என்னவென்பதைத் தெளிவாக எடுத்துரைத்தால் தான் அவரால் மருத்துவம். செய்ய முடியும். ஆனால் அல்லாஹ் நம்மிடம் எந்த விசாரணையும். செய்யாமல் நோயை அகற்றுகிறான்.
ஒரு மருத்துவர். மருத்துவம் செய்வதற்கு இதயத் துடிப்பை அறியும் கருவி, உள்ளுறுப்புகளைப் படம்பிடிக்கும் கருவி போன்றவை தேவைப்படுகிறது. வயிற்றில் கட்டிகள் இருந்தால் அதை வெட்டி எடுக்க கத்தி தேவைப்படுகிறது. இன்னும் பல சாதனங்கள் இருந்தால் தான் அவரால் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் அல்லாஹ்விற்கு கத்தியோ, புகைப்படக் கருவியோ, இதயத்துடிப்பை அறியும் கருவியோ எதுவும் தேவையில்லை. அறுவை சிகிச்சையோ வேறு எந்த சிகிச்சையுமே இல்லாமல் குணப்படுத்தும் சக்தி அவனுக்கு உள்ளது.
நோய்க்கான மருந்துகளை எழுதிக் கொடுத்து அவற்றைச் சரியாக உண்டு வருமாறு மருத்துவர் கூறுவார். அவர் கூறியதைப் போன்று மருந்தைச் சாப்பிட்டால் தான் நோய் குணமாகும். ஆனால் அல்லாஹ்விற்கோ நோயைக் குணப்படுத்த எந்த மருந்தும், மாத்திரையும் தேவையில்லை.
மருத்துவர் உடனடியாக நோயைக் குணப்படுத்திவிட மாட்டார். நீண்ட கால அவகாசம் அவருக்குத் தேவைப்படும். ஆனால் அல்லாஹ்விற்கோ எந்த அவகாசமும் வேண்டியதில்லை.
மருத்துவரின் சிகிச்சை பலனளிக்காமல் நோயாளி இறப்பதுண்டு. மருத்துவரின் சிகிச்சை தோற்பதுண்டு. ஆனால் அல்லாஹ்வின் சிகிச்சை வெற்றியடைவது நிச்சயம்.
உதாரணத்திற்காகத் தான் கேட்கும் திறன், பார்வைத் திறன், குணப்படுத்தும் ஆற்றல் ஆகிய மூன்று விஷயங்களை இங்கு கூறியுள்ளோம். இது போன்று பல விஷயங்களில் அல்லாஹ்விற்கும், அடியார்களுக்கும் மத்தியில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. அல்லாஹ்வுடைய தனித் தன்மைகளில் பிறரைக் கூட்டுச் சேர்த்து விட்டால் இணைவைப்பு ஏற்பட்டு விடுகிறது.
அல்லாஹ் பார்ப்பது போன்றும், கேட்பது போன்றும், உதவி செய்வது போன்றும், நோயை நீக்குவது போன்றும் படைப்பினங்களில் யாராவது காண்பார் என்றோ, கேட்பார் என்றோ, உதவி செய்வார் என்றோ. நோயை நீக்குவார் என்றோ ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாக ஆகிவிடுவான்.
மேலும் அல்லாஹ் மட்டுமே செய்கின்ற காரியங்களை மற்றவர்களும் செய்வார்கள் என்று நம்புவதும் இணை வைப்பாகும். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைப் பிறருக்குச் செய்வதும் இணை வைப்பாகும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment