பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

அதிக நன்மைகளை

*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில எளிமையான திக்ருகள்:*🛐



💟 *சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுஹானல்லாஹில் அளீம்*


*பொருள்:*

 அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். கண்ணியமிக்க
அல்லாஹ்வை துதிக்கின்றேன்.


*சிறப்பு:*

மீசான் தராசில்அதிக கனமுள்ளது

( நூல் : புகாரி : 66820 )


💟 *சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி*


*பொருள்:* 

அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன்.

*சிறப்பு:*

கடலின் நுரை அளவு பாவங்கள் மன்னிக்கப்படும்.

( நூல் : புகாரி: 6405 )


💟 *லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷைய்இன் கதீர்*

*பொருள்:*

 வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்.
அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

*சிறப்பு:*

100 நன்மைகள் எழுதப்படும். 100தீமைகள் அளிக்கப்படும். ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புகிடைக்கிறது.

 ( நூல் : புகாரி : 3293 )


💟 *சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்*

*பொருள்:*

இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப் புகழும், அவன் மிகப் பெரியவன்.

*சிறப்பு:*

ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

( நூல் : முஸ்லிம் : 118 )


💟 *அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன், Fபீஹி*

*பொருள்:*

 தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும்
அல்லாஹ்வுக்கே உரியது.

*சிறப்பு:*

12 வானவர்கள் இதை இறைவனிடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை அதிகம். 

( நூல்: முஸ்லிம் : 1051 )


💟 *அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து லில்லாஹி கஸீரா வசுப்ஹானல்லாஹி புக்ரதவ் வஅஸீலா*

*பொருள்:*

அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப் படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்ற காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.

*சிறப்பு:*

 இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள்கிடைக்கின்றன. 

( நூல் : முஸ்லிம் :1052 )


💟 *ஒவ்வொரு நாளும்) நூறு முறை "சுப்ஹானல்லாஹ்" துதிக்க வேண்டும் !*


*பொருள் :-*

இறைவன் தூயவன்


*சிறப்பு :-*

 ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன

( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5230 )



*#உங்களுக்கு பயன் அளிக்க கூடியதாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.... 💞*

No comments:

Post a Comment