பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, August 15, 2025

ஓரிறைக்கொள்கை! கடைப்பிடிப்பதற்கு மிக எளிதானது

ஓரிறைக்கொள்கை! கடைப்பிடிப்பதற்கு மிக எளிதானது

தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு உடல் உழைப்பு தேவைப்படும். ஆனால் அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் அவனை நம்புவதற்கு எந்தக் கஷ்டமும் இல்லை.

பல பொருட்களை வழிபடுவது சிரமமாகும். சகல ஆற்றலுடன் கொண்ட ஒரே ஒரு இறைவனை வழிபடுவது இலகுவானதாகும். இணை வைக்கக்கூடாது என்பதைத் தான் அல்லாஹ் நம்மிடத்தில் முதலில் எதிர்பார்க்கிறான்.

عَنْ أَنَسٍ، يَرْفَعُهُ
إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا: لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ، أَنْ لاَ تُشْرِكَ بِي، فَأَبَيْتَ إِلَّا الشِّرْكَ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘ஆம்’ என்று பதிலளிப்பான்.

அப்போது அல்லாஹ், ‘நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை – எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை’ என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி)

நூல் : புகாரி-3334

தொடரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment