பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

பெருவெடிப்பு சோதனை வெற்றி !!!

பெருவெடிப்பு சோதனை வெற்றி !!!

 இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது? எப்படி தோன்றியது? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனர். இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இப்பிரபஞ்சம் உருவானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.


சில மில்லி மீட்டர் அளவில் ஒன்று திரண்டிருந்த அணுக்கள் திடீரென பயங்கர வேகத்துடன் வெடித்துச் சிதறியது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இது விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு விரிவடைந்த போது வெப்பம் தனிந்த வாயுக்கள் தான் நட்சத்திரங்களாகவும் கோள்களாவும் உருவாயின என்பது தான் பெருவெடிப்புக் கொள்கை.


இது 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.அணு மோதலால் வெடித்துச் சிதறி இம்மாபெரும் பேரண்டம் உருவானது என்றால் செயற்கையாக அணு மோதலை ஏற்படுத்தி வெடிக்கச் செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர்.

ஐரோப்பாவின் அணு ஆராய்ச்சி மையம் சுவிட்சர்லாந்தில் உள்ள சேர்ன் அணு ஆராய்ச்சி மையத்தில் இந்தச் சோதனையை நடத்த திட்டமிட்டது. 80 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் உழைத்து சென்ற வருடம் இம்முயற்சியில் இறங்கினார்கள். சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்தனர்.

சுரங்கத்தின் 2 இடங்களில் இருந்து புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்க திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர்.

ஆனால் 2008 செப்டம்பர் 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.57 மணிக்கு பிக்-பேங் சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்டதிரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்ததால் ஒன்பது நாட்கள் மட்டுமே செயல்பட்ட இயந்திரம் செயல் இழந்தது. சோதனை தோல்வியில் முடிந்தது.

மீண்டும் இச்சோதனையை வெற்றிகரமாக நடத்திட பதினேழு மாதங்கள் விஞ்ஞானிகள் உழைத்து சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டனர்.கணித அடிப்படையிலும் ஊகமாகவும் சொல்லப்பட்டு வந்த பெருவெடிப்புக் கொள்கை இச்சோதனை மூலம் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில் கீழ்க்காணும் உண்மைகள் வெளிப்பட்டுள்ளன


  • அணுக்கள் மோதும் போது மாபெரும் ஆற்றல் அதில் இருந்து வெளிப்படுகிறது.                                                                                                                                                                        

  • அந்த ஆற்றல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.                                                                                                                                                                                       

  • பின்னர் விரிவடையும் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து  விரிவடைந்த ஆற்றல் சுருங்கி வெடிப்பதற்கு முன் இருந்த நிலையை அது அடைகின்றது. 
இது தான் இந்த சோதனை மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

இப்பிரபஞ்சம் உருவாகக் காரணமான அணு ஆற்றலுடனும் இப்பிரபஞ்சம் உருவாக்குவதற்கான அணு மோதலுடனும் இதை ஒப்பிடவே முடியாது.


பூமி உருண்டை என்பதைச் சொல்லிக் காட்டும் போது ஒரு கடுகை எடுத்துக் காட்டி இது போல் பூமி உருண்டையானது என்று சொல்வது போல் தான் இந்தச் சோதனை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடுகுக்கும் பூமிக்கும் அளவில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பது நமக்குத் தெரிகிறது. இரயில் வண்டியின் செயல்பாட்டை பொம்மை ரயில் மூலம் விளக்குவது போன்றது தான் இந்தச் சோதனை இப்பிரபஞ்சம் உருவாகும் போது வெடித்த அணுவின் ஆற்றல் மற்றும் அதன் வெப்பம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்த செயற்கை அணு மோதல் உதாரணம் சொல்லிக் காட்ட முடியாத அளவுக்குச் சிறியதாகும்.

இவர்கள் சோதித்த செயற்கை அணு மோதல் விரிவடைந்ததும் மீண்டும் சுருங்கி பழைய நிலைக்கு திரும்பியதும் சில நாட்களில் முடிந்து விட்டன. ஆனால் 14 பில்லியன் ஆண்டுக்கு முன் நிகழ்ந்த பெரு வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட விரிவடைதல் இன்னும் நிற்கவில்லை. விரிவடைந்து கொண்டே உள்ளது.

அதன் பின்னர் தான் விரிவடைதல் நின்று பழைய நிலைக்குத் திரும்பும். இதில் இருந்தே வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம்.

இது குறித்து இன்றைய 31-3-2010 தினமலரில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள்


ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.' அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம்.

இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம்.

இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும். இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.இ), பூமிக்கடியில் 27 கி.மீ.இ அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது.


காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும்.

கடந்த ஆண்டில் இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள  துகள்களை  மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது.

அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த  விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும்.

வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் அனைத்தும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு இது இறை வேதம் தான் என்பதை நிரூபிக்கின்றது.

அனைத்து இணைந்திருந்தன

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம். என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?   திருக்குர்ஆன் 21:30

பிரபஞ்சம் விரிவடைகிறது

(நமது) வலிமையால் வானத்தைப்  படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.    திருக்குர் ஆன் 51:47

மீண்டும் சுருட்டப்படும்

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.     திருக்குர் ஆன் 21:104  


நன்றி ஆன்லைன் பி.ஜே

No comments:

Post a Comment