பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, July 17, 2017

நபிகள்_நாயகம்(ஸல்)........

*#நபிகள்_நாயகம்(ஸல்)........*

*உலகின் எந்த பகுதியிலும் ஒரு தலைவர் இறந்து விட்டால் அவர் கொள்கையை காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.*

*தலைவரை தேர்வு செய்வதற்குள் பலவிதமான போட்டிகள் நிலவும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.*

*1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்காவிலும், மதீனாவிலும் ஓர் தலைவர் வாழ்ந்தார். அவர் மரணித்து 1400 ஆண்டுகள் ஆகி விட்டது.*

*ஆனால் அவர் விட்டு சென்ற கொள்கை அழிந்து விடவில்லை, மாறாக பிரம்மாண்டமாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி உலகின் 200 கோடி மக்களை வென்றெடுத்துள்ளது.*

*தலைவரும் உயிரோடு இல்லை, தலைவரின் முகத்தை அன்றைய மக்களை தவிர யாரும் பார்த்தது இல்லை, தலைவரின் படங்கள் இல்லை, சிலைகள் இல்லை, தலைவரின் இடத்தில் வேறு தலைவரும் இல்லை,*

*ஆனால் கொள்கை மட்டும் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துள்ளது. 14 நூற்றாண்டில் உலகின் கால்வாசி மக்களை ஈர்த்துள்ளது. அவருடைய கொள்கை நுழையாத நாடே உலகில் இல்லை.*

*உள்ளங்களை ஈர்த்தது மட்டுமல்ல, 200 கோடி மக்களும் தங்கள் உயிரை விட அவரையே அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார்கள்.*

*200 கோடி மக்களும் தங்களுடைய வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர் காட்டிச்சென்ற வழியிலேயே தீர்வை எட்டுகின்றனர். இது வேறு எந்த சமுதாயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு.*

*இஸ்லாமியர்கள் அதிகம் தர்மம் செய்பவர்கள் என்று பிரிட்டன் கூறுகிறது. உலகின் எந்த பகுதியில் சுனாமி, வெள்ளம், புயல், நிலநடுக்கம் என்று யார் பாதிக்கப்பட்டாலும் இஸ்லாமியர்களின் மனிதநேய பணி மகத்தானது என்று ஐநாவின் அறிக்கை கூறுகிறது.*

*இஸ்லாமியர்கள் இந்த பெயரையும், பெருமையையும் பெற அவரே உண்மையான சொந்தக்காரர். அவர் தான் இஸ்லாமியர்களுக்கு மனிதநேயத்தை ஊட்டினார்.*

*பொருளாதாரம், குடும்பவியல், வாழ்வியல், நீதித்துறை என்று அவர் வகுத்த கொள்கையே உலகின் பெரும்பாலான நாடுகள் பின்பற்றி கொண்டிருக்கிறது.*

*அவருடைய பெயர் இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒரு பகுதியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.*

*யார் அவர்..?*

*எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே..!!*
*ஜனாதிபதியாக பத்து வருடங்கள் ஆட்சி செய்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.*

*ஆனால், அவரது வீட்டிலோ வறுமை.*

*ஜகாத் (தர்மம்) பொருட்கள், அரசு கஜானாவில் வந்து குவியும்.*
*இல்லையென்று வருவோர்க்கு "இதோ இந்த ஒட்டகத்தை ஓட்டிச் செல்", என்று சொல்லுமளவுக்கு அரசின் நிதி நிலை அமோக வளர்ச்சியில் இருந்த காலத்திலும் கூட,*

*ஜனாதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அடுப்பு பற்ற வைக்க இயலாத அளவிற்கு வறுமை.*
*(ஆதாரம் புஹாரி 2567)*

*கோதுமை மாவை, சல்லடை செய்து பயன்படுத்த இயலாத அளவிற்கு வறுமை.*
*(ஆதாரம் புஹாரி 5413)*

*அந்த மாவை கூட தண்ணீர் ஊற்றி பிசைந்து சாப்பிட வேண்டிய அளவிலான கொடிய வறுமை.*
*(ஆதாரம் புஹாரி 5413)*

*வயிற்றில் கல்லை நிரப்பிக் கொண்டு பசியாற்றினார்.*

*பசியின் கொடுமையால் இரவில் இரவில் தூக்கமின்றி அமர்ந்திருந்த வறுமை.*

*(ஆதாரம் முஸ்லிம் 3799)*

*உடுத்திய‌ உடைக்கு மாற்று உடை இல்லை என்கிற அளவிற்கு வறுமை.*
*உடுத்திருக்கும் உடை கூட, வெறும் இரு போர்வைகள்..* *(ஆதாரம் புஹாரி 3108)*

*ஒரு முறை சால்வையொன்றை நபிகள் நாயகத்திற்கு ஒருவர் பரிசளிக்கிறார், நபிகள் நாயகமோ, இதை நான் என் கீழாடையாக பயன்படுத்திக் கொள்கிறேனே என்று அதை அவ்வாறே பயன்படுத்துகிறார்கள்.*

*போர்வையை வேட்டியாக பயன்படுத்துகின்ற அளவிற்கு வறுமை.*
*(ஆதாரம் புஹாரி 1277)*


*அவர் ஒரு போதும் தட்டில் வைத்து உணவு உண்டது கிடையாது. துணியை விரித்து அதில் தான் உணவை வைத்து உண்டிருக்கிறார்கள்.*
*(ஆதாரம் புஹாரி 5386)*

*இரவில் படுத்துத் தூங்குவதற்கும், பகலில் அதையே முன் வாசல் கதவாய்* *பயன்படுத்துவதற்கும் தான் பாய் வைத்திருந்தார்கள்.*
*(ஆதாரம் புஹாரி 730)*

*தோலினால் ஆன தலையணையை பயன்படுத்தினார்கள்.*
*(ஆதாரம் புஹாரி 6456)*

*ஒருவர் படுத்திருந்தால் இன்னொருவரால் நின்று தொழுகை செய்ய இயலாது. அந்த அளவிற்கு சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் வசித்தார்கள். (ஆதாரம் புஹாரி 382)*

*மேற்கூரை கூட இல்லாத வீட்டில் வசித்தார்கள். அவர்கள் எழுந்து நின்றால் வெளியில் இருப்பவர்களால் அவரது தலையை காண முடியும் (ஆதாரம் புஹாரி 729)*


*நாமெல்லாம் கற்பனையில் கூட நினைத்து பார்த்திராத ஏழ்மை.*

*நபிகள் நாயகம் அனுபவித்த வறுமையில் 100 ஒரு பங்கினை நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோமா?*

*இன்று, பிளாட்ஃபாரத்தில் பிச்சையெடுப்பவனை தான் நாம் பரம ஏழை என்போம்.*

*நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, இன்றைக்கு நாம் கருதுகின்ற பரம ஏழையை விடவும் கீழ் நிலையில் தான் இருந்தது என்பதை நம்மால் ஜீரணிக்க இயலுகின்றதா?*

*இத்தனைக்கும் அப்போது அவர் மன்னர்.*
*நாட்டுக்கே ஜனாதிபதி.*
*போர்ப்படை தளபதி..*
*மார்க்க அறிஞர்.*
*இறைவனால் நியமிக்கப்பட்ட இறைத் தூதர்,*
*சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வந்த புரட்சியாளர்,*

*என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட மாமனிதராக அவர் திகழ்ந்தார்.*

*ஆக‌,*
*வறுமையிலும் நேர்மை.*
*வறுமையிலும் ஒழுக்கம்.*
*வறுமையிலும் வீரம்*
*வறுமையிலும் நீதி தவறாத நல்லாட்சி*
*வறுமையிலும் சுய மரியாதை*
*வறுமையிலும் மிகப்பெரும் புரட்சி..!*

*நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா??*

*எண்ணும் போதே உடலெல்லாம் சிலிர்க்கிறது..*

*மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்தவ பாதிரியார், உலகில் மாற்றம் உருவாக்கிய நூறு பேரின் வாழ்வை அலசி, 'The Hundred' என்கிற நூலை வரைந்தார்.*
*அதில் முதல் இடத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கே வழங்கினார்.*

*நபிகள் நாயகம்... நாமெல்லாம் கற்பனையிலும் எண்ணிராத ஓர் உத்தம மனிதர்(தூதர்)...!*

No comments:

Post a Comment