பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

அல்குர்ஆன் வசனமும் -21

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 21*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 12 }*

*☄️இறைத்தூதர்*
           *முன்னிலையில்*
                *குரல்களை*
                    *உயர்த்தக்கூடாது [ 01 ]*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.*_

     *📖 அல்குர்ஆன் 49:1 📖*

ﺣﺪﺛﻨﺎ اﻟﺤﺴﻦ ﺑﻦ ﻣﺤﻤﺪ، ﺣﺪﺛﻨﺎ ﺣﺠﺎﺝ، ﻋﻦ اﺑﻦ ﺟﺮﻳﺞ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﻠﻴﻜﺔ، *ﺃﻥ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﺃﺧﺒﺮﻫﻢ: ﺃﻧﻪ " ﻗﺪﻡ ﺭﻛﺐ ﻣﻦ ﺑﻨﻲ ﺗﻤﻴﻢ ﻋﻠﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ ﺑﻜﺮ: ﺃﻣﺮ اﻟﻘﻌﻘﺎﻉ ﺑﻦ ﻣﻌﺒﺪ، ﻭﻗﺎﻝ ﻋﻤﺮ: ﺑﻞ ﺃﻣﺮ اﻷﻗﺮﻉ ﺑﻦ ﺣﺎﺑﺲ، ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ ﺑﻜﺮ: ﻣﺎ ﺃﺭﺩﺕ ﺇﻟﻰ، ﺃﻭ ﺇﻻ ﺧﻼﻓﻲ، ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ: ﻣﺎ ﺃﺭﺩﺕ ﺧﻼﻓﻚ، ﻓﺘﻤﺎﺭﻳﺎ ﺣﺘﻰ اﺭﺗﻔﻌﺖ ﺃﺻﻮاﺗﻬﻤﺎ "، ﻓﻨﺰﻝ -[138]- ﻓﻲ ﺫﻟﻚ: {ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮا ﻻ ﺗﻘﺪﻣﻮا ﺑﻴﻦ ﻳﺪﻱ اﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ} [اﻟﺤﺠﺮاﺕ: 1] ﺣﺘﻰ اﻧﻘﻀﺖ اﻵﻳﺔ* 

_அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்._

_*🍃நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினார்.) அப்போது அபூபக்ர் (ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) ‘கஅகாஉ இப்னு மஅபத்’ அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!’ என்று (யோசனை) கூறினார்கள்.*_

_*அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு மாறு செய்வதையே’ நீங்கள் விரும்பினீர்கள்’ என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி), ‘உங்களுக்கு எதிராகப் பேசுவது என்னுடைய நோக்கமன்று’ என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்துவிட்டன.*_

_*இது தொடர்பாகவே ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்’ எனும் (திருக்குர்ஆன் 49:1 வது) இறைவசனம் முழுவதும் இறங்கிற்று.*_

       *📚நூல்: புகாரி (4847)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment