பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, August 15, 2025

சமாதிகளையும் சிலைகளையும் வணங்குவது


முஸ்லிம்களில் பலர் சமாதிகளையும் சிலைகளையும் வணங்குவது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்:

இன்றைய முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்விற்கு இணை வைத்துக் கொண்டு அவனை நம்புகிறார்கள். நம் சமுதாயத்தில் பெரும்பாலோரின் நிலை இப்படித் தான் இருக்கிறது.

 وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏
அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

அல்குர்ஆன் 12-106

நபி (ஸல்) அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரியும் போது, இணை வைக்காமல் ஒரிறைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மாபெரும் சமுதாயத்தை உருவாக்கிச் சென்றார்கள்.

இதன் பிறகு வரக்கூடிய சமூகத்தாரில் பலர் இணை வைப்பில் விழுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவர்கள் கூறியது போன்றே, தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு இணை வைத்துக் கொண்டிருக்கின்ற மக்களைத் தற்காலத்தில் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமூகத்தில் சில கூட்டத்தார்கள் இணை வைப்பாளர்களுடன் இணையும் வரை மறுமை நாள் வராது. என் சமூகத்தாரில் சில கூட்டத்தினர் சிலைகளை வணங்கும் வரை மறுமை நாள் வராது.

அறிவிப்பவர்: சவ்பான் (ரலி)

நூல்: அபூதாவூத்-3710

No comments:

Post a Comment