பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 17, 2019

ஒன்றுமில்லாத சூனியம் எப்படி பாவமாகும்❓

சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கை உடையவர்கள் சூனியம் இருக்கிறது என்பதை நிலைநாட்ட ஒரு கேள்வியை எடுத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிந்திக்கும் திறன் சிறிதளவும் இருப்பவர்களால் இது போல் கேட்க முடியாது. அந்தக் கேள்வி இதுதான்.

சூனியம் பெரும்பாவங்களின் ஒன்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். சூனியம் இறைமறுப்பில் தள்ளி விடும் என்று நீங்களும் சொல்கிறீர்கள். சூனியம் என்றால் ஒன்றுமே இல்லை என்று சொன்னால் ஒன்றுமே இல்லாததை எப்படி பாவம் என்றும் இறைமறுப்பு என்றும் சொல்ல முடியும் என்பது தான் அந்தக் கேள்வி.

சூனியம் இல்லை என்று நாம் சொல்வதை இவர்கள் புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறார்கள்.

சூனியம் இல்லை என்றால் சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பது இல்லை என்ற பொருளில் தான் சொல்கிறோம் என்பது சிறு பிள்ளைக்கும் விளங்கும்.

சூனியம் என்று சொல்லி ஏமாற்றும் பித்தலாட்டமும், மோசடியும் இருக்கத் தான் செய்கிறது.

இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது பாவமாகாதா? அலாஹ்வைப் போல் சூனியக்காரனும் செயல்படுவான் என்று சொல்வது இணை கற்பித்தல் ஆகாதா?

இது கூடவா விளங்கவில்லை?

உதாரணமாக பொய்யை நாம் பாவம் என்று சொல்கிறோம். பொய் என்றாலே இல்லாததும் நடக்காததும் தான். இல்லாததும், நடக்காததும் எப்படி பாவமாகும் என்று இவர்களின் விசாலமான அறிவு கேட்குமா?

இல்லாதது பாவம் அல்ல. இல்லாததை இருப்பதாகச் சொல்வது தான் பாவம். அதுபோல் தான் சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது; தந்திரங்கள் மூலம் ஏமாற்ற முடியும் என்று தெரிந்து கொண்டே அது உண்மை என்று சொன்னால் அது பாவமாக ஆகும் என்பது கூட புரியவில்லையா?

சிஹ்ர் என்ற ஏமாற்றுக் கலை உலகில் உள்ளது. இப்படி ஏமாற்றுவது பாவம். ஆனால் இதனால் ஒன்றும் செய்யவே முடியாது என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

திருக்குர்ஆன் 29:47,48,49

No comments:

Post a Comment