பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 6, 2019

பெண்களுக்கான - 1

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹*

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்தும் 🧕🧕🧕*

            *பாகம் 1*

*👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

*👉👉👉இந்த கட்டுரையின் பொருளடக்கம்👇👇👇*

  *1. மாதவிடாய்ச் சட்டங்கள்*

*2. தடுக்கப்பட்ட காரியங்கள்*

*3. அனுமதிக்கப்பட்ட விஷயங்கள*

*4. பெண்கள் பெருநாள் திடலுக்கு வர வேண்டும்*

*5. மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடை*

*6. தொடர் உதிரப்போக்கு*

*7. குளிப்பு எப்போது கடமையாகும்❓*

*8. குளிக்கும் முறை*

*9. சடையை அவிழ்க்க வேண்டியதில்லை.*

*10. நிர்வாணமாக குளிக்கக்கூடாது❓.*

*11. குற்றாலம் மற்றும் குளத்தில் குளிக்கலாமா❓*

*12. மாதவிடாய் பெண்கள் குர்ஆனைத் தொடலாம். ஓதலாம்.*

*13. உளூ செய்ய வேண்டிய நேரங்கள்.*

*14. தொழுகைச் சட்டங்கள் பெண்கள்*

*15. பள்ளிவாசலுக்குச் செல்லலாமா❓*

*16. குழந்தை அழும்போது விரைவாக தொழலாம்.*

*17. குழந்தையை தூக்கிக்கொண்டு தொழலாம்.*

*18. ஜ‚ம்ஆத்* *தொழுகை பெண்களுக்குக் கடமையில்லை❓.*   

*19. பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா❓*

*20. கிரகணத்* *தொழுகையில் பெண்கள் கலந்துகொள்ளலாமா❓*

*21. ஹிஜாப்*
*அணியுதல்*

*22. வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட பகுதிகள்*

*23. முகத்தை மறைத்துக் கூடாது❓*

*24. முக்காடு இல்லாமல் தொழக்கூடாது❓*

*25. மஹ்ரமானவர்களுடன் இருக்கும் போது*
*மற்ற பெண்களோடு நடந்துகொள்ளும் முறை.*

*26. ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது❓*

*27. பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாம்* .

*28. ஆடை அலங்காரங்கள்*

*29. பட்டாடை அணியலாம்*

*30. காவிநிற ஆடையை அணியகூடாது❓*
.
*31. ஆண்களைப் போன்று நடக்கக்கூடாது.❓*

*32. காது மூக்குக் குத்தக்கூடாது❓.*

*33. பெண்களுக்கு கத்னா செய்வது கூடாது❓.*

*34. அணிகலன்கள் அணியலாம்.*

*35. நக பாலீஷ் பூசலாமா❓*

*36. நறுமணம் பூசலாமா❓*

*37. ஒட்டுமுடி வைக்கலாமா❓*

*38. மொட்டை அடிக்கலாமா❓*

*40. பச்சை. குத்தலாமா❓*

*41. விதவைப் பெண்கள் அலங்கரித்துக்கொள்ளலாமா❓*

*42. திருமணச் சட்டங்கள்*

*43. பெண்ணுடைய சம்மதம் தேவை*

*44. திருமணப் பொருத்தம்.*

*45. பிடித்தவரிடத்தில் நேரடியாக சம்மதம் கேட்கலாம்.*

*46. மஹர் வாங்குதல்.*

*47. மனைவியின் பொருள் மனைவிக்கே உரியதாகும்*

*48. கருகமணி மெட்டி திருமணத்திற்கு அவசியமா❓*

*49. மனைவியின் பொறுப்பு என்ன❓*

*50. அலங்கரித்துக்கொண்டு கணவன் முன்னால் வர வேண்டும்.*

*51. கணவன் அழைக்கும் போது மறுக்கக்கூடாது.*

*52. அந்தரங்கத்தை வெளிப்படுத்தக்கூடாது.*

*53. கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.*

*54. கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாகச் சொன்னால்...*

*55. கணவனின் உறவினர்களுக்கு பணிவிடை செய்தல்.*

*56. வெளியில் சென்றால் அனுமதி கேட்க வேண்டும்.*

*57. கணவனுக்குத் தெரியாமல் அவனது பொருளை எடுக்கலாமா❓*

*58. குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா❓*

*59. செயற்கை முறையில் கருத்தரித்தல்*

*60. விவாகரத்து இரண்டு சாட்சிகள்*

*61. தொலைபேசியில் விவாகரத்துச் செய்யலாமா❓*

*62. விவாகரத்து தொடர்பான குர்ஆன் வசனங்கள்.*

*63. பெண்களின் விவாகரத்து உரிமை*

*64. இத்தா.*

*65. இத்தாவின் போது அலங்கரித்தல் கூடாது.*

*66. இத்தாவின் போது வெளியில் செல்லலாமா❓*

*67. ஜீவனாம்சம்.*

*68. குழந்தை யாருடைய பொறுப்பில் வளரும்❓*

*69. பெண்களுக்கு சொத்துரிமை உண்டா❓*

*70. பெண்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லலாமா❓*

*71. தனியாக பயணம் செய்யலாமா❓*

*72. பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா❓*

*73. பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லலாமா❓*

*74 கோ எஜ‚கேஷன் கூடுமா❓*

*75. பெண்கள் வேலைக்குச் செல்லலாமா❓*

*76. பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா❓*

*முன்னுரை*

ஒரே ஆண் பெண்ணிலிருந்து தான் இந்த உலக மக்கள் அனைவரும் தோன்றினார்கள்.

இவர்களில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இறைவனுக்குப்
பிடித்தமான வாழ்வை வாழ்வதின் மூலமே இறைவனிடத்தில் நெருங்கமுடியும்.

ஆணாக பிறப்பது உயர்வு என்றும் பெண்ணாக பிறப்பது தாழ்வு என்றும் நினைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் முறையான வாழ்வை வாழாவிட்டால் அவன் இறைவனிடத்தில் மட்டமானவனாகிறான்.

கொடுங்கோலனுடைய மனைவியாக இருந்தாலும் இறைவனுக்கு உவப்பான காரியங்களை செய்தால் அவள் இறைவனிடத்தில் மதிப்புமிக்கவளாகிறாள்.

ஒரு காலத்தில் தாழ்வாக கருதப்பட்டப் பெண்களை கண்ணியப்படுத்துவதற்காக பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்றெல்லாம் கூறி பொதுவாக எல்லாப் பெண்களையும் சிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.

*ஆனால் இஸ்லாம் எல்லாப் பெண்களும் சிறப்புக்குரியவர்கள் என்றக் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை.*

மாறாக இஸ்லாம் காட்டிய வழியில் நடக்கும் நற்குணமுள்ள பெண்களே தங்கம் வெள்ளி வைரம் முத்து பவளம் வைடூரியம் போன்ற உலகில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தையும் விட மதிப்பிற்குரியவர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே

*.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)*
*நூல் : முஸ்லிம் (2911)*

ஒரு மனிதன் சேமிக்கின்ற சொத்துக்களில் சிறந்ததை உனக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு அது நல்ல பெண்மனியாகும் என்று கூறினார்கள்.

*அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)*
*நூல் : அபூதாவுத் (1417)*

*_மார்க்கமுள்ளப் பெண்னே ஆனுடைய வெற்றிக்குக் காரணமாக இருப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்._*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*_நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:_*

*1. அவளது செல்வத்திற்காக.*

*2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.*

*3. அவளது அழகிற்காக.*

*4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!*

*அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : புகாரி (5090)*

      ஒரு பெண் நல்ல பெண்ணாக திகழ வேண்டுமென்றால் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை அவள் கடைபிடிப்பதன் மூலமே அவ்வாறு திகழ முடியும். அந்த வழிமுறைகளை ஒவ்வொன்றாக விளக்கி வெற்றிக்கு வழிகாட்டுவதே இந்நூலின் நோக்கம்.

    இஸ்லாத்தில் பெரும்பாலான சட்டத்திட்டங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. என்றாலும் இரு சாராரின் உடற்கூறுகள் குணங்கள் பலவீனங்கள் பொறுப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தனித்தனியான சட்டங்களையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

    அவ்வாறு பெண்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய விஷயங்கள் ஆதாரத்துடன் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தவறு ஏதும் இருந்தால் நம் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் போது இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்வோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
அன்புடன்
ள் . அப்பாஸ் அலீ ம்.ண்.ள்ஸ்ரீ

*1. மாதவிடாச் சட்டங்கள்*

மாதவிடாய் என்பது அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்திய ஒரு தொல்லையான நிலையாகும். அந்நிலையில் சில விஷயங்களை இஸ்லாம் கடைபிடிக்கச் சொல்கிறது. அவற்றைக் காண்போம்.

    *மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நான்கு காரியங்களை செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளார்கள்*

*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 2 .*

No comments:

Post a Comment