பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

அல் குர்ஆனின் செய்தியும்.

📖 அல் குர்ஆனின் செய்தியும்...
🤔 சிந்தனையும்.

சுப்ஹானல்லாஹ்... அல்லாஹ் தூய்மையானவன் என்று உச்சரிக்கும் போது, அவனின் தூய்மையை உள்ளம் உணர வேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்...  புகழனைத்தும் அவனுக்கே என்று உச்சரிக்கும் போது, அவன் தந்த நிறைவை உள்ளம் உணர வேண்டும்.

அல்லாஹு அக்பர்... அல்லாஹ் மிகப் பெரியவன், என்று உச்சரிக்கும் போது, அவனின் ஆற்றல் மீதான படைப்புகளின் பிரம்மாண்டத்தை உள்ளம் உணர வேண்டும்.

திக்ர்கள்... என்பது வெறும் உச்சரிப்பில் இல்லை.
ஆன்மா அதை உணர்தலில் இருக்கிறது.

அல் குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்...

எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
அல் குர்ஆன்  2:152



*💗அல்லாஹ் யாரை நேசிக்கின்றான்?💗*

❣️நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (3:134)

❣️தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (3:159)

❣️நீதி செலுத்துவோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்குர்ஆன் (5:42)

❣️சகித்துக்கொள்வேரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (3:146)

❣️திருத்திக் கொள்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (2:222)

❣️தனக்கு அஞ்சி நடப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (3:76)

❣️தூய்மையாக இருப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (2:222)

No comments:

Post a Comment