பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, March 20, 2020

மண்ணறை- 19

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 19 ]*

*மண்ணறை தண்டனைக்கான*
             *காரணங்கள் [ 02 ]*

*☄வழிகெட்ட*
          *கொள்கையைப்*
                 *பின்பற்றுதல்☄*

*🏮🍂 பாவமான காரியங்கள் அனைத்தும் தன்டனையை பெற்று தரக் கூடியதாக இருந்தாலும் குறிப்பிட்ட சில பாவங்களினால் மண்ணறையில் கிடைக்கும் தண்டனையை பற்றி நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.* இந்த பாவங்கள் நமக்கு ஏற்ப்படாதவாறு நாம் நடந்துக் கொண்டால் *மண்ணறை தண்டனையிலிருந்து அல்லாஹ் நாடினால் தப்பித்துக் கொள்ளலாம்.*

*☄இன்றைக்கு சமுதாயத்தில் பல வழிக்கெட்டகொள்கைகள் தோன்றியிருக்கிறது. நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.*

*☄ தர்ஹா வழிபாடு, தனிமனிதர் வழிபாடு போன்றவைகளால் ஒரு சாரார் அல்லாஹ்விற்க்கு இணை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.*

*☄ நபி (ஸல்) அவர்களைப் போன்று மிர்ஸா குலாம் என்பவனும் நபி என்று நம்பி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டும் தடம் புரண்டுவிட்டார்கள்.*

*☄மேலும் குர்ஆன்,ஹதீஸை இந்த இரண்டை மட்டும் மூல ஆதாரமாகக் கொள்ளாமல்மற்றவர்களின் கருத்துகளையும் புதுமையான விஷயங்களையும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவதும் மக்களிடையே இருந்து வருகிறது.*

*☄ குர்ஆனையும்,ஹதீஸையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற நேரான கொள்கையை ஏற்று இதை தவிர உள்ள அனைத்து வழிகெட்ட கொள்கையையும், கோட்பாடுகளையும் புறக்கணித்தால் மண்ணறை வாழ்க்கையில் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால் மண்ணறை வாழ்க்கை நரக வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.*

_*ﻋﻦ ﺃﻧﺲ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " اﻟﻌﺒﺪ ﺇﺫا ﻭﺿﻊ ﻓﻲ ﻗﺒﺮﻩ، ﻭﺗﻮﻟﻲ ﻭﺫﻫﺐ ﺃﺻﺤﺎﺑﻪ ﺣﺘﻰ ﺇﻧﻪ ﻟﻴﺴﻤﻊ ﻗﺮﻉ ﻧﻌﺎﻟﻬﻢ، ﺃﺗﺎﻩ ﻣﻠﻜﺎﻥ، ﻓﺄﻗﻌﺪاﻩ، ﻓﻴﻘﻮﻻﻥ ﻟﻪ: ﻣﺎ ﻛﻨﺖ ﺗﻘﻮﻝ ﻓﻲ ﻫﺬا اﻟﺮﺟﻞ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ؟ ﻓﻴﻘﻮﻝ: ﺃﺷﻬﺪ ﺃﻧﻪ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ، ﻓﻴﻘﺎﻝ: اﻧﻈﺮ ﺇﻟﻰ ﻣﻘﻌﺪﻙ ﻣﻦ اﻟﻨﺎﺭ ﺃﺑﺪﻟﻚ اﻟﻠﻪ ﺑﻪ ﻣﻘﻌﺪا ﻣﻦ اﻟﺠﻨﺔ، ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻓﻴﺮاﻫﻤﺎ ﺟﻤﻴﻌﺎ، ﻭﺃﻣﺎ اﻟﻜﺎﻓﺮ - ﺃﻭ اﻟﻤﻨﺎﻓﻖ - ﻓﻴﻘﻮﻝ: ﻻ ﺃﺩﺭﻱ، ﻛﻨﺖ ﺃﻗﻮﻝ ﻣﺎ ﻳﻘﻮﻝ اﻟﻨﺎﺱ، ﻓﻴﻘﺎﻝ: ﻻ ﺩﺭﻳﺖ ﻭﻻ ﺗﻠﻴﺖ، ﺛﻢ ﻳﻀﺮﺏ ﺑﻤﻄﺮﻗﺔ ﻣﻦ ﺣﺪﻳﺪ ﺿﺮﺑﺔ ﺑﻴﻦ ﺃﺫﻧﻴﻪ، ﻓﻴﺼﻴﺢ ﺻﻴﺤﺔ ﻳﺴﻤﻌﻬﺎ ﻣﻦ ﻳﻠﻴﻪ ﺇﻻ اﻟﺜﻘﻠﻴﻦ "*_

_*🍃அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_
_*ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்❓' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.*_

*🎙அறிவிப்பவர் : அனஸ்(ரலி)*

*📚 நூல் : புகாரி (1338) 📚*

*🏮🍂யூதர்களாக மரணித்தால் மண்ணறையில் வேதனை செய்யப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.*

_*عَنْ أَبِي  أَيُّوبَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه  وسلم بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ فَسَمِعَ صَوْتًا فَقَالَ ‏"‏ يَهُودُ تُعَذَّبُ فِي قُبُورِهَا ‏"*_

_*(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு "யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்" என்று கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி)*

*📚 நூல் : முஸ்லிம் (5504) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment