பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, March 11, 2026

இரவின் இறுதி பகுதியில் ஓதும் துஆக்கள்!


🤲 இரவின் இறுதி பகுதியில் ஓதும் துஆக்கள்!

ரமலானில் பலரும் இரவின் இறுதி பகுதியில் இரவு தொழுகை, தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருகின்றோம், அந்த நேரங்களில் ஓதும் இரண்டு துஆக்களை குர்ஆன் ஹதீஸிலிருந்து தொகுத்துள்ளேன், வாய்ப்பு கிடைப்பவர்கள் உங்கள் பிரார்த்தனையில் ஆதாரப்பூர்வமான இந்த இரண்டு துஆக்களையும் சேர்த்து கொள்ளுங்கள். 

🎯 நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்: (புஹாரி-1120)

 اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ، لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ صلى الله عليه وسلم حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ـ أَوْ لاَ إِلَهَ غَيْرُكَ ـ 

🤲 பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஆட்சி யும் உனக்கே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி, அவற்றில் உள்ளவை ஆகிய அனைத்தின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் மற்றும் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது சந்திப்பு உண்மை. உனது கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை. மறுமை உண்மை.

இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடு வேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.

அல்லாஹும்ம! ல(க்)கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி, வல் அர்ளி, வமன் ஃபீ ஹின்ன. வல(க்)கல் ஹம்து. ல(க்)க முல்க்குஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வல(க்)கல் ஹம்து. அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மன் ஃபீஹின்ன. வல(க்)கல் ஹம்து. அன்த்த மலிக்குஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வல(க்)கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅது(க்)கல் ஹக்கு. வ லிகாஉக்க ஹக்குன். வ கவ்லு(க்)க ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வந்நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் (ஸல்) ஹக்குன். வஸ்ஸா அத்து ஹக்குன்.

அல்லாஹும்ம! ல(க்)க அஸ்லம்த்து, வ பி(க்)க ஆமன்த்து, வ அலை(க்)க தவக் கல்த்து, வ இலை(க்)க அனப்த்து, வ பி(க்)க காஸம்த்து, வ இலை(க்)க ஹாகம்த்து. ஃபக்ஃபிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த; அல்லது லா இலாஹ ஃகைருக்க.

🎯 ஸஹர் நேரத்தில் ஓதும் பாவ மன்னிப்பு துஆ (குர்ஆன் 3:16)

رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ

🤲"எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' 

குறிப்பு : சுவனத்திற்கு செல்பவர்களின் தன்மைகள் மற்றும் அவர்களின் அமல்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் 3-வது அத்தியாயம் 15, 16, 17 வசனங்களில் குறிப்பிடுகின்றான். அவர்கள் ஸஹர் (سْحَارِ) நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று 17-வது வசனத்திலும், அவர்கள் செய்த பாவ மன்னிப்பு பிராத்தனையை 16-வது வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். 

தொகுப்பு : S. சித்தீக் M.Tech

No comments:

Post a Comment