பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, September 30, 2019

மறை உறுப்புகளில்

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻...

*☄மலம் ஜலம் கழிப்பதின்*
                      *ஒழுங்குகள்

*☄ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறை உறுப்புக்களைப்பார்க்கக் கூடாது☄*

*حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ ‏"‏ احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مِمَّا مَلَكَتْ يَمِينُكَ ‏"‏ ‏.‏ فَقَالَ الرَّجُلُ يَكُونُ مَعَ الرَّجُلِ قَالَ ‏"‏ إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَاهَا أَحَدٌ فَافْعَلْ ‏"‏ ‏.‏ قُلْتُ وَالرَّجُلُ يَكُونُ خَالِيًا ‏.‏ قَالَ ‏"‏ فَاللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ ‏"‏* ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَجَدُّ بَهْزٍ اسْمُهُ مُعَاوِيَةُ بْنُ حَيْدَةَ الْقُشَيْرِيُّ وَقَدْ رَوَى الْجُرَيْرِيُّ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ وَهُوَ وَالِدُ بَهْزٍ

_*🍃எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் ❓ எவற்றை மறைக்காமல் இருக்கலாம் ❓ என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் உன் மனைவி உடன் அடிமை பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புக்களை பாதுகாத்து கொள் என்று விடையளித்தார்கள் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பை காத்து கொள்ள வேண்டுமா ❓ என்று கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் எவரும் பார்க்க முடியாதவாறு உம்மால் மறைத்துக் கொள்ள முடியுமானால் மறைத்துக்கொள் என்று கூறினார்கள்.*_

_*ஒரு மனிதர் தனிமையில் இருக்கும் போது ( மறைவுறுப்பை வெளிப்படுத்தலாமா ?) என்று கேட்டேன் . அதற்கு நபியவர்கள் அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகத் தகுதியானவர் என்று பதிலளித்தார்கள்.*_

*🎙அறிவிப்பவர் :*
           *மு ஆவியா பின் ஹைதா ( ரழி )*

      *📚 நூல் : திர்மிதீ ( 2693 ) 📚*

*حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلاَ الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلاَ يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلاَ تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ ‏"‏* ‏.‏

_*🍃ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறும உறுப்பை பார்க்க வேண்டாம் .ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் . ஒரு பெண் மற்றொரு ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் :*
               *அபூ சயீத் அல் குத்ரீ ( ரழி )*

     *📚 நூல் : முஸ்லிம் ( 565 ) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
                            ⤵⤵⤵
                           ✍🏼..

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மலம் ஜலம் கழிப்பதின் ஒழுங்குகள்

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻...

*☄மலம் ஜலம் கழிப்பதின்*
                      ஒழுங்குகள் .

*☄திறந்த வெளிகளில் கிப்லாவை முன்னோக்கவோ, பின்னோக்கவோ கூடாது.☄*

*عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَتَى أَحَدُكُمُ الغَائِطَ، فَلاَ يَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا»* صحيح البخاري 

_*🍃அபூ அய்யூபில் அன்ஸாரி(றழி) அவர்கள்  அறிவித்தார்கள்: உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்’ என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். *_

*📚 (புஹாரி: 144, முஸ்லிம்) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄கட்டிடங்களுக்கு உள்ளாக*
          *இருப்பின் அது தடையல்ல.*

*عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ فَلاَ تَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ بَيْتَ المَقْدِسِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: لَقَدْ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَى لَبِنَتَيْنِ، مُسْتَقْبِلًا بَيْتَ المَقْدِسِ لِحَاجَتِهِ».* صحيح البخاري
 
_*🍃அப்துல்லாஹ் இப்னு உமர்  ரழி அவர்கள் கூறினார்கள்:  நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்”*_

*📚 (புஹாரி: 145, முஸ்லிம்) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄பாதை ஓரங்களில் மக்கள் நிழல் பெரும் இடங்களில் மல சலம் கழிக்கக்கூடாது.☄*

*عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اتَّقُوا اللَّعَّانَيْنِ» قَالُوا: وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ، أَوْ فِي ظِلِّهِمْ»*

_*🍃அபூஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே❓ என்று கேட்டார்கள்.அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.*_

    *📚 (முஸ்லிம்: 641) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜
                            ⤵⤵⤵
                           ✍🏼...

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இஜ்மாஃ, கியாஸ் என்றால் என்ன

*🏵🏵மீள் பதிவு🏵🏵*

*🕋🕋🕋இஜ்மாஃ, கியாஸ் என்றால் என்ன❓🕋🕋🕋*

*✍✍✍இஜ்மா கியாஸ் என்றால் என்னவென்று நோக்குவோம்.*
*பொதுவாக இஸ்லாமிய வரலாற்றை முன்னோக்கிப் பார்த்தால்; குர்ஆன், ஹதீஸ் அடிப்படை என்று ஏற்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.* *ஆனால் இஜ்மா கியாஸ் விடையத்தில் சிலர் அதனை மறுத்துள்ளனர், சிலர் அதனை அடிப்படை மூலாதாரம் என்றும்,* *சிலர் துணை மூலாதாரம் என்றும் சிலர் அது குர்ஆன் ஹதீஸைப்* *பலப்படுத்தக்கூடியது என்றும் கூறுகின்றனர்.*
*அவ்விரண்டையும் தெளிவாக நோக்குவோம்✍✍✍*

இஜ்மாஃ, கியாஸ் என்ற வார்த்தைப் பிரயோகம் இமாம் மாலிக் அவர்களது காலம் தொட்டு (முதலாம் நுற்றாண்டு) குர்ஆன் சுன்னாவை பாதுகாத்த   இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் பாவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை மறுப்பதைவிட, சரியான புரிதலே அவசியமாகும்.

*இஜ்மாஃ :-*

அந்த சொல்லுக்கான அர்த்தம் ஒன்றுபடுதல், எகோபித்திருத்தல் என்று கூறலாம்.
பிக்ஹு சட்டக் கலையில் அதனை பின்வருமாறு வரைவிலக்கனப்படுத்துவர்.

اتفاق مجتهدي هذه الأمة على أمر ديني يعد وفاة الرسول في عصر من العصور

நபிகளாருடைய மரணத்தின் பின்னர், எதோ ஒரு காலத்தில் இஸ்லாமிய உம்மத்தில் இருக்கும் ஆய்வாளர்கள், ஒரு மார்க்க விடயத்தில் ஒன்று படுத்தல்.
வரைவிலக்கணத்தின் உள்ளடக்கம்;

*1- ஆய்வாளர்கள்  (சாதாரன மக்கள் ஒன்று படுவதல்ல)*

*2- மார்க்க விடயம்  (உலக விடயங்கள் அல்ல)*

*3- நபிகளாரின் மரணத்தின் பின்  (நபிகளார் உயிரோடிருக்கும் பொது அது நிகழ முடியாது)*

*4- ஒன்றுபட்ட கருத்து. (கருத்து முரண்பாடு இருக்கக் கூடாது)*

*உதாரணம்:-*

ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுதல்.
அறிஞர்கள் தொழுகைக்கு ஆதாரம் காட்டும் போது, குர்ஆன், ஹதீஸ், இஜ்மா என்பார்கள்.
இப்போது தொழுகை என்பது நபிகளார் காலத்தில் இருந்த ஒன்று, அதில் எப்படி இஜ்மா சாத்தியமானது. வரைவிலக்கணத்தின்  ( நபிகளாரின் மரணத்தின் பின் ) என்ற பகுதிக்கு முரண் படுகிறது.
ரமலான் மாதத்தில் நோன்பு கடமை என்பதற்கு ஆதாரம் கூறும் அறிஞர்கள்; *குர்ஆன், ஹதீஸ் இஜ்மா என்பார்கள்* . நபிகளார் காலத்தில் இருந்த *நோன்பிற்கு எப்படி இஜ்மா ஆதாரமானது❓*
* இந்த இடத்தை நன்றாக சிந்தித்தால் *இஜ்மா என்றால் என்ன என்பதை அழகாக புரியலாம்.*
இஜ்மாவை புரியும் விதம்; குர்ஆனிலும், ஹதீஸிலும், வந்த தொழுகை கடமை என்ற மார்க்க விடயத்தில் நபிகளாரின் மரணத்தின் பின்னர் ஆய்வாளர்கள் ஒன்று பட்டுள்ளனர்.

குர்ஆனிலும், ஹதீஸிலும், வந்த நோன்பு  கடமை என்ற மார்க்க விடயத்தில் நபிகளாரின் மரணத்தின் பின்னர் ஆய்வாளர்கள் ஒன்று பட்டுள்ளனர்.
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைக்க வேண்டுமா❓ வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் நபிகளார் விரல் அசைத்ததைக் கண்டதாககூறும் ஹதீஸ் இப்னு குசைமாவில் பதிவாகியுள்ளது.
இது நபிகளார் செய்ததாக வந்திருந்தாலும் , நபிகளாரின் மரணத்தின் பின் ஆய்வாளர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள்.

எனவே விரல் அசைப்பதைக் கூறும் எந்த அறிஞராக இருந்தாலும் அதில் இஜ்மாவை பேசமாட்டார்கள். ஏனெனில் அதற்கு சஹீஹான ஹதீஸ் இருந்தாலும், நபிகளாரின் மரணத்தின் பின் இஸ்லாமிய அறிஞர்கள் கருத்துவேற்றுமை பட்டார்கள் என்பதே அர்த்தம்.

தொழுகைக்காக வுழு செய்வதற்கு ஆதாரம் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, ஆனால் வுளுவில் தலையை முழுக்க மஸ்ஹு செய்வதற்கு ஆதாரம்  குர்ஆன் , ஹதீஸ், ஆனால் இஜ்மா இல்லை என்போம். இரண்டு மார்க்க விடயங்களும் குர்ஆன், ஹாதீசில் வந்துள்ளன, ஒன்றில் கருத்துவேறுபாடு வரவில்லை *இஜ்மா என்றோம்,* ஒன்றில் கருத்துவேற்றுமை உள்ளது *இஜ்மா இல்லை என்றோம்* .
;- எனவே குர்ஆனிலும், ஹதீஸிலும் வந்த ஒன்றில் கருத்து வேற்றுமை இல்லையென்றால் *இஜ்மா என்போம்,* கருத்து வேற்றுமை இருக்கும் விடையங்களுக்கு *இஜ்மா இல்லை* என்போம்.
எனவே குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்து, இஸ்லாமிய உம்மத் கருத்து வேற்றுமை கொள்ளாத ஒரு விடயத்தை ஒருவர் மறுத்தால் அவருக்கு தீர்ப்பு காபிர் என்பதாகும். இதுவே *இஜ்மாவை மறுத்தவன்* காபிர் என்பதன் அர்த்தமும் கூட. அதேநேரம் விரலசைப்பதை மறுப்பவனை, தலை முழுவதையும் மஸ்ஹு செய்வதை மறுப்பவனை காபிர் என்பதில்லை.
*இதுவே இஜ்மா என்பது* குர்ஆன், ஹதீசை பலப்படுத்தும் ஆதாரம் என்பதன் அர்த்தம்.
அடுத்து இஜ்மாவுக்கு காட்டப்படும் ஆதாரங்கள்.

அதற்கு காட்டப்படும் ஆதரங்களை எடுத்து நோக்கினாலும் இஜ்மாவை தெளிவாக  புரிந்து கொள்ளலாம்.

  وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;

*……(அல்குர்ஆன்3:103)*
  

وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.

*(பார்க்க அல்குர்ஆன் 4:115)*

இந்த இரண்டு வசனங்களையும் நோக்கினால்; முதல் வசனம் குர்ஆனில் ஒன்று படுவதையும், இரண்டாவது வசனம், நபிகளாரோடு ஒன்றுபட்ட இஸ்லாமிய சமூகத்தை  சேர்ந்துபோக வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

عَنِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ»صحيح البخاري

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மைக்கு) ஆதரவாளர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இறுதியாக, அவர்கள் மேலோங்கியவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும்.

*(புகாரி:7311, முஸ்லிம்)*

இந்த ஹதீஸை நோக்கினாலும் சத்திய சமூகம் எதில் ஒன்றுபட்டிருக்கும் என்பது தெளிவாக விளங்குகிறது.

*கியாஸ்:*

கியாஸ் என்ற சொல்லுக்கான அர்த்தம்;ஒப்பிடுதல், நேர்பிடித்த்ல்,
பிக்ஹு சட்டக்கலையில் கியாஸ் என்பதனை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தலாம்;

إلحاق أمر غير منصوص على حكمه الشرعي بأمر منصوص على حكمه لاشتراكهما في علة الحكم

நேரடியாக குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் வராத ஒரு விடயத்தை, அதில் இருக்கும் காரண காரியங்களோடு ஒத்துப் போகும், ஆதரத்திட்குற்பட்ட ஒரு விடயத்தோடு நேர்பிடித்து, இதற்குள்ள சட்டத்தை அதற்கு கொடுத்தல்.

*விளக்கம்;*

சமகாலத்தில் புதியதோர் பிரச்சினை ஏற்படுகிறது, அதற்கு குர்ஆன் ஹதீஸில் நேரடி ஆதாரம் இல்லை, ஆனால் அதுபோன்ற ஒரு பிரச்சினை வேறு வடிவத்தில் நபிகளார் காலத்தில் இருந்துள்ளது.

இப்பொது காரண காரியங்களில் இரண்டு பிரச்சினையும் நேர்படுவதனால் (கியாஸ்) நபிகளார் காலத்தில் இருந்ததன் மார்க்க சட்டத்தை சமகால பிரச்சினைக்கு வழங்குவது.

*உதாரணமாக;*

அரிசிக்கு  சகாத் – இன்று நாம் பாவிக்கும் அரிசி வகை தானியம்  நபிகளார் பாவித்ததில்லை. ஆனால் நபிகளார் காலத்தில் கோதுமை என்ற தானியம் பாவனையில் இருந்தது. அதற்கு நபிகளார் சகாத் கொடுத்தார்கள் என்பதற்கு அதிக சான்றுகள் இருக்கின்றன.

கோதுமை என்பது எப்படிசேமிக்க முடியுமான தானியமாக இருக்கிறதோ, அதேபோன்று அரிசியும் சேமிக்க முடிந்த தானியம் என்ற அடிப்படையில் கோதுமைக்குள்ள சகாத் கடமையை அரிசிக்கும் கொடுப்பது போன்று.

*இன்னொரு உதாரணம்* ;

பணத்திற்கு சகாத்- இன்று நாம் பாவிக்கும்நோட்டு, காசு நபிகளார் காலத்தில் இருக்கவில்லை. மாறாக தங்க, வெள்ளி  நாணயங்களே பாவிக்கப்பட்டன். அதற்கு நபிகளார் சகாத்தும் கொடுத்தார்கள். எனவே அன்றைக்கு தங்க வெள்ளி நாணயம் என்ன நோக்கத்தில் பாவிக்கப்பட்டதோ, அந்த (பெறுமதி) என்ற காரணி இன்றைக்குள்ள நோட்டுக்கு இருக்கிறது என்றால், தங்க வெள்ளியின் இடத்தில் வைத்து இன்றைய நாணயத்திற்கும் சகாத் கடமையாவது போன்று.
ஆதாரம் என்பது நபிகளார் கொடுத்தார்கள் என்பது தான். இன்றைக்குள்ள விடையத்தை நேர்பிடித்து நோக்கினோம் பாருங்கள், *அதுதான் கியாஸ்* என்பது.

சுருக்கம்  ஒட்டுமொத்தமாக கியாசை மறுத்தால் பல இஸ்லாமிய சட்டங்களை மறுக்கவேண்டி ஏற்படும். அதனால் கியாஸ் இருக்கிறது, அதனை புரியவேண்டிய விதத்தில் புரிந்தால் பிரச்சினையை சுலபமாக முடிக்கலாம்.

கியாஸ் பிடிப்பதற்கான ஆதாரம்; இதையும் ஆழமாக சிந்தித்தால் கியாஸ் என்பது என்னவென்பது தெளிவாகும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: ” نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى “صحيح البخاري  *1953*

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது” என்றார்கள்.
முஸ்லிமின் அறிவிப்பில்; உன் தாயாருக்கு கடன் இருந்தால் நிறைவேற்றுவீரா? என்று கேட்கவே, ஆம், என்றார். அப்போது நபியவர்கள்;அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது. என்றார்கள். என்று வந்துள்ளது.
இங்கே நபியவர்கள் மனிதனது கடனை நிறைவேற்றுவது கடமை என்பதை உணர்த்தி, அல்லாஹ்வின் மீதுள்ள கடனை நிறைவேற்ற சொல்கிறார்கள். இதுவே கியாசுக்கு காட்டப்படும் பலமான ஆதாரமாகும்.

இவற்றை நன்றாக சிந்தித்து பார்க்கும் போது கியாசை தெளிவாக விளங்கலாம், ஒரு சட்டத்திகு எந்தவகையிலும் ஒத்துப் போகாத ஒன்றை எவ்வகையிலும் கியாஸ் என்று கூறி சமாளிக்க முடியாது.

எனவே யாராவது ஒரு விடையத்திற்கு கியாஸ்தான் ஆதாரம் என்றால் அவரிடம் அதற்கு நேர்படும் நபிகளார் காலத்து ஆதாரத்தைக் கேட்பது கடமை. அதனால் தான் கியாஸ் வருவதாக இருந்தால் அதற்கு குறிப்பாக நான்கு நிபந்தனைகளை பார்க்க முடியும்.

*1- நபிகளார் காலத்து நிகழ்வு.*

*2- அதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம்.*

*3-நபிகளார் காலத்து நிகழ்வு போன்ற நவீன புதிய விடயம்.*

*4- நபிகளார் காலத்து விடயத்திற்கும், புதிய விடயத்தித்க்ய்ம் பொதுக்காரணி இருக்கவேண்டும்.*

இவற்றில் ஒன்றை இழந்தாலும் அந்த கியாஸ் தவறானதாகும்.
எனவே இந்த தெளிவை சரியாக பெற்றுக் கொண்டு, இஸ்லாத்தை தூய்மையான வடிவில் புரிந்து, தூய்மையான முறையில் பின்பற்றி நடக்க முயல்வோம்.

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

இஸ்லாத்தை அறிந்து - 31

*🍓🍓🍓மீள் பதிவு🍓🍓🍓*

*🌹🌹🌹🌹*

*🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋*
                                                                        

*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர்  பாகம் 31  👈👈👈*

     *👉தலைப்பு👇*

*👺👺பேராசையிலிருந்து விடுபடுவோம்.!👺👺*

*🔰🔰🔰பேராசை என்றால் என்ன❓🔰🔰🔰*

*✍✍✍ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.*
*அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடும். ஒரு விஷயத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அதை வைத்து விரும்புவது ஆசையாகும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. ஆனால் முக்கியமான விஷயத்தைப் புறக்கணித்து விட்டு முக்கியம் குறைந்தவை மீது வைக்கும் ஆசையே பேராசை எனப்படும்.✍✍✍*

📕📕📕பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைவிட முக்கியமானவையும் உள்ளன. பொருளாதாரத்துக்காக அந்த முக்கியமானவைகளை ஒருவன் புறக்கணித்து விட்டு பொருளாதாரத்தின் பின்னால் சென்றால் அவனுக்குப் பொருளாதாரத்தில் பேராசை உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். தொழுகையை விட்டுவிட்டு ஒரு காரியத்தில் ஈடுபடுவதால் ஒருவனுக்குப் பணம் கிடைக்கும் என்றால் தொழுகையை விட்டுவிட்டு அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான். காரணம் பணத்தை அடைவதற்காக அதைவிட முக்கியமானதை அவன் விட்டு விட்டான்📕📕📕.

*✍✍✍அது போல் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய கடமை மனிதனுக்கு உண்டு. அதில் மனிதனுக்கு ஆசையும் உண்டு. ஆனால் அதிகமான பணம் கிடைக்கிறது என்பதற்காக மனைவியை விட்டு பல வருடங்கள் பிரிந்து விட ஒருவன் முன்வந்தால் அதற்குக் காரணமும் பேராசைதான். மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பதை விட பணத்துக்கு இவன் முதலிடம் கொடுத்ததால் இது பேராசையாகி விடுகிறது.✍✍✍*

📘📘📘சமூகத்தைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்படும்போது அதில் பங்கு பெறாவிட்டால் சமுதாயத்தைப் பாதிக்கும் என்ற நிலையில் பணம் திரட்டச் சென்றால் அதுவும் பேராசைதான். குடும்பத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்க நம்மிடம் வசதி இருக்கும்போது அரசாங்க மருத்துவ மனையில் சேர்த்தால் அதுகூட பேராசைதான். சுருக்கமாகச் சொன்னால் பணத்தை விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயங்களுடன் பணம் மோதும்போது நாம் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதே பேராசையாகும்.📘📘📘

*✍✍✍ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை அடைவதற்காக அவன் ஆசைப்பட்டால் தொகை பெரிதாக இருந்தாலும் அது பேராசையாகாது. இது நியாயமான ஆசை தான். கூனிக்குறுகி கும்பிடு போட்டால் பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதற்கு ஆசைப்படுவது பேராசையாகிவிடும். ஏனெனில் மானம் மரியாதையை விட பத்து ரூபாய் இவனுக்குப் பெரிதாக தெரிகின்றது.✍✍✍*

*🔴⚫🔴பேராசையிலிருந்து விடுபடுவோம்.🔵⚫🔵!*

📙📙📙நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்தைத் திரட்டினாலும் அது உண்மையில் நம்முடையது அல்ல. பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர் அனைத்தையும் சாப்பிட முடியாது. அனைத்தையும் அனுபவித்து விட முடியாது. ஒரு அந்தஸ்து இதனால் கிடைக்குமே தவிர அனைத்தையும் யாராலும் அனுபவிக்க முடியாது. ஒரு அளவுக்கு மேல் பணத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. இதை உணர்ந்து கொண்டால் பொருளாதாரத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது எளிதாகி விடும்📙📙📙.

*7609* – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ مُطَرِّفٍ عَنْ أَبِيهِ قَالَ أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقْرَأُ (أَلْهَاكُمُ التَّكَاثُرُ) قَالَ يَقُولُ ابْنُ آدَمَ مَالِى مَالِى – قَالَ – وَهَلْ لَكَ يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلاَّ مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ.

*✍✍✍மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம் என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து (மறுமைக்காக) சேமித்ததையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது? என்று கேட்டார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி)*

*நூல் : முஸ்லிம் 7609*

📗📗📗இந்த உலகத்தில் நமக்கு எதுவும் சொந்தம் கிடையாது என்ற மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் பேராசைப் படமாட்டோம். என்னதான் பணத்தைத் திரட்டினாலும் மரணம் வந்து விட்டால் நாம் அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவோம் என்று புரிந்து கொள்வதும் பேரசையை ஒழிக்கும். பேராசைப்பட்டு செல்வத்தின் பின்னே நாம் அலைந்து கொண்டிருந்தால் எந்த நேரத்திலாவது போதும் என்று நாம் நினைப்போமா? ஒருக்காலும் நினைக்க மாட்டோம்.📗📗📗

*✍✍✍ஒரு கோடி கிடைக்கும் வரை அதுவே இலட்சியமாக இருக்கும். ஒரு கோடி கிடைத்து விட்டால் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட மாட்டோம். இரண்டு கோடிக்கு அலைய ஆரம்பித்து விடுவோம். பல லட்சம் கோடிகளில்கூட நாம் திருப்தி அடைய மாட்டோம். முடிவே இல்லாத இந்தப் போக்கு ஒரு வகை மனநோய் என்றுதான் கூற வேண்டும். அனைத்தையும் அனுபவிக்கவும் முடியாது. அதைப் பாதுகாக்கவும் முடியாது. எந்தக் கட்டத்திலும் திருப்தி அடையவும் முடியாது என்று தெரிந்து கொண்டே அதன் பின்னே அலைவது மனநோய்தான். இதனால்தான் மனைவி, மக்கள், இன்ன பிற கடமைகளைக்கூட மனநோயாளி மறப்பதைப் போல் சிலர் மறந்து பணத்திற்காக அலைய ஆரம்பித்து விடுகின்றனர்✍✍✍*
.

*6439* – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ، وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ

📒📒📒ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு ஓடை இருந்தால் தனக்கு இரண்டு தங்க ஓடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.📒📒📒

*அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)*

*நூல் : புகாரி 6439, 6436*

*✍✍✍செல்வம் அவசியம் என்ற போதும் அதைவிட முக்கியமான கொள்கைக்காக செல்வத்தைத் தூக்கியெறியவும் முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இப்படி கொள்கைக்காக செல்வத்தையும், வசதி வாய்ப்புகளையும் தூக்கி எறிந்த ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்களை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் முன்மாதிரி என்று அல்லாஹ் கூறுவதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.✍✍✍*

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏

📓📓📓என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.📓📓📓

*(திருக்குர்ஆன் 66:11)*

*✍✍✍கொடுங்கோல் ஆட்சி செய்த ஃபிர்அவ்ன் என்பவன் தன்னைக் கடவுள் என்று வாதிட்டபோது அவனது மனைவி ஆஸியா அவர்கள் அதை எதிர்த்தார்கள். மனிதன் கடவுளாக முடியாது; அகிலத்தைப் படைத்த மாபெரும் ஆற்றல் மிக்கவன்தான் கடவுள் என்று துணிந்து முழங்கினார்கள். பட்டத்து ராணி என்ற அடிப்படையில் இவ்வுலகில் அனுபவித்து வந்த பல இன்பங்களை இதனால் இழக்க நேரும் என்று தெரிந்து கொண்டே கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். செல்வத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல் கொள்கைக்காக செல்வத்தை தியாகம் செய்த இப்பெண்மணியை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் முன்மாதிரி என்று அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான்✍✍✍* .

*🌐🌐🌐இருப்பதைக் கொண்டு எவ்வாறு திருப்தி அடைவது❓🌎🌎🌎*

📔📔📔இருப்பதை வைத்து திருப்தி அடைவது எப்படி என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர். உலகத்தில் நம்மை விட மேலான நிலையில் சிலர் இருப்பது போல் நம்மை விடத் தாழ்ந்த நிலையிலும் பலர் உள்ளனர். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நமது நிலையை ஒப்பு நோக்கிப் பார்த்தால் இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனநிலை நமக்கு வந்து விடும்📔📔📔.

*7617* – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا وَقَالَ يَحْيَى أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِىُّ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِى الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ

*✍✍✍உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍.*

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*

*நூல் : முஸ்லிம் 7617*

*6490* – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ

📚📚📚செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📚📚📚

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*

*நூல் : புகாரி 6490*

*✍✍✍அனைத்து உயிரினங்களின் தேவைகளுக்கும் அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான் என்பதைப் புரிந்து கொள்பவர்களுக்கு போதுமென்ற மனநிலையை அடைவது எளிதானதுதான். நம் தேவைகளுக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான் என்றால் அவன் குறைவாக நமக்குத் தந்தாலும் அதில் நிச்சயம் நம் தேவையை நிறைவேற்றுவான். இப்படி நம்பும்போது போதுமென்ற மனம் வந்து விடும். போதுமென்ற மனம் வந்து விட்டால் அல்லாஹ்வின் பரக்கத் தேடிவரும்.✍✍✍*

🔰🔰🔰வறுமையை அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் நாம்தான் உங்களுக்கும், அவர்களுக்கும் உணவளிக்கிறோம்.🔰🔰🔰

*(திருக்குர்ஆன் 17:31)*

*✍✍✍பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.✍✍✍*

*(திருக்குர்ஆன் 11 :6)*

*2344* – حدثنا علي بن سعيد الكندي حدثنا ابن المبارك عن حيوة بن شريح عن بكر بن عمرو ن عن عبد الله بن هبيرة عن أبي تميم الجيشاني عن عمر بن الخطاب قال : قال رسول الله صلى الله عليه و سلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا

⛱⛱⛱ஒரு மூமின் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அல்லாஹ் அவனுக்கு ஒரு பறவைக்கு உணவளிப்பதைப் போல உணவளிப்பான். அது காலையில் ஒட்டிய வயிற்றுடன் செல்கிறது ஆனால் மாலையில் நிரம்பிய வயிறோடு தன் கூட்டுக்குத் திரும்புகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்⛱⛱⛱.

*அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி)*

*நூல் : திர்மிதி 2266*

*3240* – أخبرنا الحسن بن سفيان حدثنا شيبان بن أبي شيبة حدثنا أبو عوانة عن الأعمش عن عبد الرحمن بن ثروان عن هزيل بن شرحبيل : عن ابن عمر قال : جاء سائل إلى النبي صلى الله عليه و سلم فإذا تمرة عائرة فأعطاه إياها وقال النبي صلى الله عليه و سلم : ( خذها لو لم تأتها لأتتك ) – صحيح ابن حبان –  قال شعيب الأرنؤوط : إسناده قوي

*✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் யாசகம் கேட்டு வந்தார். அப்போது கீழே கிடந்த பேரீச்சம்பழங்களை அவருக்குக் கொடுத்துவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இதைப் பெற்றுக் கொள். இதைப் பெற்றுக் கொள்ள நீ இங்கே வராவிட்டால் அது உன்னைத் தேடி வந்திருக்கும் என்று கூறினார்கள்✍✍✍.*

*நூல் : இப்னு ஹிப்பான் 3240*

🌈🌈🌈எது நமக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் விதித்து விட்டானோ அது நமக்கு எப்படியும் கிடைத்து விடும். ஏனென்றால் அல்லாஹ் மனிதனை எப்போது படைத்தானோ அப்போதே அவனுக்குரிய செல்வத்தை நிர்ணயித்து எழுதி விட்டான். அவன் எதை எழுதினானோ அதுதான் கிடைக்கும். அதற்கு மேல் வேறொன்றும் கிடைத்து விடாது.
மரணம் ஒருவனைத் தேடுவதைப் போல அவனுக்கு நிர்ணயிக்கப்பட்ட செல்வமும் அவனைத் தேடுகிறது.🌈🌈🌈

حدثنا أحمد بن محمد بن موسى أخبرنا عبد الله بن المبارك أخبرنا ليث بن سعد وابن لهيعة عن قيس بن الحجاج قال ح و حدثنا عبد الله بن عبد الرحمن أخبرنا أبو الوليد حدثنا ليث بن سعد حدثني قيس بن الحجاج المعنى واحد عن حنش الصنعاني عن ابن عباس قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف قال هذا حديث حسن صحيح ترمذي *2440*

*✍✍✍சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள் : உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்; அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்! மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.✍✍✍*

*நூல் : திர்மிதி 2440*

🏵🏵🏵அல்லாஹ் நமக்குத் தர நினைத்ததைத் தவிர வேறு எதுவும் நமக்குக் கிடைக்காது என்பதையும், அவன் தர விரும்பாத எதுவும் நமக்குக் கிடைக்காது என்பதையும் ஒருவன் நம்பவில்லையானால் அவனிடம் இறைநம்பிக்கை இல்லை என்பதே பொருள். அல்லாஹ் நமக்குத் தர நினைத்தது எப்படியும் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று நாம் நம்பிக்கை வைத்தால் நாம் நினைத்துப் பார்க்காத வகையில் அது நம்மை வந்து அடைந்துவிடும்.🏵🏵🏵

*✍✍✍மர்யம் (அலை) அவர்களுக்கு இப்படி நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ் உணவளித்ததை சொல்லிக் காட்டுகிறான்.*
*அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டார். இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான் என்று (மர்யம்) கூறினார்.✍✍✍*

*(திருக்குர்ஆன் 3 :37.)*

🔴🔴🔴அல்லாஹ் நாடினால் இறைத்தூதர்களுக்கு வழங்காத பரக்கத்தை இறைத்தூதர் அல்லாதவர்களுக்கும் வழங்கி விடுவான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது🔴🔴🔴.

*✍✍✍மர்யம் (அலை) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஸக்கரியா நபி அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் உணவு கொண்டு வருதற்கு முன்பே பள்ளிவாசலில் உணவு இருப்பதைக் காண்கிறார்கள். இது எப்படி வந்தது என்று அவர்கள் கேட்டபோது இது அல்லாஹ்விடமிருந்து எனக்குக் கிடைத்தது என்று மர்யம் (அலை) பதில் அளித்தார்கள். இது மட்டுமல்ல; அல்லாஹ் நாடினால் கணக்கின்றி கொடுத்து விடுவான் எனவும் அவர்கள் கூறியதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். இது மர்யம் (அலை) அவர்களுக்கு மட்டும் உரியது அல்ல; அனைவருக்கும் உரியது என்பதை இதன் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்✍✍✍.*

🔵🔵🔵அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.🔵🔵🔵

*(திருக்குர்ஆன் 65:2,3)*

*✍✍✍மனிதர்கள் எண்ணிப்பார்க்க முடியாத வகையிலும் அல்லாஹ்விடமிருந்து செல்வம் வந்து சேரும் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.*
*எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கு அருகில் விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக✍✍✍.*

*(திருக்குர்ஆன்:14:37)*

⚫⚫⚫இப்ராஹீம் நபியவர்கள் பலைவனத்தில் தமது குடும்பத்தைக் குடியமர்த்தியபோது மேற்கண்டவாறு பிரார்த்தனை செய்தார்கள்.⚫⚫⚫

*✍✍✍எந்த இடத்தில் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லையோ அந்த இடத்தில் இப்ராஹீம் நபியவர்கள் தமது மனைவியையும், புதல்வரையும் குடியமர்த்த எப்படித் துணிந்தார்கள்? அல்லாஹ் நாடினால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையிலும் உணவளிப்பான்; வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தருவான் என்று இப்ராஹீம் நபி அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம்✍✍✍* .

📕📕📕அவர்களின் அசைக்க முடியாத இந்த நம்பிக்கைக்காக அல்லாஹ் தந்த பரிசுதான் ஜம்ஜம் நீரூற்று. மக்காவில் பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருக்கிறது. இப்போது மக்காவில் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அல்லாஹ்வை மட்டும் நம்பினால் இப்படிப்பட்ட அதிசயத்தை அவன் நிகழ்த்துவான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக ஜம்ஜம் நீரூற்று அமைந்துள்ளது.📕📕📕

*🕋🕋பேராசை கூடாது🕋🕋*

*6435* – حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ

*✍✍✍பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*

*நூல் : புகாரி 6435*

*2376* – حدثنا سويد بن نصر أخبرنا عبد الله بن المبارك عن زكريا بن أبي زائدة عن محمد بن عبد الرحمن بن سعد بن زارة عن ابن كعب بن مالك الأنصاري عن أبيه قال : قال رسول الله صلى الله عليه و سلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه

📘📘📘ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதை விட ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப்பற்றை நாசாமாக்கி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்📘📘📘
.

*அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி)*

*நூல் : திர்மிதி 2298*

6420 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لاَ يَزَالُ قَلْبُ الكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ: فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الأَمَلِ

*✍✍✍முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும்.*

*1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.*

*2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை*

*என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*

*நூல் : புகாரி 6420, 6421*

📙📙📙ஆகவே நம்முடைய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு  போதும் என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு பேராசையிலிருந்து விலகி மறுமையில் சுவனம் அடைக்கின்ற பாக்கியம் இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவானாக.!📙📙📙

*🔰🔰🔰வறுமையிலும் செம்மையாக வாழ🔰🔰🔰*

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 32*