பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, October 20, 2019

73 கூட்டங்களில் சொர்க்கம் செல்லும் ஒரு கூட்டம் யார்

*🎯🎯🎯மீள் பதிவு🎯🎯🎯* 

*📚📚📚73 கூட்டங்களில் சொர்க்கம் செல்லும் ஒரு கூட்டம் யார்❓❓❓ஓர் இஸ்லாமிய பார்வை🔰🔰🔰* 

 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 


 *✍✍✍நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்மொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇* 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*எனது உம்மத்தினர் 73 பிரிவினராகப் பிரிவார்கள்.* அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர ஏனைய அனைவரும் நரகம் செல்வர் என்று கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் (அந்த ஒரு கூட்டம்) யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் நானும் எனது ஸஹாபாக்களும் இருக்கின்ற இந்த கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள்.

 *அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி)நூல்: திர்மிதீ 2641* 

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டத்தினராக பிரிந்தார்கள் என்னுடைய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள் ஒரு கூட்டத்தைத் தவிர மற்ற கூட்டங்கள் சொர்க்கம் செல்ல இயலாது  *அந்த ஒரு கூட்டம் யார்* என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது? *நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்* தான் என்று பதிலளித்தார்கள். 

 *அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)* 
 *நூல் : முஸ்தத்ரக் அஸ்ஸஹிஹைன்: 444* 

இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட பிளவுகள், முரண்பாடுகள், மார்க்கம் துண்டாக்கப்படும். இவைகள் அனைத்திற்கும் மறுமையில் கேள்வி கணக்கு உள்ளது என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களில் கூறுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இவர்களைப் பட்டியல் போட்டு எச்சரித்தார்கள். நீங்கள் யூத கிறிஸ்தவர்கள் பிரிந்து சென்றதை விடவும் ஒரு படி மேல் சென்று *73கூட்டத்தினராக பிரிந்து செல்வீர்கள்.* பிரிந்து நிற்கும் எழுபத்தி மூன்று கூட்டங்களில் அனைத்துக் கூட்டமும் நரகத்திற்குச் செல்லும். *ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர* என்ற இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு இந்த சமுதாயத்தை பல வழிகளிலும் வழிநடத்தக் கூடிய அனைத்து அறிஞர்கள் இந்த நபிமொழியை மக்கள் மத்தியில் கூறி நாம் தான் அந்தக் கூட்டத்தினர் என்று ஒவ்வொரு கூட்டத்தாரும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். 

இவ்வாறு ஒவ்வெருவரும் பெருமைப் பட்டுக் கொள்வதற்குக் காரணம் இந்த ஹதீஸில் கூறப்பட்ட நானும் என்னுடைய தோழர்களும் இன்று எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு இருக்கக் கூடியவர்கள் என்ற செய்தியினை மக்கள் மத்தியில் மறைத்துக் கூறுவார்கள். 

இந்த நபி மொழியில் கூறப்பட்டுள்ளதை நன்கு கவனித்தால் *இன்று என்ற ஒரு வாசகம்  இடம் பெற்றுள்ளது. இதை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள்.இன்று என்ற வாசகத்தை யார் ஒருவர் கூறுகிறாரோ அவர் வாழும் காலத்தைத் தான் குறிக்கும்.* நான் கூறினால் நான் வாழ்கிற காலத்தைத்தான் குறிக்கும் நீங்கள் இன்று என்று கூறினால் நீங்கள் வாழும் காலத்தைக் குறிக்கும். இன்று,இப்போது, இந்தக் காலம் என்பதை யார் இந்த வார்த்தையைக் கூறினாலும் அவருடைய வாழ் நாளைத் தான் குறிக்கும். 

இன்று என்ற வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது அவர்கள் காலத்தில் வாழும் நபித் தோழர்களையும் இணைத்துக் கூறுவதனால் அவர்களுக்குப் பிறகு நபித் தோழர்கள் எதையேனும் ஒன்றைச் செய்தாலோ அல்லது நாம் அதை மார்க்கம் என்று எண்ணிக் கொண்டு செய்தாலும் அது தவறுதான். எனவே யார் அந்த ஒரு கூட்டத்தில் இருக்க ஆசைப்படுகிறாறோ அவர் நபி (ஸல்) அவர்கள் கூறுவது போல் நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினத்தில் எப்படி நடக்கிறோமோ அப்படி நடக்கக் கூடியவர்கள்தான். அந்த ஒரு கூட்டம் தான் வெற்றி பெற்ற கூட்டம் என்று மிகத் தெளிவாக இருக்கிறது.

 "நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டம் சுவனம் செல்லும் என்று கூறிய போது நபித் தோழர்களால் நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டக்கப்பட்டது? அந்த ஒரு கூட்டத்தினர் யார்? (எழுபத்தி இரண்டு கூட்டம் எங்களுக்கு தேவையில்லை) என்று *அந்த ஒரு கூட்டத்தை எங்களுக்கு கூறுங்கள் நாங்கள் அதில் இருப்போம் என்று அவர்கள் கூறியபோது நபியவர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அவ்வாறு இருக்கக் கூடியவர்கள்* தான் அந்த ஒரு கூட்டம் என்று பதிலளித்தார்கள்". 

இன்று இந்த நபி மொழியை மக்களுக்கு கூறும் அறிஞர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்று எவ்வாறு இருக்கின்றோமோ அவ்வாறு இருக்கக் கூடியவர்கள்தான் வெற்றிபெற்ற அந்த ஒரு கூட்டம் என்று வரும் கேள்வியை மறைத்து இருட்டடிப்புச் செய்து விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதையும் மார்க்கத்தில் மறைக்க வில்லை அவர்கள் நமக்கு போதித்தது தெளிவான மார்க்கம். இந்த மார்க்கத்தை ஆளாளுக்கு வளைக்கும் விதமாக விட்டுச் செல்லவில்லை அவர்கள் இந்த சமுதயாத்திற்கு எதையும் விளக்காமலும் மரணிக்க வில்லை இந்த ஹதீஸை கூறிய அல்லாஹ்வின் தூதர் இதன் மூலம் வெற்றி பெற்ற கூட்டத்தை விளக்காமல் சென்றிருந்தால் இதனால் சமுதாயத்துக் என்ன பயன் கிடைக்கும்? இதன் மூலம் இந்த சமுதாயத்திற்கு என்ன நன்மை? யாருக்கு இந்தப் போதனை பயனளிக்கும்? இதன் மூலம் யார் திருந்துவார்கள்? என்று சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக அவர்கள் மக்களுக்கு இது பற்றி விளக்கமால் சென்றிக்க மாட்டார்கள் என்று உறுதிபட  கூற முடியும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஆழமான பொருளை உடைய வார்த்தைகளை இரத்தினச் சுறுக்கமாக பேசக் கூடியவர்கள். அதனால் அவர்கள் மக்களுக்கு எதையும் தெளிவாக விளக்கும் ஆற்றலும் உடையவர்களாக இருந்தார்கள். 

உதாரணமாக ஒரு சபையில் இருக்கும் நூறு பேர்களைப் பார்த்து இதில் உள்ள இருபத்தி ஐந்து பேர்கள் நல்லவர்கள் எழுபத்தி ஐந்து பேர்கள் கெட்டவர்கள். என்று கூறினால் அதில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை எந்த இருபத்தி ஐந்து நல்லது எந்த எழுபத்தி ஐந்து கெட்டது என்பதை கூறினால் அதற்குத் தகுந்தாற் போல் நம்மை மாற்றிக் கொள்ளவோ திருத்திக் கொள்ளவோ முடியும். நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகு அந்த ஒரு கூட்டம் யார்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள் தான் என்று பதிலளித்தார்கள். மிகவும் அற்புதமான ஒரு பதிலைச் சொன்னார்கள். 

 *72 கூட்டத்தை விளங்குவதற்கு முடியாவிட்டாலும் ஒரு கூட்டத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.* இதில் அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தாரை கண்டு கொள்வதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த ஒரு கூட்டத்தாரில் நாம் இருக்கிறோமா? இல்லையா? என்பதை முதலில் பார்க்க வேண்டும்
நானும் என் தோழர்களும் என்று கூறி இருந்தாலும் இந்த செய்தியில் முரண்பாடுகள் தெளிவாகத் தென்பட்டிருக்கும். ஏனெனில் அவர்கள் நபித்தோழர்களுக்கிடையில்   நபி (ஸல்) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு சண்டைகள் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள்ளே பிளவுபட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலம் வரை அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் மரணித்திற்குப் பிறகு அவர்களுக்கு மத்தியில் குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட்டன.  நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் இருந்த தூய்மை அவர்களின் மரணத்திற்குப் பிறகு இருக்க வில்லை. மாற்றங்கள் ஏற்பட்டன. நபித் தோழர்கள் காலம் என்று அந்த செய்தியில் கூறப்படிருந்தால்  அவர்கள் காலத்தில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் வாளைத் தூக்கிக் கொண்டு ஆளாளுக்கு வெட்டிக் கொண்டு பிரச்சினைகள் ஏற்பட்டது என்கிற போது எப்படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று எண்ணத்தோன்றும். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இடம் தரவில்லை.
 
 இன்று என்ற ஒரு வாசகத்தை அவர்கள் பயன்படுத்தி நானும் என் தோழர்களும் *நான் உயிர் வாழும் காலத்தில் எப்படி தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்தோமோ அந்த வாழ்க்கையை வாழக் கூடியவர்கள் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.* நபித் தோழர்கள் என்னுடைய மறைவிற்குப் பிறகு மார்க்கம் என்று ஒன்றைச் செய்தாலும் அதை நாம் பின்பற்றிச் செய்தால் நமக்குப் பிரச்சினை ஏற்பட்டு விடும்.
யாரெல்லாம் அந்த ஒரு கூட்டத்தில் இருப்பதற்கு ஆசைப் படுகிறார்களோ அவர்கள் நபியவர்களும் அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித் தோழர்களும் அன்று எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்தார்களோ அந்த வாழ்க்கையை வாழக் கூடியவர்கள் தான் அந்த ஒரு கூட்டத்தினர் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் வாழும் போது நபித் தோழர்கள் நபியவர்களின்  அனுமதியோடு செய்தது நாம் இன்று செய்யும் வணக்க வழிபாடுகளில் இருந்ததா? அது அக்காலத்தில் இருந்தது என்றால் அதைக் கடைப்பிடித்தால் அந்த ஒரு கூட்டத்தில் சேருவோம். அக்காலத்தில் அந்த வணக்க வழிபாடுகள் இல்லையென்றால் *அது  72 கூட்டத்தில் சேர்ந்துவிடும்.* 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எவையெல்லாம் வணக்க வழிபாடுகளாக காணப்படவில்லையோ அதையெல்லாம் செய்யக் கூடியவர்கள் அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை எந்த விதமான ஆராய்ச்சிகளும் இன்றி விளங்கிக் கொள்ள முடியும்.
மக்களுக்கு கூற வேண்டிய செய்தியை உரிய நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள் என்பதற்கு அவர்கள் அரபா பெருவெளியில் இறுதிப் பேருரை ஆற்றியது சான்றாகும்.

 *நபியவர்கள் மக்களுக்கு தெளிவு படுத்தாமல் சென்று விட்டார்கள் என்று யாராவது சொல்வார்களானால்  நிச்சயமாக அதில் ஏதாவது ஒன்றை இருட்டடிப்பு செய்திருப்பார்கள்* என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
நபி (ஸல்) அவர்கள் விளக்காமல் சென்றுள்ளார்கள் என்பதற்குரிய சான்றுகளை அவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை வைப்போரிடம் மக்கள் மத்தியில் அதைத்  தெளிவுபடுத்துங்கள் என்று  அழைப்புவிடுத்தால் புறமுதுகு காட்டி ஒடுவதையும் நான் இன்று பார்த்து வருகிறோம்.

*தர்ஹா என்ற ஒரு வழிபாடு* இன்று பல நாடுகளில் இருக்கின்றன. இது நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது *இந்த வழிபாடு இருந்துள்ளதா?* அதற்கான ஏதாவது சான்றுகள் உள்ளதா என்று தேடிப்பார்த்தால் அப்படியான எந்த ஒரு சான்றையும் பார்க்க முடியவில்லை அப்படியென்றால் அவர்கள்  *72 கூட்டத்தில் சேர்வார்கள்.* 
நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் *கொடி மரம் இருந்ததா?* இல்லையென்றால் அதுவும் *72 கூட்டத்தில் சேரும்.* 
நேர்வழி எது என்று கண்டு பிடிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய தெளிவான வார்த்தையின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். நானும் அதை செய்திருக்க வேண்டும் என்னுடைய தோழர்களும் அதை செய்திருக்க வேண்டும் அதுவும் நான் வாழும் காலத்தில் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் தான் *அந்த  சுவனத்திற்குச் செல்லும் கூட்டத்தில் சேரும்.* 

இன்று முஸ்லீம்கள் மத்தியில் காணப்படும் *தரீக்கா, மத்ஹபுகள், பைஅத், மௌலீது கத்தம் பாத்திஹா, சமாதி வழிபாடு, தர்கா, பெரியார்கள் பெயரில் வணக்கம், தயாத்து, தட்டு, இஸ்மு, அஸ்மா*  என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்து விதமான செயல்களையும் செய்யக் கூடியவர்கள் அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தில் அடங்குவர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதை *ஆதரிக்கக்கூடிய ஆலிம்களிடம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததா? அல்லது அவர்களின் மறைவுக்குப் பிறகு தோன்றியதா? என்று கேட்டால் பிற்காலத்தில் தான் தோன்றிது என்று பதில் அளிப்பார்கள்.* 

மத்ஹபுகளோ, இமாம்களோ நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு தோன்றியவர்கள் தான்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத ஒன்றைச் செய்பவர்கள் அந்த ஒரு கூட்டத்தில் அடங்க மாட்டார்கள். அதனால் எவன் ஒருவன் தன்னுடைய மார்க்க - வணக்கவழிபாடுகளை அல்லாஹ் சொன்னால் கொண்டு வா  நபி (ஸல்) அவர்கள் சொன்னால் கொண்டு வா என்று யாரல்லாம் உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள்தான் அந்த ஒரு கூட்டம். இதன் மூலம் யார் அந்த ஒரு கூட்டத்தினர் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி விளங்க முடிகிறது.

ஒவ்வொருவரும் நாங்கள் தான் அந்த ஒரு கூட்டம் என்று சொல்லிக் கொள்வார்கள். அல்லாஹ்வும் இவர்கள் இவ்வாறு கூறுவதை திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.
ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்

.  *அல்குர்ஆன் (30:32)* 

அவர்கள் எந்தக் கொள்கையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு அது சரியென்று தென்படும். இது பற்றி நாம் இங்கு விளக்க வரவில்லை. நாம் இருப்பது சரியா தவறா என்பதைப் பார்க்க வேண்டியதில்லை.
நானும் என்னுடைய தோழர்களும் இன்றைக்கு எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்தான் அந்த ஒரு கூட்டம் என்பதற்கு என்ன விளக்கம்? இதை இக்கூட்டத்திற்கு வெளியே இருந்தோ உள்ளே இருந்தோ சிந்தித்தாலும் நம்மை எதிர்த்துக் கொண்டு சிந்தித்தாலும் இந்த வார்த்தைக்குரியவர்கள் யார்? என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.
                
*எந்தக் கட்டத்திலும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் அவர் சொன்னார், இவர் சொன்னார், இந்த அறிஞர் சொன்னார் என்று கூறாமல்  இதைச் சொன்னால் பிரச்சினை ஏற்பட்டு விடும் இதைச் சொன்னால் அடிக்க வருவார்கள், ஊர் நீக்கம் செய்வார்கள் என்று சொல்வார்கள். எதற்கும் வளைந்து கொடுக்கக் கூடாது என்று யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் உறுதியாக நின்று சத்தியத்தைக் கூறுபவர்கள். அவர்கள்தான் அந்த ஒரு கூட்டத்தில் அடங்குவர்.*

 நாம் இக்கொள்கையில் இருந்தால் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். இக்கொள்கையில் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததைச் செய்கிறோம். நன்றாகத் தெரிகிறது அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தில் சேர்ந்து விடுவோம். *இன்ஷா அல்லாஹ்*

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment