பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, February 11, 2020

மண்ணறை - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 03 ]*

*☄ மறுமையை நினைவூட்டும்*
                   *மண்ணறை*

*🏮🍂 மண்ணறைகள் இறையச்சத்தையும், மறுமை வாழ்வையும் நினைவூட்டக்கூடியவை என்பதால் மண்ணறைகளுக்குச் சென்று பார்த்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!*_

*🎙அறிவிப்பவர்-அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல்-முஸ்லிம்-(1777) 📚*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻣﻨﻴﻊ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻫﺸﻴﻢ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﻟﺸﻴﺒﺎﻧﻲ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﻟﺸﻌﺒﻲ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻣﻦ ﺭﺃﻯ _*اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، «ﻭﺭﺃﻯ ﻗﺒﺮا ﻣﻨﺘﺒﺬا ﻓﺼﻒ ﺃﺻﺤﺎﺑﻪ ﺧﻠﻔﻪ، ﻓﺼﻠﻰ ﻋﻠﻴﻪ»*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.*_

*🎙அறிவிப்பவர்-புரைதா (ரலி)*

*📚 நூல்-திர்மிதி (974)*

ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺳﻠﻴﻤﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻭﻫﺐ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻳﻮﻧﺲ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﺮﻭﺓ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ: ﺃﻧﻪ _*ﺳﻤﻊ ﺃﺳﻤﺎء ﺑﻨﺖ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﺗﻘﻮﻝ: «ﻗﺎﻡ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﻄﻴﺒﺎ ﻓﺬﻛﺮ ﻓﺘﻨﺔ اﻟﻘﺒﺮ اﻟﺘﻲ ﻳﻔﺘﺘﻦ ﻓﻴﻬﺎ اﻟﻤﺮء، ﻓﻠﻤﺎ ﺫﻛﺮ ﺫﻟﻚ ﺿﺞ اﻟﻤﺴﻠﻤﻮﻥ ﺿﺠﺔ»*_

_*🍃ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.*_

*🎙 அறிவிப்பவர்-அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)*

*📚 நூல்-புகாரி (1373) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄பிரதி பலன் கிடைக்குமிடம்☄*

🏮🍂 உலகில் நாம் செய்கின்ற நன்மைகளுக்கு முழுமையான பரிசும் தீமைகளுக்கு முழுமையான தண்டனையும் மறுமையில் தான் கிடைக்கவிருக்கிறது. *மண்ணறை, மறுமை வாழ்வின் முதல் நிலை என்பதால் நல்லவர்களுக்கான பரிசும், தீயவர்களுக்கான தண்டனையும் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.*

*இறந்தவர்கள் தாங்கள் செய்த செயல்களுக்கான கூலியை மண்ணறை வாழ்வில் பெற்றுக் கொண்டிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

ﺣﺪﺛﻨﺎ ﺁﺩﻡ، ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ، _*ﻋ ﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ، ﻗﺎﻟﺖ: ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺴﺒﻮا اﻷﻣﻮاﺕ، ﻓﺈﻧﻬﻢ ﻗﺪ ﺃﻓﻀﻮا ﺇﻟﻰ ﻣﺎ ﻗﺪﻣﻮا»*_

_*🍃இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_
_*இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.“*_

*🎙 அறிவிப்பவர்-ஆயிஷா(ரலி)*

*📚 நூல்-புகாரி- (1393)*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment