பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, November 28, 2019

புறம் பேசுதல்

*👺👺மீள் பதிவு👺👺* 

*🌐புறம் பேசுதல் உங்களை நரகத்தில் சேர்த்துவிடும்🌐*

 *🌎அல்லாஹும் அவனின் தூதரின் எச்சரிக்கை🌎*

 *🏓புறம் பேசுதல்🏓*

 *🕋புறம் பேசுவது சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் 🕋:*

 *✍குறை கூறிப் புறம் பேசும்ஒவ்வொருவனுக்கும் கேடு தான்✍*

 *திருக்குர்ஆன் 104:1* 

📕நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!
சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர்
மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின்
மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.📕

 *திருக்குர்ஆன் 49:12* 

 *✍✍அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *(ஒரு முறை)* *அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (எங்களிடம்) , ” புறம் பேசுதல் என்றால்* *என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று* 
 *கேட்டார்கள். அதற்கு மக்கள் , ”அல்லாஹ்வும்* *அவனுடைய தூதரும் நன்கறிந்தவர்கள் ”* *என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர்* *உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக்* 
 *கூறுவதாகும் ” என்று பதிலளித்தார்கள். அப்போது , ” நான் சொல்லும் குறை என் சகோதரரிடம்* *இருந்தாலுமா ? ( புறம் பேசுதலாக ஆகும்) , கூறுங்கள் ” என்று* *கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர்* 
 *சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான் , நீர்* *அவரைப் பற்றிப் புறம்பேசினீர் என்றாகும் நீர் சொன்ன குறை *அவரிடம்*இல்லாவிட்டாலோ ,நீர் அவரைப் பற்றி* *அவதூறு சொன்னவராவீர் ”* *என்று கூறினார்கள்✍✍.*

 *நூல் : முஸ்லிம் 5048* 

📘📘நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து
சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம்
தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள்
தான் (புறம் பேசி) மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார்.📘📘

 *நூல்: அபூதாவூத் 4235* 

 *📚அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:📚*

 *✍✍✍( ஆதாரமில்லாமல்பிறரைச்) சந்தேகிப்பதாக குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.* *ஏனெனில் சந்தேகம் கொள்வது , பெரும் பொய்யாகும்.* 
 *(பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள் ;* *( அவர்களின் அந்தரங்கம் பற்றி)* *ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்)* *போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள் ; பொறாமை கொள்ளாதீர்கள் ;* 
 *கோபம் கொள்ளாதீர்கள்.* *பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக)* *அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்)* *சகோதரர்களாய் இருங்கள்✍✍✍.*

 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* 
 *நூல் : முஸ்லிம் 5006* 

📗📗📗இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க்
கடந்து சென்றார்கள். அப்போது (மண்ணறை களிலுள்ள) இவ்விருவரும் வேதனை
செய்யப் படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்)
இருவரும் வேதனை செய்யப்படவில்லலை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர்
கழிக்கும் போது (தம் உடலை) மறைக்க மாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள்
சொல்லி (புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறினார்கள். பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நட்டார்கள்.
பிறகு, இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று சொன்னார்கள்.📗📗📗

 *நூல்: புகாரி 6052* 

 *✍ஒரு முஸ்லிமின் மயானத்தில் உரிமையும் இல்லாமல் வரம்பு மீறுவதுதான் தண்டனைகளிலே மிகப்பெரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍.*

 *நூல்: அபூதாவூத் 4233* 

📙அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார்.
அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட
அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.📙

 *நூல்: புகாரி 6477* 

 *✍✍நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:            ஓர் அடியார்* *அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஓரு வார்த்தையை* *சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக* *யோசிக்காமல்)* *பேசுகிறார். அதன் காரணமாக* 
 *அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை* *உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார்* *அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு* *வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன்* 
 *பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்)* *பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்✍✍.*

 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 6478*

📕📕யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ், சகதியும், நரகவாசிகளின் சீலும் சலமும் கலந்திருக்கின்ற மலையில் தங்க வைப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📕📕

 *நூல்: அபூதாவூத் 3123* 


அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment