பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, May 8, 2020

அல்குர்ஆன் வசனமும் - 48

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : { 48 }*
                           
*☄️கொள்கை*
         *விளக்கங்கள் பற்றி*
            *இறங்கிய வசனங்கள்{ 10 }*

*☄️பெரும்பாவம்*
              *செய்தவர்களுக்கும்*
                        *மன்னிப்பு*

*قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ*

_*🍃தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!*_

    *📖அல்குர்ஆன் 39:53📖*

ﺣﺪﺛﻨﻲ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺑﻦ ﻣﻮﺳﻰ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻫﺸﺎﻡ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﺃﻥ اﺑﻦ ﺟﺮﻳﺞ، ﺃﺧﺒﺮﻫﻢ ﻗﺎﻝ ﻳﻌﻠﻰ: ﺇﻥ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ ﺃﺧﺒﺮﻩ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ: ﺃﻥ ﻧﺎﺳﺎ، ﻣﻦ ﺃﻫﻞ اﻟﺸﺮﻙ ﻛﺎﻧﻮا ﻗﺪ ﻗﺘﻠﻮا ﻭﺃﻛﺜﺮﻭا، ﻭﺯﻧﻮا ﻭﺃﻛﺜﺮﻭا، ﻓﺄﺗﻮا ﻣﺤﻤﺪا ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ -[126]- ﻓﻘﺎﻟﻮا: ﺇﻥ اﻟﺬﻱ ﺗﻘﻮﻝ ﻭﺗﺪﻋﻮ ﺇﻟﻴﻪ ﻟﺤﺴﻦ، ﻟﻮ ﺗﺨﺒﺮﻧﺎ ﺃﻥ ﻟﻤﺎ ﻋﻤﻠﻨﺎ ﻛﻔﺎﺭﺓ ﻓﻨﺰﻝ: {§ﻭاﻟﺬﻳﻦ ﻻ ﻳﺪﻋﻮﻥ ﻣﻊ اﻟﻠﻪ ﺇﻟﻬﺎ ﺁﺧﺮ، ﻭﻻ ﻳﻘﺘﻠﻮﻥ اﻟﻨﻔﺲ اﻟﺘﻲ ﺣﺮﻡ اﻟﻠﻪ ﺇﻻ ﺑﺎﻟﺤﻖ، ﻭﻻ ﻳﺰﻧﻮﻥ} [اﻟﻔﺮﻗﺎﻥ: 68] ﻭﻧﺰﻟﺖ {ﻗﻞ ﻳﺎ ﻋﺒﺎﺩﻱ اﻟﺬﻳﻦ ﺃﺳﺮﻓﻮا ﻋﻠﻰ ﺃﻧﻔﺴﻬﻢ، ﻻ ﺗﻘﻨﻄﻮا ﻣﻦ ﺭﺣﻤﺔ اﻟﻠﻪ} [اﻟﺰﻣﺮ: 53]*

_இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_*🍃இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைச் செய்தனர்; விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர். அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் கூறுபவையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)’ என்று கூறினர். அப்போது, ‘(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள்…’ எனும் (25:68) வசனம் அருளப்பெற்றது. மேலும், ‘தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்!..’ எனும் (39:53) வசனமும் அருளப்பெற்றது.*_

     *📚நூல்: புகாரி (4810)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment