பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

மவ்லிதும் - மீலாதும் - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*

    *🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*

           *✍🏻.....தொடர் ➖0️⃣7️⃣*

       *🌺ஏழாவது ஆதாரம்:🌺*

_கஃபு இப்னு சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்ந்து படித்தார்கள்._

_ஹழ்ரத் இப்னு ஜதஆன் ரலியல்லாஹு அன்ஹு_

      _📚ஹாகிம் 6555📚_

*🏮🍂மேற்கண்ட செய்தியையும் மவ்லிதுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.*

_இவர்கள் குறிப்பிடும் செய்தி இதுதான்_

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص – (3 / 673)

6478 – حدثني القاضي ثنا إبراهيم بن الحسين ثنا إبراهيم بن المنذر حدثني معن بن عيسى حدثني محمد بن عبد الرحمن الأوقص عن ابن جدعان *قال : أنشد كعب بن زهير بن أبي سلمى رسول الله صلى الله عليه و سلم في المسجد :  ( بانت سعاد فقلبي اليوم متبول متيم عندها لم يفد مكبول )*

_*🍃நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக பள்ளிவாசலில் கஅப் பின் ஸுஹைர் (ரலி) கவிதை பாடினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
             *இப்னு ஜுத்ஆன்,*

*📚 நூல்: ஹாகிம், பாகம்: 3, பக்கம்: 673📚*

_இந்தச் செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவராவார்._

الضعفاء للعقيلي – (3 / 230)

*حدثنا محمد ، قال : حَدَّثَنَا عباس ، قال : سَمِعْتُ يحيى يقول علي بن زيد أحب إلي من عقيل وعاصم بن عَبد الله ، حَدَّثَنَا محمد ، قال : حَدَّثَنا معاوية بن صالح ، قال : سَمِعْتُ يحيى يقول علِي بن زيد بن جدعان بصري ضعيف.*

_*அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.*_

*📚நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230📚*

الضعفاء للعقيلي – (3 / 230(

*حَدَّثَنا أبو معمر قال كان بن عيينة يضعف بن عقيل وعاصم بن عبيد الله وعلى بن زيد بن جدعان ، حَدَّثَنَا هيثم بن خلف ، قال : حَدَّثَنا أبو بكر الأعين ، قال : حَدَّثَنا سليمان بن حرب ، قال : حَدَّثَنا حماد بن زيد ، قال : حَدَّثَنا علي بن زيد وكان يقلب الأحاديث.*

_அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் நபிமொழிகளை மாற்றி அறிவிப்பவர்._

*📚நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230📚*

*حَدَّثنا عَبد الله بن أحمد ، قال : حَدَّثَني عبيد الله بن معاذ ، قال : حَدَّثَني أبي عن شعبة ، عن علي بن زيد قبل أن يختلط حدثني علِي بن عبد الصمد ، قال : حَدَّثَنا أبومعمر قال قال سفيان كتبت عن علي بن زيد كتابا كبيرا فتركته زهدا فيه.*

_*அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவரிடமிருந்து அதிகமான செய்திகளை எழுதினேன். பின் (அவரின் தவறுகள் தெரிந்ததால்) பேணுதலுக்காக விட்டுவிட்டேன் என்று சுஃப்யான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.*_

*📚நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230📚*

*🏮🍂மேலும் அலீ பின் ஸைத் பின்ஜுத்ஆன் என்பவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. இவர் தாபியீ (நபித்தோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்) இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்த செய்தியை நேரடியாகச் சொல்ல முடியாது.  எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.*

*🏮🍂மேலும் தற்போது ஓதும் மவ்லிதுக்கும் இந்தக் கவிதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment