பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 25, 2019

இஸ்லாத்தை அறிந்து - 65

*🍓🍓🍓மீள் பதிவுக்ஷ🍓🍓🍓* 


 *🌹🌹🌹🌹* 


 *🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉தொடர்  பாகம் 65 👈👈👈* 


     *👉தலைப்பு👇*


 *🕋🕋🕋நபிவழியில் 📚📚📚ஜும்மாவின் சட்டத்திட்டங்கள்🕋🕋🕋* 


 *🕋🔰🔴ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா🔰⚫🕋* 


 *✍✍✍ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா நான் அமெரிக்காவில் இருக்கிறேன்; எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்ஆ❓* *ஜும்ஆ பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் ஜமாஅத் தொழுகை சட்டங்களை அறிந்து கொள்வது தெளிவுபெற உதவியாக இருக்கும்.* 
 *ஒரு பள்ளியில் இரண்டு ஜமாஅத் நடத்துவது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வது அவசியம். ஒரு பள்ளியில் ஒரு ஜமாஅத்தைத் தவிர அடுத்த ஒரு ஜமாஅத் நடத்துவது எந்தச் சூழ்நிலையிலும் கூடாது என்று பொதுவாக பலர் மறுத்து வருகின்றனர்.* 
 *ஆனால் இதுபற்றி நாம் ஆய்வு செய்யும் போது இரண்டாவது ஜமாஅத்தை முறையாகப் பயன்படுத்தினால் அதை மார்க்கம் அனுமதிப்பதையும் இதை முறைகேடாகப் பயன்படுத்தினால் அதை மார்க்கம் தடை செய்வதையும் அறிய முடிகின்றது.* 
 *சரியான அடிப்படையில் ஒரு நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது அதைச் சீர்குலைப்பதற்காகவும் போட்டிக்காகவும் ஜமாஅத் நடத்துபவர்களும் இருக்கின்றார்கள். இது போன்ற தவறான நோக்கமின்றி இரண்டாவது ஜமாஅத் நடத்தினால் அதை மார்க்கம் அனுமதிக்கவே செய்கின்றது✍✍✍.* 


 *🕋🕋🕋அனுமதிக்கப்பட்ட இரண்டாவது ஜமாஅத்🕋🕋🕋* 


 *👆👆👆முதலாவது ஜமாஅத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்தடுத்து கூட்டாகத் தொழுவதை மார்க்கம் அனுமதிக்கின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன👇👇👇.* 

 

 *10596* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ عَنْ سَعِيدٍ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ النَّاجِيُّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ ثُمَّ جَاءَ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا أَوْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ قَالَ فَصَلَّى مَعَهُ رَجُلٌ رواه أحمد


 *📕📕📕நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்📕📕📕.* 

 *அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)* 

 *நூல்கள் : திர்மிதி 204, அஹ்மத் 10596* 


 *✍✍✍ஜமாஅத் முடிந்த பின்னர் வந்த மனிதரைத் தனியாகத் தொழ விடாமல், ஏற்கனவே தொழுத ஒருவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். அவ்வாறு தொழுவது தனியாகத் தொழுவதை விட நன்மையானது எனவும் குறிப்பிடுகின்றார்கள். “இவருக்கு தர்மம் செய்பவர் யார்?” என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம்* .
 *அதாவது ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் நன்மையை தர்மம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.* 
 *ஏற்கனவே தொழுத நபித்தோழர் தனியாகத் தொழுத மனிதருடன் சேர்ந்து கொள்வதால் அந்த மனிதர் ஜமாஅத்துடைய நன்மையைப் பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றார். எனவே இவரை தர்மம் செய்யக் கூடியவர் என்றும் அந்த மனிதரை தர்மத்தைப் பெறக் கூடியவர் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மொத்தத்தில் கூட்டுத் தொழுகையால் இருவருக்கும் நன்மைகள் கிடைத்து விடுகின்றன.* 
 *எனவே முதல் ஜமாஅத் முடிந்த பின்னர் தாமதமாக வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஜமாஅத்தாகத் தொழுவதே சிறந்தது*✍✍✍ .

 

 *646* حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا اللَّيْثُ حَدَّثَنِي ابْنُ الْهَادِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِخَمْسٍ وَعِشْرِينَ دَرَجَةً رواه البخاري


 *📘📘📘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :* 
 *தனியாகத் தொழுவதை விட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்📘📘📘.* 


 *இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* 

 *நூல் : புகாரி 646* 


 *✍✍✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :* 
 *ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து தொழுவது அவர் தனியே தொழுவதை விடச் சிறந்ததாகும். ஒருவர் இரு மனிதர்களுடன் சேர்ந்து தொழுவது அவர் ஒருவருடன் சேர்ந்து தொழுவதை விடச் சிறந்ததாகும். (ஜமாஅத்தில் கலந்து கொள்ளும்) நபர்கள் அதிகமானால் அது அல்லாஹ்விற்கு விருப்பமானதாகும்.✍✍✍* 

 *அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி) அவர்கள்* 

 *நூல் : நஸாயீ 834* 

 *📙📙📙முதலாவது ஜமாஅத் தவறிப் போனால் அடுத்தடுத்து வருபவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கூட்டாகத் தொழுது கொள்ளலாம் என்றும், அவ்வாறு தொழவதே சிறந்தது என்றும் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.* 
 *இருவர் இருந்தாலும் அது ஜமாஅத் ஆகிவிடும். தனியாகத் தொழுவதை விட இருவராகத் தொழுவது சிறந்தது. ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இதன் சிறப்பும் அதிகமாகும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.* 
 *எனவே முதல் ஜமாஅத்தைத் தவற விட்டவர்கள் தனியாகத் தொழ வேண்டும் என்று யாரேனும் கூறினால் அவர்கள் மேற்கண்ட இரு நபிமொழிகளுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதே உண்மை.📙📙📙* 

 *✍✍✍ஒரு ஜும்ஆ முடிந்து ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு ஜும்ஆ நடத்துவது கூடுமா என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். முதலாவது ஜும்ஆவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்கள் தாங்களாகக் கூடி இரண்டாவதாக ஜும்ஆ நடத்தினால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் அது அனுமதிக்கப்பட்டதுமன்றி வரவேற்கத்தக்கதுமாகும்.* *ஒரு மணி நேரம் கழித்துத் தான் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதல்ல. முதலாவது ஜும்ஆத் தொழுகை முடிந்து விட்டால் இதன் பிறகு வருபவர்கள் உடனே ஜமாஅத் நடத்த விரும்பினால் அவ்வாறு செய்வது தவறல்ல.* 
 *தனியாகத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது சிறந்தது என்ற அடிப்படையில் தான் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதை மார்க்கம் அனுமதிக்கின்றது.* 
 *முதலாவது நடத்தப்பட்ட ஜமாஅத் சிறந்ததா? அடுத்து நடத்தப்பட்ட ஜமாஅத் சிறந்ததா? என்று நாம் யோசித்தால் முதலாவது ஜமாஅத்தே சிறந்தது என்பதை அறியலாம்.✍✍✍* 


 *🔴முதல் ஜமாஅத்தே சிறந்தது⚫* 


 *📗📗📗பொதுவாக ஜமாஅத் தொழுகையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் அனைத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிப்பதாக அமைந்துள்ளன. ஹதீஸ்களில் முதல் ஜமாஅத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காண முடிகின்றது.* 
 *என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து, சுள்ளிகளாக உடைக்கும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ, அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.📗📗📗* 

 *அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)* 

 *நூல் : புகாரி 644, 7224* 


 *✍✍✍இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பள்ளியில் பாங்கு சொல்லி நடத்தப்படும் முதல் ஜமாஅத்திற்கு வராதவர்களைத் தான் கண்டிக்கின்றார்கள். பள்ளியில் இஷாத் தொழுகையின் ஜமாஅத் எட்டு மணிக்கு என்றால் பத்து மணிக்குக் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தித் தொழ முடியும். ஆனால் இது முதல் ஜமாஅத்தில் தொழுததைப் போன்று நன்மையைப் பெற்றுத் தராது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.* 
 *பொதுவாகவே முதல் ஜமாஅத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவது ஜமாஅத்திற்குக் கொடுக்கவில்லை.* 
 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்” என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍.* 

 *அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,* 

 *நூற்கள் : நஸயீ 848, அஹ்மத் 15799* 

 *📒📒📒நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.📒📒📒* 

 *அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி),* 

 *நூல் : அஹ்மத் 10980* 


 *✍✍✍பாங்கு சொல்லப்பட்டு முதல் ஜமாஅத் நடைபெறும் போது, தொழாமல் இருந்த நபித்தோழரைப் பார்த்து, நீ முஸ்லிம் தானா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் அதே சமயம் இரண்டாவது ஜமாஅத் நடைபெறும் போது எல்லோரும் அதில் சேர்ந்து தொழ வேண்டும் என்று கூறவில்லை. இதிலிருந்து முதல் ஜமாஅத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இரண்டாவது ஜமாஅத்திற்கு இல்லை என்பதை அறியலாம்.* 
 *ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்கு அதிக நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. முதல் ஜமாஅத்தில் தொழுவதற்குத் தனிச் சிறப்பு இல்லையென்றால் முதல் ஜமாஅத்தில் இரண்டாவது வரிசையில் தொழுபவரை விட, இரண்டாவது ஜமாஅத்தில் முதல் வரிசையில் தொழுபவருக்கு அதிக நன்மை என்றாகி விடும். இதிலிருந்து ஹதீஸ்களில் கூறப்படும் ஜமாஅத் தொழுகை என்பது பள்ளியில் நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிக்கும் என்பதை அறிய முடியும். எனவே இரண்டாவது ஜமாஅத்தை விட முதல் ஜமாஅத்தில் தொழுவது தான் சிறந்ததாகும்.* 
 *மேலும் அதிகமான நபர்கள் கூடி நடத்தப்படும் ஜமாஅத் அதிகச் சிறப்பு வாய்ந்தது என்று ஹதீஸ் கூறுகின்றது. குறித்த நேரத்தில் முடிவு செய்யப்பட்ட முதல் ஜமாஅத்திற்கே அதிகமான நபர்கள் வருகை தருவார்கள். எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் முதல் ஜமாஅத்தே சிறந்தது என்பதை அறியலாம்.* 
 *அதே சமயத்தில் இணைவைக்கும் இமாம், சுன்னத்துக்களைப் புறக்கணிக்கும் இமாம் போன்றவர்கள் தொழுகை நடத்தும் பள்ளிகளிலும், நபிவழியைப் பேணி தொழுபவர்களை ஜமாஅத்தில் சேர்ந்து தொழவிடாமல் தடுக்கும் பள்ளிகளிலும் முதல் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதற்கு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்களுக்கு வாய்ப்பில்லை. இது போன்ற மார்க்கக் காரணங்களுக்காக இரண்டாவது ஜமாஅத்தில் தொழும் போது, அது முதல் ஜமாஅத்தை விட சிறப்பு குறைந்ததாக ஆகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.✍✍✍* 


 *🔵வேண்டுமென்றே புறக்கணிக்கலாகாது❓⚫* 


 *📓📓📓மார்க்க அடிப்படையில் நியாயமான காரணங்கள் இல்லாமல் முதலாவது ஜமாஅத்தை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் போட்டிக்காக இன்னொரு ஜமாஅத் உருவாக்குவதும் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் நடத்திய ஜமாஅத் தொழுகையை எவரும் புறக்கணிக்கவில்லை. ஆனால் ஒருவர் புறக்கணிப்பதை நாடாவிட்டாலும் புறக்கணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் காரியத்தைச் செய்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.📓📓📓* 

 

 *848* أَخْبَرَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ بُسْرُ بْنُ مِحْجَنٍ عَنْ مِحْجَنٍ أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذَّنَ بِالصَّلَاةِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ قَالَ بَلَى وَلَكِنِّي كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ رواه النسائي


 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்” என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍.* 

 *அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,* 

 *நூற்கள் : நஸாயீ 848, அஹ்மத்* 


 *📔📔📔ஜமாஅத் நடைபெறும் போது தொழாமல் இருப்பது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல. “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து இதை அறியலாம். எனவே ஜமாஅத்தை நியாயமின்றி புறக்கணிப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.📔📔📔* 


 *203* حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ حَدَّثَنَا جَابِرُ بْنُ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ الْعَامِرِيُّ عَنْ أَبِيهِ قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ قَالَ فَلَمَّا قَضَى صَلَاتَهُ وَانْحَرَفَ إِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي أُخْرَى الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ فَقَالَ عَلَيَّ بِهِمَا فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا فَقَالَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا قَالَ فَلَا تَفْعَلَا إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ رواه الترمذي


 *✍✍✍யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :* *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் நானும் இருந்தேன். நான் கைஃப் பள்ளியில் அவர்களுடன் ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய போது தன்னுடன் தொழுகையில் கலந்து கொள்ளாத இருவரை கூட்டத்தின் இறுதியில் (அமர்ந்து) இருப்பதைக் கண்டார்கள். அவ்விருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். அவ்விருவரின் தோல் புஜங்களும் (அச்சத்தால்) நடுங்கிய நிலையில் அவ்விருவரும் அழைத்து வரப்பட்டனர். நீங்கள் ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்களுடைய வீடுகளிலேயே தொழுகையை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் உங்களுடைய வீடுகளில் தொழுதுவிட்டு ஜமாஅத் நடக்கும் பள்ளிக்கு வந்தால் மக்களுடன் சேர்ந்து தொழ வேண்டும். இத்தொழுகை உங்களுக்கு உபரியானதாகி விடும் என்றார்கள்.✍✍✍* 

 *நூல் : திர்மிதீ 203* 


 *⛱⛱⛱பள்ளியில் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும் போது தொழாமல் இருந்தால் அந்த ஜமாஅத்தைப் புறக்கணிக்கும் தோற்றம் ஏற்படும் என்பதற்காக ஏற்கனவே தொழுதிருந்தாலும் ஜமாஅத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடுகிறார்கள்.⛱⛱⛱* 


 *214* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ قَالَ أَبُو عِيسَى و سَمِعْت الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ إِذَا صَلَّى الرَّجُلُ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَإِنَّهُ يُعِيدُ رواه الترمذي


 *✍✍✍வாபிஸா பின் மஅபத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :* 
 *ஒரு மனிதர் ஸஃப்புக்குப் பின்னால் (மக்களுடன் சேர்ந்து நிற்காமல்) தனியாகத் தொழுதார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை மீண்டும் நிறைவேற்றுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.✍✍✍* 

 *நூல் : திர்மிதீ 214* 


 *🌈🌈🌈இந்தச் செய்தியில் அந்த மனிதர் ஜமாஅத்துடன் தொழுவதையே நாடியுள்ளார். ஆனால் மக்களுடன் சேர்ந்து நிற்கவில்லை. இது ஜமாஅத்தைப் பிளவுபடுத்தும் செயல் என்பதால் அவருடைய தொழுகை கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே முதல் ஜமாஅத்தைத் திட்டுமிட்டு அநியாயமாக புறக்கணிப்பது தவறு என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.🌈🌈🌈* 


 *🌐நியாயமான காரணங்களுக்காகப் புறக்கணிக்கலாம்🌎* 


 *🔰🔰🔰முதலாவது ஜமாஅத்தைப் புறக்கணிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டாவது ஜமாஅத் நடத்தினால் அது தவறல்ல. இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது🔰🔰🔰* .


 *6106* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ أَخْبَرَنَا يَزِيدُ أَخْبَرَنَا سَلِيمٌ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ الصَّلَاةَ فَقَرَأَ بِهِمْ الْبَقَرَةَ قَالَ فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلَاةً خَفِيفَةً فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَقَالَ إِنَّهُ مُنَافِقٌ فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا وَنَسْقِي بِنَوَاضِحِنَا وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا الْبَارِحَةَ فَقَرَأَ الْبَقَرَةَ فَتَجَوَّزْتُ فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ثَلَاثًا اقْرَأْ وَالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَنَحْوَهَا رواه البخاري


 *✍✍✍ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :* 
 *முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ சலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுத அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) அவர்களுக்கு “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒரு மனிதர் விரைவாகத் தொழுது விட்டுச் சென்று விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “அவர் ஒரு நயவஞ்சகர்” என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது “அல்பகரா’வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்” என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம், “முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?” என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், “(நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக!” என்றும் சொன்னார்கள்.✍✍✍* 

 *நூல் : புகாரி 6106* 


 *📕📕📕ஜமாஅத்தைப் புறக்கணிப்பது நயவஞ்சகனின் செயல் என்பதில் மாற்றுக்* *கருத்தில்லை. ஆனால் முதலாவது ஜமாஅத்தை நடத்தக் கூடியவர்கள் தவறிழைத்து அதனால் ஒருவர் அந்த* *ஜமாஅத்தைப் புறக்கணித்தால் இப்போது புறக்கணித்தவர் மீது குற்றமில்லை. இவர் ஜமாஅத்தைப்* *புறக்கணித்தவராக ஆகமாட்டார். மாறாக அவரை இந்த நிலைக்குத் தள்ளிய ஜமாஅத்தின்* *பொறுப்பாளர்களே கண்டனத்திற்குரியவர்கள். இதை மேற்கண்ட சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.எனவே நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு ஜமாஅத்தைப் புறக்கணிப்பது* *தவறல்ல. உதாரணமாக இணைவைக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது. முதலாவது ஜமாஅத்தை நடத்தக் கூடியவர்* *இணைவைப்பவராக இருந்தால் இப்போது இந்த ஜமாஅத்தை நாம் புறக்கணித்தாக வேண்டும்.📕📕📕*


 *✍✍✍அதே போன்று நபிவழியில் தொழுபவர்கள் முதலாவது ஜமாஅத்தில் கலந்து கொண்டால் துன்புறுத்தப்படுவார்கள் என்றால் அதை விட்டுவிட்டு தனியே அவர்கள் ஜமாஅத் நடத்த அனுமதியுள்ளது.* 
 *தங்களுடைய தவறான நோக்கத்தை அடைவதற்காக ஜமாஅத் தொழுகையை ஒருவர் ஆயுதமாக ஆக்கினால் இப்போது இவர்களைப் புறக்கணிக்கலாம். இதனால் ஜமாஅத்தைப் புறக்கணித்த குற்றம் ஏற்படாது. பின்வரும் வசனம் இதைத் தெளிவுபடுத்துகின்றது.✍✍✍* 
 

وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9


 *📘📘📘தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை* *ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக்* *கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள்* *பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின்* *அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.📘📘📘* 

 *திருக்குர்ஆன் 9 : 107* 

 
*✍✍✍நன்மையான காரியத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு குழப்பம் விளைவிப்பவர்களை நாம் புறக்கணிக்கலாம். இதனால் அந்த நன்மையான காரியத்தை நாம் புறக்கணித்தவர்களாக மாட்டோம் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.* 
 *இப்போது உங்கள் பிரச்சனைக்கு வருவோம். ஒரு பள்ளியில் இரண்டு ஜும்ஆக்கள் நடப்பதாக நீங்கள் கூறினீர்கள். இந்த ஜும்ஆக்கள் ஒன்றையொன்று புறக்கணிக்கும் வகையில் நடத்தப்படுமேயானால் இவையிரண்டில் எவை மார்க்க அடிப்படையில் நடைபெறுகின்றது. எந்த சாராரின் பக்கம் நியாயங்கள் இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்ந்து சரியாகச் செயல்படுபவர்கள் நடத்தும் ஜும்ஆவை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அநியாயம் புரிபவர் நடத்தும் ஜும்ஆவை புறக்கணிக்க வேண்டும்.* 
 *புறக்கணிக்கும் எண்ணம் இன்றி ஒரு சாராருக்கு ஜும்மாவுக்காக கிடைக்கும் இடைவேளையும் மற்றொரு சாராருக்கு கிடைக்கும் இடைவேளையும் வேறு வேறாக இருந்தால் அவரவருக்கு வசதியான நேரத்தில் இப்படி இரண்டு ஜும்மா நடத்தப்பட்டால் அவ்விரண்டுமே சமமானது தான். அதில் குற்றம் இல்லை மேலும் விபரம் அறிய பார்க்க✍✍✍* 


 *🔴🔵⚫இரண்டாம் குத்பா கிடைத்தால் தான் ஜும்ஆ நன்மை கிடைக்குமா❓⚫🔵🔴* 


 *📗📗📗இமாம் உரையாற்றுவதற்கு முன் ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களுக்கு குர்பானி கொடுத்த நன்மை கிடைப்பதாகப் பின்வரும் செய்தி கூறுகின்றது.📗📗📗* 


 *881* حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتْ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري


 *✍✍✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்பவர் ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து உபதேசத்தைச் செவியேற்கிறார்கள்.✍✍✍* 


 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* 

 *நூல் : புகாரி 881* 


 *📙📙📙இமாம் உரையாற்றுவதற்கு முன்பு வந்தவர்களுக்கு குர்பானி கொடுத்த* *நன்மை கிடைக்கும் என இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.* 
 *இமாம் உரையாற்றிய பின் வருபவருக்கு இந்தச் சிறப்பு கிடைக்காது. ஆனால்* *அவர் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்டதால் ஜும்ஆத்* *தொழுபவருக்கு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள மற்ற சிறப்புகள் அவருக்குக் கிடைக்கும்.அதே* *நேரத்தில் ஒருவர் இமாம் உரையாற்றுவதற்கு* *முன்பாகவே வர வேண்டும் என நாடுகிறார். ஆனால் சூழ்நிலையின்* *காரணமாக இது அவருக்குத் தவறிப் போனால் அவர் நல்லதை நாடியதற்காக அதற்குரிய நன்மையை இறைவன் அப்படியே அவருக்குக் கொடுப்பான்📙📙📙* 


 *3534* حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ فَقَالَ إِنَّ بِالْمَدِينَةِ لَرِجَالًا مَا سِرْتُمْ مَسِيرًا وَلَا قَطَعْتُمْ وَادِيًا إِلَّا كَانُوا مَعَكُمْ حَبَسَهُمْ الْمَرَضُ رواه مسلم

 *✍✍✍நாங்கள் ஓரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், “மதீனாவில் சிலர் இருக்கின்றனர். நீங்கள் ஒரு பாதையில் நடக்கும் போதும், ஒரு பள்ளத்தாக்கைக் கடக்கும் போதும் உங்களுடனேயே அவர்களும் இருக்கின்றனர். நோய் தான் அவர்களை (போருக்கு வர விடாமல்) தடுத்து விட்டது” என்று சொன்னார்கள்.✍✍✍* 

 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)* 

 *நூல் : முஸ்லிம் 3872* 


 *🧕🧕🧕பெண்கள்🕋🕋🕋 பள்ளியில் ஜும்ஆ தொழலாமா❓🧕🧕🧕* 


 *📗📗📗“அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்📗📗📗* .

 *நூல்: அபூதாவூத் 901 .* 


 *✍✍✍ஆனால் தவ்ஹீத் பள்ளிகளில் ஜுமுஆவின் பொது பெண்களை அழைத்து வருகிறார்கள். சில இடங்களில் ஊக்குவிக்கிறார்கள். பெண்கள் தொழுதால் அவர்களுக்கு சுன்னத் தொழுகை போல் ஆகுமா❓.* 
 *பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமை இல்லை என்பதால் அவர்கள் ஜும்ஆத் தொழ பள்ளிக்கு வரக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும்* *பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍.* 

 *அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)* 

 *நூல் : அபூதாவூத் 901* 


 *📒📒📒பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக சிலர் காட்டுகிறார்கள். ஆனால் இந்த நபிமொழியில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று சொல்லப்படவில்லை. அவர்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்றே கூறப்பட்டுள்ளது* .
 *ளுஹாத் தொழுகை, இரவுத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள், உபரியான தானதர்மங்கள் ஆகியவை கடமை இல்லை என மார்க்கம் கூறுகிறது. இதனால் இவை அனைத்தும் ஹராமான செயல்கள் என்று இவர்கள் கூறுவார்களா?* 
 *இதே செய்தியில் பெண்களுடன் சிறுவர்கள் அடிமைகள் நோயாளிகள் ஆகியோருக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள் அடிமைகள் நோயாளிகள் ஆகியோர் ஜும்ஆவை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குச் செல்வது ஹராம் என்று கூறுவார்களா❓📒📒📒* 


 *✍✍✍மாறாக இது சலுகை என்றும் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் நிறைவேற்றியுள்ளார்கள்.* 
 *உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் இதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.*  *நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்✍✍✍* .


 *அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி* 

 *நூல் : முஸ்லிம் 1580*
 

 *📓📓📓பொதுவாக ஜும்ஆத் தொழுகையைப் பள்ளியில் தான் நிறைவேற்ற வேண்டும். பெண்கள் பள்ளிக்கு வந்து தொழ வேண்டியதில்லை என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்று கூறினார்கள்.* 
 *பெண்கள் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்தால் ஜும்ஆத் தொழுகையே லுஹருக்கு பதிலாக போதுமானதாகும். வீட்டில் தொழுதால் லுஹர் தொழுகை அவர்களுக்குக் கடமையாகும். பள்ளிக்கு வருகின்ற விசயத்தில் தான் பெண்களுக்குச் சலுகை உள்ளது. ஜும்ஆ என்ற தொழுகை லுஹர் தொழுகைக்குப் பகரமாக தரப்பட்டுள்ளதால் ஜும்ஆ தொழுகையை பெண்கள் நிரைவேற்றினால் அவர்கள் லுஹர் தொழக் கூடாது📓📓📓* .

 *✍✍✍அவர்கள் தாமாக விரும்பி ஜும்ஆத் தொழுகையில் கலந்துகொண்டால் அவர்கள் கடமையைத் தான் நிறைவேற்றுகிறார்கள். இதை சுன்னத்தான தொழுகை என்று சொல்ல முடியாது* .
 *பெண்களைப் போன்று நோயாளிகளுக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நோயாளி இந்தச் சலுகையைப் பயன்படுத்தாமல் பள்ளிக்கு வந்து ஜும்ஆத் தொழுதால் அது கடமையான தொழுகை இல்லை என்று கூற மாட்டோம். மாறாக அவர் கடமையை நிறைவேற்றிவிட்டார் என்றே கூறுவோம். இதே போன்று பயணத்தில் இருப்பவர் பள்ளியில் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு பயணி பள்ளிக்கு வந்து ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால் அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றவில்லை என்று கூறமாட்டோம். பெண்கள் ஜும்ஆத் தொழுவதும் இது போன்றதாகும்✍✍✍.* 


 *🕋🕋🕋ஜும்ஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா❓🕋🕋🕋* 


 *📔📔📔ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை விட்டுவிட வேண்டுமா? அல்லது தொழுகைக்கு வந்தால் போதுமா❓* 
 *சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தைத் தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.* 
 *ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்* 
 *நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்📔📔📔* .

 *திருக்குர்ஆன் 62:9,10* 


 *✍✍✍பாங்கு சொல்லப்பட்ட உடன் தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறினால் மற்றவர் மூலம் நம் வியாபாரத்தை நடத்தச் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ய முகாந்திரம் உண்டு. ஆனால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள் என்று இரண்டு கட்டளைகளை அல்லாஹ் விதிக்கிறான். அல்லாஹ்வை நினைப்பதற்கு விரைவது ஒரு கட்டளை. வியாபாரத்தை விட்டுவிடுவது மற்றொரு கட்டளை. இரண்டையும் கடைப்பிடிப்பது கடமையாகும். மற்றவர் மூலம் கூட அந்த நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது.* 
 *மேலும் தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்பட்ட பிறகு தான் பொருளீட்ட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். தொழுகை முடிக்கப்படும் முன்னர் நமது வியாபார நிறுவனம் இயங்கினால் அப்போது நாம் பொருளீட்டுவதாகத் தான் பொருள்* .
 *ஜும்ஆவுக்கு பாங்கு சொன்னது முதல் தொழுகை முடியும் வரை தொழுகைக்கு விரையவும் வேண்டும். எல்லாவிதமான வியாபாரத்தையும் நிறுத்திக் கொள்ளவும் வேண்டும்.* 
 *நான் வியாபாரம் செய்யவில்லையே; எனது நிறுவனத்தில் மற்றவர்கள் தானே வியாபாரம் செய்தார்கள் என்று கூறும் காரணம் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். இதில் இறையச்சம் சிறிதும் இல்லை. மனசாட்சிக்கும், உலக நடைமுறைக்கும் இது எதிரானதாகும்.* 
 *நம்முடைய நிறுவனத்தில் மற்றவர்கள் செய்த வியாபாரம் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபத்துக்கும், வருமானத்துக்கும் நான் வரி செலுத்த மாட்டேன் என்று அரசாங்கத்திடம் இதுபோல் கூறுவார்களா? கூறினால் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது அந்த வருமானம் எங்களுடையது அல்ல எனக் கூறுவார்களா❓✍✍✍* 


 *⛱⛱⛱நாம் இல்லாத போது நம்முடைய ஊழியர் நம் அனுமதியுடன் கலப்படமோ ,மோசடியோ செய்தால் அதை நான் செய்யவில்லை என்று கூறுவதை யாருடைய மனசாட்சியாவது ஒப்புக் கொள்ளுமா?* 
 *நாமே செய்வதும் நம்முடைய அனுமதியில் பேரிலும் உத்தரவின் பேரிலும் மற்றவர் செய்யும் காரியங்களும் நாம் செய்த்தாகத் தான் பொருள். நமக்குச் சொந்தமான நிறுவனத்தில் மற்றவர்களை வைத்து நடத்தும் வியாபரமும் நாம் செய்ததாகத் தான் அர்த்தம்.* 
 *எனவே ஜும்ஆ பாங்கு முதல் ஜும்ஆ தொழுகை முடியும் வரை முற்றிலுமாக வியாபாரத்தை மூடியாக வேண்டும்⛱⛱⛱.* 


 *🌐🌐🌐உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா❓🌎🌎🌎* 

 *✍✍✍ஜும்ஆ உரை நிகழ்த்தியவர் தான் கட்டாயம் தொழுகை நடத்த வேண்டுமா ❓* 
 *இஸ்லாத்தின் ஒரு அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யார் வணக்க வழிபாடுகளில் ஒன்றை இருப்பதாகக் கூறுகிறாரோ அவர் தான் ஆதாரம் காட்ட வேண்டும். ஒன்றை இல்லை என்று கூறுவதற்கு ஆதாரம் கேட்கக் கூடாது.* 
 *ஜும்ஆ உரை நிகழ்த்தியவர் தான் தொழுகை நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. எனவே இதற்கு மாற்றமாகச் சொல்பவர் தான் அதற்கு உரிய ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.✍✍✍* 


 *🌈🌈🌈அப்படி எந்தக் கட்டளையும் இல்லாமல் இருப்பதால் இரண்டையும் வெவ்வேறு நபர்கள் செய்வதைத் தடுக்க முடியாது.* 
 *தொழுகை நடத்துவதற்கு அதிகம் குர்ஆன் மனனம் செய்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அது போல் அவர்கள் உரை நிகழ்த்தும் போது மயிர்க்கால்கள் சிலிர்த்து விடும் அளவுக்கு உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்துவார்கள் என்று ஹதீஸ் உள்ளது.* 
 *இந்த இரண்டு தகுதிகளும் ஒருவரிடம் இருந்தால் அவரே இரண்டையும் செய்யலாம். ஒருவருக்கு அவ்வாறு இல்லாவிட்டால் யார் யாருக்கு எந்தத் தகுதி உள்ளதோ அவர் தனக்குத் தகுதியுள்ளதை மட்டும் செய்யலாம்.*🌈🌈🌈 


 *✍✍✍ஒருவருக்கு பாங்கின் வாசகம் தெரியும். ஆனால் குரல் வளம் போதாது என்றால் தெரிந்தவர் சொல்லிக் கொடுக்க குரல் வளம் உள்ளவர் திருப்பிச் சொன்னதற்கும் ஆதாரம் உள்ளது* .
 *கனவில் பாங்கு சொல்லும் முறை அறிவிக்கப்பட்ட அப்துல்லாஹ் பின் ஸைத் ரலி அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொன்னார். நீ கனவில் கணடதை பிலாலுக்குச் சொல்! அவர் அதைக் கூறுவார். ஏனெனில் அவர் உன்னை விட அதிக சப்தம் உடையவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍* 

 *நூல்கள் : திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்* 


 *🔴⚫வேலையின் காரணமாக ஜும்ஆ தொழாமலிருப்பது குற்றமா❓⚫🔵* 



 *🔰🔰🔰*நாங்கள் பிரான்சில் வசித்து வருகிறோம். இங்கே பெரும்பாலான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை வேலை நிர்பந்தத்தின் காரணமாகத் தொழ முடியவில்லை. இது எங்கள் மீது குற்றம் ஆகுமா* 
 *ஜும்ஆத் தொழுகை அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.🔰🔰🔰* 

 

 *901* حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا هُرَيْمٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً عَبْدٌ مَمْلُوكٌ أَوْ امْرَأَةٌ أَوْ صَبِيٌّ أَوْ مَرِيضٌ قَالَ أَبُو دَاوُد طَارِقُ بْنُ شِهَابٍ قَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَسْمَعْ مِنْهُ شَيْئًا رواه أبو داود


 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அடிமை, பெண் சிறுவன் அல்லது நோயாளி ஆகிய நான்கு பேரைத் தவிர ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜமாஅத்துடன் ஜும்ஆ தொழுவது கட்டாய கடமையாகும்.*✍✍✍*

 *அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)* 

 *நூல் : அபூதாவூத் 901* 

 *🏵🏵🏵ஜும்ஆ நடைபெறும் நேரத்தில் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் நமது பணிகளை விட்டுவிட்டு ஜும்ஆவிற்கு விரைய வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.🏵🏵🏵* 


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(9)62


 *📕📕📕நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.* 
 *”(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” என கூறுவீராக!📕📕📕* 


 *திருக்குர்ஆன் 62 : 9* 


 *✍✍✍ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக வியாபாரத்தை விட வேண்டும் என்றும், ஜும்ஆ முடிந்த பிறகு வியாபாரம் செய்யலாம் என்றும் இவ்வசனம் கூறுகிறது. எனவே நமது வேலையைக் காரணம் காட்டி ஜும்ஆத் தொழுகையை விட முடியாது.* 
 *ஜும்ஆவை விடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.✍✍✍* 


 *1432* و حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ حَدَّثَنَا أَبُو تَوْبَةَ حَدَّثَنَا مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامٍ عَنْ زَيْدٍ يَعْنِي أَخَاهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَلَّامٍ قَالَ حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مِينَاءَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ رواه مسلم


 *📘📘📘அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறினார்கள்* :
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி ”மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்” என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.📘📘📘* 


 *நூல் : முஸ்லிம் 1570* 


 *✍✍✍நாம் வேலை பார்க்கும் நிறுவனம் இக்கடைமையை நிறைவேற்ற நமக்கு தடைவிதித்தால் அந்த வேலையை விட்டுவிட்டு இக்கடமையைச் செயல்படுத்த வாய்ப்பளிக்கும் நிறுவனத்தில் வேலை பெற முயற்சிக்க வேண்டும்.* 
 *பிரான்ஸைச் சொந்த ஊராக ஆக்கிக் கொண்டவர்களுக்கே இச்சட்டம் உரியது. அந்நாட்டில் பயணிகளாக இருப்பவர்கள் ஜும்ஆவை விட்டால் அது குற்றமாகாது. ஏனென்றால் கடமையான தொழுகைககளை அதற்குரிய நேரங்களில் நிறைவேற்ற வேண்டும் என்ற சட்டம் உள்ளூர்வாசிகளுக்கே இடப்பட்டுள்ளது.* 
 *பயணத்தில் உள்ளவர்கள் லுஹர் தொழுகை தான் கடமை. உரிய நேரத்தில் தொழ முடியவிட்டால் அஸருடன் சேர்த்துத் தொழ அனுமதியுள்ளது* .
 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணத்தில் இருந்த போது ஜும்ஆவுடைய நாள் வந்தது. அப்போது அவர்கள் ஜும்ஆ நடத்தவில்லை. மாறாக அன்றைய தினம் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழுதார்கள்.✍✍✍* 


 *45* حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ سَمِعَ جَعْفَرَ بْنَ عَوْنٍ حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ أَخْبَرَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلًا مِنْ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا قَالَ أَيُّ آيَةٍ قَالَ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ رواه البخاري


 *📒📒📒தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :* 
 *யூதர்களில் ஒருவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ”இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், ”இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்தி விட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்)கொண்டேன்” (5:3) (என்பதே அந்த வசனமாகும்)” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் அரஃபாப் பெருவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கியிருந்த போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது” என்றார்கள்.📒📒📒* 


 *நூல் : புகாரி 45* 

 
 *🔰🔰🔰நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்ட போது வெள்ளிக்கிழமையன்று அரஃபா நாள் வந்தது என இந்தச் செய்தி கூறுகின்றது.🔰🔰🔰* 

 

 *1634* حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنْ ابْنِ إِسْحَقَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ غَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مِنًى حِينَ صَلَّى الصُّبْحَ صَبِيحَةَ يَوْمِ عَرَفَةَ حَتَّى أَتَى عَرَفَةَ فَنَزَلَ بِنَمِرَةَ وَهِيَ مَنْزِلُ الْإِمَامِ الَّذِي يَنْزِلُ بِهِ بِعَرَفَةَ حَتَّى إِذَا كَانَ عِنْدَ صَلَاةِ الظُّهْرِ رَاحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهَجِّرًا فَجَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ ثُمَّ خَطَبَ النَّاسَ ثُمَّ رَاحَ فَوَقَفَ عَلَى الْمَوْقِفِ مِنْ عَرَفَةَ رواه أبو داود

 *✍✍✍இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபா நாளின் அதிகாலைப் பொழுதில் ஸுப்ஹு தொழுதுவிட்டு மினாவிலிருந்து புறப்பட்டார்கள். அரஃபா வந்தவுடன் நமிரா எனுமிடத்தில் தங்கினார்கள். நமிரா என்பது அரஃபாவில் தலைவர்(கள்) தங்கும் இடமாகும். லுஹர் தொழுகையின் நேரம் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து) பகற்பொழுதிலேயே புறப்ப(ட தயாராகிவி)ட்டார்கள். எனவே லுஹர், அஸர் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரையாற்றினார்கள். பிறகு பகற்பொழுதில் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்று அரஃபாவின் தங்குமிடங்களில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.✍✍✍✍* 

 *நூல் : அபூதாவூத் 1634* 


 *📗📗📗நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளன்று லுஹரையும், அஸரையும் சேர்த்துத் தொழுததாக இந்தச் செய்தி கூறுகின்றது.* 
 *எனவே ஹஜ் பயணத்தில் நபியவர்கள் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆத் தொழாமல் லுஹரைத் தொழுதுள்ளார்கள். லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழுதுள்ளார்கள். ஆகையால் பயணிகளுக்கு ஜும்ஆ கடமையில்லை என்பது இதன் மூலம் தெரிகின்றது📗📗📗* 


 *🌐🌐🌐ஜுமுஆ தொழுகையில் ருகூவில் நீண்ட துஆ ஓதுவதற்கு ஆதாரம் உள்ளதா❓🌎🌎🌎*


 *✍✍✍ஜுமுஆ தொழுகையில் ருகூவில் நீண்ட துஆ ஓதுவதற்கு ஆதாரம் உள்ளதா❓* *❓ஜும்ஆதொழுகையின் முதல் ரக்அத்தில் ருகூவு செய்து எழுந்து நிற்கும் அந்த சிறு நிலையில் ரப்பனா லகல் ஹம்து சொல்லியதும் இமாம்* *ஸுஜூது செய்யாமல் தொடர்ந்து நீண்ட துஆவை ஓதுகின்றார். இதற்கு* *ஆதாரம் உள்ளதா❓*
 *இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா கூறியதும், ரப்பனா லகல் ஹம்து மட்டும் தான் கூற வேண்டும் என்றில்லை. இந்த நிலையில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் பல்வேறு திக்ருகளை கற்றுத் தந்துள்ளார்கள்✍✍✍* .


 *📒📒📒அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும், “ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல் அர்ழி வமில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல் மஜ்த். அஹக்கு மா காலல் அப்து. வகுல்லுனா லக்க அப்துன். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வல முஃத்திய லிமா மனஃத்த. வல யன்ஃபஃ தல்ஜத்தி மின்கல் ஜத்” என்று கூறுவார்கள்.* 
 *பொருள் : எங்கள் அதிபதியே! வானங்களும், பூமியும் நிரம்பும் அளவுக்கு நீ நாடும் இன்ன பிற பொருட்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடமிருந்து பயன் அளிக்காது’ என்பது தான் அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்ததாகும்📒📒📒📒.* 

 *அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),* 

 *நூல் : முஸ்லிம் 735 (தமிழாக்கம் 822)* 


 *✍✍✍இது போன்ற நீண்ட திக்ரை அந்த இமாம் ஓதியிருக்கலாம். அவர் என்ன ஓதினார் என்பது தெரிந்தால் தான் அது ஆதாரமானதா? இல்லையா என்று கூற இயலும். ஆயினும் ஜும்ஆ தொழுகையின் போது மட்டும் குறிப்பிட்டு எதையும் ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.✍✍✍* 


 *🕋🕋🕋ஜும்மாவில் இமாம் மிம்பரில் அமரும் போது துஆ கேட்டால்🕋🕋🕋*


 *📓📓📓அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.* 
 *இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை📓📓📓.* 


صحيح ابن خزيمة – (3 / 120) *1739* – أنا أبو طاهر نا أبو بكر نا أحمد بن عبد الرحمن بن وهب نا عمي أخبرني مخرمة عن أبيه عن أبي بردة بن أبي موسى الأشعري قال : قال لي عبد الله بن عمر أسمعت أباك يحدث عن رسول الله صلى الله عليه و سلم في شأن ساعة الجمعة ؟ قال : قلت نعم سمعته يقول : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : هي ما بين أن يجلس الإمام على المنبر إلى أن تقضى الصلاة

 *✍✍✍சஹீஹ் இப்னி ஹுஸைமா* 
 *தில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது* .
 *முக்கிய குறிப்பு* 
 *இங்கே, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரம் என்பதைத் தான் பலவீனம் என்கிறோம். எனினும், வெள்ளிக் கிழமையில் ஜும்ஆ தொழுகையில் அந்த நேரம் இருக்கிறது என்று கருத்துப்படும் வகையில் வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன.✍✍✍* 


 *🔴⚫ஜும்மா அத்தியாயத்தின் சில வசனங்கள்⚫🔵*


 *📔📔📔ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
 *நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போது தான் அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடு கின்றனர் எனும் (62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.*📔📔📔


 *(புகாரி 4899)* 


 *🌐🌐🌐ஜூம்ஆ பாங்கிற்கு பிறகு மாற்று மதத்தவரை வைத்து வியாபாரம் செய்யலாமா❓🌎🌎🌎*


 *✍✍✍கூடாது* .
 *அல் குரான் (62:9)“நம்பிக்கை கொண்டோரேவெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.” மேலே குறிபிட்டுள்ள வசனத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது, ஜும்மா தொழுகைக்காக அழைக்கப் பட்டால் வியாபாரத்தை விட்டு செல்லுங்கள். அல்லாஹ் அந்த நேரத்தில் வியாபாரம் செய்வதை தடுத்துள்ளான்.* 
 *நான் வோயாபாரம் செய்கிறேன். வெள்ளிக் கிழமைகளில் சீக்கிரமே பள்ளிக்கு செல்பவன் நான். ஆனால் எனது கடையை அடைப்பது இல்லை. நான் வியாபாரத்தை விட்டு விட்டாலும் எனது மாற்று மத தொழிலாளி(staff) கடையில் தான் இருப்பார். அப்போது வியாபாரமும் நடக்கும்(வியாபாரம் செய்வது எனது நிய்யத் இல்லை என்றாலும் கடை திறந்த இருப்பதால் வரும் வாடிக்கையாளர்களை விரட்ட முடியாது). அவர் தொலைவில் இருந்து வருவதால் வீட்டுக்கு போகாமல் கடையிலேயே தான் காலை முதல் இரவு வரை இருப்பார்.* 
 *இந்த சூழ்நிலையில் நான் வியாபாரம் செய்யலாமா? என்ன தான் அவர் மாற்று மதத்துகாரராக இருந்தாலும் வியாபாரம் நடப்பது என்னுடையது. அதில் கிடைக்கும் லாபம் என்னை வந்து சேரும். இப்படி நான் கடையை திறந்து வைத்திருப்பது கூடுமா? கூடாது என்றால் கடையை அடைத்து விட்டு அவரை வேறு இடத்தில அந்த ஒரு மணிநேரம் இருக்க ஏற்பாடு செய்யலாம்,இன்ஷா அல்லா. கண்டிப்பாக விளக்கம் தேவை✍✍✍* 


يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ [الجمعة/9]


 *📕📕📕நம்பிக்கை கொண்டோரே வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை* *நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள்* *அறிந்தால் இதுவே உங்களுக்குநல்லது(அல்குர்ஆன் 62 : 9) மேற்கண்ட* *இறைவசனத்தில் அல்லாஹ் இரண்டு கட்டளைகளைப் பிறப்பித்துள்ளான்.வெள்ளிக் கிழமையில் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்படும் போது* 
 *1) இறைவனை நினை கூர்வதற்கு விரைய வேண்டும்.* 
 *2) வியாபாரத்தை விட வேண்டும📕📕📕.* 


 *✍✍✍ஒருவர் தன்னுடைய வியாபாரக் கடையில் மாற்றுமதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ நியமித்து விட்டு அவர் மட்டும் வியாபாரம் செய்யாமல்ஜூம்ஆவில் கலந்து கொள்வதால் அவர் வியாபாரத்தை தவிர்ந்தவராகக் கருதப்படமாட்டார். ஏனெனில்“வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்!“ என்பதோடு அல்லாஹ் நிறுத்தியிருந்தாலும் மேற்கண்ட இறைக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு அவர் வியாபாரத்தை விட்டுத்தான் ஆக வேண்டும்.* 
 *ஜும்ஆ கடமையானவர் மட்டும்தான் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரத்தை விடவேண்டும் என்று சொன்னால் ”பாங்கு சொல்லப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள் ” என்ற கட்டளை மட்டுமே போதுமானதாகும்.✍✍✍* 


 *📘📘📘ஆனால் அல்லாஹ் ”வியாபாரத்தை விட்டுவிடுங்கள்” என்று அதிகப்படியான கட்டளையைக் கூறுவதிலிருந்தே ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்டால் ஒருவர் தனக்கு சொந்தமான வியாபாரக் கடையை மூடிவிட வேண்டும். மாற்று மதத்தவர்களையோ அல்லது ஜூம்ஆ கடமையாகதவர்களையோ கொண்டு வியாபாரம் செய்வது ஹராம் என்பதையும் அதன் மூலம் வரும் வருவாயும் ஹராமாகும் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.* 
 *நிர்பந்தம் என்று வரும்போது மார்க்கத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. அது போல் ஜூம்ஆவிற்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு வியாபாரம் செய்வது ஹராமாகும் என்றாலும் சில சூழ்நிலைகளில் ஒருவன் நிர்பந்தத்திற்குள்ளானால் அது அல்லாஹ்விடம் பாவமாகக் கருதப்படாது📘📘📘* 


 *🌹🕋🌹நபிகளாரின் வஸியத்🌹🕋🌹* 


*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 66

No comments:

Post a Comment