பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, December 27, 2019

ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?*

*ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா?*

கேள்வி : 

*"நம்பிக்கை கொண்டோரே!வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."*
அல் குரான் (62:9) 

மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது, ஜும்மா தொழுகைக்காக அழைக்கப் பட்டால் வியாபாரத்தை விட்டுசெல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதைதடுத்துள்ளான். 

நான் வோயாபாரம் செய்கிறேன். வெள்ளிக் கிழமைகளில் சீக்கிரமேபள்ளிக்கு செல்பவன் நான். ஆனால் எனது கடையை அடைப்பதுஇல்லை. நான் வியாபாரத்தை விட்டு விட்டாலும் எனது மாற்று மததொழிலாளி(staff) கடையில் தான் இருப்பார். அப்போதுவியாபாரமும் நடக்கும்
 (வியாபாரம் செய்வது எனது நிய்யத் இல்லைஎன்றாலும் கடை திறந்த இருப்பதால் வரும் வாடிக்கையாளர்களைவிரட்ட முடியாது). அவர் தொலைவில் இருந்து வருவதால் வீட்டுக்குபோகாமல் கடையிலேயே தான் காலை முதல் இரவு வரை இருப்பார்.

இந்த சூழ்நிலையில் நான் வியாபாரம் செய்யலாமா? என்ன தான்அவர் மாற்று மதத்துகாரராக இருந்தாலும் வியாபாரம் நடப்பதுஎன்னுடையது. அதில் கிடைக்கும் லாபம் என்னை வந்து சேரும்.இப்படி நான் கடையை திறந்து வைத்திருப்பது கூடுமா? கூடாதுஎன்றால் கடையை அடைத்து விட்டு அவரை வேறு இடத்தில அந்தஒரு மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்யலாம்,இன்ஷா அல்லாஹ். கண்டிப்பாக விளக்கம் தேவை.

*பதில் :*

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62 : 9)

மேற்கண்ட இறைவசனத்தில் அல்லாஹ் இரண்டு கட்டளைகளைப் பிறப்பித்துள்ளான். வெள்ளிக் கிழமையில் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்படும் போது

1. இறைவனை நினை கூர்வதற்கு விரைய வேண்டும்.

2. வியாபாரத்தை விட வேண்டும்.

ஒருவர் தன்னுடைய வியாபாரக் கடையில் மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ நியமித்து விட்டு அவர் மட்டும் வியாபாரம் செய்யாமல் ஜூம்ஆவில் கலந்து கொள்வதால் அவர் வியாபாரத்தை தவிர்ந்தவராகக் கருதப்படமாட்டார். ஏனெனில்

“வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்!“

என்பதோடு அல்லாஹ் நிறுத்தியிருந்தாலும் மேற்கண்ட இறைக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவர் வியாபாரத்தை விட்டுத்தான் ஆக வேண்டும்.

ஜும்ஆ கடமையானவர் மட்டும்தான் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரத்தை விடவேண்டும் என்று சொன்னால் *”பாங்கு சொல்லப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்”* என்ற கட்டளை மட்டுமே போதுமானதாகும்.

ஆனால் அல்லாஹ் *”வியாபாரத்தை விட்டுவிடுங்கள்”* என்று அதிகப்படியான கட்டளையைக் கூறுவதிலிருந்தே ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்டால் ஒருவர் தனக்கு சொந்தமான வியாபாரக் கடையை மூடிவிட வேண்டும். மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ கொண்டு வியாபாரம் செய்வது ஹராம் என்பதையும் அதன் மூலம் வரும் வருவாயும் ஹராமாகும் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நிர்பந்தம் என்று வரும்போது மார்க்கத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. அது போல் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரம் செய்வது ஹராமாகும் என்றாலும் சில சூழ்நிலைகளில் ஒருவன் நிர்பந்தத்திற்குள்ளானால் அது அல்லாஹ்விடம் பாவமாகக் கருதப்படாது.

- அப்துன் நாஸிர் MISc, TNTJ

No comments:

Post a Comment