பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, October 22, 2019

பெண்களுக்கான - 3

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*


            *பாகம் 3* 


 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

 *குற்றாலத்தில் குளிக்கலாமா?*

 *குற்றாலம் மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கலாமா?* 

    அன்னிய ஆண்கள் தன் உடம்பை பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் பெண்கள் குளிப்பது கூடாது. 

    ஹிம்ஸ் அல்லது ஷாம் நாட்டைச் சார்ந்த பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் வருகை தந்திருந்தார்கள். குளியலறைகளுக்குச் சென்று (குளித்து வரும்) பெண்கள் நீங்கள் தான? தனது கணவனுடைய வீடு அல்லாத வேறு இடத்தில் ஆடையை அவிழ்க்கும் பெண் தனக்கும் தன் இறைவனுக்கும் மத்தியிலிருந்த திரையை கிழித்துவிடுகிறாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : அபுல் மலீஹ் (ரஹ்)* 
 *நூல் : திர்மிதி (2727)* 

    எனவே ஆணும் பெண்ணும் கலந்திருக்கும் இடத்தில் ஆடையை கிழற்றுவது கூடாது. 

    புர்காவுடன் குற்றாலத்தில் குளிக்கலாம் என்று சிலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். *இது தவறாகும். இஸ்லாமிய ஒழுங்குமுறையை மீறுகின்ற ஒழுக்கம் கெட்ட இடங்களில் குற்றாலம் ஒன்றாகும்.* அங்கு வரும் ஆண்களில் பெரும்பாலானவர்களின் பார்வை குளித்துக்கொண்டிருக்கும் பெண்களை நோக்கியே உள்ளது.

 அறைகுறை ஆடையுடன் குளித்துக்கொண்டிருக்கும் பெண்களுடன் நாம் புர்காவை அணிந்து குளித்தாலும் நம்மையும் அண்ணிய ஆடவன் தவறான பார்வையில் பார்க்கத்தான் செய்வான். 

    இறைவனின் வசனங்கள் கேலிகூத்தாக்கப்படும் இடங்களுக்கு நாம் செல்லக்கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே ஆணும் பெண்ணும் கலந்து குளிக்கும் ஒழுக்கம் கெட்ட இடங்களை பெண்கள் மாத்திரம் இல்லாமல் ஆண்களும் புறக்கணித்தாக வேண்டும். 

    அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான்.

 *அல்குர்ஆன் (4 : 140)* 

ஆண்கள் வராத நீர்நிலையாக இருந்தால் அல்லது ஆண்களின் பார்வை படாதவாறு மறைப்புகள் உள்ள அருவியாக இருந்தால் மாத்திரமே அவ்விடத்தில் குளித்துக்கொள்வதில் தவறில்லை.  

 *குளிப்புக் கடமையானவர்கள்  குர்ஆனைத் தொடலாம். ஓதலாம்.* 
    தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். 
 *அல்குர்ஆன் (56 : 79)* 
    குளிப்புக் கடமையானவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக்கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை எடுத்து வைக்கின்றனர்.

 இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனை தூய்மையற்ற நிலையில் உள்ள மாதவிடாய் ஏற்பட்டவர்கள் தொடக்கூடாது. ஓதக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள். 
ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும்  திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

    இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள *தூய்மையானவர்கள் என்றால் யார்?* தொடமாட்டார்கள் என்றால் எதை? என்பதை முதலில் காண்போம். 

    நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட *திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை.* ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்துகொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். 

    திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. *தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொடமாட்டார்கள்* என்று கூற முடியும்.
    இந்த அடிப்படையில் *திருக்குர்ஆன் 56 : 79* வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம்.

 மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.
    இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

 *அல்குர்ஆன் (56 : 77.) (56 : 79)* 

வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும்.  இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள் என்று கூறுகிறான். 

    இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் *திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹ‚ல் மஹ்ஃபூலில்)* உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது. 

    இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன. 
அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது.

 *அல்குர்ஆன் (80 : 11-16)* 

    இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் *56 : 79* வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் *56 : 79* வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது. 

    தூய்மையானவர்கள் என்று *56 : 79* வசனத்தில் *கூறப்பட்டவர்கள் யார்?* என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. *அவர்கள் வானவர்கள் தாம் என்று இவ்வசனத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.* 
    குரைஷிக் குல இறைநிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டுவருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.  

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.

 *அல்குர்ஆன் (26 : 210 212)* 

இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று *திருக்குர்ஆன்  தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.* ஷைத்தான்களால் இதை தொடமுடியாது என்ற பொருளில் தான் *56 : 79* வது வசனமும் அமைந்துள்ளது. 

    குளிப்பு கடமையானவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறுயாரும் இக்குர்ஆனைத் தொடக்கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான்.

 ஆனால் மற்றவர்கள் இதைத் தொடமாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே உணர்த்துகிறது.

    மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது *56 : 79* வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும் அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் *பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது.* எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது. 
    தூய்மையில்லாதவர்கள் திருக்குர்ஆனைத் தொடக்கூடாது. ஓதக்கூடாது என்றக் கருத்தில் *சில ஹதீஸ்கள் வருகிறது. அவையனைத்தும் ஆதாரமற்றவையாகும்.* எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம். ஓதலாம். 
உளூ செய்ய வேண்டிய நேரங்கள்
    குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் முன்னால் உளூ செய்துகொள்ள வேண்டும். இது கட்டாயம் அல்ல. செய்வது சிறப்பு. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் உமர் பின் அல்கத்தாப் (ர-) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்'' உளூ செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள்'' என்றார்கள்.

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)* 
 *நூல் : புகாரி (290)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.
 
*அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் ; முஸ்லிம் (513)* 

மறு உடலுறவுக்கு முன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளட்டும்.
 
*அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (518)* 

 *இச்சை நீர் வெளிப்பட்டால்?* 

இச்சை ஏற்படும் போது விந்து வெளிப்படுவதற்கு முன்னால் சிறிய அளவில் வெளிவரும் நீருக்கு *இச்சை நீர் என்று சொல்லப்படுகிறது. இது வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகாது* . மாறாக உளூ முறிந்துவிடும். *மறும உறுப்பை கழுவிவிட்டு உளூ செய்துகொள்ள வேண்டும்.* 
இச்சைக் கசிவு நீர் ("மதீ') அதிகமாக வெüயேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபி (ஸல்) அவர்கüன் புதல்வி (ஃபாத்திமா என் மண பந்தத்தில்) இருந்ததால் இது பற்றிக் கேட்குமாறு (வேறு) ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்டபோது, "(அவ்வாறு இச்சைக் கசிவு நீர் வெளியேறினால்) உளூ செய்துகொள்வீராக! (குளிக்க வேண்டியதில்லை. ஆனால்,) *பிறவி உறுப்பைக் கழுவிக்கொள்வீராக''* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : அலீ (ரலி)* 
 *நூல் : புகாரி (269)* 


 *பெண்களுக்கான தொழுகைச் சட்டங்கள்* 

 *பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாமா?* 

    பெண்கள் பள்ளிவாசலிற்கு செல்லக்கூடாது என்று முஸ்லிம்களில் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடைசெய்கிறார்கள். ஆனால் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் சபைகளுக்கும் கடைத்தெருக்களுக்கும் செல்ல அனுமதிக்கிறார்கள். 

    நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தாராளமாக பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும். 
நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பü ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் (ஆணா பெண்ணா என்று) அறிந்துகொள்ள முடியாது.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (578)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்கüன்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமüக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.

 *அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)* 
 *நூல் : புகாரி (707)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப்பார்கள். (இதன் *அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில்,* "அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும் ஆண்கள் பெண்கüடம் வருவதற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்'' என்றார்கள்.

 *அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)* 
 *நூல் : புகாரி (837)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல்* ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும். 

 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : புகாரி (1203)* 

(ஒரு நாள்)
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ர-) அவர்கள் அவர்களை அழைத்து, "(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களு:ம உறங்கிவிட்டனர்'' என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையி-ருந்து) புறப்பட்டு வந்து, "பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை'' என்று கூறினார்கள். 
   
 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (862)* 

உமர் (ர-) அவர்களின் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகியத் தொழுகையைப் பள்ளியில்  ஜமாஅத்தில் தொழச் செல்வார். அவரிடம், "(உங்கள் கணவர்) உமர் (ரலிலி) அவர்கள் இ(வ்வாறு செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்üக்குச்) செல்கிறீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "(என்னைப் பள்ளிக்குச் செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?'' என்று கேட்க, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெண்கள் பள்ளி வாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ர-) அவர்களைத் தடுக்கிறது'' என்று பதில் வந்தது.

    *அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)* 
 *நூல் : புகாரி (900* )

காஃப் வல்குர்ஆன் மஜீத் என்று தொடங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (மனனமாக) நான் எடுத்துக் கொண்டேன். அதை அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிம்பரில் ஓதுவார்கள். 

 *அறிவிப்பவர் : அம்ரா (ரலி) அவர்களின் சகோதரி* 
 *நூல் : முஸ்லிம் (1442)* 

வீட்டில் தொழுவது சிறந்தது
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது அவர்களின் உரிமை. அவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. 
அதே நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொண்டு வீட்டிலேயே தொழுது கொள்வது சிறந்தது. *இதனால் பெண்கள் பள்ளிக்குச் செல்வது தவறு என்று எண்ணிவிடக்கூடாது* . பள்ளிக்கு வருவதினால் மார்க்க உபதேசங்களை கேட்கும் வாய்ப்பு பெண்களுக்குக் கிடைக்கிறது. சஹாபிய பெண்கள் நபியவர்களின் காலத்தில் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். மார்க்க அறிவை அதன் மூலம் அதிகப்படுத்திக்கொண்டார்கள். 
உங்களது பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை விட்டும் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)* 
 *நூல் : அபூதாவுத் (480)* 

பெண் வீட்டின் முற்றத்தில் தொழுவதை விட வீட்டினுள் தொழுவது சிறந்ததாகும். வீட்டினுள் அவள் தொழுவதை விட வீட்டின் உள் அறைக்குள் தொழுவது சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)* 
 *நூல் : அபூதாவுத் (483)* 

ஆண்கள் பள்ளிக்கு வந்து கூட்டுத்தொழுகையில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். பெண்கள் கூட்டுத்தொழுகையில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இதை மேலுள்ள ஹதீஸ்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். கலந்துகொண்டால் தவறில்லை.
குழந்தை அழும்போது விரைவாக தொழுது முடிக்கலாம்
தொழுதுகொண்டிருக்கும் போது குழந்தை அழுதால் விரைவாக தொழுகை முடித்துக்கொள்வதில் தவறில்லை. இதை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்கüன்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமüக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.

 *அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)* 
 *நூல் : புகாரி (707)* 

 *குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு தொழலாமா?* 

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் புதல்வி ஸைனபுக்கும் - அபுல் ஆஸ் பின் ரபீஆ பின் அப்தி ஷம்ஸ் அவர்களுக்கும் பிறந்த (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் (தமது தோüல்) சுமந்துகொண்டு தொழுதிருக்கிறார்கள். சிரவணக்கம் (சஜ்தா மற்றும் ருகூஉ) செய்யச் செல்லும்போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்; நிலைக்குச் செல்லும்போது (மீண்டும்) உமாமாவை (தமது தோüல்) தூக்கிக்கொள்வார்கள்.

 *அறிவிப்பவர் : அபூ கத்தாதா (ரலி)* 
 *நூல் : புகாரி (516)* 

 *ஜ‚ம்ஆத் தொழுவது பெண்களின் மீது கடமையில்லை.* 

ஜ‚ம்ஆத் தொழுவது பெண்களின் மீது கடமையில்லை. *விரும்பினால் தொழுதுகொள்ளலாம். விரும்பினால் விட்டுவிட்டு வழக்கம் போல் வீட்டிலே லுஹர் தொழுதுகொள்ளலாம்* . 
பெண்கள் அடிமைகள் நோயாளிகள் சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜ‚ம்ஆத் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)* 
 *நூல் : அபூதாவுத் (901)* 

நபித்தோழியர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஜ‚ம்ஆத் தொழுகையில் கலந்துகொண்டிருக்கிறார்கள். எனவே கலந்துகொள்ளவும் அனுமதியுள்ளது. 
 *நான் வெள்ளிக்கிழமை அன்று "காஃப் வல்குர்ஆனில் மஜீத்'* எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.

 *அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலிலி)* *அவர்களின் சகோதரி நூல் : முஸ்லிம் (1580)* 


 *பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?* 

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்வதிலும் பெண்கள் மற்ற பெண்களுக்கு இமாமத் செய்வதிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. 
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யக்கூடாது என்று ஏராளமான அறிஞர்கள் கூறுகிறார்கள். இவர்களின் கூற்றுத் தான் சரியானது. ஏனென்றால் மார்க்கத்தில் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் *அதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இருக்க வேண்டும்.* குறிப்பாக வணக்கவழிபாடுகள் தொடர்பாக ஒரு சட்டத்தைக் கூறும் போது *மறைமுகமாக இல்லாமல் தெளிவான அடிப்படையில் ஆதாரம் இருக்க வேண்டும்.* 
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா என்ற் பிரச்சனை வணக்கம் தொடர்பானது என்பதால் அதற்கு தெளிவான அடிப்படையில் ஆதாரம் தேவை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்ததாக *எந்த ஒரு ஹதீஸையும் இல்லை.* 
இமாமத் செய்கின்ற விஷயத்தில் ஆண்களுக்குரிய சட்டத்தையே பெண்களுக்கும் கூற இயலாது. ஏனென்றால் தொழுகையில் நிற்கும் போது பெண் இறுதியில் தான் நிற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படி இருக்கும் போது *ஆண்களை முந்திக்கொண்டு ஒரு பெண் எப்படி முன்னால் வந்து இமாமத் செய்ய முடியும்,?* 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 
(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். *பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும்.* அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.

 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (749)* 

தொழுகையாளின் கவனத்தை திருப்பும் ரஎந்த ஒரு பொருளையும் பார்வைபடும் விதத்தில் வைக்கக்கூடாது என்று தடை உள்ளது. கண்டிப்பாக பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்க்கு பொருளாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. 
தொழுக்கூடியவரின் கவனத்தை திருப்பும் எந்தப் பொருளும் வீட்டில் இருப்பது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “

 *அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)* 
 *நூல் : அபூதாவுத் (1735)* 

பெண்களின் குரல் ஆண்களின் கவனத்தை திருப்பிவிடும் என்பதால் நபி (ஸல்) அவர்கள் பெண்கள் தொழுகையில் சப்தமிடுவதற்கு அனுமதி தரவில்லை. மாறாக இமாம் செய்த தவறைச் சுட்டிக்காட்டி அவர்கள் கைதட்ட வேண்டும் என்று கூறினார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 *தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்* 
 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : புகாரி (1203)* 

எனவே ஆண்களுக்கு *பெண்கள் இமாமத் செய்யவது கூடாது* என்பதே சரியானதாகும். 

 *பெண்கள் கிரகணத் தொழுகையில் கலந்துகொள்ளலாமா?*

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 4*

No comments:

Post a Comment