பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, March 27, 2020

மண்ணறை - 22

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 22 ]*

*மண்ணறை தண்டனைக்கான*
             *காரணங்கள் [ 05 ]*

*☄மறைவிடத்தை மற்றவர்*
       *பார்க்குமாறு நடந்துக்*
             *கொள்ளுதல்☄*

*🏮🍂 எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் அழகான ஒழுங்கு முறைகளை பேண வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகிறது. மலம் ஜலம் கழிக்கும் போது பிறர் நமது மறைவிடத்தை பார்க்காதவாறு இயற்க்கைத் தேவையை நாம் நிறைவேற்றிக் கொள்ள  வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.*

*🏮🍂 ஆனால் இன்றைக்கு பலர் இந்த ஒழுங்கு முறைகளை கடைப்படிக்காமல் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கும் தெருக்களில் எந்த மறைப்பும் இல்லாமல் எல்லோரும் பார்க்கும் விதத்தில் சிறுநீர் கழிக்கிறார்கள். இவ்வாறு செய்வது குற்றமாகும். இப்படி நடந்துக் கொள்பவர்களுக்கு மண்ணறையில் தண்டனை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*

_*ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ -[96]- ﻋﻨﻬﻤﺎ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﺃﻧﻪ ﻣﺮ ﺑﻘﺒﺮﻳﻦ ﻳﻌﺬﺑﺎﻥ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻬﻤﺎ ﻟﻴﻌﺬﺑﺎﻥ، ﻭﻣﺎ ﻳﻌﺬﺑﺎﻥ ﻓﻲ ﻛﺒﻴﺮ، ﺃﻣﺎ ﺃﺣﺪﻫﻤﺎ ﻓﻜﺎﻥ ﻻ ﻳﺴﺘﺘﺮ ﻣﻦ اﻟﺒﻮﻝ، ﻭﺃﻣﺎ اﻵﺧﺮ ﻓﻜﺎﻥ ﻳﻤﺸﻲ ﺑﺎﻟﻨﻤﻴﻤﺔ»، ﺛﻢ ﺃﺧﺬ ﺟﺮﻳﺪﺓ ﺭﻃﺒﺔ، ﻓﺸﻘﻬﺎ ﺑﻨﺼﻔﻴﻦ، ﺛﻢ ﻏﺮﺯ ﻓﻲ ﻛﻞ ﻗﺒﺮ ﻭاﺣﺪﺓ، ﻓﻘﺎﻟﻮا: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻟﻢ ﺻﻨﻌﺖ ﻫﺬا؟ ﻓﻘﺎﻝ: «ﻟﻌﻠﻪ ﺃﻥ ﻳﺨﻔﻒ ﻋﻨﻬﻤﺎ ﻣﺎ ﻟﻢ ﻳﻴﺒﺴﺎ»*_

_*🍃வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது, 'இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்' எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்❓' என்று கேட்டதும், 'இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_ 

*🎙அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)*

*📚 நூல் : புகாரி (1361) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment