பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, November 5, 2019

நன்மைகளை வாரி - 19

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 19 ]*

*☄தொழுகைக்கு முன்கூட்டியே*
        *வருவதன் சிறப்புகள் { 03 }*

*☄முன்கூட்டி வருவது*
    *நிதானத்தைப் பெற்றுத் தரும்*

*🏮🍂தொழுகைக்கு மிக மிக முக்கியமானது நிதானமாகும். இதனை நபியவர்கள் மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.*

*أَنَّ أَبَا  هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ  فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ وَأْتُوهَا تَمْشُونَ وَعَلَيْكُمُ  السَّكِينَةُ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا ‏"*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச் செல்லாதீர்கள்; நடந்தே செல்லுங்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
              *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்: முஸ்லிம் (1053) 📚*

*🏮🍂தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் நாம் அமைதியாகவும், நிதானமாகவும் தொழுகின்ற பாக்கியத்தைப் பெறுகின்றோம்.* சில சகோதரர்கள் தாமதமாக வருவதால் இமாம் ஜமாஅத்தை அடைவதற்காக வேக, வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க ஓடிவந்து தொழுகையில் இணைகின்றனர். *இது தொழுகைக்கு இருக்க வேண்டிய அமைதியையும், நிதானத்தையும் இல்லாமல் ஆக்கி விடுகின்றது. தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் இதுபோன்ற நிலைகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ளலாம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄முன்கூட்டி வருவதால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு☄*

*☄நபியவர்கள் பாங்கு சொன்னவுடன் வீட்டிலிருந்து தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற ஹதீஸின் மூலம் இது மிகச் சிறந்த நற்செயல் என்பதை நாம் அறிகிறோம்.*

*☄தொழுகைக்கு ஆரம்ப வேளையில் வருவதன் நன்மைகளை மக்கள் அறிந்தால் அந்த நன்மைகளை அடைவதற்குப் போட்டியிடுவார்கள்.*

*☄தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் பள்ளிவாசலோடு தொடர்பு கொண்ட உள்ளத்தைப் பெற்றவராகிவிடுகிறார். இதன் காரணமாக மறுமையில் அர்ஷின் நிழலைப் பெறும் பாக்கியம் கிடைக்கிறது.*

*☄தொழுகையில் நிதானம், அமைதி மிகவும் அவசியமாகும். முன்கூட்டியே வருவதன் மூலம் இதனை நாம் அடைந்து கொள்ளலாம்.*

*🏮🍂தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் இன்னும் ஏராளமான பாக்கியங்களை  பெறமுடியும். அவற்றை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து விரிவாகக் காண்போம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜
                            ⤵⤵⤵
                           ✍🏼...

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment