பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, August 5, 2020

இஸ்லாத்தை அறிந்து - 56

*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 56  👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *11. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர் 🧕🧕🧕* 


 *12. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ நீதிபதிகள் மூன்று வகை 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *13. 🕋🕋🕋 நபியவர்கள் ஆடையின்றி இருந்தார்களா❓ 🕋🕋🕋* 


 *♻️11. அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர்♻️* 


 *❌இந்த செய்தி பலவீனமானதாகும்.❌* 

 *2373* – حدثنا محمد بن السري بن سهل القنطري البغدادي ، ثنا داود بن رشيد ، ثنا سويد بن عبد العزيز ، ثنا عثمان بن عطاء ، عن أبيه ، عن عمرو بن شعيب ، عن أبيه ، عن جده ، أن رسول الله صلى الله عليه وسلم قال : « من أغلق بابه دون جاره مخافة على أهله وماله فليس ذلك بمؤمن ، وليس بمؤمن من لم يأمن جاره بوائقه (1) ، أتدرون ما حق الجار ؟ إن استعانك أعنته (2) ، وإن استقرضك أقرضته ، وإن افتقر عدت عليه ، وإن مرض عدته (3) ، وإن مات شهدت جنازته ، وإن أصابه خير هنأته ، وإن أصابته مصيبة عزيته ، ولا تستطيل عليه بالبناء ، فتحجب عنه الريح إلا بإذنه ، وإذا شريت فاكهة فاهد له ، فإن لم تفعل فأدخلها سرا ، ولا يخرج بها ولدك ليغيظ بها ولده ، ولا تؤذه بقيثار قدرك إلا أن تغرف له منها » فما زال يوصيهم بالجار حتى ظننا أنه سيورثه ، ثم قال رسول الله صلى الله عليه وسلم : « الجيران ثلاثة ، فمنهم من له ثلاث حقوق ، ومنهم من له حقان ، ومنهم من له حق واحد ، فأما الذي له ثلاث حقوق فالجار المسلم القريب ، له حق الإسلام وحق الجوار وحق القرابة ، وأما الذي له حقان فالجار المسلم ، له حق الجوار وحق الإسلام ، وأما الذي له حق واحد فالجار الكافر ، له حق الجوار » قالوا : يا رسول الله أنعطيهم من لحوم النسك ؟ فقال : « لا تعط المشركين من نسك المسلمين »

 *🙋‍♂️🙋‍♂️அண்டைவீட்டார் முஸ்லிமாக இல்லாமலிருந்தால் அவருக்கு அண்டைவீட்டாரின் உரிமை மட்டும் கிடைக்கும். அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர்🙋‍♂️🙋‍♂️.* 


 *✍️✍️1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டைவீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது.✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டைவீட்டார்.இவர் முஸ்லிமான அண்டைவீட்டார். இவருக்கு அண்டைவீட்டார் உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு.🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️3. மூன்று உரிமைகள் உள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டைவீட்டடார் என்று உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️* 


 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : தப்ரானீ அவர்களுக்குரிய முஸ்னதுஷ் ஷாமியீன், பாகம் :7 பக்கம் :185)* 


 *❌இந்த செய்தி பலவீனமானதாகும்.❌* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அறிவிப்பாளரிகளின் தரம் : இதில் வரும் உஸ்மான் பின் அதா என்பவர் பலவீனமானவர் ஆவார் இவரை இமாம் ஹாகிம், இமாம் அபுல் அல் – காஸிம் ,இமாம் பைஹகீ ,இமாம் நஸாயீ ,இமாம் தாரகுத்தினீ ,இமாம் முஸ்லிம் மற்றும் இமாம் இப்னு மயீன் இவர்கள் அனைவரும் இவருடைய அறிவிப்புகளை எடுத்து கொள்ள கூடாது என்று விமர்ச்சித்து உள்ளார்கள்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *♻️12. நீதிபதிகள் மூன்று வகை♻️* 


 *3102* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السَّمْتِيُّ حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ عَنْ أَبِي هَاشِمٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ قَالَ أَبُو دَاوُد وَهَذَا أَصَحُّ شَيْءٍ فِيهِ يَعْنِي حَدِيثَ ابْنِ بُرَيْدَةَ الْقُضَاةُ ثَلَاثَةٌ رواه أبو داود


 *✍️✍️✍️நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று வகையான நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் சொர்க்கத்திற்கும் மற்ற இருவர் நரகத்திற்கும் செல்வர். உண்மையைப் புரிந்து அதனடிப்படையில் தீர்ப்பளிப்பவர் சொர்க்கத்திற்குச் செல்வார். உண்மையைப் புரிந்தபின் அநியாயமாகத் தீர்ப்பளித்தவர் நரகத்திற்குச் செல்வார். (உண்மையை) அறியாமல் மக்களுக்குத் தீர்ப்பளிப்பவர் நரகத்திற்குச் செல்வார்.* 
 *இதை புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.* 
 *இமாம் அபூதாவுத் அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு பின்வருமாறு கூறுகிறார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் அபூதாவுத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :* 
 *இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. அனைத்து தொடர்களிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தத் தொடர்களில் புரைதா (ரலி) அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட தொடரே சிறந்ததாக அமைந்துள்ளது என இமாம் அபூதாவுத் கூறுகிறார்கள்.* 
 *இமாம் அபூதாவுத் கூறுவதைப் போன்று இந்த ஹதீஸ் வந்த வழிகள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மேற்கண்ட அறிவிப்பிலும் ஹலஃப் பின் ஹலீஃபா என்ற பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️✍️இருக்கக்கூடிய அறிவிப்புகளில் மேற்கண்ட அறிவிப்பு பரவாயில்லை என்பதைத் தான் இமாம் அபூதாவுத் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது குறைந்த அளவு பலவீனம் உள்ளது என்பது இதன் கருத்தாகும். சரியான ஹதீஸ் என்பது இதன் கருத்தல்ல.* 
 *ஹலஃப் பின் கலீஃபா நேர்மையானவர் என்பதில் அறிஞர்களுக்கிடையே மாற்றுக் கருத்தில்லை. இறுதிக் காலத்தில் இவருடைய நினைவாற்றல் பாதிப்படைந்தது என்பதே இவர் மீதுள்ள குறையாக அறிஞர்கள் கூறுகின்றனர்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இமாம் அஹ்மது பின் ஹம்பள் அவர்கள் இவர் நல்ல நிலையில் இருக்கும் போது இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமானைவ என்று கூறியுள்ளார்கள்.* 
 *ஹலஃப் பின் ஹலீஃபா மேற்கண்ட ஹதீஸை நல்ல நிலையில் அறிவித்தாரா? அல்லது நினைவாற்றல் பாதிக்கப்பட்ட பின் அறிவித்தாரா? என்று முடிவு செய்ய சான்றுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பலவீனமான செய்தியாகும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *13. நபியவர்கள் ஆடையின்றி இருந்தார்களா❓* 


 *✍️✍️✍️ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கட்டியணைக்கும் வழக்கமும் மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தச் செயல் நபிவழி என்று சொல்லும் அளவுக்கு ஏற்கத் தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இது பற்றி சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.* 
 *‘ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) என் வீட்டில் இருந்தனர். வீட்டுக்கு ஸைத் பின் ஹாரிஸா (ரலி) வந்து கதவைத் தட்டினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடை இழுபட நிர்வாணமாக அவரை நோக்கிச் சென்றார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்களை நான் நிர்வாணமாகப் பார்த்ததில்லை. உடனே அவரைக் கட்டிய முத்தமிட்டார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.✍️✍️✍️* 


 *நூல் : திர்மிதி 2656* 


 *🧕🧕🧕ஆயிஷா (ரலி) கூறியதாக உர்வா அவர் அறிவிக்கிறார்🧕🧕🧕.* 


 *🙋‍♂️உர்வா கூறியதாக ஸஹ்ரி அறிவிக்கிறார்.🙋‍♂️* 

 *🙋‍♂️ஸஹ்ரி கூறியதாக முஹம்மத் பின் இஸ்ஹாக் அறிவிக்கிறார்🙋‍♂️.* 

 *🙋‍♂️முஹம்மத் பின் இஸ்ஹாக் கூறியதாக யஹ்யா பின் முஹம்மத் அறிவிக்கிறார்🙋‍♂️.* 

 *🙋‍♂️யஹ்யா பின் முஹம்மத் கூறியதாக அவரது மகன் இப்றாஹீம் அறிவிக்கிறார்.🙋‍♂️* 

 *🙋‍♂️இப்றாஹீம் கூறியதாக புகாரி இமாம் அறிவிக்கிறார்.🙋‍♂️* 

 *🙋‍♂️புகாரி இமாம் கூறியதாக திர்மிதி இமாம் பதிவு செய்கிறார்.🙋‍♂️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த அறிவிப்பாளர்களில் யஹ்யா பின் முஹம்மத் என்பவரும் பலவீனமானவர். அவர் வழியாக அறிவிக்கும் அவரது மகன் இப்றாஹீமும் பலவீனமானவர்.* 
 *பலவீனமான இருவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்படுவதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்வாணமாக கதவைத் திறக்கச் சென்றார்கள் என்பது இச்செய்தியின் பலவீனத்தை மேலும் அதிகரிக்கிறது.* 
 *நபியின் மனைவியாக இருந்தும் ஆயிஷா (ரலி) ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதற்கு முன்பும் பின்பும் நிர்வாணமாகப் பார்த்ததில்லை’ எனக் கூறியதாக அறிவிப்பதும் இச்செய்தியின் பலவீனத்தை இன்னும் அதிகரிக்கிறது✍️✍️✍️.* 


 *14. 🧶🧶🧶போர்க்களத்தில்⚫⚫⚫ துஆ🕋🕋🕋 மறுக்கப்பட்டது☪️☪️☪️* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 57* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment