பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

ஜும்ஆவும் ஸலவாத்தும்

*ஜும்ஆவும் ஸலவாத்தும் *

*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ*

*அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.*

*Allaahumma salli 'alaa Muhammadin wa 'alaa 'aali Muhammadin, kamaa sallayta 'alaa 'Ibraaheema wa 'alaa 'aali 'Ibraaheema, 'innaka Hameedun Majeed. Allaahumma baarik 'alaa Muhammadin wa 'alaa 'aali Muhammadin, kamaa baarakta 'alaa 'Ibraaheema wa 'alaa 'aali 'Ibraaheema, 'innaka Hameedun Majeed.*

*இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.*

*O Allah, bestow Your favor on Muhammad and on the family of Muhammad as You have bestowed Your favor on Ibrahim and on the family of Ibrahim, You are Praiseworthy, Most Glorious. O Allah, bless Muhammad and the family of Muhammad as You have blessed Ibrahim and the family of Ibrahim, You are Praiseworthy, Most Glorious.*

*அறிவிப்பவர் கஅப் இப்னு உஜ்ரா(ரலி)  புகாரி 4797*

*யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*قَالَ رَسُولُ اللهِ (ﷺ) مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً وَاحِدَةً ، صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ ، وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ ، وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ.*
*அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*
*நூல் : நஸாயீ 1221*

*உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும்.*
*அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள்.*
*அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது.*
*அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும்*
*அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும்*
*எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள்*

*நூல்: அபூதாவூத் 883*

No comments:

Post a Comment