பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

அல்குர்ஆன்* *வசனமும் - 12

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 12*


*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 03 }*

*☄️வஹீ எனும் இறைச்*
               *செய்தியின் துவக்கம்*

*☄️வஹீயைப் பாதுகாப்பது*
          *அல்லாஹ்வின் பொறுப்பு*

_*🍃(நபியே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.*_

*📖அல்குர்ஆன் 75:16 – 19📖*

ﺣﺪﺛﻨﺎ ﻗﺘﻴﺒﺔ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ، ﻋﻦ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﺎﺋﺸﺔ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻓﻲ ﻗﻮﻟﻪ: {ﻻ ﺗﺤﺮﻙ ﺑﻪ ﻟﺴﺎﻧﻚ ﻟﺘﻌﺠﻞ ﺑﻪ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 16]، ﻗﺎﻝ: " ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫا ﻧﺰﻝ ﺟﺒﺮﻳﻞ ﺑﺎﻟﻮﺣﻲ، ﻭﻛﺎﻥ ﻣﻤﺎ ﻳﺤﺮﻙ ﺑﻪ ﻟﺴﺎﻧﻪ ﻭﺷﻔﺘﻴﻪ ﻓﻴﺸﺘﺪ ﻋﻠﻴﻪ، ﻭﻛﺎﻥ ﻳﻌﺮﻑ ﻣﻨﻪ، ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ اﻵﻳﺔ اﻟﺘﻲ ﻓﻲ: ﻻ ﺃﻗﺴﻢ ﺑﻴﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ: {ﻻ ﺗﺤﺮﻙ ﺑﻪ ﻟﺴﺎﻧﻚ ﻟﺘﻌﺠﻞ ﺑﻪ، ﺇﻥ ﻋﻠﻴﻨﺎ ﺟﻤﻌﻪ ﻭﻗﺮﺁﻧﻪ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 17] ﻗﺎﻝ: ﻋﻠﻴﻨﺎ ﺃﻥ ﻧﺠﻤﻌﻪ ﻓﻲ ﺻﺪﺭﻙ، {ﻭﻗﺮﺁﻧﻪ ﻓﺈﺫا ﻗﺮﺃﻧﺎﻩ ﻓﺎﺗﺒﻊ ﻗﺮﺁﻧﻪ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 17]: ﻓﺈﺫا ﺃﻧﺰﻟﻨﺎﻩ ﻓﺎﺳﺘﻤﻊ، {ﺛﻢ ﺇﻥ ﻋﻠﻴﻨﺎ ﺑﻴﺎﻧﻪ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 19]: ﻋﻠﻴﻨﺎ ﺃﻥ ﻧﺒﻴﻨﻪ ﺑﻠﺴﺎﻧﻚ، ﻗﺎﻝ: ﻓﻜﺎﻥ ﺇﺫا ﺃﺗﺎﻩ ﺟﺒﺮﻳﻞ ﺃﻃﺮﻕ، ﻓﺈﺫا ﺫﻫﺐ ﻗﺮﺃﻩ ﻛﻤﺎ ﻭﻋﺪﻩ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ. {ﺃﻭﻟﻰ ﻟﻚ ﻓﺄﻭﻟﻰ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 34] ﺗﻮﻋﺪ "*

_திருக்குர்ஆன் 75:16 வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்:*_

_*🍃ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் முகத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75வது அத்தியாயத்திலுள்ள) ‘இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது’ எனும் (75:16, 17) வசனங்களை அருளினான்.*_

_*அதாவது, ‘உங்கள் உள்ளத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்’ என்று இறைவன் கூறினான். மேலும், ‘நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!’ என்ற (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘நாம் அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்’ என்று கூறினான். ‘பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது’ எனும் (75:19) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்’ என்று கூறினான். (இதன் பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டு) வரும்போது தலையைத் தாழ்த்தி (கேட்டுக்) கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும் போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.*_

*📚 நூல்: புகாரி (4929) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment