பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, April 14, 2021

ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு*❗

🗣️*மக்களே! ஹதீஸ் கலை தோன்றிய வரலாறு*❗

🗣️*நபியவர்கள் கூறியதாக சந்தேகம் ஏற்படும் போது அதை உறுதிப்படுத்தி கொள்ளவேண்டும்*❗

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗

🗣️*என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்.*❗

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி)

📚நூல்: புகாரி 3461

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗

🗣️*(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.*❗

அறிவிப்பவர்: அலீ (ரலி)

📚நூல்: புகாரி 106

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

🗣️*என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.*❗

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

📚நூல்: புகாரி 110

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

🗣️*பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.*❗

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

📚நூல்: முஸ்லிம் 1

🗣️*திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸ்களிள் அடிப்படையில்தான்  ஹதீஸ்கலை விதிகள் தொகுக்கப் பெற்றன என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.*❗

🗣️*நபியவர்கள் கூறியவற்றை அவர்கள் கூறியவாறே எடுத்துரைக்க வேண்டும், நபியவர்களின் மீது பொய்யாகக் கூறினால் நிரந்தர நரகமே தங்குமிடம்*❗ 

🗣️*என்ற நபியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய காரணத்தினால் ஸஹாபாக்கள் நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தியை உறுதிப்படுத்தும் விசயத்தில் மிகப் பேணுதலாக நடந்து கொண்டனர்.*❗ 

🗣️*நபியவர்கள் கூறியதாக சந்தேகம் ஏற்படும் என்றால் அதை உறுதிப்படுத்தி கொண்டனர்.*❗

No comments:

Post a Comment