பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, June 24, 2014

ரமலானும் நாம் செய்ய வேண்டி கடமைகளும்

ரமலானும் நாம் செய்ய வேண்டி கடமைகளும்
ீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீ

படைத்தவன் தரும் மிகப்பெரிய சலுகை ரமலான் மாதமாகும். இந்த மாதத்தில் செய்யும் நல்லறங்கள் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற்று சொர்க்கவாதியாக மாறுவதற்கு தகுந்த காலமாக அல்லாஹ் அமைத்துள்ளான்.

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் நின்று வணங்குவதும் மிகப்பெரிய நன்மையை ஈட்டித் தரும்.

யார் ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

என்ற நபிமொழிகள் ரமலான் மாதத்தின் சிறப்பையும் அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டி நல்லறங்களையும் நினைவூட்டகின்றன.

இதைப் போன்று இந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு உண்டு. அந்த இரவில் நாம் செய்யும் நல்லறங்கள் ஆயிரம் மாதங்கள் செய்யும் நல்லறங்களுக்கு ஈடானதாகும் என்ற அழகிய செய்தியை திருக்குர்ஆன் நமக்கு உணர்த்தியுள்ளது.

ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் நபி (ஸல்) இந்த இரவை அடைவதற்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளார்கள். தம் மனைவியர்களையும் இரவில் எழுப்பி இறைவணக்கங்களில் ஈடுபட செய்வார்கள். எனவே குறைந்த அமல்களில் நிறைந்த நன்மைகளை பெற இம்மாதத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இம்மாதத்தில் அதிகமதிகம் தொழுதல், தர்மம் செய்தல், திருக்குர்ஆனை ஓதுதல், திக்ர் செய்தல் உட்பட நல்லறங்கள் அனைத்தம் கூடுதலாக செய்து கணக்கில்லா நன்மைகள் பெற வேண்டும்.

நோன்பு வைத்துக் கொண்டு பொய் பேசுதல், புறம் பேசுதல், அவதூறு கூறுதல் போன்ற மார்க்கத்திற்கு புறம்பான காரியத்தைச் செய்தால் நாம் வைத்த நோன்பிற்கு எந்த நன்மையும் கிடைக்காமல் போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Source ; தீன்குல பெண்மணி

No comments:

Post a Comment