள் அவர்கள் வந்து (தொழுவிப்பதற்காக) நின்று தக்பீர்(தஹ்ரீம்) கூறப்போகும் நேரத்தில் ஒரு மனிதரின் நெஞ்சு வரிசையிலிருந்து (விலகி) வெளியேறியவாறு நிற்பதைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் அடியார்களே! உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில்,அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்தி விடுவான் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 745. 
அத்தியாயம் : 4. தொழுகை

இது சாதாரண விஷயமில்லை. சஃப்பின் முக்கியத்துவம் அதிகம். 

முஸ்லீம்  430, 119 , மிஸ்காத் 1091: 
நபிகளார்(ஸல்) தொழுகையில் சஹப்பாக்களை பார்த்து நீங்கள் ஏன் பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள்..??  வானவர்களை போல் நில்லுங்கள் என்றார்கள். அதற்கு சஹப்பாக்கள் வானவர்கள் எப்படி நிற்பார்கள் என்று கேட்டனர். முதல் அணியை நிறைவு செய்வார்கள். வரிசையில் நெருக்கமாக நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள். மேலும் இரண்டாம் ரக்காத்தில் நான் பார்க்கவில்லை என்று வரிசையை கலைத்துவிடாதீர்கள் என்று கூறினார்கள். ஏனேனில் நான் எப்படி முன்னால் பார்க்கிறேனோ அதை போல் பின்னாலும் பார்க்கிறேன் என்று சொன்னார்கள்.

இப்படி ஒரு நேரத்தில் கூட தொழுகையில் வரிசை சிதைந்திருப்பதை அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு சஃப் என்பது மிகவும் முக்கியம். 

இமாமின் கடமை: 

 மிஷ்காத்-  1097  அபு தாவூத் -665 :

 நோஃமன் பின் பஷீர்(ரலி) அறிவிக்கிறார்கள், தொழுகையில் நாங்கள் நிற்கும் போது நபி(ஸல்) சஃப்களை சரி செய்வார்கள். எப்போது நாங்கள் சரியாக நிற்கிறோமே அதன் பிறகு தான் அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் சொல்வார்கள். 

இது தான் இமாமிற்கான விதிமுறை. சஃப் சரியில்லாமல் தொழுகை தொடங்கவே கூடாது என்பது மஸாயீல்.. 
 
   இந்த சமூக இடைவெளி விட்டு நிற்கும் போது இமாம் தொழுகை ஆரம்பிக்க அனுமதியில்லை. இதற்கு மறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும். அது நபிகளார்(ஸல்) தடுத்ததை எப்படி செய்யலாம்..?? என்று அல்லாஹ் கேட்பான். 
  
   எதுவரை இந்த சமூக இடைவெளி இல்லாமல் நபிவழியில் தொழ அனுமதி கிடைக்கிறதோ அதுவரை பள்ளிவாசலை திறக்காமல் வீட்டிலேயே ஜமாஅத்தாக தொழுகலாம். 

 தொழுகை ஏற்று கொள்ளப்படாது: 
  அபு தாவூத் 666 -
   
 நபி(ஸல்) உங்கள் சஃப்களை நிலைநாட்டுங்கள். தோள்கள் சரிசமமாகவும் , இடைவெளி இல்லாமலும் , உங்கள் சகோதரருக்கு தோள்களை மென்மையாக ஆக்கி கொள்ளுங்கள். சைத்தானுக்கு இடைவெளி விடாதீர்கள். யார் சஃப்பை இணைத்துக்கொள்வாரோ அல்லாஹ் அவரையும் அரவணைத்து கொள்வான். யார் சஃப்பை இணைக்காமல் விட்டு விடுகிறாரோ அல்லாஹ்வும் அவரை விட்டுவடுவார் என்று கூறினார்கள். 

 முஸ்லீம் 741, 743

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 741. 
அத்தியாயம் : 4. தொழுகை

முஸ்னத் அஹ்மது- 18170, அபு தாவூத்- 682, தீர்மிதி- 230, மிஷ்காத்-1105: 

   வாபிஸா பின் வாஹ்ப்(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) சஃப்க்கு விலகி (ஜமாத்தில்) ஒரு மனிதர் தொழுவதை பார்த்து, அவரை மீண்டும் தொழுமாறு கட்டளையிட்டார்கள். 

எனவே சஃப் சரியில்லாமல் தொழுதால் அந்த தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது, அதை மீண்டும் தொழ வேண்டும் என்று நபிகளார்(ஸல்) கட்டளையிட்டார்கள். 

   சமூக இடைவெளியில் தொழுதால் நிச்சயமாக ஏற்று கொள்ளப்படாது. அதற்கு ஒரு போதும் அனுமதியில்லை. 

சைத்தானுடன் தொழுகை: 
  மேலும் அந்த செயலை சைத்தானுடன் சேர்ந்து கூறியுள்ளார். 

 புகாரி-583, 3272,73, முஸ்லீம்-288, 827:
மிஷ்காத்- 1042: 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
சூரியனின் தலைப்பகுதி உதயமாகிவிட்டால் அது முழுமையாக வெளிப்படும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்டால் அது (முழுமையாக) மறைந்து விடும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். 
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 3272. 
அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்
நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: 
மேலும், சூரியன் உதிக்கிற நேரத்திலும் அது மறைகிற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கிடையே உதிக்கிறது. 
ஸஹீஹ் புகாரி : 3273. 
அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

 நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, நானும் மதீனாவுக்கு வந்து அவருடைய சேவைக்கு வந்து தொழுகை நேரங்களைப் பற்றி என்னிடம் சொல்லும்படி கேட்டேன் என்று அம்ர் இப்னு அஸ்பா (ஸல்) அவர்கள் விளக்கினர். அவர் கூறினார்: “ஃபஜ்ர் தொழுகையைச் செய்யுங்கள்  சூரியன் நன்றாக உதயமாகும் வரை எந்த தொழுகையும் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது உதிக்கும் போது, அது சைத்தானின் தலையின் இரு பக்கங்களுக்கிடையில் எழுகிறது, பின்னர் காஃபிர்கள் அதற்கு முன் ஸஜ்தா செய்கிறார்கள்.  தொழும் போது  மலக்குகள் இருப்பதால், (தலைசிறந்த) தொழுகையை செய்யுங்கள், ஈட்டியின் நிழல் அவரது தலையில் விழுந்தாலும், பின்னர் தொழுகை செய்யாதீர்கள், ஏனென்றால் நரகம் எரிகிறது, எனவே நிழல் தோன்றத் தொடங்கும் போது, தொழுகை செய்யுங்கள்  மலக்குகள் இருக்கும் நேரத்தில், நீங்கள் அஸ்ர் தொழுகையைச் செய்தாலும், சூரியன் மறையும் வரை தொழுகை செய்யாதீர்கள்.  ஏனென்றால் அது சாத்தானின் தலையின் இரு பக்கங்களுக்கிடையில் அமைகிறது, பின்னர் காஃபிர்கள் அவனுக்கு முன் ஸஜ்தா செய்கிறார்கள்.
   நான் சொன்னேன்: அல்லாஹ்வின் நபி!  அவர் சொன்னார்: அவர் சொன்னார்: “உங்களில் ஒருவர் தனது வறட்சியின் தண்ணீருக்கு அருகில் வந்து அதை துவைக்கும்போது, மூக்கில் தண்ணீரை வைத்து அதை அசைக்கும்போது, அவரது முகம், வாய் மற்றும் மூக்கு.  பின்னர் அவர் அல்லாஹ்வின் கட்டளைப்படி முகத்தை கழுவுகையில், பின்னர் தண்ணீரின் மூலம் அவர் முகம் மற்றும் தாடியின் பக்கங்களிலும் உள்ள பாவங்களிலிருந்து விடுபடுகிறார், பின்னர் அவர் முழங்கைகள் வரை கைகளை கழுவுகிறார், பின்னர் தண்ணீருடன்  அவரது விரல்களின் நுனி வரை பாவங்கள் கழுவப்பட்டு, பின்னர் அவர் தலையைத் துடைக்கிறார், பின்னர் தண்ணீரில் அவரது தலைமுடியின் பக்கங்களில் உள்ள பாவங்கள் கழுவப்படுகின்றன.  பின்னர் அவர் கணுக்கால் உட்பட கால்களைக் கழுவுகிறார், பின்னர் கால்விரல்கள் உட்பட கால்களின் பாவங்கள் தண்ணீரில் கழுவப்படுகின்றன.அப்போது, அவர் எழுந்து தொழுது, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவர் தகுதியுள்ளவருக்கு மகிமைப்படுத்துகிறார்.  அவர் தனது இருதயத்தை தூய்மையான அல்லாஹ்வின் பக்கம் திருப்பினால், தொழுகைகளுக்குப் பிறகு அவர் தனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாள் போன்ற பாவங்களிலிருந்து தூய்மையாவார்.
 கூடுதல் தகவல்கள்
 இஸ்லாமிய சேயிங்ஸ்.காம் / ஹடீஸ்- விவரங்கள் / மிஷ்காட் / 1042

எனவே இந்த நேரத்தில் தொழுதால் அல்லாஹ்வை தொழுததாக ஆகாது, காஃபிர்களுடன் சேர்ந்து சைத்தானுக்கு தொழுத மாறி ஆகிவிடும். இதை போல் தான் சைத்தானுக்கு மத்தியில் தொழுதால் நாமும் அவனுடைய வரிசையில் வந்துவிடுவோம். எனவே இந்த இடைவெளிவிட்டு தொழுவது திட்டவட்டமான ஹராம்.. 

Al-Baqarah 2:208

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ كَآفَّةً ۪ وَلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّهٗ لَكُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ 

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

அபுதாவூத் -667,  மிஷ்காத்- 1093:

 ஹதீஸ்

 مْسْلِمُ بُنإِ,,, عَنْنَسِ بْنِ مَالِكٍ

 صُفُوفَكُمْ وَقَارِبُوا وَحَاذُوا بِالأَعْنَاقِ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي

 விவரிக்கப்பட்ட அனஸ் இப்னு மாலிக்:

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வரிசைகளில் ஒன்றாக நின்று, ஒருவருக்கொருவர் அருகில் கொண்டு வந்து, கழுத்துக்கு கழுத்தில் நிற்கவும், ஏனென்றால் நிச்சயமாக, சைத்தான் வரிசையில் சஃப்களின் இடையில்(திறப்புகளின் வழியாக) வருவதைப் பார்க்கிறேன்  சிறிய கருப்பு ஆடுகள் போல். 

 சாஹிஹ் (அல்-அல்பானி)

 சுனன் அபி தாவூத் 667
 புத்தகத்தில்: புத்தகம் 2, ஹதீஸ் 277
 ஆங்கில மொழிபெயர்ப்பு: புத்தகம் 2, ஹதீஸ் 667 அபு தாவூத்

  இப்படி தொழுவது ஹராம், சைத்தானுடன் தொடர்புடையது. முன்னர் மழைக்காலங்களில் வீட்டில் தொழுகலாம் என்று ஆதாரம் காட்டி வீட்டில் தொழுகை செய்வதை ஹலால் என்று சொன்னார்கள். இப்போது ஜமாத்துக்கு வராமல் வீட்டில் தொழும் வீடுகளை நபிகளார்(ஸல்) எரிக்க கூறியதாக ஆதாரம் காட்டி இப்படி ஹராமாக தொழ சொல்கிறார்கள். ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்கள்..??

  இந்த மாதிரி தொழுகை செய்ய ஆரம்பித்தால் இது ஆறு மாதங்கள் வரை தொடரும். பிறகு பழையப்படி சஃப் ஓட்டி நிற்க யாரும் முன்வரமாட்டார்கள். அதை பற்றி கவலைப்படமாட்டார்கள். 
 இந்த மாதிரி முதலில் இஸ்லாமிய நாடுகள் சமூக இடைவெளி தொழுகையை தானாக ஆரம்பித்து விட்டதால், முஸ்லீமல்லாத நாடுகளில் வாழும் நாம் இந்த அரசிடம் அது தவறு என்று சமூக இடைவெளி இல்லாமல் தொழுகை செய்ய இனி அனுமதி வாங்க முடியாது. இதற்கான குற்றம் அவர்களை தான் சேரும். 

 மற்ற விசயங்களில் முன்னோர்களை பயன்படுத்துபவர்கள், இப்போது மார்க்கத்தின் அடிப்படைக்கு ஏன் முன்னோர்களை பின்பற்றவில்லை??

இப்படி தொழுகை செய்ய எந்த நிர்ப்பந்தமும் நமக்கு இல்லை. வீட்டிலேயே தொழுகை நடத்த கூட ஒரு வகையில் அனுமதி எடுக்கலாம். இதுவே பள்ளிவாசலை மூடவோ , பள்ளிவாசலுக்கு வருபவர்களை தடுக்கவோ , அடிக்கவோ அனுமதியில்லை. முஸ்லீமல்லாத நாடுகளில் மட்டுமில்லாமல் , முஸ்லீம் நாடுகளிலும் அடிக்கப்பட்டு , கைதுசெய்யப்பட்டார்கள். இதற்கு அல்லாஹ்விடம் பதில் தர வேண்டும். அதே போல் இடைவெளி விட்டு தொழுகை செய்யவும் எந்த விதத்திலும் அனுமதியில்லை. 

இஸ்லாத்தின் அடிப்படை உடையும்

 இதில் இன்னொரு விஷயம் உள்ளது. ஜூம்மா நாளில் எப்படி செய்வார்கள்..?? என்ன செய்வார்கள்?? 
 அப்போது பாகுபாடு உருவாகும். முக்கிய பிரமுகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஏழைகளும், கூலி தொழிலாளி போன்றவர்கள் வெளியே தொழும் நிலை உருவாகும்.  சிலருக்கு ஜமாத் கிடைக்கும், சிலருக்கு கிடைக்காது. பாரபட்சம் காட்டப்படும். அது தான் பிரிவினைகள் பெரிய அளவில் உருவாகும் என்றது. சாதி பிரச்சினை போல் ஆகிவிடும். பிறகு இஸ்லாத்தை பலர் வெறுக்க நேரிடும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாத்தின் கயிறுகள் ஒவ்வொன்றாகத் துண்டிக்கப்படும். ஒரு கயிறு துண்டிக்கப்படும் போதெல்லாம் மக்கள் அதற்கு அடுத்ததைப் பற்றிப் பிடிப்பார்கள். அவைகளில் முதலாவதாகத் துண்டிக்கப்படுவது ஆட்சி அதிகாரம் ஆகும். அவைகளில் இறுதியானது தொழுகையாகும்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : அஹ்மத் 22214

இஸ்லாத்திற்கும் ஆட்சி, அரசியலுக்கு சம்பந்தமில்லை என்று பல ஆலீம்கள் கூறினார்கள். அது அல்லாஹ்வால் வழங்கப்படும் பிச்சை. அது நமக்கு கடமையில்லை என்று கூறினார்கள். ஆனால் இந்த ஹதீஸில் இஸ்லாத்தின் முதல் கயிறே ஆட்சி- கிலாஃபத் என்று நபிகளார்(ஸல்) கூறினார்கள். முதல் கயிறு என்றால் எத்தனை முக்கியம் என்பது தெரிந்து கொள்ள வேண்டும். அது எப்பவோ போய்விட்டது. ஒரு பெயருக்கு என்று இருந்த உஸ்மானிய ஆட்சி போய் 100 வருடங்கள் ஆகின்றன. குடும்பவியல் சட்டங்கள் போய்விட்டன, பொருளாதார சட்டங்கள் போய்விட்டன. அரசியல் சட்டங்கள் போய்விட்டன. குற்றவியல் சட்டங்கள் சிறிது இருந்தன, 2 மாதங்களுக்கு முன் அதையும் நீக்கிவிட்டார்கள். கசையடி நீக்கிவிட்டார்கள். தொழுகை மட்டும் தான் இருந்தது. இப்போது சமூக இடைவெளிவிட்டு தொழுதால் அந்த தொழுகை ஏற்கப்படாது. அதுவும் போய்விடும். முழு அம்மணமாக ஆகிவிட்டோம். 

Al-A'raf 7:27

یٰبَنِیۡۤ اٰدَمَ لَا یَفۡتِنَنَّكُمُ الشَّیۡطٰنُ كَمَاۤ اَخۡرَجَ اَبَوَیۡكُمۡ مِّنَ الۡجَنَّةِ یَنۡزِعُ عَنۡهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوۡاٰتِهِمَا ؕ اِنَّهٗ یَرٰىكُمۡ هُوَ وَقَبِیۡلُهٗ مِنۡ حَیۡثُ لَا تَرَوۡنَهُمۡ ؕ اِنَّا جَعَلۡنَا الشَّیٰطِیۡنَ اَوۡلِیَآءَ لِلَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ 

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.

இப்படிதான் ஆதம்(அலை)  அவர்களையும் ஏமாற்றியதாக அல்லாஹ் கூறுகிறான். 

Al-An'am 6:43

فَلَوۡلَاۤ اِذۡ جَآءَهُمۡ بَاۡسُنَا تَضَرَّعُوۡا وَلٰكِنۡ قَسَتۡ قُلُوۡبُهُمۡ وَزَیَّنَ لَهُمُ الشَّیۡطٰنُ مَا كَانُوۡا یَعۡمَلُوۡنَ 

நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.

இனி இந்த தொழுகை சைத்தானுக்கு  தொழுவதாக ஆகிவிடும். இதில் அல்லாஹ்வின் ரஹ்மத் இருக்காது. அதனால் ஒற்றுமைக்கு பதிலாக பிரிவினை உண்டாக்கும். அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தும். ஏற்கப்படாது. இனி இஸ்லாத்தின் எந்த கயிறும் இல்லை. இஸ்லாத்தின் அடிப்படையே இல்லை. இழப்பதற்கு ஒன்றுமில்லை. இனி அல்லாஹ்வின் தண்டனை வரும். 
 இதில் பல பேரின் இலாபம் உள்ளது. பள்ளிவாசல் திறந்தால் வருமானம் வரும் என்றும் செய்கிறார்கள். எனவே இஸ்லாத்தின் கடைசி கயிறு தொழுகையையாவது பாதுகாத்து கொள்ள வேண்டும்.

Wednesday, June 24, 2020

சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல்

தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்குவதற்காகவோ, தனக்குத் தேவையானதைக் கோருவதற்காகவோ இறைவனிடம் அளிக்கும் வாக்குறுதியே நேர்ச்சை என்பதை அறிந்தோம்.

எவ்விதக் கோரிக்கையின் அடிப்படையில் இல்லாமல் அல்லாஹ் வைச் சாட்சியாக்கி அளிக்கும் உறுதி மொழியே சத்தியம் எனப்படும்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை!

அல்லாஹ்வின் மீது சத்தியமாக வாங்கிய கடனை அடுத்த வாரம் திருப்பித் தருவேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பொருள் மிகவும் தரமானது.

என்றெல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் சத்தியம் செய்கிறோம்.

சத்தியம் செய்வதற்கும் இஸ்லாத்தில் கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் உள்ளன.

அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்

நாம் நமது கூற்றில் உண்மையாளர்களாக இருக்கிறோம் என் பதை நிரூபிப்பதற்காகத் தான் நாம் சத்தியம் செய்து கூறுகிறோம்.

நான் கூறுவது முற்றிலும் உண்மையே! நான் பொய் கூறினால் அல்லாஹ்வுக்கு அது தெரியும். இதற்கு அல்லாஹ்வையே சாட்சி யாக்குகிறேன் என்ற கருத்திலேயே நாம் சத்தியம் செய்கிறோம். நான் பொய் சொன்னால் அல்லாஹ் எனக்குத் தண்டனை வழங்கட்டும் என்ற கருத்தும் இதனுள் அடக்கமாகியுள்ளது.

எனவே நாம் எந்தச் சத்தியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர எதன் மீதும், எவர் மீதும் சத்தியம் செய்வது கடுமையான குற்றமாகும்.

‘என் தாய் மேல் ஆணையாக நான் கூறுவது உண்மை’ என்று ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் கூறுவது உண்மையா? பொய்யா? என்பது அவனது தாய்க்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவன் கூறுவது உண்மையா? பொய்யா? என்பது அவனுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்ததாகும். எனவே தான் அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு எச்சரிக்கைகள் விட்டுள்ளனர்.

‘யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 2679

‘எச்சரிக்கை! யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். குரைஷிகள் தங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்து வந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) ‘உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்யாதீர்கள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 3836

ஒரு மனிதர் ‘கஃபாவின் மேல் ஆணையாக’ என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். இதைக் கண்டவுடன் ‘அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது’ என்று கூறினார்கள். மேலும் ‘யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை கற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்’ எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் உபைதா. நூல்: திர்மிதீ 1455

ஒரு யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘(முஸ்லிம்களாகிய) நீங்களும் இணை கற்பிக்கிறீர்கள்; கஅபாவின் மீது ஆணையாக’ என்று கூறுகிறீர்கள்’ எனக் கேட்டார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘முஸ்லிம்கள் இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் (கஅபாவின் மீது ஆணையாக எனக் கூறாமல்) ‘கஅபாவின் இறைவன் மீது ஆணையாக எனக் கூற வேண்டும்’ என்று கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: கு(த்)தைலா (ரலி), நூல்கள்: நஸயீ 3713, அஹ்மத் 25845

தாய் தந்தையர் மீதோ, கஅபாவின் மீதோ, குர்ஆன் மீதோ வேறு எதன் மீதோ சத்தியம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபெரும் குற்றத்தில் அடங்கும்.

அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்ததற்கான பரிகாரம்

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் ஒருவர் சத்தியம் செய்து விட்டால் உடனடியாக அதற்குப் பரிகாரம் செய்து விட வேண்டும்.

யாரேனும் சத்தியம் செய்யும் போது ‘லாத், உஸ்ஸா மீது சத்தியமாக’ எனக் கூறினால் உடனே ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4860, 6107, 6310, 6650

 

சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம்

மனிதன் செய்யும் சத்தியங்கள் இரண்டு வகைகளில் உள்ளன.

சில சத்தியங்கள் வாக்குறுதியும், உறுதிமொழியும் அடங்கியதாக இருக்கும்.
சில சத்தியங்கள் தகவல் தெரிவிப்பதாக அமைந்திருக்கும்.
முதல் வகையான சத்தியம் செய்தவர்கள் தமது வாக்குறுதி யையும், உறுதிமொழியையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக உனக்கு நான் இதைத் தருவேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நாளை வருவேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னை மணந்து கொள்கிறேன்.

என்பன போன்ற சொற்களில் வாக்குறுதியும், உறுதிமொழியும் அடங்கியுள்ளது.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன் 2:225)

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (அல்குர்ஆன் 5:89)

அல்லாஹ்வை முன்னிறுத்தி வாக்களித்ததால் அதை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றத் தவறினால் சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்னார் இறந்து விட்டார்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இவர் திருடியதை நான் பார்த்தேன்.

என்பன போன்ற சத்தியங்களில் வாக்குறுதியோ, உறுதிமொழியோ இல்லை. இது போன்ற சத்தியங்கள் செய்யும் போது நாம் உண்மையாளர்களாக இருக்க வேண்டும்.

 

தவறான சத்தியங்களை நிறைவேற்றக் கூடாது

ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் உலாவரும் சிலர் மக்களைத் தம் கைவசத்தில் அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உறுதி மொழி வாங்குவார்கள். ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் இடுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படுவேன்’ என்று உறுதி மொழி வாங்கி விடுகின்றனர்.

இது போல் சில இயக்கங்களின் தலைவர்கள் தமது தொண்டர்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உறுதி மொழி வாங்குவார்கள். ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் எந்தக் கட்டளையிட்டாலும் அதைச் செய்து முடிப்பேன்’ என்று உறுதி மொழி கொடுத்தவர்கள் பின்னர் இதைத் தவறு என்று உணர்வார்கள். ஆனாலும் சத்தியம் செய்து கொடுத்துள்ளதால் அதிலிருந்து மீளவே முடியாது என்று நினைத்து தொடர்ந்து அடிமைகளாக நீடித்து விடுவார்கள்.

அல்லாஹ்விடம் அளித்து உறுதிமொழியையே முறித்து விட்டு பரிகாரம் செய்யலாம் என்று இஸ்லாம் கூறுவதை இவர்கள் மறந்து விட்டனர்.

இதுபோல் சத்தியம் செய்து கொடுத்தால் அதை முறித்து விட வேண்டும். நீங்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன் என்ற உறுதி மொழி நபிகள் நாயகத்துக்கு மட்டும் சொந்தமானதாகும்.

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.  (திருக்குர்ஆன் 48:10)

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான். (திருக்குர்ஆன் 48:18)

இந்த வசனங்கள் நபிகள் நாயகம் அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட பைஅத்’ எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகிறது.

போ ஆன்மீகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இந்த வசனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

நபிகள் நாயகத்திடம் நபித்தோழர்கள் பைஅத்’ செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத்’ செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பைஅத்’ எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.

ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. ‘உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுக்கிறார்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதி மொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதி மொழியாகும் என்று கூறுவதிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.

இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் பைஅத்’ எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார் கள். ‘நாங்கள் தொழுவோம்; நோன்பு வைப்போம்; தப்புச் செய்ய மாட்டோம்’ என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து ‘அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்’ என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 60:12)

இவை யாவும் நபிகள் நாயகம் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதி மொழி தான்.

இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலை சிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை. அபூபக்கர் (ர), உமர் (ர), உஸ்மான் (ர), அ (ர) ஆகியோரிடம் வந்து ‘நாங்கள் ஒழுங்காகத் தொழுவோம்; நோன்பு நோற்போம்’ என்றெல்லாம் எந்த நபித் தோழரும் பைஅத் எடுக்கவில்லை.

இறைவனிடம் செய்கின்ற உறுதி மொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள்.

எனவே நபிகள் நாயகத்தைத் தவிர எந்த மனிதரிடமும் ‘நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன்’ என்று உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துகிற, தங்களையும் இறைத் தூதர்களாக கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.

நபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதி மொழி எடுப்ப தென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.

ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதி மொழி கொடுக்கின்ற பைஅத். இது மார்க்கத்தில் உண்டு.

இந்த உறுதி மொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள்.

இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காயங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல.

இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்மந்தப்பட்டவர்களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.

எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி – பைஅத் – எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத் தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானது. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதடரிமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும். ‘அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696, 6700

அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதி மொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத்தது.

 

பொய்ச் சத்தியம் செய்தல்

வாக்குறுதி அளிக்கும் வகையில் இல்லாத சத்தியங்களில் பொய் கூறுவது கடுமையான குற்றமாகும்.

அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77)

அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! நீங்கள் அறிந்தால் அல்லாஹ்விடம் உள்ளதே உங்களுக்குச் சிறந்தது. (அல்குர்ஆன் 16:95)

அல்லாஹ் யார் மீது கோபம் கொண்டுள்ளானோ அந்தச் சமுதாயத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் உங்களைச் சேர்ந்தோரும் அல்லர். அவர்களைச் சேர்ந்தோரும் அல்லர். அறிந்து கொண்டே பொய்ச் சத்தியம் செய்கின்றனர். (அல்குர்ஆன் 58:14)

‘அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல், பெற்றோரைத் துன்புறுத்துதல், கொலை செய்தல், பொய்ச் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 6675, 6870, 6920

‘தவறான முறையில் இன்னொரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக யாரேனும் சத்தியம் செய்தால் (மறுமையில்) அல்லாஹ் அவன் மீது கடுமையாக கோபம் கொண்ட நிலையில் தான் சந்திப்பான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரி 2357, 2417, 2516, 2667, 2670, 2673, 2677, 4550, 6659, 6676, 7183, 7445

இத்துடன் 3:77 வசனத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஓதிக் காட்டினார்கள் என்று சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

‘பாதையில் உபரியான நீர் தனக்குச் சொந்தமாக இருந்து வழிப்போக்கனுக்கு அதைத் தடுத்தவன், ஒரு ஜனாதிபதியிடம் உலக ஆதாயத்துக்காக பைஅத் எனும் உறுதிமொழி எடுத்தவன், தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாகக் கூறி சத்தியம் செய்தவன் ஆகிய மூன்று நபர்களை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி 2535, 2672, 7212

 

தீர்மானம் இன்றி சத்தியம் செய்தல்

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக’ என்ற சொல்லை வாய் தவறி ஒருவர் பயன்படுத்தினால் அது சத்தியத்தில் சேராது. மனதால் உறுதி செய்து அதைக் கூறினால் மட்டுமே சத்தியமாக ஆகும்.

வாய் தவறி கூறி விட்டால் அந்தச் சத்தியத்தை நிறைவேற்ற வேண்டியதில்லை. அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன் 2:225)

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (அல்குர்ஆன் 5:89)

எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் தோன்றும் ஊசலாட் டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்காத வரை அல்லது வாயால் அதை மொழியாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 2528, 5269

சத்தியம் செய்யும் போது நிச்சயமாக இதைச் செய்வேன் என்று கூறினால் தான் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். ‘அல்லாஹ் நாடினால் நான் இதைச் செய்வேன்’ என்று ஒருவர் கூறினால் அவர் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் இல்லை. நிறைவேற்றத் தவறியதற்காக பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கூறினால் அவர் மீது எந்தப் பரிகாரமும் அவசியம் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: திர்மிதீ 1451

இதே கருத்துடைய ஹதீஸ்கள் நஸயீ 3768, 3769, 3770, 3795 வது இலக்கத்திலும் அபூதாவூத் 2838, அஹ்மத் 7742 இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு அறிவிப்பில்

‘உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறினால் அவர் விரும்பினால் அதை நிறை வேற்றலாம். அவர் விரும்பினால் நிறைவேற்றாது விட்டு விடலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. (அஹ்மத் 5108, 5814, 5830)

 

பிறருக்காகச் சத்தியம் செய்தல்

தனது வாக்குறுதியை வலியுறுத்துவதற்குத் தான் ஒருவர் சத்தியம் செய்ய வேண்டும். இன்னொருவரை வலியுறுத்துவதற்குச் சத்தியம் செய்ய முடியாது.

‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உனக்கு இதைத் தருவேன்’ என்று கூறினால் அதற்கு அர்த்தம் இருக்கிறது.

‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ எனக்கு இதைத் தர வேண்டும்’ எனக் கூறினால் அதற்கு அர்த்தம் இல்லை.

ஆனாலும் இரத்த சம்மந்தம் உள்ளவர்கள் தமக்கிடையே இவ்வாறு பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள் (ஸைனப்) தனது குழந்தை மரணத்தை நெருங்கி விட்டதைச் சொல்லி அனுப்பி உடனே நபிகள் நாயகம் (ஸல்) வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே; அவன் கொடுத்ததும் அவனுக்குரியதே; ஒவ்வொன்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட காலக்கெடு உண்டு. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும்’ என்று சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அந்த மகள் ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் வர வேண்டும்’ என்று சொல்லி அனுப்பினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். குழந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மடியில் வைக்கப்பட்டது. உடனே நபிகள் நாயகத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதைக் கண்ட ஸஅது அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இது இரக்க உணர்வாகும். தான் நாடிய அடியார்களின் உள்ளங்களில் அல்லாஹ் இதை வைக்கிறான். தனது அடியார்களில் இரக்கம் உள்ளவர்களுக்குத் தான் அல்லாஹ் இரக்கம் காட்டுவான்’ எனக் கூறினார்கள்.  நூல்: புகாரி 1284, 6655, 7377, 7448, 5655

 

குடும்பத்தினருக்குக் கேடு செய்யும் சத்தியம்

ஒரு மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சிரமம் அளிக்கும் காரியத்தைச் சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றுவதில் பிடிவாதம் காட்டக் கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் பாவமாகும். மாறாக அந்தச் சத்தியத்தை முறித்து விட்டு அதற்கான பரிகாரத்தைச் செய்து விட வேண்டும்.

உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக வீட்டில் உள்ள மாவறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று ஒருவன் சத்தியம் செய்தால் இதனால் குடும்பத்தினர் கஷ்டம் அடைவார்கள். இது போன்ற சத்தியம் செய்தால் அந்தச் சத்தியத்தை முறித்து விட வேண்டும். சத்தியத்திற்கான பரிகாரத்தையும் செய்து விட வேண்டும்.

‘ஒரு மனிதன் தனது குடும்பத்தினருக்குச் சிரமம் அளிப்பதைச் சத்தியம் செய்வது, அதை முறித்து விட்டு பரிகாரம் செய்வதை விட அல்லாஹ்விடம் பெரிய பாவமாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6625, 6626

 

தனது நற்பண்புகள் மீது சத்தியம் செய்தல்

எனது நாணயத்தின் மீது சத்தியமாக! எனது ஒழுக்கத்தின் மீது சத்தியமாக! எனது நற்பண்புகள் மீது சத்தியமாக என்றெல்லாம் சிலர் சத்தியம் செய்வதுண்டு.

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்பதிலிருந்தே இது கூடாது என்று அறிந்து கொள்ளலாம்; என்றாலும் இது பற்றி நேரடியாகவே தடைகளும் வந்துள்ளன.

‘நாணயத்தின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: அபூதாவூத் 2831, அஹ்மத் 21902

 

பிறருக்கு உதவுவதில்லை என்று சத்தியம் செய்தல்

தனது குடும்ப உறுப்பினருக்கோ, நண்பருக்கோ உதவிகள் செய்து வந்தவர்கள் சண்டை சச்சரவுகள் ஏற்படும் போது இனிமேல் உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்து விடுவார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்றும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பாரும் ஒருவர். இவருக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உதவி செய்து வந்தனர். தன் மகள் மீது அவர் அவதூறு கூறியதால் இனிமேல் மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து முடிவெடுத்தார்கள். இதைக் கண்டித்து பின்வரும் 24:22 வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்: புகாரி 2661, 4141, 4750, 6679

‘உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்’ என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். ‘அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்’ என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 24:22)

இதே கருத்தைப் பின்வரும் வசனத்திலும் அல்லாஹ் கூறுகிறான்.

நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:224)

 

மற்றவர் செய்த சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல்

இஸ்லாம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் சத்தியம் செய்கிறார். அதை அவர் நிறைவேற்ற முடியாது சிரமப்படுகிறார். நாம் அவருக்கு உதவினால் அவர் செய்த சத்தியத்தில் உண்மையாளராக ஆவார். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவரது சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது அவசியமாகும்.

ஜனாஸாவைப் பின் தொடர்தல், நோயாளியை விசாரித்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல்,(பிறரது) சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல், தும்மியவருக்காக மறுமொழி கூறுதல், ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல் ஆகிய ஏழு விஷயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி) நூல்: புகாரி 1239, 2445, 5175, 5635, 5863, 6222, 6235

 

வியாபாரத்தில் சத்தியம் செய்தல்

வியாபாரிகள் தான் மனிதர்களிலேயே அதிகம் சத்தியம் செய்பவர்களாக உள்ளனர். தாங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட சத்தியம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது.

‘சத்தியம் செய்தல் சரக்குகளை விற்க உதவும். ஆனால் பர(க்)கத்தை அழித்து விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 2087

 

சத்தியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குதல்

ஒருவன் கையில், அல்லது கட்டுப்பாட்டில் ஒரு பொருள் உள்ளது. அப்பொருளை இன்னொருவன் உரிமை கொண்டாடி வழக்குக் கொண்டு வருகிறான்.

இது போன்ற சந்தர்ப்பத்தில் யார் வழக்கு கொண்டு வருகிறானோ அவன் தான் அப்பொருள் தன்னுடையது என்பதற்கான ஆதாரங் களைக் கொண்டு வர வேண்டும். பொருளைக் கைவசம் வைத்துள் ளவன் ஆதாரம் கொண்டு வரத் தேவையில்லை. அப்பொருள் அவனது கைவசம் உள்ளதே அவனுக்குரிய ஆதாரமாக உள்ளது.

வழக்குத் தொடுத்தவன் ஆதாரத்தைக் கொண்டு வந்தால் அவனுக்குச் சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படும். அவனால் எந்த ஆதாரத்தையும் கொண்டு வந்து நிரூபிக்க இயலவில்லை என்றால் யாருடைய கையில் அப்பொருள் உள்ளதோ அவன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தன்னுடையது எனக் கூற வேண்டும். அவ்வாறு செய்து விட்டால் அப்பொருள் அவனுடையது என்று தீர்ப்பளிக்கப்படும்.

பொருளைக் கைவசம் வைத்திருப்பவன் சத்தியம் செய்ய மறுத்தால் அப்பொருள் வழக்குத் தொடுத்தவனைச் சேரும்.

‘என்னால் ஆதாரம் காட்ட இயலாது; வேண்டுமானால் சத்தியம் செய்கிறேன்’ என்று வழக்குத் தொடுத்தவன் கூற முடியாது. பொருளைக் கைவசம் வைத்திருப்பவனுக்கு மட்டுமே சத்தியம் செய்தல் உரியதாகும். வழக்குத் தொடுத்தவன் ஆதாரம் காட்டி விட்டால் அதன் பின்னர் பொருளை வைத்திருப்பவன் சத்தியம் செய்வதாகக் கூற முடியாது.

எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. அந்த நிலத்தை என்னிடம் தர அவர் மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உன்னிடம் ஆதாரம் ஏதும் இருக்கிறதா’ என்று என்னிடம் கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்று கூறினேன். ‘அப்படியானால் நீ சத்தியம் செய்’ என்று யூதரிடம் கூறினார்கள். அப்போது நான் ‘இவன் பொய்ச் சத்தியம் செய்து எனது சொத்தை எடுத்துக் கொள்வான்’ என்று கூறினேன். அப்போது பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான். அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங் களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77) அறிவிப்பவர்: அஷ்அத் (ரலி) நூல்: புகாரி 2417, 2667, 2516, 2670

ஒரு பொருள் இருவரின் கைவசத்திலும் இருந்தால், அல்லது இருவரில் யாருடைய கைவசத்திலும் இல்லாமல் இருந்தால், இருவரிடமும் எந்த ஆதாரமும் இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர் சத்தியம் செய்ய வேண்டும்.

சத்தியம் செய்து விட்டால் அப்பொருள் அவரைச் சேரும். சத்தியம் செய்ய மறுத்தால் மற்றவர் சத்தியம் செய்து அப்பொருளை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கூட்டத்தினர் தொடுத்த வழக்கின் போது சத்தியம் செய்யுமாறு நபிகள் நாயகம் கேட்டனர். அவர்கள் ஒவ்வொரு வரும் சத்தியம் செய்ய விரைந்து வந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யார் சத்தியம் செய்ய வேண்டும் என்பதற்கு சீட்டுக் குலுக்கித் தேர்வு செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 2674

ஒரு பொருளுக்கு இருவர் உரிமை கொண்டாடி, இருவரிடமும் எந்த ஆதாரமும் இல்லாவிட்டால் சத்தியம் செய்யாமல் இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

ஒரு ஒட்டகம் தனக்குச் சொந்தமானது என்று இருவர் உரிமை கொண்டாடினார்கள். இருவரில் எவரிடமும் ஆதாரம் இல்லை. அதை இருவருக்கும் சமமாக நபிகள் நாயகம் (ஸல்) ஆக்கினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: அபூதாவூத் 3134

 

நம்பாதவர்களிடம் சத்தியம் செய்யக் கூடாது

நாம் கூறுவது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகம் மற்றவருக்கு வரும் போது சத்தியம் செய்து கூறுவோம். இதனால் நாம் கூறுவது உண்மை என்று அவர் நம்புவார்.

நாம் அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டோம் என்று மற்றவர்கள் சந்தேகப்படும் போதும் சத்தியம் செய்து கூறுவோம்.

இறை நம்பிக்கையில்லாதவர்களிடமும் அல்லாஹ்வைப் பற்றி அறியாதவர்களிடமும் நாம் சத்தியம் செய்து கூறினால் அவர்கள் நம்ப மாட்டார்கள். நாம் சத்தியம் செய்வதும், செய்யாமல் கூறுவதும் அவர்களைப் பொருத்த வரை சமமானதே.

இது போன்றவர்களிடம் நாம் சத்தியம் செய்து கூறக் கூடாது.

‘உன் சகா உன்னை உண்மைப்படுத்துவான் எனும் போது தான் சத்தியம் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3121

 

சத்தியங்களைக் கேடயமாக ஆக்கக் கூடாது

சிலர் தங்களைக் காத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். சத்தியத்தைத் தங்களின் கேடய மாக ஆக்கிக் கொள்வார்கள். இது கடுமையான குற்றமாகும்.

அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தார்கள். இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 16:58)

அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது. (அல்குர்ஆன் 63:2)

 

சத்தியங்களை நிறைவேற்ற வேண்டும்

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன் 2:225)

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (அல்குர்ஆன் 5:89)

நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாள னாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 16:91)

உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான். நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான். (அல்குர்அன் 16:92)

 

இல்லறத்தில் சந்தேகம்

ஒருவன் ஒரு பெண்ணுடைய ஒழுக்கத்திற்கு எதிராகக் குற்றம் சாட்டினால் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் அவனுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்பட வேண்டும்.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்அன் 24:4)

ஆனால் கணவன் தன் மனைவியின் மீது குற்றம் சாட்டினால் அவன் ஐந்து தடவை சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவை சத்தியம் செய்யும் போது ‘நான் பொய் சொன்னால் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ எனக் கூற வேண்டும். இவ்வாறு கூறினால் அவன் அவதூறு கூறியவனாக ஆக மாட்டான்.

இதே போல் அவனது மனைவியும் ஐந்து தடவை சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவை சத்தியம் செய்யும் போது ‘நான் கூறுவது பொய் என்றால் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ எனக் கூற வேண்டும்.

இவ்வாறு இருவரும் கூறிவிட்டால் அவ்விருவருக்கும் இடையே உள்ள உறவு அடியோடு நீங்கி விடும். அதன் பின்னர் சேர்ந்து வாழ முடியாது.

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். ‘தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்’ என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்). ‘அவனே பொய்யன்’ என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சிய மளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். ‘அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்’ என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (அல்குர்ஆன் 24:6-9)