பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, December 29, 2019

இரத்த தானம் செய்வதைப் பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன❓🕋🕋🕋*

*🔴🔴மீள்பதிவு🔴🔴* 

*🌐🌐🌐இஸ்லாமிய பார்வையில் இரத்த தானம் கூடுமா மற்றும் அறிவியல் மற்றும் மருத்துவ ஓர் அலசல்🌎🌎🌎*


 *🔵🔵இது ஒரு நீண்ட கட்டுரை⚫⚫*


 *🕋🕋🕋இரத்த தானம் செய்வதைப் பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன❓🕋🕋🕋* 


இரத்தம் என்பது அசுத்தமான (நஜிஸ்) வகையினைச் சாறும். அசுத்தமான ஒன்றை உடலில் சேர்க்கலாமா? என்ற கேள்வி நமக்கு மத்தியில் எழலாம், ஆகவே இரத்த தானம் என்பதை ஒரு உயிரை அல்லாஹ்வின் கிருபையுடன் காப்பாற்றுவதற்காக உபயோகிக்கப்படுகின்றது. அந்த அடிப்படையில் நிர்பந்தமான சூழ்நிலைகள் ஏற்படும் போது இஸ்லாம் மார்க்கத்தில் ‘தடுக்கப்பட்ட ஒன்றும் தேவையான அளவுக்கு பயன்படுத்துவது கூடும்’ என்ற நிலையில் வந்துவிடும். இதனை அல்லாஹ் திர்குர்ஆன் பின்வருமாறு :

اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். எனினும், எவரேனும் ஒருவர் (இப்பொருள்களில் ஏதாவதொன்றைப் புசிக்க வேண்டிய) கட்டாயத்திற்குள்ளானால், இறைச்சட்டத்தைத் தகர்க்கும் நோக்கமில்லாமலும், வரம்பு மீறாமலும் (தேவைக்கு மிகாமலும்) அதனைப் புசிப்பதில் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.

 *(அல்குர்ஆன் : 2:173)* 

ஆகவே இரத்தம் (நஜிஸாக – அசுத்தமாக) இருந்தாலும் நிர்பந்தமான சூழ்நிலைகள் வரும் போது கூடும் என்ற நிலையில் ஆகிவிடும். இதில் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. ஒரு முஸ்லிமான ஆணுடைய இரத்ததை முஸ்லிமான பெண்ணுடைய உடலிலும் அதே போன்று ஒரு முஸ்லிமான பெண்ணுடைய இரத்தத்தை முஸ்லிமான ஆணுடைய உடலிலும் செலுத்தலாம். மேலும் தக்வா எனும் பேணுதல் அடிப்படையில் அண்ணிய மதத்தவர்கள் (காபிர்கள்)ளுடைய இரத்தமும்.,(ஹராம் – ஹலால்) பேணி நடந்துகொள்ளாதவர்களுடைய இரத்தத்தையும் எமது உடலில் செலுத்துவதை தவிர்ந்து கொள்ள முயற்சி செய்து கொள்ளவேண்டும்.

இரத்த தானம் என்பது ஒரு நோயாளிக்கு இரத்தம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுவதுண்டு. அவரது இரத்தப் பிரிவு என்ன என்பதை அறிந்து, அதே பிரிவு இரத்தமுள்ள மற்றவரிடம் தானமாகவோ விலை கொடுத்தோ இரத்தம் பெற்று, நோயாளிக்குச் செலுத்தும் முறை மருத்துவ உலகில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. இதற்காக இரத்த வங்கியின் தேவை, முதலாம் உலகப் போருக்குமுன் உணரப்பட்டது. இரத்தத்தைச் சேகரித்து, சேமித்து, பதப்படுத்தி வழங்குகிற நிறுவனமே இரத்த வங்கி (Blood Bank) ஆகும். இரத்த தானம் மூலம் சேகரிக்கப்படும் இரத்தங்களே பெரும்பாலும் இதில் சேமிக்கப்படுகின்றன.

 *இரத்தத்தில் உருவான தாய்பாலை தானமாக கொடுக்கலாம்* 


ஒரு தாய் மற்றொருவரின் குழந்தைக்குப் பாலூட்டும் முறை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அதற்காக அத்தாய் கூலியும் பெறலாம்

 *(அல்குர்ஆன், 65:6).*

 தாய்ப்பால் எப்போதும் சுரந்துகொண்டிருப்பதால், அடுத்தவர் குழந்தைக்குப் பாலூட்டுவதால் தாய்க்கோ சேய்க்கோ பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. தாய்ப்பாலுக்காக ஏங்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும் வாய்ப்பும் இதில் உள்ளது. பாலைப் போன்றே மனிதனின் உடலில் இரத்தமும் ஊறிக்கொண்டே இருக்கிறது. எனவே, நோயாளிக்கு இரத்தம் வழங்குவதால் கொடையாளிக்குப் பாதிப்பும் இல்லை; நோயாளிக்குப் பயனும் கிடைக்கும். எனவே, இரத்த தானம் செய்வது மார்க்கச் சட்டப்படி செல்லும், ஆகுமாக்கப்பட்ட காரியமாகும். ஆனால், அவசியத்தை முன்னிட்டே இரத்த தானம் செய்ய வேண்டும். அத்துடன் இரத்த தானம் செய்வதால் கொடையாளிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதைச் சோதனை மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும். இரத்தம் கொடுத்துவிட்டுக் கூலி வாங்கக் கூடாது. “இரத்தம் விற்ற காசுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை விதித்தார்கள்”.

 *நூல் : புகாரீ* 

ஆகவே முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமின் சகோதரன். அவன் தனது சகோதர முஸ்லிம் ஒருவருக்கு துன்பம் இழைபதையோ, அநீதி இழைபதையோ விரும்ப மாட்டான்.எனவே இஸ்லாம் இரத்ததானம் செய்வதை, அது மனிதனது உயிரை அல்லாஹ்வின் கிருபையாள் காக்குகின்றது என்ற வகையிலும், ஒரு மனிதனது வாழ்வை தக்கவைப்பதற்கு அவசியம் என்ற வகையிலும், கட்டாயமாக்குகிறது.


اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். எனினும், எவரேனும் ஒருவர் (இப்பொருள்களில் ஏதாவதொன்றைப் புசிக்க வேண்டிய) கட்டாயத்திற்குள்ளானால், இறைச்சட்டத்தைத் தகர்க்கும் நோக்கமில்லாமலும், வரம்பு மீறாமலும் (தேவைக்கு மிகாமலும்) அதனைப் புசிப்பதில் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.

 *(அல்குர்ஆன் : 2:173)* 

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌ يَخْلُقُ مَا يَشَآءُ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் அனைத்தின் மீதும் உள்ள அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். மேலும், அவனது வலிமை அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது.”

 *(அல்குர்ஆன் : 5:17)* 

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌

அறிந்து கொள்ளுங்கள்! வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்.

 *(அல்குர்ஆன் : 24:64)* 

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ   ۛ وَاَحْسِنُوْا  ۛ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

அல்லாஹ்வுடைய வழியில் செலவு செய்யுங்கள். மேலும், உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். ‘இஹ்ஸான்’ எனும் வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை* நேசிக்கின்றான்.

 *(அல்குர்ஆன் : 2:195)* 

اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். எனினும், எவரேனும் ஒருவர் (இப்பொருள்களில் ஏதாவதொன்றைப் புசிக்க வேண்டிய) கட்டாயத்திற்குள்ளானால், இறைச்சட்டத்தைத் தகர்க்கும் நோக்கமில்லாமலும், வரம்பு மீறாமலும் (தேவைக்கு மிகாமலும்) அதனைப் புசிப்பதில் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.

 *(அல்குர்ஆன் : 2:173)* 

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌ يَخْلُقُ مَا يَشَآءُ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் அனைத்தின் மீதும் உள்ள அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். மேலும், அவனது வலிமை அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது.”

 *(அல்குர்ஆன் : 5:17)* 

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌

அறிந்து கொள்ளுங்கள்! வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்.

 *(அல்குர்ஆன் : 24:64)* 

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ   ۛ وَاَحْسِنُوْا  ۛ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

அல்லாஹ்வுடைய வழியில் செலவு செய்யுங்கள். மேலும், உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். ‘இஹ்ஸான்’ எனும் வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை* நேசிக்கின்றான்.

 *(அல்குர்ஆன் : 2:195)* 


 *முன்னுரை*


ஒவ்வொரு நாளும் விபத்துக்களின்
எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது நம் கண்முன் தெரிகிறது. மேலும் பிரசவ பெண்களுக்கு மற்றும் குழந்தைகள் இருதய அறுவைச் சிகிச்சை சிறுநீரக அறுவைச் சிகிச்சை போன்றவைகளுக்காக நாள் தோறும் இரத்தம் தேவைப்படுகிறது. எனவே நாம் இரத்ததானம் செய்தால் மட்டுமே அவர்களின் உயிர்களைக் கப்பாற்ற முடியும்.

ரத்த தானம் என்பது ரத்தம் தேவைப்படுவோருக்கு ஒருவர் ரத்தம் கொடுத்து உதவுவதாகும்.இல்லாத ஒருவருக்கு இருக்கும் ஒருவர் கொடுத்து உதவும்போது அங்கு தேவை நிறைவடைகிறது. இதனைத்தான் தானம் என்கிறோம்.ரத்தம் என்பது யாருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் என எந்த காரணத்திற்காகவும் ரத்தம் தேவைப்படலாம். அப்பொழுது ரத்த தானம் செலுத்த விரும்புபவரை தேடி அவரிடம் இருந்து ரத்தம் பெற்று நோயாளிக்கு செலுத்துவது என்பது இயலாத காரியம்.எனவே தான் ரத்த வங்கிகள் செயல்படத் துவங்கின. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்று அதனை பாதுகாத்து, ரத்தம் தேவைப்படும்போது அதனை அவர்களுக்குக் கொடுத்து உதவும் ஒரு அமைப்புதான் ரத்த வங்கியாகும்.

*உயிருடன் இருக்கும் போது உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?* 


ஒருவர் பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, அல்லது தர்மத்திற்காகவோ உயிருடன் இருக்கும்போது அல்லது இறந்த பின்போ தன்னுடைய (கண்,இதயம், கிட்னி) போன்ற உடல் உறுப்புகளை பிற மனிதர்களுக்கு தானம் கொடுப்பதை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காத ஷரீஅத் ஹராமாக்கிய செயலாகும். ஆகவே மனித உடல் உறுப்புக்கள் அவனுக்கு சொந்தமானது அல்ல அவனுடைய சொந்த பொருள் என்றால்தான் மற்றவர்களுக்கு தானம் செய்யலாம். அந்த அடிப்படையில் அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல் உறுப்புகளை அமானிதமாக வழங்கியுள்ளான். அந்த அமானிதத்தை முழுமையாக

அவனிடத்தில் சேர்ப்பது மனிதனின் கடமையாகும்.

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌ يَخْلُقُ مَا يَشَآءُ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் அனைத்தின் மீதும் உள்ள அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். மேலும், அவனது வலிமை அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது.”

 *(அல்குர்ஆன் : 5:17)* 

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌

அறிந்து கொள்ளுங்கள்! வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்.

 *(அல்குர்ஆன் : 24:64)* 

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ   ۛ وَاَحْسِنُوْا  ۛ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

அல்லாஹ்வுடைய வழியில் செலவு செய்யுங்கள். மேலும், உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். ‘இஹ்ஸான்’ எனும் வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை* நேசிக்கின்றான்.

 *(அல்குர்ஆன் : 2:195)* 

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு)

 *நூல் : புகாரி 2474, 5516* 



எனவே உயிரோடு இருப்பவர்கள் தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து இதயம், கண், கிட்னி போன்ற உடல் உறுப்புகளைத் தானம் செய்து தன்னை மாய்த்துக் கொள்ள இஸ்லாத்தில் அனுமதில்லை.

உடல் உறுப்பு தானம் கூடுமென்று தத்துவம் பேசுபவர்கள் இரு உறுப்புகளில் ஒன்றைத் தானமாக கொடுத்து மற்றொன்றைக் கொண்டு எவ்வித ஊனமும் இடையூறுமின்றி வாழ முடியுமென்றும், ‘இறைவன் இரண்டு கிட்னி தந்துள்ளானென்றால்! யாருக்காவது கிட்னி தேவைப்பட்டால் இரண்டில் ஒன்றை தானம் கொடுப்பதற்காகதான்’ என்றும் ஹராமான செயலை ஹலாலாக்க முயல்கிறார்கள்.

ஆகவே எது எப்படி இருந்தாலும் நாம் கிட்னி தானம் கொடுப்பவருக்கு இறைவன் இரண்டு கிட்னியைதானே கொடுத்தான். அவருடைய (கிட்னி பைfலியர்) பழுதடைந்த போனபோதுதானே நமது கிட்னியை கேட்கிறார்கள். பிறகு நமது கிட்னி பைfலியரானால் நமது நிலை என்ன? மேலும் வைத்தியர்கள் ‘ஒரு கிட்னி இருந்தால் போதும் பல வருடங்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம்’ என்று கூறுகிறார்கள்.

ஆகவே இரண்டு கிட்னி உள்ளவர்கள் ஒரு கிட்னியை தானம் கொடுக்கலாம் என்றும் சிலர் தத்துவம் பேசுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அப்படி வைத்தியர்கள் கூறுவார்கள், அடுத்த வருடம் நீங்கள் அதே வைத்தியரிடம் கேட்டு பாருங்கள் நமது உணவு பழக்கவழக்கங்களால் மற்ற நடைமுறைகலாள் கிட்னி பைfலியர் (பழுதடைந்தால்) இவர்கள் என்ன செய்வார்கள் இதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

ஆகவே ஒரு மனிதனுக்கு இறைவன் இரண்டு கிட்னி கொடுத்தது ஒன்று (பைfலியர்) பழுதடைந்தால் மற்றதை வைத்து ஆரோக்கியமாக வாழ்வதெற்க்குதான். கிட்னி தானம் கொடுப்பவர் ‘நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாமென்று கூறினால் இது சரியா? இவர் உயிர் வாழ வேண்டுமென்பது இவர் சார்ந்தது மட்டுமல்ல, இவர் குடும்பம் சார்ந்த விடயம் குறிப்பாக மனைவி, பிள்ளைகள் சார்ந்த சூழ்நிலைகள் உள்ளது ஏனெனில் அவர்களுக்கு செய்ய வேண்டிய சில கடமைகள் இவர் மீது உள்ளது. எனவே தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து கிட்னி தானம் போன்ற உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி இல்லை.


 *மரணமடைந்த பின்னர் உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?* 



எம்மைப் போன்ற சாதாரன மனிதர்கள் மரணித்து, அவர்களை அடக்கம் செய்தால்! மண்ணுதானே திண்ணுது! ஆகவே மரணித்த பின் யாருக்காவது உடல் உறுப்புக்களை தானம் செய்தால் அது பிரோஜனமான, நன்மையாக அமையும் என்று இறந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டு என இவ்வாறு கூறுகிறார்கள். இதனை பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான ஒரு தீர்வினை கூறியுள்ளார்கள்.

இறந்தவரின் எலும்பை உடைப்பதானது, உயிருள்ளவரின் எலும்பை உடைப்பதைப் போன்றதே” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (

நூல்கள் : அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்)

உடல் உறுப்புகளை தானம் செய்வதால் ஊனத்துடன் மறுமையில் எழுப்பபடுவார்கள். நாம் எந்த நிலையில் அடக்கம் செய்யப்படுகின்றமோ அந்த நிலையில் மறுமையில் எழுப்பப்படுவோம், ஆனால் அல்லாஹ்வே ஒருத்தரை கண் பார்வை இல்லாமல் படைத்தால் எழுப்பும் போது அவர் நல்லவராக இருந்தால் அழகான கண் பார்வையுடன் எழுப்பப்படுவார்.

சிலர் சொல்வார்கள் ‘உடல் உறுப்புக்களை தானம் செய்தாலும் மறுமை நாளில் அழகான தோற்றத்தில்தான் எழுப்பப்படுவோம்’ என்று ஆதாரம் என்ற பெயரில் இதற்கு சம்மந்தமில்லா ஒரு வசனத்தினை கட்டுவார்கள்.

அல்குர்ஆனில் அல்லாஹ் ‘மறுமையில், மனிதன் இறை கட்டளைப்படி வாழாத காரணத்தால் அவர்கள் குருடர்களாக செவிடர்களாக எழுப்பப்படுவவார்கள், மறுமையில் அவர்களின் கண் பார்க்கும் சக்தியை இழந்து விடும்’

ஆகவே மேலே கூறப்பட்ட வசனமும் அவர்கருடைய செயல்பாடுகளைக் கொண்டுதான் எழுப்பப்படுவார்கள், அதேபோன்றுதார் ஒருவர் தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்தவரும் அவ்வாறு தான் மறுமையில் எழுப்பப்படுவார் காரணம் அல்லாஹ் அவர்களை அவ்வாறு ஆக்கவில்லை மாறாக இவர்களே தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து கொண்டதாலையாகும்.

முஸ்லிம் ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவர் தனது உறுப்புக்களை சிதைப்பது, வெட்டுவது, அசிங்கப்படுத்துவது ஹராமாகும். அதுபோன்றே மரணமடைந்த பின்னரும் அவரது அங்கங்களை சிதைப்பது கூடாது.ஒருவர் ஷரீஅத்திற்கு மாற்றமாக வஸிய்யத் செய்திருந்தால் அந்த வஸிய்யத் நிறைவேறாது, மட்டுமின்றி அதனை நிறைவேற்றுதலும் கூடாது.அத்தோடு ஒருவர் மரணமுற்றால் அந்த ஜனாஸா, வாரிசுதார்களின் உரிமையாகிவிடுகிறது. வாரிசுதார்கள் மைய்யித்தைக் குளிப்பாட்டி, கபனிட்டு, தொழ வைத்து நல்லடக்கம் செய்ய வேண்டும்.

மைய்யித்தை நோவினை செய்தல், உறுப்புகளை வெட்டி எடுத்தல் போன்றவை ஹராமான செயல். ஏனென்றால் மைய்யித்தைக் குளிப்பாட்டுதல் போன்றவற்றுக்காக கையாளும்போது மிக மிருதுவாக கையாள வேண்டும் என்று ஷரீஅத் கூறுகிறது. வேதனை தரக் கூடாது என்றும் கட்டளை இடுகிறது ஷரீஅத். இப்படி இருக்க ஒரு முழு உறுப்பை வெட்டி அகற்றுகின்ற போது எவ்வளவு வேதனை ஏற்படும்? அப்படிச் செய்வது குற்றமல்லவா? அத்தோடு மய்யித்தின் ஒவ்வொரு உறுப்புமே குளிப்பாட்டி நல்லடக்கம் செய்யப்பட வேண்டியவை மைய்யித்திலிருந்து ஒரு பகுதியை வெட்டி எடுக்கும்போது, அது குளிப்பாட்டாமலும், நல்லடக்கம் செய்யப்படாமலும் ஆகிவிடுகின்றது. இதனால் மைய்யித்தை நோவினை செய்வது குற்றம். உறுப்பைச் சிதைப்பது குற்றம். மைய்யித்தின் ஒரு உறுப்பு குளிப்பாட்டப்படாமல், நல்லடக்கம் செய்யப்படாமல் விடப்பட்ட குற்றம் ஆகிய ஏற்படுகிறது.எனவே உடல் உறுப்புக்களைத் தானம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.


 *இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு* 


“இரத்த தானம் மற்றும் தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து கண், இதயம், கிட்னி போன்ற உடல் உறுப்புக்களை தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டு. ஆகவே கண், இதயம், கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவம் செய்வதையும் இஸ்லாம் மார்க்கம் ஆகுமாக்கிய நல்லதோர் காரியமாகும், மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிரானவையல்ல, ஆகவே தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து கண்,இதயம், கிட்னி போன்ற உடல் உறுப்புக்களை தானமாக கொடுத்து பிற மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்ல காரியமாகும்”. என்று குர்ஆன், ஹதீஸ்களை சரியாக படிக்காமலும் – விளங்காமலும் மார்க்க அறிவு இல்லாமலும் ‘நாங்கள் மனித உயிரைக் காக்குகின்றோம்’ என்று தன்னை அழித்து தனது உடல் உறுப்புக்களை சிதைத்து ஷரீஅத் கடுமையாக தடை செய்த ஹராமான செயலை ஹலாலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அதிகாரத்தை வழிகெட்ட வஹ்ஹாபிகளுக்கு யார் கொடுத்தது?

 *வஸ்ஸலாம்* 


 *🌐🔴அறிவியலும் மருத்துவமும்🔵🌎* 

 *ரத்தம் என்பது என்ன?*

ரத்தத்தில் மூன்று விதமான செல்கள் இணைந்திருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்கள் ஆகியவையாகும்.ரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும். பின்னர் அப்பகுதிகளில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.வெள்ளை அணுக்கள் படை வீரர்களைப் போன்று செயல்படுவார்கள். உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பது, வேறு ஏதேனும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை அழிப்பது போன்ற வேலைகளைச் செய்யும்.ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் என்ன செய்யும் என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நாமே உணர்ந்திருப்போம், நமக்கு ஏதேனும் சிறய காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் 5 நிமிடங்களிலேயே வெளியே வந்த ரத்தம் உறைந்து மேலும் ரத்தக் கசிவு நிறுத்தப்படுகிறது. ரத்தத்தை உறைய வைக்கும் மிக முக்கிய வேலையை செய்யும் செல்கள் பிளேட்லெட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா என்ற செல்கள் குளுகோஸ், கொழுப்பு, புரதம், நொதிப்பு மற்றும் ஹார்மோன்களை சுமந்து செல்லும் அமைப்பாக செயல்படுகின்றன.

 *ரத்தத்தின் வகைகள்* 


:ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான்.அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.ஒவ்வொருவரும் தங்களது ரத்த வகையை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ரத்த தானம் பெறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் ஏ வகை ரத்தத்தை மட்டுமே தானமாகப் பெறலாம். இது எல்லா வகை ரத்தத்திற்கும் பொருந்தும்.ஆனால் ஏதாவது மிகுந்த நெருக்கடியான நேரங்களில் வேண்டுமானால் எந்த ஒரு ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓ வகை ரத்தத்தை அவருக்கு செலுத்தலாம். அதேப்போன்று ஏபி ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வகை ரத்தத்தையும் அளிக்கலாம்.

 *யாரக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்?*


1. A குரூப்: இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத் தான் கொடுக்க வேண்டும்.

2. B குரூப்: இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும்.

3. AB குரூப்: இவர்களுக்கு A AB O, B குரூப் இரத்தம் கொடுக்கலாம்.

4. ‘O’ குரூப்: இவர்களுக்கு O குரூப் இரத்தம் தான் கொடுக்க வேண்டும்.



‘ஆர்எச்’ என்று சொல்கிறார்களே அது என்ன?

இரத்தத்தில் கி,ஙி,ளி வகையைத் தவிர, பார்க்க வேண்டிய மற் றொரு ஆன்டிஜனும் இருக்கிறது. ரிசங் என்ற ஒரு குரங்கிலிருந்து இந்த ஆன்டிஜன் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு ஆர் எச் என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த ஆர்எச், இரத்த சிவப்பு அணுக்களின் தோலின் மேல் சிலருக்கு இருக்கும். சிலருக்கு இருக் காது. இதைக் குறிப்பிட A+ மற்றும் A என்று பயன் படுத்துகிறார் கள்.

 *யார் யார் இரத்த தானம் செய்யலாம்?*


நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.

18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண் டும்.

 *எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?*


ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

 *இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?*

10 நிமிடம்.

இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?

20 நிமிடம்.

 *இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக் கப்படுகிறது?*


350 மில்லி. நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. எடுக்கப் படு கிற இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.

 *இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழி த்து உடலில் உற்பத்தி ஆகும்?* 


10 லிருந்து 21 நாட்களில்.

 *இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?* 


நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயி ரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத் தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல். ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே!

 *இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?*


நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்ற ரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.

 *சின்னச்சின்ன உடல்நலக் கோளாறு கள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?*


1. சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

2. ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்க லாம்.

3. ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மரு ந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

4. குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

5. அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

6. குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்தி ய பிறகு கொடுக்கலாம்.

7. பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழி த்துக் கொடுக்கலாம்.

8. சிறிய அறுவை சிகிச்சை செய்து கொ ண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

9. பல் அறுவை சிகிச்சை செய்து கொண் டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்க லாம்.

10. பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

11. இதய நோய்கள் _ வேண்டாம்.

12. இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

13. வலிப்பு நோய் _ மருந்து சாப்பி ட்டுக் கொண்டு இருந்தால் வேண் டாம். மருந்து நிறுத்தி 2 வருடங் கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

14. தடுப்பூசி போட்டுக் கொண்டவர் கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

15. நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

16. மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

17. மலேரியா _ 3 மாதங்களுக் குப் பிறகு.

18. காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.

மாத்திரைகளை சில காரணங் களுக்காகச் சாப்பிடுகிறவர் கள் இரத்த தானம் செய்யலாமா?

1. சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிற வர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

2. ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகி றவர்கள் கொடுக்க வேண்டாம்.

3. நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக் குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்க லாம்.

4. இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக் க வேண்டாம்.

5.ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

6. இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜி டாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இர த்த தானம் செய்யக் கூடாது.

 *இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?* 


1. நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.

2. ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.

3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

4. இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணி நேரம் எடுக்க வேண்டாம்.

 *இரத்த தானம் யாருக்கானது.?* 


இரத்த சோகை நோய்களில் மிகக் கொடுமையானது தலாசீமியா என்னும் நோய். இந்நோய் உள்ள குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கொருமுறை வீதம், ஆயுள் முழுவதுமே இரத்ததானம் தேவைப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய ரத்தசோகை நோய்.

கருவிலுள்ள குழந்தையின் ஹீமோகுளோபின் குழந்தையாகப் பிறந்தவுடனும் மாறாமல் இருப்பதால், உயிர்வாழ புது ரத்தம் தேவைப்படுகிறது. இந்நோய் தாக்கிய 3 -4 வயது குழந்தைகளுக்கு 6 வாரங்களுக்கு ஒரு தடவையாவது ரத்ததானம் கொடுக்க வேண்டும். வளர, வளர அடிக்கடி ரத்தம் தேவைப்படும்.

இதுபோன்ற ரத்தசோகை பீடித்த ஆயிரக்கணக்கானோர் மாற்று ரத்தம் பெற்றே உயிர் வாழ்கின்றனர். விபத்து ஏற்பட்டு இரத்தமிழந்தவர்கட்கு மட்டும்தான் ரத்ததானம் பயன்படுகிறது என எண்ண வேண்டாம். குறிப்பிட்ட காலங்களில் பள்ளிவாசல் சென்று தொழூவதைப் போல, ரத்ததானம் செய்து பல உயிர்களை வாழச் செய்யலாம். மேலும் ரத்ததானம் செய்பவர்களுக்கு இருதய நோய் வருவது குறைவு என்று ஓர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

 *ஹீமோபிலியா* :


இரத்தம் தொடர்பான வியாதிகளில் ஒன்று ஹீமோபிலியா. இது பெரும்பாலும் ஆண்களையே தாக்குகிறது. இது மரபு அணு சார்ந்த பிறவிக் கோளாறு. இதனால் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் எளிதில் உறையாமல் இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இரத்தம் உறையச் செய்யும் செயல் முறைகளில் 8வது காரணி இல்லாமல் இருப்பது அல்லது குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இரத்தத்தின் உறையும் தன்மையில் ஏற்படும் குறைபாடு நோயான ஹீமோபிலியாவை மாற்றுமுறை மருத்துவமான ஹோமியோபதி மூலம் பெருமளவு கட்டுப்படுத்த இயலும். இதற்கு பயன்படும் முக்கியமான ஹோமியோபதி மருந்து: பாஸ்பரஸ் இரத்தம் கசியும் வியாதிகள் அனைத்தும் ஹீமோபிலியா அல்ல. இரத்தம் உறைவதில் ஏற்படும் கோளாறுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.


அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்


 *தொகுப்பு :* 

மௌலவி அல்ஹாபிழ் A.முகம்மது வலியுல்லா அல்தாபி B.com..,MBA..,
தலைமை இமாம் : இலுப்பூர் மதீனா பள்ளிவாசல், புதுகோட்டை மாவட்டம்.

மௌலவி அல்ஹாஜ் M.அப்துல் மாலிக் ரஷாதி பேராசிரியர் : நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, ஜங்ஷன் சேலம்


 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment