பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, April 29, 2021

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இச்செய்தி சரியானதா ?

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இச்செய்தி சரியானதா ? பதில் தரவும்..

ஒரு தடவை மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள் யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார் அதற்கு அல்லாஹு தஆலா மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன்  கூட்டத்தினரை அனுப்புவேன்.அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து, கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு; வயிற்றில் பசியுடன் என்னை அழைப்பர் (துஆ மூலம்) அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள். மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன... ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொறுப்பை நானே ஏற்கிறேன், என்றான்.

பதில் - இந்த செய்தியை நம்பத்தகுந்த ஹதீஸ்கலை மேதைகளோ அறிஞர்களோ தமது எந்த  அடிப்படை ஹதீஸ் மூலாதார நூல்களிலும் பதிவு செய்யவில்லை.

அப்துர் ரஹ்மான் பின் அப்துஸ் ஸலாம் அஸ்ஸபூfரி அவர்களுடைய  நுஸ்ஹதுல் மஜாலிஸ் வமுன்தஹபுந் நஃபாயிஸ் என்ற புத்தகத்தில் 182,183 பக்கங்களிலும் இஸ்மாஈல் ஹக்கீ அல் ஹனபீ அல் ஹல்வதீ அவர்களுடைய தஃப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 8, பக்கம் 112 ம் இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.. மேலும் இது போன்ற கட்டுக்கதைகள், புனைந்துரைக்கப்பட்ட செய்திகள் அதிகமாக பதிவாகியுள்ள சில நூல்களிலிலே இந்த செய்தி பதிவாகியுள்ளது. 

இது ஓர் அடிப்படை ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்தி மட்டுமல்லாது  உலுல் அஸ்ம்களில் ஒருவரான நபி மூஸா (அலை) அவர்களை விட இந்த உம்மத்திலுள்ள சாதாரண ஒருவரையும் இதன் மூலம் சிறப்புமிக்கவராகக் காட்டும் வகையில் இந்த செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது நேரடியாகவே முஃமினின் அகீதாவை பாழ்ப்படுத்தும் விதமாக வந்துள்ளதால் இதனை ஹதீஸ் என்றோ நபிகளாரோடு இணைத்தோ சொல்வது மிகப்பெரும் பாவமாகும். 

முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி. 
அல்மனார் சென்டர், துபாய், அமீரகம்.

#Mufaris_Thajudeen_Rashadi

Monday, April 26, 2021

மனிதரில் சிறந்தவர் யார்?

*மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!*


கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!

இஸ்லாம் எனும் பரிபூரண மார்க்கத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும் உரியது. வெறும் வணக்க வழிபாடுகளோடு நிறுத்தி விடாமல், மனிதர்களிடம் பழகும் முறைகளையும் மார்க்கமாக ஆக்கியுள்ள இஸ்லாம், ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய அங்கமாக திகழும் தனது மனைவிடம் பழகும் முறைகளையும் தெள்ளத்தெளிவாக நமக்கு கற்றுத் தருகிறது.


*மனிதரில் சிறந்தவர் யார்?*

1195 – حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِى هُرَيْرَةَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
“இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி எண்: 1082

*ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.*

இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.

உணவு, உடை

2142- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا حَمَّادٌ ، أَخْبَرَنَا أَبُو قَزَعَةَ الْبَاهِلِيُّ ، عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ ، عَنْ أَبِيهِ ، قَالَ :
قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ ؟ قَالَ : أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ ، وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ ، أَوِ اكْتَسَبْتَ ، وَلاَ تَضْرِبِ الْوَجْهَ ، وَلاَ تُقَبِّحْ ، وَلاَ تَهْجُرْ إِلاَّ فِي الْبَيْتِ.
قَالَ أَبُو دَاوُدَ : وَلاَ تُقَبِّحْ أَنْ تَقُولَ : قَبَّحَكِ اللَّه
அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, “நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) .
நூல் : அபூதாவூத் 1830

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள். அத்துடன் மட்டும் நபி (ஸல்) அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

*மனைவின் வாயில் உணவு ஊட்டுவது இழுக்கா?*

56- حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ قَالَ : أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ :
إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللهِ إِلاَّ أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ
“அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) .
நூல் : புகாரி 56

*சுய மரியாதையைப் போற்றுதல்*

மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

5204- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ هِشَامٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ زَمْعَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
لاََ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْم
“நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)
நூல் : புகாரி 4942, 5204

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும்.

அடுத்ததாக “பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே’ என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள். அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும்.

உறங்கும் கெடுக்காதே!

மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது. பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது. இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!

2301 – وَحَدَّثَنِى مَنْ سَمِعَ حَجَّاجًا الأَعْوَرَ – وَاللَّفْظُ لَهُ – قَالَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى عَبْدُ اللَّهِ – رَجُلٌ مِنْ قُرَيْشٍ عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسِ بْنِ مَخْرَمَةَ بْنِ الْمُطَّلِبِ أَنَّهُ قَالَ يَوْمًا أَلاَ أُحَدِّثُكُمْ عَنِّى وَعَنْ أُمِّى قَالَ فَظَنَنَّا أَنَّهُ يُرِيدُ أُمَّهُ الَّتِى وَلَدَتْهُ. قَالَ قَالَتْ عَائِشَةُ أَلاَ أُحَدِّثُكُمْ عَنِّى وَعَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. قُلْنَا بَلَى. قَالَ
قَالَتْ لَمَّا كَانَتْ لَيْلَتِىَ الَّتِى كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فِيهَا عِنْدِى انْقَلَبَ فَوَضَعَ رِدَاءَهُ وَخَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عِنْدَ رِجْلَيْهِ وَبَسَطَ طَرَفَ إِزَارِهِ عَلَى فِرَاشِهِ فَاضْطَجَعَ فَلَمْ يَلْبَثْ إِلاَّ رَيْثَمَا ظَنَّ أَنْ قَدْ رَقَدْتُ فَأَخَذَ رِدَاءَهُ رُوَيْدًا وَانْتَعَلَ رُوَيْدًا وَفَتَحَ الْبَابَ فَخَرَجَ ثُمَّ أَجَافَهُ رُوَيْدًا فَجَعَلْتُ دِرْعِى فِى رَأْسِى وَاخْتَمَرْتُ وَتَقَنَّعْتُ إِزَارِى ثُمَّ انْطَلَقْتُ عَلَى إِثْرِهِ حَتَّى جَاءَ الْبَقِيعَ فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ انْحَرَفَ فَانْحَرَفْتُ فَأَسْرَعَ فَأَسْرَعْتُ فَهَرْوَلَ فَهَرْوَلْتُ فَأَحْضَرَ فَأَحْضَرْتُ فَسَبَقْتُهُ فَدَخَلْتُ فَلَيْسَ إِلاَّ أَنِ اضْطَجَعْتُ فَدَخَلَ فَقَالَ « مَا لَكِ يَا عَائِشُ حَشْيَا رَابِيَةً ». قَالَتْ قُلْتُ لاَ شَىْءَ. قَالَ « لَتُخْبِرِينِى أَوْ لَيُخْبِرَنِّى اللَّطِيفُ الْخَبِيرُ ». قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَبِى أَنْتَ وَأُمِّى. فَأَخْبَرْتُهُ قَالَ « فَأَنْتِ السَّوَادُ الَّذِى رَأَيْتُ أَمَامِى ». قُلْتُ نَعَمْ. فَلَهَدَنِى فِى صَدْرِى لَهْدَةً أَوْجَعَتْنِى ثُمَّ قَالَ « أَظَنَنْتِ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ». قَالَتْ مَهْمَا يَكْتُمِ النَّاسُ يَعْلَمْهُ اللَّهُ نَعَمْ. قَالَ « فَإِنَّ جِبْرِيلَ أَتَانِى حِينَ رَأَيْتِ فَنَادَانِى فَأَخْفَاهُ مِنْكِ فَأَجَبْتُهُ فَأَخْفَيْتُهُ مِنْكِ وَلَمْ يَكُنْ يَدْخُلُ عَلَيْكِ وَقَدْ وَضَعْتِ ثِيَابَكِ وَظَنَنْتُ أَنْ قَدْ رَقَدْتِ فَكَرِهْتُ أَنْ أُوقِظَكِ وَخَشِيتُ أَنْ تَسْتَوْحِشِى فَقَالَ إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِىَ أَهْلَ الْبَقِيعِ فَتَسْتَغْفِرَ لَهُمْ ». قَالَتْ قُلْتُ كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ « قُولِى السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلاَحِقُونَ ».
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃக்கு செல்கின்றார்கள். உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள். மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள். “பகீஃ-க்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள். அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்” என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள்.

 (ஹதீஸின் சுருக்கம்)
நூல் : முஸ்லிம் 1619

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ “பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

1119- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ وَأَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَائِشَةَ ، أُمِّ الْمُؤْمِنِينَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ،
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي جَالِسًا فَيَقْرَأُ وَهْوَ جَالِسٌ فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ نَحْوٌ مِنْ ثَلاَثِينَ ، أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَهَا وَهْوَ قَائِمٌ ثُمَّ يَرْكَعُ ثمَّ يَسْجُدُ يَفْعَلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ فَإِذَا قَضَى صَلاَتَهُ نَظَرَ فَإِنْ كُنْتُ يَقْظَى تَحَدَّثَ مَعِي وَإِنْ كُنْتُ نَائِمَةً اضْطَجَعَ.
நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 1119

*மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி*

950 ،
وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ تَشْتَهِينَ تَنْظُرِينَ فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ حَسْبُكِ قُلْتُ نَعَمْ قَالَ فَاذْهَبِي.
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, “நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி (950)

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனைவியின் உணவு, உடை, அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக!

 *மாநபி வழியில் நடை போடுவோமாக*

Thursday, April 15, 2021

மக்களே! ஸகாத் யாருக்குரியது?*⁉️

🗣️*மக்களே! ஸகாத் யாருக்குரியது?*⁉️

💰 💰 💰 💰 💰 💰 💰 💰 💰

🗣️*மக்களே! இந்தத் பதிவில் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார்? என்பதை நாம் விரிவாகக் காண இருக்கின்றோம்.*❗

💰திருக்குர்ஆன் 9:60 வசனத்தில் ஸகாத் வழங்கப் படுவதற்குத் தகுதியானவர்களாக எட்டு வகையினரை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

🗣️*அவர்கள்: 1. யாசிப்பவர்கள்.*❗ 

🗣️*2. ஏழைகள்.*❗ 

🗣️*3. ஸகாத்தை வசூல் செய்பவர்கள்.*❗ 

🗣️*4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்.*❗ 

🗣️*5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு.*❗

🗣️*6. கடன் பட்டவர்கள்.*❗ 

🗣️*7. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல்.*❗

🗣️*8. நாடோடிகள். ஆகியோராவார்கள்.*❗

💰🗣️*யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை (களை விடுதலை செய்வதற்)கும், கடன் பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். 

🗣️*இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் 

அல்குர்ஆன் 9:60

💰மேலும் நபியவர்களும் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்தி யுள்ளார்கள். 

🗣️*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

💰நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். 

💰அப்போது அவரிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! 

💰இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! 

💰இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (1395)

💰செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். 

💰ஏழைகள் என்றால் தேவையுடையவர்கள் என்று பொருளாகும். 

💰மேற்கண்ட 9:60 வசனத்தில் கூறப்பட்டவர்களில் அனைவருமே தேவையுடையவர்களாகத் தான் உள்ளனர். 

💰அதன் காரணமாகத் தான் நபியவர்கள் பொதுவாக செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 

🗣️*யாசிப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் வித்தியாசம்*❗

💰மேற்கண்ட 9:60 வது வசனத்தில் யாசிப்பவர்கள் என்பதற்கு அரபியில் "ஃபுகரா'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. 

💰இது "ஃபகீர்'' என்ற சொல்லின் பன்மையாகும். "ஃபகீர்'' என்ற சொல்லிற்கு தேவையுடையவன் என்பது நேரடிப் பொருளாகும். 

💰ஏழைகள் என்பதற்கு அரபி மூலத்தில் "மஸாகீன்'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது "மிஸ்கீன்'' என்ற சொல்லின் பன்மையாகும்.

💰மிஸ்கீன் என்றால் யார் என்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். 

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்கடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். 

💰நீங்கள் விரும்பினால், "அவர்கள் மக்கடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள்'' எனும் (இந்த 2:273வது) இறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 

நூல்: புகாரி (4539)

🗣️*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான். 

💰(இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 

நூல்: புகாரி (1479)

💰மேற்கண்ட ஹதீஸ்களில் ஏழை என்பதற்கு அரபி மூலத்தில் மிஸ்கீன் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதாவது மிஸ்கீன் என்பவன் தன்னுடைய வறுமை நிலையை யாரிடமும் வெளிப்படுத்தாமல், பிறரிடம் யாசகமாகக் கேட்பதற்கு வெட்கப்பட்டு, தன்மானத்துடன் வாழ்பவராவார். 

💰இவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஸகாத்தை வழங்குவது முஃமின்கள் மீது கடமையாகும்.

💰ஆனால் ஃபகீர் என்பவரும் வறுமை நிலையில் உள்ளவர் தான். ஆனால் இவர்கள் தங்களின் நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்பார்கள். 

💰அல்லது அவர்களின் வறிய நிலைமை வெளிப் படையாகத் தெரியும். 

💰ஒருவர் இந்நிலைக்கு உள்ளாகும் போது அவனது தனது நிலைமையை வெளிப்படுத்தி ஸகாத்தைப் பெறுவது மார்க்கத்தில் குற்றமாகாது.

🗣️*செல்வந்தன் என்றால் யார்?*⁉️

💰தன்னுடைய உழைப்பின் மூலம் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள் அனைவரும் செல்வந்தர் ஆவார்கள். 

💰இவர்கள் அனைவரும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிகமாக ஸகாத் நிறைவேற்ற வேண்டிய அளவிற்கு செல்வத்தைப் பெற்றிருந்தால் அவர்கள் கண்டிப்பாக அதனை நிறைவேற்ற வேண்டும்.

🗣️*செல்வந்தர்கள் ஸகாத் பெறுவது கூடாது*❗

🗣️*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள, ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது. 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) 

நூல்: திர்மிதி (589)

💰இரண்டு மனிதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தர்மப் பொருளிலிருந்து கேட்டு வந்தனர். 

💰நபியவர்கள் அந்த இருவரின் மீதும் பார்வையை (மேலும் கீழுமாகப்) பார்த்தார்கள். 

💰அந்த இருவரையும் திடகாத்திரமானவர்களாகக் கண்டார்கள். பிறகு நீங்கள் இருவரும் விரும்பினால் உங்களுக்கு நான் வழங்குகிறேன். 

💰ஆனால் இதில் செல்வந்தருக்கும், சம்பாதிக்கும் வலிமை பெற்றவருக்கும் எந்த பாத்தியதையும் கிடையாது என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (18001)

💰செல்வ நிலையில் உள்ளவர்கள் பின்வரும் ஐந்து நிலைகளில் இருந்தால் அவர்கள் ஸகாத் பொருளைப் பெற்று, பயன்படுத்திக் கொள்ளலாம்.

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰செல்வந்தனுக்கு ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது. ஐந்து நபர்களைத் தவிர. 

🗣️*1. அதனை வசூல் செய்யக் கூடியவர்கள்.*❗ 

🗣️*2. தன்னுடைய செல்வத்தைக் கொண்டு ஸகாத் பொருளை விலைக்கு வாங்கியவர்*❗ 

🗣️*3. கடன் பட்டவர்கள்*❗ 

🗣️*4. அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள்*❗ 

🗣️*5. ஸகாத்திலிருந்து ஒரு ஏழைக்கு தர்மமாக வழங்கப் படுகிறது; அவன் அதிலிருந்து ஒரு செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்குவது.*❗

அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) 

நூல்: அஹ்மத் (11555)

💰மேற்கண்ட ஹதீஸிலிருந்து செல்வந்தர்களாக உள்ளவர்கள் ஸகாத்தை வசூல் செய்கின்ற பொறுப்பில் இருந்தால் அவர்களுக்கு அதிலிருந்து வழங்கலாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. 

💰மேலும் ஸகாத்தாக உள்ள ஒரு பொருளை ஒரு செல்வந்தர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

💰செல்வந்தராக உள்ள நிலையில் கடன்பட்டவர்கள் யார் என்பதை பற்றிய விபரம் பின்னால் வருகிறது.

💰மேலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்குவது கூடும். 

💰9:60 வசனத்தில் ஸகாத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவிட வேண்டும் என்று வந்துள்ளது. 

💰அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலை நாட்டு வதற்காகப் போரிடக் கூடியவர்கள் என்பது தான் விளக்கமாகும்.

💰சிலர் 9:60 வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வுடைய பாதை எது என்பதைச் சரியாக விளங்காமல் அனைத்து நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும் அல்லாஹ்வுடைய பாதை தான்;. 

💰எனவே நம்முடைய ஸகாத்தை பள்ளிவாசல் கட்டுவதற்கும், பணக்கார மாணவர்களும் சேர்ந்து பயிலும் மதரஸாக்களுக்கும், எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் பயன்படுத்தலாம் எனக் கூறுகின்றனர். 

💰இது அறியாமையாகும். 9:60 வசனத்தில் அல்லாஹ் 8 வகையினரைக் குறிப்பிடுகின்றான். 

💰இதில் 7 சாராருக்குக் கொடுத்தாலும் அல்லாஹ்வுடைய பாதையில் செலவிடுவது தான். 

💰இதில் இறைவன் அல்லாஹ்வுடைய பாதை என்று ஏன் தனியாகக் கூற வேண்டும். அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் ஸகாத்தைச் செலவிடுங்கள் என்று இறைவன் பொதுவாகக் கூறியிருக்கலாம். 

💰ஏன் 8 வகையாகப் பிரிக்க வேண்டும்.

💰இதிலிருந்தே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலை நாட்டு வதற்காகப் போரிடுபவர்களை மட்டுமே குறிக்கும். 

💰அதைத் தான் மேற்கண்ட நபிமொழியும் தெளிவுபடுத்துகிறது. 

💰மேலும் மதரஸாக்களில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்காக மட்டும் செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டு ஸகாத்தை வழங்குவதில் தவறில்லை. 

💰ஏழை ஒருவர் தனக்கு ஸகாத்திலிருந்து வழங்கப்பட்ட பொருளை செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்கினால் அந்த செல்வந்தர் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

💰நபியவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தர்மப் பொருள்களைப் பெறுவது ஹராமாகும். 

💰ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தர்மப் பொருளை நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது நபியவர்கள் அதனைச் சாப்பிட்டுள்ளார்கள்.

💰நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்சி ச்காண்டு வரப்பட்டது. அப்போது நான் "இது பரீராவுக்கு தர்மம் செய்யப்பட்ட பொருள்'' என்றேன். 

💰அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இது பரீராவுக்கு தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (1493)

🗣️*கடன் பட்டவர்கள்*❗

💰ஒருவர் தன்னுடைய வறுமையின் காரணமாக கடன் வாங்கியிருந்தால் அவர் ஏழை என்பதில் வந்து விடுவார். 

💰அவருக்கு ஸகாத்திலிருந்து வழங்கி அவருடைய கடனை அடைப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

💰மேலும் செல்வந்தர்கள் கடன்பட்டிருந்தாலும் அவர்களுடைய கடனை அடைப்பதற்காக ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். 

💰செல்வந்தர்கள் கடன் பட்டால் அவர்களுடைய செல்வத்திலிருந்து அடைக்க வேண்டியது தானே, எதற்காக அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும்? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

💰செல்வந்தர்கள் கடன் பட்டால் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்பது செல்வந்தர்கள் தம்முடைய சுய தேவைக்காகப் பெற்ற கடன் அல்ல. 

💰மாறாகப் பொது விஷயத்திற்காக ஒன்றைப் பொறுப் பேற்கும் போது அதில் கடன் ஏற்பட்டால் அதைப் பொறுப்பேற்றவர் தன்னுடைய செல்வத்திலிருந்து தான் அடைக்க வேண்டும் என்பது கிடையாது. 

💰ஸகாத் பொருளைப் பெற்றும் அவர் அந்தக் கடனை அடைக்கலாம். 

💰இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 

💰கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

💰நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். 

💰அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்'' என்று கூறினார்கள். 

🗣️*பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:*❗

💰கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். 

💰அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக் கொள்ள வேண்டும். 

💰மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். 

💰இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, "இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்'' என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும். 

💰கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.

நூல்: முஸ்லிம் 1730 (தமிழாக்கம் எண்: 1887)

💰மற்றவருக்காகப் பொறுப்பேற்ற ஒரு செல்வந்தர் அதனை நிறைவேற்றுவதற்காக தர்மப் பொருளை பெற்றுக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். 

💰🗣️*ஸகாத்தை வசூலிப்பவர்கள்*❗

💰உரியவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று, அதைப் பாதுகாத்து, உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் பணியாற்றுகின்ற அனைவரும் ஸகாத்தை வசூலிப்பவர்களில் அடங்குவர். 

💰இவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் இவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும்.

💰இதன் அடிப்படையில் தான் நற்காரியங்களுக்காக வசூல் செய்பவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது. 

💰சில சகோதரர்கள் கமிஷன் பெறுபவர்களை ஏதோ அநியாயமாகப் பறித்துச் சாப்பிடுபவர்களைப் போல் கருதுகின்றனர். இது தவறாகும். 

💰நற்காரியங்களுக்காகத் தன்னுடைய நேரங்களையும், காலங்களையும் செலவிட்டு அரும்பாடு பட்டு வசூல் செய்பவர்களுக்கு வழங்கினால் தான் நற்பணிகள் தொடர்ந்து நடைபெறும். 

💰அல்லாஹ்வே வழங்குமாறு கூறியிருப்பதினால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நாம் விளங்கிக் கொள்ளலாம். 

💰ஸகாத்தை வசூல் செய்பவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.

🗣️*அப்துல்லாஹ் பின் சஅதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:*❗

💰நான் உமர் (ரலி) அவர்கடம் அவர்களது ஆட்சிக் காலத்தின் போது சென்றேன். 

💰அப்போது அவர்கள் என்னிடம், "நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)'' என்று கேட்டார்கள். 

💰அதற்கு நான் ஆம்' என்றேன். உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்க, நான், "என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். 

💰நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். ஆகவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று பதிலத்தேன். 

💰உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பி வந்தேன். 

💰அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், "என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்'' என்று சொல்லி வந்தேன். 

💰இறுதியில் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அத்த போது, நான், "என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்'' என்று சொன்னேன். 

💰நபி (ஸல்) அவர்கள், "(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்பட வில்லை யென்றால்,) தர்மம் செய்து விடுங்கள். 

💰இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர் 
பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்ததோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். 

💰அப்படி எதுவும் வரவில்லை யென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (7163)

💰வசூல் செய்பவர்கள் தம்மை வசூல் செய்வதற்கு யார் நியமித்தார்களோ அவர்களிடமிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். 

💰எவ்வித மோசடியும் செய்து விடக் கூடாது. ஸகாத் பொருளை உரியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகப் பணியாற்றுபவர் அதனை முறையாகச் செய்தால் அவருக்கும் தர்மம் செய்த கூலி கிடைக்கும். 

🗣️*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗

💰முஸ்லிமான, நம்பிக்கைக்குரிய பாதுகாவலன், தான் ஏவப்பட்ட முறையில் முழுமையாக - நிறைவாக, நல்ல முறையில் மனப்பூர்வமாகத் தான் ஏவப்பட்டபடி, ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தால் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி (1438)

💰மேலும் வசூல் செய்பவர் தமக்கு முறையாக வழங்கப் பட்ட கூலிக்கு மேல் அதிலிருந்து எடுத்தால் அவர் மோசடியாளராவார்.

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰நாம் ஒருவரை ஒரு பணியைச் செய்வதற்காக நியமிக்கின்றோம். அவருக்கு அழகிய முறையில் கூலியும் வழங்கி விடுகின்றோம். 

💰அதற்கு பிறகு அவர் (அதிலிருந்து) எடுத்துக் கொள்வது மோசடியாகும்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி) 

நூல்: அபூதாவூத் (2554)

🗣️*அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:*❗

💰அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த்' எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத்' வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். 

💰அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார்.

💰நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப் படுகிறதா இல்லையா என்று பாரும்!'' என்று கூறினார்கள்.

💰பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: 

💰பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து "இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. 

💰இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறுகிறார். 

அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பப்பு வழங்கப் படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! 

💰(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கல் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நால் தமது பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். 

💰அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; 

💰அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்'' என்று கூறிவிட்டு "(இறைவா! உனது செய்தியை மக்கடம்) நான் சேர்த்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (6636)

🗣️*உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்!*❗

💰ஸகாத்தைப் பெற தகுதியானவர்களில் உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரும் அடங்குவார்கள். 

💰உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரில் முஸ்லிம் அல்லாதவர்களும், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அடங்குவர்.

உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்று அல்லாஹ் கூறியதிலிருந்தே இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டிய முஸ்லிம் அல்லாதவர்களும் அடங்குவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

💰புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஸகாத் நிதியிலிருந்து வழங்கும் போது அவர்களின் உள்ளம் மேலும் இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு கொள்வதற்கு அது காரணமாக அமையும்.

🗣️*அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:*❗ 

💰நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். 

💰மேலும் "இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (4667)

🗣️*அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*❗ 

💰ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். 

💰நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். 

💰அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்'' என்று கூறினார். 

நூல்: முஸ்லிம் 4275 (தமிழாக்கம் எண்: 4630)

🗣️*இப்னுஸ் ஸபீல் - நாடோடிகள்!*❗

💰நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் இப்னுஸ் ஸபீல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

💰இச்சொல்லின் நேரடிப் பொருள் பாதையின் மகன்' என்பதாகும்.

💰ஒருவனிடம் ஒரு செயல் அதிக அளவில் காணப்படும் போது அச்செயலுடன் மகன் என்பதைச் சேர்த்துக் கூறுவது அரபுகளின் வழக்கம்.

💰எப்போது பார்த்தாலும் போரில் பங்கெடுப்பவன் போரின் மகன்' என்று குறிப்பிடப்படுவது வழக்கம். எப்போது பார்த்தாலும் ஊர் ஊராகச் சென்று கொண்டிருப்பவன் பாதையின் மகன்' என்று குறிப்பிடப்படுவான்.

💰சாதாரணமாகப் பயணம் செய்பவர்கள் இச்சொல்லால் குறிக்கப்பட மாட்டார்கள். பயணமே வாழ்க்கையாக மாறியவர்கள் தான் இச்சொல்லால் குறிப்பிடப்படுவர். 

💰எனவே நாடோடிகள் என்பது இச்சொல்லுக்கு நெருக்கமான சொல் எனலாம்.

💰வீடு வாசல் ஏதுமில்லாமல் ஊர் ஊராகச் சுற்றக் கூடியவர்களுக்கு ஸகாத் நிதியை வழங்கி அவர்களை நிலையாக இருக்கச் செய்வதற்கு ஸகாத் நிதியைச் செலவிடலாம்.

💰இச் சொல்லுக்கு பிரயாணி, வழிப்போக்கன் என்று பலரும் பொருள் கொண்டுள்ளனர். 

💰பயணம் செய்வதே ஸகாத் பெறுவதற்கான தகுதியா எனக் கேட்டால் பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்து விட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவன் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்.

💰இவர்கள் வாதப் படி பயணிகள் என்ற அர்த்தம் மட்டுமே இச்சொல்லுக்கு உண்டு. 

💰அனைத்தையும் இழந்து சொந்த ஊர் செல்ல இயலாதவன் என்பது இச்சொல்லில் இல்லாத - கற்பனை செய்யப்பட்ட விளக்கமாகும்.

💰மேலும் சாதாரணப் பயணியைக் குறிக்க வேறு சொல் உள்ளது. பாதையின் மகன் என்பது எப்போது பார்த்தாலும் பயணத்தில் இருக்கும் நாடோடியையே குறிக்கும். 

💰நாடோடி என்று பொருள் கொண்டால் நாடோடியாக இருப்பதே ஸகாத் பெறுவதற்கான தகுதியாகும் என்பது ஏற்கத் தக்கதாகவும் உள்ளது.

💰பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்தவன் என்பவன் ஃபகீர் - தேவையுள்ளவன் என்ற வகையில் தானாக அடங்கி விடுவான். 

💰இத்தகையோரை உள்ளடக்கவே ஏழை என்றும் தேவையுள்ளவன் என்றும் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

💰🗣️*அடிமைகளை விடுதலை செய்வதற்கும் ஸகாத்திலிருந்து செலவிடலாம்.*❗ 

💰🗣️*ஆனால் தற்போது உலக நாடுகள் எதிலும் அடிமை முறை கிடையாது.*❗ 

💰🗣️*இஸ்லாம் கூறும் போதனைகள் அனைத்தும் அடிமைத் தளைகளை கட்டவிழ்க்கும் வண்ணமே அமைந்துள்ளன.*❗

Wednesday, April 14, 2021

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது ??

*குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது கூடுமா❓*

*குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா❓*

இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை என்ன?

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டுக் குளிக்காமல் நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காகக் குளிப்பார்கள் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன. ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள்.* (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள்.

அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி)
நூல்: புகாரி 1926, 1930, 1932

*தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காகக் குளிக்க வேண்டியதில்லை.*

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்று விட்டு சுப்ஹு தொழுகைக்காகக் குளிக்கலாம்.
——————-

நோன்பு நேரத்தில் ????

*நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா❓*

*நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா❓*

*குளிக்கலாமா❓*

*ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா❓*

*பற்பசைகள் பயன்படுத்தலாமா❓*

*சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா❓*

*வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா❓*

என்பன போன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்படுகின்றன. இவை யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும்.

உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும் இருப்பது தான் நோன்பாகும். இவை தவிர உள்ள ஏனைய காரியங்களைச் செய்வது நோன்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மேலும் நோன்பை முறிக்கும் செயல்கள் எவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டார்கள். பல்துலக்குவது நோன்பை முறிக்கும் என்றால் இறைவனோ, இறைத்தூதரோ அதைச் சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் எதுவும் சொல்லப்படவில்லை.

மேலும் பல் துலக்குவதை (குறிப்பாக தொழுகை நேரங்களில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.

‎صحيح البخاري

‎888 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ الحَبْحَابِ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 888

‎صحيح البخاري

‎887 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் சமுதாயத்திற்கு’ அல்லது “மக்களுக்கு’ நான் சிரமத்தை ஏற்படுத்தி விடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்திருப்பேன்.

நூல் : புகாரி 887

நோன்புக் காலங்களிலும் நபியவர்களின் இந்த சுன்னத் கடைப்பிடிக்கப்பட வேண்டியதாகும்.

ரமலான் கால தொழுகை நேரங்களில் பல் துலக்கக் கூடாது என்றிருந்தால் நபியவர்கள் அதை விளக்கியிருப்பார்கள்.

எனவே பல்துலக்குவதால் நோன்பு முறியாது.

ரமலான் எக்ஸ்பிரஸ்...

ரமலான் எக்ஸ்பிரஸ்...


🚂🚎🚎🚎🚎🚎🚎🚎

பயணியர்கள்  கவனத்திற்கு.

ஜன்னத்துல் பிர்தவ்ஸ் செல்லும்

🚂🚎🚎🚎🚎🚎🚎🚎

ரமலான்முபாரக் எக்ஸ்பிரஸ். 
தனது சரியானநேரத்தில்⌚ 
வந்து கொண்டுள்ளது.

🚂🚎🚎🚎🚎🚎🚎🚎

இந்த விரைவு இரயில் 
Insha Allah  13 or 14.04.2021
அன்று உம்மத்தார்கள் என்ற  
ஃபிளாட்பாரம் வந்து சேரும்.

அனைத்து முஸ்லீம் 
பயணியர்களும்  
தங்களது உடமைகளான  
தொழுகை 🌴                
நோன்பு🌴 
ஜக்காத் 🌴
சதக்கா 🌴
ஃபித்ரா 🌴
குர்ஆன் ஓதுதல்🌴
  
இவைகளை எடுத்துக்கொன்டும்.

மற்றும் கீழ் காணும்
இவைகளை. 

🎹🎸🎧🎲🎯🚃🍷🎻🎺🎷🎶📢🎼🎵🎵🎼📢🎶🎷💻📺📻📯

தவிர்த்து விட்டும் பிரயாணம் 
செய்யவும். 

ரமலான் எக்ஸ்பிரஸ்

🚂🚎🚎🚎🚎🚎🚎🚎

லை லத்துல்கத்ர் வழியாக 
இறுதியில், ஈதுல் பித்ர்.⭐🌙 
போய்சேரும்.

குறிப்பு; 

இந்த ரயிலில் பயணிப்பதற்க்கு டிக்கட்.

சகர். 🍜🍲🍜🍲🍪🍲🍚🍗🍝🍛🍶☕🍌

மற்றும் இஃப்த்தார்.
🍉🍇🍒🍠🍍🍆🍓🍯🍊🍧🍨🍡🍲🍜🍩

கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவும்.

மறக்க வேண்டாம்.

இந்த ரமலான் முபாரக் 
எக்ஸ்பிரஸில் பயணிக்கும் 
வாய்ப்பை அல்லாஹ்         
நம்  அனைவருக்கும் 
கொடுத்தருள்வானாக.
              
  🌺🌙  ஆ மீ ன்🌙  🌺

கடன் வாங்க வேண்டாம்.! கடன் விஷயத்தில் கண்டிப்பு*

*கடன் வாங்க வேண்டாம்.! கடன் விஷயத்தில் கண்டிப்பு*

கடன் வாங்குவது, *வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது* ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது.

*ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா?* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். 

அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, *இவர் கடனாளியா?* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். 

அப்படியென்றால் *உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

நூல் : *புகாரி 2295*

கடன்பட்டு இறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார். அப்போது இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். 

கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்! என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்) மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! *மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்*. யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும் என்று கூறினார்கள்.

நூல் : *புகாரி 2298*

கடன்பட்ட நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் *மறுமை நாளில் அவரது நன்மைகள் கடன் கொடுத்தவர் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இந்த நிலையை யாரும் அடையக் கூடாது* என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தாமல் புறக்கணித்துள்ளார்கள். நாம் கடனாளியாக மரணித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக கடனில்லாமல் மரணிக்க நபித்தோழர்கள் முயற்சிப்பார்கள் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் கடுமை காட்டியுள்ளனர்.

*நபித்தோழர்களின் நிலையே இதுவென்றால் நாம் கடன் வாங்கினால் என்னவாகும் என்ற அச்சம் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்படவேண்டும்.*

எனவே *இயன்றவரை யாருக்கும் கடனாளியாக இல்லாமல் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.*
——————-

*ஏகத்துவம்*

ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு*❗

🗣️*மக்களே! ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு*❗

🗣️*நபியவர்கள் கூறியதாக சந்தேகம் ஏற்படும் போது அதை உறுதிப்படுத்தி கொள்ளவேண்டும்*❗

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗

🗣️*என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.*❗

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி)

📚நூல்: புகாரி 3461

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗

🗣️*(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.*❗

அறிவிப்பவர்: அலீ (ரலி)

📚நூல்: புகாரி 106

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

🗣️*என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.*❗

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

📚நூல்: புகாரி 110

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

🗣️*பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.*❗

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

📚நூல்: முஸ்லிம் 1

🗣️*திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸ்களிள் அடிப்படையில்தான்  ஹதீஸ்கலை விதிகள் தொகுக்கப் பெற்றன என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.*❗

🗣️*நபியவர்கள் கூறியவற்றை அவர்கள் கூறியவாறே எடுத்துரைக்க வேண்டும், நபியவர்களின் மீது பொய்யாகக் கூறினால் நிரந்தர நரகமே தங்குமிடம்*❗ 

🗣️*என்ற நபியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய காரணத்தினால் ஸஹாபாக்கள் நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தியை உறுதிப்படுத்தும் விசயத்தில் மிகப் பேணுதலாக நடந்து கொண்டனர்.*❗ 

🗣️*நபியவர்கள் கூறியதாக சந்தேகம் ஏற்படும் என்றால் அதை உறுதிப்படுத்தி கொண்டனர்.*❗

பாவிகளாக்கும் பராஅத் இரவு

*ஏக இறைவனின் திருப்பெயரால்*


*பாவிகளாக்கும் பராஅத் இரவு*

📖‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்)📖

👇அவசியம்  படியுங்கள் 👇

💙 செய்ய கூடாதாவைகள் :

❤️ குறிப்பிட்ட நாளில் மட்டும் நோன்பு வைத்தல் : 

• நபி (ஸல்) அவர்களும் சரி, சஹாபாக்களும் சரி யாரும் ஷாபானில் ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்து நோன்பு வைத்தது கிடையாது அந்த நாளில் நோன்பு வைத்தால் இவ்வளவு சிறப்பு உண்டு என்று கூறியதும் கிடையாது!

❤️ குறிப்பிட்ட இரவில் மட்டும் நின்று வணங்குதல் :

• நபி அவர்கள் இந்த மாதத்தில் அதிகம் நோன்பு வைத்து உள்ளார்கள் இதை தவிர்த்து நபி அவர்கள் வாழ்விலோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்விலோ ஒரு செய்தி கூட கிடையாது! ஷாபான் இரவில் நின்று தொழுதார்கள் சிறப்பு திக்ர் செய்தார்கள் என்று! 

• ஷாபான் 15 ம் இரவு அதிகம் நன்மை தர கூடியது அதிக அமல் செய்ய வேண்டும் என்றால் நமக்கு முன் மாதிரியாக நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் அமல் செய்து காட்டி இருப்பார்கள்!

❤️ மூன்று யாஸீன் ஓதுதல் :

• முதலில் சூரா யாஸீன் பற்றி வர கூடிய அனைத்து ஹதீஸ்களுமே பலகீனம்!

• இரண்டாவது நாம் ஒரு வாதத்திற்கு அந்த ஹதீஸ்யை எற்றாலும் எந்த இடத்திலும் மூன்று யாஸீன் ஓதினால் இந்த சிறப்பு என்று நபி அவர்கள் கூற வில்லையே?????

• இவர்களே ஒரு செய்தியை கூறி இவர்களே அதற்கு இவ்வளவு சிறப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்!!!

• இவ்வாறு ஒரு பொய்யான செய்தியை கூறி அமல் செய்வதால் உங்களுக்கு என்ன கிடைத்து விட போகிறது???

💟 பராஆத் இரவு கொண்டாட கூடியவர்கள் காட்டும் ஆதாரங்கள் :

🖤 ஷாபான் 15 ம் இரவில் தான் அல் குர்ஆன் இறங்கியதாம் : 

 தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

(அல் குர்ஆன் : 44:2-4)

• இந்த வசனத்தை ஆதாரம் ஆக வைத்து பராஆத் இரவு என்று சிறப்பு கொண்டாடுகிறார்கள்!

• இந்த வசனத்தில் வரும் பாக்கியம் பெற்ற இரவு என்பது பராஆத் இரவை குறிக்குமாம் இதை ஆதாரம் ஆக வைத்து இவர்கள் அந்த அந்த இரவை சிறப்பு கொண்டாடுகிறார்கள்!

• ஆனால் அல் குர்ஆன் எப்போது இறக்கியது - பாக்கியம் பெற்ற இரவு எப்போது என்று அல்லாஹ்வே தெளிவாக கூறி உள்ளான் : 👇

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
 
(அல்குர்ஆன் : 2:185)

• பாக்கியம் பெற்ற இரவு மற்றும் அல் குர்ஆன் இறக்கிய இரவு என்பது ரமலான் மாதத்தின் லைலத்துல் கத்ர் இரவை மட்டுமே குறிக்கும் என்று எல்லா மார்க்க அறிஞர்களுக்கும் கூறி உள்ளார்கள்!


🖤 பராஆத் இரவும் - அமல்களும் : 

ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள்.

அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களைப் போக்குகின்றேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : இப்னுமாஜா : 1378)

• இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

• இப்னு அபீ ஸப்ரா என்பவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹதீஸ்கள் என்ற பெயரால் இட்டுக்கட்டிக் கூறுபவர் என அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

• மேலும் இமாம் புஹாரி (ரஹ்) மற்றும் இமாம் நஸயீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ்யை ஏற்று கொள்ள கூடாது என்று கூறி உள்ளார்கள்! 

(நூல் : அல்லுஅஃபாஉ வல் வல்மத்ருகீன் )

🖤 ஷாபான் 15ம் இரவில் கபூர் ஜியாரத் செய்தல் : 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீவு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( நூல்: திர்மிதி) 

• இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதை இதைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே ஹதீஸ் கீழ் குறிப்பிட்டு உள்ளார்கள்! இவர்கள் மட்டும் அல்லாமல் இமாம் புஹாரி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸ்யை மறுக்கிறார்கள்! இந்த ஹதீஸ் பற்றி திர்மிதி இமாம் அவர்களே விளக்கமாக கூறி உள்ளார்கள்! 

• ஆனால் இந்த ஹதீஸ்யை ஆதாரம் ஆக காட்ட கூடியவர்கள் கிழே திர்மிதி இமாம் குறிப்பிட்டத்தை காட்ட மாட்டார்கள்! 

🖤 சிறப்பு தொழுகை :

ரமலான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளார் : முஹம்மத் பின் அலீ

(நூல் : ஃபலாயிலு ரமலான்- இப்னு அபித் துன்யா)

• இந்த ஹதீஸ்யை அறிவிக்க கூடியவர் நபி ஸல் அவர்களிடம் தாம் கேட்டதாக அறிவிக்கிறார் ஆனால் முஹம்மத் பின் அலீ என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழவே இல்லை!

• இது இட்டகட்டப்பட்ட செய்தியாகும்!


❤️ இது போன்று இன்னும் சில ஹதீஸ்கள் உள்ளன அவைகளும் ஆதாரம் அற்றவையே! அவைகளை எல்லாம் கூறினால் பதிவு கட்டுரை போன்று சென்று விடும் என்பதால் சுருக்கி கூறி உள்ளோம்! 


💟 பராஆத் இரவும் கட்டுக்கதைகளும் :


🖤 மறுமை நாளில் நிழல் பெற : 

• அன்றைய இரவில் மஃரிப் தொழுகைக்குப் பின் மூன்று யாசீன் ஓதுவார்கள்.

• ஒன்று உணவு விஸ்திரணத்திற்கு,

• இரண்டாவது ஆயுள் நீடிப்புக்கு,

• மூன்றாவது கப்ரில் வேதனை நீங்க,

• மூன்று யாசீனுக்கு இடை, இடையே துஆ ஓதிக்கொள்வார்கள். மூன்று யாசீனையும் ஓதியப் பின் ரொட்டி சுட்டு, மூன்று வாழை பழத்துடன் பங்குவைப்பார்கள்.

• இதற்காக அவர்கள் கூறும் கதை :

“யார் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப் பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும், வரும் 😱


• இதை யார் கூறினார்கள்? இந்த செய்தி அல் குர்ஆனிலும் இல்லை நபி அவர்களும் கூற வில்லை! ஸஹாபாக்கள் வாழ்விலும் இப்படி ஒரு செய்தி காண முடியவில்லை!

• மறுமை நாளில் எல்லோருக்கும் அல்லாஹ் உடைய அர்ஷ் நிழல் கிடைக்காது!

• மறுமை நாளில் அல்லாஹ் உடைய அர்ஷை தவிர வேறு எந்த நிழலும் இருக்காது!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான்.

(நூல் : புகாரி : 660)

• நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக 7 கூட்டத்தாரை மட்டும் கூறி உள்ளார்கள்! அவர்கள் மட்டுமே மறுமை நாளில் அர்ஷ் நிழல் கிடைக்கும்! இவர்களை தவிர வேறு யாருக்கும் அர்ஷ் நிழல் கிடைக்காது! 


🖤  கபூரில் கேடயம் : 

யார் அன்றிரவு ரொட்டியும், வாழைப் பழமும், கொடுக்கிறாரோ அவைகள் கப்ரில் மலக்குமார்கள் இரும்பால் அடிக்கும் போது கொடுத்த ரொட்டி கேடயமாக வந்து உங்களை பாதுகாக்கும்!  😱

• அல்லாஹ் பாதுகாக்கணும் அல்லாஹ் உடைய தூய மார்க்கத்தை எப்படி எல்லாம் இழிவுகளை ஏற்படுத்தி கொண்டார்கள்!

• கேவலம் இவர்கள் இலவசமாக உண்பதற்கு அல்லாஹ் உடைய மார்க்கத்தை பயன் படுத்தி கொள்ளுகிறார்கள்! 

• இதற்க்கு எல்லாம் என்ன ஆதாரம்??? ஓரு பலகீனமான ஹதீஸ் ஆவது உண்டா??? ஒன்றுமே கிடையாது!

• பிறருக்கு உணவு கொடுத்தால் நன்மை தானே என்று இந்த செயலை செய்கிறார்கள்! பிறருக்கு உணவு கொடுத்தால் நன்மை தான் ஆனால் எண்ணம் மிக முக்கியம் நீங்கள் கொடுக்கும் போதே உள்ளத்தில் பராஆத் சிறப்பு வைத்து கொண்டு இந்த காரியத்தை செய்தால் பாவம் தான் சேரும்!

🖤 மரணம் தள்ளி போகும் :

பராத் இரவில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலில் ஓதப்படும் துஆப் பிராத்தனைக்கும் சிறப்பு தொழுகைக்கும் யார் சமூகம் இடம் தருகின்றாதோ அவர் இந்த வருடத்தில் மரணிக்க மாட்டார். அவருடைய காலக்கெடு திருத்தப்படுகிறது. அவ்வாறு சமூகம் தர தவறும் போது அவர்கள் துர்ப்பாக்கியசாலிகளாக
கருதப்படுவர். 

• யாராக இருந்தாலும் சரி ஒரு போதும் மரணம் தள்ளி போகாது!

அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 63:11)

• மரணம் என்பது ஒவ்வொருவருக்கும் உறுதி செய்யப்பட்ட ஒன்று நாம் என்ன தான் அமல் செய்தாலும் சரி நமக்கு மரணம் தள்ளி போகாது!

• மேலே உள்ள செய்தி இவர்கள் செய்யும் பித்ஆத்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்! கேட்டால் தர மாட்டார்கள் உடனே இடம் கொடுத்தால் இவ்வளவு சிறப்பு நபி அவர்கள் கூறி உள்ளார்கள் என்றால் இடம் கொடுப்பார்கள்!

🖤 சிறப்பு தொழுகை : 

பராஅத் இரவில் ஸலாதுல் கைர் என்ற பெயரில் சிறப்பு தொழுகை மக்கள் தொழுவார்கள் அது நூறு
ரக்அத் கொண்ட தொழுகை.

ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாஃத்தியா பிறகு சூரா இக்லாஸ்
பதினொரு தடவை ஓதவேண்டும்.

• நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு நாளாவது இவ்வாறு தொழுது உள்ளார்களா ? சஹபாக்கள் யாரேனும் இவ்வாறு செய்து உள்ளார்களா??? ஒன்றுமே கிடையாது!

🖤 பராஆத் இரவு சிறப்பு துஆ : 

இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் துன்பம், துயரங்கள் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் மூன்று 'யாசீன்' ஓதி துஆ செய்வார்கள் :

. @அல்லாஹ் போதுமானவன் 💞

✍️இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ்  நாளை தொடரும் ..✍️

*நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.. அல்குர்ஆன்(51; 55  )📖*
*✍️தங்களின் இஸ்லாமிய ஊழியன்(அப்துல் வாஜித்)✍️*

பாவமன்னிப்பு

*பாவமன்னிப்பு*
————————
*அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு*. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

[அல்குர்ஆன் 4:17]

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் *அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிகபவர்: அபூஹுரைரா (ரலி),
 நூல் : புகாரி 6307

*எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), 
நூல் : முஸ்லிம் 4870


*மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), 
நூல் : *முஸ்லிம் 4871*

உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார். 
நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், *அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; குழந்தைகளைக் கொல்வதில்லை; உங்களிடையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை; எந்த நற்செயலிலும் எனக்கு மாறு செய்வதில்லை* என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்குகிறேன். 

உங்களில் (இவற்றை) நிறைவேற்றுகிறவரின் பிரதிபலன் அல்லாஹ்விடம் உள்ளது. *மேற்கூறப்பட்ட (குற்றங்களான இ)வற்றில் எதையேனும் ஒருவர் செய்து, (அதற்காக) அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகவும் அவரைத் தூய்மையாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். (அவற்றில் எதையேனும் ஒருவர் செய்து பின்னர்) அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுவார்; அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்: அவன் நாடினால் அவரை மன்னிப்பான்* என்று கூறினார்கள்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: 

ஸஹீஹுல் *புகாரி: 6801*
———————

வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்.

வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்.


*நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது*.

*திருக்குர்ஆன்  62:9*

*தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.*

*திருக்குர்ஆன்  62:10*

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻


*ஜூம்ஆவின் ஒழுங்குகள்*

*1. ஜூம்ஆ நேரத்தில் கொடுக்கல் வாங்கலை  விட்டு விட வேண்டும்*
*(அல்குர்ஆன் 62:9)*

*2. குளிப்பு கடமையைப் போல் குளிக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1530)*

*3. பல் துலக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1537)*

*4. தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1538)*

*5. நறுமணம் பூச வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1537)*

*6. இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும்* 
*(ஸஹீஹ் முஸ்லிம் 1540)*

*7. வாகனத்தில் செல்லாமல் நடந்தே பள்ளிக்கு செல்வது*

*யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு*

*(வாகனத்தில் செல்லாமல் நடந்து) அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*(சூனன் நஸயீ 1364)*

*8. ஜும்ஆ தொழுகைக்காக இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேர காலத்துடன் செல்லுதல், அப்போதுதான் மலக்கு மார்களின் பட்டியலில் பெயரைப் பதித்துக்கொள்ள முடியும் குர்பானியின் நன்மை ஒட்டகம் மாடு ஆடு கோழி முட்டை என்ற வரிசையில் கிடைக்கும்*
*( ஸஹீஹ் புகாரி 929)*

*9. பள்ளிக்குல் நுழைந்த உடன் இடம் இல்லையெனில் யாரையும் நகர சொல்லாமல் யாரையும் பிரிக்காமல் தனக்கு கிடைத்த இடத்தில் நின்று அமர்வதற்கு முன் கூடுதல் தொழுகை தொழ வேண்டும் தொழாமல் அமரக் கூடாது* 

*(ஸஹீஹ் புகாரி 910 911,ஸஹீஹ் முஸ்லிம் 1585)*

*10. இமாம் உரை நிகழ்த்த ஆரம்பித்த உடன் யாரிடமும் பேசாமல் மெளனமாக இருந்து உரையை கவனிக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1556)*

*11. அருகில் இருப்பவரிடம் மெளனமாக இருங்கள் என்று கூறினாலும் வீண் காரியத்தில் ஈடுபட்டதாக அமைந்துவிடும் (ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1542)*

*12. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.(ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)*
*(ஸஹீஹ் முஸ்லிம்_1557)*

*13. இமாம் உரையை கவனமாக செவி தாழ்த்தி கேட்டு விட்டு தொழுகையையும் இமாமமுடன் தொழ வேண்டும்..*
*(ஸஹீஹ்முஸ்லிம்_1556)*

*மேற்கண்ட இவற்றை எல்லாம் சரியாக செய்தீர்கள் ஆனால் முழு ஜூம்ஆ வையும் அடைந்ததாக அமையும் ஜூம்ஆ உடைய கூலி இன்ஷா அல்லாஹ் முழுமையாக கிடைக்கும்*

*மேலும் அடுத்த ஜூம்ஆ வரையும் மேற்க்கொண்டு மூன்று நாட்கள் மொத்தம் வரக்கூடிய 10 நாட்கள் ஏற்படக்கூடிய பாவத்திற்கு பரிகாரமாக அமையும்*

*(ஸஹீஹ்_முஸ்லிம்_1556)*



வெள்ளி கிழமை சிறப்பு

வெள்ளி கிழமை சிறப்பு 💞



💟 நாட்களில் சிறந்த நாள் :-


”நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.

( முஸ்லிம் 1548 )


💟 வெள்ளி கிழமை வியாபாரம் செய்யலாமா? 


வெள்ளிக்கிழமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜும்ஆ நடக்கும் நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது என்ற தடையை அல்லாஹ் குா்ஆன் மூலம் எச்சரிக்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் அறியலாம்.

ஈமான் கொண்டவர்களே! 

ஜும்ஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

( அல் குர்ஆன்  62:9 )

பின்னர், (ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 

 ( அல் குர்ஆன் 62:10 )

அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. 

( அல் குர்ஆன் 62:11 )

ஜும்ஆ நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது அவைகளை நிறுத்தி விட்டு நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு புரிந்து கொள்ளலாம் !


💟 ஜூம்ஆ முபாரக் என்று கூறலாமா?


வெள்ளிக்கிழமைகளில் "ஜும்மா முபாரக் " என்ற ஒரு வாசகத்தை நம்மில் சிலர் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள்.

பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை மார்க்கத்தில் உள்ளதாக நினைத்துக் கொண்டுதான் சொல்கினறார்கள்.

உண்மையில் வெள்ளிக்கிழமையில் " ஜும்மா முபாரக்” என்ற வாசகத்தை சொல்வதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான
ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது.

மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் (சுன்னாஹ்n)  இருக்க வேண்டும்.

அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை பாருங்கள் :👇

இம்மார்க்கத்தில்  இல்லாத ஒன்றையாரேனும் உருவாக்கினால் அது ரத்துசெய்யப்படும்.

( புகாரி : 2697 )


செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதம் ஆகும்!

நடைமுறையில் மிகவும் சிறந்தது நபிகளாரின் " சுன்னா " ஆகும்!

காரியங்களில் மிகவும் தீயது மார்க்கம் என்ற பெயரால் புதிதாக உருவானவைகள் ஆகும்!

புதிதாக உருவானவைகள் அனைத்தும் " பித்அத்கள் " ஆகும்!


ஒவ்வொரு " பித்அத் "தும் வழிகேடாகும்!*

ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்!

( நஸயீ :- 1560 )


ஆக மார்க்கத்தில் இல்லாத எந்தவொரு  செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!

*"ஜும்மா முபாரக்" என்ற ஒரு வார்த்தையை வெள்ளி கிழமையில் சொல்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட "பித்அத்" ஆகும்.

இதற்கு நன்மையையும், கிடைக்காது, மாறாக "பித்அத்" ஐ உருவாக்கிய குற்றம் கிடைத்து விடும் .


💟 ஜூம்ஆ தொழுகைக்கு பள்ளிக்கு முன்பாகவே செல்ல வேண்டும் :-


”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.


( முஸ்லிம் 1554 )


💟 துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் ⏳️:-


வெள்ளிக் கிழமை நாள் ஒரு நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் ஓர் அடியான் தொழுது விட்டு அல்லாஹ்விடம் து ஆ கேட்டால், அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதாக நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.

”அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில்

 “அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.- 

அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்” 

( முஸ்லிம் 1543 )

அது எந்த நேரம் என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கு அறிந்தவன் ☝️


📚 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய அமல்கள் :-


💟 அதிகமாக ஸலவாத்து சொல்லுதல் :-

வெள்ளிக்கிழமையன்று என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள்.

ஏனேனில், பூமியில் யாரேனும் ஒரு முஸ்லிம் தங்கள் மீது ஒருமுறை ஸலவாத் சொன்னால் நான் அவர்மீது பத்து ரஹ்மத்களைப் பொழிவேன். மேலும் என்னுடைய மலக்குகள் அவருக்காகப் பத்து முறை பாவமன்னிப்புத் தேடுகின்றனர்” 

( நூல் : தபரானீ )


💟 வெள்ளிக்கிழமை குளிப்பது :-🚿

'ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


( நூல்: புகாரீ 895 ) 


💟 பல் துலக்கி, வாசனை திரவியங்களை தடவி, அழகான ஆடையை அணிந்து கொள்வது 💞


'ஜுமுஆ நாளில் குளித்து விட்டு, இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து, (அங்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல் தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜுமுஆவிற்கும் அடுத்த ஜுமுஆவிற்கும் இடையிலான (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


( நூல்: புகாரீ 880 )


💟 ஜூம்ஆ தொழுகைக்காக நடந்து வருவது 🚶🏻‍♂️:-


நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :-

எவர் ஜும்ஆ நாளன்று மிக நல்ல முறையில் குளித்து காலை நேரத்தில் வாகனத்தில் செல்லாமல் நடந்து பள்ளிக்கு சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து,

குத்பாவைக் கவனத்துடன் கேட்டு, அச்சமயம் எந்த விதப் பேச்சும் பேசாமல் இருக்கிறாரோ, 

அவர் ஜும்ஆத் தொழுகைக்கு எத்தனை எட்டுக்கள் எடுத்துவைத்து வந்தாரோ, அந்த ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பு வைத்த நன்மையும், ஒரு வருடம் இரவு நின்று வணங்கிய நன்மையும் கிடைக்கிறது” 


( நூல் : அபூதாவூத் )


💟 பாவங்கள் மன்னிக்கப்படுகிறது :-


நபி (ஸல்) அவர்கள் 
கூறினார்கள்:-

ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; 

பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார்.

 இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.


( ஸஹீஹ் முஸ்லிம் : 1556 )


💟 குத்பா ஓதும் நேரத்தில் பேசக்கூடாது 🗣️🚫


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 

“மௌனமாக இரு” 

என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.

( ஸஹீஹ் முஸ்லிம் : 1541 )


💟 ஜும்ஆ தினத்தில் தொழுகைக்கு வராதவர்களுக்கான எச்சரிக்கை ⚠️


‘ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான் அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள்.

( நூல்: முஸ்லிம் :1432 )


💟 வெள்ளி கிழமை மட்டும் நோன்பு நேர்க்க கூடாது🚫

உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள், அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்கவேண்டாம்.

( ஸஹீஹ் முஸ்லிம் : 2102 )


💟 ஜும்ஆ தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள் :-

ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள்:-

 1. பருவ வயதை அடையாதவர்கள்

2.பெண்கள் 

3. நோயாளி 

4. பயணி


'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

( நூல்: அபூதாவூத் 901 ))


*❣️STRAIGHT PATH*❣️

நோன்பை பற்றி அறிந்து கொள்ளுவோம்

*நோன்பை பற்றி அறிந்து கொள்ளுவோம் 💕*


• நோன்பு இஸ்லாத்தின் நான்காவது கடமையாகும்! அரபி மொழியில் நோன்பு ‘ஸவ்மு’ எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும்.

• நோன்பைத் தவிர்த்து அமல்களும் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையாக தெரியும்!

• நோன்பு ஓர் ரகசியமான அமலாகும்! நோன்பை நிறைவேற்றுகின்ற மனிதனையும் அல்லாஹ்வையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது.

• தனக்கு முன்னால் தனது ஆசைகளை, பசியை, தாகத்தை போக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இருந்தும் அவன் அல்லாஹ்வின் பொருத்தம் நாடியவனாக அவற்றை விட்டும் நீங்கி இருக்கின்றான்!

• அல்லாஹ் நோன்பை பற்றி கூறும் போது : நோன்பு வைப்பத்தன் மூலம் நீங்கள் தக்வா (இறையச்சம்) உடையவர்களாக ஆகலாம்! என்று இறையச்சம் என்பது அல்லாஹ் கூறியவற்றை செய்வது தடுத்த வற்றை விட்டு விலகி நிற்பதுமாகும்!

*💟 யார்? யார்? மீது நோன்பு கடமை :*

• முஸ்லீம் அல்லாதவர்!

• பருவமடையாத சிறுவர், சிறுமி! 

• புத்தி சுவாதினம் இல்லாதவர்!

• நிரந்தர நோயாளி!

• தள்ளாத வயதை அடைந்த முதியவர்கள்!

ஆகியோரின் மீது நோன்பு கடமை கிடையாது! 

• இவர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் நோன்பு நோற்கலாம்!


*💟 நிய்யத்  :*

• எந்த அமலாக இருந்தாலும் நிய்யத் அவசியம் வைக்க வேண்டும்!

• ஆனால் இன்று பெரும்பாலான ஊருகளில் நிய்யத் என்று ஏதோ ஒரு துஆவை ஓதி கொண்டு உள்ளார்கள்! ஆனால் நபி அவர்கள் அவ்வாறு எந்த துஆவையும் கற்று தரவில்லை!

நபி அவர்கள் கூறினார்கள் :

*யார் ஃபஜ்ருக்கு முன்னரே நிய்யத் வைக்க வில்லையோ
அவருக்கு நோன்பு இல்லை.*

(நூல்: திர்மதி : 730)

• நிய்யத்திற்கு என்று நபி அவர்கள் எந்த துஆவையும் அல்லது சிறப்பு சொற்களையும் கற்று தரவில்லை!

• நாம் உள்ளத்தில் நோன்பு வைக்கின்றேன் என்று நிய்யத் வைத்து கொண்டாள் போதுமானது! வாய் வழியாக சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது!

• நாம் தூங்கும் போதே நாளைக்கு இன்ஷாஅல்லாஹ் நோன்பு வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறங்க வேண்டும் ஒரு வேலை நாம் தூங்கி எழும் போது பாங்கு கூறி விட்டாலும் நாம் அப்படியே நோன்பை தொடரலாம்! 

*💟 ஸஹர் நேரம் :*

*ஸஹரை நாம் பாங்கு கூறுவதற்கு முன் வரை செய்யலாம்! அதற்கு மேல் செய்ய கூடாது*

(நூல்: புகாரி : 576)

• சில ஊருகளில் இரவே ஸஹர் செய்து விடுவார்கள் இன்னும் சிலர் 1 மணிக்கே ஸஹர் செய்து விடுவார்கள் ஆனால் இவ்வாறு செய்ய கூடாது!

• இரவின் கடைசி பகுதி பாங்கு கூறுவதற்கு முன்னாள் தான் நாம் ஸஹர் செய்ய வேண்டும்! 

• பாங்கு கூறுவதற்கு  10 அல்லது 15 நிமிடங்கள் முன்னால் ஸஹர் செய்து முடித்து விட வேண்டும்! 

*💟 ஸஹர் முக்கியமாக செய்ய வேண்டும் :*

• ஸஹர் செய்வது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ்வாகும்! நோன்பு வைக்க கூடியவர்கள் அவசியம் ஸஹர் செய்ய வேண்டும்!

• ஸஹர் செய்ய உணவு பொருட்கள் இல்லை என்றால் பேரிச்சப்பழம் கொண்டாவது ஸஹர் செய்ய வேண்டும்!

*'நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!'*

(நூல் : புகாரி : 1923)

*💟 விடி ஸஹர் :*

• இன்று பல ஊர்களில் அறியாமையின் காரணமாக விடி ஸஹர் என்று ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள்!

• நீண்ட நேரம் தூங்கி விடுவதால் ஸஹர் செய்ய முடியாமல் சென்று விடும் அதனால் இவர்கள் பாங்கு கூறிய பின்பும் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு நோன்பு வைக்கிறார்கள்! இதற்க்கு விடி ஸஹர் என்று கூறுவார்கள்!

• ஆனால் இதற்க்கு அல் குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ அல்லது சஹபாக்கள் வாழ்கைலோ எந்த ஆதாரம் கிடையாது!

• இவ்வாறு விடி ஸஹர் செய்து நோன்பு வைத்தால் அந்த நோன்பு கூடாது!

• ஸஹர் செய்ய முடியாமல் தவறி விடும் என்று அஞ்சினால் நாம் உறங்கும் போதே நிய்யத் உடன் உறங்கலாம்! அதனால் ஸஹர் தவறினாலும் நாம் அப்படியே நோன்பை தொடரலாம்!

*💟 நோன்பை விரைவாக திறக்க வேண்டும் :*

• சூரியன் உறுதியாக மறைந்து விட்டது என்று தெரிந்து விட்டால் நோன்பு திறப்பதை தாமதம் படுத்த கூடாது முடிந்த அளவுக்கு விரைவாக நோன்பு திறக்க வேண்டும்!

*நோன்பை பேரீத்தம் பழம் கொண்டு திறப்பது சுன்னாஹ்வாகும்!*

(நூல்: திர்மிதீ)


*💟 நோன்பின் வகைகள் :*

*❤️ பர்ளான நோன்பு :*

• பர்ளான நோன்பை கட்டாயம் வைக்க வேண்டும் விட்டால் குற்றம் ஆகும்!

*💜 ரமலான் மாத நோன்பு :*

• ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது ஒரு முஸ்லீம் மீது கட்டாய கடமையாகும்!

• மார்க்கம் சலுகை அளித்தவர்களை தவிர மற்ற அனைவரும் ரமலான் மாதத்தில் நோன்பு அவசியம் வைக்க வேண்டும்! விட்டால் குற்றம் ஆகும்!

(அல்குர்ஆன் 2:183)

*💜 நேர்ச்சை நோன்புகள் :*

• ஒரு மனிதர் தன்னுடைய ஏதேனும் ஒரு தேவையை குறித்து, இந்த தேவையை அல்லாஹ் நிறைவேற்றி விட்டால் நான் இத்தனை நாட்கள் நோன்பு நோற்பேன் என்று அல்லாஹ்விடம் நேர்ச்சை செய்யும் நோன்புகளாகும்!

• அவ்வாறு அவர் நேர்ச்சை செய்வது போன்று நிறைவேறி விட்டால் அப்போதில் இருந்து அவர் மீது நோன்பு வைப்பது கட்டாய கடமையாகும்!

• ஆனால் அவர் நேர்ச்சை செய்வது போன்று நிறைவேற வில்லை என்றால் அவர் மீது நோன்பு வைப்பது கடமை கிடையாது! 

*💜 குற்ற பரிகார நோன்பு :*

• இஸ்லாத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட குறித்த சில பாவங்களை செய்யும்போது அதற்கு பரிகாரமாக நோன்பு நோற்பதை கடமையாக்கி உள்ளது!

*💙 சத்தியத்தை முறித்தல் :*

• ஒருவர் உறுதியான சத்தியம் செய்து விட்டு பின்னர் அச்சத்தியத்தை முறித்து விட்டால் அவர் 10 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது 10 ஏழைகளுக்கு உடையளிக்க வேண்டும் அல்லது ஒரு அடிமையை உரிமையிட வேண்டும் இதற்க்கு சக்தி பெறாதவர்கள் மூன்று நாட்கள் நோன்பு நோற்க்க வேண்டும்.

(அல் குர்ஆன் : 5 : 89)

*💙 கணவன் மனைவி சேருதல் :*

• நோன்பு வைத்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விட்டால் நோன்பு முறிந்து விடும்! இவ்வாறு செய்வது குற்றம் ஆகும்! 

• இதற்க்கு பரிகாரம் :
ஒரு அடிமையை உரிமை விட வேண்டும்! (அல்லது) 2 மாதங்கள் தொடர்ந்து நோன்பு வைக்க வேண்டும் (அல்லது) 60 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்! 

(நூல் :புஹாரி :1936)

*❤️ சுன்னத்தான நோன்புகள் :*

• சுன்னத்தான நோன்புகள் ரமலான் மாதம் அல்லாத மற்ற நாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தது அல்லது பிறரை நோன்பு வைக்கும் படி ஏவியது இவைகள் தான் சுன்னத்தான நோன்புகள் ஆகும்! 

• சுன்னத்தான நோன்புகளை வைப்பவு கட்டாய கடமை அல்ல! வைத்தால் நன்மை கிடைக்கும் நபி அவர்களின் சுன்னாஹ் பேணிய நன்மை கிடைக்கும்! விட்டால் குற்றம் கிடையாது!

*💜 ஆறு நோன்பு :*

யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து  ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர்காலமெல்லாம் நோற்றவராவார்” என  நபி (ஸல்) கூறினார்கள்!

(நூல் : அபூதாவூத் : 2078)

• ரமலான் மாதம் முடிந்த பிறகு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் 6 நோன்புகள் வைப்பது சுன்னாஹ்!

• தொடர்ச்சியாக நோன்பு வைக்க வேண்டும் என்று அல்ல விட்டு விட்டும் வைக்கலாம் ஆனால் அந்த மாதத்திற்குள் வைக்க வேண்டும்!

*💜 ஷஅபான் மாதம் :*

• ஷஅபான் மாதத்தில் நபி அவர்கள் அதிகம் நோன்புகள் வைத்து உள்ளார்கள்! நாமும் இந்த மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு நோன்புகள் வைக்கலாம்!

• குறிப்பிட்ட நாள் என்று எல்லாம் ஷஅபான் உடைய அதிகமான நாட்களில் நபி அவர்கள் நோன்பு வைத்து உள்ளார்கள்!

(நூல் : புகாரி : 1969)

*நோன்பின் சிறப்பு :*

• ஷஅபான் மாதத்தில் தான் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்! 

(நூல் : நஸாஈ : 2357)

*💜 ஆஷுரா நோன்பு :*

• நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் பிரஹவ்ன் இடம் இருந்து காப்பாற்றிய நாளை யூதர்கள் நோன்பு நேற்று கொண்டாடினர்கள்!

• நபி (ஸல்) அவர்கள் உங்களை விட நானே மூஸா (அலை) அவர்களுக்கு நெருக்கமானவன் என்று கூறி தானும் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு வைக்க சொன்னார்கள்!

• முஹர்ரம் மாதத்தில் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் நோன்புகள் நோற்க்க வேண்டும் இது சுன்னாஹ்வாகும்! 

(நூல் : முஸ்லிம் : 2088)

*நோன்பின் சிறப்பு :*

• கடந்து சென்ற ஒரு வருடத்திற்கான பாவமன்னிப்பு கிடைக்கும்!

*💜 அராபஃ நோன்பு :*

• துல் ஹஜ் உடைய 9 வது நாளில் ஒரு நோன்பு  வைப்பது சுன்னாஹ்வாகும்!

• அரஃபாவில் தங்கும் ஹாஜிகள் மட்டும் நோன்பு நோற்க்க கூடாது! நபி அவர்கள் தடை செய்து உள்ளார்கள்!

(நூல் : அபூதாவூத் : 2084)

• அரஃபாவில் தங்கும் ஹாஜிகளை தவிர மற்றவர்கள் அனைவரும் நோன்பு நேர்க்கலாம்!

*நோன்பின் சிறப்பு :*

• முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாகும்! 

(நூல் : முஸ்லிம் : 2151)

*💜 வாரத்தில் இரண்டு நோன்புகள் :*

• வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு வைப்பது சுன்னாஹ்வாகும்! 

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத்தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்!

(நூல்:  நஸயீ : 2321)

*💜 மாதம் மூன்று நோன்புகள் :*

• ஒவ்வொரு மாதமும் 13-14-15 ஆகிய நாட்களில் நோன்பு வைப்பது சுன்னாஹ்வாகும்!

*நோன்பின் சிறப்பு :*

• வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும்!

(நூல் : முஸ்லிம் : 2136)


*💟 நோன்பு வைக்க கூடாதா நாட்கள் :*

*💝 தொடர்ந்து நோன்பு நோற்க்க கூடாது :*

நபி(ஸல்) அவர்கள், மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.

(நூல் : புகாரி : 1922)

• ரமலான் மாதத்தை தவிர மற்ற நாட்களில் தொடர்ந்து நோன்பு நோற்க்க கூடாது! 

*💝 இரண்டு பெருநாட்களில் நோன்பு நோற்க்க கூடாது :*

• ரம்ஜான் (நோன்பு பெருநாள்) மற்றும் ஹஜ் பெருநாளில் நோன்பு நோற்பதை நபி அவர்கள் தடை செய்து உள்ளார்கள்!

(நூல் : புகாரி : 1990)

*💝 அய்யாமுத்  தஷ்ரீக்குடைய மூன்று நாட்கள் :*

•  அய்யாமுத்  தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்கள் (துல்ஹஜ் பிறை 11, 12, 13) உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும். அந்த நாட்களில் நோன்பு நோற்க்க கூடாது! 

(நூல்: அஹ்மத்)

*💝 வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க கூடாது :*

• நபி அவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க தடை செய்து உள்ளார்கள்!

(நூல் : புகாரி : 1985)

• யாரேனும் வெள்ளிக்கிழமை நோன்பு வைக்க வேண்டும் என்றால் அவர் வியாழன் வெள்ளி அல்லது வெள்ளி, சனிக்கிழமை நோன்பு வைக்க வேண்டும்!

• மாதம் மூன்று சுன்னத்தான நோன்புகளை வழமையாக வைக்க கூடியவர்களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை அவர்கள் நோன்பு வைக்கும் நாள் வந்தால் அவர்கள் நோன்பு வைக்கலாம்! 

*💝 சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க கூடாது :*

 • உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்!

(நூல் : திர்மிதி)

• மாதம் மூன்று சுன்னத்தான நோன்புகளை வழமையாக வைக்க கூடியவர்களுக்கு மட்டும் சனிக்கிழமை அவர்கள் நோன்பு வைக்கும் நாள் வந்தால் அவர்கள் நோன்பு வைக்கலாம்!

*💝 ஷாஅபான் மாதத்தின் இறுதி இரண்டு நாட்கள் நோன்பு நோற்க கூடாது :*

ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்குமுந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்)  ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்.

(நூல் : முஸ்லிம் : 1976)


*அல்லாஹ் போதுமானவன் 💞*

நோன்பு

👉நோன்பு
 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை
புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

📖அல்குர்ஆன் 2:184

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

📖அல்குர்ஆன் 2:185

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

ரமளான் மாதம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
நோன்பைக் கடமையாக்குவதற்கு ஏனைய மாதங்களை விடுத்து ரமளான் மாதத்தை இறைவன் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

மேற்கண்ட வசனத்தில் இந்தக் கேள்விக்கு இறைவன் விடையளிக்கிறான்.

மனித சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் திருக்குர்ஆன் இம்மாதத்தில் அருளப்பட்டதால் இம்மாதம் ஏனைய மாதங்களை விட உயர்ந்து நிற்கிறது. எனவே தான் இம்மாதம் தேர்வு செய்யப்பட்டது என்று இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

இதிலிருந்து திருக்குர்ஆனின் மகத்துவமும் நமக்குத் தெரிய வருகிறது.

நோன்பு நோற்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் திருக்குர்ஆனுடன் நமது தொடர்பை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாகப் புனித ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு அதிகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
 
👉நோன்பின் நோக்கம்

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.

பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.

பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?

நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.

சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.

நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.

யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.

ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
📘நூல்: புகாரி 1903, 6057

பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.

நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
📘நூல்: புகாரி 1893, 1903

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.

முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.

ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.

எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

👉நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
📘நூல்: முஸ்லிம் 1945

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
📘நூல்: புகாரி 1894, 1904

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
📘நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.

மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
📘நூல்: புகாரி 38, 1901, 2014

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.


நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்!

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்!
===================================

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். 

நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1945

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1894, 1904

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். 

தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள்.

மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 38, 1901, 2014

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! 

சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.