ஓரிறைக் கொள்கை ஒரு மாபெரும் பாக்கியம்
செல்வமும், சொத்துக்களும் தான் பாக்கியம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈடு இணையில்லாத ஒரு பாக்கியமாக ஏகத்துவம் இருக்கின்றது. எத்தனையோ கோடீஸ்வரர்களுக்கும், அரசர்களுக்கும், படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கும் வழங்காத ஏகத்துவ பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கி அவர்களை விட நம்மை மேம்படுத்தியுள்ளான்.
ஒரு மனிதன் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் இந்த உலகத்தில் மட்டுமல்லாது மறுமையிலும் பல நன்மைகளை அடைகிறான். எனவே இதைப் பெரும் பாக்கியமாக உணர்ந்து, மரணிக்கும் வரை ஏகத்துவத்தை தக்க வைத்துக் கொள்ள நாம் அரும்பாடுபட வேண்டும்.
12:38 وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِىْۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَىْءٍؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ
என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மக்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.
அல்குர்ஆன் 12:38
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment