பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, August 17, 2020

இஸ்லாத்தை அறிந்து - 68

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமியலாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 68 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *76. 🙋‍♂️🙋‍♂️சஹாபியை🙋‍♀️🙋‍♀️ திட்டினால்🕋 அல்லாஹ்🕋 சபிக்கிறான்📚 ஹதீஸ்📚📚📚* 


 *77.☪️☪️☪️ அம்பு தைத்தும்🕋🕋🕋 விடாமல் 🌐🌐🌐நபித்தோழர் 📚📚ஹதீஸ்📚📚📚* 


 *78. 🕋🕋🕋ஜும்மா🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ ஏழைகளின்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ ஹஜ்🕋🕋🕋 ஹதீஸ்📚📚📚* 


 *79. 🟣அஸருக்கு🟣 பின் 🔵உறங்கினால்🔵 அறிவு 🟢கெடும்🟢 ஹதீஸ்📚📚📚* 



 *80. ☪️☪️☪️உளூ இல்லாமல்🕋 பாங்கு🕋 சொல்லக்கூடாது📚 ஹதீஸ்📚📚📚* 


 *76. 🔵🔵சஹாபியை திட்டினால் அல்லாஹ் சபிக்கிறான் ஹதீஸ்🔵🔵* 


 *✍️✍️✍️நபித்தோழர்களை திட்டுபவர்களை அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : தப்ரானீ – கபீர், பாகம் :11, பக்கம் : 64* 


المعجم الكبير للطبراني ( *11* / *388* ، بترقيم الشاملة آليا) *913* - حَدَّثَنَا مُحَمَّدُ بن نَصْرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بن عِصَامٍ الْجُرْجَانِيُّ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن سَيْفٍ ، حَدَّثَنَا مَالِكُ بن مِغْوَلٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : لَعَنَ اللَّهُ مَنْ سَبَّ أَصْحَابِي . لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مَالِكِ بن مِغْوَلٍ إِلا عَبْدُ اللَّهِ بن سَيْفٍ تَفَرَّدَ بِهِ : عَبْدُ الْحَمِيدِ بن عِصَامٍ اللَّهِ بن عُمَرَ

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த இரண்டு அறிவிப்புகளிலும் அப்துல்லாஹ் பின் ஸைஃப் என்பவர் இடம்பெற்றுள்ளார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 
.

الضعفاء للعقيلي *(2/ 264)* *818* - عَبد الله بن سيف عن مالك بن مغول حديثه غير محفوظ وهو. مَجهولٌ بالنقل


 *✍️✍️✍️அப்துல்லாஹ் பின் ஸைஃப் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்✍️✍️✍️.* 


فضائل الصحابة لأحمد بن حنبل ـ مشكول *(1/ 52) 8* - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ ، قَالَ : حَدَّثَنَا عَلِيُّ بْنُ يَزِيدَ الصُّدَائِيُّ قَالَ : حَدَّثَنِي أَبُو شَيْبَةَ الْجَوْهَرِيُّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ أُنَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّا نُسَبُّ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ سَبَّ أَصْحَابِي فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ ، وَالْمَلاَئِكَةِ ، وَالنَّاسِ أَجْمَعِينَ ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً.


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️யார் எனது தோழர்களை திட்டுவாரோ, அவர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். அவனிடமிருந்து அல்லாஹ், எந்த நஷ்டஈடும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி),* 

 *நூல் : பழாயிலுஸ் ஸஹாபா, பாகம் :1, பக்கம் : 52)* 


 *✍️✍️✍️இச்செய்தியில் அலீ பின் யஸீத் அஸ்ஸதாயீ என்பவரும் அபூஷைபா அல்ஜவ்ஹரீ என்வரும் பலவீனமானவராவார்✍️✍️✍️.* 


 *77. 🟢🟢அம்பு தைத்தும் விடாமல் நபித்தோழர் ஹதீஸ்🟢🟢* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அம்பு தைத்தும் முறிக்காமல் தொழுது கொண்டிருந்தார் ஒரு நபித்தோழர்!🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *170* حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ عَنْ عَقِيلِ بْنِ جَابِرٍ عَنْ جَابِرٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ فَأَصَابَ رَجُلٌ امْرَأَةَ رَجُلٍ مِنْ الْمُشْرِكِينَ فَحَلَفَ أَنْ لَا أَنْتَهِيَ حَتَّى أُهَرِيقَ دَمًا فِي أَصْحَابِ مُحَمَّدٍ فَخَرَجَ يَتْبَعُ أَثَرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا فَقَالَ مَنْ رَجُلٌ يَكْلَؤُنَا فَانْتَدَبَ رَجُلٌ مِنْ الْمُهَاجِرِينَ وَرَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ كُونَا بِفَمِ الشِّعْبِ قَالَ فَلَمَّا خَرَجَ الرَّجُلَانِ إِلَى فَمِ الشِّعْبِ اضْطَجَعَ الْمُهَاجِرِيُّ وَقَامَ الْأَنْصَارِيُّ يُصَلِّ وَأَتَى الرَّجُلُ فَلَمَّا رَأَى شَخْصَهُ عَرَفَ أَنَّهُ رَبِيئَةٌ لِلْقَوْمِ فَرَمَاهُ بِسَهْمٍ فَوَضَعَهُ فِيهِ فَنَزَعَهُ حَتَّى رَمَاهُ بِثَلَاثَةِ أَسْهُمٍ ثُمَّ رَكَعَ وَسَجَدَ ثُمَّ انْتَبَهَ صَاحِبُهُ فَلَمَّا عَرِفَ أَنَّهُمْ قَدْ نَذِرُوا بِهِ هَرَبَ وَلَمَّا رَأَى الْمُهَاجِرِيُّ مَا بِالْأَنْصَارِيِّ مِنْ الدَّمِ قَالَ سُبْحَانَ اللَّهِ أَلَا أَنْبَهْتَنِي أَوَّلَ مَا رَمَى قَالَ كُنْتَ فِي سُورَةٍ أَقْرَؤُهَا فَلَمْ أُحِبَّ أَنْ أَقْطَعَهَا رواه ابوداود


 *✍️✍️✍️நபி (ஸல்) அவர்களுடன் தாதுத் ரிகாஃ என்ற போர்க்களத்திற்கு நாங்கள் சென்றோம். அப்போது (முஸ்லிம்களில்) ஒரு மனிதர் ஒருவரின் மனைவியைக் கொன்றுவிட்டார். (இதை பார்த்தப் அப்பெண்ணின் கணவர்) முஹம்மதின் தோழர்களில் ஒருவரை இரத்தம் சிந்தாமல் விட்டுவிடமாட்டேன் என்று சத்தியம் செய்தார். பின்னர் நபி (ஸல்) அவர்களை பின்தொடர்ந்து சென்றார்✍️✍️✍️.* 


 *🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது யார் நம்மை பாதுகாப்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது முஹாஜிர்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவர் நாங்கள் பாதுகாக்க விருப்பம் தெரிவித்தார்கள். அவ்விருவரையும் வழியின் முகப்பில் நிற்குமாறு நபிகளார் கூறினார்கள். அவ்விருவரும் வழியின் முகப்பிற்குச் சென்றார்கள்🕋🕋🕋.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முஹாஜிர் படுத்தார். அன்சாரித் தோழர் தொழுவதற்காக நின்றார். இதைக் கண்ட அந்த மனிதர் இவர்தாம் இக்கூட்டத்தின் கண்காணிப்பாளர் என்று கருதி அவர் மீது அம்பை எய்தார். அது அவரைத் தாக்கியது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அதை (உடலிலிருந்து) அகற்றினார். இவ்வாறு மூன்று அம்புகள் அவர் எறிந்தார். பின்னர் ருகூவு செய்தார். ஸஜ்தா செய்தார். (தொழுது முடித்தவுடன்) தன் தோழரை விழிக்கச் செய்தார். (முஸ்லிம்கள்) எச்சரிக்கை அடைந்துவிட்டார்கள் என்று அறிந்தவுடன் (தாக்கியவர்) ஓடிவிட்டார். அன்சாரித் தோழரிடம் ரத்தத்தைப் பார்த்த முஹாஜிர் தோழர் சுப்ஹானல்லாஹ் என்று கூறிவிட்டு முதல் அம்பு தாக்கியவுடனே என்னை எழுப்பியிருக்க வேண்டாமா? என்று கேட்டார்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்போது நான் ஒரு அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். அதைத் துண்டிக்க நான் விரும்பவில்லை என்று பதிலளித்தார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),* 

 *நூல்கள் : அபூதாவூத் (170), அஹ்மத் (14177,14336)* 


 *✍️✍️✍️இந்தச் செய்தியில் அகீல் பின் ஜாபிர் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. இவர் மஜ்கூல் (யாரென அறிப்படாதவர்) பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.✍️✍️✍️* 


 *78. 🕋ஜும்மா ஏழைகளின் ஹஜ் ஹதீஸ்🕋* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஜூம்ஆவை நபிகள் நாயகம் காட்டித்தராத பல அனாச்சாரங்களுடன் நிறைவேற்றி வரும் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் ஜூம்ஆ உரையின் போது பின்வருமாறு கூறுவார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حج الفقراء وعيد المساكين


 *✍️✍️✍️அன் அபீ ஹூரைரத ரலியல்லாஹூ அன்ஹூ அன்னஹூ கால கால ரசூலுல்லாஹி அலைஹி வஸல்லம் அல்ஜூம்அது ஹஜ்ஜூல் ஃபுகராஃ வ ஈதுல் மஸாகீன்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதன் பொருள் அபூஹூரைரா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபிகள் நாயகம் கூறினார்கள். ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும். மிஸ்கீன்களின் பெருநாளாகும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இது புகாரி(?)யில் இருப்பதாகவும் அரபியில் பிதற்றுவார்கள். புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்கள் தமிழில் வராத காலத்தில் இப்படி ஒரு செய்தி புகாரியில் இருப்பதாகவே மக்களும் நம்பி வந்தனர். ஆனால் உண்மையில் இது நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இவர்கள் கூறுவதைப் போன்ற ஒரு செய்தி புகாரியிலோ ஏனைய ஹதீஸ் நூற்களிலோ அறவே கிடையாது.✍️✍️✍️* 


 *🕋🕋🕋ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும் என்று ஒரு ஹதீஸ் உள்ளது. அது மிகவும் பலவீனமான செய்தியாகும்🕋🕋🕋.* 


مسند الشهاب القضاعي – *(1 / 128)* عن الضحاك ، عن ابن عباس ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « الجمعة حج الفقراء யு


 *☪️☪️☪️ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.☪️☪️☪️* 

 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி),* 

 *நூல் : முஸ்னது ஷிஹாப் பாகம் 1 பக்கம் 128* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தி, அக்பாரு உஸ்பஹான் போன்ற இன்னும் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் ஈஸா பின் இப்றாஹீம் அல் ஹாஷிமி என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி, நஸாயீ ஆகியோரும் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர் என்று இப்னு மயீன் அவர்களும் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என இமாம் ராஸி அவர்களும் விமர்சனம் செய்துள்ளனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *அல்லுஆஃபாஉ வல் மத்ரூகீன் பாகம் 2 பக்கம் 238* 


 *79. 🟡🟡அஸருக்கு பின் உறங்கினால் அறிவு கெடும் ஹதீஸ்🟡🟡* 


مَنْ نَامَ بَعْدَ الْعَصْرِ فَاخْتُلِسَ عَقْلُهُ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ


 *✍️✍️✍️எவர் அஸருக்குப் பின் உறங்கி அவரது அறிவு கெட்டுவிட்டதோ அவர் தன்னையே பழித்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)* 

 *நூல்கள்: முஸ்னது அபீயஃலா 4918 மஜ்மவுஸ் ஜவாயித் பாகம் 2 பக்கம் 229* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அஸ்ருக்குப் பின் ஒருவர் உறங்கினால் அவரது அறிவு பாழாகி விடும் என இந்தச் செய்தி தெரிவிக்கின்றது.* 
 *இது சுன்னத் ஜமாஅத் மத்ரஸா மாணவர்களுக்கு மத்தியில் பிரபலமானதாகும். ஆசிரியர்கள் இதைச் சொல்லித்தான் அஸருக்குப் பின் உறங்கும் மாணவர்களைப் பயமுறுத்துவார்கள். இந்தச் செய்தியை நபிகளார் சொல்லியுள்ளார்களா?* *இது நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதை மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) என்ற தனது நூலில் (பாகம் 3 பக்கம்69ல்) இமாம் இப்னுல் ஜவ்சீ அவர்கள் பதிவு செய்து விட்டு இது சரியான செய்தி அல்ல. இதில் இடம் பெறும் காலித் என்பவர் பொய்யர் ஆவார் என குறிப்பிடுகிறார்கள்.* 
 *இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை இமாம் தஹபீ அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *80. 🟣உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது ஹதீஸ்🟣* 


 *184* حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى الصَّدَفِيِّ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ رواه الترمذي


 *✍️✍️✍️உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி), நூல் : திர்மிதீ (184)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதே கருத்து பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.* 
 *இந்த இரண்டு செய்தியிலும் நபிகளார் தொடர்புடையதாக வரும் செய்தி பலவீனமானது என்பதை அந்த செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது என்று நபிகளார் கூறியதாக இடம் பெறும் செய்தியில் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி, அழிபவர், எந்த மதிப்பும் இல்லாதவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் என்று அல்ஜவ்ஸஜானீ அவர்களும் நம்பகமானவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் கூறியுள்ளார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவர் பலவீனமானவர், இவருடைய ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவை உள்ளன என்று அபூஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள்.* 
 *இவரை (பொய்யர் என்பதால்) நாங்கள் விட்டுவிட்டோம் என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியுள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :10, பக்கம் : 197* 


 *✍️✍️✍️உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது என்ற செய்தி அபூஹுரைரா (ரலி-) அவர்களின் சொந்தக் கருத்தாகவும் இடம்பெற்றுள்ளது.✍️✍️✍️* 

 *185* حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ لَا يُنَادِي بِالصَّلَاةِ إِلَّا مُتَوَضِّئٌ قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ الْحَدِيثِ الْأَوَّلِ قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ لَمْ يَرْفَعْهُ ابْنُ وَهْبٍ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ وَالزُّهْرِيُّ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي هُرَيْرَةَ وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْأَذَانِ عَلَى غَيْرِ وُضُوءٍ فَكَرِهَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَإِسْحَقُ وَرَخَّصَ فِي ذَلِكَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ رواه الترمذي


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள், நபிகளாரின் கூற்றாக வந்த செய்தியை விட நபித்தோழரின் கூற்றாக வந்த செய்தியே சரியானது என்று கூறியுள்ளார்கள். மேலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் ஸுஹ்ரீ அவர்கள், நபித்தோழர் அபூஹுரைரா (ர-லி) அவர்கள் வழியாக அறிவிக்கிறார். ஆனால் ஸுஹ்ரீ அவர்கள், அபூஹுரைரா (ரலி-) அவர்களிடம் எதையும் செவியுவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️எனவே அபூஹுரைரா (ரலி-) அவர்களின் கூற்றாக வரும் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும். எனவே இதையும் ஆதாரமாக கொள்ள முடியாது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பைஹகீ அவர்கள் ஸுனனுல் குப்ரா என்ற நூலி-ல் ஸுஹ்ரீ அவர்களுக்கும் அபூஹுரைரா (ரலி-) அவர்களுக்கும் இடையில் ஸயீத் பின் அல்முஸய்யப் அவர்கள் இடம்பெறுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதன் இறுதியில் இந்த தொடர் சரியில்லை என்பதை விளக்கியுள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது என்று செய்தி நபிகளாரின் கூற்றாகவும் நபித்தோழர் கூற்றாகவும் இடம்பெற்றுள்ளது. இரண்டுமே பலவீனமானது என்ற மேற்கண்ட விபரங்களிலிருந்து தெளிவாகிறது. இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.✍️✍️✍️* 


 *198* - وَلَهُ : عَنْ أَبِي هُرَيْرَةَ – رضي الله عنه – أَنَّ اَلنَّبِيَّ – صلى الله عليه وسلم – قَالَ : – لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ – وَضَعَّفَهُ أَيْضًا .فَالْحَدِيثُ ضَعِيفٌ مَرْفُوعًا وَمَوْقُوفًا .


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்ற இந்த செய்தி நபிகளாரின் கூற்றாக வந்திருப்பதும் நபித்தோழர் கூற்றாக வந்திருப்பதும் பலவீனமானதாகும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புலுகுல் மராம் ஹதீஸ் எண்:198)* 


 *81. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உண்ணுவார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ பருகுவார் 🧶🧶உடன்🌐🌐 அமருவார்📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 69* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment