பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, August 15, 2025

வெற்றியை பெற்றுத் தரும் வார்த்தை

வெற்றியை பெற்றுத் தரும் வார்த்தை

லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தையை முறையாகப் புரிந்து அதன் கருத்திற்கு முரணில்லாத வகையில் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டால் இந்த வார்த்தை மறுமையில் நமக்கு மிகப் பலனாக இருக்கும் நன்மை தீமைகள் எடை போடப்படும் தராசில் மிகுந்த எடை கொண்ட நன்மையாக இந்த வார்த்தை விளங்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் படைப்பினங்கள் கூடியிருக்கும் போது எனது சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அழைக்கப்படுவார். அவரிடம் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரித்துக் காட்டப்படும். ஒவ்வொரு (பாவ)ஏடும் பார்வை எட்டுகின்ற அளவிற்கு (பெரிதாக) இருக்கும்.

“இவற்றில் எதையாவது நீ மறுக்கிறாயா? காவலர்களான எனது எழுத்தர்கள் (வானவர்கள்) உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா?” என்று அல்லாஹ் அவரிடம் கேட்பான். “எனது இறைவா! இல்லை” என்று அவர் கூறுவார். “(பாவங்கள் செய்ததற்கான) காரணம் ஏதும் உள்ளிடத்தில் உண்டா?” என்று இறைவன் கேட்டான். “எனது இறைவா! இல்லை” என்று அவர் கூறுவார். “உனக்கு நம்மிடத்தில் நல்ல வாழ்வே உள்ளது.

இன்றைய தினம் நீ அநீதியிழைக்கப்பட மாட்டாய்” என்று இறைவன் அப்போது ஒரு சிறிய அட்டை வெளிவரும். அதில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையாகவும் தூதராகவும் உள்ளார் என்று நான் நம்புகிறேன்) என்று இருக்கும்.

“உன்னுடைய (நன்மை தீமையின்) எடையை நிறுத்துப்பார்” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அவர் “எனது இறைவா!. இந்தப் பெரும் (பாவ) ஏடுகள் இருக்கும் போது இந்தச் சிறிய அட்டை என்னவாகும்?” என்று கேட்பார். அதற்கு இறைவன் “உனக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது” என்று கூறுவான். பெரும் (பாவ) ஏடுகள் (தராசின்) ஒரு தட்டிலும் அந்தச் சிறிய அட்டை மறு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பெரும் ஏடுகள் எடை குறைந்து விடும். சிறிய அட்டை கனத்து விடும். அல்லாஹ்வின் பெயர் இருக்கும் போது எதுவும் கனக்காது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நூல்: திர்மிதி-2563

எனவே எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு போதும் அல்லாஹ்விற்கு இணை வைத்து விடாமல் லாயிலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தை கூறும் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்து ஈருலகில் வெற்றியடையும் பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

தொடரும்
இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment