பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 23, 2018

கோபம் கோபம் கோபம் கோபம்❗

✍கோபம்   கோபம்   கோபம்   கோபம்❗

👉உணர்வுகள் மிதிக்கப்படும் போது, உரிமைகள் பறிக்கப்படும் போது நியாயங்கள் மீறப்படும் போது ஆத்திரமும் கோபமும் ஆர்ப்பரித்து எழுவது இயற்கை தான்.❗

👉இது போன்ற காரணத்திற்கு மட்டும் தான் கோபம் வருகிறதா? இல்லை. இதுவல்லாத பல காரணங்களுக்காக நாம் எல்லை மீறிக் கோபப்படுகிறோம்.❗

➡ஒரு சிறிய வார்த்தைக்காகக் கோபப்பட்டு அதன் காரணமாக பகை உணர்வை மலை போல் உயர்த்தி விடுகிறோம். இதனால் அன்போடும் பாசத்தோடும் இருந்தவர்கள் பாம்பும் கீறியும் போல் மாறி விடுகிறார்கள்.❗

➡நல்ல நட்பு சிதறி, அன்புள்ளங்கள் தீக்கங்குகளாக மாறிவிடுகின்றன. தேவையில்லாமல் கோபப்பட்டு பகை உணர்வை ஏற்படுத்துபவர்களுக்கு அழகிய ஒரு போதனையை நபிகளார் கூறியுள்ளார்கள்.❗

➡மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், #கோபத்தின் #போது_தன்னைக்_கட்டுப்படுத்திக் #கொள்பவனே_ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.❗

🗣அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),✅

📚நூல்: புகாரி (6114)📗

➡கோபம் ஏற்படும் போது எவ்வளவு பெரிய மனிதர்களும் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறார்கள். இதனால் விபரீதமான முடிவுக்குச் சென்று பின்னர் வருத்தப்படுவார்கள். ❗

👉இவர்கள் உண்மையிலேயே பெரிய மனிதர்கள் தான் என்றால் முதலில் கோபம் வரும் போது அதைத் தடுத்து நிறுத்தி சமநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.❗

➡அடிக்கடி கோபப்படும் மனிதருக்கு நாம் செய்ய வேண்டிய முதல் உபதேசம், கோபப்படாதே! என்பது தான். இவ்வாறு தான் நபிகளார் ஒரு மனிதருக்கு தொடர்ந்து அறிவுரை கேட்டபோது. கோப்பப்படாதே என்றே அறிவுரை வழங்கினார்கள்.❗

➡ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம், #எனக்கு_அறிவுரை_கூறுங்கள்_என்றார். நபி (ஸல்) அவர்கள், #கோபத்தைக்_கைவிடு_என்று (அறிவுரை) #கூறினார்கள்.❗

➡அவர் #பல_முறை_கேட்ட_போதும்_நபி (ஸல்) #அவர்கள்_கோபத்தைக்_கைவிடு #என்றே_சொன்னார்கள்.❗

🗣அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),✅

📚நூல்: புகாரி (6116)📗

➡நல்ல மனிதர்களைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் போது, அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள் என்று குறிப்பிடுகிறது.❗

📖➡அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். #கோபத்தை_மென்று_விழுங்குவார்கள். #மக்களை_மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.❗

📖(அல்குர்ஆன் 3:134)📖

➡கோபத்தை உண்டாக்கும் வண்ணம் யாரும் நடந்து கொண்டால் அவர்களை மன்னித்து, கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.❗

➡உங்களுக்கு எந்தப் பொருள் கொடுக்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளே. அல்லாஹ்விடம் இருப்பதே நம்பிக்கை கொண்டு தம் இறைவனையே சார்ந்திருப்போருக்கும், பெரும் பாவங்களையும், வெட்கக்கேடான வற்றையும் தவிர்த்துக் கொள்வோருக்கும், கோபம் கொள்ளும் போது மன்னிப்போருக்கும், தமது இறைவனுக்கு பதிலளித்து தொழுகையை நிலை நாட்டி தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும்.❗

📖(அல்குர்ஆன் 42:36-39)📖

➡கோபத்தை மனிதர்களிடம் ஷைத்தான் ஏற்படுத்துகின்றான். இவ்வாறு தேவையில்லாமல் கோபத்தை ஏற்படுத்தினால் ஷைத்தானிடமிருந்து அந்நேரத்தில் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள்.❗

➡நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம்.❗

➡அவர்கல் ஒருவரது முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். ❗

➡அப்போது நபி (ஸல்) அவர்கள், எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். ❗

#அவூது_பில்லாஹி_மினஷ்_ஷைத்தானிர் #ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும் என்று கூறினார்கள்.❗

🗣அறிவிப்பவர்: சுலைமான் பின் ஸுரத் (ரலி),✅

📚நூல்: புகாரி (6115)📗


No comments:

Post a Comment