பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 11, 2019

ஆதம் நபி மன்னிப்புக் கேட்டது எப்படி❓

*🏓🌹🌹மீள் பதிவு🌹🏓🏓* 

*📚📚📚ஆதம் நபி மன்னிப்புக் கேட்டது எப்படி❓📚📚📚* 

 *👉👉👉📚📚📚📚📚அல்குர்ஆன்📚 கூறும் தெளிவான ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇* 

✍✍✍இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று *2:37  வசனத்தில்* கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் *7:23 வசனத்தில்* கூறப்பட்டுள்ளது.✍✍✍

 *✍✍✍எங்கள் இறைவா! எங்களுக்கே நாங்கள் அநீதியிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து அருள் புரியாவிட்டால் நாங்கள் நட்டமடைந்தோராவோம் என்பது தான் அந்த வார்த்தைகள் என்று 7:23 வசனம் தெளிவுபடுத்துகிறது.✍✍✍* 


✍✍✍இதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; *அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும்போது இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23* வசனத்திலிருந்து அறியலாம்.✍✍✍

✍✍✍தவறு செய்த ஆதம் (அலை) *முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக ஒரு கட்டுக் கதை* யைச் சிலர் கூறி வருகின்றனர். அந்தக் கட்டுக்கதை இது தான்:✍✍✍

✍✍✍ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் *சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் "லாயிலாஹ இல்லல்லாஹூ'' என்பதுடன் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'' என்றும் எழுதப்பட்டிருந்ததாம்.* "இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே *அவர் யார்?'' என்று ஆதம் (அலை) கேட்டார்களாம். அதற்கு இறைவன் "அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர்* . அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டபோது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம். " *இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக* '' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.✍✍✍

 *✍✍✍இச்செய்தி 📚📚திர்மிதீ, 📚ஹாகிம்📚 மற்றும் சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.✍✍✍* 

✍✍✍ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் *பாவமன்னிப்புக் கேட்டர்கள் என்று 📚📚📚திருக்குர்ஆன்📚 📚(7:23) தெளிவாகக் கூறுகிறது.* அதற்கு முரணாகவும் இச்செய்தி அமைந்துள்ளது. *இட்டுக்கட்டப்பட்ட செய்தி* என்பதற்கு இது மற்றொரு காரணம்.✍✍✍

 *👉👉👉எனவே இந்தக் கதையை நம்புவது 📚📚திருக்குர்📚ஆனுக்கு எதிரானதாகும்.👈👈👈* 

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன் 

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment