பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, June 23, 2019

சர்ச்சைக்குரிய ஹதீஸ்கள் - 7

*🌐🌐🌐சர்ச்சைக்குரிய ஹதீஸ்கள்🌐🌐🌐*

*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉 தொடர் பாகம் 7👈*

*🌐விவசாயம் செய்தால் இழிவு வருமா❓🌐*

*✍✍✍அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள் இந்தக் கருவி ஒரு சமூகத்தினரின் வீட்டில் புகும் போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸியாத்*

*நூல் : புகாரி (2321)*

📕📕📕விவசாயம் செய்தால் அல்லாஹ் இழிவைத் தருவான் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் குர்ஆனும் ஹதீஸும் விவசாயத்தை புகழ்ந்து சொல்கிறது. அதில் ஈடுபட்டு நல்லகாரியங்களை செய்யுமாறு ஆர்வமூட்டுகிறது.📕📕📕

*🌎படிப்பினைகளைத் தருகின்ற விவசாயம்🌎*

*✍✍✍நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். நாம் கடன் பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப் பட்டு விட்டோம் என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.✍✍✍*

*அல்குர்ஆன் (56 : 63)*

📘📘📘அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.📘📘📘

*அல்குர்ஆன் (16 : 11)*

“ *✍✍✍வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்” என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா❓✍✍✍*

*அல்குர்ஆன் (32 : 27)*

📗📗📗அலாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.📗📗📗

*அல்குர்ஆன் (39 : 21)*

*✍✍✍இரண்டு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அவர்களில் ஒருவருக்கு இரண்டு திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தினோம். அவ்விரண்டுக்கும் பேரீச்சை மரங்களால் வேலி அமைத்து, அவ்விரண்டுக்கும் இடையே பயிர்களையும் ஏற்படுத்தினோம்.✍✍✍*

*அல்குர்ஆன் (18 : 32)*

📙📙📙அல்லாஹ் மனிதர்களுக்கு புரிந்த பாக்கியங்களில் ஒன்றாக விவசாயத்தை குறிப்பிடுகிறான். விவசாயத்தில் பல படிப்பனைகளையும் வைத்திருக்கிறான். இருவருக்கு தோட்டங்களையும் பயிர்களையும் வழங்கி அருள்புரிந்திருக்கிறான். அல்லாஹ்வால் புகழ்ந்து சொல்லப்படும் விவசாயத்தை செய்தால் இழிவு வரும் என்று நம்புவது மேற்கண்ட குர்ஆன் வசனங்களுக்கு எதிரானதாகும்.📙📙📙

*🏓நிலையான தர்மம்🏓*

*✍✍✍இன்னும் நபி (ஸல்) அவர்களும் விவசாயத்தை புகழ்ந்து கூறியுள்ளார்கள்✍✍✍.*

📚📚📚(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு முபஷ்ஷிர் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்களது பேரிச்சந்தோப்பிற்குச் சென்றார்கள். உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களிடம் இந்த பேரீச்ச மரங்களை நட்டுவைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறைமறுப்பாளரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை ஒரு முஸ்லிம் தான் (நட்டுவைத்தார்) என்று விடையளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் ஒருவர் மரமொன்றை நட்டுவைத்து அல்லது விதையொன்றை விதைத்துப் பயிர் செய்து அதிலிருந்து (வரும் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு மனிதனோ கால்நடையோ அல்லது ஏதேனும் ஒன்றோ உண்டால் அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.📚📚📚

*அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்*

*நூல் : முஸ்லிம் (3160)*

*✍✍இதைப் போன்ற ஹதீஸ் புகாரியில் (2320) என்ற எண்ணில் இடம்பெற்றுள்ளது. நாம் செய்த விவசாயத்தின் மூலம் யாராவது பயன்பற்றால் அதன் மூலம் நாம் இறந்தப் பிறகும் கூட நமக்கு நன்மைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இதனால் தான் மறுமைநாள் வந்துவிட்டாலும் இந்த நல்ல செயலை செய்யமுடிந்தால் உடனே செய்துவிடவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍.*

📕📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவரது கையில் பேரீத்தங்கன்று இருக்கும் நிலையில் கியாமத் நாள் வந்துவிட்டால் அதை நட்டிவைப்பதற்கு அவரால் முடிந்த பட்சத்தில் அவர் நட்டுவைத்துவிடட்டும்.📕📕

*அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)*

*நூல் : அஹ்மத் (12512)*

*✍✍நிலையான தர்மத்தை பெற்றுத்தரும் இத்தொழில் இழிவைத் தரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கவே மாட்டார்கள்.✍✍*

*🕋பொருந்தாத விளக்கம்🕋*

📘📘மேற்கண்ட ஹதீஸை சரிகாணுபவர்கள் இதன் நேரடிப்பொருளை விட்டு விட்டு பொருந்தாத வேறொரு விளக்கத்தை இதற்கு கூறுகிறார்கள். பிற்காலத்தில் ஆட்சியாளர்கள் விவசாயிகளின் மீது பல வரிகளை இட்டு அவர்களை பெரும் கஷ்டத்தில் ஆழ்த்துவார்கள் என்பதைத் தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.📘📘

*✍✍சிறந்த தொழிலான விவசாயத்தை செய்யும் விவசாயிகள் பிற்காலத்தில் அடையவிருக்கும் கஷ்டத்தை முன்னரிவிப்பாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமேத் தவிர விவசாயத்தை பழிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறுகிறார்கள்.✍✍*

*⏳நமது விளக்கம்⏳*

📗📗இவர்கள் கூறும் இந்த விளக்கம் கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த ஹதீஸ் இந்த அர்தத்தைத் தரவே இல்லை. இவர்கள் இந்த விளக்கத்தை கூறுவதற்கு முன்பே இப்படி ஒரு விளக்கம் இந்த ஹதீஸிற்கு சொல்லப்படுகிறது என்று நமக்குத் தெரியும். இந்த விளக்கம் மட்டுமில்லாமல் எந்த விளக்கமும் பொருந்தவில்லை என்பதால் தான் இந்த ஹதீஸ் பலவீனமானது என்ற முடிவுக்கு நாம் வந்தோம். இந்த விளக்கம் பலகாரணங்களால் தவறானதாகும்.📗📗

*✍✍ஒரு ஹதீஸிற்கு விளக்கம் கொடுப்பதாக இருந்தால் இன்னொரு ஹதீஸை வைத்தோ அல்லது குர்ஆன் வசனத்தை வைத்தோ விளக்கம் கொடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் இந்த விளக்கத்திற்கு எந்த ஆதாரத்தையும் காட்டாமல் இவர்களாக ஒன்றை கற்பணை செய்துகொண்டு அது தான் இதன் விளக்கம் என்கிறார்கள்✍✍* .

📙📙விவசாயிகள் வரிகேட்டு கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று குர்ஆன் ஹதீஸில் தெளிவாகவோ மறைமுகமாகவோ எங்கும் கூறப்படாததால் இந்தக் கற்பணையை இதற்குரிய விளக்கமாக எடுக்கமுடியாது📙📙.

*✍✍ஒரு குறிப்பிட்ட காலத்தில் இழிவு ஏற்படும் என்று ஹதீஸில் சொல்லப்பட்டிருந்தால் கூட இந்த விளக்கத்தை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எந்த விதமான காலவரையரையும் சொல்லப்படாமல் விவசாயக் கருவி இருக்கும் காலமெல்லாம் அங்கு இழிவு இருக்கும் என்று எல்லாக்காலத்திற்கும் பொருந்துமாறு கூறப்பட்டுள்ளது✍✍* .

📚📚இந்த ஹதீஸில் வரும் அபூ உமாமா என்ற நபித்தோழர் சில விவசாயக் கருவிகளை பார்த்தபோது இந்த ஹதீஸை அறிவிக்கிறார். பின்னொரு காலத்தில் விவசாயிகள் சிரமப்படுத்தப்படுவார்கள் என்பது இதன் விளக்கமாக இருந்தால் தன் காலத்தில் இருக்கும் விவசாயக் கருவிகளுக்கு இந்த ஹதீஸை அவர் பொருத்தியிருக்க மாட்டார். விவசாயக் கருவிகளை எப்போது பயன்படுத்தினாலும் அப்போது இழிவு வரும் என்பதையே அபூ உமாமாவின் செயல் உணர்த்துகிறது📚📚.

*✍இதே ஹதீஸ் இமாம் தப்ரானீ அவர்கள் தொகுத்த முஸ்னது ஷாமிய்யீன் என்ற நூலில் கூடுதலான சில வாசகங்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது✍.*

📕அபூ உமாமா (ரலி) அவர்கள் கலப்பையையும் இன்னும் சில விவசாயக் கருவிகளையும் பார்த்த போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தக்கருவிகள் எந்த ஒரு கூட்டத்தாரின் வீட்டில் நுழைந்தாலும் அவர்கள் தங்களுக்குத் தானே இழிவை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பதில்லை. அந்த இழிவு மறுமைநாள் வரைக்கும் அவர்களை விட்டும் அகலாது.📕

*அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸியாத்*

*நூல் : முஸ்னது ஷாமிய்யீன் பாகம் : 2 பக்கம் : 6 ஹதீஸ் எண் : 816*

*✍விவசாயக் கருவி வீட்டில் இருந்தால் கியாமத் நாள் வரைக்கும் இழிவு நீடிக்கும் என்று இந்த செய்தி கூறுகிறது. ஒருகாலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வை இது குறிப்பதாக இருந்தால் கியாமத் நாள் வரை இழிவு நீடிக்கும் என்று சொல்லப்படாது. மறுமை நாள் வரைக்கும் இழிவு நீடிக்கும் என்று ஹதீஸில் சொல்லப்படுவதால் கியாமத் நாள் வரைக்கும் விவசாயிகள் கொடுமைப்படுத்தப் படுவார்கள் என்று தான் விளக்கம் கொடுக்க வேண்டும்✍.*

📘இன்றைக்கு அரசு விவசாயிகள் மேலோங்குவதற்காக பல மானியங்களைத் தருகிறது. கடன்களை தள்ளுபடி செய்கிறது. எனவே விவசாயிகள் எல்லா நேரங்களிலும் சிரமத்திற்குள்ளாவார்கள் என்ற விளக்கம் பொருந்தாத விளக்கம்📘.

*✍பொதுவாக எந்தத் தொழிலையும் ஒருவன் திறன்பட செய்தாலும் அதில் அவன் சிறந்த முன்னேற்றத்தை அடைவான். இந்த அடிப்படையில் விவசாயத்தில் தங்களது முயற்சியை செலவழித்தவர்கள் நல்ல பலனை அடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இழிவு வரவில்லை. மாறக செல்வம் தான் வருகிறது.✍*

📗எனவே இது போன்ற பொருந்தாத விளக்கங்களை விட்டு விட்டு குர்ஆனிற்கு மாற்றமானக் கருத்தை தரும் இந்த ஹதீஸை புறக்கணிப்பதே இஸ்லாமியக் கொள்கைக்கு பாதுகாப்பானதாகும்📗 .

*✍தாங்கள் கூறிய கற்பணைக் கதைதான் இதற்கு விளக்கம் என்று முரண்டுபிடித்தால் அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. விவசாயம் செய்தால் இழிவு வரும் என்றக் கருத்தை நாம் மறுப்பதைப் போல் இவர்களும் மறுக்கத்தான் செய்கிறார்கள். நாம் தெளிவாக மறுக்கிறோம். இவர்கள் ஹதீஸை ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறிக்கொண்டு மறுக்கிறார்கள். இது தான் வித்தியாசம்✍* .

*🔥பல்லி இறைத்தூதருக்கு எதிராக செயல்பட்டதா❓🔥*

*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 8*

No comments:

Post a Comment