பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, December 3, 2019

இஸ்லாத்தில் ஆண் பெண் உறவு🧕👲* - 1

*⛱⛱மீள் பதிவு⛱⛱* 


*👲🧕இஸ்லாத்தில் ஆண் பெண் உறவு🧕👲*

 *🧕🧕🧕காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா👲👲👲* 

 *🏓🏓🏓இரண்டு தலைப்புகளை கொண்ட  ஒரு நீண்ட இந்த கட்டுரை பொறுமையாக படிக்கவும்🏓🏓🏓* 


 *🌐அல்லாஹூம் அவன் தூதரும் கூறினார்கள் ஆண் பெண் உறவை பற்றி உங்கள் பார்வைக்கு கொண்டு தந்துள்ளோம்🌐*

 *📚📚📚அல்குர்ஆனும் மற்றும் ஹதீஸ்கள்📗📗📗📗 ஆதாரம் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*


 *👉 👉  பாகம் 1 👈👈* 

 *🌐முதல் தலைப்பு🌐* 

*👲🧕இஸ்லாத்தில் ஆண் பெண் உறவு🧕👲*

 *🌐🌎என் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதிரிகளே🌐🌎* 

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ‏ 

 *✍✍✍(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான்.✍✍✍* 


 *(அல்குர்ஆன் : 24:30)* 

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ  اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌  وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

📕📕📕மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி  (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும்.📕📕📕

 *(அல்குர்ஆன் : 24:31)* 

 *✍✍✍அல்லாலஹ் ஆணையும் பெண்ணையும் தங்கள் பார்வைகளை தாழ்தி கொள்ளுமாரு கட்டளை இட்டுள்ளான் ஆனால் இன்று இருக்கக்கூடிய காலக்கட்தில் பார்ப்பது குற்றமா என்று கேட்க்கிறார்கள் ஆம் ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிரது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூரினார்கள்✍✍✍* 

📘📘📘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ 
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸை விடச் சிறுபாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை. 
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.22 📘📘📘

 *ஸஹீஹ் புகாரி:6612* 

 *✍✍✍இன்று பார்ப்பது மட்டும் அல்லாமல் ஒரு அண்ணிய ஆனும் பெண்னும் பேசுவது சகஜம் ஆகிவிட்டது யார் அனுமதி குடுத்தது பேசுவதர்க்கு அல்லாஹ்வின் மீது அச்சம் இல்லையா உங்களுக்கு✍✍✍* 

 *👉 👉 👉 இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்👇👇👇.* 

📚📚📚ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். “பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்“ *(திருக்குர்ஆன் 11:114)* என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் “இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?“ என்று கேட்டதற்கு “என் சமுதாயம் முழுமைக்கும்“ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.📚📚📚 

 *ஷஹீஹ் புகாரி'526* 

 *✍✍✍இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:👇👇👇*

 *📕1.* நீதிமிக்க ஆட்சியாளர்.📕

 *📘2.* இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.📘

 *📚3.* தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன்.📚

 *📗4.* பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.📗

 *📙5.* இறைவழியில் நட்புகொண்ட இருவர்.📙

 *📓6.* அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்“ என்று கூறியவர்.📓

 *📒📔7.* தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.📒📔

 *என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 24* 

 *ஷஹீஹ் புகாரி:6806* 

 *✍✍✍இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப்பெண்ணும் ஒருபகல்ஓர்இரவுதொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது“.✍✍✍* 

 *என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.* 

 *ஷஹீஹ் புகாரி:1088* 

⛱⛱⛱அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 
“நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்)  அவர்கள் கூறினார்கள். மக்கள்இ “எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம்இ நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்“ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள்இ “அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போதுஇ பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்“ என்று கூறினார்கள். மக்கள்இ “பாதையின் உரிமை என்ன?“ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்இ “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும்இ சலாமுக்கு பதிலுரைப்பதும்இ நன்மை புரியும்படி கட்டளையிடுவதும்இ தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்“ என்று பதிலளித்தார்கள். ⛱⛱⛱

 *ஷஹீஹ் புகாரி:2465* 

 *🌹🌹காதலும் (காம) விபச்சாரம்தான்🌹🌹* 

 *✍✍✍காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.✍✍✍* 

 *🏓இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்🏓* 

🕋🕋🕋“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”🕋🕋🕋

 *(நூல்: புகாரி 6243)* 

 *✍✍✍தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.✍✍✍* 

 *இரண்டாம் தலைப்பு* 

*🧕🧕🧕காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா👲👲👲*

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் இறுதி பாகம் 2*

No comments:

Post a Comment