பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, July 30, 2010

இட ஒதுக்கீடு தீ இந்தியா முழுவதும் பரவுவது நிச்சயம்

தமிழகத்தில் பற்ற வைக்கப்படும் இந்த இட ஒதுக்கீடு தீ இந்தியா முழுவதும் பரவுவது நிச்சயம் இன்ஷாஅல்லாஹ்!


 அடிமை இந்தியாவிலாவது முஸ்லிம்களுக்கென்று ஓரளவேனும் அரசியல் அதிகாரத்தில் கண்ணியம் இருந்ததைப் பார்க்க முடிகிறது.சுதந்திர இந்தியாவிலோ திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.அரசியல் அதிகாரத்தின் உயர் மட்டங்களிலும், பதவிகளிலும் முஸ்லிம்களுக்கென்று ஏதேனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறதா? ரப்பர் ஸ்டாம்பாக இருக்கும் அந்தஸ்தில் உள்ள ஜனாதிபதி போன்ற பதவிகளைத் தவிர அரசோச்சும் செல்வாக்கில் உள்ள பிரதமர்,முதல்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், சட்டசபை, மக்களவை சபாநாயகர் போன்ற பதவிகளில் நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து எத்தனை முஸ்லிம்கள் இருந்துள்ளனர்?! உங்கள் பார்வைக்கு கீழே ஒரு பட்டியலைத் தருகிறோம்.

பிரதமர்கள்
இந்தியாவின் பிரதமர்களாக

ஜவஹர்லால் நேரு(1947-1964)


குல்ஜாரிலால் நந்தா(1964 மே-ஜுன் தற்காலிகம்)


லால் பகதூர் சாஸ்திரி(1964-1966)


குல்ஜாரிலால் நந்தா(1966 ஜனவரி 11-24 தற்காலிகம்)


இந்திராகாந்தி(1966-1977)


மொரார்ஜி தேசாய்(1977-1979)


கரண்சிங்(1979-1980)


இந்திரா காந்தி (1980-1984)


ராஜீவ் காந்தி (1984-1989)


வி.பி.சிங்(1989-1990)


சந்திரசேகர்(1990-1991)


வி.பி.நரசிம்மராவ்(1991-1996)


வாஜ்பேய்(16-5-1996 to 28-05-1996)


தேவகௌடா(01-6-96 to 20-4-97)


வாஜ்பேய்(1999-2004)


மன்மோகன்சிங் (2004முதல்இன்று வரை) இருந்துள்ளனர்.

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த நாட்டில் 5ல் ஒரு பங்காக உள்ள முஸ்லிம்களில் ஒருவர் கூட பிரதமராக ஆக முடியவில்லை.அப்படிச் சொல்வதை விட பிரதமர் பதவிக்கான போட்டியில் கூட இல்லை என்பது எவ்வளவு வருத்தமான செய்தி.

இந்தியாவின் பிரதமர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் நீண்ட காலமாக இருந்துள்ளனர்.இவர்கள் இந்த பதவிக்கு வருவதற்கு முஸ்லிம்களின் ஓட்டு தான் பெரும் காரணமாக இருந்துள்ளது.இப்படி முஸ்லிம்களின் ஓட்டுகளைப் பெற்று,பதவிகளை பிடித்த காங்கிரஸ் பிரதமர் பதவிக்கு முஸ்லிம் வராமல் பார்த்துக் கொண்டது ஒடுக்கு முறை இல்லையா?

தலைமை தேர்தல் ஆணையர்கள்
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்களாக

சுகுமார் சென்(1950-1958)


கே.வி.கே.சுந்தரம்(1958-1967)


எஸ்.பி.சென்வர்மா(1967-1972)


நாகேந்திர சிங்(1972-1973)


டி.ஸ்வாமிநாதன்(1973-1977)


எஸ்.எஸ்.ஷக்தர்(1977-1982)


ஆர்.கே.திரிவேதி(1982-1985)


பெரிசாஸ்திரி(1985-1990)


வி.எஸ்.ரமாதேவி(1990 நவம்பர் 26 முதல் டிசம்பர் 11 வரை), டி.என்.சேஷன்(1990-1996)


எம்.எஸ்.கில்(1996-2001),


ஜே.எம்.லாப்டோ(2001 to 2004)


டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி(2004-2005 பி.பி.தாண்டன் (2005-2006), என்.கோபாலசாமி(2006-2009)


நவீன் சாவ்லா(2009 முதல் இன்று வரை)

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் மொத்தம் பதினைந்து தலைமைத் தேர்தல் ஆணையர்கள்இருந்துள்ளனர்.இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் கிடையாது.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக இருக்கும் தகுதி முஸ்லிம்களுக்கு இல்லையா? அல்லது தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்டார்களா?!


தமிழக முதல்வர்கள்

தமிழகத்தின் முதலமைச்சராக தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்த
ராமசாமி ரெட்டியார்(1947-1949)


இராஜபாளையத்தைச் சேர்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா (1949-1952)


பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாஜி (1952-1954)


நாடார் சமூகத்தைச் சேர்ந்த காமராஜர்(1954முதல் 1963வரை3முறை)


உயர் சாதியைச் சேர்ந்த பக்தவச்சலம் (1963-1967)


முதலியார் சமூகத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை (1967-1969)


ஆகியோரும் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கருணாநிதி 5 முறையும்


கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.(1977 முதல் 1987 வரை 3 முறையும்)


அவரது மனைவி ஜானகி ஒரு முறையும் (1988 ஜனவரி 7 முதல் 30 வரை)


பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஜெயலலிதா 3 முறையும் இருந்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தை விட குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் தமிழகத்தின் முதல்வர்களாக ஆகியுள்ள போது முஸ்லிம்களால் முதல்வராக மட்டுமல்ல...முக்கிய பதவிகளைக் கூடத் தக்க வைக்க முடியவில்லை,காரணம் என்ன? முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டது எப்படி?



தமிழக சபாநாயகர்கள்
+
தமிழக சட்டப்ரேவை சபாநாயகர்களாக சிவசண்முகப்பள்ளை(1946-1955), என்.கோபாலமேனன்(1955-56)


யு.கிருஷ்ணராவ்(1957-1961)


எஸ்.செல்லப்பாண்டி(1962-67)


சி.பா.ஆதித்தனார்(1967-1968)


புலவர் கே.கோவிந்தன்(1969-71)


கே.ஏ.மதியழகன்(1971-1972)


கே.கோவிந்தன்(1973-1977)


முனுஆதி(1977-1980)


கே.ராஜாராம்(1980-1985)


பி.எச்.பாண்டியன்(1985-1989)


தமிழ்க்குடிமகன் (1989-1991)


சேடப்பட்டி முத்தையா(1991-1996)


பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்(1996-2002)


கே.காளிமுத்து(2001-06)


ஆர்.ஆவுடையப்பன் (19.05.2006 முதல் இன்று வரை)

தமிழக சட்டசபையின் சபாநாயகர்களாக இவ்வளவு பேர் இருந்திருக்க ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பே கிடைக்கவில்லை.


'அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்த சிறப்பும் கிடையாது. வெள்ளையனுக்கு கருப்பனை விட எந்த சிறப்பும் கிடையாது இறையச்சத்தை தவிர' என்று நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதி 3270)

No comments:

Post a Comment